29 மார்ச் 2014

பேருந்துகளில் கறுப்பு பெட்டியும்-கண்காணிப்பு கேமராவும்.



மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
 கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.கறுப்புப்பெட்டியும்-கண்காணிப்பு கேமராவும் பேருந்துகளில் பொருத்தவேண்டும்.அதுபற்றி இதோ இந்த கட்டுரை படியுங்கள்.பதிவிட்ட திருமிகு.நாகூர் கனி காதர் மைதீன் பாஷா அவர்களுக்கு நன்றிங்க.
Nagoorkani Kader Mohideen Basha
விமானங்களில் உள்ளது போலவே சொகுசு பஸ்களில் கறுப்பு பெட்டி விரைவில் அறிமுகமாகிறது
விமானங்களில் உள்ளது போலவே, விரைவு பஸ்களிலும் கறுப்பு பெட்டி பொருத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக தமிழகம் உள்பட சில மாநில அரசு பஸ்களில் இதை அறிமுகப்படுத்த மத்திய சாலை போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது.விமானங்களில் Ôபிளாக் பாக்ஸ்Õ என்றழைக்கப்படும் கறுப்பு பெட்டி உள்ளது. தரை கட்டுப்பாட்டு அறையுடன் விமான பைலட்கள் தொடர்பு கொண்டு பேசும் உரையாடல்கள், சத்தங்கள் எல்லாம் அதில் பதிவாகி விடும். விபத்தில் சிக்கும் விமானத்தின் கறுப்பு பெட்டியை கண்டுபிடித்து அதில் பதிவாகி உள்ள தகவல்களை ஆய்வு செய்வார்கள். அதன்மூலம் விமானத்தில் கடைசி கட்டத்தில் என்னென்ன நடந்தது என்பது தெரிந்து விடும். பைலட்களின் கவன குறைவா அல்லது சதியா என்பதெல்லாம் கறுப்பு பெட்டி தகவல்களை வைத்து கண்டுபிடித்து விடுவார்கள்.

அதுபோன்ற கறுப்பு பெட்டியை விரைவு பஸ்களிலும் பொருத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் சொகுசு பஸ்களில், விரைவில் கறுப்பு பெட்டிகளை பொருத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. முதல் கட்டமாக தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களுக்கு இடையே செல்லும் வால்வோ மற்றும் ஸ்கேனியா போன்ற சொகுசு பஸ்களில் கறுப்பு பெட்டிகள் பொருத்தப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அடுத்த வாரம் பெங்களூரில் மாநில போக்குவரத்து அதிகாரிகள், வால்வோ மற்றும் ஸ்கேனியா பஸ் தயாரிப்பாளர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அப்போது பஸ்களில் கறுப்பு பெட்டி பொருத்துவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.சொகுசு பஸ்கள் விபத்தில் சிக்கும் போது, பயணிகள் முன்பக்க இருக்கையில் மோதிக் கொள்வதாலேயே உயிரிழப்பு அதிகமாவது தெரிய வந்தது. அதை தடுக்க பஸ் பயணிகளுக்கு சீட் பெல்ட் வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளது. பஸ்களில் கறுப்பு பெட்டி பொருத்துவதன் மூலம் டிரைவர்களின் நடவடிக்கைகளை அறிந்து நடவடிக்கை எடுக்க முடியும். டிரைவர்களும் பொறுப்பாக நடந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விமானங்களில் உள்ளது போலவே சொகுசு பஸ்களில் கறுப்பு பெட்டி விரைவில் அறிமுகமாகிறது 

விமானங்களில் உள்ளது போலவே, விரைவு பஸ்களிலும் கறுப்பு பெட்டி பொருத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக தமிழகம் உள்பட சில மாநில அரசு பஸ்களில் இதை அறிமுகப்படுத்த மத்திய சாலை போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது.விமானங்களில் Ôபிளாக் பாக்ஸ்Õ என்றழைக்கப்படும் கறுப்பு பெட்டி உள்ளது. தரை கட்டுப்பாட்டு அறையுடன் விமான பைலட்கள் தொடர்பு கொண்டு பேசும் உரையாடல்கள், சத்தங்கள் எல்லாம் அதில் பதிவாகி விடும். விபத்தில் சிக்கும் விமானத்தின் கறுப்பு பெட்டியை கண்டுபிடித்து அதில் பதிவாகி உள்ள தகவல்களை ஆய்வு செய்வார்கள். அதன்மூலம் விமானத்தில் கடைசி கட்டத்தில் என்னென்ன நடந்தது என்பது தெரிந்து விடும். பைலட்களின் கவன குறைவா அல்லது சதியா என்பதெல்லாம் கறுப்பு பெட்டி தகவல்களை வைத்து கண்டுபிடித்து விடுவார்கள்.

அதுபோன்ற கறுப்பு பெட்டியை விரைவு பஸ்களிலும் பொருத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் சொகுசு பஸ்களில், விரைவில் கறுப்பு பெட்டிகளை பொருத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. முதல் கட்டமாக தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களுக்கு இடையே செல்லும் வால்வோ மற்றும் ஸ்கேனியா போன்ற சொகுசு பஸ்களில் கறுப்பு பெட்டிகள் பொருத்தப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அடுத்த வாரம் பெங்களூரில் மாநில போக்குவரத்து அதிகாரிகள், வால்வோ மற்றும் ஸ்கேனியா பஸ் தயாரிப்பாளர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அப்போது பஸ்களில் கறுப்பு பெட்டி பொருத்துவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.சொகுசு பஸ்கள் விபத்தில் சிக்கும் போது, பயணிகள் முன்பக்க இருக்கையில் மோதிக் கொள்வதாலேயே உயிரிழப்பு அதிகமாவது தெரிய வந்தது. அதை தடுக்க பஸ் பயணிகளுக்கு சீட் பெல்ட் வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளது. பஸ்களில் கறுப்பு பெட்டி பொருத்துவதன் மூலம் டிரைவர்களின் நடவடிக்கைகளை அறிந்து நடவடிக்கை எடுக்க முடியும். டிரைவர்களும் பொறுப்பாக நடந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 கருத்து:

மரமா? மக்களவை உறுப்பினரா??

 அனைவருக்கும் வணக்கம்.      நீலகிரி த்தொகுதி 19-04-2024 வெள்ளிக்கிழமை இன்று 18வது மக்களவைத்தேர்தலில் வாக்களித்துவிட்டு மூன்றுமரக்கன்றுகளையும...