கொங்குத் தென்றல்

நல்ல குடிமக்கள் வீட்டில் இருந்துதான் உருவாக முடியும்! ஆதலால் பெற்றோர்கள் குழந்தைகளை வளர்க்கும் விதத்தில்தான் நாட்டிற்கு நல்ல சமுதாயம் கிடைக்கும்- Dr.A.P.J.அப்துல்கலாம் (என்கிற) டாக்டர் ஆவுல் பக்கிர் ஜைனாபுதீன் அப்துல் கலாம்.

31 அக்டோபர் 2018

கோவை கோலிவுட்டான கதை.....

                


முகநூல் நண்பர்   Abdul Samath Fayaz
அப்துல் சமத் பயஸ் அவர்களுக்கு உளம் கணிந்த பாராட்டுக்கள், மற்றும் வாழ்த்துக்கள்.. தங்கள் பதிவுகள் அனைத்தும் ஆஹா, அருமை, அற்புதம், அபாரம், அதிசயம் எனக் கூறவைக்கின்றன. நீங்கள், அந்தக்கால வெள்ளித்திரை பற்றிய தகவல்களின் அபூர்வ களஞ்சியம். கலைஞர், ஒரு நாளில் 16 மணி நேரம் உழைப்பது வழக்கம் எனக் கூறுவார்கள். ஆனால் நீங்கள் இத்தனை சேதிகளைத் திரட்ட எவ்வளவு நேரம் உழைத்திருந்து எங்களுக்குஅளித்திருக்கிறீர்கள் என எண்ணும்போது மிகவும் வியப்பளிக்கிறது.

                        ஆங்கிலேய அரசின் ரயில்வே துறையில் ஸ்டேஷன் மாஸ்டராக இருந்த ஒருவர் பணி ஓய்வு முடிந்து பேக்கரி ஒன்றை கோவையில் தொடங்கினார்.அவர் பணியாற்றிய திருச்சியிலிருந்து தன் குடும்பத்தை மொத்தமாகக் கொண்டு வந்து கோவையில் போட்டார். அவரது பெயர் முனிசாமி நாயுடு.
கோவை ரயில் நிலையம் எதிரே தேவி பேக்கரி என்ற பெயரில் ஒரு ஹோட்டலை நிறுவி நடத்திக்கொண்டிருந்தவருக்கு ஒரு மகன்.படித்துக்கொண்டே தந்தைக்கு உதவியாக அவரும் பேக்கரித் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.அவரது பெயர் ஸ்ரீராமுலு.
அது இந்திய சினிமா பேசத் தொடங்கிய காலகட்டம்.முதல் பேசும் படம் காளிதாஸ் தமிழகத்தில் வெளியாகி மக்களை வியப்பில் ஆழ்த்தியது.ஏற்கனவே ஆலம் ஆரா என்ற படம் இந்தி மொழி பேசி இந்தியாவை வியக்க வைத்தது.இந்த காலகட்டத்தில் தான் இளைஞர் ஸ்ரீராமுலு தனது பேக்கரி போரடிக்க கோவை காஸ்மோபாலிட்டன் கிளப்பில் தனது ஓய்வு நேரத்தைக் கழிப்பார். நகரத்தின் பெரிய மனிதர்கள் கூடும் இடமானதால் அன்றைய பெரிய மனிதர்களான ரங்கசாமி நாயுடு ஆர்.கே.ராமகிருஷ்ணன் செட்டியார் சாமிக்கண்ணு வின்சென்ட் ஆகியோரின் நட்பு ஸ்ரீராமுலுக்குக் கிடைத்தது.நண்பர்கள் நால்வரது கவனமும் திரைத் துறையில் பதிய கோவை முதன் முதலில் கோலிவுட்டானது.
அப்போதெல்லாம் சென்னையில் சென்னையில் எந்த ஸ்டுடியோவும் வருவதற்கு முன்பே நான்கு நண்பர்களின் ஒருவரான சாமிக்கண்ணு வின்சென்ட் ஊமைப் படங்களை நகரில் ஓட்டிக்கொண்டிருந்தார்.உண்மையாகச் சொல்லபாபோனால் தமிழகத் திரையின் பிதா மகன் அவர் தான்.அவரைப் பற்றி விரிவாக இன்னொரு நாள் பார்க்கலாம்.ஸ்ரீராமுலு மற்றும் மூன்று நண்பர்கள் இணைந்து தான் கோவையில் முதல் ஸ்டுடியோவான சென்ட்ரல் ஸ்டுடியோவை ஆரம்பித்தார்கள்.
ரங்கசாமி நாயுடு கோவையின் புகழ் பெற்ற குடும்பமான பி.எஸ்.ஜி.குடும்பத்தைச் சேர்ந்தவர்.ராமகிருஷ்ணன் செட்டியார் இந்தியாவின் முதல் நிதியமைச்சரான ஆர்.கே.சண்முகம் செட்டியாரது சகோதரர்.சாமிக்கண்ணு வின்சென்ட் தமிழகத் திரையின் முன்னோடி.இவர்களோடு இணைந்த ஸ்ரீராமுவிற்கு திரையின் அரிச்சுவடி கூடத் தெரியாது.பேக்கரித் தொழிலைச் செய்து கொண்டிருந்த ஒரு இளைஞர் பிற்காலத்தில் புகழ் பெற்ற பல படங்களை எடுத்துத் தள்ளியது ஆச்சர்யமான ஒன்று.
கோவை சிங்காநல்லூரில் 1936ல் தொடக்கப்பட்ட சென்ட்ரல் ஸ்டுடியோ தான் தமிழக திரைத் துறையின் தலையெழுத்தையே மாற்றியது என்பதை திரை வரலாறு அறிந்தவர் மறுக்க முடியாது.இங்கு தான் பம்பாய் கல்கத்தாவிற்கு அடுத்தபடியாக நவீன தொழில் நுட்பத்தோடு கூடிய ஸ்டுடியோ இயங்கியது.ஜெர்மன் தொழில் நுட்பத்துடன் கூடிய பி.என்.ஸி.மிட்ஸெல் கேமிராக்கள் லைட்டிங் பத்து கி.வாட் ஐந்து கி.வாட் செட்கள் அன்றைய மதிப்பில் லட்சக்கணக்கான ரூபாய்களைப் போட்டு வாங்கப்பட்டது.டெக்னீஸியன்கள் ஜெர்மனியில் இருந்து வரவழைக்கப்பட்டார்கள்.ஒப்பனையாளர்கள் உடை அலங்கார நிபுணர்கள் மும்பையிலிருந்து வரவழைக்கப்பட்டார்கள்.தனியாக ஒரு மியூசிக் ட்ரூப் இயங்கியது.
முதல் படமான துக்காராம் தொடங்கப்பட்டது.அதிலிருந்து ஏகப்பட்ட படங்கள் இந்த ஸ்டுடியோவில் எடுத்துத் தள்ளப்பட்டது.நடிகர்கள் மாதச் சம்பளத்திற்கு அமர்த்தப்பட்டனர்.நண்பர்களோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டு இளைஞர் ஸ்ரீராம் தனியாக தனக்கென ஒரு ஸ்டுடியோவை கொஞ்சம் தள்ளி நிர்மானித்துக்கொண்டார்.அதற்கு பக்ஷி ராஜா ஸ்டுடியோ என பெயரிட்டார்.
சென்ட்ரல் ஸ்டுடியோவில் கிடைத்த அனுபவத்தை மட்டுமே வைத்துக்கொண்டு இவர் பிற்காலத்தில் பல புகழ் பெற்ற படங்களை தமிழகத் திரைக்குத் தந்தார்.அன்றைய சூப்பர் ஸ்டார்களான தியாகராஜ பாகவதர் மற்றும் பி.யு.சின்னப்பா ஆகியோரின் நெருங்கிய நண்பரானார்.பாகவதரின் சிவகவி மற்றும் சின்னப்பாவின் ஆர்யமாலா ஜகதலப் பிரதாபன் படங்களை தயாரித்து இயக்கியவர் ஸ்ரீராமுலு.
தென்னிந்தியாவின் புகழ் பெற்ற இயக்குநராக இருந்த ஸ்ரீராமுலு லட்சுமி காந்தன் கொலை வழக்கில் பாகவதர் மற்றும் கலைவாணரோடு கைது செய்யப்பட்டவர். தனக்காக வாதாட நூகண்ட் கிராண்ட் என்ற ஆங்கிலேய வழக்கறிஞரை நியமித்த ஸ்ரீராமுலு வழக்கு தொடங்கும்போது கிராண்ட் இறந்து விட புகழ் பெற்ற லாயரான கே.எம்.முன்ஷியை நியமித்தார்.முன்ஷியின் வாதத் திறமையால் குற்றம் நிரூபிக்கப்படாமல் விடுதலையானார்.
சென்னையில் இருந்தால் மீண்டும் வம்பு தான் என எண்ணி உடனே கோவை திரும்பினார்.உடனடியாக கன்னிகா என்ற படத்தைத் தொடக்கினார்.அன்றைய பட்டதாரியான டி.ஈ.வரதனைக் கதாநாயகனாக்கி வழக்கமான தனது நாயகியான எம்.எஸ்.சரோஜினியை நாயகியாக்கி படத்தை சூப்பர் ஹிட்டாக்கினார்.
ஸ்ரீராமுலு அன்றைய பிரபலமாகக் காரணம் அவரது படங்கள் தான்.கை தேர்ந்த இயக்குநராக அவர் அவதாரம் எடுத்தது அவரது படங்களைப் பார்த்தாலே தெரியும்.சிவகவியை அருமையாக இயக்கி படத்தை வெற்றிப் படமாக மாற்றிக் காட்டினார்.பாபநாசத்தின் பல பாடல்கள் இன்றும் பேசும்படி எடுத்துத் தந்திருப்பார்.அதே போல் அவரது பவளக்கொடி படமும் அன்று பரவலாகப் பேசப்பட்டது.ஏற்கனவே பாகவதரின் முதல் படமான பவளக்கொடியும் ஒரு வெற்றிப் படம் தான்.இதை இயக்கியது.கே.எஸ்.
போட்டி போட்டுக்கொண்டு பாகவதருக்கு எதிராக நடித்துக்கொண்டிருந்தார் சின்னப்பாவை வைத்தும் வெற்றிப்படங்களைத் தந்தவர் ஸ்ரீராமுலு.அவரது ஆர்யமாலா மற்றும் ஜகதலப் பிரதாபன் அன்றைய காலகட்டங்களில் பரவலாகப் பேசப்பட்ட படங்கள்.அதிலும் ஜகதலப் பிரதாபனில் சின்னப்பா அருமையாக நடித்திருந்தார்.பிற்கால புகழ் பெற்ற பாட்டும் நானே பாவமும் நானே பாடலில் பல சிவாஜி வருவது போல அன்றே பல சின்னப்பாகக்கள் வாத்திய வித்தை புரிந்ததை முதன் முதலில் திரையில் காட்டியவர் ஸ்ரீராமுலு.ஜி.ராமநாதனின் அருமையான இசை சின்னப்பாவிற்கு புகழைத் தேடித் தந்தது.பனிரெண்டு மந்திரிமார் கதையில் ஒரு கதை தான் ஜகதலப் பிரதாபன்.அன்றைய சகலகலா வல்லவனை இப்படித் தான் அழைப்பார்கள்.அம்பா அகில லோக பிரியா , பாக்கியசாலிகள் உண்டோ, எனக்கு சிவ குருபை வருமா?., எங்கே செல்லுவேன் இறைவா?. தருணமிது அம்பா என பாபநாசத்தின் பல பாடல்களை அருமையாகப் பாடினார் சின்னப்பா. சிவ கவி கன்னிகாவைத் தொடர்ந்து காஞ்சனா என்ற படத்தையும் எடுத்தார் ஸ்ரீராமுலு.
பக்சிராஜாவின் மற்றுமொரு சிறந்த படைப்பு ஏழை படும் பாடு.1950ல் வெளியான இந்தப் படத்தை ராம்ராத் இயக்கியிருந்தாலும் ஸ்ரீராமுலு இந்தப் படத்தின் பின்னணியில் நின்றார்.தமிழின் முதல் எதார்த்த சினிமா.சித்தூர் நாகையா ஜாவர் சீதாராமன் பத்மினி ஆகியோர் நடித்த பிரமாண்டமான படமிது.
இந்த நிறுவனத்திலிருந்து வந்த புகழ் பெற்ற மற்றொரு படம் மலைக்கள்ளன்.மக்கள் திலகத்திற்கு ஒரு நிலையான இடத்தைப் பெற்றுத் தந்த படம்.முதல் தேசிய விருது பெற்ற படம்.மர்மயோகிக்குப் பிறகு கலைஞரின் கை வண்ணத்தில் மக்கள் திலகம் வெற்றிக் கனியை சுவைத்த படம்.
நாமக்கல் கவிஞரின் கதைக்கு கலைஞர் உரையாடல் எழுதியது அன்று பரவலாகப் பேசப்பட்டது.1954ல் வெளியான இந்தப் படத்தை எடுத்த ஸ்ரீராமுலு யாருமே செய்யாத சாதனையை இந்தப் படத்தில் செய்தார்.ஆறு மொழிகளில் வந்த ஒரே படம் என்ற பெருமையை மலைக்கள்ளன் பெற்றது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என்பதோடு நில்லாமல் சிங்களத்திலும் இந்த மலைக்கள்ளன் வந்து போனான்.மக்கள் திலகத்தின் முதல் கொள்கை விளக்கப் பாடலான எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே பாடல் டி.எம்.எஸ்ஸூக்கு ஒரு பலமான அஸ்திவாரம் போட்டுக் கொடுத்தது.இதில் பூங்கோதை என்ற கேரக்டரில் வருவார் பானுமதி.
இருப்பவனிடம் எடுத்து இல்லாதவனிடம் தரும் ராபின் ஹூட் கதைக்கு அருமையாகப் பொருந்தினார் எம்.ஜி.ஆர்.பிற்கால பல ராபின் ஹூட் படங்களுக்கு முன்னோடி மலைக்கள்ளன் தான்.
கோவை மண் அந்தக் காலத்தில் புகழோடு விளங்கக் காரணம் ஸ்ரீராமுலு தான்.பிரபலமான திலீப் குமார் மீனா குமாரி இங்கு வந்து பக்ஷி ராஜாவில் நடித்துக் கொடுத்த படம் தான் ஆஸாத்.இந்தியில் பெரு வெற்றி பெற்ற இந்தப் படத்தை இயக்கியது ஸ்ரீராமுலு தான்.சூப்பரான பாடல்களோடு வெள்ளி விழா கொண்டாடிய படமிது.இந்தக் கணையே அக்கி ராமுடு என தெலுங்கில் வந்து என்.டி.ஆருக்கு பெரும் புகழைப் பெற்றுத் தந்தது.ஜோடியாக இதே பானுமதி நடித்திருந்தார்.ஏற்கனவே ஸ்ரீராமுலு பல தெலுங்குப் படங்கள் மலையாளப் படங்களை இயக்கியிருக்கிறார்.கல்யாண் குமாரை கன்னடத்தில் பிரபலமாக்கியதும் இவர் தான்.
ஸ்ரீராமுலுவின் மற்றொரு படம் மரகதம்.டி.எஸ்.துரைசாமி எழுதிய கருங்குயில் குன்றத்துக் கொலை நாவலை மையமாக வைத்து இந்தப் படத்தை இயக்கினார் ஸ்ரீராமு.இது சர் வால்டர் ஸ்காட் எழுதிய நாவலைத் தழுவியது.திரைக் கதையை எஸ்.பாலச்சந்தர் எழுதினார். நடிகர் திலகம் பத்மினி ஜோடியான இந்தப் படத்திற்கு இசை சுப்பையா நாயுடு.சந்திரபாபுவின் வெற்றிப் பாடலான குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே பாடல் இதில் தான்.
காவிரி பாயும் கன்னித் தமிழ்நாடு டி.எம்.எஸ்.குரலில் அருமையாக ஒலித்தது.மாலை மயங்குகிறவர்களை நேரம் பச்சை மலை அருவி ஓரம் போன்ற சூப்பர் பாடல்களும் உண்டு.பத்மினி லலிதா சகோதரிகளை திறமையாகப் பயன்படுத்தியவர் ஸ்ரீராமுலு.
தமிழகத் திரைத் துறை என்ன தான் சென்னையை மையம் கொண்டிருந்தாலும் ஆரம்பப் பாடசாலை கோவை தான் என்பதை பிற்காலத் தலைமுறை மறக்கக் கூடாது.இங்கு தான் பிற்காலத் தமிழகத்தை ஆண்ட முதல்வர்கள் சாதாரணமாக நடமாடினார்கள்.அறிஞர் அண்ணா தொடங்கி கலைஞர் மற்றும் மக்கள் திலகத்தை வார்த்தெடுத்த பூமியிது.பத்து ரூபாய் மாத வாடகைக்கு கோவையில் வாழ்ந்த வரலாறை கலைஞரின் நெஞ்சுக்கு நீதியில் காணலாம்.மக்கள் திலகத்தின் சுய சரிதையில் கோவையில் அவர் கழித்த காலங்களைக் காணலாம்.பாகவதர் சின்னப்பா தொடங்கி பல பிரபலங்களை மக்களுக்கு அடையாளம் காட்டியது கோவை மண்.தென்னிந்தியாவின் புகழ் பெற்ற ஆரம்ப ஸ்டுடியோக்கள் இரண்டு இருந்தது இங்கு தான்.அதில் ஒன்று தான் ஸ்ரீராமுலு நாயுடுவின் பக்ஷி ராஜா.கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டாலும் உன்னதமான வரலாற்றைத் தாங்கி நிற்கிறது இந்த இரண்டு ஸ்டுடியோக்கள்.
இடுகையிட்டது Paramesdriver நேரம் 10/31/2018 09:07:00 முற்பகல் கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

27 அக்டோபர் 2018

குழந்தைச் செல்வம்..


மழலைச் செல்வம்....
               நாம் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு செல்வத்தை வேண்டியும் பெற்றும் வருகிறோம். இளமையில் கல்விச்செல்வம் கேள்விச்செல்வம் இவ்விரண்டால் வாய்க்கும் அறிவுச்செல்வம் வாய்த்த அறிவால் ஈட்டும் பொருட்செல்வம் என ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஏற்ற செல்வத்தைப் பெற்று வருகிறோம்.

அடுத்த நிலையாக நாம் அடையத்துடிக்கும் ஒப்பற்ற செல்வம் ஒன்றுண்டு.

அச்செல்வத்தை கற்றார், கல்லார், உள்ளார், இல்லார், நல்லார், பொல்லார் என்றில்லாது எல்லார்க்கும் வாலறிவன் வழங்கும் மழலைச்செல்வம்.
பிற செல்வங்களைப் பெறாவிடினும் இழுக்கில்லை. இச்செல்வத்தைப் பெறாவிடின் இழுக்கன்றி வேறில்லை. மழலை பெறாமுன் மலடி என வழங்குவோரும் சேயொன்றைச் சுமந்தீன்றால் தாயென்று சாற்றுவர்.

பிற செல்வங்கள் பெறாவிடின் பெறாஅவ்வொருவருக்கே இழுக்கும் தாழ்வும். மழலைச்செல்வம் பெறாவிடின் இழுக்கு இல்லாள் கணவன் என இருவர்க்கும் ஏற்புடைத்து.

பிற செல்வங்கள் அச்செல்வங்களின் தன்மைக்கேற்பப் பயன்படும் வேளைகளில் மட்டும் நம்மை மகிழ்விக்கிறது. மழலைச்செல்வம் ஒன்றே இவ்வவ் வேளையென்றில்லாது எவ்வேளையிலும் நம்மை இன்பத்தில் ஆத்துகிறது.

பாடறியாப் பெண்களும் ஓர் மழலை பூத்து மடிதவழும் போழ்து ஜானகியாகவும் சித்ராவாகவும் மாறிவிடுகிறார்கள்.

ஏத்துணை வெகுளிபடைத்த வீரனாயினும் தன் மழலையை வாரியணைக்கும் போழ்து தானும் மழலையாகி விடுகிறான்.

இத்துணை இன்பம் பயக்கும் இம்மழலைச் செல்வம் இல்லா இல்லம் எதற்கெல்லாம் ஒக்கும் என சூளாமணி நமக்கோர் பட்டியலே போட்டுக் காட்டுகிறது.

தொக்கின மலர்த்துதை விலாத சோலையும்
புக்கிளந் தாமரை நகாத பொய்கையும்
மிக்கிளம் பிறைவிரி விலாத வந்தியும்
மக்களை யிலாததோர் மனையு மொக்குமே!

ஆயின் இச்செல்வம் பெறாக்கால் வேறு எச்செல்வம் உடையாராயினும் அவரெல்லாம் செல்வம் உடையாரா? எனக் கேள்வி எழுப்புகிறான் புகழேந்தி.

பொன்னுடைய ரேனும் புகழுடைய ரேனுமற்
றென்னுடைய ரேனும் உடையரோ? -இன்னடிசில்
புக்களையும் தாமரைக்கைப் பூநாறும் செய்யவாய்
மக்களையிங் கில்லா தவர்!

முடியில் தவழும் மழலையை அள்ளி முத்துப்பல் காட்டிச்சிரிக்கும் முழுநிலாவின் மாவடு கன்னத்தில் முத்தமொன்று வைக்க ஆனந்தம் காட்டி ஆர்ப்பரித்துக் குரலெழுப்புமே குழந்தை அம் மழலைமொழிக்கு மாற்றுளதோ?
இவ்வின் மொழியில் இன்புறா மாக்களன்றோ குழலும் யாழும் இனிதென்பர்!

குழலினிதி யாழினி தென்பர்தம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்!

பெறும் செல்வங்களுள் மக்கட்செல்வம் சிறப்பெனினும் அம்மக்கட் செல்வங்களுள் அறிவு நிரம்பிய மக்களைப் பெறுவதே பேரின்பமாகும்.

பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற!

பெறுவனவற்றுள் தலைசிறந்ததாயும் பெற்றோர்க்குப் பேருவகை செய்யும் செல்வமாயும் திகழும் மக்களைப் பெறுவது இனிதென்றால் அம்மக்கள் கைவிட்டளாவும் கூழ் குடிக்கும் இன்பம் இருக்கிறதே அது அமிழ்தை அருந்தும் தேவருக்கும் கிட்டாத பேரின்பமாகும்.

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை யளாவிய கூழ்!

பேறுடை மக்கட்செல்வமாயினும் அளவோடு பெறுதலே ஆனந்தமாகும்.

முன்பெல்லாம் நாமிருவர் நமக்கிருவர் என்னும் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை அரசியற்றி அறிவித்து வந்தது.

தற்காலத்தில் நாமிருவர் நமக்கொருவர் திட்டம் வலியுறுத்தப் படுகிறது.
காரணம் மக்கட்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப் படுத்துவதற்காய் மட்டுமல்ல. அளவில் மிஞ்சினால் அமிழ்தும் நஞ்சைப்போல அதிகம் மழலைகளைப் பெறுவதாலும் ஆனந்தம் கெட்டுவிடும் என்பதாலும் தான்.

இதனை நம் பழம்பாடல் உவமைச்செறுக்கோடு உரைப்பதைப் பாருங்கள்.

ஓர் மழலை ஈன்றால் அவ்வில்லத்திற்கு அம்மழலை கரும்பின் அடிபாகத்தைப் போல் செறிந்த இனிப்பை நல்குமாம்.

மேலொன்று பெறும் ஆசையால் இரண்டாய்ப் பெற்றால் அக்கரும்பின் நுனி பாகத்தைப்போல் (கொழுத்தடை) செறிவில்லாத இனிப்பையே ஈயுமாம்.

பிள்ளைகள் மூன்றாய்ப் பெறுவது வாயிலிட்ட புளியால் பல் கூசுதல் போன்ற புளிப்பைத் தந்து நம்மை அறுவறுக்கச் செய்துவிடுமாம்.

மூன்றிற்குப் பின்னும் ஒன்று பெற்றுக் கொள்வது கசப்பென்றுத் தெரிந்திருந்தும் வேம்பைக் கடித்துத் துன்புறுவதைப் போன்ற துன்பத்தையே நல்குமாம்.

ஆசையின் மிகுதியால் அதற்குமேம் பெறத்துடிப்போர்க்கு என்ன உவமை சொல்வது என்றே தோன்றவில்லை என்கிறது அப்பழம்பாடல்.

ஒன்று கரும்பினடி ஓங்குநுனி யேயிரண்டு
துன்றுபுளிப் பேமூன்று தோகாய்வேம் -பொன்றதன்மேல்
பின்னும் பலபிள்ளை பேறுடை யார்விருப்புக்
கென்னுவமை சொல்வேன் இனி?
இடுகையிட்டது Paramesdriver நேரம் 10/27/2018 08:38:00 முற்பகல் கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

கற்பு எனப்படுவது

 

 

கற்பு!

     பெண்ணுக்கு இலக்கணம் கூறுமிடத்து அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகியவற்றைக் கூறுவர்.

அதென்ன அச்சமட நாணம் பயிர்ப்பு?

அச்சம் - புதியவரை புதியவற்றைக் காணும் போதும் கேட்கும் போதும் அஞ்சுதல்.

மடம் -அதிகம் தெரிந்திருந்தும் தெரியாதது போலிருத்தல்.

நாணம் - ஆடவரைக் கண்டால் இயற்கையாக ஏற்படும் வெட்கம்.

பயிர்ப்பு - அன்னிய ஆடவரின் உடலோ, உடையோ தன்மீது பட்டவுடன் அருவருத்தல்.

ஆக நாற்குணங்களும் நாற்படையாக விளங்கும் ஓர் பெண் தன்னை மணந்து கொண்ட கணவனுக்கு இல்லாளாகி அவன் இல்லத்தை ஆட்சி செய்பவளாகப் புகுகிறாள். அவள் ஆட்சியின் கீழ் அம்மனை விளங்கப் பெறுகையில் அவளுக்கு மனைவி என்ற பதவியுயர்வு கிடைக்கிறது. விளங்கிய மனையின் நாயகனாக வீற்றிருக்கும் கணவனின் இன்ப துன்பங்களில் துணைநின்று காக்குங்கால் அவள் துணைவியாகிறாள்.

நல் மனைவியாய், நற்றாயாய், மாமியார் மெச்சும் மருமகளாய் விளங்கும் பெண்ணைக் கற்புடையாள் எனலாம். ஓர்பெண் இல்லாளாகி மனைவி நிலைக்கு உயர்ந்து துணைவி என்னும் உச்ச நிலையை அடைய கற்பை உயிரினும் மேலாக போற்றப்படவேண்டியிருக்கிறது.

ஆக கற்பு என்பதென்ன? அது உடலில் எவ்விடத்தில் உள்ளது? சிறுகுடலிலா? பெருகுடலிலா? கல்லீரலிலா?கற்பு என்பதற்கு நாம் தற்காலத்தில் எண்ணிக்கொண்டிருக்கும் பொருளில் காண்போமானால் இதுபோன்ற வினாக்கள் எழத்தான் செய்கிறது.

உண்மையில் கற்பு என்பதென்ன?

ஓர் பெண் தான் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிகள் நின்று வழுவாமை கற்பாகும். ஆக கற்பு என்பதன் பொருள் ஒழுக்கமாகும். பிறகேன் நாம் கற்பொழுக்கம் (கற்பு ஒழுக்கம்) என வழங்கிவருகிறோம்? கரணியம் யாதெனில் கற்பு என்பதற்கு நாம் தவறான பொருள் கொண்டதனால்தான் பிற்காலத்தில் கற்பு என்ற ஒழுக்கத்தின் பின் மீண்டும் ஓர் ஒழுக்கம் ஒட்டிக்கொண்டு விட்டது எனலாம்.

மேலும் கற்பிக்கப் படுவது கற்பாகும். தாய் தந்தையால் ஆசானால், மாமன் மாமியாரால், கணவனால் ஓர் பெண் இப்படி இருக்கவேண்டும் நடக்கவேண்டும் எனக்கற்றுக்கொடுத்தல் கற்பாகும்.

ஒருவனுக்கு எத்துணை செல்வங்கள் அமையப்பெறினும் நற்குணம் நல்லடக்கம் இல்லாள் இல்லாக அமையப்பெறாவிடின் அவ்வில் இல்லாயிராது.

மனைமாட்சி யில்லாள்க ணில்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்!


ஆக ஒழுக்கம் என்பது இன்றியமையாததாகிறது.

கொண்டானின் துன்னிய கேளிர் பிறரில்லை என விளங்கும் கொழுநன் உண்டபின் தானுண்ணுதல் அவன் துயின்றபின் தான்துயிலுதல் அவன் எழுமுன்எழுதல் போன்றவை ஒழுக்கத்திற் சிறந்த நங்கையரின் செய்கைகள் என்கிறது காசி காண்டம்:-

கொழுந னுண்டபின் தானுகர் கொள்கையும்
விழிதுயின்றபின் துஞ்சலு மென்றுயி
லெழுதன் முன்ன மெழுதலு மேயன்றோ
பழுதிற் கற்புடைப் பாவையர் செய்கையே!

ஒழுக்கத்திற் சிறந்த மங்கை என்பவள் கொண்டவனுக்குத் தாயாயும் ஆண்டானுக்கு அடிமையாயும் புவியின் பொறுமையோடும் இரவில் கணவன் இன்புற்று மகிழ வேசையர் போலும் நாட்டை வழிநடத்தும் மன்னனுக்கு மதியுரை நல்கும் மந்திரிபோலும் இருத்தல் வேண்டும்.

அன்னை தயையும் அடியாள் பணியுமலர்ப்
பொன்னின் அழகும் புவிப்பொறையும் -வன்னமுலை
வேசி துயிலும் விறன்மந் திரிமதியும்
பேசி லிவையுடையாள் பெண்!

கற்படைய மாதரார் பற்றிக் கூறுகையில் என்னாசான் பாத்தென்றலார் கற்புடையவள் என்பவள் மாற்றானை மனதாலும் தீண்டாதவள் அல்ல. மாற்றான் ஒருவன் மோகிக்கும் வன்னம் தன்னை அழகுபடுத்திக் கொள்ளாமலும் பேச்சில் செயலில் அவ்வன்னம் நடவாதிருத்தலுமே ஆகும் என்பார்.

ஆக கற்புடையாள் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள் பல உண்டென உணர்த்தும் பழம்பாடல்கள் பல உண்டெனினும் தற்காலத்திற்கு உகந்ததாயில்லாத காரணத்தால் தவிர்க்கப்படுகிறது.
இடுகையிட்டது Paramesdriver நேரம் 10/27/2018 08:24:00 முற்பகல் கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

அணிகள் பலவகை -

                          அணி என்பதற்கு அழகு என்பது பொருள். செய்யுளில் அமைந்து கிடக்கும் சொல்லழகு, பொருளழகு முதலியவற்றை வரையறுத்துக் கூறுவது அணி இலக்கணம். அணி பலவகைப்படும். அவற்றுள் சில,

பொருள் அணிகள்

  1. அதிசய அணி (உயர்வு நவிற்சி அணி)
  2. அவநுதியணி
  3. ஆர்வமொழியணி (மகிழ்ச்சி அணி)
  4. இலேச அணி
  5. உதாத்தவணி
  6. ஏதுவணி
  7. ஒட்டணி
  8. ஒப்புமைக் கூட்டவணி
  9. ஒழித்துக்காட்டணி
  10. சங்கீரணவணி
  11. சமாகிதவணி
  12. சிலேடையணி
  13. சுவையணி
  14. தற்குறிப்பேற்ற அணி
  15. தன்மேம்பாட்டுரை அணி
  16. தன்மையணி(தன்மை நவிற்சி அணி,இயல்பு நவிற்சி அணி)
  17. தீவக அணி
  18. நிதரிசன அணி(காட்சிப் பொருள் வைப்பு அணி)
  19. நிரல்நிறை அணி
  20. நுட்ப அணி
  21. பரியாய அணி
  22. பரிவருத்தனை அணி
  23. பாவிக அணி
  24. பின்வருநிலையணி(பொருள் பின்வருநிலையணி, சொற்பொருள் பின்வருநிலையணி)
  25. புகழாப்புகழ்ச்சி அணி
  26. புணர்நிலையணி
  27. மயக்க அணி
  28. மாறுபடுபுகழ்நிலையணி
  29. முன்னவிலக்கணி
  30. வாழ்த்தணி
  31. விசேட அணி(சிறப்பு அணி)
  32. விபாவனை அணி
  33. விரோதவணி
  34. வேற்றுப்பொருள் வைப்பணி
  35. வேற்றுமையணி

சொல் அணிகள்

  1. எதுகை
  2. மோனை
  3. சிலேடை
  4. மடக்கு
  5. பின்வருநிலையணி(சொல் பின்வருநிலையணி, சொற்பொருள் பின்வருநிலையணி)
  6. அந்தாதி

வகைப்படுத்தவேண்டிய அணிகள்

  1. இரட்டுறமொழிதல் அணி
  2. இல்பொருள் உவமையணி
  3. உயர்வு நவிற்சி அணி
  4. உருவக அணி
  5. உவமையணி
  6. எடுத்துக்காட்டு உவமையணி
  7. தன்மை நவிற்சி அணி
  8. பிறிது மொழிதல் அணி
  9. வஞ்சப் புகழ்ச்சியணி
இடுகையிட்டது Paramesdriver நேரம் 10/27/2018 04:26:00 முற்பகல் கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

21 அக்டோபர் 2018

மாணவ,மாணவியரின் படைப்புகள் கோருதல்.

தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்தூறும் அறிவு-திருக்குறள்.



விதைகள் -
கலை,இலக்கியம்,பண்பாட்டு இதழுக்கு
மாணவ,மாணவியரின் கதை,கவிதை,கட்டுரை,நாடகம்,நகைச்சுவைத் துணுக்குகள்,கருத்துப்படங்கள்,அனுப்பக் கோருதல்.
*************************
அனுப்புதல்,
செ.பரமேஸ்வரன்,
பொறுப்பாளர் ,
விதைகள் இதழ்,
(விதைகள் வாசகர் வட்டம் வெளியீடு)
சத்தியமங்கலம்.

பெறுதல்;
திரு.தலைமையாசிரியர் / முதல்வர்,
பள்ளி /கல்லூரி
கோபி கல்வி மாவட்டம்.
ஈரோடு மாவட்டம்.

பொருள்;
தங்களது கல்வி நிறுவனம் மாணவ,மாணவியரின் எழுத்துப்படைப்புகளை 'விதைகள்' இதழுக்கு அனுப்பி இலக்கியப்பணியில் பங்கேற்க கோருதல்.

மதிப்பிற்குரிய அய்யா,
                                வணக்கம்.சத்தியமங்கலம் விதைகள் வாசகர் வட்டம் சார்பாக ஆண்டுதோறும் நடத்தும் பொது அறிவுக்கான புத்தகக்காட்சியில் , சிறந்த வாசகர்களையும்,படைப்பாளர்களையும் கௌரவப்படுத்தி பாராட்டுச் செய்வதோடு,சமூக சிந்தனையாளர்களின் இலக்கிய உரைகளையும்,மாணவ,மாணவியருக்கான தனித்திறன் போட்டிகளையும் நடத்தி ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறோம்.
கடந்த 21-10-2018 ஞாயிற்றுக்கிழமை சத்தியமங்கலம் செட்டிநாடு ரெஸ்டாரெண்ட் ஓட்டலின் கூட்ட அரங்கில் நடைபெற்ற வழக்கமான கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி இந்த ஆண்டு முதல் மாணவ,மாணவியரின் சிந்தனை மிகுந்த எழுத்தாளுமையை வெளிக்கொணரும் பொருட்டு கலை,இலக்கியம்,பண்பாட்டு இதழாக விதைகள் என்ற பெயரில் காலாண்டு இதழ் அறிமுகம் செய்துள்ளோம்.
எனவே சமூகம் அவர்கள் தங்களது பள்ளி /கல்லூரி மாணவ,மாணவியரின் கதை,கவிதை,கட்டுரை,நாடகம்,நகைச்சுவைத்துணுக்குகள்,கருத்துப்படங்கள்,கேலிச்சித்திரங்கள் போன்ற கற்பனைக்கும்,சிந்தனைக்கும் விருந்து படைக்கும் படைப்புகளை கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி வைப்பதுடன்,தங்களது கல்வி நிறுவனமும் விதைகள் இதழின் இலக்கியப்படைப்புகளை பிரசுரிக்க உதவிட தமிழ்த்துறை ஆசிரியர்கள் பேராசிரியர்கள் பெயர்,தொடர்பு எண்,மின்னஞ்சல் முகவரி விபரங்களை கொடுத்துதவ அன்புடன் கோருகிறோம்.(விரைவில் தங்களது கல்வி நிறுவனம் தேடி வருவோம்)
இப்படிக்கு,
சமூக நலனில் அக்கறையுள்ள,
செ.பரமேஸ்வரன்,
பொறுப்பாசிரியர்,
விதைகள் இதழ் ,
விதைகள் வாசகர் வட்டம் வெளியீடு
சத்தியமங்கலம்-638402,
ஈரோடு மாவட்டம்.

தொடர்பு எண்;
(1) 9585600733 ,
(2) 9443883966

மின்னஞ்சல் முகவரி;
(1) muthurathinam1954@gmail.com
(2) emailtoparames@gmail.com

அலுவலகம்;
விதைகள் வாசகர் வட்டம்,
யாழினி புத்தக நிலையம்,
பேருந்து நிலையம் அருகில்,
சத்தியமங்கலம்-638402,
ஈரோடு மாவட்டம்.


இடுகையிட்டது Paramesdriver நேரம் 10/21/2018 06:30:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

விதைகள்-காலாண்டு இதழ்.

                           ' பழகு தமிழ் சொல்லருமை நாலிரண்டில் '

 மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.
                                ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம்,பேருந்து நிலையம் அருகிலுள்ள,  'செட்டிநாடு  ரெஸ்டாரண்ட்' கூட்ட அரங்கில் 21-10-2018 ஞாயிற்றுக்கிழமை இன்று காலை 10 மணிக்கு  விதைகள் வாசகர் வட்டம் சார்பாக விதைகள் காலாண்டுஇதழ் அறிமுகம் மற்றும் இதழாசிரியர்கள் தேர்வுக்கூட்டம்  ஏற்கனவே அறிவித்தபடி நடைபெற்றது.கூட்டம் ,விதைகள் வாசகர் வட்டம் சார்பாக ,32பக்கங்களில் ,கலை,இலக்கியம்,பண்பாட்டு இதழாக வருகிற பொங்கல் தினத்தன்று வெளியிட்டு காலாண்டு இதழாக தொடர்ந்து நடத்த முடிவு செய்யப்பட்டது.

               







                                விதைகள் - காலாண்டு இதழ்.
       
                 தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
                      கற்றனைத்தூறும் அறிவு-

மதிப்பியல் ஆசிரியர்கள்;
(1) இரா.காளியண்ணன் B.Sc.,M.A.,M.A.,M.Ed.,
மாவட்ட கல்வி அலுவலர் (பணி நிறைவு)
(2) வெ.வெ.நாச்சிமுத்து,
 முதுகலைத் தமிழாசிரியர் (பணி நிறைவு)

சிறப்பாசிரியர்;
எழுத்தாளர். முத்துரத்தினம் B.E.,

இணை ஆசிரியர்;
 பழ.ஈஸ்வர மூர்த்தி M.A.,B.Ed., MPhil., DTJ.,

சட்ட ஆலோசகர்;
 வழக்குரைஞர்.ச.பழ.சரவணன்.M.A.,B.L.,

ஆசிரியர் குழு;
(1)வெ.நாகராசன்M.A.,B.Ed.,
(2)பாரதி இளங்கோ
(3)ந.முருகானந்தம்
(4)கு.பொன் பிரபாகரன்,
(5)அரிமா.கு.லோகநாதன்
 (6)ர.ராஜலட்சுமி B.A., (தட்டச்சு)

ஓவியர் குழு;
(1)ஆ.ராஜ்குமார்,
(2)பா.சாமுவேல்

பொறுப்பாசிரியர் மற்றும் வெளியீட்டாளர்;
செ.பரமேஸ்வரன்

அலுவலக முகவரி;
யாழினி புத்தக நிலையம்,
பேருந்து நிலையம் அருகில்,
சத்தியமங்கலம்-638402
அலைபேசி; 9585600733 , 9443883966
மின்னஞ்சல் முகவரி; muthurathinam1954@gmail.com

  சத்தியமங்கலம் செட்டிநாடு ரெஸ்டாரெண்ட் நிர்வாகம் இன்று சமுதாய நலன் கருதி கலை,இலக்கியம்,பண்பாட்டு இதழ் அறிமுகக்கூட்ட நிகழ்வுக்கு இலவசமாக அரங்கினை கொடுத்துதவியமைக்காக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்...

==========================


இடுகையிட்டது Paramesdriver நேரம் 10/21/2018 02:49:00 முற்பகல் கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

15 அக்டோபர் 2018

தமிழின் பெருமை:

தமிழின் பெருமை:
~~~~~~~~~~~~~
                            செந்தமிழ் பழமைக்கும் பழமையானது; புதுமைக்கும் புதுமையானது; வடமொழி ஒரு காலத்தில் திருத்தமற்ற மொழியாக வழங்கியது. பின்னால்தான் திருத்தியமைக்கப்பட்டது. இப்பொழுதுள்ள வடமொழி திருத்தியமைக்கப்பட்ட மொழி. "சம்ஸ்கிருதம்' என்றால் திருத்தியமைக்கப்பட்டது என்று பொருள். தமிழ், செந்தமிழாகவே பிறந்தது; செந்தமிழாகவே வளர்ந்து வருகின்றது. "உலக வழக்கு அழிந்து ஒழிந்து சிதையாமல்' ஓங்கி வளர்வது. இந்தச் சிறப்பை எண்ணித்தான் இதற்குக் "கன்னித் தமிழ்' என்ற பெயரையும் வைத்தனர் ஆன்றோர்கள்.
தமிழர்கள் "தமிழ்' என்று குறிப்பிடும்போது அதனோடு மற்றொரு சொல்லையும் சேர்த்து வழங்குவார்கள். பேசும்போது தமிழ் என்று தனியாகக் குறிப்பிட்டாலும், எழுதும்போது அதனுடன் ஒரு சிறப்புச் சொல்லை இணைத்தே எழுதுவார்கள். இது பழந்தமிழர் பண்பு. தமிழோடு இணைத்து எழுதுகின்ற அச்சொல் தமிழின் சிறப்பை - தன்மையை - விளக்குவதாகவே அமைந்திருக்கும்.

செந்தமிழ், பைந்தமிழ், தண்டமிழ், நற்றமிழ், இன்றமிழ், வண்டமிழ், தன்றமிழ், முத்தமிழ், தெய்வத்தமிழ், அன்னைத் தமிழ், கன்னித் தமிழ், அருந்தமிழ்.

செந்தமிழை இத்தகைய அடைமொழிகளோடு இணைத்தே சொல்லுவார்கள். இதைக்கொண்டே தமிழர்கள் தங்கள் தாய்த் தமிழை எவ்வளவு அருமையாக, இன்னுயிரைப்போல் போற்றி வந்தனர் என்பதைக் காணலாம்.
இவற்றிலே கன்னித் தமிழ் என்னும் தொடர் மிகவும் அருமையானது; அழகானது; தமிழின் அழியாத தன்மையை அறிவிப்பது. உலகம் தோன்றிய காலத்திலே தோன்றியது; உலகம் உள்ள வரையிலும் உயிருடன் வாழ்வது தமிழ் என்னும் உண்மைப் பொருள் பொதிந்த தொடர். இத்தொடர் பொருட்செறிவாயுள்ள பொன்மொழியாகும்.
மணமாகாத பெண் கன்னிப் பெண். கன்னிகையின் வனப்பு என்றும் வாடாத மலர். அவள் அழகு, காண்போர் கண்ணையும் கருத்தையும் கவரும். அது பெண் தன்மை குன்றாத பேரழகு. இவை மட்டும் அன்று; கன்னிகைக்கு மற்றொரு தனிச் சிறப்பும் உண்டு. அவள் யாருக்கும் அடிமைப்படாதவள்; வேண்டுமானால்-விரும்பினால்-அவள் பிறரைத் தனக்கு அடிமையாக்கிக் கொள்ளலாம். அவள் யாருக்கும் அடிமையாகமாட்டாள்; தன்மையும், தூய்மையும் குன்றாமல் தலைநிமிர்ந்து அவளால் வாழ முடியும். இது கன்னிகைக்குள்ள ஒரு தனிச் சிறப்பும் பண்புமாகும்.
நலம் எல்லாம் நிறைந்தது:
தமிழ்மொழியும் கன்னிப் பெண்ணைப்போல் விளங்குவது; கன்னிப் பெண்ணுக்குள்ள நலமெல்லாம் கனிந்து நிரம்பித் ததும்புவது. அழகிலே - இனிமையிலே - பயனிலே - எம்மொழிக்கும் அடிமையாகாத தன்மையிலே - தமிழுக்கு நிகரான மொழி தரணியில் வேறு ஒன்றுமேயில்லை. தமிழுக்கு நிகர் - சமம் - ஒப்பு - தமிழேதான்!
நிற்பது திருவள்ளுவர் மொழி என்று கூறினார் ஒரு புலவர். "என்றும் வாடாது; எவ்வளவு நாள்களானாலும் அன்றலர்ந்தது போலவே காட்சியளிக்கும்; தேனைச் சிந்தி. குறையாத, செழுமையான தளிர்களையுடைய கற்பக மரத்தின் மலர் இத்தகைய தெய்வத் தன்மையும் அழகும் நிறைந்தது. இது போன்றது வள்ளுவர் வாய்மொழி' என்று திருக்குறளுக்குக் கூறிய இப்பாராட்டு, கன்னித் தமிழுக்கும் பொருந்துவதாம்.

""உன்-சீர் இளமைத் திறம் வியந்து
செயல் மறந்து வாழ்த்துதுமே''

உன்னுடைய சிறந்த கன்னித் தன்மையைப் புகழ்ந்து எங்கள் செயலை மறந்து, உன்வசமாகி, உன்னை, "கன்னித் தமிழ்' என்று வாழ்த்துகின்றோம்''. இது "மனோன்மணீயம்' என்னும் நாடகத் தமிழ் நூலை இயற்றிய பேராசிரியர் சுந்தரம்பிள்ளையின் பாட்டு. இப்படி மனமார, வாயாரப் புகழ்ந்து தமிழ்த்தாயை வாழ்த்துகின்றார். அவர் தான் மட்டும் வாழ்த்துவதாகச் சொல்லவில்லை; தமிழர்கள் எல்லோரும் சேர்ந்து இறைஞ்சுகிறோம் என்று பாடுகின்றார்.
கன்னித் தமிழே முத்தமிழ்:
செந்தமிழை முத்தமிழ் என்று பாராட்டுகின்றோம். செந்தமிழ் எப்போது முத்தமிழ் ஆயிற்றோ! அதை அறிவார் யார்? அதன் காலத்தைக் கணக்கிட முடியாது. தொல்காப்பியத்திலே முத்தமிழ் முழங்குகின்றது. தொல்காப்பியம் பழந்தமிழ் நூல்; இன்றுள்ள தமிழ் நூல்களில் காலத்தினால் முற்பட்டது தொல்காப்பியம் ஒன்றேதான். தொல்காப்பிய காலத்திலே தண்டமிழ்மொழி முத்தமிழாக வழங்கியதென்றால், முத்தமிழ் பிறந்த காலத்தைக் கணக்கிடுவது எப்படி?
÷முத்தமிழ் - மூன்று வகையான தமிழ். மூன்று பிரிவான தமிழ், மூன்று இனமான தமிழ் என்று மட்டும் பொருள் சொல்லுவது பொருந்தாது. செந்தமிழின் சிறந்த தன்மையை அதன் ஒப்பற்ற பண்பை-மாசுமறுவற்ற கன்னித் தன்மையைக் கண்டறியாதவர் சிலர் உண்டு. அவர்கள்தான் செந்தமிழ், கருந்தமிழ், கொடுந்தமிழ் என்று குருட்டாம்போக்கிலே கூறுவர். முத்தமிழுக்குப் பொருள் இதுதான் என்று மொழிவர். இவர்கள் செந்தமிழின் கன்னித் தன்மையைக் கண்டுணராதவர்கள்.
÷முத்தமிழ் - மூன்று துறையில் பயன்படும் தமிழ் மூன்று வகையில் உதவி புரியும் தமிழ்; மூன்று வகைப்பட்ட மக்களுக்கும் அறிவும் இன்பமும் சுரக்கும் தமிழ். இதுதான் முத்தமிழின் பொருள். இந்த முத்தமிழ் இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்று மூன்று துறைகளில் பயன்படும் தமிழாகும்.
படிக்கும் தமிழ்:
இயற்றமிழ் என்பவர்கள் கற்றவர்கள் மட்டும் எளிதிலே பொருள் தெரிந்துகொள்ளும்படி நிற்பது, இயற்றமிழிலே பேச்சு வழக்கில் இல்லாத சொற்களும் கலந்து வழங்கும். இயற்றமிழைப் "படிக்கும் தமிழ்' என்று சொல்லிவிடலாம்.
கேட்கும் தமிழ்:
இசைத் தமிழ் என்பது பண்ணோடு கூடியது. இசை-பண்; சங்கீதம். இசைக் கருவிகளின் துணையுடனோ, துணையில்லாமலோ பாடும்படி அமைந்திருப்பது இசைத்தமிழ். படித்தவர்களின் உள்ளத்தையும் இசைத்தமிழ் கவரும். படிக்காதவர்களின் நெஞ்சையும் இசைத்தமிழ் இழுத்துக்கொள்ளும். இசையோடு சேர்ந்த தமிழ், இசைத்தமிழ் . இசைத்தமிழைக் "கேட்கும் தமிழ்' என்று இயம்பலாம்.
பார்க்கும் தமிழ்:
நாடகத் தமிழ் என்பது ஒரு நிகழ்ச்சியைக் கண்ணாற் காணும்படி நடத்திக் காட்டுவதற்கு உதவுவது. பிறர் பேசியதை அப்படியே-அவரைப்போலவே-சொல்லிக் காட்டுவது; நடந்த ஒரு வரலாற்றை அல்லது புதிதாகப் புனைந்த ஒரு கதையை மற்றவர்கள் கண்டு சுவைக்கும்படி நடித்துக் காட்டுவதற்கு உதவுவது நாடகத் தமிழ். ஒருவரைப் பார்த்துப் பேசுவது, ஒருவரோடு ஒருவர் உரையாடுவது நாடகத் தமிழில் அடங்கும். இவ்வாறு உயர்ந்த படிப்பாளிகள் சிறிது கற்றவர்கள், கற்காதவர்கள் ஆகிய இம் முத்திறத்தாரையும் நல்வழிப்படுத்தவே செந்தமிழ் அன்னை முத்தமிழ் உருவாகி நிற்கிறாள்.
÷இயற்றமிழிலே இசையும் உண்டு; நாடகமும் உண்டு. இசைத் தமிழிலே இயலும் உண்டு; நாடகமும் உண்டு. நாடகத் தமிழிலே இயலும் உண்டு; இசையும் உண்டு. இந்த மூன்று தமிழும் ஒரு மரத்தின் கிளைகள், ஆனால், இவற்றைப் பிரித்து வெட்டித்தள்ள முடியாது.
÷கன்னிப்பெண் எல்லோர் நெஞ்சையும் கவர்வதுபோலவே இந்த முத்தமிழும் அனைவர் உள்ளத்தையும் அள்ளிக்கொள்வது. எல்லோருக்கும் இன்பமும், மகிழ்ச்சியும் அறிவும் ஊட்டுவது. கன்னித் தமிழின் இயல்புக்கு இந்த முத்தமிழ் அமைப்பும் ஓர் எடுத்துக்காட்டு. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே செந்தமிழ் என்று பெயர் பெற்று நிற்கின்றது. இதுபோன்ற பெயர்-சிறப்பு வேறு எம்மொழிக்கும் இல்லை.
காவியத்தில் கன்னித் தமிழ்:
கவிதைகளால் இயற்றப்படுவன காவியங்கள். தமிழ்க் கவிதைகளிலும், கவிதைகளின் பொருள்களிலும் கன்னித் தன்மையுண்டு; கவிதைகளால் செய்யப்பட்ட காவியங்களிலும் கன்னித் தன்மை உண்டு. ஆசிரியப்பா, வஞ்சிப்பா, வெண்பா, கலிப்பா என்ற நான்கு பகுதியுடையது என்பர். இவையே பாடல் வகையில் விரிவாகும்.÷தொல்காப்பியர் காலத்திலும் அவர் காலத்திற்கு முன்னும் இந்த நால்வகைப் பாடல்களையும் இவற்றின் பகுதிகளையுமே காவியங்கள் செய்வதற்குக் கருவியாகக் கொண்டனர். இந்த நான்கு வகைப் பாடல்களிலே மூன்று வகைப்பொருள்களை அமைத்துப் பாடி வந்தனர். அந்த மூன்று பொருள்கள் அறம், பொருள், இன்பம் என்பன. காவியங்களிலும், கவிதைகளிலும் இந்த முப்பொருள்களையே அமைத்துப் பாடிவந்தனர்.
இத்தகைய கவிதையும் பொருளும் கொண்ட காவியங்களிலே தமிழ்க் காவிய அமைப்பு மிகவும் சிறந்தது. தமிழ்க் காவிய அமைப்பு ஒரு தனித் தன்மையுள்ளது. வடமொழிக் காவிய அமைப்புக்கு மாறானது.
இன்றைய யுகம்:
இன்று நடப்பது பொதுமக்கள் யுகம். அரச குடும்பங்களின் தனி அதிகார ஆட்சிக்காலம் மறைந்து வருகின்றது. கதைகளும், காவியங்களும் காலத்தின் சூழ்நிலையை ஒட்டியே பிறக்கும். அரச குடும்பக் கதைகளுக்கு இக்காலத்தில் மதிப்பில்லை. அரச குடும்பங்களின் வாழ்க்கையை-அரசர்களின் சர்வாதிகாரப் பெருமையை - அளவுகோலாகக்கொண்டு எழுதப்படும் கதைகளை இக்காலத்தினர் கண்ணெடுத்தும் பார்க்கமாட்டார்கள்.
தமிழ் நாட்டிலே பன்னூறாண்டுகளுக்கு முன்னே பல மொழியினர் குடியேறினர். அவர்களிலே பலர் தமிழர்களாகவே உருமாறிவிட்டனர். தமிழ்மொழியையே தாய்மொழியாகக் கொண்டுவிட்டனர்.
தமிழகத்திலே புகுந்த எந்த மொழியினராலும் தமிழின் கன்னித் தன்மையைக் கலைக்க முடியவில்லை; தமிழின் தனிச் சிறப்பைத் தகர்க்க முடியவில்லை. இதற்கு மாறாக, எல்லோரும் செந்தமிழ்க் கன்னியின் சிறந்த புன்முறுவலிலே சிந்தனையைப் பறிகொடுத்தனர். அருந்தமிழ்க் கன்னியின் அழகு சிந்தும் நடையிலே அன்பு கொண்டனர்; அவளுடைய வனப்பையும் பண்பையும் வாயாரப் புகழ்ந்து வாழ்த்தும் அடியார்களாகத் திரும்பிவிட்டனர். இது வரலாறு கண்ட உண்மை.
இடுகையிட்டது Paramesdriver நேரம் 10/15/2018 10:15:00 முற்பகல் கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

09 அக்டோபர் 2018

சத்தி வட்டார மக்களுக்காக...


இடுகையிட்டது Paramesdriver நேரம் 10/09/2018 06:20:00 முற்பகல் கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

வாழைமரம் மணப்பந்தலில் கட்டுவது ஏன்?

வாழ்க்கை தத்துவம்:

                       குளிர்பதன வசதியுள்ள வாகனத்தில் ஒரு இளைஞன் தன் தந்தையை உட்கார வைத்து நகர்வலம் வந்துகொண்டு இருக்கும் வேளையில்,
“அப்பா உங்கள் வாழ்க்கையில் சொத்துசுகம், சேமிப்பு ஏதுமே இல்லாமல் எழுபது வயதைக் கடந்து விட்டீர்களே’ என்றான்.
வண்டி ஒரு கல்யாணப் பந்தலருகே போகும் போது நிறுத்தச் சொன்னார் தந்தை.
“தம்பி பந்தலில் உள்ள வாழை மரத்தைப் பார்த்தாயா” இதன் சரித்திரம், என்ன, தெரியுமா? இது தன்னுடைய வாழ்நாளில் இலை, பூ, காய், கனி, பட்டை ஆகிய எல்லாவற்றையும் தானமாக கொடுத்து விடுகிறது. இந்த வாழை மரத்தின் சேமிப்பு கன்றுகள் மட்டும் தான். இந்த வாழ்க்கைத் தத்துவம் மணமக்களுக்கும் புரிய வேண்டுமென்பதற்காகத் தான் நம்முடைய முன்னோர்கள் மணப்பந்தலில் வாழை மரம் கட்டுவதை பழக்கமாக வைத்தார்கள்.
தந்தை கொடுத்த உயிர் தான் மனிதனுக்கு மூலதனம். அதைக் கொண்டு முன்னேறுவது தான் தனக்கும் தன்னுடைய தந்தைக்கும் பெருமை இயற்கை விதியின்படி வாழும் மரங்களுக்கு துன்பமோ துயரமோ கிடையாது புரிந்துகொள்" என்றார் தந்தை
நன்றிங்க அப்துல் காதர்...
இடுகையிட்டது Paramesdriver நேரம் 10/09/2018 06:04:00 முற்பகல் கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

07 அக்டோபர் 2018

3ஆம் ஆண்டு புத்தகத்திருவிழா-2018



விதைகள் வாசகர் வட்டம் நடத்திய 3ஆம் ஆண்டு புத்தகத்திருவிழா நிறைவுவிழா 07-10-2018
இன்று மாலை6மணிக்கு திரு.வெ.வெ.நாச்சிமுத்து (தமெகச)அவர்கள் தலைமையில் நிறைவுவிழா நடைபெற்றது.திரு.ஸ்டாலின் சிவக்குமார் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.திரு.செ.பரமேஸ்வரன் அவர்கள் தொடக்கவுரை ஆற்றினார்.திரு.சுப்பு.ரவிக்குமார் அவர்கள்,திரு.செ.சி.நடராசு,திரு.எஸ்.பி.சரவணன் அவர்கள் முன்னிலை வகித்தனர்.திரு.எஸ்.ஆர்.பி.வெங்கிடுசாமி (சத்தியமங்கலம் வியாபாரிகள் சங்கம்)அவர்கள் மற்றும் கவிஞர்.கோ.சுரேஷ் அவர்கள் சிறப்புரை ஆற்றினர்.சத்தி வட்டார படைப்பாளிகள்,சாதனையாளர்கள்,பேச்சுப்போட்டியில் வென்ற மாணவ,மாணவியருக்கு விருதுகளும்,பரிசுகளும் வழங்கப்பட்டன.கட்டுரையாளர் ,மு.பெரியண்ணா என்ற மாணவனுக்கும், 'போக்குவரத்து இல்லாததால் சமூகத்திற்கு ஏற்படும் ஆற்றல் இழப்பு'என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்து இளம்விஞ்ஞானி என்ற தேசியவிருது பட்டம் வென்ற மலைப்பகுதி இடைநின்ற மாணவன் சின்னக்கண்ணன் என்ற மாணவனுக்கும் பரிசு வழங்கி பாராட்டு வழங்கப்பட்டது.நிறைவாக திரு.கணபதிசோதரன் ஆசிரியர் அவர்கள் பேருரை ஆற்றினார்.திரு.மயூரிநாதன் அவர்கள் நன்றிகூறினார்.
இடுகையிட்டது Paramesdriver நேரம் 10/07/2018 11:02:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

06 அக்டோபர் 2018

3ஆம் ஆண்டுசத்தி புத்தகத்திருவிழா 5ஆம் நாள்




விதைகள் வாசகர் வட்டம் நடத்தும்
3ஆம் ஆண்டு சத்தியமங்கலம் புத்தகத் திருவிழாவின்
5ஆம் நாள் மாலைநேர
கலை,இலக்கிய உரைநிகழ்வு.
(06-10-2018 சனிக்கிழமை)
சத்தியமங்கலம் அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளி அருகிலுள்ள பாரீஸ்ஹாலில் (தினசரிச்சந்தை எதிரில்)06-10-2018 சனிக்கிழமை .

                   இன்று மாலை 6 மணிக்கு இலக்கிய உரைவிழா திரு.யாழினி ஆறுமுகம் அவர்கள் தலைமையில் தொடங்கியது.
திரு.ப.வேலுச்சாமி ,மாவட்டச் செயலாளர்,(தமிழக ஆசிரியர் கூட்டணி) அவர்கள் ,
திரு.P. ஜேம்ஸ்குணராஜ் M.A.,B.Ed.,அவர்கள் ,தாளாளர்,ஜேம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி  மற்றும்
 திரு.பெருமாள்சாமி அவர்கள்,தாளாளர்,(காமதேனு கலை அறிவியல் கல்லூரி)
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திரு.வி.கில்பர்ட் ஆசிரியர்(புனித சேவியர் மேல்நிலைப் பள்ளி,பெரிய கொடிவேரி) அவர்கள் அனைவரையும் வரவேற்று ,சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி தொடக்கவுரை நிகழ்த்தினார்.
திரு.ஞா.சங்கரேஸ்வரன்,த.நா.மி.வா.,(தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம்)
திரு.ப.வேலுச்சாமி ஆசிரியர் அவர்கள்,
திரு.கார்த்தி ஆசிரியர் அவர்கள்,
திரு.சரத் அருள்மாறன் ஆசிரியர் அவர்கள் வாழ்த்துரை வழங்கினர்.
எழுத்தாளர்.வா.மணிகண்டன்,நிசப்தம் அறக்கட்டளை நிறுவனர் அவர்கள் 'புதிய சிறகுகள்'தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டன.
தனித்திறன் போட்டி(ஓவியம்)களில் வெற்றிபெற்ற மாணவ,மாணவியருக்கு பரிசுகளும்,பாராட்டுச்சான்றுகளும் வழங்கப்பட்டன.
நிசப்தம் அறக்கட்டளை சார்பாக இந்த ஆண்டு ஏழு அரசுப்பள்ளி நூலகங்களுக்கு முப்பத்தைந்தாயிரம் ரூபாய் மதிப்பிலான பொது அறிவுப் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.
நிறைவாக செ.பரமேஸ்வரன் அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்.


இடுகையிட்டது Paramesdriver நேரம் 10/06/2018 10:06:00 முற்பகல் கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

05 அக்டோபர் 2018

கழுதை என கூறினால் சந்தோசப்படுவேன்.

 அனுபவப் பகிர்வு இது....

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். இந்த கழுதை ஒன்னு மட்டும் முந்நூறு ஆடுகளை ஆள் இல்லாமல் இந்த கழுதை ஆடுகளை மெய்து வருகின்றது என்றால் நம்ப முடியவில்லை என்னால்......ஆனால் அது தான் உண்மை.
இதன் விலை இந்தியன் மதிப்பில் மூன்று லட்சம். மனிதன் தேவை இல்லை.....ஆடு தடம் மாறினாலும் இடம் ஆரி போனாலும் இது தலையில் தட்டு தட்டி ஆட்டை வலி நடத்து சென்று மீண்டும் பண்ணைக்கு கொண்டு வருகின்றது.
இதை ஏமன் நாட்டில் இருந்ந்து கொண்டு வந்து இருகின்றார்கள். சும்மா ரிக் ரிக் ரிக்கக் ...சத்தம் கொடுத்தால் மனிதனை ஒள அருகில் வருகின்றது. நம்மை உற்று நோக்குகின்றது. எல்லாம் புரிந்த மாதிரி நிற்கின்றது.....இதை பார்த்தும் எனக்கு பிரமிப்பு. ஒருவேளை இது நம்ம ஊர்ல இருந்தா மூட்டை சுமக்க மட்டும் பயன் படுத்வோம்....ஆனால் ஆடு ஒட்டி சென்று திரும்ப கொண்டு வரும் இந்த கழுதையின் பெயர் .....மிரட்டலாக உள்ளது. ஒசாமா.
நன்றி திரு. R.V.முத்துசாமி வெங்கடாசலம் அய்யா அவர்களுக்கு...
இடுகையிட்டது Paramesdriver நேரம் 10/05/2018 07:58:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

சட்டமன்ற உறுப்பினர்களும்,மின்னஞ்சல் முகவரியும்.





மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
தமிழகத்தின் 234 தொகுதி MLAக்களுக்கு தனி தனியே ஈமெயில் ஐடி கொடுக்கபட்டுள்ளது.இனி நீங்கள் உங்கள் தொகுதி பற்றிய கோரிக்கைகள் மற்றும் புகார்களையும் ஈமெயிலிலேயே உங்கள் தொகுதி MLAக்களுக்கு அனுப்பலாம். நீங்கள் மெயிலின் நகலை முதலமைச்சருக்கு அனுப்ப வேண்டுமெனில் 167வதாக கொடுக்கபட்டிருக்கும் ஸ்ரீரங்கம் MLA ( முதல்வர் தொகுதி ) ஈமெயில் முகவரிக்கு CC அனுப்பலாம்.
நண்பர்களுடன்
பகிர்ந்து கொள்ளவும்.
1 Acharapakkam -
mlaacharapakkam@tn.gov.in
2 Alandur - mlaalandur@tn.gov.in
3 Alangudi - mlaalangudi@tn.gov.in
4 Alangulam - mlaalangulam@tn
.gov.in
5 Ambasamudram --
mlaambasamudram@tn.gov.in
6 Anaicut -- mlaanaicut@tn.gov.in
7 Andhiyur --mlaandhiyur@t
n.gov.in
8 Andimadam --- mlaandimadam@
tn.gov.in
9 Andipatti----mlaandipatti@tn.g
ov.in
10 AnnaNagar--- mlaannanagar@
tn.gov.in
11 Arakkonam ----mlaarakkonam@
tn.gov.in
12 Arantangi-- mlaarantangi@tn
.gov.in
13 Aravakurichi --- mlaaravakurichi
@tn.gov.in
14 Arcot --- mlaarcot@tn.gov.in
15 Ariyalur --mlaariyalur@tn.gov.in
16 Arni -- mlaarni@tn.gov.in
17 Aruppukottai ---mlaaruppukot
tai@tn.gov.in
18 Athoor--- mlaathoor@tn.gov.in
19 Attur ---mlaattur@tn.gov.in
20 Avanashi ---mlaavanashi@
tn.gov.in
21 Bargur ---mlabargur@tn.gov.in
22 Bhavani---mlabhavani@
tn.gov.in
23 Bhavanisagar---
mlabhavanisagar@tn.gov.in
24 Bhuvanagiri-----mlabhuvanagiri
@tn.gov.in
25 Bodinayakkanur----
mlabodinayakkanur@tn.gov.in
26 Chengalpattu-----
mlachengalpattu@tn.gov.in
27 Chengam---mlachengam@
tn.gov.in
28 Chepauk---mlachepauk@
tn.gov.in
29 Cheranmahadevi---
mlacheranmahadevi@tn.gov.in
30 Cheyyar---mlacheyyar@
tn.gov.in
31 Chidambaram---m
lachidambaram@tn.gov.in
32 Chinnasalem---m
lachinnasalem@tn.gov.in
33 CoimbatoreEast----mlacoimbator
eeast@tn.gov.in
34 CoimbatoreWest----
mlacoimbatorewest@tn.gov.in
35 Colachel---mlacolachel@tn.gov.
in
36 Coonoor----mlacoonoor@tn.gov.i
n
37 Cuddalore---mlacuddalore@
tn.gov.in
38 Cumbum---mlacumbum@
tn.gov.in
39 Dharapuram---ml
adharapuram@tn.gov.in
40 Dharmapuri---mladharmapuri@
tn.gov.in
41 Dindigul---mladindigul@tn.gov.
in
42 Edapadi---mlaedapadi@tn.gov.in
43 Egmore---mlaegmore@tn.gov.in
44 Erode----mlaerode@tn.gov.in
45 Gingee---mlagingee@tn.gov.in
46 Gobichettipalayam---mlagobiche
ttipalayam@tn.gov.in
47 Gudalur----mlagudalur@tn.gov.i
n
48 Gudiyatham----m
lagudiyatham@tn.gov.in
49 Gummidipundi----
mlagummidipundi@tn.gov.in
50 Harbour-----mlaharbour@
tn.gov.in
51 Harur----mlaharur@tn.gov.in
52 Hosur---mlahosur@tn.gov.in
53 Ilayangudi---mlailayangudi@tn.
gov.in
54 Jayankondam---m
lajayankondam@tn.gov.in
55 Kadaladi---mlakadaladi@tn.gov.
in
56 Kadayanallur---mlakadayanallur
@tn.gov.in
57 Kalasapakkam----
mlakalasapakkam@tn.gov.in
58 Kancheepuram---
mlakancheepuram@tn.gov.in
59 Kandamangalam----
mlakandamangalam@tn.gov.in
60 Kangayam---mlakangayam@
tn.gov.in
61 Kanniyakumari----
mlakanniyakumari@tn.gov.in
62 Kapilamalai----mlakapilamalai@
tn.gov.in
63 Karaikudi----mlakaraikudi@tn.g
ov.in
64 Karur----mlakarur@tn.gov.in
65 Katpadi----mlakatpadi@tn.gov.in
66 Kattumannarkoil---
mlakattumannarkoil@tn.gov.in
67 Kaveripattinam---mlakaveripatt
inam@tn.gov.in
68 Killiyoor----mlakilliyoor@tn.g
ov.in
69 Kinathukadavu---
mlakinathukadavu@tn.gov.in
70 Kolathur---mlakolathur@tn.gov.
in
71 Kovilpatti---mlakovilpatti@tn.
gov.in
72 Krishnagiri----mlakrishnagiri@
tn.gov.in
73 Krishnarayapuram---
mlakrishnarayapuram@tn.gov.in
74 Kulithalai----mlakulithalai@tn
.gov.in
75 Kumbakonam---ml
akumbakonam@tn.gov.in
76 Kurinjipadi---mlakurinjipadi@t
n.gov.in
77 Kuttalam---mlakuttalam@
tn.gov.in
78 Lalgudi---mlalalgudi@tn.gov.in
79 MaduraiCentral---
mlamaduraicentral@tn.gov.in
80 MaduraiEast---m
lamaduraieast@tn.gov.in
81 MaduraiWest----
mlamaduraiwest@tn.gov.in
82 Maduranthakam----
mlamaduranthakam@tn.gov.in
83 Manamadurai----
mlamanamadurai@tn.gov.in
84 Mangalore----mlamangalore@
tn.gov.in
85 Mannargudi----m
lamannargudi@tn.gov.in
86 Marungapuri-----
mlamarungapuri@tn.gov.in
87 Mayiladuturai----mlamayiladutu
rai@tn.gov.in
88 Melmalaiyanur---
mlamelmalaiyanur@tn.gov.in
89 Melur---mlamelur@tn.gov.in
90 Mettupalayam---
mlamettupalayam@tn.gov.in
91 Mettur---mlamettur@tn.gov.in
92 Modakkurichi---mlamodakkurichi
@tn.gov.in
93 Morappur---mlamorappur@
tn.gov.in
94 Mudukulathur---
mlamudukulathur@tn.gov.in
95 Mugaiyur----mlamugaiyur@
tn.gov.in
96 Musiri---mlamusiri@tn.gov.in
97 Mylapore---mlamylapore@
tn.gov.in
98 Nagapattinam----
mlanagapattinam@tn.gov.in
99 Nagercoil---mlanagercoil@tn.go
v.in
100 Namakkal---mlanamakkal@
tn.gov.in
101 Nanguneri---mlananguneri@
tn.gov.in
102 Nannilam----mlanannilam@
tn.gov.in
103 Natham-----mlanatham@
tn.gov.in
104 Natrampalli----
mlanatrampalli@tn.gov.in
105 Nellikkuppam----
mlanellikkuppam@tn.gov.in
106 Nilakottai---mlanilakottai@tn.
gov.in
107 Oddanchatram---
mlaoddanchatram@tn.gov.in
108 Omalur---mlaomalur@tn.gov.in
109 Orathanad---mlaorathanad@
tn.gov.in
110 Ottapidaram---m
laottapidaram@tn.gov.in
111 Padmanabhapuram----
mlapadmanabhapuram@tn.gov.in
112 Palacode---mlapalacode@
tn.gov.in
113 Palani----mlapalani@tn.gov.in
114 Palayamkottai---
mlapalayamkottai@tn.gov.in
115 Palladam---mlapalladam@
tn.gov.in
116 Pallipattu---mlapallipattu@tn.
gov.in
117 Panamarathupatti---
mlapanamarathupatti@tn.gov.in
118 Panruti---mlapanruti@
tn.gov.in
119 Papanasam---mlapapanasam@
tn.gov.in
120 Paramakudi---ml
aparamakudi@tn.gov.in
121 ParkTown----mlaparktown@
tn.gov.in
122 Pattukkottai----mlapattukkotta
i@tn.gov.in
123 Pennagaram-----
mlapennagaram@tn.gov.in
124 Perambalur----m
laperambalur@tn.gov.in
125 Perambur---mlaperambur@
tn.gov.in
126 Peranamallur---
mlaperanamallur@tn.gov.in
127 Peravurani---mlaperavurani@
tn.gov.in
128 Periyakulam---m
laperiyakulam@tn.gov.in
129 Pernambut---mlapernambut@
tn.gov.in
130 Perundurai---mlaperundurai@
tn.gov.in
131 Perur---mlaperur@tn.gov.in
132 Pollachi---mlapollachi@tn.gov.
in
133 Polur---mlapolur@tn.gov.in
134 Pongalur---mlapongalur@
tn.gov.in
135 Ponneri---mlaponneri@
tn.gov.in
136 Poompuhar---mlapoompuhar@
tn.gov.in
137 Poonamallee----
mlapoonamallee@tn.gov.in
138 Pudukkottai----
mlapudukkottai@tn.gov.in
139 Purasawalkam----
mlapurasawalkam@tn.gov.in
140 Radhapuram---ml
aradhapuram@tn.gov.in
141 Rajapalayam---m
larajapalayam@tn.gov.in
142 Ramanathapuram---
mlaramanathapuram@tn.gov.in
143 Ranipet---mlaranipet@
tn.gov.in
144 Rasipuram----mlarasipuram@
tn.gov.in
145 Rishivandiyam----mlarishivandi
yam@tn.gov.in
146 Dr.RadhakrishnanNagar----
mlarknagar@tn.gov.in
147 Royapuram---mlaroyapuram@
tn.gov.in
148 Saidapet---mlasaidapet@
tn.gov.in
149 Salem -I---mlasalem1@
tn.gov.in
150 Salem-II---mlasalem2@
tn.gov.in
151 Samayanallur---
mlasamayanallur@tn.gov.in
152 Sankaranayanarkoi---
mlasankaranayanarkoil@tn.gov.in
153 Sankarapuram---
mlasankarapuram@tn.gov.in
154 Sankari---mlasankari@
tn.gov.in
155 Sathyamangalam---
mlasathyamangalam@tn.gov.in
156 Sattangulam----
mlasattangulam@tn.gov.in
157 Sattur---mlasattur@tn.gov.in
158 Sedapatti----mlasedapatti@
tn.gov.in
159 Sendamangalam----
mlasendamangalam@tn.gov.in
160 Sholavandan---m
lasholavandan@tn.gov.in
161 Sholinghur----mlasholinghur@
tn.gov.in
162 Singanallur---mlasinganallur@
tn.gov.in
163 Sirkazhi----mlasirkazhi@tn.gov
.in
164 Sivaganga----mlasivaganga@
tn.gov.in
165 Sivakasi---mlasivakasi@tn.gov.
in
166 Sriperumbudur---
mlasriperumbudur@tn.gov.in
167 Srirangam---mlasrirangam@
tn.gov.in
168 Srivaikuntam---
mlasrivaikuntam@tn.gov.in
169 Srivilliputhur---mlasrivillipu
thur@tn.gov.in
170 Talavasal---mlatalavasal@
tn.gov.in
171 Tambaram---mlatambaram@
tn.gov.in
172 Taramangalam---
mlataramangalam@tn.gov.in
173 Tenkasi----mlatenkasi@
tn.gov.in
174 Thalli---mlathalli@tn.gov.in
175 Thandarambattu---
mlathandarambattu@tn.gov.in
176 Thanjavur---mlathanjavur@
tn.gov.in
177 Theni---mlatheni@tn.gov.in
178 Thirumangalam---
mlathirumangalam@tn.gov.in
179 Thirumayam---ml
athirumayam@tn.gov.in
180 Thirupparankundram---
mlathirup
parankundram@tn.gov.in
181 Thiruvattar---mlathiruvattar@
tn.gov.in
182 Thiruverambur---
mlathiruverambur@tn.gov.in
183 Thiruvidamarudur---
mlathiruvidamarudur@tn.gov.in
184 Thiruvonam---ml
athiruvonam@tn.gov.in
185 Thiruvottiyur---mlathiruvottiy
ur@tn.gov.in
186 Thondamuthur---
mlathondamuthur@tn.gov.in
187 Thottiam---mlathottiam@
tn.gov.in
188 Tindivanam---mlatindivanam@
tn.gov.in
189 Tiruchendur---m
latiruchendur@tn.gov.in
190 Tiruchengode----
mlatiruchengode@tn.gov.in
191 Tirunavalur----
mlatirunavalur@tn.gov.in
192 Tirunelveli---mlatirunelveli@t
n.gov.in
193 Tiruppattur-194----mlatiruppat
tur194@tn.gov.in
194 Tiruppattur-41---mlatiruppattu
r41@tn.gov.in
195 Tirupporur----mlatirupporur@
tn.gov.in
196 Tiruppur----mlatiruppur@
tn.gov.in
197 Tiruthuraipundi----mlatiruthur
aipundi@tn.gov.in
198 Tiruttani----mlatiruttani@tn.g
ov.in
199 Tiruvadanai---mlatiruvadanai@
tn.gov.in
200 Tiruvaiyaru----
mlatiruvaiyaru@tn.gov.in
201 Tiruvallur---mlatiruvallur@tn.
gov.in
202 Tiruvannamalai----
mlatiruvannamalai@tn.gov.in
203 Tiruvarur----mlatiruvarur@
tn.gov.in
204 TheagarayaNagar----
mlatnagar@tn.gov.in
205 Tiruchirapalli-I---mlatrichy1@
tn.gov.in
206 Tiruchirapalli-II---mlatrichy2@
tn.gov.in
207 Triplicane----mlatriplicane@tn
.gov.in
208 Tuticorin---mlatuticorin@tn.go
v.in
209 Udagamandalam---
mlaudagamandalam@tn.gov.in
210 Udumalpet---mlaudumalpet@
tn.gov.in
211 Ulundurpet---mlaulundurpet@
tn.gov.in
212 Uppiliyapuram---mlauppiliyapur
am@tn.gov.in
213 Usilampatti---mlausilampatti@t
n.gov.in
214 Uthiramerur---m
lauthiramerur@tn.gov.in
215 Valangiman----m
lavalangiman@tn.gov.in
216 Valparai----mlavalparai@
tn.gov.in
217 Vandavasi----mlavandavasi@
tn.gov.in
218 Vaniyambadi----
mlavaniyambadi@tn.gov.in
219 Vanur----mlavanur@tn.gov.in
220 Varahur-----mlavarahur@
tn.gov.in
221 Vasudevanallur---
mlavasudevanallur@tn.gov.in
222 Vedaranyam---ml
avedaranyam@tn.gov.in
223 Vedasandur---ml
avedasandur@tn.gov.in
224 Veerapandi---mlaveerapandi@
tn.gov.in
225 Vellakoil---mlavellakoil@tn.go
v.in
226 Vellore---mlavellore@tn.gov.in
227 Vilathikulam---mlavilathikulam
@tn.gov.in
228 Vilavancode---m
lavilavancode@tn.gov.in
229 Villivakkam---mlavillivakkam@
tn.gov.in
230 Villupuram---mlavillupuram@
tn.gov.in
231 Virudhunagar----
mlavirudhunagar@tn.gov.in
232 Vridhachalam---
mlavridhachalam@tn.gov.in
233 Yercaud--- mlayercaud@tn.g
ov.in
234 ThousandLights---
mlathousandlights@tn.gov.in

நன்றி.திரு.செல்வம் பழனிச்சாமி அவர்களுக்கு.
இடுகையிட்டது Paramesdriver நேரம் 10/05/2018 07:43:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

முதியோர் இல்லத்தில் தந்தை.





முதியோர் இல்லம் சேர்க்கவா உன்னை தத்தெடுத்து வளர்த்தார்..
------------------------------------------------------
கொண்டு சேத்த மகனுக்குத் தெரியாது..,
பல ஆண்டுகளுக்கு முன்
தான்
அந்த அப்பா தத்தெடுத்த
அனாதை மகன் என்று.
தர்மபத்தினி
தவிக்கவிட்டு போனபின்
ஆதரவற்று, பின்பு
இந்த ஆனாதை மகனுக்கு
பாரமாகிப் போனார் தந்தை.
தனியாளாய் தவித்துப் போனார்.
தனிமையில்
இனிமை காண விரும்பிய
மகனின்
இனிய இளம் மனைவி..,
மென்னியைத் திருகி
புருஷனை மிரட்டினாள்.
கத்தினாள்,ஓலமிட்டாள்.,
ஒப்பாரி வைத்தாள்.,ராட்சசி.
கிழவனைக் கடாசிவிட்டு
வீட்டுக்குள் நுழையென்றாள்.
பழகின நாயைப் போல
பணிந்து குனிந்தான்.,பாவம்.
காம இன்பம் வளர்த்த
பாசத்தைப் பார்த்து பல்லிளித்தது.
பார்த்தார் தந்தை,
பவ்வியமாய் மகனை அழைத்தார்.
முதியோர் இல்லம்
வழி சொன்னார் முகமலர்ந்து.
வரவேற்றது அவனை தத்தெடுத்த
அதே அனாதை இல்லம்.
மகன்களை அறிந்து,
தற்கால மருமகளையும் உணர்ந்து
முதியோர் இல்லமாகவும்
தன்னைத் தரம்
உயர்ந்திருந்தது அனாதைஇல்லம்.
தெரிந்தவர் தானே!
சிக்கலேதுமின்றி
உடனே சேர்ந்து கொண்டனர்.
அவனை வளர்க்க இருந்த இல்லம்
இனி அவரை வளர்க்கும்!
பல நாள் பழகிய
நண்பனைப் போல கிளி ஒன்று
கலகலப்பாய் பேசி
அந்த அறையில் அவரை வரவேற்றது.
மனிதர்கள் தராத
இதமும் இங்கிதமும் இன்னுரையும்
தனி ஆளாகக் கிளி
தந்ததையெண்ணி வியந்து மகிழ்ந்தார்.
தத்து எடுக்கப்பிடாது போலுக்கு..ன்னு
பித்து பிடிச்ச தந்தை
கிளி கிட்டே ஒளறுதாரு.
ஒன்னும் கவலைப் படாதேய்யா,
சொல்லிட்டு கிட்ட வந்த கிளி,
ஒன்னை நான் தத்தெடுத்து
"தத்தப்பா" என அழைத்து எங் காலம் வரை
கண்கலங்காம பாத்துகிறேன்..னுது.
கெகக்கெக்கெக்கேஏஏ..ன்னு
சிரிச்சுட்டாரு பெரியவரு.
இனி, சிரிச்சுகிட்டே இருப்பாரு.
இது தான்
நிம்மதின்னும் புரிஞ்சுகிட்டாரு.
அவரைப் பொறுத்தவரை
எல்லாம் இழந்த பின்னும்
இது இன்னுமொரு நல்ல விதியே...
பிறவி கடைத்தேற சுகமான வழியே!
கிளியையும் அவரையும் வாழ்த்துவோம்.
நன்றி ,திரு.பரிமேலழகர் பாரி அவர்களுக்கு......
இடுகையிட்டது Paramesdriver நேரம் 10/05/2018 07:33:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

விதைகள் வாசகர் வட்டம் வெளியிடும் இதழின் பெயர் என்னங்க?



 முக்கிய அறிவிப்பு...
                       சாதி,மதம்,இனம்,மொழி,அரசியல் வேறுபாடுகளைக் கடந்து சமூக முன்னேற்றத்திற்கான பொதுஅறிவு செய்திகளை வெளியிட சத்தியமங்கலம் விதைகள் வாசகர் வட்டம் ,செய்தி இதழ் வெளியிடவுள்ளது.

















என அன்புடன்,பரமேஸ்வரன்,அரசுப்பேருந்து ஓட்டுனர்,தாளவாடி கிளை.ஈரோடு மாவட்டம்...
இடுகையிட்டது Paramesdriver நேரம் 10/05/2018 07:17:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

3ஆம் ஆண்டு சத்தியமங்கலம் புத்தகத்திருவிழா-2018

அன்பர்களே,வணக்கம்.




                         
                      விதைகள் வாசகர் வட்டம் நடத்தும்
         3ஆம் ஆண்டு சத்தியமங்கலம் புத்தகத் திருவிழாவின்
                         4ஆம் நாள் மாலைநேர
                          கலை,இலக்கிய உரைநிகழ்வு.
                                              (05-10-2018 வெள்ளிக்கிழமை)

                     சத்தியமங்கலம் அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளி அருகிலுள்ள  பாரீஸ்ஹாலில் (தினசரிச்சந்தை எதிரில்)05-10-2018 வெள்ளிக்கிழமை இன்று மாலை 6 மணிக்கு திரு.அ.ராக்கிமுத்து (தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்) அவர்கள் தலைமையில் தொடங்கியது.திரு.அ.ஆறுமுகம் ஆசிரியர்(அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளி)அவர்கள் முன்னிலை வகித்தார்.திரு.ந.முத்துசாமி அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.பேராசிரியரும் எழுத்தாளருமான 'லயம்' காலசுப்பிரமணியம் (லயம் இலக்கிய இதழாசிரியர்) அவர்கள் தொடக்கவுரை ஆற்றினார்.திரு.அரசுதாமஸ் தலைமையாசிரியர் அவர்கள் 'புத்தகம் என்னும் பொக்கிஷம்'என்னும் தலைப்பிலும்,கவிதாயினி மஞ்சுவிஸ்வநாதன் அவர்கள் 'உவப்பத் தலைகூடி உள்ளப் பிரிதல்'என்னும் தலைப்பிலும் சிறப்புரையாற்றினர்.நிறைவாக இரா.வினோத்ராஜேந்திரன் (இளநிலைப் பொறியாளர்)அவர்கள் நன்றிகூறினார்.
இன்றைய கூட்டத்தில் விதைகள் வாசகர் வட்டம் சார்பாக பொது அறிவுத்தகவலிதழ் வெளியிட ஆலோசனை செய்யப்பட்டது.திங்களிருமுறை இதழாகவோ, மாத இதழாகவோ,காலாண்டு இதழாகவோ,அரையாண்டு இதழாகவோ  வெளியடுவது பற்றி பின்னர் முடிவெடுக்கலாம் என பருவ இதழ் காலம் குறித்து வெளியிடுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இடுகையிட்டது Paramesdriver நேரம் 10/05/2018 06:39:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

பொது அறிவு இதழுக்கு பெயரிட வாங்க!

முக்கிய அறிவிப்பு...

சாதி,மதம்,இனம்,மொழி,அரசியல் வேறுபாடுகளைக் கடந்து சமூக முன்னேற்றத்திற்கான பொதுஅறிவு செய்திகளை வெளியிட சத்தியமங்கலம் விதைகள் வாசகர் வட்டம் ,செய்தி இதழ் வெளியிடவுள்ளது.எளிய தமிழில் பெயரிடத் தேவையுள்ளதால்,'யாதும் ஊரே-யாவரும் கேளீர்' என்ற பரந்த கருத்திற்கேற்ப இந்த தகவலறிந்த யாராக இருந்தாலும் பாமரனுக்கும் மனதில் நிற்கும்படியான தலைப்பு இங்கு பதிவிட்டு பொதுஅறிவு இதழுக்கு வித்திட அன்புடன் கோரிக்கை சமர்ப்பிக்கிறோம்.சிறந்த தலைப்பினை வாசகர் வட்டத்தின் குழு தேர்வு செய்து தங்களுக்கும் செய்தி தரப்படும்.தற்போதுவரை கிடைத்த தலைப்பும் தகவலளித்த அன்பர்பெயரும் இதோ...
(1)சிந்தனை - என பெயரிடலாம் தகவலளித்தவர் C.பரமேஸ்வரன்,
(2)சாதிக்கலாம்- என பெயரிடலாம் தகவல் சாதிக்பாட்சா,
(3)விதைகள் - என பெயரிடலாம் தகவல் யாழினி ஆறுமுகம்
(4) பொக்கிஷம் - என பெயரிடலாம் தகவல் வினோத்ராஜேந்திரன்
(5)விதைக்கலாம் - என பெயரிடலாம் தகவல் புகைப்படப் போராளி க.மூர்த்தி
(6)சிறுதுளி - என பெயரிடலாம் தகவல் பொன் பிரபாகரன்
(7)அறிவோசை - என பெயரிடலாம் தகவல் கிறிஸ்டோபர்
(8)நமது இதழ் - என பெயரிடலாம் தகவல் ஸ்டாலின் சிவக்குமார்
(9)தகவல் பெட்டகம் - என பெயரிடலாம் தகவல் சாக்ரடீசு
(10)விளைச்சல் - என பெயரிடலாம் தகவல் விவேக்
(11) வாசிக்கலாம் - என பெயரிடலாம் தகவல் மாரிமுத்து
(12)தகவல்துளி - என பெயரிடலாம் தகவல் சுந்தர்ராசு
(13)அறிவுத்துளிர் - என பெயரிடலாம் தகவல் ஆறுமுகம்
இவ்வாறாக தங்கள் மனதில் தோன்றும் (பொதுஅறிவு செய்திஇதழுக்கு) இனிய பெயரை இங்கு பதிவுசெய்து உதவுங்க.அல்லது கீழ்கண்ட எண்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்புங்க! என 9003790297 ,9585600733 , 9626614491 , 9443853621 விதைகள் வாசகர் வட்டம் ,சத்தியமங்கலம்,ஈரோடு மாவட்டம்.


Parameswaran Driver விதைகள் பேசுது - என பெயரிடலாம்.
1
நிர்வகி
விரும்பு
· பதிலளி · 1ம.
Parameswaran Driver
Parameswaran Driver ஸ்டீபன் சுந்தர் தாங்கள் விருப்பம் தெரிவித்தால் மட்டும் போதாது.நல்லபெயர் கொடுங்க.தாளவாடி விடியல் இளைஞர் மன்றத்தின் நண்பர்களுக்கும் சொல்லி நல்ல நல்ல பெயரை இங்கு பதிவிடுங்க.முதல் இதழில் அனைவரின் பெயர்களும் அச்சிலேற்றி வெளியிடப்படும்.
1
நிர்வகி
விரும்பு
· பதிலளி · 56நி
Xavier Sathy
Xavier Sathy | நம்ப ஊர் செய்தி மலர்
2 வீச்சரு வாள்
1
நிர்வகி
விரும்பு
· பதிலளி · 53நி
ப.சின்னச் சாமி
ப.சின்னச் சாமி தளிர்..
1
நிர்வகி
விரும்பு
· பதிலளி · 52நி
Parameswaran Driver
Parameswaran Driver வரவேற்கிறேன்.அதேநேரத்தில் இந்தபெயர் ஏற்கனவே இதழுக்கு சூட்டப்பட்டுள்ளது என நினைக்கிறேன்.இருப்பினும் பட்டியலில் சேர்க்கிறேன்.நன்றிங்க.இன்னும் தங்கள் மனதில் தோன்றும் எளிய பெயரை கொடுங்க.
1
நிர்வகி
விரும்பு
· பதிலளி · 50நி
Parameswaran Driver
பதில் எழுதுக...
ரிப்போட்டர் வேலு
ரிப்போட்டர் வேலு சந்தன சாரல்
1
நிர்வகி
விரும்பு
· பதிலளி · 51நி
Parameswaran Driver
Parameswaran Driver மிக்க மகிழ்ச்சிங்க அய்யா..தாங்களும் ஒரு அங்கத்தினரே என்பதை இந்த நேரத்தில் நினைவுபடுத்துகிறேன்.மற்றவை நேரில்
நிர்வகி
விரும்பு
· பதிலளி · 49நி
Parameswaran Driver
பதில் எழுதுக...
Kongu Robo
Kongu Robo · ப.சின்னச் சாமி மற்றும் 2 பேர் உடன் நண்பர்கள்
துளிர்
1
நிர்வகி
விரும்பு
· பதிலளி · 52நி
Xavier Sathy
Xavier Sathy சத்தி சிறப்பு செய்திகள் 2 சத்தி குடும்ப இதழ்
1
நிர்வகி
விரும்பு
· பதிலளி · 47நி · திருத்தப்பட்டது
Xavier Sathy
Xavier Sathy வாசி யோசி 2 சத்தி முரசு
1
நிர்வகி
விரும்பு
· பதிலளி · 40நி · திருத்தப்பட்டது
Kumaran Kumaran
Kumaran Kumaran முயற்சிக்கு வாழ்த்துகள்
1
நிர்வகி
விரும்பு
· பதிலளி · 41நி
Vijilence Manikandan
Vijilence Manikandan "களஞ்சியம்"
2
நிர்வகி
விரும்பு
· பதிலளி · 33நி
Mohan Raj
Mohan Raj 1. வளர்ச்சி, 2. விடியல், 3. புது விடியல், 4. வானமே எல்லை....
1
நிர்வகி
விரும்பு
· பதிலளி · 32நி
Sureshkumar Subramani
Sureshkumar Subramani அறிவுக்களஞ்சியம் என்று பெயரிடலாம் என்பது எனது தாழ்மையான கருத்து...
1
நிர்வகி
விரும்பு
· பதிலளி · 9நி
Parameswaran Driver
உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...




Parameswaran Driver அய்யா, ப.சின்னச்சாமி அவர்களே தாங்களும் பொது அறிவு இதழுக்கு தலைப்பு கொடுத்துதவுங்க.

1
நிர்வகி

விரும்பு
· பதிலளி · 5நி
ப.சின்னச் சாமி

ப.சின்னச் சாமி Parameswaran Driver ...தளிர் ..

1
நிர்வகி

விரும்பு
· பதிலளி · 3நி
Parameswaran Driver

பதில் எழுதுக...

Parameswaran Driver
உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...
இடுகையிட்டது Paramesdriver நேரம் 10/05/2018 06:22:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

இலக்கியக் கூடல்

இலக்கியக் கூடல்
சத்தியமங்கலம்

Bannari Amman Community Radio 90.4MHZ


ரேடியோ கேளுங்க! தினமும் கேளுங்க!!
Bannari Amman
Community Radio 90.4 MHZ அலைவரிசையில்!...

நம்ம சத்தியமங்கலத்தில் சமுதாய விழிப்புணர்வுக்காக பண்ணாரி அம்மன் கல்லூரி
90.4 MHZஅலைவரிசையில் தினசரி காலை 6.00 மணி முதல் காலை 10.00 மணி வரையிலும்,மாலை 4.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலும்
BANNARI AMMAN INSTITUTE OF TECHNOLOGY - CRS90.4MHZ
sathyamangalam-638402,Erode District,Tamil Nadu,India

consumerandroad.blogspot.com

https://consumeandroad.blogspot.com

எனது வலைப்பதிவு பட்டியல்

  • PARAMES DRIVER - பரமேஸ் டிரைவர் !

பரமேஸ்வரன்.C

பரமேஸ்வரன்.C
சிபர்ஸ்ஆர்க்.

சமைத்துப் பழகலாம் வாங்க

சமைத்துப் பழகலாம் வாங்க
கொங்கு சமையல்

என்னைப் பற்றி

எனது படம்
Paramesdriver
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் கோவை கோட்டம் ஈரோடு மண்டலத்தின் தாளவாடி கிளையில் பேருந்து ஓட்டுநர்...
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

மொத்தப் பக்கக்காட்சிகள்

லேபிள்கள்

  • "ஆங்கிலம்" (1)
  • 23-வது சாலைப் பாதுகாப்பு விழா -2012 தாளவாடி (1)
  • 49ஓ-விதி (1)
  • அட்ச ரேகை (1)
  • அணு03 (1)
  • அணுசக்தி (1)
  • அம்பேத்கர் (1)
  • அமெரிக்க ஆங்கிலம் (1)
  • அறிவியல் புத்தகங்கள்-தமிழ்நாடு அறிவியல் இயக்கம்- (1)
  • அறிவியலில் பெண்கள் ( ariviyalil pengal ) (1)
  • ஆங்கில அகராதி (1)
  • ஆசிரியர் தினம் (1)
  • ஆளுமை (1)
  • இந்திய தேசியக்கொடி (1)
  • இந்தியா (India) (1)
  • இப்படி ஒரு தியாகி இனி நமக்கு கிடைக்க மாட்டார் (1)
  • இப்படி படியுங்க-மாணவ (1)
  • உலக மகளிர் தினவிழா-2012 இந்தியாவின் சாதனை பெண்கள் (1)
  • உலக மகளிர் தினவிழா-2012 விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள் (1)
  • எயிட்ஸ் விழிப்புணர்வு (1)
  • என்னைக் கேளுங்கள் (1)
  • ஐஸ் மோர்: (1)
  • ஒலி (1)
  • ஒலி மாசு02 (1)
  • ஒளி மற்றும் ஒலி அலைகள் (1)
  • கணிப்பொறி மென்பொருள் (1)
  • கலோரி (1)
  • கவிதைகள் (1)
  • கற்பூரவள்ளி (1)
  • காவல்துறை (1)
  • காற்று மாசுபடுதல் (1)
  • கிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-01 (1)
  • கிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-02 (1)
  • குடல் புண் (1)
  • கொசு விரட்டி- (1)
  • சமயம் (1)
  • சமூக சேவை என்றால் ...... (1)
  • சித்த மருத்துவம். (1)
  • சுற்றுச்சூழல்02 (1)
  • சூரியனின் ஒளி (1)
  • சோற்றுக்கற்றாழை (1)
  • டிஜிட்டல் காமெரா (1)
  • டெசிபல்01 (1)
  • தங்கம் ஓடி வந்த பாதை (1)
  • தமிழ் எண்கள் (1)
  • தமிழ் எண்கள்(எழுத்து வடிவில்) (1)
  • தமிழ்நாடு அறிவியல் இயக்கம் -மாநில மையம்.2011 (1)
  • தனிமங்கள் (1)
  • தியாகி கோபி அய்யர் அவர்கள் (1)
  • தீர்க்க ரேகை (1)
  • தேனீக்கள் சேவை அமைப்பு (1)
  • நமது உடல் (1)
  • நார்ச்சத்து (1)
  • நிறம்01 (1)
  • பக்கவாதம்-பிரச்சினையா? (1)
  • பக்கவாதம்02 (1)
  • பத்தியம். (1)
  • பிளாஸ்டிக் பைகள்-சுற்றுப்புற சீர்கேடு (1)
  • பிளாஸ்டிக்’ – சில உண்மைகள் (1)
  • புவியியல் (1)
  • பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம்.-கோபி (1)
  • பேப்பர் அளவுகள்தொடர்ச்சி-இந்தியா (1)
  • பொருளாதாரம் (1)
  • மகளிர் மட்டும் (1)
  • மாசுபடுதல் (1)
  • மாணவியரே (1)
  • மாநில தேர்தல் ஆணையர் (1)
  • மாவட்ட ஆட்சியர்-ஈரோடு (1)
  • மின்நூல்-நூலகம் (1)
  • முக்குற்றம் (1)
  • முதல் உதவிப் பெட்டி (1)
  • மூட்டைப்பூச்சிகள் (1)
  • மூல நோய் (1)
  • மூல நோய் விரட்ட (1)
  • மேலாண்மை (1)
  • மைக்ரோவேவ் அடுப்பு03 (1)
  • ரகசிய கேமரா உசாருங்க உசாரு (1)
  • வளிமம் (1)
  • விப்ரோ-பெற்றோர் கலந்தாய்வுக் கூட்டம்-2012 (1)
  • B.Ed-பட்டப்படிப்பு (1)
  • Decibels (1)
  • N.G.O.என்றால் என்ன? (1)
  • PAPER SIZES IN INDIA WORLD (1)
  • TANCET (1)
  • tnsf-apsf-kasf-klsf-psf (1)

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2021 (1)
    • ►  ஜூன் (1)
  • ►  2020 (52)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (3)
    • ►  ஆகஸ்ட் (2)
    • ►  ஜூலை (1)
    • ►  ஜூன் (6)
    • ►  மே (1)
    • ►  ஏப்ரல் (26)
    • ►  மார்ச் (11)
    • ►  பிப்ரவரி (1)
  • ►  2019 (30)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (13)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (2)
    • ►  ஜனவரி (8)
  • ▼  2018 (69)
    • ►  டிசம்பர் (10)
    • ►  நவம்பர் (1)
    • ▼  அக்டோபர் (22)
      • கோவை கோலிவுட்டான கதை.....
      • குழந்தைச் செல்வம்..
      • கற்பு எனப்படுவது
      • அணிகள் பலவகை -
      • மாணவ,மாணவியரின் படைப்புகள் கோருதல்.
      • விதைகள்-காலாண்டு இதழ்.
      • தமிழின் பெருமை:
      • சத்தி வட்டார மக்களுக்காக...
      • வாழைமரம் மணப்பந்தலில் கட்டுவது ஏன்?
      • 3ஆம் ஆண்டு புத்தகத்திருவிழா-2018
      • 3ஆம் ஆண்டுசத்தி புத்தகத்திருவிழா 5ஆம் நாள்
      • கழுதை என கூறினால் சந்தோசப்படுவேன்.
      • சட்டமன்ற உறுப்பினர்களும்,மின்னஞ்சல் முகவரியும்.
      • முதியோர் இல்லத்தில் தந்தை.
      • விதைகள் வாசகர் வட்டம் வெளியிடும் இதழின் பெயர் என்ன...
      • 3ஆம் ஆண்டு சத்தியமங்கலம் புத்தகத்திருவிழா-2018
      • பொது அறிவு இதழுக்கு பெயரிட வாங்க!
      • வீட்டில் இன்வெர்ட்டர் உபயோகமா?உசார்!
      • சத்தி 3ஆம் ஆண்டு புத்தகத்திருவிழா-2018
      • ராசிக்கேற்ற ஆலயம்-
      • லால் பகதூர் சாஸ்திரி-02 அக்டோபர்
    • ►  செப்டம்பர் (14)
    • ►  ஆகஸ்ட் (12)
    • ►  ஜூலை (9)
    • ►  மே (1)
  • ►  2017 (47)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஜூலை (2)
    • ►  ஜூன் (7)
    • ►  மே (22)
    • ►  ஏப்ரல் (5)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (5)
    • ►  ஜனவரி (4)
  • ►  2016 (42)
    • ►  டிசம்பர் (7)
    • ►  நவம்பர் (6)
    • ►  அக்டோபர் (4)
    • ►  செப்டம்பர் (6)
    • ►  ஆகஸ்ட் (5)
    • ►  ஜூலை (8)
    • ►  ஜூன் (3)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (1)
    • ►  ஜனவரி (1)
  • ►  2015 (255)
    • ►  டிசம்பர் (11)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (5)
    • ►  செப்டம்பர் (22)
    • ►  ஆகஸ்ட் (39)
    • ►  ஜூலை (23)
    • ►  ஜூன் (34)
    • ►  மே (7)
    • ►  ஏப்ரல் (7)
    • ►  மார்ச் (48)
    • ►  பிப்ரவரி (32)
    • ►  ஜனவரி (25)
  • ►  2014 (199)
    • ►  டிசம்பர் (2)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (18)
    • ►  செப்டம்பர் (27)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (13)
    • ►  ஜூன் (45)
    • ►  மே (11)
    • ►  ஏப்ரல் (22)
    • ►  மார்ச் (31)
    • ►  பிப்ரவரி (8)
    • ►  ஜனவரி (14)
  • ►  2013 (71)
    • ►  டிசம்பர் (7)
    • ►  நவம்பர் (4)
    • ►  அக்டோபர் (12)
    • ►  செப்டம்பர் (9)
    • ►  ஆகஸ்ட் (13)
    • ►  ஜூலை (11)
    • ►  ஜூன் (4)
    • ►  மே (2)
    • ►  ஏப்ரல் (4)
    • ►  மார்ச் (3)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (1)
  • ►  2012 (92)
    • ►  டிசம்பர் (6)
    • ►  நவம்பர் (7)
    • ►  அக்டோபர் (14)
    • ►  செப்டம்பர் (13)
    • ►  ஆகஸ்ட் (5)
    • ►  மே (2)
    • ►  ஏப்ரல் (6)
    • ►  மார்ச் (27)
    • ►  பிப்ரவரி (8)
    • ►  ஜனவரி (4)
  • ►  2011 (202)
    • ►  டிசம்பர் (12)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (18)
    • ►  செப்டம்பர் (129)
    • ►  ஆகஸ்ட் (21)
    • ►  ஜூலை (12)
    • ►  ஜூன் (2)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (4)
    • ►  ஜனவரி (2)
PARAMES DRIVER- SATHYAMANGALAM. எத்ரியல் தீம். தீம் படங்களை வழங்கியவர்: micheldenijs. Blogger இயக்குவது.