28 டிசம்பர் 2012

குடி போதையில் வாகனத்தை இயக்காதீர்! வாழ்க்கை வாழ்வதற்கே!!

மரியாதைக்குரிய நண்பர்களே,
                 வணக்கம்.
         கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
         மனித வாழ்வின் தேவைகளில் உண்ண உணவு,உடுக்க உடை,இருக்க இருப்பிடம்,அடுத்த நான்காவது இடத்தில்  போக்குவரத்து என அத்தியாவசியத்தேவையாக  உள்ளது.
        அவ்வாறான போக்குவரத்தில் சாலை விதிகளை முறையாகப் பின்பற்றாத காரணத்தால்  உலக வரலாற்றிலேயே மனித உயிர்களைப் பலி வாங்கும் அங்கீகாரம் பெறாத நிகழ்வாக,சமுதாயச் சீர்கேட்டின் ஒருபகுதியாக,நாட்டின் முன்னேற்றத்திற்குத் தடையாக உள்ளது சாலை விபத்துதாங்க!.தற்போது சாலைவிபத்துக்கள் மனித சமுதாயத்தையே  கதிகலங்க வைக்கிறது.
        நோய்களால் இறப்பவர்களைவிட,இயற்கைச்சீற்றங்களால் இறப்பவர்களைவிட,தீவிரவாதம் போன்ற சமூகவிரோதச் செயல்களால் இறப்பவர்களைவிட சாலைவிபத்துகளால் இறப்பவர்களே மிக அதிகமாக உள்ளது..
         அவ்வாறு ஏற்படும் சாலை விபத்துகளும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் குறிப்பாக இளைஞர்களால் ஏற்படுகிறது என்கிறது சாலைப்பாதுகாப்புக் குழுவின்ஆய்வறிக்கை.
            அதன்படி மத்திய தரைவழிப்போக்குவரத்து அமைச்சகம் இந்த ஆண்டிற்கான விழிப்புணர்வு வாசகமாக ''உயிருடன் வாழ வேண்டுமெனில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதே'' என்னும் தலைப்பில் சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தி மனித உயிர்களைக்காக்க,குறிப்பாக இளைஞர்களைக் காக்க  உத்தரவிட்டுள்ளது.
               அதன் அடிப்படையில் தாளவாடி வட்டாரப்பகுதியில்  சாலை விபத்து ஏற்படக்காரணங்கள், சாலை விபத்துக்களால் ஏற்படும் இழப்புகள்,பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வது பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரங்கள் ,பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணிகள்,பொதுக்கூட்டங்கள்,கருத்தரங்குகள்,விவாத மேடைகள்,கட்டுரைப்போட்டிகள்,பேச்சுப்போட்டிகள்,தெருமுனைப்பிரச்சாரங்கள்,
சுவரோட்டிகள்,துண்டுப்பிரசுரங்கள்,விளம்பர ஒட்டிகள் என பல்வேறு நிகழ்வுகளில்  வருகிற ஜனவரி ஒன்றாம் தேதி முதல் ஏழாம் தேதி வரை விழிப்புணர்வு கொடுக்க ஏற்பாடு செய்து வருகிறோம்.
             இந்த விழிப்புணர்வுப் பிரச்சாரத்தில் 
      1)சத்தியமங்கலம் வட்டாரப்போக்குவரத்துத்துறை,
         2)தாளவாடி காவல்துறை,
    3)அரசு போக்குவரத்துக்கழகம் தாளவாடிக்கிளை-ஈரோடு மண்டலம் ,                 4)மக்கள் பிரதிநிதிகள் தாளவாடி வட்டாரம்,
     5) ஓட்டுனர் பயிற்சிப்பள்ளிகள்
     ,6) நெடுஞ்சாலைத்துறை,
      7) கல்வித்துறை.
      8)மருத்துவத்துறை,
       9) சட்டத்துறை,
      10) வட்டார வளர்ச்சி மையம்,
       11)வனத்துறை,
       12)மின்வாரியம்,
       13)பட்டு வளர்ச்சித்துறை,
      14) அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் & 
       J.S.S.தொழிற் பயிற்சி மையம்-தாளவாடி 
      (15)சமூக நல அமைப்புகளான (அ) ரோட்டரி கிளப்-தாளவாடி, (ஆ)ஒய்ஸ்மென் கிளப்-தாளவாடி, (இ)மைராடா-தாளவாடி, (ஈ)பாம்2-தாளவாடி, (உ)வீரமாமுனிவர் மொழிப்பயிற்சி மையம்,(ஊ)தொன்போஸ்கோ வழிகாட்டி மையம்-தாளவாடி,(எ) கிரிக்கெட் குழுக்கள்,(ஏ) கைப்பந்தாட்டக்குழுக்கள்,(ஐ) மகளிர் குழுக்கள்,(ஒ)சமூக ஆர்வலர்கள்,(ஓ)வீரமாமுனிவர் மொழிப்பயிற்சி மையம்-தாளவாடி,
       என அனைத்து தரப்பினரையும் இணைத்துக்கொண்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் -தாளவாடி மையம்-( ஈரோடு மாவட்டம்)  சாலைப்பாதுகாப்பு பிரச்சாரங்களை செய்யத்திட்டமிட்டுள்ளது.அதன்படி திட்ட வேலைகள் பின்வருமாறு;-
 (1)01-ஜனவரி-2013 செவ்வாய்க்கிழமை-சாலைப்பாதுகாப்பு & மது,போதைகளின் தீங்குகள்.இளைஞர்களுக்கான விழிப்புணர்வுப்பிரச்சாரம்

(2) 02 -ஜனவரி-2013 புதன்கிழமை -சாலைப்பாதுகாப்பு கட்டுரைப் போட்டிகள்,பேச்சுப்போட்டிகள் - அனைத்து பள்ளிகளின் மாணவ,மாணவியருக்காக.

(3) 03-ஜனவரி-2013 வியாழக்கிழமை - மருத்துவப்பரிசோதனை & முதலுதவிப் பயிலரங்கு - ஈஷா யோகா மையம் மருத்துவக்குழுவினர்
      பயனாளிகள் அரசு போக்குவரத்துக்கழக அனைத்து தொழிலாளர்கள்.
இடம்=தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்-தாளவாடி-ஈரோடு மண்டலம்.

(4) 04-ஜனவரி-2013 வெள்ளிக்கிழமை -சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக் கருத்தரங்கு & விவாதக்களம். 
      இடம் = J.S.S.தொழிற்பயிற்சி மையம்-தாளவாடி.

      (5) 05-01-2013 சனிக்கிழமை- ஆசனூர் காவல்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை,வனத்துறை இவர்களுடன் இணைந்து சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்.பள்ளி மாணவ,மாணவியர் மற்றும் தேசிய நெடுஞ்சாலை அனைத்து ஓட்டுனர்கள்.
        இடம்= அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட மேனிலைப்பள்ளி -

(6) 06-01-2013 ஞாயிற்றுக்கிழமை=மருத்துவர்கள் மற்றும் வாழும் கலைப்பயிற்சி குழுவினர்.
   யோகா,  மனவளக் கலைப் பயிற்சி மற்றும் சுகாதாரம் மற்றும் உடல்நலப் பயிற்சி 
இடம்=ஸ்ரீபண்ணாரி அம்மன் கரும்பு அலுவலகம்- தாளவாடி.

(7) 07-01-2013 திங்கட்கிழமை - அனைத்துப்பள்ளிகளின் மாணவ,மாணவியர் வழங்கும் சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி.
        தாளவாடி காவல்நிலையத்திலிருந்து புறப்பட்டு தாளவாடி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் தாளவாடி பேருந்து நிலையம் அருகில் அமைக்கப்பட்டுள்ள விழா மேடை வரை வந்து நிறைவு செய்தல்.
  சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு பொதுக்கூட்டம் கட்டுரைப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ,மாணவியருக்கு பரிசு வழங்குதல்.கனரக வாகனங்களின் சிறந்த ஓட்டுனர்களுக்கு பாராட்டுகளும்,பரிசுகளும் வழங்குதல்
         இடம் தாளவாடி பேருந்து நிலையம் .

23 டிசம்பர் 2012


பிரபாகரன் பற்றிய -25 குறிப்புகள்.


அன்பு நண்பர்களே,வணக்கம். 
           இந்தப்பதிவில் விடுதலைப்புலிகளின் தலைவர் மரியாதைக்குரிய வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களது குறிப்புகள் பற்றி எனக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இங்கு காண்போம்.



               பிரபாகரன் பற்றிய -25 குறிப்புகள்.. 
          

மனதுக்குப் பிடித்த ஒரு புத்தகத்தை எத்தனை முறை வாசித்தாலும் மனம் புதிய உணர்வைப் பெறுவதைப் போலத்தான், பிரபாகரன் பற்றிய நிகழ்வுகளைப் படிப்பதும். தமிழனுக்கு வீரத்தின் அர்த்தத்தை தனது வாழ்க்கை மூலம் எடுத்துக் காட்டியவர் அல்லவா...

தம்பி எனத் தமிழர்களால் அழைக்கப்படும் அண்ணன். 30 ஆண்டு காலம் இலங்கை அரசுக்குக் கிலியூட்டி வரும் புலிப் படைத் தலைவர். வீரத்தின் விளைநிலமாக தமிழ் ஈழத்தை மாற்றிக்காட்டிய மனிதர்!

01.
அரிகரன் - இதுதான் அப்பா வேலுப்பிள்ளை முதலில்வைத்த பெயர். ஒரு அண்ணன், இரண்டு அக்காக்களுக்கு அடுத்துப் பிறந்த கடைக்குட்டி என்பதால், துரை என்றுதான் எல்லாரும் கூப்பிடுவார்கள். பிறகு என்ன நினைத்தாரோ, பிரபாகரன் என்று மாற்றுப் பெயர் சூட்டியிருக்கிறார் அப்பா!

02.
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெரியசோதி, சின்னசோதி, சந்திரன், குட்டிமணி, தங்கத்துரை, சந்திரன், பிரபாகரன் ஆகிய ஏழு பேர் சேர்ந்துதான் விடுதலை இயக்கத்தை முதலில் தொடங்கினார்கள். இதற்குப் பெயர் வைக்கவில்லை. பிரபாகரன்தான் அணியில் இளையவர் என்பதால், ‘தம்பி' என்றார்கள். எல்லார்க்கும் தம்பியானதும் அப்படித்தான்!

03.
பிரபாகரனுக்கு அரசியல் முன்னோடியாக இருந்தவர் பொ.சத்தியசீலன். "போலீஸ் நிலையங்களைத் தாக்கி ஆயுதங்கள் எடுக்க வேண்டும்" என்று இவரைப் பார்த்து பிரபாகரன் கேட்க, "எடுத்தால் எங்கே வைப்பது" என்று சத்தியசீலன் திருப்பிக் கேட்க... அதன் பிறகுதான் காட்டு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்!

04.
பிரபாகரன் அடிக்கடி படித்த நாவல் - அலெக்ஸ் ஹேவியின் ஏழு தலைமுறைகள்'. அதில் இடியும் மின்னலும் இல்லாமல் மழை பொழியாது. போராட்டம் நடத்தாமல் யாரும் எதையும் தர மாட்டார்கள்' என்ற வரிகளை அடிக்கோடு போட்டுவைத்திருந்தார்!

05.
மிக மிக வேகமாக நடக்கும் பழக்கமுடையவர் பிரபாகரன். பள்ளிக்கூடம் போகும்போது சட்டைப் பையில் இருக்கும் பேனாவை இடது கையால் பிடித்துக்கொள்வாராம். அந்தப் பழக்கம் பிற்காலத்திலும் தொடர்ந்திருக்கிறது!

06."
ஏன் எப்போதும் சீருடையில் இருக்கிறீர்கள்?" என்று வெளிநாட்டுத் தமிழர் ஒருவர் கேட்டபோது பிரபாகரன் சொன்னது, "யாரும் அணியத் துணியாதது இந்த உடைதான். அதனால்தான் எப்போதும் இதில் இருக்கிறேன்."

07."
பிரபாகரன் ஒருபோதும் புகைத்தது இல்லை. மது அருந்தியதும் கிடையாது. மற்றவர்களிடமும் இப்பழக்கத்தை அவர் விரும்பவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பில் புகைபிடிக்கும் பழக்கம்கொண்ட ஒருவரை பிரபாகரன் சகித்துக்கொண்டார் என்றால், அது பாலசிங்கமாகத்தான் இருக்கும். பாலாவிடம் இருந்து வரும் சிகரெட் நெடி பிரபாகரனுக்குப் பிடிப்பதில்லை. எனவே, பிரபா முன்னிலையில் பாலாவும் சிகரெட் பிடிப்பதில்லை" என்கிறார், பாலசிங்கத்தின் மனைவி அடேல்!

08.
அக்காவின் திருமணத்தையட்டி தனக்கு அணிவிக்கப்பட்ட மோதிரத்தை விற்றுத்தான் அமைப்புக்கு முதல் துப்பாக்கி வாங்கப் பணம் கொடுத்தார் பிரபாகரன். அதன் பிறகு அவர், நகை அணிவதில்லை!

09.
எந்த ஆயுதத்தையும் கழற்றி மாட்டிவிடுவார். ஆயுதங்கள் தொடர்பான அனைத்து ஆங்கிலப் புத்தகங்களின் மொழிபெயர்ப்புகளும் அவரிடம் இருந்தன. தொழில்நுட்ப அறிவு இல்லாதவன் முழுமையான போராளியாக முடியாது' என்பது அவரது அறிவுரை!

10.
ஒவ்வொரு நவம்பர் மாதமும் 25, 26, 27 ஆகிய மூன்று நாட்களும் பிரபாகரன் உண்ணாவிரதம் இருப்பார். 26 அவரது பிறந்த நாள். 27 மாவீரர் நாள். அன்று மாலை மட்டும் தான் திரையில் தோன்றி அனைவருக்குமான உரையை நிகழ்த்துவார்!

11.‘
இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி' என்ற வார்த்தைகளைத்தான் அவர் தனது டைரியில் எழுதிவைத்திருப்பார்!

12.
போரில் யார் காயமடைந்து பார்க்கப்போனாலும், ‘பொன்னியின் செல்வன்ல வரும் பெரிய பழுவேட்டரையருக்கு 64 வீரத் தழும்புகள் உண்டு' என்று சொல்லித் தைரியம் கொடுப்பாராம் பிரபாகரன்!

13.
ஆறு கோடியே 43 லட்சம் ரூபாய் பிரபாகரனுக்கு எம்.ஜி.ஆர். கொடுத்திருக்கிறார். பிரபாகரன் கொடுத்த துப்பாக்கி ஒன்றைத் தனது தலையணைக்குக் கீழ் எம்.ஜி.ஆர். வைத்திருந்தார்!

14.
பேனாவை மூன்று விரல்களால் பிடித்துத்தான் அனைவரும் எழுதுவார்கள். பிரபாகரன் எழுதும்போது ஐந்து விரல்களாலும் பிடித்திருப்பார்!

15.
பிரபாகரனுக்குப் பிடித்த புராணக் கதாபாத்திரம் கர்ணன். "தன்னிழப்புக்கும் உயிர்த் தியாகத்துக்கும் ஒவ்வொரு மணித்துளியும் தயாராக இருந்தவன் கர்ணன். அவனை எப்போதும் நினைப்பேன்" என்பார்!

16.
தமிழீழம் கிடைத்த பிறகு எனது பணி காயம்பட்ட போராளிகளைக் கவனிப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம் பற்றியதாகவும் மட்டுமே இருக்கும் என்று பிரபாகரன் பகிரங்கமாக அறிவித்திருந்தார்!

17.
பிரபாகரன் குறித்து தங்களது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் மிக உயர்வாக எழுதிய இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரிகள் மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங், ஜெனரல் சர்தேஷ் பாண்டே, ஜெனரல் திபேந்திரசிங். இவர்கள் மூவரும் இந்திய அமைதிப் படைக்குத் தலைமை வகித்து பிரபாகரனுடன் மோதியவர்கள்!

18.
அநாதைக் குழந்தைகள் (போரில் பெற்றோரை இழந்தவர்கள்) மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருந்தார் பிரபாகரன். அவர்களைப் பராமரிக்க செஞ்சோலை சிறுவர் இல்லம், காந்தரூபன் அறிவுச் சோலை ஆகிய காப்பகங்களை வைத்திருந்தார். பெற்றோர் இல்லாத அநாதையாக அமைப்புக்குள் வந்து பெரிய போராளியாக ஆகி மறைந்தவர் காந்தரூபன்!

19.
உயிர் பறிக்கும் சயனைட்தான் எங்கள் இயக்கத்தை வேகமாக வளர்த்த உயிர்' என்றார் பிரபாகரன்!

20.
பிரபாகரனைச் சிலர் குறை சொன்னபோது, அமைப்பில் இருந்து ஒன்றரை ஆண்டுகள் விலகி இருந்தார்!

21.
பிரபாகரனிடம் நேரடியாக போர்ப் பயிற்சி பெற்ற முதல் டீம்: கிட்டு, சங்கர், செல்லக்கிளி, பொன்னம்மான். இரண்டாவது டீம்: சீலன், புலேந்திரன். மூன்றாவது டீம்: பொட்டு, விக்டர், ரெஜி. இவர்கள்தான் அடுத்து வந்தவர்களுக்குப் பயிற்சி கொடுத்தவர்கள்!

22.
தன் அருகில் இருப்பவர் குறித்து யாராவது குறை சொன்னால் பிரபாகரன் பதில் இப்படி இருக்குமாம், "நான் தூய்மையாக இருக்கிறேன். இறுதி வரை இருப்பேன். என்னை யாரும் மாற்ற முடியாது. நீங்கள் குறை சொன்னவரை என் வழிக்கு விரைவில் கொண்டுவருவேன்!"

23."
ஒன்று நான் லட்சியத்தில் வென்றிருக்க வேண்டும். அல்லது போராட்டத்தில் இறந்திருக்க வேண்டும். இரண்டும் செய்யாத என்னை எப்படி மாவீரன் என்று சொல்ல முடியும்?" என்று அடக்கமாகச் சொல்வார்!

24.
மிக நெருக்கடியான போர்ச் சூழல் நேரங்களில் பெட்ரோல் அல்லது ஆசிட்டுடன் ஒருவர் பிரபாகரனுடன் இருப்பாராம். அவருக்கு ஏதாவது ஆனால், உடனேயே உடலை எரித்துவிட உத்தரவிட்டிருந்தார். எதிரியின் கையில் தன் சாம்பல்கூடக் கிடைக்கக் கூடாதுஎன்பதில் தெளிவாக இருந்திருக்கிறார்!

25.‘
தமிழீழ லட்சியத்தில் இருந்து நான் பின்வாங்கினால் என்னுடைய பாதுகாவலரே என்னைச் சுட்டுக் கொல்லலாம்' என்று பகிரங்கமாக அறிவித்திருந்தவர்.

18 டிசம்பர் 2012

கறுப்புப்பெட்டி

மரியாதைக்குரிய நண்பர்களே,
       வணக்கம். 
      இந்தப் பதிவில் விமானத்தில் பொருத்தப்படும் கறுப்புப்பெட்டி பற்றிய விபரம் காண்போம்.



      உண்மைகளைக் கண்டறிய உதவும் கறுப்புப் பெட்டி:
      "கறுப்புப் பெட்டி" என்பது விமானத்தில் பொருத்தப்பட்டிருக்கும் ஒரு இன்றியமையாத கருவியாகும். விமானம் இயங்கிக் கொண்டிருக்கும்போது விமானிகளுக்கும், விமானக் கட்டுப்பாட்டு அறைக்கும் இடையே நடைபெறும் தகவல் பரிமாற்றங்களை இந்த கறுப்புப் பெட்டி பதிவு செய்து கொண்டே இருக்கும்.
விமானம்
எவ்வளவு பெரிய விபத்தை சந்தித்தாலும், முழுவதும் தீப்பிடித்து எரிந்தாலும், அல்லது கடலில் விழுந்து மூழ்கினாலும், இந்த கறுப்புப் பெட்டி எவ்வித சேதமும் இல்லாமல் தப்பிவிடும். அந்த அளவுக்கு பாதுகாப்பான முறையில் இது தயாரிக்கப்படுகிறது. பிறகு அதனுள் பதிந்திருக்கும் தகவல்களைக் கொண்டு விமானம் விபத்திற்குள்ளான காரணத்தை அறியலாம்.

இந்த
கறுப்புப் பெட்டி பெரும்பாலும் விமானத்தின் வால் பகுதியில் அல்லது மேற்கூரையில் அமைக்கப்பட்டிருக்கும், அப்போது தான் எவ்வளவு பெரிய விபத்து ஏற்பட்டாலும் சேதமடையாமல் இருக்கும். ஒரு விமானத்தில் மொத்தம் 2 கறுப்புப் பெட்டிகள் இருக்கும். பெரிய கறுப்புப் பெட்டிக்குப் பெயர் "பிளைட் டேட்டா ரெகார்டர்". இது விமானம் பறக்கும் நேரம், வேகம், உயரம் ஆகிய விபரங்களை பதிவு செய்யும். சிறிய கறுப்புப் பெட்டிக்குப் பெயர் "வாய்ஸ் ரெகார்டர்". இது விமானியின் அறையில் நடக்கும் உரையாடல்களைப் பதிவு செய்யும்.



வரலாறு
:

கறுப்புப்
பெட்டியை 1953 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவை சேர்ந்த டேவிட் வாரன் என்பவர் கண்டுப்பிடித்தார். 1934 ஆம் ஆண்டு இவரின் தந்தை விமான விபத்தினால் மறைந்தார். ஆனால் விபத்திற்கான காரணம் கடைசி வரை தெரியவில்லை. இதனால் விமானங்கள் விபத்திற்குள்ளாகும் போது அதற்கான காரணங்களை கண்டறிய வேண்டும் என்று ஆராய்சியில் ஈடுபட்டு கறுப்புப் பெட்டியை கண்டுபிடித்தார்.


சில
ஆச்சர்யமான தகவல்கள் :
கறுப்புப்
பெட்டியின் உண்மையான நிறம் கருப்பு அல்ல "ஆரஞ்சு நிறம்
ஒரு
கறுப்புப் பெட்டி கடைசியாக நடந்த 25 மணி நேர விமானத் தகவல்களையும், 30 நிமிட விமானிகளின் உரையாடல்களையும் கொண்டிருக்கும்.
கறுப்புப்
பெட்டியின் உறுதிக்கு காரணம் அலுமினியம், சிலிகா, டைட்டானியம், ஸ்டைன்லெஸ் ஸ்டீல் ஆகியவை கலந்த கலவையால் அது உருவாகப்படுவது தான்.
விபத்து
நடந்த பிறகு கறுப்புப் பெட்டியிலிருந்து "பீப்" சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். இது பெட்டியை கண்டுபிடிக்க உதவுகிறது.
இது
2000 பாரன்ஹீட் வெப்பத்தையும் தாங்கும், 2000 கிலோ எடையுடைய பொருள் விழுந்தாலும், 30,000 அடி உயரத்திலிருந்து விழுந்தாலும் சேதமாகாது.

முனைவர்.இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phil.,Ph.D., அவர்களது வாழ்க்கைக்குறிப்பு... (Dr.R.K.Manikkam, professor,Writer)

                                                                                                        முனைவர். இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phi...