23 ஜனவரி 2014

தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி 238 கேள்விகளா?

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.
காயல்பட்டினம் ‘மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு - மெகா’ சார்பில், தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ், காயல்பட்டினம் நகராட்சியிடம் 238 கேள்விகள் ‘மெகா’ அங்கத்தினரால் கேட்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ‘மெகா’ செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-

அக்டோபர் 25ஆம் நாள் – தகவலறியும் உரிமை நாளாகும். அதனை முன்னிட்டு, கடந்தாண்டு அக்டோபர் மாதம் 25ஆம் நாளன்று, காயல்பட்டினம் ‘மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு - மெகா’ சார்பில், அதன் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்தாலோசனைக் கூட்டத்தில், “நகராட்சிப் பணிகளில் பொதுமக்களுக்குள்ள சந்தேகங்களைக் கேள்விகளாக வடிவமைத்து, அமைப்பின் சார்பில் காயல்பட்டினம் நகராட்சிக்குத் திரளாகச் சென்று, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அக்கேள்விகளை நகராட்சி தகவல் அலுவலரிடம் அளிக்க” தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அதனடிப்படையில், இம்மாதம் 07ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 11.30 மணியளவில், ‘மெகா’ அங்கத்தினர் சுமார் 30 பேர் - அதன் சர்வதேச ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் சாளை நவாஸ் தலைமையில், காயல்பட்டினம் நகராட்சி அலுவலகத்திற்குத் திரண்டு சென்று, பொது தகவல் அலுவலரான நகராட்சி சுகாதார ஆய்வாளரிடம் - தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் 238 கேள்விகளை துறை வாரியாகப் பிரித்து, தனித்தனி உறைகளிலிட்ட கேள்விகளை சமர்ப்பித்து, அவற்றுக்கான ஒப்புகை முத்திரையைப் பெற்று வந்தனர்.



தகவலறியும் உரிமை சட்டத்தின் படி, வரும் பிப்ரவரி மாதம் 06ஆம் தேதிக்குள் இக்கேள்விகளுக்கு நகராட்சி விடையளிக்க வேண்டும். அவ்வாறு பெறப்படாவிடில், மேல் முறையீட்டு அலுவலரான நகராட்சி ஆணையரிடம் மேல் முறையீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

கேள்விகள் சமர்ப்பிக்கப்பட்ட 60 நாட்களுக்குள் அவரது விடையும் கிடைக்கப்பெறாவிடில், கேள்விகளை சமர்ப்பித்த அனைவரையும் ஒருங்கிணைத்து, சென்னையிலுள்ள - தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்திடம் முறையிட திட்ட ‘மெகா’ திட்டமிட்டுள்ளது.

தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ், காயல்பட்டினம் நகராட்சியில் சமர்ப்பிக்கப்பட்ட கேள்விகள் வருமாறு:-


































இவ்வாறு, ‘மெகா’ செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
















தகவல் அறியும் உரிமை சட்டம்-2005 வரலாறு.

மரியாதைக்குரியவர்களே,
                       வணக்கம்.கொங்குதென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை வரவேற்கிறேன்.இந்தபதிவில் காயல்பட்டினம் வலைப்பதிவில் கிடைத்த தகவல்களை பதிவிடுகிறேன்.

               இந்திய அளவில் பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் விளைவாக உருவானதே தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005. இதற்கான விதைகள் - 1987 ஆம் ஆண்டு ராஜஸ்தானில் உள்ள தேவ்துங்கிரி என்ற சிறு கிராமத்தில் தூவப்பட்டன. அவ்வாண்டில் தான் - மனிதஉரிமை ஆர்வலர்கள் நிக்கில் தே, அஞ்சி, ஷங்கர் சிங் மற்றும் அருணா ராய் ஆகியோர் இக்கிராமத்தில், கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கான ஓர் அமைப்பை உருவாக்க முடிவுசெய்தனர்.

துவக்கமாக - அரசு திட்டங்களில் பணிபுரியும் எளிய மக்கள் எவ்வாறு சம்பளம் வழங்குவதில் ஏமாற்றப்படுகின்றனர், நியாய விலை கடைகளில் எவ்வாறு முறையாக விநியோகங்கள் மேற்கொள்ளப்படுவதில்லை என்ற விபரங்களை அவர்கள் கண்டறிந்தனர். கிராம மக்களோடு தங்கி அவர்கள் புரிந்த மூன்றாண்டு சேவையின் விளைவாக மஸ்தூர் கிசான் சக்தி சங்கட்டன் என்ற அமைப்பு 1990 ஆம் ஆண்டு உருவாகியது.

இந்த அமைப்பு முறையாக செயல்பட - அரசிடம் இருந்து பல தகவல்கள் பெறுவது அவசியமாக இருந்தது. ஒவ்வொரு முறையும் அரசிடம் தகவல் பெற இவ்வமைப்பு முயற்சி செய்யும்போது, ஆங்கிலேய காலத்து அதிகார ரகசியங்கள் சட்டம், 1923 (Official Secrets Act, 1923) - இவர்களுக்கு பதிலாக வழங்கப்பட்டு, தகவல்கள் மறுக்கப்பட்டன. பெரும் போராட்டத்திற்கு இடையில் சில தகவல்களை இவ்வமைப்பு வெற்றிகரமாக பெறவும் செய்தது. அரசு திட்டம் மூலம் இல்லாத நிறுவனம் ஒன்றிற்கு 36 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது போன்ற தகவலை இவ்வமைப்பு வெளிக்கொண்டுவந்தது.

இது போல் பல முறைக்கேடுகள் வெளிவரவே, எவ்வித தடையும் இன்றி அரசு துறையினால் தகவல்கள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் இவ்வமைப்பு அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள பீவர் என்ற ஊரில் ஏப்ரல் 5, 1996 அன்று போராட்டத்தை நடத்தியது. 40 நாட்கள் நடந்த இப்போராட்டம் - தகவல் பெறும் உரிமைச் சட்டம் கோரும் இயக்கத்திற்கு ஒரு முன்னோடி என்றே சொல்லவேண்டும்.

இந்திய ஊடகங்கள் அவை (Press Council of India) - 1996 ஆம் ஆண்டு வடிவமைத்த முன்மாதிரி கொண்டு சில மாநிலங்கள், தகவல் பெறும் உரிமைச் சட்டங்களை - தத்தம் மாநிலங்களில் - கொண்டு வந்தனர். இந்தியாவில் - குடிமக்களுக்கு, தகவல் பெறும் உரிமை வழங்கி சட்டம் கொண்டுவந்த முதல் மாநிலம் தமிழகம் என்பது குறிப்பிடத்தக்கது. மாநிலங்களில் இயற்றப்பட்ட சட்டங்களில் - பல குறைப்பாடுகள் இருந்தன. இது போன்ற சட்டம் - தேசிய அளவில் வகுக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.

தேசிய அளவில் இது குறித்து போராடிய அமைப்புகளில் - National Campaign for People’s Right to Information (NCPRI) போன்றவை முக்கியமானவை. 2002 ஆம் ஆண்டு Freedom of Information Act 2002 என்ற சட்டத்தினை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த சட்டம் திருப்தியானதாக இல்லை என்று எதிர்ப்புகள் கிளம்பவே, இந்த சட்டம் நடைமுறைக்கு வரவில்லை.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் விளைவாக, இந்திய பாராளுமன்றம், ஜூன் 15, 2005 அன்று தகவல் பெறும் உரிமைச் சட்டம் என்ற புதிய சட்டத்தினை நிறைவேற்றியது. இச்சட்டத்திற்கு - இந்திய ஜனாதிபதி, ஜூன் 22, 2005 ஒப்புதல் வழங்க - அக்டோபர் 12, 2005 அன்று - இச்சட்டம் நடைமுறைக்கு வந்தது.


இந்த சட்டத்தின் நோக்கம் என்ன என்பதை - இச்சட்டத்தின் முகப்புரை தெரிவிக்கிறது.

இச்சட்டம் குறித்து தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்த (நி.சீ.3) துறை வெளியிட்டுள்ள கையேடு வழங்கும் சாராம்சம் இதோ:
<><><> அரசு அலுவலகங்கள் ஒவ்வொன்றின் செயல்பாட்டிலும் வெளிப்படையான ஒளிவுமறைவற்ற நிலையைக் கொண்டு வருதல்;

<><><> அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களில் செயலாற்றுபவர்களிடையே பொறுப்புடமையை மேம்படுத்துதல்;

<><><> அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களின் செயலாற்றல் குறித்த தகவல்களைப் பெற விரும்பும் குடி மக்களுக்கு, அதை அளிக்க வகை செய்வதோடு , ஊழலை ஒழித்தல்;

<><><> அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களைப் பொறுப்புடையதாக ஆக்குவதோடு உள்ளார்ந்த தகவல்களின் ரகசியத்தைக் கட்டிக் காத்தல்.

எட்டு ஆண்டுகளுக்கு மேலாக அமலில் உள்ள இச்சட்டம் மூலம் பல வெற்றிகளை, பல சமூக ஆர்வலர்கள் பெற்றுள்ளனர்.

மும்பை ஆதர்ஷ் அடுக்குமாடி கட்டிட ஊழல் வெளிக்கொண்டு வர இந்த சட்டம் முக்கிய பங்கு வகித்தது. இதன் விளைவாக - முதல் மந்திரி அசோக் சவான் பதவி விலகவும் நேரிட்டது.

அஸ்ஸாம் மாநிலத்தில் வறுமை கோட்டின் கீழே உள்ள மக்களுக்கு செல்லவேண்டிய பொது விநியோக (ரேசன்) பொருட்கள் முறைக்கேடாக கையாடப்பட்ட விஷயம் - இச்சட்டம் மூலம், சமூக ஆர்வலர் ஒருவரால் வெளிக்கொண்டுவரப்பட, பல அரசு அலுவலர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஊடகங்களின் பார்வையில் பட்ட இது போன்ற பல வெற்றிகளை தவிர, ஆயிரங்கணக்கான இந்தியர்கள், சிறு விஷயங்கள் முதல் பெரிய விஷயங்கள் வரை - இந்த சட்டத்தை பயன்படுத்தி, தங்கள் உரிமையை நிலை நாட்டி வருகின்றனர்.

இந்த சட்டத்தை பயன்படுத்தி, தொடர்ச்சியாக பல அரசு துறைகளுக்கு விண்ணப்பங்கள் அனுப்பும் சமூக ஆர்வலர்களை கேலியாக பல அரசு அதிகாரிகளும், சில பொது மக்களும் பார்த்தாலும் - இச்சட்டம் மூலம் வெளிப்படையான, ஊழலற்ற சமுதாயத்தை உருவாக்க போராடும் பலர் - இதனால் தங்கள் உயிரை இழந்த சம்பவங்களும் ஏராளம் - என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த சட்டம் அமலுக்கு வந்த சில காலங்களிலேயே - இச்சட்டம் குறித்த எதிரான விமர்சனங்களும் வர துவங்கின. அவைகளில் குறிப்பிடும்ப்படியானவை, இச்சட்டம் மூலம் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்லியே அரசு துறைகள் முடங்கிவிடும் போன்ற ஐயப்பாடுகள்.

இது போன்ற விமர்சனங்களுக்கான பதிலினை இந்த சட்டத்தின் - விதிமுறை 4 வழங்குகிறது. இந்த விதிமுறை - ஒரு அரசு நிறுவனம், தன்னிடம் உள்ள அனைத்து தகவல்களையும் முறையாக குறியிட்டு, பகுதி வாரியாக ஆவணப்படுத்தி பாதுகாக்க வேண்டும் - என்று தெரிவிக்கிறது. மேலும் அதில் முக்கிய தகவல்களை - தானாகவே (Suo Moto / Pro-active), அவ்வப்போது இணையதளம் போன்ற வாயிலாக வெளியிடவும் வலியுறுத்துகிறது. இதனால் - தகவல் கோரி பெறப்படும் விண்ணப்பங்களும் குறையும்.

இதனையே இது குறித்து மத்திய அரசு வெளியிட்ட கையேடுகளும் தெளிவுபடுத்துகின்றன.
மத்திய அரசு வெளியிட்டுள்ள கையேட்டில் இருந்து...




தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் ஒருவர் - ஒரு அரசு நிறுவனத்திடம் உள்ள ஒரு தகவலை மட்டும் தான் கோரமுடியும். அந்நிறுவனத்தின் கருத்தையோ, அபிப்பிராயத்தையோ கோர இயலாது. எனவே - முறையாக செயல்படும் ஓர் அரசு நிறுவனத்திற்கு, முறைப்படி வகுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு பதில் கூற எவ்வித சிரமும் இருக்காது.
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேள்விகள் எழுப்பி - பாரத பிரதமர் அலுவலக வாயிலில் 1984 ஆம் ஆண்டு நடந்த போபால் விஷவாயு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் (2009 ம் ஆண்டு)...

(c) Frontline (Fortnightly)
ஜனவரி 7 அன்று மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (MEGA) ஏற்பாட்டில், சமூக ஆர்வலர்கள் - 238 கேள்விகளை, காயல்பட்டினம் நகராட்சியிடம் - தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் சமர்ப்பித்துள்ளனர்.


இக்கேள்விகள் - பகுதி வாரியாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு விண்ணப்பத்திலும், 1 முதல் 15 கேள்விகளாக, ஏறத்தாழ 25 சமூக ஆர்வலர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் - நகராட்சியிடம் பல கேள்விகளை கேட்டு, மேல்முறையீடு செய்யாமல் விட்ட பலரும் உண்டு. மேல்முறையீடு செய்து பலன் இல்லாமல், சென்னை வரை தங்கள் முறையீட்டை கொண்டு சென்றவர்களும் உண்டு.

நகராட்சி குறித்த அடிப்படை தகவல்களை வெளியிடவேண்டும் என 2007ஆம் ஆண்டு - நகராட்சி நிர்வாகத்துறையால் சுற்றறிக்கை ஒன்று விடப்பட்டது.



அதனை தொடர்ந்து TAMIL NADU TOWN PANCHAYATS, THIRD GRADE MUNICIPALITIES, MUNICIPALITIES AND MUNICIPAL CORPORATIONS (PUBLIC DISCLOSURE) RULES, 2009 என்ற தனி சட்டத்தையே தமிழக அரசு - 2009 இல் அறிமுகம் செய்ததது.








ஆனால் காயல்பட்டினம் நகராட்சியின் இணையதளத்தில் (http://municipality.tn.gov.in/kayalpattinam/) விதிமுறைகள் கூறும் தகவல்கள் பெரும்பாலானாவை இன்றளவும் ஏற்றப்படவில்லை.
ஜனவரி 29, 2013 அன்று நடந்த நகர்மன்ற கூட்டத்தில், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் - தகவல்கள் முறையாக வழங்காத காரணத்தால், தொடரப்படும் வழக்கிற்காக அதிகாரிகள் சென்னைக்கு அடிக்கடி செல்வதால், நகராட்சி பணிகள் பாதிக்கப்படுகிறது என்றும், எனவே - தேவையான தகவல்களை நகராட்சி இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட கோரி நகர்மன்றத் தலைவர் தீர்மானம் ஒன்று முன் மொழிந்திருந்தார். இருப்பினும் பெருவாரியான உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே அத்தீர்மானம் நிறைவேறவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.







அரசு மற்றும் அதன் வெவ்வேறு துறைகளின் வெளிப்படையான செயல்பாடுக்காகவும், ஊழலை ஒழிப்பதற்காகவும் கொண்டு வரப்பட்ட தகவல் பெறும் உரிமைச் சட்டம் - தனது 8 ஆண்டு பயணத்தில், பல அனுபவங்களை கற்று தந்துள்ளது. இந்த சட்டத்தினை மதித்து பதில் கூறும் துறைகள் சில இருக்க, இச்சட்டத்தினை மதிக்காத அரசு துறைகளே மிக அதிகம். இந்நிலைக்கு முக்கிய காரணம் - தகவல் ஆணையத்தின் செயல்பாடும் கூட.

தகவல் ஆணையத்தின் அலுவலர்களின் எண்ணிக்கை மிக குறைவு என்பது ஒரு புறம் இருக்க, மேல்முறையீட்டுக்கு பிறகும் பதில் கிடைக்காமல் ஆணையத்திற்கு வரும் இரண்டாம் மேல்முறையீடு விண்ணப்பங்களை - விசாரிக்க சென்னையில் உள்ள தகவல் ஆணையம் பல மாதங்கள் எடுத்து கொள்கிறது. அது மட்டும் அல்ல - தகவல்களை முறையாக வழங்க தவறும் அதிகாரிகள் மீது அபராதம் (காலதாமதம் ஆன நாள் ஒன்றிற்கு ரூபாய் 250 வீதம் கூடுதலாக ரூபாய் 25,000 வரை) விதிக்க சட்டத்தில் இடம் இருந்தும் - தொடர்ச்சியாக இச்சட்டத்தை மதிக்காத அதிகாரிகள் / அரசு அலுவலகங்கள் மீது கூட அபராதம் விதிக்க ஆணையம் தயக்கம் காட்டுவது வேடிக்கையாக உள்ளது.

சமீபத்தில் - தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், அரசியல் கட்சிகளுக்கு விதிவிலக்கு அளித்து பாராளுமன்றத்தில் சட்ட திருத்தும் கொண்டுவரப்பட்டது. சமூக ஆர்வலர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், பெருவாரியான கட்சிகளின் ஆதரவுடன் இத்திருத்தம் நிறைவேறியது. 8 ஆண்டுகளில் - இச்சட்டம் குறித்து அறிமுகம் செய்யப்பட்ட முதல் திருத்தம் இதுவாகும்.

படிப்படியாக இச்சட்டம் அழிந்திடாமல் இருக்க, 8 ஆண்டு அனுபவத்தில் அரசு அதிகாரிகள் பயன்படுத்திய இச்சட்டத்தில் உள்ள ஓட்டைகளை அடைக்க திருத்தங்களை - சமூக ஆர்வலர்கள் முன்மொழிவது காலத்தின் கட்டாயமாகும்.
நன்றி காயல்பட்டினம் இணையதளம்.

21 ஜனவரி 2014

கம்ப்யூட்டர் கீ போர்டில் இல்லாத குறியீடுகள்...!

மரியாதைக்குரியவர்களே,
                வணக்கம்.நம்ம கணிணியில் இல்லாத குறியீடுகளை வரவழைக்க வேண்டுமா?இதோ அதன் விவரம்...
கம்ப்யூட்டர் கீ போர்டில் இல்லாத குறியீடுகள்...!
Alt + 0153..... ™... trademark symbol
Alt + 0169.... ©.... copyright symbol
Alt + 0174..... ®....registered trademark symbol
Alt + 0176 ...°......degree symbol
Alt + 0177 ...±....plus-or -minus sign
Alt + 0182 ...¶.....paragraph mark
Alt + 0190 ...¾....fraction, three-fourths
Alt + 0215 ....×.....multiplication sign
Alt + 0162...¢....the cent sign
Alt + 0161.....¡..... .upside down exclamation point
Alt + 0191.....¿..... upside down question mark
Alt + 1...........smiley face
Alt + 2 ......☻.....bla ck smiley face
Alt + 15.....☼.....sun
Alt + 12......♀.....female sign
Alt + 11.....♂......m ale sign
Alt + 6.......♠.....spade
Alt + 5.......♣...... Club
Alt + 3............. Heart
Alt + 4.......♦...... Diamond
Alt + 13......♪.....eighth note
Alt + 14......♫...... beamed eighth note
Alt + 8721.... ∑.... Nary summation (auto sum)
Alt + 251.....√.....square root check mark
Alt + 8236.....∞..... infinity
Alt + 24.......↑..... up arrow
Alt + 25......↓...... down arrow
Alt + 26.....→.....right arrow
Alt + 27......←.....left arrow
Alt + 18.....↕......up/down arrow
Alt + 29......↔...left right arrow

12 ஜனவரி 2014

நமது புகைப்படம் இணையத்தில் எங்கு பரவிக்கிடக்கிறது என அறிய.

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.


உங்கள் புகைப்படங்கள் இணையத்தில் எங்கெங்கு உள்ளன என்று கண்டறிய.............

இணைய உலகில் புகைப்படங்கள் பலவகையில் பரவிக்கிடக்கின்றன. பொதுவான படம் என்று இருந்துவிட்டால் பரவயில்லை. ஆனால் ஒருவரின் அந்தரங்கப்படங்கள் (Personal photos)
வெளியானால் என்னாவது? சில நேரம் குடும்பப் புகைப்படங்கள் கூட மோசமாக சித்தரிக்கப்படுகிறது. மேலும் நீங்கள் புகைப்படத்துறையில் இருப்பவரெனின் எடுக்கும் புகைப்படங்களுக்கு நீங்கள் மட்டுமே அதன் சொந்தக்காரராக இருப்பீர்கள். உங்கள் புகைப்படத்தில் காப்பிரைட் (copyright and watermark ) போன்று எதாவது வாசகத்துடன் அதை இணையத்தில் வெளியிட்டு இருப்பீர்கள்.ஆனால் அது இணையத்திலேயே பல இடங்களில் பல பேரால் நகல் எடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு கொண்டிருக்கும். இதையெல்லாம் எப்படி கண்டறிவது?

இதற்கு தான் TinEye என்று ஒரு புதுமையான இணையதளம் உள்ளது. உங்களின் அனுமதி இல்லாமலே உங்களின் புகைப்படங்கள் இணையத்தில் எங்கெங்கு உள்ளளன என்று விரைவாக தேடித்தரும். உங்களுக்கு வேண்டிய புகைப்படத்தின் இணைப்பு கொடுத்ததும் அல்லது உங்கள் கணிப்பொறியில் இருந்து அப்லோட் (upload) செய்தும் தேடலாம். இத்தளம் உங்களின் புகைப்படத்தின் டிஜிட்டல் தன்மையை (digital signature) புரிந்து கொண்டு தேடுகிறது.

இதன் மூலம் தேடுபொறிகளில் கூட கண்டுபிடிக்கமுடியாத ஒளிப்படங்களை வினாடிகளில் கண்டுபிடித்து தரும். மேலும் உங்கள் புகைப்படங்களை சிறிது மாற்றம் செய்து பயன்படுத்திருந்தாலும் கண்டுபிடித்துவிடும். இது இலவச சேவை தான். இதனை வலை உலவிகளில் நீட்சியாகவும் (addon IE/firefox) பயன்படுத்தி எளிதாக தேடலாம்.

எந்த புகைப்படத்தையும் இணையத்தில் பகிர்ந்து கொள்ளாதவர்களும் எதாவது இணையத்தில் தரவிறக்கிய படங்களையும் தேடலாம். முடிவுகள் எந்தெந்த இணையதளங்களில் காணப்படுகிறது என்று அறியலாம்.

இணையதள முகவரி : http://www.tineye.com/
நன்றி;திருமிகு.மைதீன் பாஷா அவர்களுக்கு நன்றி.

08 ஜனவரி 2014

பொங்கலும்-சூரிய பகவானும்


மரியாதைக்குரியவர்களே,
                         வணக்கம்.
     பொங்கல் வழிபாடு சூரியனுக்கு நன்றி செலுத்தவே ஆகும்.இங்கு சூரிய பகவானை பற்றி  காண்போம்.

           "கண்கண்ட தெய்வம்' என்று போற்றப்படுபவர் சூரியன். சூரியனின் தோற்றம் குறித்து புராணங்கள் பலவாறு பேசுகின்றன. "வைவஸ்சதமன்' என்னும் மந்திர நூல், ஸ்வேத வராக கல்பத்தின் தொடக்கத்தில் விராட் புருஷனுடைய கண்களிலிருந்து சூரியன் அவதரித்தான் என்கிறது. உலகம் தோன்றியதும் ஓம் என்ற ஒலி எழுந்தது. அந்த ஓசையிலிருந்து சூரியன் தோன்றினான் என்கிறது சூரிய புராணம்.

கச்யபர்- அதிதி தம்பதியருக்குப் பிறந்தவன் சூரியன். பிரபவ ஆண்டு மகாசுக்ல சப்தமியில், விசாக நட்சத்திரத்தில் அதிதியிடமிருந்து தோன்றிய அண்டத்திலிருந்து ஒளி தோன்றியது. அதிலிருந்து பன்னிரண்டு புதல்வர்கள் அவதரித்தார்கள். அந்தப் பன்னிரண்டு பிள்ளைகள் ஒன்றுசேர்க்கப்பட்டு சூரியன் என்ற பெயரில் ஆயிரம் கிரணங்களுடன் உலா வருகிறான் என்கிறது சாம்ப புராணம்.

சூரியனுக்கு ஆயிரக்கணக்கான பெயர்களுண்டு. அவையெல்லாம் காரணப் பெயர்கள். அதிதிதேவியிடமிருந்து தோன்றிய அண்டம் இரண்டாகப் பிளந்து அதனால் சூரியனுக்கு ஏற்பட்ட பெயர் மார்த்தாண்டன். தேவர்களுக்கெல்லாம் தேவனாக இருப்பதால் சூரியன் "மகாதேவன்' எனப்படுகிறார். உலகில் உயிரினங்கள் படைப்புக்குக் காரணமாக இருப்பதால் "பவன்' எனப்படுகிறார். உலகப் பிரதிகளின் உற்பத்தி சூரியனிடமிருந்து தொடங்குவதால் "பிரஜாபதி' எனப் பெயர் பெற்றார். அதிதியின் மகன் என்பதால் "ஆதவன்' எனப்படுகிறார். எங்கும் பிரகாசமாய் ஒளிவீசுவதால் "சவிதா' எனப்படுகிறார். ஒளியில் பல வண்ணங்கள் இருப்பதால் "சித்ரபானு' என்று சிறப்பிக்கப்படுகிறார்.
மிகவும் பிரகாசமாகத் திகழ்வதால் "பாஸ்கரன்' என்றும்; மிகவும் விரைவாகப் பயணிப்பதால் "அரியமான்' என்றும்; தன்னை வழிபடுபவர்களுக்கு அருள்புரிவதால் "மித்திரன்' என்றும்; கேட்ட வரத்தைத் தருவதால் "வருணன்' என்றும்; தேவர்களின் அபிமானத்தைப் பெற்றிருப்பதால் "விஸ்வான்' என்றும்; எல்லா உலகங்களையும் காப்பதால் "பூஷ்யா' எனவும் போற்றப்படுகிறார்.

அதிகாலையில் சூரியன் ரிக் வேதமாகவும், உச்சிக்காலத்தில் யஜுர் வேத சொரூபமாகவும், மாலை நேரத்தில் சாமவேத சொரூபனாகவும் இருக்கிறார் என்று வேதம் கூறுகிறது.

வெளிநாடுகளிலும் சூரியனுக்குப் பல பெயர்கள் உள்ளன.

எகிப்தியர் "ஆமன்ரா' என்றும், கிரேக்கர்கள் "போபஸ்- அப்போலா' என்றும், ஈரானியர் "மித்ரா' என்றும், சுமேரியர்கள் "சாமாஷ்' என்றும் அழைக்கிறார்கள்.

பாபிலோனியாவிலும், ரோமாபுரியிலும் சூரிய வழிபாடு உண்டு. மேலும், சீனா, ஜப்பான், மெக்சிகோ, பெரு நாடுகளி லும் சூரிய வழிபாடு உண்டு.

தமிழ்நாட்டில், குடந்தைக்கு அருகிலுள்ள சூரியனார் கோவில் மிகவும் புகழ்பெற்றது. தஞ்சைக்கு அருகிலுள்ள திருக்கண்டியூரில் கல்ப சூரியன் அருள்புரிகிறார். மற்றும் வீரட்டம், திருப்புறவார், பனங்காட்டூர் ஆகிய ஊர்களிலும் சூரியனுக்குக் கோவில்கள் உள்ளன. இதேபோல் வடநாட்டில் துவாரகா, கோனார்க், பூரி, கயா ஆகிய நகரங்களில் சூரியனுக்கென்றே புகழ்பெற்ற கோவில்கள் உள்ளன. காசியில் (வாரணாசி) மட்டும் சூரியனுக்கு 12 கோவில்கள் உள்ளன. அவை: கங்காதித்யர், விருத்தாதித்யர், திரௌபதி ஆதித்யர், லோலார்க்கர் ஆதித்யர், மயூராதித்யர், அருணாதித்யர், பொம்பாதித்யர், உத்திர ஆதித்யர், சுஷோல்கா ஆதித்யர், யம ஆதித்யர், கேசவாதித்யர், விமலாதித்யர்.

தாய்லாந்து நாட்டில் பாங்காக் நகரில், சூரியனுக்கு அமைந்த கோவிலை "வாட் அருண்' என்று அழைப்பர். ஜப்பானில் இஸ்கு நதிக்கரையில் உள்ள சூரியன் கோவில் "இசே' என்று அழைக்கப்படுகிறது. இக்கோவிலில் தினமும் கற்களால் அக்னி உண்டாக்கி வழிபாடுகள் நடைபெறுகின்றன. எகிப்தில் நைல் நதிக்கரையோரம் அமைந்துள்ள "அபுசிம்பெல்' என்ற சூரியக்கோவிலில், சூரியன் உதிக்கும்பொழுது அதன் ஒளிக்கதிர்கள் கோவிலின் கருவறைக்குள் விழும்படி அமைத்துள்ளார்கள்.

சூரியனுக்கு ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பெயருண்டு. தை மாதத்தில் விஷ்ணு, மாசி மாதத்தில் வருணன், பங்குனியில் பூஜா, சித்திரையில் அம்சுமான், வைகாசியில் தாதா, ஆனியில் சவிதா, ஆடியில் அரியமான், ஆவணியில் விஸ்வான், புரட்டாசியில் பகன், ஐப்பசியில் பர்ஜன்யன், கார்த்திகையில் துவஷ்டா, மார்கழியில் மித்திரன் என்றும் பெயர் பெறுகிறார்.

சூரிய மண்டலத்தில் முக்கியமான ஆயிரம் கதிர்களைக் கண்டறிந்திருக்கிறார்கள் ரிஷிகளும் ஞானிகளும். இவற்றில் சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி ஆகிய மாதங்களில் 300 கதிர்கள் "சுக்ரம்' என்ற பெயரில் வெம்மையூட்டும். அடுத்து ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய நான்கு மாதங்களில் 400 கதிர்கள் "அம்ருதம்' என்று பெயர் கொண்டு மழையைப் பொழியவைக்கும். அடுத்து மார்கழி, தை, மாசி, பங்குனி ஆகிய நான்கு மாதங்களில் 300 கதிர்கள் பனியைக் கொடுத்து குளிர்வைத் தரும்.

 காலையில் எழுந்தவுடன் நீராடிவிட்டு, சூரியன் உதிக்கும் கிழக்கு திசை நோக்கி, "ஓம் நமோ ஆதித்யாய புத்திர் பலம் தேஹிமே சதா' என்று மூன்று முறை சொல்லி வணங்கினால் நற்பலன்கள் கிட்டும் என்று ஞானநூல்கள் சொல்கின்றன.

சூரிய பகவானை சகஸ்ரநாமத்தால் துதித்து பூஜை செய்தால் மிகுந்த பலனைப் பெறலாம். அந்த சகஸ்ரநாமத்தை முழுமையாகச் சொல்ல முடியாத பட்சத் தில், சூரியனது இருபத்தொரு பெயர்கள் கொண்ட மந்திரங்களைச் சொன்னால் போதும் என்று சாஸ்திரம் அறிந்தவர்கள் சொல்வர்.

"இந்த மந்திரத்தை யார் ஒருவர் காலையிலும் மாலையிலும் ஜெபிக்கிறாரோ அவர் எல்லாவிதமான பாவங்களிலிருந்தும் விடுபடுவார்; நோயினால் பீடிக்கப்பட்டிருந்தாலும் அவற்றிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமாக வாழ்வார்' என்று கூறப்பட் டுள்ளது.

"ஓம் விகர்த்தனோ விவஸ்வாமஸ்ச
மார்த்தாண்டோ பாஸ்கரோ ரவி

லோகப்பிரகாசக ஸ்ரீமான் லோகசக்ஷர் க்ரஹேச்வர:

லோக ஸாக்ஷீ த்ரி லோகேச: கர்த்தா
ஹர்த்தா தமிஸ் ரஹா:
தபனஸ் தாபனஸ் சைவகசி:
ஸப்தாச்வ் வாஹன
கபஸ்திஹஸ்தோ ப்ரஹ்மாச
ஸர்வதேவ நமஸ்க்ருத:'

சூரிய வழிபாட்டினை மேற்கொள்வதில் பல விதங்கள் உள்ளன. அந்த வகையில் தினமும் "அக்னி ஹோத்ரம்' செய்பவர்கள் (இது ஒரு யாகம்) சூரிய உதயவேளையில் பூஜைக்குரிய மந்திரத்தைச் சொல்லி யாகத்தீ வளர்த்து, ஹோமத்துக்குரிய சமித்துகளை நெய்யிலிட்டு அக்னியில் சமர்ப்பிப்பார்கள்.

அப்போது-

""சூர்யாய ஸ்வாஹா சூர்யாய இதம் நமஹ!
பிரஜாபதய ஸ்வாஹா! பிரஜாபதயே இதம் நமஹ'
என்ற மந்திரத்தை காலை நேர வழிபாட்டின்
போது சொல்வர். அதேபோல் மாலை பூஜையின்போது,
"அக்நயே ஸ்வாஹா!' அக்நயே இதம் நமஹ!
பிரஜாபதயே ஸ்வாஹா! பிரஜாபதயே இதம் நமஹ!'

என்று சொல்வர்.

இந்த அக்னி ஹோத்ர பூஜையில் சூரிய உதய நாழிகையும் அஸ்தமன நேரமும் முக்கியத்துவம் பெறும்.

அக்னி ஹோத்ர யாகத்தினை வீட்டில் பூஜை அறையில் மேற் கொள்வர். இதனால் சுற்றுச்சூழல் தூய்மையாகும்; வீட்டில் பிராணவாயு அதிகரிக்கும். தீயசக்திகள் அண்டாது. இந்த யாகப்புகை உடலுக்கு நலம் தருவதுடன் நோய் எதிர்ப்புசக்தியையும் வழங்கும்.

ஒளியில் மிதக்கும் அன்னப்பறவை, வானமண்டலத் தலைவன், மனிதர்களிடையே வாழ்பவன், அறவோன் என்று சூரியனை ரிக்வேதம் புகழ்கிறது.

வால்மீகி ராமாயணம் "உலகத்திற்கு ஈஸ்வரனாகவும்- ஒளி உற்பத்தி செய்பவனாகவும்- பிரம்மா, விஷ்ணு, சிவன், கந்தன், சந்திரன் முதலிய எல்லா தெய்வங்களாகவும் பகலவனான பாஸ்கரன் விளங்குகிறான்' என்று குறிப்பிடுகிறது.

சூரியன், தனுசு ராசியிலிருந்து மகர ராசியில் நுழையும் மாதமான தை மாத முதல் நாளை தைப்பொங்கல் என்றும் மகர சங்கராந்தி என்றும் கொண்டாடுகிறோம். சூரிய பகவானுக்கு சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபடும் வழக்கம் ஆதிகாலத்திலிருந்தே தமிழகத்தில் இருந்துவருவதாக வரலாறு கூறுகிறது.

தமிழகத்தில் கொண்டாடப்படும் பொங்கல் விழாவை, இந்தியாவில் சில மாநிலங்களில் வேறு பெயர்களில் கொண்டாடுகிறார்கள். பஞ்சாப் மாநிலத்தில் "லோஹரி' என்ற பெயரிலும், மேற்கு வங்காளத்தில் "கங்காசாகர்' என்றும், அஸ்ஸாமில் "பொஹோக்கியோபிஷு' என்றும், உத்திரப்பிரதேசத்தில் "கிச்சேரி' என்றும், மகாராஷ்டிர மாநிலத்தில் "ஹடகா' என்றும், மத்திய பிரதேசத்தில் "சுகரத்' என்றும், அருணாச்சலப் பிரதேசத்தில் "மக்பிஹு' என்றும் கொண்டாடுகிறார்கள்.

குஜராத் மாநிலத்தில் புதிய பாத்திரங்கள் வாங்கி அதில் பொங்கல் பொங்கியும், வடமேற்கு மாநிலங்களில் கண்ணனை வழிபடும் விழாவாகவும், மராட்டியர்கள் பொங்கல் விழாவை மூன்று நாட்களும், ஆந்திராவில் பயிர்களுக்கு உதவும் சூரியனுக்கு நன்றி செலுத்தும்விதமாகவும் பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் பொங்கல் விழாவினையொட்டி சூரிய பகவானை வழிபட்டதும், இரண்டு மாடுகளை ஏர்க்கலப்பையில் பூட்டி, வேகமாக  வயல்வெளியில் ஓடவிட்டு போட்டிகள் நடைபெறும். மலையாள மாதமான மகர மாதம் தை முதல் நாளான பொங்கலன்று தொடங்குகிறது என்பது கேரள சித்தாந்தம்.

தைப்பொங்கல் அன்றுதான் சபரிமலையில் ஐயப்பன் ஜோதிவடிவில் பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார். இதனை "மகரஜோதி தரிசனம்' என்று போற்றுவர்.

 வெளியிட்ட நக்கீரன் இதழுக்கு நன்றி!.

 

தமிழர் திருநாள்-2014

மரியாதைக்குரியவர்களே,
                             வணக்கம்.
                           கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.தமிழர் திருநாள் பற்றி புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் பாடலை காணீர்.


     தைம்மதி பிறக்கும் நாள்; தமிழர்தங்கள்
செம்மை வாழ்வின் சிறப்புநாள்; வீடெலாம்
பாலும் வெல்லப் பாகும் பருப்பு நெய்
ஏலமும் புதுநெருப் பேறி, அரிசியைப்
பண்ணிலே பொங்கப் பண்ணித் தமிழர்
எண்ணிலே மகிழ்ச்சி ஏற்றும் இன்பநாள்!

புதிய பரிதியைப் புகழ்ந்து வாழ்த்தி
இதுதான் வல்லான் எழுதிய தமிழோ
எனும்படி இறக்கிய இளஞ்சூட்டின்சுவைப்
பொங்கல் இலைதொறும் போட்டுத் தேன்கனி,
செங்கரும்பின் சாறும் சேர்த்தே

அள்ளூர அள்ளி அள்ளிப் பிள்ளைகள்
தெள்ளு தமிழ்ப் பேச்சுக் கிள்ளைப் பெண்டிர்
தலைவரொ டுண்ணும் தமிழர் திருநாள்!

தலைமுறை தலைமுறை தவழ்ந்து வரும் நாள்!
இருளும் பனியும் ஏகின, பரிதி
அருளினால் எங்கணும் அழகு காண்கிறோம்!
கலக்கம் தீர்ந்தது! கருத்திடை அனைத்தும்
விளக்கம் ஆயின! மேன்மைத் தமிழைப்
போற்றுதல் வேண்டும்:
வண்மைத் தமிழர்
திராவிடர் என்று செப்பும் இனத்தின்
பெரும்பகை ஆரியர்; வரம்பு மீறாது
மறச்செயல் தொடங்க மறத்தல் வேண்டா.
ஆடலில் பாடலில் வீடுகள் சிறந்தன!
ஊடலில் கூடலில் உவந்தனர் மடவார்!
தெருவெலாம் இளைஞர் திறங் காட்டுகின்றனர்
சிரித்து விளையாடிச் செம்பட் டுடைகள்
அமைத்தபடி நிறைவேற்றி வைத்தல் வேண்டும்!
ஆள்வோர்க்குத் தமிழர்விடும் அறிக்கை இஃது!
தமிழ்முரசு கொட்டினோம் இணங்கா விட்டால்
சடசடெனச் சரிந்துபடும் ஆட்சிக் கோட்டை!

திராவிடரின் பகைவர்க்கே அடிமை யானோர்,
திராவிடர்க்கு நலம்புரிதல் குதிரைக் கொம்பே!
அரிய தமிழ் நாட்டுரிமை வேண்டும்; அன்றே
அன்புள்ள தெலுங்கர்க்கும் கேர ளர்க்கும்
உரிமையினை நாட்டுவதும் தமிழர் வேலை!
ஒன்று பட்டோம், ஜாதியில்லை; சமயமில்லை;
குரல்கேட்க ஆள்வோரின் காதே! ஒப்பம்
கூறுவாயே இன்றேல் புரட்சி தோன்றும்.
- தமிழர் திருநாள் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

07 ஜனவரி 2014

சிலம்ப கலை - silambam - sathyamangalam

பொன்னுசாமி சிலம்பம்-சத்தியமங்கலம்.

ponnuswamy silambam-தமிழரின் தற்காப்பு கலைகளில் ஒன்று.

ஸ்ரீவீர ஆஞ்சநேயர் சிலம்ப கலைக்கூடம்-சத்தியமங்கலம்-02

ponnuswamy silambam-01

தற்போதைய நிகழ்வுகளில் சில...டிசம்பர் மாதம்-2013
















03 ஜனவரி 2014

kolappalur -தேரோட்டம்-2014

மரியாதைக்குரியவர்களே,
                          வணக்கம்.
                                   கொங்குத்தென்றல் 
                                 வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.ஈரோடு மாவட்டம்,கோபி செட்டிபாளையம் வட்டம் ,கொளப்பலூரில் தேரோட்டம் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.


பதிவேற்றம் 
   
பரமேஸ் டிரைவர்-
தாளவாடி. 
http://consumerandroad.blogspot.com
http://paramesdriver.blogspot.com.

முனைவர்.இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phil.,Ph.D., அவர்களது வாழ்க்கைக்குறிப்பு... (Dr.R.K.Manikkam, professor,Writer)

                                                                                                        முனைவர். இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phi...