31 மே 2017

அரசு போக்குவரத்துக்கழகங்களில் அவல நிலை!

அரசு போக்குவரத்துக் கழகத்துக்கே வெளிச்சம்?
மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். வழித்தடப்பேருந்துகளை சிறப்பு இயக்கத்துக்கு அனுப்புவதே தவறு! மேலிட,மேலிட உத்தரவுக்கு பணிந்து நடக்க வேண்டுமே என்பதற்காக சிறப்பு இயக்கத்திற்கு செல்லும்போது அதென்னங்க மாற்றாந்தாய் பெற்ற பிள்ளை! போன்று கேவலமாக பார்ப்பதும்?,ஒதுக்குவதும்? இதுக்குத்தாங்க கண்காணிப்பு கேமராக்களை பொருத்துங்க அப்படின்னு ஓயாமல் சொன்னாலும் ஒருத்தரும் கேட்பதே இல்லைங்க!...




பழைய சோறு அமிர்தமே!


மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். பழைய சோறு என்றால் முகத்தைச்சுளிப்பவரா? நீங்கள்..அப்படியென்றால் இந்தப்பதிவு உங்களுத்தாங்க!

முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் பி6, பி12 ஏராளமாக இருக்கிறது என்கிறார் அமெரிக்காவில் இருக்கும் ஒரு மருத்துவர். தவிரவும் உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் 'ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ்' (கவனியுங்கள்: 'மில்லியன்' அல்ல 'ட்ரில்லியன்') பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்!
கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்தக் காய்ச்சலும் நம்மை அணுகாது!
பழைய சாதத்தின் மகத்துவத்தைப் பற்றி அமெரிக்காவில் வசிக்கும் நம் இந்திய விஞ்ஞானி ப்ரதீப் கூறியதில் இருந்து சில:
1. "காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால், உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது.
2. இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் இலட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது.
3. மறுநாள் இதை குடிக்கும் போது உடல் சூட்டைத் தணிப்பதோடு குடல்புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்தும்.
4. அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச் செய்கிறது.
5. இந்தப் பழைய சாதம் உணவு முறையை சில நாள் தொடர்ந்து நான் சாப்பிட்டதில் நல்ல வித்தியாசம் தெரிந்தது. இரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிட்டதோடு, உடல் எடையும் குறைந்தது." என்கிறார்.
6. மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது.
7. அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சட்டென்று சரியாகி விடும்.
8. அல்சர் உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்து வர, ஆச்சரியப்படும் அளவிற்குப் பலன் கிடைக்கும்.
9. எல்லாவற்றிற்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால், எந்த நோயும் அருகில்கூட வராது.
10. ஆரோக்கியமாக அதே சமயம் இளமையாகவும் இருக்கலாம்".
பழைய சாதத்தை எப்படிச் செய்வது?
பழைய சாதத்திற்கு மிகவும் சிறந்தது பிரெளன் ரைஸ் என்று அழைக்கப்படும் கைக்குத்தல் அரிசிதான்.
ஒரு கல் சட்டி அல்லது மண் சட்டியில் சிறிது சாதத்தைப் போட்டு, சுத்தமான தண்ணீரை நிறைய ஊற்றவும்.
மறுநாள் சாதத்தை நன்கு பிசைந்து, மோர் சிறிது சேர்த்து, சின்னவெங்காயம் சேர்த்துக் குடிக்க 'ஜில்'லென்று இருக்கும் (மிகவும் சூடாக இருக்கும் சாதத்தில் தண்ணீரை ஊற்றக் கூடாது.)

எட்டுப் போடு எல்லாம் பறந்தோடும்!


மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.யோகா ஒரு பழமையான கலை என்று நமது இந்திய வேதநூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறான யோகா கலையில் எட்டுப்போடுவதும் சிறந்த கலையே! அதன் விபரத்தை படிப்போம்,பயன் பெறுவோம்...
8 க்குள் ஒரு யோகா !!!
************************
"எட்டு" போடுகிறவனுக்கு "நோய்"
எட்டிப் போகும் என்பது ஒரு பழமொழி.
மனித மன, உடல் பிரச்சினைக்கு காரணம்
அவன் கர்மா, அந்த கர்மா வழி உடலுக்கு
வருகிறது "நோய்".
நோய் வருத்தும் பொழுது, வருந்தும் உடல்,
அதிலிருந்து விடுபட்டு நிரந்தர நிம்மதியை
தேடிக் கொள்ளவே விரும்பும்.
சித்தர் வழி என்பது அனைத்துக்கும்
தெளிவான விடைகளை தருகிறது.
சித்தர்கள் :
"எட்டுப் போடு! எல்லாம் பறந்தோடும்!"
என்கிறார்கள்.
நம்மில் பலரும், நீரிழவு நோய், உயர்
அல்லது தாழ்ந்த ரத்த அழுத்தம்,
மார்புச்சளி போன்றவைகளால் மிக
பாதிப்படைந்திருப்போம்.
எத்தனைதான்
மருந்து சாப்பிட்டாலும் (சாப்பாட்டில்
கட்டுப்பாடு இல்லாமல் போவதால்)
மறுபடியும் இவை தாக்கும்.
இந்த நோய்களை, கொல்லாமல் கொல்லும்
நோய்கள் தரவரிசையில் வைத்துள்ளனர்
சித்தர்கள்.
இதிலிருந்து விடுபட்டு, நாம்
மனிதர்கள், நலமாக வாழ வேண்டும்
என்பதற்காக இந்த முறையை வகுத்துக்
கொடுத்துள்ளனர்.
காலை நேரத்திலோ, அல்லது நேரம்
கிடைக்கும் பொழுதோ, ஒரு
அறையிலோ அல்லது
வெட்டவேளியிலோ (குறைந்தது 15 அடி
நீளம் வேண்டும்) எட்டு போடுகிற
வடிவத்தில் குறைந்தது 30 நிமிடங்கள்
நடை பயிற்சி செய்ய வேண்டும்.
முதல் 15 நிமிடங்கள் தெற்கிலிருந்து வடக்காக
நடந்தால், அடுத்த 15 நிமிடங்கள்
வடக்கிலிருந்து தெற்காக நடக்க
வேண்டும். இதை ஒரு நாளைக்கு
இருமுறை செய்ய வேண்டும்.
காலையும், மாலையும் வேளைகள்
மிக வசதியாக இருக்கும்.
இதை செய்வதால் என்ன நடக்கும்!
***********************************
1. பயிற்சி தொடங்கிய அன்றே மார்பு சளி
கரைந்து வெளியேறுவதை காணலாம்.
2. இந்த பயிற்சியை இருவேளை
செய்துவந்தால், உள்ளங்கை கை விரல்கள்
சிவந்திருப்பதை காணலாம். அதாவது
ரத்த ஓட்டத்தை சமன்படுத்துகிறது என்று
அர்த்தம்.
3. நிச்சயம் நீரிழவு நோய் (சர்க்கரை
வியாதி) குறைந்து முற்றிலும்
குணமாகும். (பின்னர் மாத்திரை,
மருந்துகள் தேவை இல்லை).
4. குளிர்ச்சியினால் ஏற்படும் தலைவலி,
மலச்சிக்கல் போன்றவை தீரும்.
5. கண் பார்வை அதிகரிக்கும். ஆரம்ப நிலை
கண்ணாடி அணிவதை தவிர்க்கலாம்.
6. கேட்கும் திறன் அதிகரிக்கும்.
7. உடல் சக்தி பெருகும்- ஆதார சக்கரங்கள்
சரியாக செயல்படும்.
8. குடல் இறக்க நோய் வருவதை தடுக்கும்.
9. ரத்த அழுத்தம் நிச்சயமாக கட்டுப்பாட்டில்
வரும்.
10. பாத வலி, மூட்டுவலி மறையும்.
11. சுவாசம் சீராகும் அதனால் உள்
உருப்புக்கள் பலம் பெரும்.
சரி! இதெப்படி நடக்கிறது என்று
உங்களுக்குள் கேள்வி ஏழும்.
"8" வடிவில் நடை பயிற்சி செய்யும் பொழுது
நீங்களே உணர்வீர்கள்,
அந்த வடிவம்
"முடிவில்லாதது" மட்டுமல்ல, நமது
ஆதார சக்கரங்களை தட்டி எழுப்பி, சம
நிலை படுத்துகிறது.
இதை நமக்கு உடல் பயிற்சியாக சொல்லித்தந்த
சித்தர்கள், இதையே "வாசி
யோகத்தில்" (மூச்சு பயிற்சியில்)
உள்ளுக்குள்ளே சுவாசத்தை விரட்டி
எட்டு போடுவார்கள் என்பது தெரியுமோ?
விருப்பம் உள்ளவர்கள், முயற்சி செய்து
பலனடையுங்கள்!
மனித உடல் அவரவர் கை அளவுக்கு எண்ஜான் அளவுமட்டும் இருக்கும் !!
உள்ளங்கால் முதல் உச்சி வரை இந்த எண்ணிக்கை ஏற்றத்தில் இருக்கும் ,உடல் நோயும் ஆரம்ப நிலை கீழிருந்து மேல் முகமாகவே அதிகப்படியாகும் , நோய் இருப்போரும் நோய் இல்லாதோரும் இந்த 8 வடிவ நடை பயிற்சி செய்யலாம் , உங்கள் வீட்டிற்குள் உள்ளோ அல்லது மாடியிலோ இடம் தேர்வு செய்து 6 க்கு 12 அடி அல்லது 8 க்கு 16 அடி அளவில் கோடு இட்டு அந்த செவ்வக இடத்திற்குள் 8 வடிவில் வரைந்து கொள்ளுங்கள் !! இது தெற்கு வடக்காக நீலப் பகுதி இருக்கணும் .
காலை அல்லது மாலை , வடக்கு நோக்கி நின்று அந்த 8 வடிவ கோட்டின் மேல் உங்கள் நடை பயிற்சியை ஆரம்பியுங்கள் , ஆண்கள் வலது கை பக்கம்-- பெண்கள் இடது கை பக்கம் ஆரம்பிக்கணும் , ஆரம்பித்த இடத்திற்கே வந்த பின் அதே வழியில் தொடர்ந்து 21 நிமிடம் நடக்கணும் , பின்பு மறுமுனையில் தெற்கு நோக்கி நின்று இதேபோல் 21 நிமிடம் கையை நன்கு விசிறி மிதமான வேகத்தில் நடை பயிற்சி செய்யணும் , மொத்தம் 42 நிமிடம் !!
1வது 21 நாளில் ---- சர்க்கரைநோயால் வரும் உள்ளங்கால் எரிச்சல் , குதிவாதம் , வடகலை நாடி- இடகலை நாடி புத்துயிர் பெரும் !!!
2 வது 21 நாளில் ---- மூட்டு வலி , ஒட்டுக்கால் , பிரச்சனை குறையும் ,!!!!
3 வது 21 நாளில் ---- தொடைப் பகுதி பலம் பெறும் ,!!!!
4 வது 21 நாளில் ---- ஆண்மைக் குறைபாடு , விதைப்பை குறைபாடு சர்க்கரை நோய் அளவு , விந்து நாத அணு குறைபாடு , கல்லீரல் மண்ணீரல் குறைபாடு , கர்ப்பப் பை குறைபாடு குழந்தை பேறின்மை , மாதநாள் குறைபாடு ,ஆண் பெண் இல்லற நாட்டமின்மை நீங்க ஆரம்பிக்கும் .!!!
5 வது 21 நாளில் ---- வயிறு சம்மந்தப்பட்ட நோய்கள் குறையும் !!!!,
6 வது 21 நாளில் --- இரத்த அழுத்தம் , இதய நோய் , ஆஸ்த்துமா , காசம் ,நீர் உடம்பு , உடல் அதிக எடை குறைய ஆரம்பிக்கும் !!!!
7 வது 21 நாளில் --- தொண்டை பகுதி பிரச்சனைகள், அடிக்கடி கழுத்து பிடிப்பு , முதுகில் வாய் பிடிப்பு வராது ,
8 வது 21 நாளில் --- அன்னாக்கு பகுதி விழிப்படையும் , வாய், கண், காது, மூக்கு கருவிகள் நோய்த் தன்மை தாக்காது , 2 நாசியிலும் சுவாசம் ஒரே நேரத்தில் ஓடும் , மூளைப் பகுதி விழிப்படையும் , மூளைப் பகுதி நோய் தீரும் , தியானங்கள் கை கூடும் , இதைச் செய்ய வயது வரம்பு இல்லை ,
இந்த 8 நிலைகளில் உங்களின் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து உயிர் , மனம் உடல் ஒன்றாகி காலன் தள்ளி நிற்பான் . மெளனமாக நடக்கணும் அல்லது ஏதாவது இறை நாமத்தை மனதில் செபித்தவாறு நடக்கணும் , வாய் வழியாக சுவாசம் கூடாது !!!!

போக்குவரத்துக்கழகத்தில் ??????

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். இதுதாங்க போக்குவரத்துக்கழகத்தில் பிரச்சனை? 

[19:42, 16/05/2017] Gm Off Nataraj: ஓய்வு பெற்ற ஒரு தமிழக போக்குவரத்து கழக ஓட்டுனரின் கண்ணீா் மடல் :
ஐயா, திரு. விஜயபாஸ்கர், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் அவர்களே..
நான் கடந்த 35வருடங்களாக போக்குவரத்து துறையில் டிரைவராக பணியாற்றி, இன்று ஓய்வு பெற்றுவிட்டேன். பல நாட்கள் அந்த இன்ஜின் சூட்டின் அருகிலே வேலை செய்தது இன்று உடலளவில் தளர்ந்து விட்டேன். ஒருநாள் பணியில் இருக்கும் போது நெஞ்சுவலி ஏற்பட்டது. என்னை நம்பி இத்தனை மக்கள் அமர்ந்து இருக்கின்றனரே என்று மனதில் வைத்து கொண்டு, அந்த வலியை தாங்கிக் கொண்டு வண்டியை கட்டுபாட்டில் வைத்து ஓரம் கட்டினேன்.
உடலளவில் பாதிக்கப்பட்டு இருந்தாலும், மனதளவில் மகிழ்ச்சியோடு தான் என் பணியை செய்தேன்..

இதற்கு நான் உங்களிடம் எதிர்பார்த்தது, என் சம்பளத்தில் மாதா மாதம் பிடித்த பி.எப் தொகையும், விடுமுறை பணமும், ஓய்வு பணமும் தான். நான் ஓய்வு பெற்று இரண்டு வருடம் ஆகின்றது. இன்றுவரை ஒரு ரூபாய் கூட என்னால் வாங்க இயலவில்லை உங்களிடம்.
அந்த பணத்தை நம்பிதான் என் மகளுக்கு வரன் பார்த்து கொண்டிருந்தேன். பின்புதான் தெரிந்தது கடந்த ஆறு வருடமாக யாருக்கும் பணத்தை நீங்கள் திரும்ப கொடுக்கவில்லை என்று. என்னை போல் நிறைய பேர் உங்களிடம் பணத்தை பெற போராடி கொண்டிருக்கின்றனர்.
மாதா மாதம் பென்சன் வழங்க என் சம்பளத்தில் பணத்தை பிடித்தீர்கள். அதையும் மாதம் இரண்டு தவணையாக வழங்கினீர்கள். சில மாதம் முன்பு அதையும் நிறுத்தி விட்டீர்கள்.. அதன்பிறகு கோர்ட் உத்தரவின் படி மீண்டும் தவணை முறையில் பெறுகிறோம்.
முன்பு மகளுக்கு திருமணம் செய்ய வேண்டுமே என்று எண்ணிக் கொண்டிருந்தேன்.
இன்று அடுத்த வேளை உணவை பற்றி யோசிக்க வைத்து விட்டீர்கள் ஐயா.
நாங்கள் நாற்காலியில் உட்கார்ந்து கையெழுத்து போடும் வேலை செய்யவில்லை.. உடலை வருத்தி வேலை செய்தோம், நல்லநாள் கூட பிள்ளைகளோடு இல்லாமல்.
எனக்கு இருக்கும் ஒரே கேள்வி, எங்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்து ஓய்வு பெற்ற பின் வழங்குகின்றோம் என்று கூறிய தொகையை என்ன செய்தீர்கள்.
நீங்கள் கூவத்தூர் ரிசார்ட்டில் கூத்தடிக்கவும், ஆர்.கே.நகர் தேர்தலுக்கு ஓட்டுக்கு பணம் வழங்கவும் என் வியர்வையும், ரத்தமும் தான் உங்களுக்கு கிடைத்ததா. உங்கள் மனைவியும், பிள்ளைகளும் காரில் பவனி வர! எங்கள் மனைவி, பிள்ளைகள் சாக வேண்டுமா?.
தயவு செய்து அறிக்கை விடாமல் எங்கள் வாழ்க்கை பிரச்சினையை தீர்த்து வையுங்கள்...
இதை படிப்போர் ஒரு தந்தைக்கு செய்யும் உதவியாக, இத் தகவலை அனைவருக்கும் பகிர்ந்து உதவுமாறு கேட்டு கொள்கின்றேன். உங்கள் தயவால் எங்கள் PF பணமாவது கிடைத்தால் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்.
[19:45, 16/05/2017] Gm Off Nataraj: முதல்வரிடம் உங்கள் கோரிக்கையை தெரிவித்துவர திருமிகு. செங்கோட்டையன், தங்கமணி எம்ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் சென்றுள்ளார்கள். 10 நிமிடத்தில் வருவதாக சென்றுள்ளார்கள்
[19:45, 16/05/2017] Gm Off Nataraj: எஸ்மா சட்டம் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பொருந்தாது நாம் id act ஊழியர்கள் அதாவது நாம் நேரடியாக அரசு ஊழியர்கள் அல்ல அன்டர் டேக்கிங் ஊழியர்கள் அதனால் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இந்த சட்டம் ஒன்றும் செய்ய முடியாது ஆகையால் யாரும் பயப்பட வேண்டாம்
[19:45, 16/05/2017] Gm Off Nataraj: போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ...
அத்தியாவசிய சேவை புரிபவர்கள் வேலை நிறுத்தம் செய்வது சட்டவிரோதம் .இதனால் எஸ்மா சட்டம் பயன்படுத்தலாம்.இந்த நிலையை உயர் நீதிமன்றம் ஒரு நபரின்வழக்கின் அடிப்படையில் ஒரு புறதீர்ப்பு வழங்கியுள்ளது.
அத்தியாவசிய சேவையில் பணிபுரியும் தொழிலாளர்கள் வேலை நிறுத்த நோட்டிஸ் கொடுத்து அதன் மீது பேச்சுவார்த்தை நடந்து அதன் முடிவின் மீதுதொழிலாளர்கள் உடன்பாடு ஏற்படவில்லையெனில் வேலை நிறுத்தம் செய்யலாம் என்று சட்டம் உள்ளது.
ஆகவே நாம் செய்யும் வேலை நிறுத்தம் சட்டப்படியானது.
நீதிமன்றம் பிறப்பித்துள்ள எஸ்மா சட்டம் என்பது நமக்கு பொருந்தாது. மேலும் நீதிமன்றமும் இத் தீர்ப்பிற்கு தொழிற்சங்கங்கள் விளக்கம் அளிக்குமாறு கோரியுள்ளது.
நாளை தொழிலாளர்கள் சார்பாக தொழிற்சங்கங்கள் நமது சட்டப்படியான நடவடிக்கைகளையும் நமது கோரிக்கைகளையும் அதனை ஏற்காத அரசின் நிலைப்பாட்டையும் நீதிமன்றத்தில் தெளிவுபடுத்த உள்ளார்கள்.
இதன் பிறகே இரு தரப்பு வாதத்தின் அடிப்படையில் விசாரணை செய்து அதன் பிறகு நமக்கு எஸ்மா பொருந்துமா? பொருந்தாதா? என நீதிபதிகள் கொடுக்கும் தீர்ப்பே தற்காலிக தீர்ப்பு.இதன் பிறகு யார் வேண்டுமானாலும் மேல் முறையீடு செல்லவும் சட்டம் உள்ளது.
தொழிலாளர்களே இன்று வந்த நீதிமன்ற எஸ்மா சட்ட தீர்ப்பினால் அச்சம் கொள்ளத் தேவையில்லை. தொழிற்சங்கங்கள் வழிகாட்டுதல்படி நாம் செயல்படுவோம் என்று ஆணித்தரமான முடிவோடு வேலை நிறுத்தத்தை தொடர்வோம்.


ஒரு நூறு போக்குவரத்து தொழிலாளர்களின் குடும்பங்களை நான் அறிவேன். ஒட்டுநர்/ நடத்துனர் உத்தியோகங்களில் பணியில் இருப்பவர்கள், பணி ஓய்வு பெற்றவர்கள் அனுபவிக்கும் உடல் உபாதைகள் (occupational hazards) சொல்லில் வர்ணிக்க இயலாதவை. சுவாசக் கோளாறு, எலும்பு தேய்மானங்கள், இடுப்பு எலும்பு/தசை வலிகள் என அவர்களின் வாழ்வே இருண்டு கிடக்கிறது. நம் குண்டும்குழியுமான சாலைகளில் இந்த காயிலான் கடை பேருந்துகளை 30-40 ஆண்டுகள் ஓட்டுவதும், அதில் பணி நேரம் முழுவதும் இருப்பது என்பதும் துயரத்திலும் துயரமே, அவர் விரும்பி அல்ல தங்களின் வறுமை/குடும்ப சூழல் கருதியே இந்த கேடு கெட்ட வேலையில் நீடிக்கிறார்கள்/ நீடித்தார்கள்.
அவர்களின் ஓய்வூதியம், வருங்கால வைப்பு நிதி ஆகியவற்றை 20 ஆண்டுகளாக வழங்காமல் அவர்களை அலைக்கழித்து அதை வைத்து சூதாடிக்கொண்டிருக்கும் அரசாங்கங்களின் மீது மக்கள் காறி உமிழ வேண்டும். போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக பொதுமக்களும் களம் காண வேண்டும்.


உணவிற்கு பிறகு சூடான தண்ணீர் அல்லது சூப் குடிப்பது நல்லது.

மரியாதைக்குரியவர்களே,
                 வணக்கம்.நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா?
அப்படியென்றால் இது உங்களுக்குத்தான் உங்களுக்காக..
உங்களின் விலைமதிப்பற்ற இரண்டு நிமிடங்களை செலவழித்து இதை கண்டிப்பாக படிக்கவும்…
மாரடைப்பு மற்றும் சூடான குடிநீர்:
சீன மற்றும் ஜப்பான் மக்கள் தங்களின் உணவிற்கு பிறகு குளிர்ந்த தண்ணீரை விடுத்து சூடான தேநீர் அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இப்பழக்கத்தை நாமும் பின்பற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது.
சாப்பிட்டவுடன் குளிர்ந்த நீர் குடிப்பதனால் , நம் உணவில் உட்கொண்ட எண்ணெய் பொருட்கள் திடப்பொருளாக மாறி செரிமானத்தை மெதுவாக்கிவிடும். திடப்பொருளாக மாறிய கலவை நம் வயிற்றில் இருக்கும் அமிலத்தோடு (Acid) வினைபுரியும். இது திட உணவை விட வேகமாக உடைந்து குடலால் உறிஞ்சப்படும். இது நம் குடலில் அணிதிரண்டு அப்படியே நின்றுவிடும். மிக விரைவில், இது கொழுப்புகளாக
மாறி புற்றுநோய்க்கு வழிவகுக்கும். ஆகவே உணவிற்கு பிறகு சூடான தண்ணீர் அல்லது சூப் குடிப்பது நல்லது.

மாரடைப்பு பற்றி ஒரு குறிப்பு:
              மாரடைப்பின் முதல் அறிகுறி இடது கையில் ஏற்படும் கடுமையான வலி ஆகும். தாடையில் தீவிர வலி ஏற்பட்டாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மாரடைப்பு வரும்போது பொதுவாக நெஞ்சு வலி ஏற்படாது. குமட்டல் மற்றும் கடுமையான வியர்வையே மாரடைப்பு ஏற்பட பொதுவான அறிகுறிகள் ஆகும்.
60% சதவீத மக்கள் தூக்கத்தில் மாரடைப்பு ஏற்படும்போது அவர்களால் எழுந்துகொள்ள முடியாது. உறக்கத்திலேயே இறந்துவிடுவர். தாடை வலி ஏற்பட்டவர்கள் மட்டுமே அயர்ந்த தூக்கத்திலிருந்து எழுந்து கொள்ள முடியும்.
ஆகவே எப்பொழுதும் கவனமாகவும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.

"பேலியோ டயட்" புத்தகம் ஆதாரபூர்வமாகச் சொல்கிறது.

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். தினமும் இன்று முதல் இதுதான் உங்கள் உணவு..காலை : 100 பாதாம் கொட்டைகள், மதியம் : 4 முட்டைகள்  ,இரவு : சிக்கன்/மட்டன்/மீன்
( அளவில்லாமல்)
இப்படி உங்களுக்கு சொல்லப்பட்டுவிட்டால் என்ன ஆகும் என்று நினைக்கின்றீர்கள்? "தினமும் இதுதான் உணவா? ஆம்..
ஐயோ.. பத்தே நாளில் மாரடைப்பு வந்து செத்தே போய் விடுவோம்.."
இதுதான் நம் ஒவ்வொருவரின் பதிலாக இருக்கும். ஆனால்..ஆனால்?
இந்த உணவை சாப்பிட ஆரம்பித்ததும் எந்த உடற்பயிற்சியுமே செய்யாமல் உங்கள் எடை 3 மாதங்களில் 12 கிலோ குறையும்.
உங்கள் ரத்தத்தில் கொழுப்பின் அளவு, குளுகோஸின் அளவு நார்மலுக்கு வந்து விடும்.
ரத்த அழுத்தம் இயல்புநிலைக்கு வந்துவிடும். மாரடைப்பு அபாயம் நீங்கிவிடும்..
இப்படியெல்லாம் சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?
மாட்டோம்.
ஆனால் அதுதான் உண்மை என்று "பேலியோ டயட்" புத்தகம் ஆதாரபூர்வமாகச் சொல்கிறது.
ஆனால்.. வாசிக்க வாசிக்க.. நாம் எவ்வாறு உணவு வர்த்தகர்களால் ஏமாற்றப்பட்டு வருகிறோம் என்கிற உண்மை என் முகத்தில் அடித்தது.
ஒட்டகப் பால் குடித்தால் சுகர் சரியாகிவிடும்.. புரோட்டின் பவுடர் சாப்பிட்டால் உடல் எடை குறைந்து விடும்.. வெண்டைக்காயை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சுகர்போய்விடும்.
உப்பை நிறுத்தி தினமும் உடற்பயிற்சி செய்தால் ரத்த அழுத்தம் சரியாகிவிடும்..
என்றெல்லாம் நம்பப்படுவதெல்லாம் பொய் என்பதை அக்கு வேறு ஆணி வேறாய் கிழித்தெரிகிறது இப்புத்தகம்.
மருத்துவ உலகம் எப்படி கோக் மற்றும் பெப்சி கம்பெனிகளின் கைப்பிடிக்குள் சிக்கி சீரழிகிறது என்பதை ஆதார பூர்வமாக விவரிக்கிறது.
எது நார்மல் சுகர் அளவு என்பதையே அமெரிக்க சுகாதார மையம்தான் தீர்மானிக்கிறது.
ரத்தத்தில் சுகர் அளவைக் குறைக்கும் மெட்ஃபார்மின் மாத்திரையை இந்தியாவில் அதிகம் விற்பனை செய்ய வேண்டுமா.. ரத்தத்தில் சர்க்கரையின் இயல்பு அளவைக் குறைத்து நிர்ணயம் செய்.. அவர்களை சர்க்கரை நோயாளிகளாக அறிவித்துவிடு.. அவ்வளவுதான்.. அதன்பிறகு அவர்கள் காலமெல்லாம் நீரிழிவு மாத்திரைக்கு அடிமை.. வியாபாரம் ஜேஜே என்று நடக்கும்.
இதன்படிதான் இந்தியர்களுக்கு இப்போது நார்மல் சுகர் அளவு என்பது 80-120 / 140 என்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
அதற்கு மேல் இருந்துவிட்டால் அவர் சுகர் நோயாளி.. மாத்திரை சாப்பிட வேண்டும். ஆனால் ரத்தத்தில் அவரின் சுகர் அளவு நார்மல் நிலைக்கு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதானே அவர்கள் தொடர்ந்து மாத்திரை சாப்பிடுவார்கள்?
அதற்கு என்ன செய்ய வேண்டும்?
எதைச் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரை என்னும் சுகர் ஏறுமோ அதையே உணவாக எடுக்கச் சொல்..
எதில் சுகர் ஏறும்?
அரிசி மற்றும் கோதுமை..
அப்படியா.. சரி, அரிசி அதிகம் சாப்பிடுகிற தென்னிந்தியர்களை அரிசியை அளவாய் சாப்பிடச் சொல்..கூடவே கோதுமையை அதிகம் எடுத்துக் கொள்ளச் சொல்.
கோதுமை அதிகம் சாப்பிடுகிற வட இந்தியர்களை அரிசி அதிகம் எடுத்துக் கொள்ளச் சொல்.. ரத்தத்தில் சுகர் ஏறிக் கொண்டே இருக்கும். மாத்திரை விற்பனை அதிகரித்துக் கொண்டே இருக்கும். பிரச்சனை சால்வ்ட்..(?!)
எப்படி மருத்துவர்கள் நம்மை வழி நடத்துகிறார்கள் பார்த்தீர்களா?
சரி.. ரத்தத்தில் கொழுப்பைக் கரைக்கும் ஸ்டாட்டின் மாத்திரை விற்பனையை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?
BMI அளவை மாற்று..
அதென்ன BMI?
உடல் எடை, பருமன் போன்றவற்றை நமது உயரத்திற்கேற்ப நிர்ணயிக்கும் ஒரு கணக்கீடு. இது 1830 களில் உருவாக்கப்பட்டது. இதன்படி ஆரம்பத்தில் ஒருவரது BMI 30க்கு அதிகம் என்றால் அது அதிக பருமன் என்று வரையறை செய்யப்பட்டது.
ஆனால் 1985ல் அமெரிக்க சுகாதார மையம் ஒருநாள் இரவில் BMI 27.8 தான் இயல்பு என்றும், பின்னர் BMI 25 தான் இயல்பு என்று 1990லும் நிர்ணயம் செய்தது.
இதன்படி என்ன ஆனது?
168 செமீ உயரமும் 77 கிலோ எடையும் உடையவரின் BMI 27.8 ஆகும்.
1990ல் இவர் தூங்கப் போகும் போது இவரது BMI நார்மல். ஆனால் இரவு அமெரிக்க சுகாதார நிறுவனம் நார்மல் BMI 25 என்று நிர்ணயம் செய்துவிட்டது. எனவே காலையில் அவர் எழும்பும் போது அவர் நோயாளியாக அறிவிக்கப்பட்டுவிட்டார். அவர் படுக்கும் பொழுதும், உறங்கும் பொழுதும் இருந்த உயரமும் எடையும் காலையில் எழும்பும் போதும் அப்படியேதான் இருந்தது.
ஆனால் படுக்கும்பொழுது அவர் நோயற்றவர்.. எழும்பும் பொழுது அவர் நோயாளியாக்கப்பட்டு விட்டார். BMI 25க்கும் அதிகமாக இருப்பதால் அவர் இனி ஸ்டாட்டின் சாப்பிட்டாக வேண்டும்.
புரிகிறதா வியாபார தந்திரம்?
தமிழகத்தில் சுகர்நோயாளிகளுக்கு என்ன உணவு பரிந்துரைக்கப்படுகிறது?
காலையில் 4 இட்லி
மதியம் : அரிசி சாதம், சாம்பார்,ரசம்
இரவு : சப்பாத்தி.
இதைச் சாப்பிடுவதால் என்ன நடக்கிறது?
ஒரு இட்லியில் 15கி சர்க்கரை இருக்கிறது. 4 இட்லிக்கு 60கி சர்க்கரை ஏறுகிறது. சாம்பாரோடு இட்லி சாப்பிட்டால் ஒரு வேளைக்கு 75 கி சர்க்கரை அதாவது 20 டீ ஸ்பூன் சர்க்கரையை ஒருவேளையில் சாப்பிடுகிறோம். பிறகு எப்படி ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்?
நாம் தினமும் ஏற்றுகிற சர்க்கரையைக் குறைக்கத்தான் மாத்திரையை எடுக்கிறோம்.
புரிகிறதா எங்கு பிழை வருகிறது என்று?
சர்க்கரையின் அளவு அதிகரித்ததும் அதைக் கட்டுக்குள் கொண்டுவர நம் கணையம் இன்சுலினை அதிகம் சுரக்கிறது. அது ரத்தத்தில் உள்ள சர்க்கரையை ஈரலுக்கு அனுப்புகிறது. ஈரல் அதை கொழுப்பாக மாற்றி நம் தொப்பைக்கு அனுப்பி சேகரித்து வைக்கிறது.
இன்சுலின் அதிகம் சுரக்க சுரக்க மீண்டும் மீண்டும் கொழுப்பு உடலில் ஏறுகிறது. உடல் பருமன் அதிகரிக்கிறது.
இன்சுலின் தொடர்ந்து அதிகம் சுரக்க சுரக்க பீட்டா செல்கள் பழுதடைந்து கணையம் பழுதடைகிறது. படிப்படியாக இன்சுலின் சுரப்பதே நின்று போகிறது. நாம் நிரந்தர நோயாளிகள் ஆகிறோம்.
ஆக 4 இட்லி சாப்பிடுவது எவ்வளவு பெரிய ஆபத்து என்பது புரிகிறதா?
ரத்தத்தில் சுகர் ஏறுகிறது என்றால், சுகரே இல்லாத உணவைத்தானே நாம் சாப்பிட வேண்டும்? அதுதானே முறை?
சுகர் துளியும் இல்லாத உணவு எது?
அதுதான் அசைவ உணவு.
மனிதன் ஆதியில் படைக்கப்படும் பொழுதே விலங்குகளை வேட்டையாடி அதையே உண்டு வந்தான். அதை உண்ணும் வகையில்தான் மனிதனின் உடல் படைக்கப்பட்டிருக்கிறது. அதுதான் இயல்பான உணவு.
அதில்தான் மனிதனுக்குத் தேவையான அனைத்து விட்டமின்களும், மினரல்களும், கொழுப்புகளும், புரதங்களும் இருக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
காலையில் இட்லிக்குப் பதிலாக 4 ஆம்லெட் சாப்பிட்டால் என்ன ஆகும்?
அதில் துளியும் சுகர் இல்லை. எனவே ரத்தத்தில் சுகர் அளவு கூடாது. உடல் தனக்குத் தேவையான எரிசக்தியை அடைய நேராக நம் தொப்பையில் உள்ள கொழுப்பை எடுத்து எரிக்கத்துவங்கும். தொப்பை கரையும். நம் உடல் கொழுப்பை சேகரிக்காமல் எரிக்கத் தொடங்குவதால் முட்டையில் உள்ள கொழுப்பும் எரியத் தொடங்கும்.
காலை உணவாக முட்டை சாப்பிடும் பொழுது, நான்கு மணிநேரம் பசி எடுக்காது. சுகர் அளவு கூடாது. நொறுக்குத்தீனி திங்க மனசு ஏங்காது.
இதை எப்படி நம்புவது?
பாடி பில்டிங் துறையில் பளு தூக்கும் வீரர்களுக்கு அவர்கள் உடல் எடையைக் குறைப்பதற்காகக் கொடுக்கப்படும் உணவு முறை என்ன?
தினமும் முட்டை, இறைச்சி, வெண்ணெய் மட்டுமே.
இப்பொழுது புரிகிறதா.. கொழுப்பு உணவு உடலுக்கு நன்மையே விளைவிக்கிறது என்று..
சுகர் மாத்திரை சாப்பிடுகிறவர்கள் திடீரென சுகரற்ற உணவிற்கு மாறாதீர்கள்.
ஏனென்றால் நீங்கள் சாப்பிடும் மாத்திரையினால் சுகர் இன்னும் கீழிறங்கும்.
முதல் ஒருவாரம் உங்கள் சுகர் அளவைக் கண்காணித்து சுகர் அளவு எவ்வளவு இருக்கிறது என்பதைத் தினமும் கண்காணித்து படிப்படியாக மாத்திரையின் அளவைக் குறைத்து வாருங்கள். பிறகு மாத்திரையே தேவைப்படாது.

இல்லாத நோய்க்கு மருத்துவம் செய்து, உள்ளபடியே நோயை வரவழைத்து


மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.

நீங்கள் ஆரோக்கியமானவர் தான் என்பதை எப்படி உறுதி செய்வது?
ஒருவர் ஆரோக்கியமாக இருக்கின்றாரா?
இல்லையா?
எப்படி தெரிந்து கொள்வது?
"மாஸ்டர் செக்கப்" செய்துகொள்வதுதான், இன்று பரவலாக நம்பப்படும் ஒரு முறை!
பரிசோதனை செய்வது என்பது
"சொந்தக்காசில் சூனியம்" வைத்துக்கொள்வது போன்றது.
நோயில்லாமல் வாழ்க்கை நடத்திக்கொண்டிருப்பவரை,
"நீ நோயாளிதான்" என நம்ப வைத்து மருந்து மாத்திரை விற்கும் நிறுவனங்களுக்கு நிரந்தர வாடிக்கையாளராக்கும்
"தந்திர வியாபார வலை" தான் பரிசோதனை செய்ய பரிந்துரைப்பது.
அல்லது,
"அப்படியிருக்கும், இப்படியிருக்கும்"
என பயமுறுத்தி பரிசோதனை செய்ய தூண்டுவது.
நம்மில் அநேகர் இதில் மாட்டிக்கொண்டு, இல்லாத நோய்க்கு மருத்துவம் செய்து, உள்ளபடியே நோயை வரவழைத்துக் கொண்டவர்கள்தான்.
இதில் மோசமாக பாதிக்கப்படுபவர்கள்
(most affected victims)
நன்கு படித்தவர்கள்(?),
பணம் படைத்தவர்கள்(double income),
புகழடைந்தவர்கள்.
எப்படி?
ஒவ்வொருவரின் உடலும் நாங்கள் சொல்வதுபோல்தான் இயங்கவேண்டும்.
*சர்க்கரை நோய் ரீடிங் 80/140,
*இரத்த அழுத்த நோய் ரீடிங் 80/120,
*சிறுநீரக நோய் ரீடிங் 1.02,
*கொழுப்பு அளவு,
*உப்பு அளவு
பொதுவாக இப்படி தான் இருக்க வேண்டும் என்று, WHO பரிந்துரையின்படி சில அளவுகளை நிர்ணயித்திருக்கிறது நவீன ஆங்கில மருத்துவம்.
இதை நாமும் உண்மை என நம்பி, நோயாளிகளாக மாறிகொண்டிருக்கிறோம்.
இத்தகைய "ரீடிங்குகள்" நவீன விஞ்ஞானத்தின் "நன்கொடைகள்".
Our Body mechanism is beyond சயின்ஸ்.
நம் உடல் இயற்கை விதிகளின்படி இயங்குகிறது.
ஒவ்வொருவரின் உடலியக்கமும் ஒவ்வொருமாதிரி இயங்குகிறது.
உலகில் எந்த இருவரின் உடலியக்கமும் ஒன்றுபோல் இருக்காது
யாருக்கும் கைரேகை ஒன்று போலிருக்காது
உலகின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும்,
வெவ்வேறு தட்ப வெப்ப நிலை ,
வெவ்வேறு உணவு பழக்கம்,
வெவ்வேறு உணவு உண்ணும் முறை,
வெவ்வேறு கலாச்சாரம்,
வெவ்வேறு ஜீன் கட்டமைப்பு இருக்கின்றன!
இது உண்மையானால் ஒவ்வொரு மனிதனின் உடலியக்கமும் தனித்தன்மையுடையதாகத்தானே (unique) இருக்கும்.
அப்படியானால் எந்த இருவரின் உடலியக்கமும் ஒன்றுபோல் இயங்காது.
அப்படியானால், "உலகில் பல மூலைகளிலிருக்கும் எல்லோருக்கும் ஒரே ரீடிங் இருக்கவேண்டும்",
என்று ஆங்கில மருத்துவ உலகம், "அடம் பிடிப்பது" எப்பேற்பட்ட "முட்டாள் தனம்". இதை சரியென்று ஏற்றுக்கொண்டு, அதற்குத் தக்கபடி உடலியக்கத்தை மாற்றுவது எவ்வளவு பெரிய "அறியாமை".
எனவே இந்தபரிந்துரைகளை கட்டவிழ்த்துவிடும்
"Master check-up"
என்பது இந்த நூற்றாண்டின்
"மாபெரும் ஆங்கில மருத்துவத்தின் வணிக மோசடி".
அப்படியானால்,
ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருப்பது, இல்லாதது,
எப்படி தெரிந்துக் கொள்வது?
வரும் முன் காப்பது எப்படி?
இந்நிலை உங்களுக்கு இருக்கிறதா?
என உறுதி செய்துகொள்ளுங்கள்.
1. தரமான பசி.
2. தரமான தாகம்.
3. தரமான தூக்கம்.
"தரம்" என்ன என்ற பதிலில் ஒவ்வொருவாருக்கும் ஒவ்வொரு புரிதல் இருக்கும். எனவே மேற்சொன்ன பசி, தாகம், தூக்கம் இவற்றில் திருப்தியாக இருந்தால், "நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள்" என உறுதி செய்து கொள்ளலாம்.
படித்தில் உணர்ந்தது
சிந்திப்பவர் மட்டுமே.....
அனைத்து (நோய்) துன்பங்களில் இருந்தும், அறியாமையில் இருந்தும்,
விடுதலை பெறுவர் ... !!!

மகனுக்கு உபதேசம்!..

மரியாதைக்குரியவர்களே,
               வணக்கம். தந்தை ஒருவர் தன் மகனுக்கு வாழ்க்கை வழிகாட்டியாக  கூறிய அறிவுரைகள் இதோ தங்களுக்கும் பயன்படும்?

அன்புள்ள மகனுக்கு,
மூன்று காரணங்களுக்காக நான் இதை உனக்கு எழுதுகிறேன்:
1. வாழ்க்கை, அதிர்ஷ்டம்/நல்ல வாய்ப்பு, இடையூறுகள் ஆகிய அனைத்தும் முன் மதிப்பிட்டு அறிய(கணிக்க) முடியாதவை. தாம் எவ்வளவு காலம் வாழ்வோம் என்று எவரும் அறிவதில்லை. சில கருத்துக்களை / அறிவுரைகளை சரியான நேரத்தில்(முன் கூட்டியே) கூறிவிடுவது நல்லது.
2. நான் உன்னுடைய தந்தை. நான் உனக்கு இதனை கூறாவிடில் உனக்கு இதனை யாரும் கூறப் போவதில்லை.
3. நான் உனக்கு எழுதுவது யாதெனின், எனக்கேற்பட்ட சிறு அளவிலான சொந்த அனுபவங்களேயாகும். இது ஒரு வேளை தேவையற்ற அதிகப்படியான இதய வலிகளிலிருந்து உன்னைக் காக்க இயலும். .
கீழ்க் கண்டவற்றை நீ உன் வாழ்க்கை முழுவதும் கவனத்தில் கொள்ள வேண்டும்:
1. உன்னிடத்தில் நல்லவர்களாக நடந்து கொள்ளாதவரிடம் நீ உன் வன்மத்தை / பொல்லாங்கை காட்டாதே. உன் அம்மாவையும் என்னையும் தவிர உன்னை நல்லவிதமாக நடத்தி செல்லும் பொறுப்பு எவருக்குமில்லை. உனக்கு யாராவது நல்லவர்களாக இருப்பின் அது உனக்கு கிடைத்த புதையல் / பொக்கிஷம் போன்றதாகும். அவர்களுக்கு நீ நன்றி உடையவனாக இரு. மேலும் நீ அவர்களிடத்தில் கவனமாக நடந்து கொள்ளுதல் அவசியம். ஏன் எனில், ஒவ்வொருவரின் அணுகுமுறையும் ஏதேனும் ஒரு நோக்கத்துடனேயே இருக்கிறது. உன்னிடத்தில் ஒரு மனிதன் நல்லவனாக நடந்து கொள்கிறான் என்றால், உன்னை அவன் உண்மையாக நேசிக்கிறான் என்று அர்த்தம் இல்லை. நீ விழிப்புடன் இருக்க வேண்டும். அவனை நீ ஆய்ந்தறியாமல், மதிப்பிடாமல் உண்மையான் நண்பன் என்று கொள்ளாதே.
2. இந்த உலகில் இன்றியமையாதது என்று ஒன்று இல்லை. உனக்கு உடமையானது என்று எதுவும் இந்த உலகில் இல்லை. இந்த கூற்றினை நீ புரிந்து கொண்டாய் என்றால், உன்னை சுற்றி மனிதர்கள் சூழ்ந்திருந்தாலும், எவரும் தேவை இல்லை என்றாலும் அல்லது நீ அதிகமாக விரும்பிய ஒன்றையோ/ ஒருவரையோ நீ இழக்க நேர்ந்தாலும் உன் வாழ்க்கையை நீ எளிதில் வழி நடத்திச் செல்ல இயலும்.
3. வாழ்கை என்பது மிகவும் குறுகிய காலத்திற்கு உட்பட்டது. இன்றைய வாழ்க்கையை நீ வீணடித்தாய் என்றால் உன் வாழ்க்கை உன்னைவிட்டு சென்றுவிட்டதை நாளை நீ கண்டுகொள்வாய். வாழ்க்கையின் மதிப்பினை நீ எவ்வளவு விரைவில் உணர்ந்து கொள்கிறாயோ ஓரளவாகிலும் நீ வாழ்வினை அனுபவிப்பாய்.
4. அன்புதான் என்றாலும் அது உறுதியற்ற ஒரு உணர்வே ஆகும். காலத்தை பொருத்தும் ஒருவரின் மனநிலையை பொருத்தும் இந்த உணர்வு மங்கி / குறைந்து விடுகிறது. உன்னை மிகவும் நேசித்தவர் உன்னை விட்டு விலகிச் செல்லும் பொழுது நீ அமைதியாக இரு. காலம் உன் வலிகளையும் கவலைகளையும் துடைத்தழித்துக் கொண்டு போய்விடும். இனிமையான அன்பையும், அழகையும் நீ மிகையாக எண்ணாதே. அன்பில்லாமல் போகின்ற தருணத்தில் ஏற்படும் கவலைகளையும் நீ பெரிதாகக் கொள்ளாதே.
5. வெற்றி பெற்ற நிறைய மனிதர்கள் நல்ல கல்வியறிவு பெற்றவர்கள் இல்லை. நீ சிரமப்பட்டு கல்வி பயிலாவிடினும் வெற்றி பெற இயலும் என்பது இதன் பொருள் இல்லை. என்னென்ன அறிவுத் திறனைப் நீ பெற்றிருக்கின்றாயோ அது வாழ்க்கையில் உனக்கான ஆயுதங்களாகும். ஒரு சிலர் வாழ்க்கையில் உயர்கின்ற தருணத்தில் இன்னல்களை அனுபவிக்கின்றனர். ஒரு சிலர் துவக்கத்திலேயே இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது.
6. என்னுடைய வயதான காலத்தில், உன்னுடைய வருமானத்தை சார்ந்து வாழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்கில்லை. அதே போன்று உன்னுடைய வாழ்க்கை முழுதும் நான் உனக்கு நிதி ஆதாரங்களை அளிக்க இயலாது. உன்னை வளர்த்து ஆளாக்கும் வரையில் தான் என்னுடைய ஆதரவும் பொறுப்பும்; நீ வளர்ந்து விட்ட பிறகு இந்த பொறுப்பு முடிவடைந்து விடுகிறது. அதன் பிறகு நீ தான் முடிவு செய்ய வேண்டும். நீ பயணிக்கப் போவது பொது போக்குவரத்திலா அல்லது உன் சொந்த வாகனத்திலா / இரதத்திலா; வசதி படைத்தவனாக அல்லது ஏழையாக.
7. நீ கூறும் வார்த்தைகளுக்கு நீ மதிப்பளிக்க வேண்டும். ஆனால் பிறர் அவ்வாறு இருத்தல் வேண்டும் என்று நீ எதிர்பார்க்கக் கூடாது. நீ அனைவருக்கும் நல்லவனாக இரு. ஆனால் உனக்கு அனைவரும் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பாராதே. நீ இதனை புரிந்து கொள்ளாமல் போனால் உன் வாழ்க்கை தேவையற்ற பிரச்சினைகளில் உழல வேண்டி இருக்கும்.
8. நான் பல வருடங்களாக பரிசு சீட்டுகளை வாங்கி இருக்கிறேன். ஆனால் எந்த பரிசும் எனக்கு அடித்ததில்லை / கிடைக்கவில்லை. நீ வசதி படைத்தவனாக வேண்டுமென்றால் நீ கடினமாக உழைக்க வேண்டும் என்பதையே இது காட்டுகிறது! இலவசமாக உணவு கிடைக்காது!
9. நான் உன்னுடன் எவ்வளவு அதிகப்படியான நேரம் இருக்கிறேன் என்பது ஒரு பொருட்டல்ல. நாம் ஒன்றாக இணைந்திருக்கும் அந்த நேரத்தை பெரும் பாக்கியமாகக் (பொக்கிஷம்) கருதுவோம். நமக்கு தெரியாது நாம் மறுபடியும் நம்முடைய அடுத்த பிறவியில் சந்திப்போம் என்று.
அன்புடன் ,
உன் அப்பா.
***********************************************************************





இக்கடிதம் புகழ் பெற்ற ஹாங்காங் தொலைக் காட்சி ஒளிபரப்பாளர் / குழந்தை உளவியல் நிபுணரால் அவருடைய மகனுக்கு எழுதப்பட்டது. இக் கடிதத்தில் உள்ள வார்த்தைகள் / கருத்துக்கள் உண்மையிலேயே நம் அனைவருக்கும் பயனளிப்பதாகும். இளமையானவர்கள், முதியவர்கள், குழந்தைகள் அல்லது பெற்றோர்கள் அனைவருக்கும் இது பயனளிக்கும். அனைத்து பெற்றோர்களும் தங்களுடைய குழந்தைகளுக்கு இதனை படிப்பினையாக கற்பிக்கலாம்.

29 மே 2017

கலைஞர் மு.கருணாநிதி-பாரத ரத்தினம்!

மரியாதைக்குரியவர்களே,
              வணக்கம்.  முகநூல் நண்பர் திரு.அபிஅப்பா என்கிற தொல்காப்பியன் அவர்களின் கட்டுரை தங்களது கவனத்திற்காக...
பொதுவாக இந்திய ஜனாதிபதி தான் (அஃப்கோர்ஸ் மத்திய அமைச்சரவை முடிவு செய்தாலும்) "பாரத்ரத்னா" விருதுக்கு உரியவரை தேர்ந்தெடுக்கும் கையெழுத்து போட வேண்டிய ஆசாமி. ஆனால் அந்த ஆசாமியையே பல முறை தேர்ந்தெடுத்தவர் அகில இந்திய அளவில் தன் ஆளுமையால் தேர்ந்தெடுத்தவர் கலைஞர் அவர்கள் தான். அதே போல "பாரத்ரத்னா" விருதுக்கு ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்யும் முக்கிய பதவியான "பிரதமர்" அவர்களையே பல முறை தேர்ந்தெடுத்த ஆளுமை கொண்டிருந்தவர் கலைஞர் அவர்கள். உடனே சில தோழர்கள் ..மாற்றுக்கட்சி தோழர்கள் "வாயாலயே வடை சுட வேண்டாம். கலைஞர் எப்போது ஜனாதிபதியை தேர்ந்தெடுத்தார் " என மனம் போன போக்கில் எழுதலாம். இதோ கலைஞர் அவர்களின் ஆளுமையை பாருங்கள். இந்தியாவின் 8 பிரதமர்கள், 7 குடியரசு தலைவர்களை உருவாக்கிய தலைவர் கலைஞர் அவர்களின் ஆளுமையை "திரும்பிப்பார்" என்னும் தலைபில் என் வலைப்பூவில் செப்டம்பர் 13, 2011ல் எழுதிய கட்டுரையில் இருந்து சில வரிகளை எடுத்து இங்கே தருகின்றேன். படியுங்கள் தோழர்களே!
\\ 1957ல் கலைஞர் உட்பட 15 பேர் சட்டமன்றத்தில் காலடி எடுத்து வைத்தாகிவிட்டது. குடியரசு தலைவர் தேர்தல் வருகின்றது. எப்போதும் போல வடநாட்டவர் போட்டி. வடக்கு வாழ்கின்றது. தெற்கு தெய்கின்றது என்கிற மனக்கிலேசம் தென்னகத்தில் பரவலாக இருந்த நேரம் அது. அண்ணாவின் தலைமையில் கூடிய சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் ஜனாதிபதி தேர்தலில் ஓட்டு போடுவதில்லை என முடிவெடுக்கின்றது. ஆனால் அப்போதைய மத்திய அரசுக்கு பிராந்திய கட்சிகளின் ஆதரவு ஒரு பொருட்டல்ல. அவர்களை மதிப்பதும் இல்லை. ஆனால் பிற்காலம் எப்படி ஆகும் என்று அவர்களுக்கு அப்போது கணிக்க தெரியவில்லை, கணிக்க வேண்டிய அவசியமும் நேருவுக்கு நேரவில்லை அப்போது.
ஆனால் எழுபதுகளின் ஆரம்பத்தில் குடியரசு தலைவராக இருந்த ஜாகீருசேன் மறைவையொட்டி நடக்க இருந்த குடியரசு தேர்தலில் திமுகவும் , கலைஞரும் அந்த தேர்தலில் குடியரசு தலைவரை தேர்ந்தெடுக்க முக்கிய ஆளுமையாக இருந்தனர் என்பதை தான் சொல்ல வருகின்றேன்.
மத்தியில் ஆளும் கட்சி காங்கிரஸ் கட்சி. அவர்கள் கை காட்டும் வேட்பாளர் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருந்தது. ஆனால் வழக்கம் போல அவர்களுக்குள் சண்டை. பாபுஜெகஜீவன்ராம் அதாவது இப்போதைய நாடாளுமன்ற சபாநாயகர் மீராகுமாரின் தந்தையார் தலித் இனத்தை சேர்ந்தவர் குடியரசு தலைவராக வேண்டும் என்பது இந்திராகாந்தியின் சாய்ஸ். ஆனால் காங்கிரஸ் தலைவர் நிஜலிங்கப்பா தன் தென்னிந்தியாவை சேர்ந்த நீலம் சஞ்சீவரெட்டியை ஜனாதிபதியாக ஆக்க வேண்டும் என பிடிவாதம்.
பிரச்சனை என்று வந்தாகிவிட்டது. கட்சிக்குள் ஓட்டெடுப்பு நடத்தி யார் வேட்பாளர் என முடிவு செய்யலாம் என காங்கிரசின் ஆட்சிமன்ற கூட்டம் நடந்து ஓட்டெடுப்பும் நடந்து நிஜலிங்கப்பாவின் ஆதரவு பெற்ற நீலம்சஞ்சீவரெட்டி தேர்வானார். அது வரை எல்லாம் நல்லா தான் போய்கொண்டு இருந்தது. கலைஞர் ஜனாதிபதியை தேர்ந்தெடுத்த ஆளுமை தெரியாதவர்களே! நன்றாக கேளுங்கள், அந்த நேரத்தில் தான் கலைஞர் மூக்கை நுழைக்கிறார். தென்னிந்தியாவை சேர்ந்த ஒருவர் நீலம் சஞ்சீவரெட்டி ஜனாதிபதி ஆவது ஒரு சந்தோஷம் தான். ஆனாலும் அதிலும் குறிப்பாக தமிழும் தெரிந்த ஒருவர் ஜனாதிபதி ஆனால் என்ன என்கிற ஆர்வம் கலைஞரை ஒரு பிராந்தியகட்சியின் தலைவர், பிராந்திய கட்சியை சேர்ந்த முதல்வர் அங்கே இந்தியா சுதந்திரம் அடைந்து 25 ஆண்டு ஆன பின்னே ஒரு பிராந்திய கட்சி ,மாநில கட்சி முதன் முதலாக ஜனாதிபதி தேர்வில் தன் ஆளுமையை செலுத்த தொடங்கியது. யார் ? கலைஞர்!
அப்போது துணை ஜனாதிபதி மற்றும் ஆக்டிங் ஜனாதிபதியாக இருந்த வி.வி.கிரி தான் போட்டியிட போவதாக அறிவிக்கிறார். ஒரு மனதாக தேர்ந்தெடுக்க வேண்டிய பதவி இப்போது தேர்தல் என்னும் நிலைக்கு தள்ளப்பட்டது. எதிர்கட்சிகள் ஒன்று கூடின. பலரும் பல கருத்துகளை சொல்ல கலைஞர் ஜெயப்ரகாஷ்நாராயணன் நிற்கட்டும் என்கிறார். இப்படியாக எல்லோரும் கூடிக்கூடி பேசுவது காங்கிரஸ் வேட்பாளர் நீலம் சஞ்சீவரெட்டிக்கு சாதகமாக அமையகூடிய சூழல். காலம் கடந்து போய் கொண்டிருந்த நேரத்தில் திடீரென கலைஞர் ஒரு அறிவிப்பு செய்கின்றார். திராவிட முன்னேற்ற கழகம் ஜனாதிபதி தேர்தலில் வி. வி. கிரி அவர்களை ஆதரிக்கும் என்று.
ஆக தேர்தலில் மந்திய ஆளும் கட்சி சார்பில் நீலம் சஞ்சீவரெட்டியும் எதிர்கட்சிகள் சார்பாக வி.வி. கிரியும் வேட்பாளர்கள். அப்போதைய பாஷையில் சொல்லப்போனா அபேட்ஷகர்கள். இந்திரா ஒரு அறிவிப்பு செய்தார் புத்திசாலித்தனமாக. கொறடா உத்தரவு போட மாட்டார். தங்களுக்கு இஷ்டமானவர்களுக்கு ஓட்டு போடலாம் என தன் கட்சிகாரர்களுக்கு உத்தரவு போடப்படுகின்றது. தேர்தல் முடிந்தது. வி.வி.கிரி வெற்றி பெற்று குடியரசுதலைவர் ஆகின்றார். தமிழ் தெரிந்த ஒருவர் ஆகின்றார். முதல் நன்றியே கலைஞருக்கு தான் சொல்கின்றார்.
ஆக அந்த குடியரசு தலைவர் தேர்தலில் கலைஞரின் ஆளுமை இருந்ததா இல்லியா? முதன் முதலாக மாநிலகட்சி ஒரு குடியரசு தலைவர் தேர்தலில் மூக்கை நுழைக்க வைத்தவர் கலைஞரா இல்லியா? ஆளும் மத்திய அரசின் வேட்பாளரை தோற்கடித்து எதிர்கட்சி வேட்பாளர் வி வி கிரி அவர்களை ஜனாதிபதி நாற்காலியில் அமரவைத்தவர் கலைஞரா இல்லியா?
அதன் பின்னர் நீலம் சஞ்சீவரெட்டி ஜனாதிபதியாக ஆனார். அதற்கு அவருக்கு கலைஞரின் உதவி தேவைப்பட்டது. கலைஞருக்கு கடிதம் எழுதினார். ஆதரவு கொடுக்கப்பட்டது. பின்னர் அவருக்கு பதவி காலம் முடிவடையும் போது அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை வந்த போது இந்திராவின் அழைப்பினை ஏற்று டெல்லி சென்றார் கலைஞர். அப்போது இந்திராவின் மனதில் இருந்த இருவர் ஆர். வெங்கட்ராமன் மற்றும் நரசிம்மராவ். நரசிம்மராவ் வேண்டாம் என கலைஞர் மறுத்த காரணம், ஏற்கனவே பதவில் இருந்து வருபவர் ஆந்திராவை சேர்ந்தவர், மீண்டும் ஆந்திராவை சேர்ந்தவர் வந்தால் வடநாட்டவர்களின் ஒட்டு மொத்த வெறுப்பும் தேவையில்லாமல் தாங்க வேண்டும், அதே போல ஆர்.வெங்கட்ராமன் வருவதிலும் கலைஞருக்கு ஒரு சதவிகிதம் கூட ஆர்வம் இருக்காது. அதற்கான காரணம் 1980 சட்டசபை தேர்தலில் திமுகவின் தோல்விக்கு ஆர்.வெங்கட்ராமைன் பொறுப்பற்ற பேச்சுகள் என்று மனதில் நினைப்பு. ஆனால் அதை காரணமாக இந்திராவிடம் சொல்லாமல் பிரதமராகிய நீங்களும் உயர்சாதி, ஆர்.வெங்கட்ராமனும் உயர்சாதியாக இருப்பதால் மக்களிடம் ஒரு வித இறுக்கம் தென்படும் , எனவே பொற்கொல்லர் வகுப்பை சேர்ந்த கியானிஜெயில்சிங் ஒரு சிறுபான்மை மதத்தையும் சேர்ந்திருப்பதால் அவரையே குடியரசு தலைவர் ஆக்கலாம் என சொல்லி அதற்கு திமுக, அதிமுக என ஆதரவும் கொடுத்து ஜனாதிபதியாக்கினார். பின்னர் ஆர்.வெங்கட்ராமன் ஜனாதிபதி ஆன பின்னே இந்தியாவுக்கு பிடித்த பீடையாக பல கெட்டகாரியங்கள் நடந்தன என்பதும் வரலாறு. கலைஞர் முன்பு ஆர்.வெங்கட்ராமனை ஜனாதிபதியாக ஆக்காமைக்காக தன் நன்றிக்கடனை கூட ஒரு ஹிண்டுவில் வந்த வாசகர் கடிதத்தை வைத்தே திமுக ஆட்சியை கலைத்து தன் மனக்காயத்துக்கு மருந்து போட்டுக்கொண்டார் என்பதும் வரலாறு.
ஆக கலைஞரின் ஆளுமைகள் இந்திய அரசியலில் இருந்ததா இல்லையா என்பதை சும்மா சிரித்து வைப்போமே என சிரித்து வைப்பவர்களை விட சரித்திரம் அறிந்து கொள்ள ஆர்வமாய் இருப்பவர்களுக்காக எழுதி வைத்தோம் என்னும் மனதிருப்தியுடன் எழுதுகிறேன். \\
இது தான் கலைஞர் அவர்கள் ஜனாதிபதிகளை உருவாக்கிய வரலாறு. வி பி சிங் முதல், ஐ கே குஜ்ரால், தேவகவுடா என இவர் பிரதமர் ஆக்கிய வரலாறுகளும் உண்டு.
சமகால தோழர் பேராசிரியருடன் தலைவர் கலைஞர்
அரசியல் ஆளுமைகள் மட்டுமா கலைஞரிடம் இருந்தது. கலைத்துறை என எடுத்துக்கொண்டால் நாடகம், சினிமா, கதை, கவிதை, கட்டுரை, கவிதைகள், உரைவீச்சுகள், மேடைப்பேச்சுகள் என பட்டியல் போட்டு மாளாது.
அரசியல் பதவிகள் எனில் தமிழக சட்டமன்ற உறுப்பினர் 1957 – 1962
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் 1962 – 1967
பொதுப்பணித்துறை அமைச்சர் தமிழ்நாடு அரசு 1967 – 1969
தமிழக முதலமைச்சர் 1969 – 1971
இரண்டாவது முறையாகத் தமிழக முதலமைச்சர் 1971 – 1976
தமிழக சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் 1977 – 1983
தமிழக சட்ட மேலவை உறுப்பினர், எதிர்க்கட்சித் தலைவர் 1984 – 1986
மூன்றhம் முறையாகத் தமிழக முதலமைச்சர் 1989 – 1991
நான்காம் முறையாகத் தமிழக முதலமைச்சர் 1996 – 2001
ஐந்தாம் முறையாகத் தமிழக முதலமைச்சர் 2006 - 2011
அதன் பின்னர் இப்போது திருவாரூர் சட்டமன்ற உறுப்பினராக தொடர்கிறார் தன் 92 வது வயதிலும்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் கலைஞரின் பங்கு என்பது கீழ்க்கண்ட தொகுதிகளில் இருந்து .......
குளித்தலை 1957-62
தஞ்சாவூர் 1962-67
சைதாப்பேட்டை 1967-71
அண்ணாநகர் 1977-76
அண்ணாநகர் 1977-80
அண்ணாநகர் 1980-83
சட்ட மேலவை உறுப்பினர் 1984-1986
துறைமுகம் 1989-91
துறைமுகம் 1991
சேப்பாக்கம் 1996-2001
சேப்பாக்கம் 2001-2006
சேப்பாக்கம் 2006 லிருந்து
திருவாரூர் 2011லிருந்து இப்போது தன் 92 வது வயது நடக்கும் போதும் தொடர்கின்றார்.
(திருவாரூர் 2016லிருந்து இப்போது தன் 94 வது வயது நடக்கும் போதும் தொடர்கின்றார்)
இதோ இந்த வயதிலும் போராட்டம் எனில் முதல் ஆளாக தன் சக்கர நாற்காலியில் சென்றும் கலந்து கொள்கின்றார்.
தலைவர் கலைஞர் அவர்கள் சிறைக்கு அதாவது மக்கள் போராட்டங்களுக்காக ...கவனிக்கவும் சிலரைப்போல ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக இல்லை.... இல்லவே இல்லை... சமூக போராட்டங்களுக்காக 500 நாட்களுக்கு மேலாக சிறை சென்றுள்ளார். இப்போது அகில இந்திய அளவில் வாழ்ந்து கொண்டு இருக்கும் அரசியல் தலைவர்களில் எத்தனை பேர் இப்படி 500 நாட்களுக்கு மேலாக சிறையில் இருந்துள்ளனர் என "பக்கத்து இலைக்கு பாயசம் கேட்கின்றார் கலைஞர்" என ஏளனம் பேசுவோர் விரல் விட்டு சொல்லட்டும் பார்க்கிறேன்! இது சவால்! எத்தனை அரசியல்வாதிகள், எத்தனை சமூக சிந்தனாவாதிகள் இவரைப்போல 500 நாட்களுக்கு மேலாக சிறையில் இருந்துள்ளனர்... சொல்லட்டும் பார்க்கலாம்.
கோடிக்கணக்கான ரசிகர்கள்
70 ,00,000 கிலோமீட்டருக்கும் அதிகமான பயணங்கள்
80,000 மணிநேரத்துக்கும் அதிகமான உரைவீச்சுக்கள்
1000 த்துக்கும் மேற்பட்ட உடன்பிறப்பு கடிதங்கள்
1000 த்துக்கும் மேற்பட்ட எழுத்தோவியங்கள்
500 நாட்களுக்கும் அதிகமான சிறைவாசம்
75 திரைப்படங்கள்
72 ஆண்டுகால பொது வாழ்க்கை
70 ஆண்டுகாலமாக பத்திரிகையாளர்
65 ஆண்டுகால கலைத்துறை பங்களிப்பு
60 ஆண்டுகால வரலாற்றில் தொடர்ச்சியான தேர்தல் வெற்றி
50 ஆண்டுகாலமாக சட்டசபை பணிகள்
18 ஆண்டுகாலம் தமிழக முதல்வர்
இந்தியாவின் 8 பிரதமர்கள் 7 குடியரசு தலைவர்களை உருவாக்கியதில் அரசியல் ஆளுமை
3 தமிழின் நாயகன்
என்றும் தமிழினத்தின் தலைவர்
ஒரே கலைஞர் ... இவருக்கு "பாரத்ரத்னா" கொடுக்காமல் வேறு யாருக்கு கொடுப்பது? இதோ "ராஜபக்ஷெ"வுக்கு "பாரத் ரத்னா"கொடுக்க வேண்டும் என கொக்கரிக்கும் சுப்ரமணிய சுவாமிகளின் பேச்சுகளுக்கு கண்டனம் கூட தெரிவிக்காத சிலர் கலைஞருக்கு "பாரத்ரத்னா" கொடுப்பதை கேலி பேசுவது வெட்கக்கேடான விஷயம்.
தலைவர் கலைஞர் அவர்கள் ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்த போது ஆற்றிய பணிகள், சமூக பணிகள் பற்றிய பெரிய கட்டுரை கூட எழுதினேன். அதை எல்லாம் இங்கே இந்த பதிவில் சொன்னால் படிப்பவர்களுக்கு அயற்சியாகவும், கலைஞருக்கு பாரத்ரத்னா கொடுக்க வேண்டும் என சொன்னதை கேலி பேசியவர்களுக்கு அதிர்ச்சியாகவும் இருக்கும்.
கலைஞருக்கு "பாரத்ரத்னா" கொடுக்க அவரது அரசியல், கலை, இலக்கிய, சினிமா, எழுத்து, மேடைப்பேச்சு என எத்தனையோ துறைகள் இருப்பினும் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்னும் மாபெரும் புரட்சியை தமிழகத்தில் செய்து பசியில்லா பெருவாழ்வை தமிழகமக்களுக்கு கொடுத்த சமூக புரட்சி ஒன்றுக்காகவே அவருக்கு "பாரத்ரத்னா" கொடுக்கலாம். உடனே நீங்கள் கேட்கலாம்... "இப்போது விலையில்லா அரிசி கொடுக்கப்படுகின்றதே" என்று. இல்லை... அதை அப்படி எடுத்துக்கொள்ளக்கூடாது. "விலையில்லா அரிசி "என்பது மக்கள் அரிசி வாங்கக்கூட நாதியற்றவர்கள் என்பதாக உலகுக்கு உணர்த்தும். ஒருவன் தான் சாப்பிடும் உணவை தான் காசு கொடுத்து வாங்க வேண்டும் என்கிற சுயமரியாதையை தகர்க்கும் விஷயம் அந்த "விலையில்லா அரிசி" என்பது. குறைந்த பட்சம் ஒரு கிலோ ஒரு ரூபாய் என்பது தான் காசு கொடுத்து வாங்கி உணவு உண்ணும் திருப்தியும் சுயமரியாதையும் உண்டாகும் அந்த பயனாளிக்கு. ஆகவே ஒரு ரூபாய் ஒரு கிலோ அரிசி என்னும் அந்த சமூகப்புரட்சி என்கிற ஒரு காரணம் போதும் கலைஞருக்கு "பாரத்ரத்னா" விருது கொடுக்க!
கலைஞருக்கு "பாரத்ரத்னா" இன்னும் கொடுக்கப்படவில்லை எனில் அசிங்கம் கலைஞருக்கு இல்லை. இந்த தேசத்துக்கு தான் அசிங்கம். அந்த அசிங்கம் துடைக்கப்பட வேண்டும் எனில் அடுத்த வருடமாவது கலைஞருக்கு "பாரத்ரத்னா" வழங்கப்பட வேண்டும். இது ஒரு திமுக தொண்டனின் குமுறல் இல்லை. ஒட்டு மொத்த திராவிட இனத்தின் குரல். அதே போல மிகப்பெரிய சமூக மாற்றத்தை இந்தியாவில் விதைத்து விட்டு சென்ற தந்தை பெரியார் அவர்களுக்கும், திராவிட இனத்தை ஆட்சிக்கட்டிலில் அமர வைத்து அழகுபார்த்த "அறிஞர் அண்ணா" அவர்களுக்கும் ஆக தமிழகத்தின் விடிவெள்ளிகள் "தந்தை பெரியார்", "அறிஞர் அண்ணா" , "கலைஞர்" ஆகியோர்களுக்கும் இந்த மும்மூர்த்திகளுக்கும் ஒரே நேரத்தில் அடுத்த வருடமே "பாரத்ரத்னா" விருது வழங்கி இந்திய அரசு தன்னைத்தானே பெருமைப்படுத்திக்கொள்ள வேண்டும்!
மீண்டும் சொல்கிறேன்... இது ஒரு அபிஅப்பா என்கிற தொல்காப்பியன் என்னும் சாதாரன திமுக தொண்டனின் குமுறல் இல்லை. ஒட்டு மொத்த திராவிட இனக்குரலின் எதிரொலி.....
 நன்றி; http://abiappa.blogspot.com/2014/12/blog-post_27.html

23 மே 2017

நெற்பானையும் எலியும்

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களது குழந்தைப்பாடல்கள் மிகவும் எளிமையானவை,இனிமையானவை.கொளப்பலூர் புனித மரியன்னை நடுநிலைப்பள்ளியில் நான் தொடக்கக்கல்வி பயின்றபோது கி.பி.1971ல் இரண்டாம் வகுப்பு தமிழ்ப் புத்தகத்தில்  படித்து இன்புற்ற பாடல்! 

பாட்டியின் வீட்டுப் பழம்பானை - அந்தப்
பானை ஒருபுறம் ஓட்டையடா!
ஓட்டை வழியொரு சுண்டெலியும் - அதன்
உள்ளே புகுந்து நெல் தின்றதடா!




உள்ளே புகுந்து நெல் தின்று தின்று - வயிறு
 ஊதிப் புடைத்துப் பருத்ததடா!
மெல்ல வெளியில் வருவதற்கும் - ஓட்டை
 மெத்தச் சிறிதாகிப் போச்சுதடா!

பானையைக் காலை திறந்தவுடன்-அந்தப்
 பாட்டியின் பக்கமாய் வந்த ஒரு
பூனை எலியினைக் கண்டதடா!-ஓடிப்
போய் அதைக் கவ்வியே சென்றதடா!

 கள்ளவழியில் செல்பவரை - எமன்
காலடி பற்றித் தொடர்வானடா!
உள்ளபடியே நடப்பவர்க்குத் - தெய்வம்
உற்ற துணையாக நிற்குமடா!














எம்மதமும் சம்மதமே!


மரியாதைக்குரியவர்களே,
                வணக்கம்.நாமக்கல் வெ.இராமலிங்கம் பிள்ளை அவர்களின் ''எம்மதமும் சம்மதம்'' என்ற தலைப்பிலான மத ஒற்றுமைக் கவிதை  தங்களுக்காக.........


 எம்மதமாயினும் சம்மதம்

கோபமும் கொதிப்பும் குமுறிடும் படிபல
       கொடுமைகள் நடக்குது வடநாட்டில்
தாபமும் தவிப்பும் தந்திடும் ஆயினும்
       தமிழா! உன்குணம் தவறிடுமோ?       1

அன்னிய மதமென அடிக்கடி பழகிய
       அயலுள மக்களைக் கொல்லுவதை
என்னென உரைப்பது ஏதென வெறுப்பது
       எண்ணவுங் கூடத் தகுமோதான்?       2

வேறொரு மதமென அண்டையில் வசிப்பவர்
       வீட்டினைக் கொளுத்துதல் வீரமதோ?
ஆறறி வுடையவர் மனிதர்கள் என்றிடும்
       அழகிது தானோ? ஐயையோ!       3

பிறிதொரு மதமெனப் பெண்மையைக் கெடுப்பதும்
       பிள்ளையை மடிப்பதும் பேய்செய்யுமோ?
வெறிதரும் நெறிகளை விலக்கிய உன்குணம்
       விட்டிடப் படுமோ? தமிழ் மகனே!       4

அங்குள வெறியர்கள் அப்படிச் செய்ததில்
       அவசரப் படுத்திடும் ஆத்திரத்தால்
இங்குள சிலர்எதிர் செய்ய நினைப்பதை
       எப்படித் தமிழ்மனம் ஒப்பிடுமோ?       5

தீமையைத் தீமையால் தீர்க்க நினைப்பது
       தீயினைத் தீயால் அவிப்பதுபோல்
வாய்மையின் தூய்மையின் வழிவரும் தமிழா!
       வஞ்சம் தீர்ப்பதை வரிப்பாயோ?       6

அடைக்கலம் புகுந்தன அன்னிய மதம்பல
       அன்புள்ள நம்தமிழ்த் திருநாட்டில்
கொடைக்குணம் மிகுந்தநம் குலத்தவர் காத்தனர்
       கொள்கையை நாம்விடக் கூடாது.       7

வேற்றுமை பலவிலும்  ஒற்றுமை கண்டிடும்
வித்தையிற் சிறந்தது தமிழ்நாடு
மாற்றொரு மதத்தையும் போற்றிடும் பெருங்குணம்
 மதமெனக் கொண்டவர் தமிழர்களே . 8

எம்மதம் ஆயினும் சம்மதம்  என்பதை
ஏந்தி நடப்பது தமிழ்நாடு
அம் மன உணர்ச்சியை அறமெனக் காப்பதில்
அசைந்திடலாமோ தமிழறிவு?9

மதமெனும் பெயரால் மக்களை வதைப்பதை
மாநிலம் இன்னமும்  சகித்திடுமோ?
விதவிதம் பொய் சொல்லி வெறுப்பினை வளர்த்திடும்
வெறியரைத் தமிழர்கள் முறியடிப்போம்.10


தீண்டாமை ஓட்டடா!

 மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை அவர்களின் தீண்டாமை ஒழிப்புக் கவிதை..சிந்திக்க படியுங்க!

                          தீண்டாமை என்ற தீமையை  ஓட்டடா!

ஓட்டடா! ஓட்டடா!


நாட்டைவிட்டே ஓட்டடா!
தீட்டடா மனிதருக்குள்
தீண்டாலென்ற தீமையே.

தொத்து நோய்கள் மெத்தவும்
தொடர்ந்து விட்ட பேரையும்
தொட்டுக் கிட்டிச் சொஸ்தமாக்கல்
தர்ம மென்று சொல்லுவார்.
சுத்த மேனும் ஜாதியால்
தொடப்ப படாதிங் கென்றிடில்
தொத்து நோயைக் காட்டிலும்
கொடிய ரென்று சொல்வதோ?

நாய்கு ரங்கு பூனையை
நத்தி முத்த மிடுகிறோம் ;
நரக லுண்ணும் பன்றியும்
நம்மைத் தீண்ட ஒப்புவோம் ;
ஆயும் நல்ல அறிவுடை
ஆன்ம ஞான மனிதனை
அருகி லேவ ரப்பொறாமை
அறிவி லேபொ ருந்துமோ?

செடிம ரங்கள் கொடிகளும்
ஜீவ ரென்ற உண்மையை
ஜெகம றிந்து கொள்ளமுன்பு
செய்த திந்த நாடடா!
முடிவ றிந்த உண்மைஞானம்
முற்றி நின்ற நாட்டிலே
மூடரும் சிரிக்கு மிந்த
முறையி லாவ ழக்கமேன்?

உயிரி ருக்கும் புழுவையும்
ஈச னுக்காம் உறையுளாய்
உணரு கின்ற உண்மைஞானம்
உலகி னுக்கு ரைத்தநாம்
உயருகின்ற ஜீவருக்குள்
நம்மொ டொத்த மனிதனை
ஒத்திப் போகச் சொல்லுகின்ற
தொத்துக் கொள்ள லாகுமோ?

அமல னாகி அங்குமிங்கும்
எங்கு மான கடவுளை
ஆல யத்துள் தெய்வமென்றே
அங்கி ருந்தே எண்ணுவோம் ;
விமல னான கடவுள்சக்தி
மனிதன் கிட்டி விலகினால்
வேறு ஜீவன் யாவும்அந்த
விமல னென்ப தெப்படி?

ஞாய மல்ல ஞாயமல்ல
ஞாய மல்ல கொஞ்சமும்
நாடு கின்ற பேர்களை
நாமி டைத்த டுப்பது ;
பாயு மந்த ஆற்றிலே
பருகி வெப்பம் ஆறிடும்
பறவை யோடு மிருகமிந்தப்
பாரி லார்த டுக்கிறார்?

இடந்தடுமாற்றம்

 மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.நாமக்கல் கவிஞரின் கவிதைகள் மிகவும் எளிமையாக கருத்து நயமிக்கதாக உள்ளன கண்டு பேருவகை அடைந்தேன்.விரும்பாத தொழிலை விதியால் செய்து வரும் நமது மக்களின் நிலை பற்றி ''இடந் தடுமாற்றம்'' என்ற தலைப்பில் நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை அவர்கள் எழுதிய கவிதை இதோ....
அறிவுக் கேற்ற அலுவல் கிடைப்பதோ
படிப்புக் குகந்த காரியம் பார்ப்பதோ
விரும்பிய படிக்கொரு வேலையில் சேர்வதோ
தகுதியைப் பற்றிய தன்மை யுள்ளதாய்
உத்தியோகம் அடைவதோ ஊதியம் பெறுவதோ
இந்திய நாட்டில் இப்போ தில்லை.
இலக்கிய ஞானம் இணையிலா ஒருவன்
கல்வியே வேண்டாக் காரியம் செய்வதும்
கணித சாத்திரம் கைதேர்ந்த ஒருவன்
எண்ணிக்கை வேண்டா வேலையில் இருப்பதும்,
ரஸாய னத்தில் ரஸனை மிகுந்தவன்
கச்சேரி மேசையில் கவிழ்ந்து கிடப்பதும்
சங்கீத வித்தையில் சமனிலாக் கலைஞன்
தபால் ஆபீஸ் தந்திய டிப்பதும்,
சித்திரக் கலையில் கைத்திறம் சிறந்து
பத்திரம், 'ரிஜிஸ்டர்' பதிவு செய்வதும்,
சத்தியம் தவறா உத்தம குணவான்
வக்கீல் தொழிலில் வருத்தப் படுவதும்,
கொல்லா விரதமே கொண்டுள ஒருவன்
பட்டாள வீரனாய்ப் பதிந்து கொள்வதும்,
விஞ்ஞா னங்களில் விருப்புள இளைஞன்
'டிக்கட் கலெக்டராய்'த் திண்டாட நேர்வதும்,
புத்தகம் படிப்பதில் பித்துள்ள புலவன்
'புக்கிங் கிளார்க்காய்'ப் புழுங்கு கின்றதும்,
உருட்டி மருட்டத் தெரியா ஒருவன்
போலீஸ் காரனாய்ப் பொழுதுபோக் குவதும்,
திட்டிப் பேசவும் தெரியா நல்லவன்
அமீனா வேலையில் அடிபட்டு வருவதும்,
கள்ளுச் சாராயம் கடிந்திடும் கருத்தன்
கலால் வேலையில் 'டிகிரி' கணிப்பதும்,
மாமிச உணவை மறுக்கும் மனத்தன்
ஆட்டுக் கறிவையும் மாட்டுக் கறியையும்,
சுத்தம் பார்த்தலில் முத்திரை குத்தலும்,
இப்படிப் பற்பலர் இடந்தடு மாறுவர்.

மது குடிப்பதைத் தடுப்போம்

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். குடிப்பதை தடுப்போம் என்ற தலைப்பில் நாமக்கல்.வெ.இராமலிங்கம் பிள்ளை அவர்கள் எழுதிய கவிதை இதோ தங்களுக்காக..
   

குடிப்பதைத் தடுப்பதே



கோடிகோடி புண்ணியம்
அடிப்பினும் பொறுத்துநாம்
அன்புகொண்டு வெல்லுவோம்! . .(குடி)

மக்களை வதைத்திடும்
மனைவியை உதைத்திடும்
துக்கமான கள்ளினைத்
தொலைப்பதே துரைத்தனம். . .(குடி)

பித்தராகி ஏழைகள்
பேய்பிடித்த கோலமாய்ப்
புத்திகெட்டுச் சக்தியற்றுப்
போனதிந்தக் கள்ளினால். . .(குடி)

பாடுபட்ட கூலியைப்
பறிக்குமிந்தக் கள்ளினை
வீடுவீட்டு நாடுவிட்டு
வெளியிலே விரட்டுவோம்! . .(குடி)

கஞ்சியின்றி மனைவிமக்கள்
காத்திருக்க வீட்டிலே
வஞ்சமாகக் கூலிமுற்றும்
வழிபறிக்கும் கள்ளினை . . .(குடி)

மெய்தளர்ந்து மேனிகெட்டுப்
போனதிந்தக் கள்ளினால் ;
கைநடுக்கங் கால்நடுக்கங்
கண்டதிந்தக் கள்ளினால். . .(குடி)

தேசமெங்கும் தீமைகள்
மலிந்ததிந்தக் கள்ளினால் ;
நாசமுற்று நாட்டினார்
நலிந்ததிந்தக் கள்ளினால். . .(குடி)

குற்றமற்ற பேர்களும்
கொலைஞராவர் கள்ளினால் ;
கத்திகுத்துச் சண்டைவேண
கள்ளினால் விளைந்தவே. . .(குடி)

குற்றமென்று யாருமே
கூறுமிந்தக் கள்ளினை
விற்கவிட்டுத் தீமையை
விதைப்பதென்ன விந்தயே! . .(குடி)
==========================================================
(2)போதையைத் தந்தபின் நீதியை ஓதுதல்
புத்தி யுடைஓர் அரசாமோ?

   விட்டது சனியன் விட்டது சனியன்


விட்டது நம்மை விட்டதடா!
கொட்டுக முரசு கொம்பெடுத் தூது
கொடும்பாவி கள்ளைக் கொளுத்திவிட்டோம்!

செத்தது கள்பேய் இத்தினம் ; இதையினி
தீபா வளிபோல் கொண்டாடு ;
பத்திரம் கள்மேல் சித்தம்வா ராவிதம்
பார்ப்பதும் காப்பதும் உன்பாரம்!

ஈஸ்வர வருஷம் புரட்டா சியிலே
இங்கிலீஷ் ஒன்றுபத்து முப்பத்தேழில்
சாஸ்வதம் போலவே நமைப்பிடித் தாட்டிய
சனியன் கள்கடை சாத்திவிட்டார்!

கூலியைத் தொலைப்பதும் தாலியை இழுப்பதும்
கூசிட ஏசிடப் பேசுவதும்
சாலையில் உருண்டொரு சவமெனக் கிடப்பதும்
சந்தி சிரிப்பதும் இனியில்லை!

அழுதிடும் மக்களும் தொழுதிடும் மனைவியும்
ஐயோ! பசியுடன் காத்திருக்க,
பொழுதுக்கும் உழைத்தது முழுவதும் கூலியைப்
போதையில் இழப்பதும் இனியில்லை!

பெற்றதன் குழந்தைகள் சுற்றி நடுங்கிப்
பேயெனும் உருவொடு வாய்குளற
உற்றவர் உறவினர் காறி உமிழ்ந்திட
ஊரார் நகைப்பதும் ஒழிந்ததினி!

விடிகிற வரையிலும் அடிதடி ரகளை
வீதியில் மாதர்கள் ரோதனமும்
குடிவெறி யால்வரும் கொடுமைகள் யாவையும்
கூண்டோ டொழிந்தன இனிமேலே!

எல்லா விதத்திலும் கள்ளால் வரும்பணம்
ஏளனத் துக்கே இடமாகும் ;
நல்லார் சரியெனக் கொள்ளா வரியிதில்
நம்மர சடைந்திட்ட பழிநீங்கும்.

போதையைத் தந்தபின் நீதியை ஓதுதல்
புத்தி யுடைஓர் அரசாமோ?
பேதைக ளாக்கிப்பின் பிழைபுரிந் தாயெனல்
பேச்சுக் காகிலும் ஏச்சன்றோ?

காந்தியின் அருந்தவம் சாந்தமும் பலித்தது ;
காங்கிரஸ் ஆட்சியும் ஓங்கிடுமே ;
போந்தது புதுயுகம் ; தீர்ந்தது கலிபலம் ;
பூமிக் கேஒரு புதுமையிது!

சக்கர வர்த்திநம் ராஜா ஜீக்கொரு
சன்மா னம்நாம் தந்திடுவோம் ;
அக்கறை யோடவர் ஆணைப் படிகள்ளில்
ஆசை புகாவிதம் காத்திடுவோம்.

பாழும் கள்ளால் பட்டதை நினைத்தால்
பதைக்குது நெஞ்சம் கொதிக்குதடா!
வாழும் நாடினி ; ஏழைக ளில்லை ;
வானவர் வணங்கிட வாழ்ந்திடுவோம்!

20 மே 2017

நூலகத்தைக் காணவில்லை!

அறிவுக் கிடங்கினைத் திறக்க அரசின் கண்களைத் திறப்போம் வாங்க!.

மரியாதைக்குரியவர்களே,
          வணக்கம்.ஈரோடு மாவட்டம்,நம்ம தாளவாடியில் செயல்பட்டு வந்த அரசு பொது நூலகம் தற்போது நகரின் கடைக்கோடியில்  சந்தின் மூலையில் மதுவில் மயங்கிய மனிதனைப்போல களையிழந்து முடங்கிக் கிடக்கிறது. தனிமையைப் போக்க,தன்னம்பிக்கை வளர,சமூகத்தைப் படிக்க,சராசரி மனிதனாக வாழ,கற்பனை பிறக்க,சிந்தனை பெருக,நினைவாற்றல் வளர,பொது அறிவு கிடைக்க நூலகமே சிறந்த தளம் என சான்றோர்கள் சொல்லக்கேட்கிறோம்.ஆனால் நம்ம தாளவாடியில் அறிவுத்திருக்கோயிலாம் பொது நூலகம் ,கிளை நூலகமாகவே அடிப்படை வசதிகள் ஏதுமில்லாமல்,வாசகர்கள் அமர்ந்து படிக்கக்கூட இடமில்லாமல்,இருக்கை வசதியில்லாமல் பயன்படுத்த முடியாத நிலையில் பார்வைக்காக மட்டுமே அமைந்துள்ளது கண்டு மிகவும் வேதனையளிக்கிறது.
  அண்ணல் அம்பேத்கர்  உட்பட ,பகத்சிங்,மகாத்மா காந்தியடிகள்,நேரு,அறிஞர் அண்ணா,அப்துல் கலாம்,புரட்சித்தலைவி ஜெயலலிதா,கலைஞர் கருணாநிதி போன்ற மாபெரும் தலைவர்களும்,சமகாலத்தலைவர்களும்,சாதனையாளர்களும், நூலகத்தைப் பயன்படுத்தி புத்தகங்களைப் படித்தே படைப்பாளி ஆகி இருக்கிறார்கள். சாதனைகள் பல செய்து தம் வாழ்க்கையில் வெற்றி பெற்றதோடு,சமூகத்தில் விழிப்புணர்வு பெறவும் சான்றோர்கள் பலர் உருவாகவும் ,சாதனையாளர்கள் பலர் தோன்றவும் வழிகாட்டியிருக்கிறார்கள்.

              நூலகத்தின் முக்கியத்துவம் அறிந்த சான்றோன் புதுக்கோட்டை மாவட்டத்தைச்சார்ந்த கிருஷ்ணமூர்த்தி-டோரதி தம்பதியினர் தனி நபர் நூலகத்தை அதாவது தம்பதியினர் இருவரின் உழைப்பின் ஊதியத்தை புத்தகங்களாக மாற்றி சமூகத்திற்கு பயன்பெற தனியோருவராக நூலகம் அமைத்து செயல்படுத்தி வருகிறார்கள்.தங்களது ஓய்வூதியப்பணம் முழுவதையும் செலவிட்டு பல லட்ச ரூபாய் செலவில் 'ஞானாலயா' என்ற பெயரில் அறிவுத்திருகோயில் ஒன்றையும் மூன்றடுக்கு மாடிகளாக கட்டி நூலகமாக செயல்படுத்தி,சங்க இலக்கியம் முதல் தற்கால இலக்கியம் வரை முதல் பதிப்பு நூல்களாக,சட்ட நூல்கள்,சித்த மருத்துவ நூல்கள்,பைபிள்,இசுலாமிய நூல்கள்,துணியினால் ஆன பகவத்கீதை போன்ற சமய நூல்கள் உட்பட முதல் பதிப்பு நூல்களாக லட்சக்கணக்கில் சேகரித்து மக்களின் பயன்பாட்டிற்கு மாதந்தோறும் பல்லாயிரம் ரூபாய் பராமரிப்பு செலவு செய்து   இன்றும் இலவசமாக நடத்தி வருகிறார்கள்.தொடர்பு கொள்ளவேண்டிய மின்னஞ்சல் முகவரி gnanalayapdk@gmail.com 

                               (புதுக்கோட்டையில் நடைபெற்ற கணினித்தமிழ்ச்சங்கம் நடத்திய உலக வலைப்பதிவர் மாநாட்டில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தபோது ஞானாலயா புத்தகாலயத்தை நேரில் பார்த்து வியப்பின் உச்சிக்கே சென்றுவிட்டேன்.புதுக்கோட்டை செல்லும் வாய்ப்புள்ளவர்கள் அவசியம் 'ஞானாலயா' என்ற தனி நபரின் இலவச நூலகத்தையும் பார்வையிட்டு வாங்க.)

இவ்வாறு வெளியுலகத்தில் சமூக நலனுக்கான நூலகச்சேவையை பார்க்கும்போது தாளவாடியில்  அரசு பொது நூலகத்தை தொலைத்துவிட்டோமோ?என்ற ஐயப்பாடு நிலவுகிறது.எனவே அறிவுமிகுந்த சான்றோர்களே,ஊடகங்களே,மாணவர்களே,சமூக அக்கறையுள்ளவர்களே,அனைவரும் வாங்க!. தாளவாடி நகரின் மையத்தில் நூலகம் அமைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் ''சமூக ஆர்வலர்களின் கூட்டமைப்பு''க்கு ஆதரவளிப்போம்.சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளை சந்தித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வற்புறுத்துவோம்......................
என அன்புடன் அழைக்கும்,
சமூக நலனில் அக்கறையுள்ள அன்பன்,
 C. பரமேஸ்வரன்,
தாளவாடி-ஈரோடு மாவட்டம்.
+919585600733,
 paramesdriver@gmail.com

13 மே 2017

தைராய்ட்


மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன். தைராய்டு பற்றி தெரிந்துகொள்வோம்.
.
தைராய்ட் என்பது கழுத்துக்கு கீழே பட்டாம்பூச்சி வடிவத்தில் இருக்கும் ஒரு உறுப்பு. இதில் தைராய்ட் எனும் ஹார்மோன் சுரக்கிறது. நீங்கள் சிக்கன் சாப்பிட்டாலோ, கொண்டைக்கடலை சாப்பிட்டாலோ அது உங்கள் உடலில் ப்ரோட்டீனாக மாற இது உதவுகிறது. தவிர, உங்கள் உடலின் எனர்ஜி சரியான அளவில் இருக்க சில வேலைகளை செய்கிறது.
இந்த தைராய்ட் நிறைய நேரம் சரியாக சுரக்காமல் போகக்கூடும். அப்படி ஆகும் போது ஒன்று ஹார்மோன் மிக அதிகமாக சுரக்கத் துவங்கலாம், அல்லது மிகக் குறைவாக.
அதிகமாக தைராய்டு சுரப்பதை 'ஹைப்பர்' என்று சொல்வார்கள். கடகடவென்று உடல் எடை குறையும். கபகபவென்று பசிக்கும். அவ்வப்போது கைகால் நடுங்கும். எதற்கெடுத்தாலும் கவலை, பயம் வரும்.
குறைவாக சுரப்பதை 'ஹைப்போ' என்று சொல்வார்கள். உடல் எடை அதிகரித்து குண்டடிக்கும். அடிக்கடி மலச்சிக்கல் வரும். பெண்களுக்கு மாதவிடாயில் ரத்த இழப்பு அதிகரிக்கும், முடி கொட்டும், இதயத் துடிப்பு மந்தமாகும். குறிப்பாக, பெண்களுக்கு குழந்தைப் பேறு கைகூடாமல் இருப்பதற்கு தைராய்டு வில்லன் நிறைய நேரம் காரணமாக இருக்கக்கூடும்.
மேற்சொன்னதெல்லாம் வெறும் அறிகுறிகள்தான். இதய நோயில் இருந்து கான்ஸர் வரை பல்வேறு நோய்களுக்கு தைராய்டு பிரச்னை காரணமாக ஆகி விடுகிறது. குறிப்பாக பெண்களுக்கு தைராய்ட் தரும் பிரச்சனைகளை சொல்லி மாளாது. ஆண்களை விட பெண்களைத்தான் இது பெரிதும் பாதிக்கிறது. மூன்றாம் உலக நாடுகளில், குறிப்பாக இந்தியாவில், இது பெரிய பிரச்னை. சுகர், பிபி, கான்சர் அளவுக்கு தைராய்ட் பற்றிய விழிப்புணர்வு நம்மிடை இல்லாதது பிரச்சனையை மோசமாக்குகிறது. சொல்லப்போனால் நேரத்தில் இதை கண்டறிந்து மருத்துவம் மேற்கொண்டால் இது சப்பை மேட்டர்தான். ஆனால் நிறைய நேரம் தாமதமாக கண்டுபிடிப்பதால் பிரச்சனையின் வீரியம் அதிகரிக்கிறது. அதுவுமின்றி, இதய நோய், கான்ஸர் மாதிரி தைராய்ட் நோயை நாம் சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை. குறிப்பாக பெண்கள். டாக்டர் 'உங்களுக்கு தைராய்ட் பிரச்னை இருக்கு,' என்று சொல்லி மருந்து கொடுத்தால் ஒரு மாதம் எடுத்துக் கொண்டு நிறுத்தி விடுகிறார்கள், அல்லது கொடுத்த மாத்திரையையே தொடர்ந்து அடுத்த பத்து பதினைந்து ஆண்டுகள் போட்டுக் கொண்டு வருகிறார்கள். அது எப்படி நம்மை பாதிக்கும், நாளைக்கு என்னென்ன சிக்கல்கள் வரும் என்பதை உணருவதில்லை. டாக்டர்களும் பெரும்பாலும் சொல்வதில்லை.
தைராய்டு மாத்திரை பெரும்பாலும் அதிகாலை எழுந்த உடன் வெறும் வயிற்றில் போட்டுக் கொள்ள வேண்டி இருக்கும். இது குணமாக முடியா விஷயம்.பெரும்பாலும் தைராய்டு பிரச்னை என்றால் வாழ்நாள் முழுவதும் மாத்திரையை எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கும். ஆனால் அதே மாத்திரையை அல்ல. குறைந்தது ஆறு மாதத்துக்கு ஒரு முறை பரிசோதனை செய்து வரும் ரிசல்ட்டை வைத்து டாக்டர் உங்கள் மாத்திரையை குறைக்கலாம், கூட்டலாம், அல்லது மாற்றலாம்.
தைராய்டு குறைபாட்டை கண்டுபிடித்து மாத்திரை எடுக்கத் துவங்கிய உடனே பெரும் முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். எனர்ஜி கூடும், ஒரு பத்து வயது குறைந்தது மாதிரி உணர்வு வரும். மன அழுத்தங்கள் விலகும். Anxiety attack என்று சொல்வார்கள். திடீரென்று பெரிய ஒரு பயம் மனதை தாக்கும். மூச்சு விடக்கூட முடியாமல் போய் பயம் கவ்விக் கொள்ளும். இதெல்லாம் சரியாகலாம். சட்டென்று மனைவி கர்ப்பம் தரிக்கலாம்.
உங்கள் அம்மா, அப்பா, மாமா யாருக்காவது தைராய்டு குறைபாடு இருந்தால் நீங்கள் 20 வயதில் இருந்தே டெஸ்ட் செய்து கொள்ள வேண்டும். செய்து நார்மல் என்று தெரிந்தால் அடுத்த ஐந்து ஆண்டுகள் கழித்து திரும்பவும் டெஸ்ட் செய்து கொள்ளலாம். அப்படி குடும்ப வரலாறு இல்லை என்றால், சுமார் முப்பத்தைந்து வயதில் இருந்து டெஸ்ட் செய்யத் துவங்கலாம். ஆறு மாதத்துக்கு ஒரு முறை தைராய்ட் செக்கப் செய்து கொள்வது நல்லது. ‘இதெல்லாம் ரொம்ப ஓவர்,’ என்றால் குறைந்தது வருடத்துக்கு ஒரு முறை. அதுவும் பெண்களுக்கு இது மிக மிக முக்கியமான விஷயம். முக்கால்வாசி லேப்களில் 300 ரூபாய்க்கும் குறைவாக இந்த டெஸ்ட் செய்து கொள்ள முடியும்.
குறிப்பாக ஆண்களுக்கு இந்தக் கடமை இருக்கிறது. உங்கள் வீட்டில் உள்ள பெண்களைக் கூட்டிக் கொண்டு போய் தைராய்டு டெஸ்ட் செய்து கொள்ள அறிவுரையுங்கள். யாராவது கொஞ்சம் அலட்சியமாக இருந்தால் கொஞ்சம் அழுத்தம் கொடுத்து கூட்டிச் செல்லுங்கள். தைராய்ட் பிரச்னை இருந்தால் பரிந்துரைத்த மாத்திரையை ஒழுங்காக எடுத்துக் கொள்கிறார்களா என்று கண்காணியுங்கள். தொடர்ந்து செக்கப் செய்து மருந்தின் அளவை ஏற்றி இறக்க உதவுங்கள். மனைவி, அம்மா இவர்களுக்கு பிறந்த நாளுக்கு கேக் வாங்குவதோடு சேர்த்து ஒரு செக்கப்பையும் ‘பரிசாக’ வழங்குங்கள். அப்படி செய்தால் அவர்கள் உங்களை கண்டிப்பாக திட்டுவார்கள். ஆனால் அவர்களின் உடல் உங்களுக்கு நன்றி சொல்லும்!
=============================================================
 கட்டுரை-2
 தைராய்டு என்பது 

தொண்டையில் மூச்சுக்குழாய்க்கு முன்பாக, குரல்வளையைச் சுற்றி இரு பக்கமும் படர்ந்து, ஒரு வண்ணத்துப்பூச்சி வடிவத்தில் அமைந்துள்ளது தைராய்டு சுரப்பி. உடலில் ஏற்படும் வளர்சிதைமாற்றப் பணிகளுக்குத் தேவையான, முதன்மை நாளமில்லா சுரப்பி இது. சாதாரணமாகப் பார்க்கும்போது நம் கண்ணுக்கு இது தெரியாது. நாம் உணவை விழுங்கும்போது, முன் கழுத்தில் குரல்வளையோடு தைராய்டும் சேர்த்து மேலே தூக்கப்படுவதைப் பார்க்க முடிகிறது என்றால், தைராய்டு சுரப்பி வீங்கியுள்ளது என்று அர்த்தம்.
தைராய்டு ஹார்மோன்கள்
'தைராக்சின்' (T4), 'டிரைஅயடோதைரோனின்' (T3) எனும் இரண்டு வித ஹார்மோன்களை இது சுரக்கிறது. இப்படிச் சுரப்பதற்கு அயோடின் சத்து தேவை. இந்த இரண்டு ஹார்மோன்கள் பெரும்பாலும் புரதத்துடன் இணைந்திருக்கும். சிறிதளவு ஹார்மோன்கள் புரதத்துடன் இணையாமலும் இருக்கும். அவற்றுக்கு FT3, FT4 என்று பெயர். இவை உடலின் தேவைக்கேற்ப ரத்தத்தில் கலந்து, உடல் உறுப்புகள் சீராகச் செயல்பட உதவுகின்றன. இவற்றின் செயல்பாடுகளை முன்பிட்யூட்டரி சுரப்பியில் சுரக்கிற thyroid-stimulating hormone (TSH, thyrotropin)‘தைராய்டு ஊக்கி ஹார்மோன்' (TSH) கட்டுப்படுத்துகிறது.
குறை தைராய்டு
தைராக்சின் ஹார்மோன் குறைவாகச் சுரப்பதைக் 'குறை தைராய்டு’ (Hypothyroidism) என்கிறோம். இதன் ஆரம்பநிலையில் உடல் சோர்வாக இருக்கும்; செயல்கள் மந்தமாகும்; சாதாரணக் குளிரைக்கூடத் தாங்க முடியாது; முகம் வீங்கும்; முடி கொட்டும்; இளநரை தோன்றும்; தோல் வறட்சி ஆகும்; பசி குறையும். ஆனால், உடல் எடை அதிகரிக்கும். ஞாபக மறதி, அதிகத் தூக்கம், முறையற்ற மாதவிலக்கு, குரலில் மாற்றம், கருச்சிதைவு மற்றும் கருத்தரிப்பதில் பிரச்சினை, மூட்டுவலி இப்படிப் பல பிரச்சினைகள் அடுத்தடுத்துத் தலைதூக்கும்.
தைராய்டு வீக்கம்
உண்ணும் உணவில் உடலின் தேவைக்கு ஏற்ப அயோடின் சத்து கிடைக்காவிட்டால், தைராய்டு சுரப்பி தைராக்சின் ஹார்மோனைச் சுரக்க முடியாது. இதனால் தைராய்டு ஊக்கி ஹார்மோன் அதிக அளவில் சுரந்து, தைராய்டு சுரப்பியை மேன்மேலும் சுரக்கத் தூண்டும். ஆனாலும், அதனால் தைராக்சின் ஹார்மோனைச் சுரக்க முடியாது. பதிலாக, அது கழுத்தின் முன்பக்கத்தில் ஒரு கழலை போன்று வீங்கிவிடும். அதற்கு 'முன்கழுத்துக் கழலை' (Goitre) என்று பெயர். பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகள் காரணமாகத் தைராய்டு சுரப்பியில் அழற்சி (Thyroiditis) ஏற்பட்டு வீக்கமடைவதும் உண்டு. இது ஒரு தன்தடுப்பாற்றல் நோயாகவும் (Auto immune disease), கட்டியாகவும் (Thyroid adenoma) ஏற்படலாம்.
மிகைத் தைராய்டு
தைராய்டு சுரப்பி வழக்கத்துக்கு மாறாக வீக்கமடைந்து அதிகமாகப் பணி செய்தால், தைராக்சின் சுரப்பு பல மடங்கு அதிகரித்துவிடும். இந்த நிலைமையை ‘மிகை தைராய்டு' ( Hyperthyroidism ) என்கிறோம். இந்த நோய் உள்ளவர்களுக்கு அதிகமாகப் பசிக்கும். அடிக்கடி உணவு சாப்பிடுவார்கள். ஆனால், உடல் மெலியும். நெஞ்சு படபடப்பாக இருக்கும்; நாடித்துடிப்பு அதிகரிக்கும்; விரல்கள் நடுங்கும்; உள்ளங்கை வியர்க்கும்; அடிக்கடி மலம் மற்றும் சிறுநீர் கழியும்; சிலருக்குக் கண்கள் பெரிதாகி விகாரமாகத் தெரியும்.
பரிசோதனைகள் என்ன?
வழக்கமான ரத்தப் பரிசோதனைகளுடன், ரத்தத்தில் T3, T4,TSH, FT3, FT4 , anti TPO ஆகியவற்றின் அளவுகளைப் பரிசோதித்தால், நோயின் நிலைமை தெரியவரும். பொதுவாக T3 0.7 2 .04 ng/dL என்ற அளவிலும், T4 4.4 11.6 ng/dL என்ற அளவிலும் TSH 0.28 6.82 IU/dL என்ற அளவிலும் FT3 1.4 - 4.2 pg/dL, FT4 0.8 2 ng/dL இருக்க வேண்டும்.
இந்த இயல்பு அளவுகள் ஆய்வகத்தைப் பொறுத்தும், நோயாளியின் நோய்நிலை, அவர் எடுத்துக்கொள்ளும் மருந்துகள், வயது, கர்ப்பம், வயது ஆகியவற்றைப் பொறுத்தும் சிறிதளவு மாறலாம். எனவே, நோயாளியானவர் தான் எடுத்துக்கொள்ளும் மருந்து விவரத்தையும் கர்ப்பமாக இருந்தாலும் மருத்துவரிடம் சொல்லிவிட வேண்டும்.
முடிவுகள் எப்படி இருக்கும்?
l குறை தைராய்டு உள்ளவர்களுக்கு T3, T4 அளவுகள் குறைவாகவும், TSH அளவு அதிகமாகவும் இருக்கும்.
l மிகை தைராய்டு உள்ளவர்களுக்கு T3, T4 அளவுகள் அதிகமாகவும், TSH அளவு குறைவாகவும் இருக்கும்.
l இந்த மூன்று அளவுகளும் குறைந்திருந்தால், முன்பிட்யூட்டரி சுரப்பியில் குறைபாடு உள்ளது என்று பொருள்.
l சிலருக்குக் குறை தைராய்டு பிரச்சினை உடலில் இருக்கும். ஆனால், வெளியில் தெரியாது. இவர்களுக்கு T3, T4 அளவுகள் சரியாக இருக்கும். TSH அளவு அதிகமாக இருக்கும்.
l சிலருக்கு மிகை தைராய்டு பிரச்சினை உடலில் இருக்கும். ஆனால், வெளியில் தெரியாது. இவர்களுக்கு T3, T4 அளவுகள் சரியாக இருக்கும். TSH அளவு குறைவாக இருக்கும்.
l FT3, FT4 அளவுகள் அதிகமானால் மிகை தைராய்டு உள்ளது என்று அர்த்தம்.
l குறை தைராய்டு உள்ளவர்களுக்கு ரத்த ஹீமோகுளோபின் அளவு குறைவாகவும் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாகவும் இருக்கும்.
l anti TPO பரிசோதனை ‘பாசிட்டிவ்’என்றால் முன்கழுத்துக் கழலைக்குக் காரணம் தன்தடுப் பாற்றல் நோய் என்றும், ‘நெகட்டிவ்’என்றால் சாதாரணக் கழலை என்றும் அறிய உதவும்.
எப்படிச் செய்வது?
l இந்தப் பரிசோதனையை வெறும் வயிற்றில் செய்வது நல்லது.
l பரிசோதனைக்கு வரும்போது மது அருந்தி யிருக்கக் கூடாது; புகைபிடிக்கக் கூடாது.
இதர பரிசோதனைகள்
l அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் ஆகியவற்றின் மூலம் தைராய்டு சுரப்பியின் வடிவம், எடை, அளவு ஆகியவற்றை அளந்து, தைராய்டு பாதிப்பை ஓரளவுக்குத் தெரிந்துகொள்ள முடியும்.
l இப்போது 'ஐசோடோப் ஸ்கேன்' பரிசோதனை தைராய்டு பாதிப்புகளை மிகவும் துல்லியமாகத் தெரிவிக்கிறது.
l வீக்கம் காணும் தைராய்டு சுரப்பியிலிருந்து ஊசி மூலமாகச் சிறிய அளவில் திசுவை அகற்றி செல்களைப் பரிசோதிப்பதன் (FNAC) மூலம் புற்றுநோய் பாதிப்பு உள்ளதா என்பதை அறிய முடியும்.
யார், எதற்குச் செய்துகொள்ள வேண்டும்?
l குறை தைராய்டு, மிகை தைராய்டு பிரச்சினை உள்ளதாகச் சந்தேகப்படுபவர்கள் முதலில் நோயைக் கணிப்பதற்குப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும்.
l இவ்விரண்டு பிரச்சினைகளுக்கும் சிகிச்சை பெற்றுவருபவர்கள் நோயின் தற்போதைய நிலைப்பாட்டை அறிவதற்குப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும்.
l தைராய்டு சுரப்பியில் வேறு பிரச்சினை உள்ளவர்கள் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும்.
l தைராய்டு சுரப்பிக்கு அறுவைசிகிச்சை செய்துகொண்டவர்கள் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும்.
l பிட்யூட்டரி சுரப்பியில் பிரச்சினை உள்ளவர்கள் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும்.
l இளம்பெண்கள், கர்ப்பிணிகள், முதியவர்கள் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும்.
l இதயநோய்க்காக அமிய்டோரான் (Amiodarone) மாத்திரையை எடுத்துக்கொள்பவர்கள் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும்.
- கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்

.

கல்வி...கல்வி......கல்வி....

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.இன்றைய கல்விநிலை அதாவது கல்வி பெற ஆகும் செலவுநிலை பற்றி ..............                              
இன்று தமிழகத்தில் கவுரவமாக கருதபடுவது படிப்பு அதை எம் மகனையோ மகளையோ நான் பெரியகல்வி நிறுவனத்தில் படித்தால் கவுரவம் என நினைக்கும் பெற்றோர்களே சிறிதுசிந்தியுங்கள் !!!
உங்கள் மகன் & மகள் மழலை பள்ளி
சேர்க்கும் செலவு குறைந்த பட்சம்
இன்றைய கல்வி வியாபார விலை
:;15000.00
அடுத்த நிலை 1 ஆம் வகுப்பு விலை
:;25000.00
அடுத்த நிலை 2 ஆம் வகுப்பு
விலை:;35000.00
அடுத்த நிலை 3 ஆம் வகுப்பு
விலை:;37000.00
அடுத்த நிலை 4 ஆம் வகுப்பு
விலை:45000.00
அடுத்த நிலை5 ஆம் வகுப்பு விலை
::50000.00
அடுத்த நிலை 6 ஆம் வகுப்பு
விலை::65000.00
அடுத்த நிலை7ஆம் வகுப்பு விலை
;:78000.00
அடுத்த நிலை 8 ஆம் வகுப்பு
விலை::85000.00
அடுத்த நிலை9 ஆம் வகுப்பு விலை
::95000.00
அடுத்த நிலை10ஆம் வகுப்பு
விலை;:150000.00
அடுத்த நிலை 11ஆம் வகுப்பு
விலை::200000.00
அடுத்த நிலை 12 ஆம் வகுப்பு
விலை ::300000.00
உங்கள் மகனோ மகளோ பள்ளிபடிப்பை
முடிக்க குறைந்த பட்சம் நீங்கள்
பண்ணும் செலவு 11.80 லட்சம்
தனியாரிடம் தாரை வார்க்குறீங்க
எதற்காக இந்த இழப்பு ???
அரசு பள்ளியை நம்பாததன்
விளைவு அரசுப்பள்ளியில் இதே
படிப்பை உங்கள் மகனோ மகளோ
படித்தால் நீங்கள் இழக்கும் பணம்
எவ்வளவு ?
வருமானம் மட்டும்தான் அவ்வளவும்
சத்துணவு முதல் சைக்கிள் &
மடிகணணி செருப்பு சீருடை
பேருந்து கட்டணம் என 11.80
லட்சங்களை மிச்ச படுத்த முடியும்
உங்கள் மகனோ மகளோ பள்ளி
படிப்பை முடித்தால் தனியார் கல்வி
நிறுவனத்தை நடத்தும்
வியாபாரிகளிடம் இழக்கும் 11.80
லட்சம் முதலீட்டில் ஒரு தொழிலை
தொடங்கி உங்கள் மகனை மகளை
முதலாளியாக்கி நாட்டையும்
வல்லரசாக்க முடியும் சிந்தியுங்கள்
மக்களே சிந்திக்கும் திறனை இழந்த
தமிழக மக்களே இந்த வருடம் சாதனை
புரிந்த மாணவர்களின் எண்ணிக்கை
10 ஆம் வகுப்பு 12 ஆம் வகுப்பு
இரண்டிலும் மொத்தம் மாநில
அளவில் முதல் மூன்று இடங்களை
பிடித்த தனியார் கல்வி நிலைய
மாணவர் எண்ணிக்கை 1362 அரசு
பள்ளிகளில் படித்த மாணவர்களின்
எண்ணிக்கை 483 ஆக அரசு
பள்ளியை தரம் உயர்த்த
பெற்றோர்களாகிய நாம்
நினைத்தால் நிச்சயம் முடியும்
உங்கள் கவுரவத்தால் நீங்கள் 11.80
லச்சத்தை தனியாரிடம் இழக்க
நேரிடுகிறது உங்கள் மகனை அரசு
பள்ளியில் சேர்த்து அந்த பள்ளிக்கு
வருடம் 2 ஆயிரம் மட்டும் செலவு
செய்தால் நமது மக்களின்
பொருளாதார நிலை கல்வி நிலை
மாற வாய்ப்பு அதிகம்.....

கேட்டேன்,கேட்டேன்...

சத்தம் இல்லாத school கேட்டேன்
யுத்தம் இல்லாத classroom கேட்டேன்
மொத்தத்தில் என்றென்றும் கல்வி கேட்டேன்
ரகசியமில்லா நட்பு கேட்டேன்.
உயிரைக் எடுக்காத time table கேட்டேன்
ஒற்றைப் பாடமாவது off ஐக் கேட்டேன்
இருமுகம் இல்லாத staff ஐக் கேட்டேன்
திறமைக்குச் சரியான பொறுப்பைக் கேட்டேன்.
பூச்சிகள் இல்லாத canteen கேட்டேன்
இளமை கெடாத party கேட்டேன்
பறந்து பறந்து off ஐ கேட்டேன்
பாசாங்கில்லாத principal கேட்டேன்.
Clean பண்ணிய toilet கேட்டேன்
பஸ்ஸின் ticket ஐ குறைக்கக் கேட்டேன்
தானே படிக்கும் மாணவரை கேட்டேன்
பயிற்சிகள் செய்யும் பிள்ளைகள் கேட்டேன்.
Daily எழுதும் marker கேட்டேன்
நீலம் கறுப்பில் ஒவ்வொன்று கேட்டேன்
க்ளாஸ் ரூம் போக lift ஐ கேட்டேன்
கிடந்து உருள staff room கேட்டேன்.
ருசித்துக் குடிக்க கூர்லிங்ஸ் கேட்டேன்.
எட்டிப் பறிக்க பழங்கள் கேட்டேன்
களைப்பு மறக்க சிறு தூக்கம் கேட்டேன்
கஷ்டம் தெரியா உழைப்பைக் கேட்டேன்.
O/L க்கெல்லாம் ஒரு எக்ஸ்ஸாம் கேட்டேன்
A-L க்கெல்லாம் சுயபடிப்பு கேட்டேன்
Parents க்கெல்லாம் ஒரு மனம் கேட்டேன்
Students க்கெல்லாம் ஒழுக்கம் கேட்டேன்.
நாடு முழுதும் சம கல்வி கேட்டேன்
கல்வி கெடாத sports ஐ கேட்டேன்
வகுப்பு முழுக்க அமைதி கேட்டேன்
ஆசிரியர் வரும்போதே எழும்ப கேட்டேன்.
விஞ்ஞானம் எல்லாம் உயரக் கேட்டேன்
கணக்கை தீயாய் படிக்கக் கேட்டேன்
வணிகம் கடந்த ஞானம் கேட்டேன்
தமிழை ஒழுங்காய் எழுத கேட்டேன்.
Poya கடந்தும் விடுமுறை கேட்டேன்
Casual medical இன்னும் கேட்டேன்
Steps ஏறாத வகுப்புகள் கேட்டேன்
கால் வலிக்கு மருந்து கேட்டேன்.
பண்கொண்ட கலைகள் பயிலக் கேட்டேன்
அதற்கு இருக்கும் வசதியை கேட்டேன்
பயன் கெடாத வளங்களைக் கேட்டேன்
சுருங்க விடாத பெறுபேறு கேட்டேன்.
Vice principal ஆ ஒருநாள் இருக்கக் கேட்டேன்
சுற்றும் கதிரையில் சுழலக் கேட்டேன்
Bathroom போக மறைவிடம் கேட்டேன்
கேட்டதும் லீவை தரும்படி கேட்டேன்
விழுந்தால் ஊரில் விழவே கேட்டேன்
அழுதால் கூட ஆறுதல் கேட்டேன்.
தனிமை என்னோடு போகக் கேட்டேன்
எப்போதும் சிரிக்கின்ற Principal கேட்டேன்
மஹிந்தோதயா போல் எல்லா க்ளாஸ் ரூம் கேட்டேன்
விடுதி போல் ஒரு கட்டிடம் கேட்டேன்.
ஸ்கூலுக்கருகில் வீட்டைக் கேட்டேன்
வீட்டுக்கு குறைந்த வாடகை கேட்டேன்
தவணைக்கு தவறாமல் வரும் team ஆட்களை ஓடக் கேட்டேன்
கேட்டவுடன் கொடுக்கும் transfer ஐக் கேட்டேன்
கல்வியமைச்சின் அதிகாரம் கேட்டேன்
அலைய விடாத வேலையைக் கேட்டேன்.
சொந்த ஊரில் தொழிலைக் கேட்டேன்
காலம் எல்லாம் பிடித்த ஸ்கூல் கேட்டேன்.
வருடத்திற்கு ஒரு பிரியாணி கேட்டேன்.
தகைமை இருக்குற பதவியை கேட்டேன்
பட்டம் வேண்டாம் நிம்மதி கேட்டேன்.
நியாயம் கேட்கும் ஊரை கேட்டேன்
ஊரைத் திருத்தும் இளைஞர்கள் கேட்டேன்
படிப்பைத் தாங்கும் உள்ளம் கேட்டேன்
துரோகம் தாங்கும் வலிமை கேட்டேன்.
படிக்க விடாதவனை துரத்தக் கேட்டேன்
தாய் தந்தை ஏமாற்றாத பிள்ளை கேட்டேன்
கல்வி வேண்டாட்டி தந்தைக்கு உதவக் கேட்டேன்
கயவனை அறிய cctv கேட்டேன்.
பொழுது போக்க TV கேட்டேன்
சின்ன சின்ன நேரங்கள் கேட்டேன்
இடைவேளையில் பார்க்க DISH TV கேட்டேன்
சீரியஸ் இல்லாத vp கேட்டேன்
வாரம் ஒரு லீவு கேட்டேன்
ஒரு வரியில் எழுதும் லெஸன் ஐ கேட்டேன்.
குறைந்த பட்சம் இங்கிரிமென்ட் கேட்டேன்.
இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை
இதிலே எதுவும் நடக்கவில்லை
Teaching teaching வேண்டாம் என்று
Visa visa visa கேட்டேன்......

10 மே 2017

மாமேதை கால்டுவெல்

    

கால்டுவெல் 1814-1891

     
                               ஐரோப்பிய குருமார்கள் தமிழ் மொழியினால் ஈர்க்கப்பட்டு, அதன்  சிறப்புகளில் மயங்கி, அதன் மேன்மைகளை மேதினிக்குப்  புலப்படுத்தினர். அவருள் முதன்மையானவர், தமிழ் தனித்தன்மை  வாய்ந்த மொழி, செம்மொழி  திராவிட மொழிக் குடும்பத்தின் மூத்த  முதல் மொழி எனக்கூறி, உரிய சான்றுகளுடன் நிறுவிய மாமேதை  கால்டுவெல்!  டாக்டர் கால்டுவெல் தமிழகத்தில் தங்கியிருந்தபோது  தமிழ் மொழியை மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம், மலையாளம்  போன்ற பிற திராவிட மொழி கற்றவராக விளங்கினார். அதன்பயனாக,  தமிழ் உள்ளிட்டதென்னிந்திய மொழிகளை குறித்திட, ‘திராவிட  மொழிகள்’ என்னும் சொல்லாக்கத்தை முதன்முதல் உருவாக்கி  உலகுக்கு அறிமுகம் செய்தார்.

வடமொழிச் சார்பாளர்கள் போலவே கீழை நாட்டு அறிஞர்கள் சிலரும்  திராவிடமொழிகளை சமஸ்கிருதத்திலிருந்து பிறந்தவை என்றே  கூறினர். அவர்களின்அக்கருத்தை கால்டுவெல் அவர்கள் வன்மையாக  மறுத்து, திராவிட மொழிகள் தனித்தன்மை வாய்ந்தவை; அவற்றுள்ளும்  தமிழ் வடமொழியின் துணையின்றி தனித்து இயங்கும் ஆற்றல்  உடையது என அழுத்தம் திருத்தமாக சான்று காட்டி நிறுவினார்.   இதன் காரணமாகத்தான், திமுக, கால்டுவெல்லை என்றும் நன்றியுடன்  போற்றி வருகிறது. 1968ம் ஆண்டில் நடத்திய இரண்டாம் உலகத் தமிழ்  மாநாட்டின்போது, 2.1.1968ல் சென்னை கடற்கரை காமராசர் சாலையில்  டாக்டர் கால்டுவெல்லின் திருவுருவச்சிலையை நிறுவினோம்.  கோவையில் 27.6.2010ல்  நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி  மாநாட்டு நிறைவு விழாவில் டாக்டர் கால்டுவெல் நினைவாகச் சிறப்பு  அஞ்சல் தலை வெளியிட ஆவன செய்தோம். .

 எங்கோ பிறந்து, தமிழகத்திற்கு வந்து, சமயத் தொண்டுகளாற்றி,  தமிழ் மொழியைக் கற்று, அதன் இன்பத்தில் தோய்ந்து, தமிழ்  மொழியில் இயல்பாய் அமைந்துள்ள மொழியியல் சிறப்பைக் கண்டு  வியந்து, தமிழின் மேன்மையை மேதினில் நிலைநாட்டிய மாமேதை  டாக்டர் கால்டுவெல்  கொடைக்கானல் மலையில் 28.8.1891ல்  மறைவெய்தினார். அவரது உடல், அவர் 50 ஆண்டுகாலம்  தங்கியிருந்து சமயத்தொண்டுகள் ஆற்றிய, இடையன்குடியில், அவர்  எழுப்பிய தேவாலய வளாகத்திலேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளது.


தமிழ் மொழிக்கு அருந் தொண்டு ஆற்றிய - திரா விட மொழிகளின் ஒப்பிலக் கணம் தந்த அறிஞர் கால்டுவெல் பாதிரியார் 50 ஆண்டு காலம் வாழ்ந்த நெல்லை மாவட்டம் இளை யான்குடி வீட்டினைப் புதுப் பித்து மானமிகு கலைஞர் தலைமை யிலான தி.மு.க. அரசு நினைவுச் சின்னமாக நாட்டுக்கு அர்ப்பணித் துள்ளது.

முதல்வர் கலைஞர் காணொலிக் காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார். தமிழுக்கு உழைத்தவர் களையெல்லாம் வரலாற் றில் வாழ வைத்த பெருமை தி.மு.க. அரசுக்கு உண்டு.

அதிலும் குறிப்பாக கால்டுவெல் அவர்களுக் குச் செய்யப்பட்டுள்ள சிறப்பு மிகமிகப் போற்று தலுக்கு உரியது.

கால்டுவெல் பற்றி மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் கூறுகிறார்:

மொழி நூலானது உலக மொழிகள் எல்லாவற் றையும் தழுவும் ஒரு பொதுக் கலை. உலக மொழிகள் எல்லாவற்றை யும் ஆரியம் (Aryan) , சேமியம் (Semitic), துரேனியம் (Turanian) என்னும் முப்பெருங் குலங்களாகப் பிரித்துள் ளார் மாக்கசு முல்லர். அவற்றுள் துரேனியத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் திராவிடக் குடும்பத்தின் மொழிகளைத் திறம்பட வகுத்துக் காட்டியவர் கால்டுவெல்.

இங்ஙனமே பிறரும் பிற குடும்பங்களை வகுத்துக் காட்டி உள்ளனர். மேற்கூறிய முக்குலங்கட் கும் உள்ள தொடர்பை ஆராய்வதே இந்நூலின் நோக்கம்.

அவற்றுக்கொரு தொடர்புண்டென்று; அஃதாவது அம்மூன்றும் ஒரு குலத்தினின்றும் கவைத்திருக்க வேண்டு மென்று சென்ற நூற்றாண் டிலேயே மாக்கசு முல்லர் (Max Muller) திடமாகக் கூறிவிட்டார்.  அம்மூலத்திற்குத் திரா விடம் மிக நெருங்கிய தென்று கால்டுவெல் கூறியுள்ளார்.

இக்கூற்றை என்னாலியன்ற வரை முயன்று மெய்ப்பித்திருக் கிறேன் - என்று மொழி ஞாயிறு அவர்களின் உயர்ந்த படைப்பான ஒப் பியன் மொழி நூல் எனும் நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார் என்றால் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே இத்திசையில் சிந் தனையை செலுத்திய ஒரு வெளிநாட்டு அறிஞரை- அயர்லாந்துக்காரரை - அதுவும் வெளிநாட்டு மதத்தைச் சேர்ந்த கிறித் துவப் பாதிரியாரை - தமிழர் கள் எவ்வளவுத் தூரம் தூக்கி வைத்தும் புகழ வேண்டுமே!

தெலுங்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பும், கன்னடம் 1500 ஆண்டு களுக்கு முன்பும், 750 ஆண்டுகளுக்கு முன்பு மலையாளமும் ஆரிய மொழியான சமஸ்கிருத கலப்பால் பிரிந்தன என்பது தமிழ் அறிஞர்கள் ஆய்ந்து சொன்ன அதே கருத்தை தந்தை பெரியார் அவர் களும் கூறியிருக்கிறார் என்பது சுட்டிக் காட்டத் தகுந்ததாகும்.

கிறித்துவப் பாதிரியார் கள் செய்துள்ள தமிழ்த் தொண்டில் கால்டுவெல் இயற்றிய திராவிட மொழி களின் ஒப்பிலக்கணம் அடிக்கோடிட்டுக் குறிப்பிடப் பட வேண்டிய பொன்னே டாகும்.

ஓவியக் கல்லூரியில் பயின்றவர்; 1838 முதல் மரணத்தின் வாயிலில் புகும் வரை (1891 ஆகஸ்ட் 28) தமிழ்த் தொண்டாற்றிய பெருமகனாரை நன்றி உணர்வோடு பேற்றுவோம்!
 அறிஞர் கால்டுவெல் தமது 77 ஆண்டுகளில் 53 ஆண்டுகள்  தமிழகத்தில் வாழ்ந்துள்ளார். தமிழ் மொழிக்கு செய்த தொண்டுகளால்  இன்றும் உலகம் முழுவதும் புகழப்படுகின்ற அந்த மாமேதை  கால்டுவெல் பிறந்த 200ம் ஆண்டு 7.5.2014ல்  நிறைவுபெறும்  வேளையில் அப்பெருமகனாரை ஒட்டுமொத்த உலகத் தமிழ் சமுதாயம்  சார்பில் நன்றியுடன் நினைந்து வணங்கி மகிழ்வோம். தமிழ் மொழிக்கு  செய்த தொண்டுகளால் இன்றும் உலகம் முழுவதும் புகழப்படுகின்ற  அந்த மாமேதை கால்டுவெல் பிறந்த 200ம் ஆண்டு 7.5.2014ல்  நிறைவுபெறும் வேளையில் அப்பெருமகனாரை ஒட்டுமொத்த உலகத்  தமிழ் சமுதாயம் சார்பில் நன்றியுடன் நினைந்து வணங்கி மகிழ்வோம்.

பாரதி பாடலில் ஒன்று

தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிப் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக்கு இரையெனப் பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வேன் என்று நினைத் தாயோ?

நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் - அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன்
முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும்
மூளா தழிந்தி டுதல் வேண்டும் - இனி
என்னைப் புதிய உயி ராக்கி - எனக்கு
ஏதுங் கவலையறச் செய்து - மதி
தன்னை மிகத் தெளிவு செய்து - என்றும்
சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்
தோளை வலியுடைய தாக்கி - உடற்
சோர்வும் பிணிபலவும் போக்கி - அரி
வாளைக் கொண்டு பிளந்தாலும் - கட்டு
மாறா உடலுறுதி தந்து - சுடர்
நாளைக் கண்டதோர் மலர் போல் - ஒளி
நண்ணித் திகழும் முகம் தந்து - மத
வேளை வெல்லுமுறை கூறித் - தவ
மேன்மை கொடுத்தருளல் வேண்டும்
எண்ணுங் காரியங் களெல்லாம் - வெற்றி
யேறப் புரிந்தருளல் வேண்டும் - பல
பண்ணப் பெருநிதியம் வேண்டும் - அதில்
பல்லோர் துணைபுரிதல் வேண்டும் - சுவை
நண்ணும் பாட்டினொடு தாளம் - மிக
நன்றாவுளத் தழுந்தல் வேண்டும் - பல
பண்ணில் கோடிவகை யின்பம் - நான்
பாடத் திறனடைதல் வேண்டும்
ஐயம் தீர்ந்துவிடல் வேண்டும் - புலை
அச்சம் போயொழிதல் வேண்டும் - பல
பையச் சொல்லுவதிங் கென்னே - முன்னைப்
பார்த்தன் கண்ணனிவர் நேரா - எனை
உய்யக் கொண்டருளல் வேண்டும் - அடி
உன்னைக் கோடிமுறை தொழுதேன் - இனி
வையத் தலைமையெனக் கருள்வாய்- அன்னை
வாழி! நின்ன தருள் வாழி!!!!
மகாகவி பாரதி.

விஜயகாந்த் என்னும் அற்புத மனிதர்.

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.கேப்டன் அவர்களை சிலர் தமிழ்நாட்டில் உள்ள விஜயகாந்த் எனும்
முட்டாள் என்கின்றனர்.இதோ கேப்டன் விஜயகாந்த்  பற்றிய செய்தி :
இலங்கைப் போர்,
அகதிகள் மறுவாழ்வு,
கார்கில் போர்,
கும்பகோணம் தீ விபத்து,
ஆந்திரா புயல்,
ஒரிசா வெள்ளம்,
குஜராத் நிலநடுக்கம்,
தமிழகத்தின் சுனாமி
இது போன்ற பேரிடர்கள்
இந்தியாவில் எங்கு
நடந்தாலும் முதல்
முட்டாளாக இவர் தான்
தன் சொந்தப் பணத்தை
கொடுத்து துணை நிற்பார்...
தான் சுயமாக சம்பாதித்த
பணத்தில் பாதிக்கப்பட்ட
மக்களுக்காக கொடுத்த
நிவாரணத் தொகை மட்டும்
ருபாய் 10 கோடிக்கு மேல்....
ஊழல் செய்த பணம் இல்லை...
ஏமாற்றி சேர்த்த பணம் இல்லை...
உழைத்து சம்பாதித்த பணம் !!!
அன்றைய காலத்தில் 10 கோடி
இன்றைய 100 கோடிக்கு சமமானதே....
(மக்களுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ்நாட்டின் தெய்வங்களாகிய கருணாநிதியும், ஜெயலலிதாவும் இந்த இழப்புக்கு தங்கள் சொந்த பணத்திலுருந்து ஒரு ரூபாய் கூட வழங்கியதில்லை)
2002 ல் நெசவுத் தொழில்
நழிவுற்ற போது நெசவாளர்கள்
சாப்பாட்டிற்கே கஷ்டபட்ட போது
நம் தெய்வங்கள் ஜெயா & கருணா
கஞ்சி தொட்டி திறந்து கஞ்சி
வழங்கிய போது...
இந்த முட்டாள் மட்டும் நேரில் சென்று
பத்து லட்சத்திற்கு நெசவு துணி வாங்கிவிட்டு...
இன்று நான் வாங்கியிருக்கிறேன்,
என்னை பார்த்து நிறைய பேர் வாங்க வருவாங்க, உங்கள் தொழில் முடங்கி விடாதுகவலை பட வேண்டாம்
என்று கூறினார்....
மேலும் இந்த முட்டாள்
சென்னையில் இலவச
மருத்துவமனை கட்டி
கடந்த 20 வருடங்களாக
இலவச மருத்துவம்
வழங்கி கொண்டிருக்கிறார்....
இவர் சுயமாக சம்பாதித்த பணத்தில்
மிகப் பெரிய மண்டபம் கட்டி
அதற்கு தாய் தந்தை பெயர் சூட்டி
தினமும் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கிய ஒரு அடி முட்டாள்
இவர்தான்....

காது கேளாதோர்,
வாய் பேச முடியாதோர்
இல்லங்களுக்கு மாதா மாதம் நன்கொடை.....
கை, கால் ஊனமுற்றவர்கள் இல்லங்களுக்கு மாதா மாதம் நன்கொடை.....
தன்னோடு பணியாற்றிய 100 க்கும் மேற்பட்டவர்களுக்கு பென்சன் வழங்க ஏற்பாடு......
இது போன்ற எண்ணற்ற
செயல்களுக்காக இந்த பிழைக்க
தெரியாத முட்டாளுக்கு
அப்துல்கலாம் அவர்கள் கையால்
சிறந்த குடிமகன்
என்ற விருதும் வழங்கபட்டது.....
சென்னை வெள்ளத்தில்
மக்களின் முதல்வர் முகத்தை பார்த்தாங்களோ இல்லையோ,
இந்த ஆளு முகத்தை அனைவருமே பார்த்தனர்....
சினிமா உலகில் எண்ணற்ற புதுமுகங்களை அறிமுகப்படுத்தி அவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றியவர் யாருன்னு தெரியுமா??
இந்த முட்டாள் தான்....
பல அறிவு ஜீவிகள்
நடிகர் சங்க தலைவர்களாக
இருந்தும் அவர்களால்
நிர்வகிக்க முடியாமல்,
கடனை அடைக்க முடியாமல்
வெளியேறிய ஜாம்பவான்களில்
எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி தாங்க...
ஆனால் நம்ம சொல்ற
இந்த முட்டாள் தாங்க
தூக்கி விட்டாரு அந்த சங்கத்தை....
இன்னைக்கு பேஸ்புக்,
வாட்ஸ் அப் ல இந்த
முட்டாளை தாங்க நம்ம கிண்டல்
பண்ணிட்டு இருக்கோம்.....
நான் எனக்கு தெரிந்த
விஷயங்களை மட்டும் தான் சொல்லியிருக்கேன்.
இதுபோன்று அவர் செய்த
முட்டாள்த்தனமான உதவி்கள்
இன்னும் பல.....
அன்று அப்துல்கலாம் மறைவுக்கு
இந்த நாடே வருந்தியது.
அன்றும் இத்தனை மக்கள் இருக்காங்களேனு பார்க்காம,
பெரிய பெரிய தலைவர்கள்
இருக்காங்களேனு பார்க்காம
இந்த ஆளு அழுததுல
எவ்வளவு உண்மை இருந்ததுனு
பார்த்த எல்லாருக்குமே தெரிஞ்சுருக்கும்.
(அவரோட மறைவுக்கு கூட வராம உடல்நிலை சரியில்லைனு சொன்ன கருணாநிதியும் ஜெயலலிதாவுக்கும் இப்போ எப்படி ஓட்டு கேட்க வரப்ப உடம்பு சரியாச்சுனு தெரியல.)
இது போன்ற தேச துரோக செயலுக்காக இந்த முட்டாளுக்கு நாம் அளித்து கொண்டிருக்கும் தண்டணைகள்
ஏராளம் ஏராளம் ஏராளம்..
தைராய்டு பிரச்சினை இருப்பதால்
குரல் வளம் குறைந்திருப்பதாலும் எதார்த்தமான மக்கள் மொழியில் பேசுவதாலும்,
நாம் இவரை கோமாளி,
குடிகாரர் என்றும் அழைக்கிறோம்....
நீங்களே ஒரு முடிவெடுங்கள்.....
பதிவிட்ட  முகநூல் நண்பர் அருண்குமார் அவர்களுக்கு நன்றிங்க.

முனைவர்.இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phil.,Ph.D., அவர்களது வாழ்க்கைக்குறிப்பு... (Dr.R.K.Manikkam, professor,Writer)

                                                                                                        முனைவர். இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phi...