27 ஜூன் 2021

எலக்ட்ரானிக்ஸ் ஒரு கலை!....

 மரியாதைக்குரியவர்களே,

வணக்கம். கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

கொரோனா பெருந்தொற்று சமுதாயத்தொற்றாக நம்மை மட்டுமின்றி உலகமக்கள் அனைவரையும் பாடாய்ப்படுத்துகிறது.

இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டில் தனிமைப்படுத்தியிருத்தி இருப்பதை

பயனுள்ளதாக கழிப்பதற்காக எடுத்த முயற்சிதாங்க மின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றிய அடிப்படை அறிவை வளர்க்கும் செயல்பாடு....

எலக்ட்ரானிக்ஸ் ஒரு கலை...

ஆமாங்க! எலக்ட்ரானிக்ஸ் ஒரு கலைபோல அணுகவேண்டும்.

 மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைக்கு  அடிப்படையே மின்சாரம்தாங்க.மின்சாரமும் காந்தமும் உயிரும் உடம்பும்போல..இரண்டும் இணைபிரியாதவர்கள்....

அந்த மின்சாரமும்,காந்தமும் எப்படி முக்கியத்துவம் பெறுகிறது என்பதை ஆரம்பத்திலிருந்து தெரிந்துகொள்வோம் வாங்க!.

பிரபஞ்சத்திலுள்ள திட,திரவ,வாயு நிலையிலுள்ள அனைத்து பொருட்களுமே  அணுக்களால் ஆனவை...

அவ்வாறான அணுக்களை மேலும் சிதைத்தால் மையப்பகுதியான உட்கருவில் புரோட்டான்களும்,அதே எண்ணிக்கை நியூட்ரான்களும் இருக்கின்றன. உட்கருவிலுள்ள புரோட்டான்களின் எண்ணிக்கையளவு எலக்ட்ரான்கள்  உட்கருவைச்சுற்றி வெளியே  ஆர்பிட் என்னும் சுழல்தடம் அமைத்து  புரோட்டான்களுக்கு கட்டுப்பட்டு சுற்றி வருகின்றன.

புரோட்டான்கள் பாஸிட்டிவ் சார்ஜ் ஆகவும்,எலக்ட்ரான்கள் நெகட்டிவ் சார்ஜாகவும் ஒன்றுக்கொன்று ஈர்க்கப்பட்டு நிலைகொள்ளுகின்றன.

அதாவது அனைத்துப் பொருட்களிலும் பாஸிட்டிவ் சார்ஜஸ் மற்றும் நெகட்டிவ் சார்ஜஸ்கள் இயற்கையாகவே இருக்கின்றன.நாமாக உருவாக்குவதில்லை .

அந்த பாஸிட்டிவ் சார்ஜஸ்களும் நெகட்டிவ் சார்ஜஸ்களும் சம எண்ணிக்கையில் பொருட்களிலுள்ள அணுக்களில் இருப்பதால் நமக்குப் பயன்படாது.ஆதலால் அணுக்களிலுள்ள எலக்ட்ரான்களை வெளியே கொண்டுவந்தால்தான்  மின்சாரமாக நமக்குப் பயன்படும்.நெகட்டிவ் சார்ஜாக இருந்தாலும் பாஸிட்டிவ் சார்ஜாக இருந்தாலும்  பொதுவாக சார்ஜ் என்றே சொல்கிறோம். அதனை அளவிட கூலும் அலகு பயன்படுத்துகிறோம்.

எலக்ட்ரிகல்ஸ் பொருத்துவரை வோல்ட்டேஜ்,கரண்ட்,ரெஸிஸ்டன்ஸ் இன்ற மூன்று பற்றி நன்றாக தெரிந்துகொள்ள வேண்டும். 

 முதலாவதாக வேல்ட்டேஜ் எனப்படும் மின்னழுத்தம் பற்றி அறிவோம்.

எலக்ட்ரிகல் பொருத்தவரை   எலக்ட்ரான்களாகிய நெகட்டிவ் சார்ஜ்களை மட்டுமே சார்ஜ் என்றழைக்கிறோம்.

 அ,ஆ, என இரு முனைகளை எடுத்துக்கொண்டால்  அ முனையில் எலக்ட்ரான்களை சேர்த்துக்கொண்டே இருந்தால் தெகட்டிவ் சார்ஜ் அதிகமாகிக்கொண்டே இருக்கும்.அதே நெகட்டிவ் சார்ஜ்-ஐ குறிப்பிட்டளவு வரை மட்டுமே அ என்ற (புள்ளியில்) முனையில்  சேமிக்க முடியும்.இவ்வாறு சேமித்த எலக்ட்ரான்களில் குறிப்பிட்ட எலக்ட்ரான்கள் போக மீதமுள்ள எலக்ட்ரான்கள் இணைவதற்கு....

 ொொடுு்்இ்்ுு ோோ்்

 


03 டிசம்பர் 2020

பண்ணாரி அம்மன் சமுதாய வானொலி - BACR 90.4MHz

                                        


 

மரியாதைக்குரியவர்களே,

 வணக்கம்.கொங்குத் தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.2-12-2020முதல் பண்ணாரி அம்மன் சமுதாய வானொலி(மக்களுக்கான உறவுப் பாலம்) 90.4MHz உடன் சாலை பாதுகாப்பு ஆர்வலர்கள் இணைந்து  சாலைப் பாதுகாப்புத் தொடர் ஒலிபரப்பு தினமும் செய்துவருகிறது.




 


08 நவம்பர் 2020

நில் - கவனி - செல், BACR 90.4 MHZ

  மரியாதைக்குரியவர்களே,

 வணக்கம்.கொங்குத் தென்றல் வலைப்பக்கத்திற்கு  தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

 தினந்தோறும் சாலை பாதுகாப்பு கல்வி மக்களுக்கு வழங்கும் நோக்கத்தில்,

நில்-கவனி-செல் தலைப்பிலான ஒலிபரப்புக்காக இன்றுசத்தியமங்கலத்தில் மக்களுக்கான உறவுப்பாலமாக திகழும் 90.4 MHZ பண்ணாரி அம்மன் சமுதாய வானொலிநிலையத்தில் 'விபத்தின்றி பயணிப்பது சாத்தியமே!' என கலந்துரையாடல் நடைபெற்றது.சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.











திரு. S.P.T.கணபதிசோதரன் அவர்கள்,அரசுப் பள்ளி ஆசிரியர்,மெய் மறந்து பாடிய காட்சி!...

ரிலீப் டிரஸ்ட் ஆம்புலன்ஸ் நிர்வாகி திரு. N.ஆதில் அவர்களது விழிப்புரை...



 திரு. M.கோவிந்தராஜன்B.E., அவர்கள்,

அம்மன் ஹைடெக் டிரைவர் டிரெயினிங் இன்ஸ்டிடியூட் நிறுவனர்  உரை....



தினந்தோறும் சாலை பாதுகாப்பு கல்வி.......

          மரியாதைக்குரியவர்களே,

 வணக்கம்.தங்களை கொங்குத் தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன். கடந்த பத்தாண்டுகளாக ஜனவரி மாதத்தில் அரசு அறிவித்த சாலை பாதுகாப்பு வாரவிழாவை மட்டும் நடத்தினோம்.

இந்தாண்டு  சாலை பாதுகாப்பு  பற்றி மக்களுக்கு  தினமும் நினைவூட்டிக்கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் துண்டறிக்கைகள் விநியோகித்து பரப்புரை செய்து வருகிறோம்.அதன் தொடக்க நிகழ்வு பற்றிய பதிவு ..........

          தினந்தோறும் சாலை பாதுகாப்பு கல்வி!...
 

தொடக்கநிகழ்வு...
                       தலைப்பு: உறுதிமொழி
                    இடம்: ஊ.ஒ.ந.பள்ளி,தாளவாடி
                  நாள்:25-2-2020 செவ்வாய் காலை 9 மணி.
 

(1)தொடங்கி வைப்பு:

திரு.M.அன்பரசு அவர்கள்,காவல் ஆய்வாளர்,

காவல்நிலையம்,தாளவாடி
 

(2)வரவேற்பு: ஆசிரியர் டில்லிபாபு அவர்கள்,

ஊ.ஒ.ந.பள்ளி,தாளவாடி
(3)தலைமை: 

திருமதி.தனபாக்கியம் அவர்கள்,

வட்டார கல்வி அலுவலர்,தாளவாடி
முன்னிலை: 

(4)திரு.S.வினோத்குமார் B.E. அவர்கள்,
கிளை மேலாளர்,
TNSTC,தாளவாடி
(5)திரு.S.ஜம்புலிங்கப்பா அவர்கள்,

தலைமையாசிரியர்,ஊ.ஒ.ந.பள்ளி,தாளவாடி
(6)திரு.M.சுரேஷ்குமார் அவர்கள்,

தாளாளர்,KCT மெட்ரிக் பள்ளி,தாளவாடி
 

நோக்கம்: (7)திரு.C.பரமேஸ்வரன்
 

வழிகாட்டுதல்.
(8)திரு. மரிய அருள் வியானி அவர்கள்,TRED
(9)திரு.பாபு அவர்கள்,சங்கம் டிரைவிங் ஸ்கூல்,தாளவாடி
(10)திரு.N.சுந்தர் அவர்கள்,

விடியல் இளைஞர் மன்றம்,தாளவாடி
(11)திரு.சுஹைல் அகமது அவர்கள்,தாளவாடி
நன்றியுரை,
(12)திரு.பாலமுருகன்B.A. அவர்கள்,

முத்திரைத்தாள் விற்பனையாளர்,
தாளவாடி,
ஒருங்கிணைப்பு:
(13)திரு.முருகானந்தம் அவர்கள்,

செய்தியாளர்,தாளவாடி &

(14)சாலை பாதுகாப்பு உறுதி ஏற்பு:

 KCT மெட்ரிக் பள்ளி & ஊ.ஒ.ந.பள்ளி மாணவ,மாணவியர்,தாளவாடி.
              ==========

 




03 நவம்பர் 2020

வாகன இன்சூரன்ஸ்-அறிவோமா!

 

                                   வாகன இன்சூரன்ஸ் - 

மரியாதக்குரியவர்களே,

 வணக்கம். கொங்குத் தென்றல் வலைப்பக்கத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன். காப்பீடு (1)ஆயுள் காப்பீடு,(2)ஆரோக்கிய காப்பீடு,(3)இருப்பிட காப்பீடு,(4)சொத்து காப்பீடு,(5)பயண காப்பீடு,(6)மோட்டார் வாகன காப்பீடு,(7)விபத்துக் காப்பீடு,(8) காயத்திற்கான காப்பீடு என பலவகை உள்ளன.இந்தப் பதிவில் வாகனக் காப்பீடு பற்றி அறிவோம்.

                   நாம் எல்லோரும் ஆண்டிற்கு ஒருமுறை நமது வாகனத்தின் இன்சுரன்சை புதிப்பித்து வருவோம். அதனுடைய முழு விவரமும் காப்பீட்டு ஆவணத்தை அனைவரும் அதை படித்து புரிந்துகொண்டால் நமது பிரிமியத் தொகையை நன்கு சேமிக்கலாம்.

               மோட்டார் வாகன இன்சூரன்ஸ் என்பது மோட்டார் வாகனச் சட்டம் (1988) கீழ் இந்தியாவில் அனைத்து வாகன உரிமையாளர்களும் தங்கள் வாகனங்களுக்கு எடுத்திட வேண்டும் என்பது சட்டம். வாகனச் சோதனை செய்யும்போது ஒருவருடைய ஓட்டுனர் உரிமம், வாகனப் பதிவுச் சான்று மற்றும் வாகனக் காப்பீடு ஆகிய மூன்றும் அவசியம்! என்பது அனைவரும் அறிந்ததே.

மோட்டார் வாகன இன்சுரன்ஸ் நோக்கம் என்ன?

மோட்டார் இன்சூரன்ஸ் என்பது ஒருவருடைய வாகனத்திற்கு பல்வேறு வகைகளில் ஏற்படும் சேதங்களிலிருந்தோ அல்லது வாகனம் திருடு போனாலோ அதன்மீது கிடைக்கபெறும் காப்பீடேயாகும்.

அதைவிட முக்கியமான நோக்கம் ஒன்றுள்ளது. அதுதான் மூன்றாம் தரப்புக் காப்பீடு.

மூன்றாம தரப்புக் காப்பீடு (Third Party Cover) என்றால் என்ன?

மோட்டார் வாகனச் சட்டம் (1988) முக்கியமாக வலியுறுத்துவது இந்த மூன்றாம் தரப்புக் காப்பீடைப் பற்றியேயாகும். வாகனச் சோதனையின்போது போக்குவரத்துக் காவல்துறையினர் நமது ஆயுள் காப்பீடைப் பற்றியோ அல்லது நமது விபத்துக் காப்பீடுபற்றியோ கேட்காமல் நமது வாகனக் காப்பீடு பற்றி கேட்பதன் நோக்கம் என்ன? வாகனக் காப்பீட்டின் முக்கிய நோக்கம்,

அடுத்தவருக்கு நம்மால் ஏற்படும் விபத்தினால் ஏற்படும் சேதத்திற்கு, முக்கியமாக விபத்தில் பாதிக்கப்படும் வேறு வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்படும் காப்பீடு தான் மூன்றாம் தரப்புக் காப்பீடு.

சரி, மோட்டார் இன்சூரன்ஸ் வகைகள் என்னென்ன?

1. லயபிலிட்டி ஒன்லி பாலிஸி (Liability only policy) - மேலே குறிப்பிட்ட மூன்றாம் தரப்புக் காப்பீடை குறிப்பது தான் இந்த லயபிலிட்டி ஒன்லி பாலிஸி. அடுத்தவருக்கு நம்மால் ஏற்படும் விபத்தினால் ஏற்படும் உடல் மற்றும் பொருள் சேதத்திற்கு வழங்கப்படும் காப்பீடு தான் மூன்றாம் தரப்புக் காப்பீடு. மோட்டார் வாகனச் சட்டம் (1988) கீழ் இந்த வகையான காப்பீட்டுத் திட்டங்கள் காட்டாயம் எல்லோரும் எடுத்திருக்கவேண்டும்.
பேக்கேஜ் பாலிசி (Package policy): வாழக்கமாக எல்லோரும் எடுக்கும் பாலிசி இந்த வகையைச் சேர்ந்தது தான். இந்தப் பாலிசி மூன்றாம் தரப்புப் காப்பீடும் சொந்த வாகனக் காப்பீடும் இணைந்தது. காப்பீடு ஆவணத்தில் இரண்டிற்குமுண்டான பிரிமியம் தொகை தனித்தனியே குறிப்பிடப்பட்டிருக்கும்.

காப்பீட்டுத் தொகை(Sum Insured)

ஒரு வாகனத்தின் காப்பீட்டுத் தொகை என்பது அந்த வாகனத்திற்கான ஐ டி வி (Insured’s Declared Value) என வழங்கப்படும் வாகனத்தின் தற்போதைய கணக்கீடு தான் வாகனக் காப்பீடாக எடுத்துகொள்ளப்படும். வாகனம் முழுவதும் சேதமடைந்தாலோ அல்லது திருடு போனாலோ கிடைக்கபெறும் காப்பீட்டுத் தொகைதான் தான் ஐ டி வி. சுருக்கமாகச் சொன்னால், வாகனத்தின் தற்போதைய மதிப்பு தான் ஐ டி வி என்பதன் பொருள்.

பிரிமியம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

பிரிமியம் இரண்டுவகையாகக் கணக்கிடப்படுகிறது. சொந்தச் சேதாரம் மற்றும் மூன்றாம் தரப்புக் காப்பீடு ஆகும். இன்சுரன்ஸ் துறையை வழி நடத்தும் ஐ ஆர் டி ஏ (I R D A) தான் மூன்றாம் தரப்புக் காப்பீடுக்குண்டான பிரிமியம் தொகையை நிர்ணயம் செய்கிறது. ஆனால் சொந்தச் சேதாரப் பிரிமியத் தொகையை நிர்ணயிப்பது காப்பீட்டு நிறுவனங்கள் தான். போட்டி கருதி வெவ்வேறு நிறுவனங்கள் பிரிமியத்தில் தள்ளுபடி அதிமாகக் கொடுத்து வருவதால் இன்சுரன்ஸ் எடுப்பவர்கள் சில நிறுவனங்களின் பிரிமியத் தொகையை ஒப்பிட்டு பார்த்தல் அவசியம்.

பிரிமியத் தொகை கணக்கீடு செய்யும்போது ஐ டி வி யிலும் மாறுதல்கள் ஏற்படும். குறைவான பிரிமியம் வேண்டும் என்பதற்காக ஐ டி வியை குறைத்தால் அது வாகனத்தின் இழப்பீட்டில் பிரதிபலிக்கும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். பிரிமியம் ஒப்பிட்டு பார்க்கும்போது எல்லா நிறுவனங்களின் பிரிமியம் கணக்கீடும் ஒரே மாதரியாக எடுத்திருக்கிறார்களா என்று பார்த்தால் தான் எந்த நிறுவனத்தின் பிரிமியம் குறைவு என்று முடிவு செய்யமுடியும்.

மோட்டார் இன்சுரன்ஸ் பிரிமியம் கணக்கீட்டில் கழிவுகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. கழிவுகள் இரண்டு வகைப்படும்: கட்டாயக் கழிவு மற்றும் விருப்பக் கழிவு. (Compulsory and Voluntary Deductibles)

சுருக்கமாகச் சொன்னால், நமது வாகனத்துக்கு ரூபாய் 1000 கழிவு என்று வைத்துக்கொள்வோம். இழப்பீடு வாங்கும்போது நமது பங்காக ரூபாய் 1000 செலுத்தவேண்டும்.

 


25 ஆகஸ்ட் 2020

Rubiks cube -ரூபிக்ஸ் கியூப் விளையாடுவது எப்படி?

 அன்புடையீர்,

வணக்கம்.அனைவரையும் கொங்குத் தென்றல் வலைப்பக்கத்திற்கு வரவேற்கிறேன்.இந்தப் பதிவில் ரூபிக்ஸ் கியூப் எனப்படும்  மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர்விளையாட்டு பற்றி அறிந்துகொள்வோம்.

 

 

Rubik's cube  எனப்படும் கனசதுர விளையாட்டானது தற்போது உலகளவில் சங்கம் அமைத்து சதுரங்க விளையாட்டு போன்று விளையாடப்படுகின்றது.

 கன சதுர வடிவமைப்புடையதாதலால் ஆறு முகங்களைக் கொண்டது க்யூப் .

 இது வெள்ளை,மஞ்சள்,பச்சை,நீலம்,சிவப்பு,ஆரஞ்சு ஆகிய வண்ணங்களை கொண்டது.வெள்ளைக்கு எதிரில் மஞ்சள்.,பச்சைக்கு எதிரில் நீலம்.,சிவப்புக்கு எதிரில் ஆரஞ்சு என்றமைப்பில் இருக்கும்.

தொடரும்.....