28 செப்டம்பர் 2011

செல்போன் மேலாண்மை

            

     செல்போன் மேலாண்மை

உலகிலேயே செல்போனை மகா கீழ்த்தரமாகப் பயன்படுத்துபவர்கள் இந்தியர்கள்தாம் என்பது தொழிலதிப நண்பர் ஒருவரின் அசைக்க முடியாத வருத்தம். மறுத்துப் பேச வழியில்லை. பல மரம் கண்ட தச்சன். அவர் கேட்டுக்கொண்டதன் பேரில்
அவரது அலுவலக ஊழியர்களிடத்தில் ‘செல்போன் மேலாண்மை’ பற்றி பேசினேன். நமக்குத் தெரிந்ததையே மேடையேறி ஒருவன் பேசினால் விழி விரிய கேட்பார்கள் ஜனங்கள். நீங்களும் கேளுங்கள் 

1) நட்பின் மேன்மை, காதலின் புனிதம், அன்னையின் அன்பு மாதிரியான பார்வர்டு சமாச்சாரங்களை உயரதிகாரிகளுக்கு அனுப்பாதீர்கள். இவை கிட்டத்தட்ட ஸ்பாம் மெஸெஜுகள்தாம்.

2) வெல்கம் ட்யூன் நாகரீகமாக இருக்கட்டும். ஒரு எம்.என்.சியின் வைஸ் பிரஸிடெண்டை அழைத்தால் ‘ச்சீ..ச்சீய் சிச்சீய் என்ன பழக்கம் இது...” என்று வைத்திருக்கிறார். நம் கவுரவத்திற்கு அழகல்ல.

3) ரிங்டோன் உங்களை மட்டும் எழுப்பட்டும். சிலரது ரிங்டோன் சத்தத்திற்கு மொத்த உலகே திரும்பிப் பார்க்கும்.

4) போன் புக்கில் சக ஊழியர்களின் உண்மையான பெயரை சேவ் செய்யுங்கள். ஒருவர் தன் மேலாளர் பெயரை ‘ராஜபாளையம்’ என்றும் மனைவி பெயரை ‘விதி’ என்றும் வைத்திருந்து இருவரிடமும் சிக்கினார். பட்டப்பெயர்கள் உங்களைத்தான் பறக்க விடும்.

5) சிலர் தங்களது பாஸ் அழைத்தால் ‘நாய் குரைப்பது’ போன்ற ரிங்டோனை வைத்திருப்பர். இது நாகரீகமல்ல.

6) மெஸெஜ் ஆப்ஷனில் அட் சிக்னேச்சரில் உங்களது பெயரையும் நிறுவனத்தின் பெயரையும் போட்டு வைத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு முறையும் உங்களது பெயரை டைப் செய்ய வேண்டி இராது. போன் புக்கில் உங்களது எண் இல்லாதவருக்கு குறுஞ்செய்தி அனுப்பினால் அவர் புரிந்து கொள்வார்.

7) உங்கள் டீமில் உள்ளவர்கள், நண்பர்கள், உறவினர்கள் என தனித்தனி குரூப் உருவாக்கிக்கொண்டால் குறுஞ்செய்திகள் அனுப்ப வசதியாக இருக்கும். ஒவ்வொரு எண்களையும் தேடும் நேரம் மிச்சம்.

8) பிறிதொரு நபர் உங்கள் அருகே இருக்கையில் ஒருபோதும் லவுட் ஸ்பீக்கரை உபயோகிக்காதீர்கள். உங்களது ஹானஸ்டி உடனே கேள்விக்குள்ளாக்கப்படும். தேவையற்ற பிரச்சனைகளும் உருவாகலாம்.

9) எஸ்ஸெம்மெஸ் மொழியின் ஷார்ட் பார்ம்களைத் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். சிலர் ரெஸ்பெக்டட் சார், சப்மிட்டட் ப்ளீஸ் என்றெல்லாம் பார்மலாக மெஸெஜூகிறார்கள்.

10) ஸ்க்ரீன் சேவர் படமாக என்ன இருக்கலாம் என்பதை விட என்ன இருக்கக்கூடாது என்பதில் கவனமாக இருங்கள். நடிகைகள், சாமியார்கள் எல்லாம் உங்களைப் பற்றிய முன் தீர்மானம் உருவாக்குவதாக இருக்க வேண்டாம்.

11) அலுவலக நேரம் தாண்டி அழைக்க வேண்டியிருப்பின் உயரதிகாரியோ அல்லது உங்களுக்கு கீழே இருப்பவர்களோ ‘நான் உங்களை அழைக்கலாமா?!’ என ஒரு குறுஞ்செய்தி அனுப்பி விட்டு அழைப்பது உங்களது மரியாதையைக் கூட்டும்.

12) திடீர் விடுப்பு, விபத்து, மரணச் செய்தி போன்ற செய்திகளை ஒருபோதும் குறுஞ்செய்தியில் தெரியப்படுத்தாதீர்கள். அழைத்துச் சொல்லுங்கள்.

13) எந்த ஒரு எண்களை அழைப்பதற்கு முன்னும் யாரிடம் பேசப்போகிறோம், என்ன பேசப் போகிறோம், இந்த அழைப்பின் புரொடக்டிவிட்டி என்ன என்பதை ஒரு நிமிடம் யோசித்து விட்டுப் பேசுங்கள்.

14) அலுவலகத்தில் இருக்கும் போது ஹெட் போனோடு வளைய வராதீர்கள். நீங்கள் இருப்பது அலுவலகத்தில் சுற்றுலா தளத்தில் அல்ல.

15) இரண்டு நிமிடங்களுக்கு மேல் பேசுகிற விஷயத்தில் நிச்சயம் அரட்டை கலந்திருக்கிறது. ஆண்டவனே அழைத்தாலும் ஐந்து நிமிடங்களுக்கு மேல் வேண்டாமே.

16) உங்களுக்கு வரும் அழைப்புகளை தவிர்க்க முடியாத தேவையின்றி ரிக்கார்டு செய்யாதீர்கள்.

17) அடுத்தவர் செல்போனை ஒருபோதும் நோண்டாதீர்கள். நவீன யுகத்தில் செல்போன் ஒருவரின் டைரியைப் போல. அடுத்தவர் அந்தரங்கம் நமக்கெதற்கு?

18) ஒருவரறியாமல் கான்பரன்ஸ் அழைப்பில் அழைத்துப் பேசுவது நாகரீகமல்ல. பிற்காலத்தில் பெருங்கொண்ட பஞ்சாயத்துக்களை ஏற்படுத்தும்.

19) சின்னச்சின்ன விஷயத்திற்கெல்லாம் உயரதிகாரிகளை அழைத்துத் தொந்தரவு செய்யாதீர். குறுஞ்செய்தி வசதியை எஃபெக்டிவாகப் பயன்படுத்துங்கள்.

20) அவுட் கோயிங் போறதில்லை, லோ பேட்டரி ஸ்விட்ச்டு ஆஃப் போன்ற நிலை வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். செயல்திறனைக் குறைக்கும் வைரஸ்கள் இவை.

21) வீட்டிலிருக்கும்போது அழைப்பு வந்தால் தொலைக்காட்சி, ரேடியோ ஒலிகளைக் குறைத்து விட்டுப் பேசுங்கள்.

22) வேறு டிப்பார்ட்மெண்டைச் சார்ந்தவர்கள், வேறு கிளைகளைச் சார்ந்தவர்களைக் காரணங்களின்றி அழைக்காதீர்கள். அக்கப்போர் வைக்கப்போரில் தீ வைப்பது மாதிரி.

23) வந்திருக்கும் குறுஞ்செய்தி அலுவல் சார்ந்தது எனில் கட்டாயம் ரெஸ்பாண்ட் செய்யுங்கள். ஓகே என்றாவது ரிப்ளை முக்கியம்.

24) அலுவலகம் செல்போன் பில்லைத் தருவதாக இருந்தால் ஒரு போதும் சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்துவதில்லை எனும் சுயக்கட்டுப்பாட்டில் இருங்கள். ப்ளூ டூத் பரிமாற்றங்கள், ஸ்கேண்டல் வீடியோக்களைப் பரப்புதல் போன்றவை உலகெங்கிலுமிருக்கிற முதலாளிகள் வெறுக்கப்படுகிறது.

25) பெண் ஊழியர்களிடத்தில் பேசுகையில் பேச்சில் கூடுதல் மரியாதையும், வார்த்தைகளில் கூடுதல் கவனமும் இருக்கட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முனைவர்.இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phil.,Ph.D., அவர்களது வாழ்க்கைக்குறிப்பு... (Dr.R.K.Manikkam, professor,Writer)

                                                                                                        முனைவர். இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phi...