17 ஜூன் 2016

வாசிப்பை நேசிப்போம். கவிதை

வாசிப்பை நேசிப்போம்....

வீட்டிற்கு வெளிச்சம்
சாளரத்தின் ஊடே....
அறிவிற்கு வெளிச்சம்
வாசிக்கும் நூலே!!!!

வாசிக்காமல் யார்க்கும்
வளர்வதில்லை அறிவு...
இதனை நேசிக்காமல் போனால்..
வளர்ச்சிக்கே முறிவு!!!

பொது அறிவு பெற்றிடவே
எப்பொழுதும் நீ வாசி
அறிவுள்ள புத்தகங்கள்
அனைத்தையுமே நேசி!!!!

அடிமைகளின் சூரியனாம்
அபிரகாம் லிங்கனுமே
அமெரிக்க குடியரசு தலைவனென்று
ஆக்கி உயர்த்தியதும் புத்தகமே!!!

மாணவப் பருவத்திலே
பாட புத்தகங்களின் வாசிப்பு
சதத்தினையும் தொட வைக்கும்
வாசிப்பு சாதிக்க வழி வகுக்கும்!!!

ஊருலகம் யாவும் யாவும்
சுற்றி அறிய காலம் கொள்ளும்
புத்தகங்கள் அனைத்தும் விளக்கும்
கற்றறிய குறுகிய காலம் போதும்!!!

இருந்த இடத்தில் எல்லாம் அறிய
கையடக்க நூலே போதும்
கற்றறியும் வழக்கமிருந்தால்
சுடர் விடும் உன் அறிவெப்போதும்!!!

கற்பனை உலகிற்கே - நம்மை
இட்டுச் செல்லும் புத்தகங்கள்
மூளைக்கும் சிறகு முளைக்கும்
மூவுலகும் இட்டுச் செல்லும்!!!

நூலகங்கள் சென்று வர
நாளும் நீ தவறிடாதே
நுண்மதி பெருக்கி வைக்கும்
நூல் கற்க மறந்திடாதே!!!

புதுப்பித்துக் கொள்ள நீயும்
புத்தகம் வாசித்தே பழகு - உன்னை
புதுப்பிக்க புதுப்பிக்க
புறந்தள்ளாது இந்த உலகு!!!!

வாசிப்பை நாளும் நேசிப்பாய்
நல்ல நூலனைதுமே சுவாசிப்பாய்  
அறிவாளியாக்கும் உன்னை அறிவாய்
அனைவர் மதித்திட நீ உயர்வாய்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முனைவர்.இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phil.,Ph.D., அவர்களது வாழ்க்கைக்குறிப்பு... (Dr.R.K.Manikkam, professor,Writer)

                                                                                                        முனைவர். இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phi...