28 செப்டம்பர் 2011

பளபள கூந்தலுக்கு....

பளபள கூந்தலுக்கு....

எல்லா   பெண்களும்   அடிக்கடி   முடி  உதிராத,  நீண்ட,  பளபளப்பான,  பொடுகு   இல்லாத  கூந்தல்  வேண்டும் என்ற  ஆசை  நிச்சயம்  இருக்கும்.  நீங்களும்  கூந்தல்  அழகியாக  சில டிப்ஸ்:

  •  ஒரு  கையளவு  வேப்பிலை  எடுத்து  4 கப்   தண்ணீரில்  நன்கு  கொதிக்கவிடுங்கள். ஆறியதும் அந்த  தண்ணீரால் தலையை  அலசி வந்தால்  பொடுகு  வராமல்  தடுக்கலாம்.  வினிகரை  தலையில்  தடவி  குளித்து  வந்தாலும் பொடுகு  தொல்லை  குறையும்.
  • வெந்தயம்,  வேப்பிலை,  கறிவேப்பிலை,  பாசிபருப்பு,   ஆவாராம்  பூ   ஆகியவற்றை   வெயிலில்  காய  வைத்து மெஷினில்  நன்கு  பொடித்துக்  கொள்ளுங்கள்.   இந்த   பொடியை  ஷாம்புக்கு  பதிலாக   வாரம்  இருமுறை  கூந்தலில்  தேய்த்து  அலசி  குளியுங்கள்.  உங்கள்  கூந்தல்  பளப்பளக்க தொடக்கிவிடும்.
  • ஹேர்  டிரையரை அதிகம்  உபயோகிக்காதீர்கள்.  அப்படி செய்தால்  தலை  வறண்டு,  முடியின்  வேர்களும்  பழுதடைந்து  போய்விடும்.  மேலும்,  அதிக  கெமிக்கல்   நிறைந்த  ஷாம்பூ,  ஹேர்  கலர்  ஆகியவற்றை  பயன்படுத்தாதீர்கள்.
  • இரவு  படுக்கைக்கு  செல்லுமுன்  ஆலிவ்  ஆயிலை  தலையில்  தடவி  ஊறவிட்டு,  மறுநாள் காலையில் குளித்து  வந்தால் பேன் தொல்லையில்  இருந்து  விடுபடலாம்.
  • தலைக்கு  குளித்த பின்னர்,  ஒரு  கப் தண்ணீரில்   1/2  கப்  வினிகரை  கலந்து  தலையில் தேய்த்து  அலசவும்.  பின்  அப்படியே  துண்டால்  தலையில் கட்டிக் கொள்ளவும்.  15 நிமிடத்திற்கு ஊற  விடுங்கள்.  பின்பு,  பேன் சீப்பால் சீவினால்  தலையில் இருக்கும்  ஈறு  எல்லாம்  வந்துவிடும்.  2   வாரத்திற்கு  ஒருமுறை   இப்படி  செய்து   வந்தாலே   போதும்.  பேன்  தொல்லையிலிருந்து  முற்றிலும்  விடுபடலாம்.
  • முட்டையின்   வெள்ளைக்  கருவை  நன்கு அடித்து,  தலையில்  தேய்த்து  ஊறவைத்து,  மாதம் 2  முறை  அவ்வாறு  செய்து குளித்து வந்தால்  போதும்.  கூந்தல்  பளபளக்க  ஆரம்பித்து  விடும்.
  • கறிவேப்பிலை,  மருதாணி   இரண்டையும்  அரைத்து  தலையில்  தேய்த்து  குளித்து  வந்தால்  இளநரையை  தடுக்கலாம்.  மாதம்  இரு  முறை  இவ்வாறு  செய்தாலே  போதும்.  
இந்த  வழிமுறைகளை  பின்பற்றினால் நீங்களும்  கூந்தல்  அழகி  தான்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சதுரங்கம் வாழ்க்கைக்கு தரும் பாடம்.

  ஒவ்வொரு அசைவும் முக்கியமானது. ஆட்டத்தில் மட்டுமல்ல வாழ்க்கையிலும். வாழ்வில் நாம் செய்யும் ஒவ்வொரு நிகழ்வையும் மிகவும் கவனமாக செயல்படுத்த வ...