வாசகர் வட்டம் & சமூக ஆர்வலர்கள் இணைந்து நடத்தும்
நல்ல குடிமக்கள் வீட்டில் இருந்துதான் உருவாக முடியும்! ஆதலால் பெற்றோர்கள் குழந்தைகளை வளர்க்கும் விதத்தில்தான் நாட்டிற்கு நல்ல சமுதாயம் கிடைக்கும்- Dr.A.P.J.அப்துல்கலாம் (என்கிற) டாக்டர் ஆவுல் பக்கிர் ஜைனாபுதீன் அப்துல் கலாம்.
விரைவில் சுயசரிதை (தொடராக)......
மரியாதைக்குரியவர்களே,
(மோட்டார் வாகன சட்டம் என்றால் என்னவென்று புரிந்துகொள்ளாமல் சேவை செய்த காலம். மக்களின் நிலைமையை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்க)
பொதுமக்களுடன் நேரடியாக தொடர்புகொண்டு சமூகத்தை புரிந்துகொள்ளும் அற்புதமான பணி அதுவும் தாளவாடிமலைப்பகுதியில் பேருந்து ஓட்டும் பணி மனநிறைவினை வழங்கிய அற்புதமான பணி.
தாளவாடி வட்டார பொதுமக்களுக்கும்,அனைத்து பள்ளிகளுக்கும்,மீண்டும் நன்றியினை பதிவு செய்து பெருமையடைகிறேன்....
சத்தி கிளைக்கு மாறுதலாகி (அங்கும் ஓட்டுநர் பணிதாங்க) சென்றேன்.சத்தி கிளையிலும் சுமார் ஏழு ஆண்டுகள் ஓட்டுர் பணியாற்றிவந்த சூழலில் .நிர்வாக காரணங்களுக்காக மீண்டும் தாளவாடிகிளைக்கே அயல்பணி அடிப்படையில் சத்தி கிளை கட்டுப்பாட்டில் இருந்துகொண்டு தாளவாடிகிளையில் பேருந்து ஓட்டுநர் பணி.அயல்பணியின் சிரமம் மற்றும் குறைபாடு என்னவெனில் மலைப்பிரதேசப் படி இல்லை..ஆனால் எல்லா பேருந்துகளிலும் பணியாற்ற வேண்டும்.
இந்தச்சூழலிலும் சிக்கல் எழுந்தது.? நான் சத்திகிளையின் கட்டுப்பாட்டில் இருந்துகொண்டு தாளவாடியில் பணிபுரிகிறேன்.ஆதலால் எனக்கு தாளவாடி கிளைக்கே பணி இடமாறுதல் செய்து உதவ வேண்டும்.இல்லையேல் சத்திகிளையிலேயே பணிபுரிய அனுமதியளித்திட வேண்டும். என உரிமை கேட்டு விவாதம் செய்து சத்திகிளையிலேயே பணியாற்ற மீண்டும் அனுப்பப்பட்டேன்.மீண்டும் நிர்வாக உத்தரவுப்படி தாளவாடிக்கே அனுப்பப்பட்டு 30 ஆண்டுகள் முழுமையாக பணிநிறைவு செய்து கடந்த 2023 ஏப்ரல் மாதம் 30ஆம் தேதியுடன் அறுபது வயது கடந்தவனாக பணிநிறைவு அடைந்தேன்.
இந்த இடத்தில் கிளைமேலாளர்களான திரு.முருகேசன் BM அவர்கள், திரு.நடேசன்BM,அவர்கள்,திரு.தென்னவன்BM அவர்கள்,திரு.ஆறுமுகம் BM இன்னும் சிலர்....இவர்களுக்கு ஜால்ரா பிடிக்காது.அவரவர்பணியினை அவரவர் செய்ய வேண்டும் என்பதில் கடமையாக இருந்த அதிகாரிகள்.
( நேர்மையாக பணியாற்றிய இன்னும் சில அதிகாரிகளின் பெயர்களை வெளியிட்டு அவர்களையும் சிக்கலில் ஆளாக்க விரும்பவில்லை) ,
இவ்வாறான ஓட்டுநர் பணிக்கு இடையில் சுமார் பத்து ஆண்டுகளாக அதாவது 2010ஆம் ஆண்டு ஈரோடு மாவட்ட நிர்வாகம் மாவட்ட ஆட்சியர் அவர்களது அறிவுறுத்தல்படி, எழுத்தறிவுஇயக்கம் தொடங்கிய தாளவாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்கற்கும் பாரதம் நிகழ்ச்சியில் திரு.A.P.ராஜூ நடத்துநருடன் பங்கேற்று சமூகப்பணியில் என்னை இணைத்துக்கொண்டு பணிக்கு அப்பால் பத்து ஆண்டுகளாக பல பிரச்சினைகளை எதிர்கொண்டு சவாலாக ஏற்றுசமூகப்பணிகளோடு ஓட்டுநர் பணியாற்றினேன்.
இப்படியான02-02-1993 முதல் 30-04-2023 வரையிலான முப்பது ஆண்டுகால மலைப்பிரதேச ஓட்டுநர் பணியில் மது,போதை,புகைப் பழக்கத்துக்கு ஆளாகாமல் தனியாளாக என்று கூறுவதைவிட திரு ராஜூ நடத்துநர் போன்ற சமூக அக்கறையாளர்களின் ஆதரவுகளை போற்றியும்,
எனவே விரைவில் எனது ஓட்டுநர் பணியில் நேர்மையாக ,மக்களுக்காக,பயணிகளுக்காக,மாணவச்செல்வங்களுக்காக அத்தியாவசியபணி சேவகனாக பணியாற்றிய போது எனக்கு சமூகத்தைப்படித்து சமத்துவம் பெறு என்று வழிகாட்டிய சமூக சேவை அமைப்புகள், தன்னார்வலர்கள்,கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் ,ஊடக நண்பர்கள், காவல்துறை அதிகாரிகள்,போக்குவரத்துத்துறை அதிகாரிகள்,தனியார் ஓட்டுநர் பயிற்சிப்பள்ளிகள், நான் பணியாற்றிய போக்குவரத்துக்கழகத்தில் பணியாற்றிய மிகச்சில அதிகாரிகள்,உடன் பணியாற்றிய நடத்துநர்கள், பற்றியும் பதிவிட்டு நன்றிக்கடன் செலுத்த உள்ளேன். இனி வருங்காலத்தில் மற்றவர்களுக்கும் சேவைப்பணி பற்றிய புரிதல் ஏற்படட்டும் என்ற எண்ணத்தில் எனது ஓட்டுநர் பணியுடன் சமூக சேவைப்பணி பற்றிய தொடர் விரைவில் எழுத உள்ளேன்.
என்றும் மக்கள் சேவகன்,
செ.பரமேஸ்வரன்,
சத்தியமங்கலம்.
தேதி 31-0802023
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம். நீண்டநாள் இடைவ்ளிக்குப்பிறகு இன்று புத்துணர்வுடன் வலைப்பக்கம் வந்தாச்சுங்க .....இனி தினந்தோறும் எழுதப் போகிறேன்.
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம். கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
கொரோனா பெருந்தொற்று சமுதாயத்தொற்றாக நம்மை மட்டுமின்றி உலகமக்கள் அனைவரையும் பாடாய்ப்படுத்துகிறது.
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டில் தனிமைப்படுத்தியிருத்தி இருப்பதை
பயனுள்ளதாக கழிப்பதற்காக எடுத்த முயற்சிதாங்க மின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றிய அடிப்படை அறிவை வளர்க்கும் செயல்பாடு....
எலக்ட்ரானிக்ஸ் ஒரு கலை...
ஆமாங்க! எலக்ட்ரானிக்ஸ் ஒரு கலைபோல அணுகவேண்டும்.
மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைக்கு அடிப்படையே மின்சாரம்தாங்க.மின்சாரமும் காந்தமும் உயிரும் உடம்பும்போல..இரண்டும் இணைபிரியாதவர்கள்....
அந்த மின்சாரமும்,காந்தமும் எப்படி முக்கியத்துவம் பெறுகிறது என்பதை ஆரம்பத்திலிருந்து தெரிந்துகொள்வோம் வாங்க!.
பிரபஞ்சத்திலுள்ள திட,திரவ,வாயு நிலையிலுள்ள அனைத்து பொருட்களுமே அணுக்களால் ஆனவை...
அவ்வாறான அணுக்களை மேலும் சிதைத்தால் மையப்பகுதியான உட்கருவில் புரோட்டான்களும்,அதே எண்ணிக்கை நியூட்ரான்களும் இருக்கின்றன. உட்கருவிலுள்ள புரோட்டான்களின் எண்ணிக்கையளவு எலக்ட்ரான்கள் உட்கருவைச்சுற்றி வெளியே ஆர்பிட் என்னும் சுழல்தடம் அமைத்து புரோட்டான்களுக்கு கட்டுப்பட்டு சுற்றி வருகின்றன.
புரோட்டான்கள் பாஸிட்டிவ் சார்ஜ் ஆகவும்,எலக்ட்ரான்கள் நெகட்டிவ் சார்ஜாகவும் ஒன்றுக்கொன்று ஈர்க்கப்பட்டு நிலைகொள்ளுகின்றன.
அதாவது அனைத்துப் பொருட்களிலும் பாஸிட்டிவ் சார்ஜஸ் மற்றும் நெகட்டிவ் சார்ஜஸ்கள் இயற்கையாகவே இருக்கின்றன.நாமாக உருவாக்குவதில்லை .
அந்த பாஸிட்டிவ் சார்ஜஸ்களும் நெகட்டிவ் சார்ஜஸ்களும் சம எண்ணிக்கையில் பொருட்களிலுள்ள அணுக்களில் இருப்பதால் நமக்குப் பயன்படாது.ஆதலால் அணுக்களிலுள்ள எலக்ட்ரான்களை வெளியே கொண்டுவந்தால்தான் மின்சாரமாக நமக்குப் பயன்படும்.நெகட்டிவ் சார்ஜாக இருந்தாலும் பாஸிட்டிவ் சார்ஜாக இருந்தாலும் பொதுவாக சார்ஜ் என்றே சொல்கிறோம். அதனை அளவிட கூலும் அலகு பயன்படுத்துகிறோம்.
எலக்ட்ரிகல்ஸ் பொருத்துவரை வோல்ட்டேஜ்,கரண்ட்,ரெஸிஸ்டன்ஸ் இன்ற மூன்று பற்றி நன்றாக தெரிந்துகொள்ள வேண்டும்.
முதலாவதாக வேல்ட்டேஜ் எனப்படும் மின்னழுத்தம் பற்றி அறிவோம்.
எலக்ட்ரிகல் பொருத்தவரை எலக்ட்ரான்களாகிய நெகட்டிவ் சார்ஜ்களை மட்டுமே சார்ஜ் என்றழைக்கிறோம்.
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.கொங்குத் தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.2-12-2020முதல் பண்ணாரி அம்மன் சமுதாய வானொலி(மக்களுக்கான உறவுப் பாலம்) 90.4MHz உடன் சாலை பாதுகாப்பு ஆர்வலர்கள் இணைந்து சாலைப் பாதுகாப்புத் தொடர் ஒலிபரப்பு தினமும் செய்துவருகிறது.
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.கொங்குத் தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
தினந்தோறும் சாலை பாதுகாப்பு கல்வி மக்களுக்கு வழங்கும் நோக்கத்தில்,
நில்-கவனி-செல் தலைப்பிலான ஒலிபரப்புக்காக இன்றுசத்தியமங்கலத்தில் மக்களுக்கான உறவுப்பாலமாக திகழும் 90.4 MHZ பண்ணாரி அம்மன் சமுதாய வானொலிநிலையத்தில் 'விபத்தின்றி பயணிப்பது சாத்தியமே!' என கலந்துரையாடல் நடைபெற்றது.சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
திரு. M.கோவிந்தராஜன்B.E., அவர்கள்,
அம்மன் ஹைடெக் டிரைவர் டிரெயினிங் இன்ஸ்டிடியூட் நிறுவனர் உரை....
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.தங்களை கொங்குத் தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன். கடந்த பத்தாண்டுகளாக ஜனவரி மாதத்தில் அரசு அறிவித்த சாலை பாதுகாப்பு வாரவிழாவை மட்டும் நடத்தினோம்.
இந்தாண்டு சாலை பாதுகாப்பு பற்றி மக்களுக்கு தினமும் நினைவூட்டிக்கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் துண்டறிக்கைகள் விநியோகித்து பரப்புரை செய்து வருகிறோம்.அதன் தொடக்க நிகழ்வு பற்றிய பதிவு ..........
தினந்தோறும் சாலை பாதுகாப்பு கல்வி!...
தொடக்கநிகழ்வு...
தலைப்பு: உறுதிமொழி
இடம்: ஊ.ஒ.ந.பள்ளி,தாளவாடி
நாள்:25-2-2020 செவ்வாய் காலை 9 மணி.
(1)தொடங்கி வைப்பு:
திரு.M.அன்பரசு அவர்கள்,காவல் ஆய்வாளர்,
காவல்நிலையம்,தாளவாடி
(2)வரவேற்பு: ஆசிரியர் டில்லிபாபு அவர்கள்,
ஊ.ஒ.ந.பள்ளி,தாளவாடி
(3)தலைமை:
திருமதி.தனபாக்கியம் அவர்கள்,
வட்டார கல்வி அலுவலர்,தாளவாடி
முன்னிலை:
(4)திரு.S.வினோத்குமார் B.E. அவர்கள்,
கிளை மேலாளர்,
TNSTC,தாளவாடி
(5)திரு.S.ஜம்புலிங்கப்பா அவர்கள்,
தலைமையாசிரியர்,ஊ.ஒ.ந.பள்ளி,தாளவாடி
(6)திரு.M.சுரேஷ்குமார் அவர்கள்,
தாளாளர்,KCT மெட்ரிக் பள்ளி,தாளவாடி
நோக்கம்: (7)திரு.C.பரமேஸ்வரன்
வழிகாட்டுதல்.
(8)திரு. மரிய அருள் வியானி அவர்கள்,TRED
(9)திரு.பாபு அவர்கள்,சங்கம் டிரைவிங் ஸ்கூல்,தாளவாடி
(10)திரு.N.சுந்தர் அவர்கள்,
விடியல் இளைஞர் மன்றம்,தாளவாடி
(11)திரு.சுஹைல் அகமது அவர்கள்,தாளவாடி
நன்றியுரை,
(12)திரு.பாலமுருகன்B.A. அவர்கள்,
முத்திரைத்தாள் விற்பனையாளர்,
தாளவாடி,
ஒருங்கிணைப்பு:
(13)திரு.முருகானந்தம் அவர்கள்,
செய்தியாளர்,தாளவாடி &
(14)சாலை பாதுகாப்பு உறுதி ஏற்பு:
KCT மெட்ரிக் பள்ளி & ஊ.ஒ.ந.பள்ளி மாணவ,மாணவியர்,தாளவாடி.
==========