29 மார்ச் 2014

நோட்டா-வுக்கு வாக்களித்தால் என்ன பயன்?

மரியாதைக்குரியவர்களே,
                      வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.
       
Nagoorkani Kader Mohideen Basha
நோட்டாவால் பயன் உண்டா?
ஒவ்வொரு தேர்தலின் போதும் தேர்தல் சீர்திருத்தங்கள் பற்றி நிறைய பேசப்படுகிறது. வேட்பாளர்களின் சொத்து விவரங்கள், அவர்கள் மீதான வழக்குகள் எல்லாம் பகிரங்கமாக மக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும். தேர்தல் செலவுகளுக்கு கட்டுப்பாடு, பேனர், போஸ்டர்களுக்கு தடை என்று பல்வேறு சீர்திருத்தங்கள் வந்து விட்டாலும் அவை எல்லாம் இன்னும் தேர்தலை முறைப்படுத்தி விடவில்லை. ஜனநாயக ரீதியாக தேர்தல் நடைபெற்றாலும் மக்கள் விருப்பப்பட்டு, வேட்பாளர்கள் பற்றி நன்கு அறிந்து ஆராய்ந்து தேர்வு செய்கிறார்களா என்றால், இல்லை என்றே சொல்ல வேண்டும்.

இன்னமும் பணபலம்தான் பெரும்பாலும் தேர்தலை நிர்ணயிக்கிறது எனலாம்.
எனினும், இந்த தேர்தலில் ஒரு நல்ல விஷயம். தேர்தலில் போட்டியிடும் எந்த வேட்பாளரும் பிடிக்கா விட்டால், வாக்காளர்கள் அந்த எண்ணத்தை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக ‘நோட்டா‘ அறிமுகப்படுத்தப்படுகிறது. அதாவது, ‘மேற்கண்ட எவரும் இல்லை‘ என்று குறிப்பிடும் பட்டன், வாக்காளர் இயந்திரத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த பட்டனுக்கும் ஒரு சின்னத்தை வழங்க வேண்டுமென தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

எந்த வேட்பாளரையும் பிடிக்கவில்லை என்றால், வாக்களிக்க விரும்பவில்லை என்று தெரியப்படுத்த ஏற்கனவே 49(ஓ) என்ற வழிமுறை இருந்தது. ஆனால், அதை பதிவு செய்ய வாக்குச்சாவடி அலுவலரிடம் தனியாக ஒரு விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்ய வேண்டும். இதனால், அந்த வாக்காளரின் வாக்கு ரகசியமாக பதிவு செய்யப்படாது என்பதுடன், அவர் கட்சி ஏஜென்டுகளுக்கு அடையாளம் காட்டப்படுகிறார்.

இதனால்தான், இந்த பிரிவை செல்லாது என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பரில் ரத்து செய்தது. வாக்குப்பதிவு இயந்திரத்திலேயே ஒரு பட்டனை கொண்டு வர உத்தரவிட்டது. அப்படி வந்ததுதான் நோட்டா.

ஒரு தொகுதியில் வேட்பாளர்கள் எல்லாரையும் விட நோட்டாவுக்கு அதிக வாக்குகள் பதிவானால், மறுதேர்தல் நடத்துவதுதான் சரியானது. ஆனால், இதற்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.

எனவே, எந்த வேட்பாளரையும் பிடிக்கவில்லை என்று ஒரு தொகுதியில் மெஜாரிடி வாக்காளர்கள் கூறினாலும், அந்த தேர்தல் ரத்து செய்யப்படாது. இதனால், நோட்டாவின் மூலம் பயன் உண்டா என கேள்வி எழுகிறது. எனினும், மக்களின் எண்ணத்தை வெளிப்படுத்த நோட்டா ஒரு நல்ல வாய்ப்புதான்.

தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பி, எம்எல்ஏக்களையே மக்களுக்கு பிடிக்காத பட்சத்தில் திரும்ப பெற வாய்ப்பு கேட்கப்பட்டு வருகிறது. இந்த காலகட்டத்தில், நோட்டா வாக்குகள் அதிகரிக்கும் தொகுதியில் மறுதேர்தல் நடத்துவது பற்றி தேர்தல் ஆணையம் சிந்திக்கலாம்.
நோட்டாவால் பயன் உண்டா?

ஒவ்வொரு தேர்தலின் போதும் தேர்தல் சீர்திருத்தங்கள் பற்றி நிறைய பேசப்படுகிறது. வேட்பாளர்களின் சொத்து விவரங்கள், அவர்கள் மீதான வழக்குகள் எல்லாம் பகிரங்கமாக மக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும். தேர்தல் செலவுகளுக்கு கட்டுப்பாடு, பேனர், போஸ்டர்களுக்கு தடை என்று பல்வேறு சீர்திருத்தங்கள் வந்து விட்டாலும் அவை எல்லாம் இன்னும் தேர்தலை முறைப்படுத்தி விடவில்லை. ஜனநாயக ரீதியாக தேர்தல் நடைபெற்றாலும் மக்கள் விருப்பப்பட்டு, வேட்பாளர்கள் பற்றி நன்கு அறிந்து ஆராய்ந்து தேர்வு செய்கிறார்களா என்றால், இல்லை என்றே சொல்ல வேண்டும். 

இன்னமும் பணபலம்தான் பெரும்பாலும் தேர்தலை நிர்ணயிக்கிறது எனலாம். 
 எனினும், இந்த தேர்தலில் ஒரு நல்ல விஷயம். தேர்தலில் போட்டியிடும் எந்த வேட்பாளரும் பிடிக்கா விட்டால், வாக்காளர்கள் அந்த எண்ணத்தை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக ‘நோட்டா‘ அறிமுகப்படுத்தப்படுகிறது. அதாவது, ‘மேற்கண்ட எவரும் இல்லை‘ என்று குறிப்பிடும் பட்டன், வாக்காளர் இயந்திரத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த பட்டனுக்கும் ஒரு சின்னத்தை வழங்க வேண்டுமென தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. 

எந்த வேட்பாளரையும் பிடிக்கவில்லை என்றால், வாக்களிக்க விரும்பவில்லை என்று தெரியப்படுத்த ஏற்கனவே 49(ஓ) என்ற வழிமுறை இருந்தது. ஆனால், அதை பதிவு செய்ய வாக்குச்சாவடி அலுவலரிடம் தனியாக ஒரு விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்ய வேண்டும். இதனால், அந்த வாக்காளரின் வாக்கு ரகசியமாக பதிவு செய்யப்படாது என்பதுடன், அவர் கட்சி ஏஜென்டுகளுக்கு அடையாளம் காட்டப்படுகிறார். 

இதனால்தான், இந்த பிரிவை செல்லாது என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பரில் ரத்து செய்தது. வாக்குப்பதிவு இயந்திரத்திலேயே ஒரு பட்டனை கொண்டு வர உத்தரவிட்டது. அப்படி வந்ததுதான் நோட்டா.

ஒரு தொகுதியில் வேட்பாளர்கள் எல்லாரையும் விட நோட்டாவுக்கு அதிக வாக்குகள் பதிவானால், மறுதேர்தல் நடத்துவதுதான் சரியானது. ஆனால், இதற்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

எனவே, எந்த வேட்பாளரையும் பிடிக்கவில்லை என்று ஒரு தொகுதியில் மெஜாரிடி வாக்காளர்கள் கூறினாலும், அந்த தேர்தல் ரத்து செய்யப்படாது. இதனால், நோட்டாவின் மூலம் பயன் உண்டா என கேள்வி எழுகிறது. எனினும், மக்களின் எண்ணத்தை வெளிப்படுத்த நோட்டா ஒரு நல்ல வாய்ப்புதான்.

தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பி, எம்எல்ஏக்களையே மக்களுக்கு பிடிக்காத பட்சத்தில் திரும்ப பெற வாய்ப்பு கேட்கப்பட்டு வருகிறது. இந்த காலகட்டத்தில், நோட்டா வாக்குகள் அதிகரிக்கும் தொகுதியில் மறுதேர்தல் நடத்துவது பற்றி தேர்தல் ஆணையம் சிந்திக்கலாம்.
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முனைவர்.இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phil.,Ph.D., அவர்களது வாழ்க்கைக்குறிப்பு... (Dr.R.K.Manikkam, professor,Writer)

                                                                                                        முனைவர். இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phi...