06 ஏப்ரல் 2020

Thirukkural Perumai Arivom Part 11

                               திருக்குறள் பெருமை அறிவோம் பகுதி - 11
                                         -----------------------------------------------------

மரியாதைக்குரியவர்களே,
                        வணக்கம்.கொங்குத் தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

                                    திரைப்படங்களில் திருக்குறள்.
                                                -------------------------------

                   (1)  பாடல் - அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே,

                                                படம் - அறிவாளி
                                                ஆண்டு - 1963
                                               பாடலாசிரியர் - அ.மருதகாசி,
                                               பாடியவர் - T.M. சௌந்திரராஜன்,
                                               இசை ;S.V.வெங்கட்ராமன்

 அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே 
அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே
வள்ளுவர் ஆக்கி நமக்களித்த அரும் பொருளே
அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே 
வள்ளுவர் ஆக்கி நமக்களித்த அரும் பொருளே
அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே

உலகுக்கு ஒளி போலே உடலுக்கு உயிர் போல 
உலகுக்கு ஒளி போலே உடலுக்கு உயிர் போலே 
பயிறுக்கு மழைபோல பயிறுக்கு மழைபோல
பைந்தமிழ் மொழியாலே
அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே

அறம் பொருள் இன்பம் எனப்படும் முப்பாலே
அனுபவத்தாலே தான் சுவைத்ததற்கப்பாலே
அறம் பொருள் இன்பம் எனப்படும் முப்பாலே
அனுபவத்தாலே தான் சுவைத்ததற்கப்பாலே 
அவனியில் உள்ளோர்கள் அனைவரும் தனைப்போலே
அவனியில் உள்ளோர்கள் அனைவரும் தனைப்போலே 
அவசியம் கற்றுணர்ந்து பயன்பெரும் நினைப்பாலே
அவசியம் கற்றுணர்ந்து பயன்பெரும் நினைப்பாலே 
அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே 

வாழும் வழி முறைக்கு இலக்கனமானது
மனம் மொழி மெய் இனிக்க வார்த்திட்ட தேனிது
வாழும் வழி முறைக்கு இலக்கனமானது
மனம் மொழி மெய் இனிக்க வார்த்திட்ட தேனிது
வானகம் போல் விரிந்த பெரும் பொருள் கொண்டதும் 
வானகம் போல் விரிந்த பெரும் பொருள் கொண்டதும் 
எம்மதத்திற்க்குப் பொதுவென்னும் பாராட்டைக் கண்டதும்
எம்மதத்திற்க்குப் பொதுவென்னும் பாராட்டைக் கண்டதும்
அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே வள்ளுவர்
அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே


      (2) பாடல்: வாழ்க்கை என்னும் ஓடம்.. 

                                           படம் : பூம்புகார் ,ஆண்டு ;1964 

                     பாடலாசிரியர் ; கலைஞர்.மு.கருணாநிதி,
                    பாடியவர் : கொடுமுடி கோகிலம் கே.பி.சுந்தராம்பாள் 
                     இசை : ஆர்.சுதர்சனம் 
                   இயக்கம் : ப.நீலகண்டன் 
                    தயாரிப்பு : மேகலா பிக்சர்ஸ்

ஒருவனுக்கு ஒருத்தியென்ற 
உயிர்மூச்சை உள்ளடக்கி..
அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன் பழிப்பதில்லாயின் நன்று எனும்
திருக்குறளை மறவாதே.. 
திருக்குறளை மறவாதே..
திசை தவறிப் போகாதே.. 
ஏஏஏஏஏஏஏ ஏஏஏஏஏஏஏஏ ஏஏஏஏஏஏஏஏஏ

வாழ்க்கை என்னும் ஓடம்.. 
வழங்குகின்ற பாடம்..
மானிடரின் மனதினிலே.. 
மறக்கவொண்ணா வேதம்..
வாழ்க்கை என்னும் ஓடம்.. 
வழங்குகின்ற பாடம்..
மானிடரின் மனதினிலே.. 
மறக்கவொண்ணா வேதம்..
வாழ்க்கை என்னும் ஓடம்..

வாலிபம் என்பது களைகின்ற வேடம்..
அதில் வந்தது வரட்டும் என்பவன் முழு மூடன்..
வாலிபம் என்பது களைகின்ற வேடம்..
அதில் வந்தது வரட்டும் என்பவன் முழு மூடன்..
வருமுன் காப்பவன்தான் அறிவாளி-துயர் 
வருமுன் காப்பவன்தான் அறிவாளி..
அது வந்தபின்னே தவிப்பவன்தான் ஏமாளி..

துடுப்புகள் இல்லா படகு
அலைகள் அழைக்கின்ற திசையெலாம் போகும்..
தீமையைத் தடுப்பவர் இல்லா வாழ்வும்..
அந்த படகின் நிலை போலே ஆகும்..
அந்த படகின் நிலை போலே ஆகும்..
வாழ்க்கை என்னும் ஓடம்.. 
வழங்குகின்ற பாடம்..
மானிடரின் மனதினிலே.. 
மறக்கவொண்ணா வேதம்..
வாழ்க்கை என்னும் ஓடம்.. 


 

                    (3) பாடல் - ஓரொண்ணு ஒண்ணு ....

                                         படம் - மகனே கேள்
                                          ஆண்டு - 1965
                                         பாடலாசிரியர் -பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார்
                                        பாடியவர் -A.M.ராஜா,
                                       இசை ;M.S.விஸ்வநாதன் ராமமூர்த்தி
 

            பையன்கள்: ஓரொண்ணு ஒண்ணு
    ஈரொண்ணு ரெண்டு
    மூவொண்ணு மூணு
    நாலொண்ணு நாலு

    வாத்தியார்: ஓரொண்ணு ஒண்ணு
    உள்ள தெய்வம் ஒண்ணு
    ஈரொண்ணு ரெண்டு
    ஆண் பெண் ஜாதி ரெண்டு
    மூவொண்ணு மூணு
    முத்துத் தமிழ் மூணு
    நாலொண்ணு நாலு
    நன்னிலம் நாலு
    உள்ள தெய்வம் ஒண்ணு
    ஆண் பெண் ஜாதி ரெண்டு
    முத்துத் தமிழ் மூணு
    நன்னிலம் நாலு

    பையன்: அஞ்சொண் அஞ்சு

    வாத்தியார்: அஞ்சுவதற்கு அஞ்சு

    பையன்: ஆறொண் ஆறு

    வாத்தியார்: நல்லறிவுகள் ஆறு

    பையன்: ஏழொண் ஏழு

    வாத்தியார்: இசைக்குலங்கள் ஏழு

    பெண் குழந்தை: ஸரிகமபதநிஸா

    பையன்: ஏழொண் ஏழு

    வாத்தியார்: இசைக் குலங்கள் ஏழு

    பையன்: எட்டொண் எட்டு

    வாத்தியார்: எட்டும் வரை எட்டு

    பையன்: ஒன்பதொண் ஒன்பது

    வாத்தியார்: உயர் மணிகள் ஒன்பது

    பையன்: பத்தொண் பத்து

    வாத்தியார்: பாடல்கள் பத்து
    லாலல்ல லாலல்ல லாலலல்லா
    லாலல்ல லாலல்ல லாலலல்லா

    வாத்தியார்: உன்னையெண்ணிப்பாரு
    உழைத்து முன்னேறு
    உண்மையைக் கூறு
    செம்மை வழி சேரு

    பெண் குழந்தை: உன்னை யெண்ணிப்பாரு
    உழைத்து முன்னேறு
    உண்மையைக் கூறு
    செம்மை வழி சேரு

    வாத்தியார்: அன்புக்கு வணங்கு
    அறிந்த பின் இணங்கு
    பண்புடன் விளங்கு
    பசித்தவர்க் கிரங்கு

    பையன்: அன்புக்கு வணங்கு
    அறிந்தபின் இணங்கு
    பண்புடன் விளங்கு
    பசித்தவர்க் கிரங்கு
    லாலல்ல லாலல்ல லாலலல்லா
    லாலல்ல லாலல்ல லாலலல்லா

    வாத்தியார்: பேதங்கள் தீர்த்து
    பெருமையை உயர்த்து
    நீதியைக் காத்து
    நேர்மையைக் காட்டு

    பெண் குழந்தை: நேர்மையைக் காட்டு
    பொன் மொழி கேட்டு
    பொய்மையை மாற்று
    பொறுப்புகள் ஏற்று
    பொதுப் பணியாற்று

    வாத்தியார்: திருக்குறள் நூலை
    சிறந்த முப்பாலை
    கருத்துடன் காலை
    படிப்பதுன் வேலை
    லாலல்ல லாலல்ல லாலலல்லா
    லாலல்ல லாலல்ல லாலலல்லா

                    (4)பாடல் - ஒன்றே குலமென்று பாடுவோம்....
                                                படம் - பல்லாண்டு வாழ்க,
                                                ஆண்டு - 1975
                                               பாடலாசிரியர் -புலமைப் பித்தன்,
                                               பாடியவர் -K.J.ஜேசுதாஸ்
                                               இசை K.V. மகாதேவன்,

அன்பிலார் எல்லாம் தமக்குரியர்
அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு.

தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி
தன்மெய் வருத்தக் கூலி தரும்.

ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தேவன் என்று போற்றுவோம்

அன்னை இதயமாக அன்பு வடிவமாக
வந்து வழிகாட்ட வேண்டுமென்று வணங்குவோம்.

ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தேவன் என்று போற்றுவோம்.

கடவுளிலே கருணை தன்னைக் காணலாம்
அந்தக் கருணையிலே கடவுளையும் காணலாம்

நல்லமனசாட்சியே தேவன் அரசாட்சியாம்
அங்கு ஒரு போதும் மறையாது அவன் காட்சியாம்

ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தேவன் என்று போற்றுவோம்..

பாவமென்ற கல்லறைக்கு பலவழி
என்றும் தர்மதேவன் கோவிலுக்கு ஒரு வழி
இந்த வழி ஒன்றுதான் எங்கள் வழி என்றுநாம்
நேர்மை தவறாமல் நடை போடுவோம்

ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தேவன் என்று போற்றுவோம்
இதயம் தெய்வம் நமது அண்ணா தோன்றினார்
அவர் என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார்...
இதயம் தெய்வம் நமது அண்ணா தோன்றினார்
அவர் என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார்

அந்த ஒளி காணலாம் சொன்ன வழி போகலாம்
நாளை வரலாறு நமக்காக உருவாகலாம்

ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தேவன் என்று போற்றுவோம்.

--------------------------------------------------------------------------------------------------------------
 திருக்குறள் சம்பந்தமான திரைப்படங்கள் விடுபட்டிருந்தால்

 9585600733 எண்ணிற்கு தகவலளித்து உதவுங்க....
                  --------------------------
 திருக்குறள் மாமலை மாத இதழ் வாசித்துவிட்டீர்களா?

                      
                                  இன்னும் தொடரும்...
-----------------------------------------------------------------------------------------------

 என அன்புடன்,
செ.பரமேஸ்வரன்,
இலக்கியக் கூடல்,
விதைகள் வாசகர் வட்டம்,
சத்தியமங்கலம்,
ஈரோடு மாவட்டம்.
 தொடர்பு எண் 9585600733.
  (konguthendral.blogspot.com)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மரமா? மக்களவை உறுப்பினரா??

 அனைவருக்கும் வணக்கம்.      நீலகிரி த்தொகுதி 19-04-2024 வெள்ளிக்கிழமை இன்று 18வது மக்களவைத்தேர்தலில் வாக்களித்துவிட்டு மூன்றுமரக்கன்றுகளையும...