26 மே 2015

தமிழ்நாடு காவல்துறை விவரம்..

மரியாதைக்குரியவர்களே,
                       வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.
 
தமிழ்நாடு காவல்துறை பற்றி தெரிந்ததும், தெரியாததும்…
*] தமிழ்நாட்டில் உள்ள மொத்தக் காவல் நிலையங்கள் – 1452.
*] தமிழ்நாட்டில் உள்ள மொத்த மகளிர் காவல் நிலையங்கள் – 198.
*] தமிழ்நாட்டில் உள்ள மொத்த காவல் பரப்பளவு – 130058 ச.கி.மீ.
*] மொத்த காவல் பணியாளர்கள் – 113602..
*] தமிழ்நாட்டில் உள்ள மொத்தக் காவல் மண்டலங்கள் – 4.
தமிழ்நாடு காவல்துறை வடக்கு, மைய, மேற்கு மற்றும் தெற்கு என நான்கு காவல் மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை ஒவ்வொன்றும் ஒரு காவல் பொது ஆய்வாளர் (Inspector General of Police) தலைமையில் இயங்குகின்றன.
*] தமிழ்நாட்டில் உள்ள மொத்த ஆணையரகம் – 6.
தமிழகத்தில் உள்ள 6 பெரிய நகரங்களான சென்னை, மதுரை, கோயமுத்தூர், திருச்சிராப்பள்ளி, சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்கள் காவல்துறை காவல் ஆணையாளர் (Commissioner of Police) தலைமையில் இயங்குகின்றது.
*] தமிழ்நாட்டில் உள்ள மொத்தக் காவல் மாவட்டங்கள் – 33 (2 ரயில்வே உட்பட).
தமிழகம் 33 காவல் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்கள் காவல் கண்காணிப்பாளர் (Superintendent of Police) தலைமையில் இயங்குகின்றன. இரண்டு அல்லது மூன்று மாவட்டங்களுக்கு ஒரு துணை காவல் பொது ஆய்வாளர் (Deputy Inspector General of Police) மேற்பார்வை செய்கிறார்.
*] போலீஸ் துணை பிரிவுகள் – 247.
*] போக்குவரத்துக் காவல் நிலையங்கள் – 218.
*] திருச்சி ரேஞ்ச் ரயில்வே போலீஸ் நிலையங்கள் – 20.
*] சென்னை ரேஞ்ச் ரயில்வே போலீஸ் நிலையங்கள் – 21.
*] தமிழ்நாட்டில் 632 மக்களுக்கு 1 காவலர் என்ற அடிப்படையில் காவலர்கள் உள்ளனர்.
தமிழ்நாடு காவல்துறை தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கை நிலை நாட்டவும், குற்றங்களைத் தடுக்கவும், தமிழ்நாடு அரசு உள்துறை அமைச்சகத்தின் கீழ், ஒரு தலைவரைக் (DGP) கொண்டு இயங்கும் அரசு சார்ந்த அமைப்பாகும். இது இந்தியாவில் ஐந்தாவது பெரிய காவல்துறை ஆகும்.
முதன் முதலில் இது மதராசு நகரக் காவல்துறைச் சட்டம் 1888 (The Madras City Police Act 1888) இற்கு ஏற்பத் துவக்கப்பட்டது. இச்சட்டத்திற்கு ஆளுநரின் ஒப்புதல் 1888, ஏப்ரல் 12 இலும், Governor-General -ன் ஒப்புதல் 1888, சூன் 26 இலும் வழங்கப்பட்டது. தொடக்கத்தில் ஒரு ஆணையாளரைக் கொண்டு உருவாக்கப்பட்ட இது சென்னை மாநகர எல்லை முழுமைக்குமாகத்தான் தன் செயல் எல்லையைக் கொண்டிருந்தது.
 
*] காவல் துறையின் பல்வேறு பிரிவுகள்
1] சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு (Law and Order).
2] ஆயுதம் அல்லது தமிழ்நாடு சிறப்புப் படை (Armed Police or Tamil Nadu Special Police).
3] பொதுமக்கள் பாதுகாப்பு (Civil Defence and Home Guards).
4] பொதுமக்கள் வழங்கல் மற்றும் உளவுத்துறை (Civil Supplies, CID).
5] கடலோர காவல் துறை (Coastal Security Group).
6] குற்றப் புலனாய்வு மற்றும் உளவுத்துறை (Crime Branch, CID).
7] பொருளாதார சிறப்புப் பிரிவு (Economic Offences Wing).
8] செயல்பாடு – தமிழக ஆயுதப்படை மற்றும் ஆயுதப்படை பள்ளி (Operations – T.N. Commando Force & Commando School).
9] இரயில்வே காவல்துறை (Railways)
10] சிறப்புப் பிரிவு – உளவு மற்றும் பாதுகாப்பு (Special Branch , CID including Security).
11] குற்றப் பிரிவு (நுண்ணறிவு) (Co-Intelligence)
12] மதுவிலக்கு அமல் பிரிவு (Prohibition Enforcement Wing).
13] குடிமையியல் பாதுகாப்புப் பிரிவு (Protection and Civil Rights).
14] பயிற்சிப் பிரிவு (Training).
15] சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் (Social Justice and Human Rights).
16] போக்குவரத்துக் காவல் பிரிவு (Traffic).
 
பயிற்சி நிறுவனங்கள்:
அ) போலீஸ் அகாடமி – 1.
ஆ) Regl. போலீஸ் கம்ப்யூட்டர் பயிற்சி மையம். – 1.
இ) போலீஸ் பயிற்சி பள்ளி (நிரந்தரம்) – 8 (தூத்துக்குடி / திருச்சி / வேலூர் / கோயம்புத்தூர் / ஆவடி / விழுப்புரம் / சேலம் / மதுரை).
ஈ) போலீஸ் பயிற்சி கல்லூரி – அசோக் நகர்.

தமிழ்நாடு காவல் துறையில் பணி புரிபவர்களின் ஊதிய விவரம்:
1] காவல்துறைத் தலைமை இயக்குனர் (DGP) – 80,000.
2] காவல்துறைத் துணை தலைமை இயக்குனர் (ADGP) – 67000 – 79000.
3] காவல்துறை பொது ஆய்வாளர் ( Inspector General of Police ) – 37400- 67000 + 10000.
4] காவல்துறை துணை பொது ஆய்வாளர் ( Deputy Inspector General of Police ) – 37400 – 67000 + 8900.
5] காவல்துறை ஆணையர் ( Commissioners of Police ) – 37400 – 67000 + 12000.
6] காவல்துறைக் கண்காணிப்பாளர், ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட ( SPs, IPS including Asst. Inspector, Jt. SP, Addl. SP ) – 15600 – 39100 + 6600.
7] காவல்துறை உதவிக் கண்காணிப்பாளர் (ASP), காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் (DSP) – 15600 – 39100 + 5400.
8] காவல்துறைக் கண்காணிப்பாளர் (SP) – 15600 – 39100 + 7600.
9] ஆய்வாளர் (Inspector) – 9300 – 34800 + 4900.
10] உதவி ஆய்வாளர் (சப் – இன்ஸ்பெக்டர் – பெண் அதிகாரிகள் உட்பட ) – 9300 – 34800 + 4800.
11] தலைமைக் காவலர் (Head Constable including Women HC ) 5200 – 20200 + 2800.
12] முதல்நிலைக் காவலர் (PC-I) ( Police Constable Gr-I incl. Women PC ) – 5200 – 20200 + 2400.
13] இரண்டாம்நிலைக் காவலர் (PC-II) ( Police Constable Gr-II including women ) – 5200 – 20200 + 1900.
 
தமிழ்நாடு காவல் துறை பதவி மற்றும் குறியீடுகள் :
dress
உலகின் 10 மிகப்பெரிய போலீஸ் படைகள்:
1. சீனா – 1,600,000 போலீஸ் அதிகாரிகள்.
2. இந்தியா – 1.585.353 போலீஸ் அதிகாரிகள்.
3. அமெரிக்கா: 794.300 போலீஸ் அதிகாரிகள்.
4. ரஷ்யா – 782001 போலீஸ் அதிகாரிகள்.
5. இந்தோனேஷியா: 579.000 போலீஸ் அதிகாரிகள்
6. மெக்ஸிக்கோ: 544.000 போலீஸ் அதிகாரிகள்
7. பிரேசில்: 478.001 போலீஸ் அதிகாரிகள்
8. துருக்கி: 412.624 போலீஸ் அதிகாரிகள்
9. நைஜீரியா: 371.800 போலீஸ் அதிகாரிகள்
10. பாக்கிஸ்தான்: 354.221 போலீஸ் அதிகாரிகள்.

 
கடலோர பாதுகாப்பு காவல் துறையினர்:
*] [13591 மீன் பிடிக்கும் கிராமங்கள் அடங்கிய கடலோர மாவட்டங்கள் ].
*] 6 மண்டல அலுவலகங்கள் (சென்னை / நாகை / வேதாரண்யம் / புதுக்கோட்டை / ராமநாதபுரம் / தூத்துக்குடி).
 
கடலோர பாதுகாப்பு காவல் குழு உபயோகிக்கும் வாகனங்கள்:
- 12 படகுகள் (12 டன்) – 12 படகுகள் (5 டன்).
– 8 திடமான ஊதப்பட்ட படகுகள் – 6 ஜெமினி படகுகள்.
– 12 அனைத்து நிலப்பரப்பு ஜீப்புகள், 12 அனைத்து நிலப்பரப்பு இருசக்கர வாகனங்கள்.
– 20 படகுகள், 30 நான்கு சக்கர வாகனங்கள், 60 இரு சக்கர வாகனங்கள்.

 
தமிழ்நாடு காவல் துறையில் மோப்ப நாய்கள்:
*] குற்றம் கண்டு பிடிப்பதில் – 80 மோப்ப நாய்கள்.
*] வெடித்துச் சிதறும் கண்டறிதலில் – 107 மோப்ப நாய்கள்.
*] போதைப் பொருள் பற்றி கண்டறிய – 4 மோப்ப நாய்கள் உள்ளன.

*] மலைக்குன்றுகள் உள்ள இடத்தில் பணி புரிய 4 (சென்னை / மதுரை / கோயம்புத்தூர் / திருச்சி) 38 குதிரைகள் பயன்படுத்தப்படுகின்றன.
*] மாநில போக்குவரத்துகளை திட்டமிட்டு சரிசெய்ய – 122 நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் ( ஜிபிஎஸ் மூலம் ) உள்ளன.

தமிழ்நாடு பற்றிய விவரங்கள்:
வருவாய் நிர்வாகம் (2010-11):
1. வருவாய் மாவட்டங்கள் – 32.
2. வருவாய் கோட்டங்கள் – 76.
3. தாலுகா – 220.
4. உள்வட்டங்கள் – 1,127.
5. வருவாய் கிராமங்கள் – 16564.
6. கடலோர மாவட்டங்கள் – (2007-08) – 13.

 
உள்ளாட்சி அமைப்புகள் (2010-11):
1. மாநகராட்சிகள் – 12.
2. நகராட்சிகள் – 150.
3. ஊராட்சி ஒன்றியங்கள் – 385.
4. டவுன் பஞ்சாயத்துகள் – 559.
5. மாவட்டம் – 32.
6. கிராம ஊராட்சிகள் (RD ஊராட்சிகள் கொள்கை விளக்கக் குறிப்பு படி 2011-12) – 12524.
7. குக்கிராமங்கள் – 48452 (தமிழ்நாடு மின்சார வாரியம் அறிக்கை படி).


சட்டமன்றம் :
*] சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் – 234 + 1 (நியமனம் -ஆங்கிலோ – இந்திய உறுப்பினர் ).
பாராளுமன்ற (மக்களவை உறுப்பினர் – 39 ).
(மாநிலங்களவை உறுப்பினர் – 18).


சாலைகள் நீளம் :
*] தேசிய நெடுஞ்சாலைகள் – 4861.000 கி.மீ தொலைவு.
*] மாநில நெடுஞ்சாலைகள் – 56814.200 கி.மீ தொலைவு.
*] கார்ப்பரேஷன் மற்றும் நகராட்சி சாலைகள் – 18704.471 கி.மீ தொலைவு.
*] பஞ்சாயத்து யூனியன் மற்றும் கிராம ஊராட்சி சாலைகள்- 173153.436 கி.மீ தொலைவு.
*] டவுன் பஞ்சாயத்து சாலைகள் – 19151.753 கி.மீ தொலைவு.
*] மற்றவை (Forest Road) – 3342.423 கி.மீ தொலைவு.
*] கடலோர வரி – 1,076 கிலோ நீளம்.
*] ரயில்வேஸ்: பாதை நீளம் – 3880,90 கி.மீ தொலைவு.

25 மே 2015

இலவச கண் சிகிச்சை முகாம்-30.05.2015சனிக்கிழமை நம்ம தாளவாடியில்...

மரியாதைக்குரியவர்களே,
   வணக்கம். 
         வருகிற 30.05.2015சனிக்கிழமை அன்று காலை நம்ம தாளவாடியில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்..அனைவரும் வாங்க அடுத்தவர்களுக்கும் சொல்லுங்க, சமூகம்  பயன் பெற உதவுங்க!.......



 சத்தியமங்கலம் தாலுக்கா பத்திரிக்கையாளர்கள் சங்கத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும்  பேனர் நம்ம தாளவாடியில்...
 (பார்வை 76887)

சாலை அறிவும்,வாகன அறிவும் வேண்டும்....


                        திம்பம் மலைப்பாதையில் இருபதாவது கொண்டை ஊசி வளைவில் பேருந்து நிற்கும் அபாயத்தை உணராத வேன் பயணிகள் போக்குவரத்தை தடைசெய்துகொண்டு பேருந்தை ஓட்டவிடாமல் என்னுடன் வாக்குவாதம் செய்தும்,மொபைலில் போட்டோ மற்றும் வீடியோ எடுத்த காட்சி...

மரியாதைக்குரியவர்களே,
           வணக்கம்.

           கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன். கடந்த ஞாயிற்றுக்கிழமை 24.05.2015அன்று  நான் பணிபுரிந்த அரசுப்பேருந்தை சத்தியமங்கலத்தில் காலை9.20 மணிக்கு புறப்பட்டு தாளவாடி செல்லும்போது திம்பம் மலைப்பாதையில் இருபதாவது கொண்டைஊசி வளைவில் திரும்பும்போது முன்னால் சென்ற சுற்றுலா வேன் ஒன்று திடீரென நான் பணிபுரிந்த பேருந்தில் மோத பின்னோக்கி வந்தது.மோதலை தவிர்க்க நான் அறுபத்தைந்து பயணிகளுடன் பேருந்தைகாரன் அடித்தவாறே பின்னோக்கி எடுத்துக்கொண்டு எச்சரிக்கை கொடுத்தேன்.

                      உணர்ந்த சுற்றுலா வேன் ஓட்டுநர் வேனை நிறுத்திவிட்டார்.

                ஆனால் பேருந்தோ அபாயமான வளைவின் சாலை விளிம்பில் விபத்து ஏற்படும் சூழலில் நின்றுகொண்டிருந்தது.நான் செலுத்திய பேருந்தில் ஹேண்ட் பிரேக் இல்லாததால் ஓட்டுநர் இருக்கையில் உட்கார்ந்தவாறே வேன் ஓட்டுநரை ஓரமாக தள்ளி நிறுத்துமாறு சத்தம் போட்டேன்.அதற்கு செவி மடுக்காதநிலையில் நடத்துநர் இறங்கிச்சென்று விசயத்தைக்கூற வேனில் பயணித்த பயணிகளில் சிலர் 

திம்பம் தினமும்தானே வழித்தடங்கல் (ரோடு பிளாக்) ஆகிறது.இன்றைக்கும் அப்படியாக நினைத்துக்கொள்ளுங்க.எங்க வேன் செல்லாமல் உங்க பேருந்து செல்லாது என சாலையின் மற்றும் பேருந்தின் சூழ்நிலை அறியாமல் அதே சமயத்தில் சற்று அதிகாரத்தோடு  கூறினர்.பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் இறங்கிச்சென்று கூறியபோது பயணியையும் மிரட்டிவிட்டனர்.பேருந்தைவிட்டு இறங்கமுடியாத ஆபத்தான சூழலில் நான் பயணிகளை மிரட்டுவதை தடுப்பதற்காக சத்தம் போட்டேன்.அதன்பிறகே வேனை பின்னோக்கி தள்ளி ஓரமாக நிறுத்தி வழிவிட்டதோடு என்னையும் தகாத வார்த்தைகளால் திட்டினர்.மொபைலில் போட்டோ மற்றும் வீடியோ எடுத்தனர்.பதிலுக்கு நானும் மொபைல் பயன்படுத்தக்கூடாது என்பதால் கேமராவில் என்னால் முடிந்த அளவு பதிவு செய்தேன்.நான் கேமரா எடுத்ததைப் பார்த்த சிலர் ஓடிவிட்டனர்.

                ஊருக்கே ராஜாவானாலும் நெடுஞ்சாலை அனைவருக்கும் பொதுவான சாலை என்பது கூட உணராமல்,பயணிகள் வாகனங்கள் உட்பட இரு மாநிலத்தின் போக்குவரத்திற்கு  (N.H.209) தேசிய நெடுஞ்சாலையில் தடை செய்கிறோம் என்று கூட தெரியாமல் தானே பெரியவன் என்று அதிகாரத்தோடு வாதம் செய்யும்  இவர்கள் போன்ற சுயநலவாதிகள்  திருந்துவது எப்போது? நான் வேன் ஓட்டுநரிடம் இப்படி ஏன் போக்குவரத்திற்கு தொந்தரவு செய்கிறீர்கள் எனப்பேசியபோது சம்பந்தமே இல்லாமல் வேன் பயணிகள் குறுக்கிட்டு என்னுடன் தகராறு செய்தனர்.இவர்களைப்பார்த்தால் படித்தவர்கள் போலுள்ளது. படித்தால் மட்டும் போதுமா?சாலை அறிவிம் வாகன அறிவும் வேண்டாமா? பொதுச்சாலை அனைவருக்கும் பொதுவானது.போக்குவரத்தை தடை செய்ய காரணமாக இருக்கிறோம் என்ற விவரம்கூடத் தெரிய வேண்டாமா? இவர்களைப் போன்றோர்களால்  ஏற்படும் விபத்துக்கள்தான் எத்தனை?எத்தனை?அதன் பழியினை ஏற்பது தொழில் சார்ந்த அப்பாவி ஓட்டுநர்களா????

            பேருந்தில் பயணிப்பவர்கள் எத்தனையோ பிரச்சினைகளின் மத்தியில்,எத்தனேயோ தேவைகளுக்கு செல்லும் சூழலில் போக்குவரத்து செய்கிறார்கள் என்ற சிந்தனை இவர்களைப்போன்றோருக்கு எப்போது வரும்? இவர்களால் பேருந்து ஆயிரம் அடி பள்ளத்தில் விழுந்திருந்தால் அதற்கான காரணத்தை வேன் பயணிகளோ,ஓட்டுநரோ ஏற்றுக்கொள்வார்களா?அல்லது சமுதாயம்தான் ஏற்றுக்கொள்ளுமா?அல்லது போக்குவரத்துகழகம்தான் ஏற்றுக்கொள்ளுமா?அல்லது சட்டம்ஒழுங்கு நிர்வாகமோ மோட்டார் வாகனத்துறையோ ஏற்றுக்கொள்ளுமா? அப்போது பயணித்த அறுபத்தைந்து பயணிகளை நம்பியுள்ளோரின் வாழ்வாதாரத்திற்கு உதவிட முடியுமா? அனைத்து பழிகளும் அப்போது பணியில் இருந்த என்மீதுதானே பாயும்!..சாலை பாதுகாப்பு கல்வி அனைத்து பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் பொதுமக்களுக்கும் கொடுத்துவரும் எனது நற்பெயரல்லவா வீணாகி இருக்கும்! அன்றைய தினம் நான் பணி புரிந்த பேருந்தில் என்னை நம்பி பயணித்த அறுபத்தைந்து பயணிகளின் உயிருக்கோ,உடலுறுப்புகளுக்கோ,அரசு பேருந்துக்கோ,நடத்துநருக்கோ,எனக்கோ ஏதாவது விபரீதம் ஏற்பட்டு இருந்தால் இதற்கு யார் பொறுப்பு ஏற்பது?.யார் மீது பொறுப்பு சுமத்துவது?
பதவியும்,செல்வாக்கும்,அதிகாரமும் இருந்தால் மட்டும் போதுமா? சிறிதளவாவது பொதுவான சிந்தனை வேண்டாமா?

18 மே 2015

அணைத்தல்,அலறல்,கடித்தல்....

 மரியாதைக்குரியவர்களே,
        வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.  நேற்று அதாவது2015 மே மாதம் 17-ந்தேதி மாலை தாளவாடியிலிருந்து பனகஹள்ளி செல்லும் வழித்தடத்தில் 3.45மணிக்கு செல்லும்போது பாளையம் என்ற ஊருக்கு அருகில் எதிரில் வந்த காரின் மேல் குரங்கு அமர்ந்துகொண்டு வருவதைக்கண்ட நான் பேருந்தை வேகத்தைக்குறைத்து எதிரில் வந்த காரினை நிறுத்தச்சொல்லி சைகை செய்து குரங்கு காரின்மேல் பயணிப்பதை சொல்லும்போது அந்தக்குரங்கு நான் பணி புரிந்த பேருந்தினுள் தாவி ஏறிவிட்டது.சுமார் அரை மணி நேரம் அதனுடன் போராடி குரங்கை சமாதானப்படுத்தி பிரிந்து செல்வதற்குள் போதும் என்றாகிவிட்டது. என்னை நம்பி பேருந்தினுள் உள்ள பயணிகளை காக்க வேண்டும் அல்லவா? ஆனால் அடுத்த ஒருமணி நேரத்தில் அருகிலுள்ள பனகஹள்ளி என்ற ஊரில் ஒரு சிறுவனை கடித்துவிட்டது அந்தக்குரங்கு.....அதன் எண்ணமும் எதிர்பார்ப்பும் நம்மால் உணர இயலவில்லை!. காரணம் என்னவோ?















அன்பைத்தேடும்  குரங்கு தற்போது பனகஹள்ளியில் உலா வருகிறது.

09 மே 2015

சத்தியமங்கலம் தாலுக்கா பத்திரிக்கையாளர்கள் சங்கம்

             வாள் முனையைவிட 
                              பேனா முனை வலுவானது!.
                             ஈரோடு மாவட்டம்,''சத்தியமங்கலம் தாலுக்கா பத்திரிக்கையாளர்கள்  சங்கம்'' இன்று உதயம் ஆனது.
தலைவர் உட்பட  நிர்வாகிகளுக்கு 
       ''கொங்குத்தென்றல்'' வலைப்பதிவு  சார்பாக வாழ்த்துக்கள்.

மரியாதைக்குரியவர்களே,
         வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன். 
          ஜனநாயகத்தின் நான்காம் தூண் பத்திரிக்கை என்றால் அவற்றின் உயிரோட்டம் செய்தியாளர்களே!....
சத்தியமங்கலம் தாலுக்கா பத்திரிக்கையாளர்கள் சங்கம் - 
திரு. S.N.கோபால்சாமி அவர்கள், கௌரவத்தலைவர் -
SATHYAMANGALAM TALUK REPORETERS ASSOCIATION - 
SATHYAMANGALAM.
 ERODE DISTRICT.-638402
சத்தியமங்கலம் தாலுக்கா பத்திரிக்கையாளர்கள் சங்கம்.
ரிப்போர்ட்டர் வேலு என்கிற 
திரு. N.வேலுச்சாமி  அவர்கள், தலைவர்.-
SATHYAMANGALAM TALUK REPORETERS ASSOCIATION - 
SATHYAMANGALAM.
 ERODE DISTRICT.-638402



கிப்ளிங் (Kipling)  என்பவரின் புகழ்பெற்ற பாடல் வரிகளான
''என்ன?ஏன்?எப்போது?
எப்படி?எங்கே?யார்?எனும்
அன்புத்தொண்டர்கள் ஆறுபேர்
 அறியச்செய்வார்  செய்தியினை,''
அதாவது
(1) (What)என்ன?
 (2)(Why)ஏன்? 
(3)(When)எப்பொழுது? 
(4) (How)எப்படி? 
(5)(Where)எங்கே? 
 (6)(Who)யார்?
 என்ற ஆறு கேள்விகளையும் கேட்டு விடைகளைப் பெற்று கடலில் முத்துக்குளிப்பது போன்ற அருமையான சமூகப்பணியினை செய்து முழுமையான உண்மையான செய்திகளை இனங்கண்டு திரட்டி வெளியிட வேண்டுகிறேன். மேலும்,

'' காரிருள் அகத்தில் நல்ல
 கதிரொளி நீதான்! இந்தப்
 பாரிடைத் துயில்வோர் கண்ணிற்
 பாய்ந்திடும் எழுச்சி நீதான்
ஊரினை நாட்டை இந்த
 உலகினை ஒன்று சேர்க்கப்
பேரறிவாளர் நெஞ்சில்
 பிறந்த பத்திரிக்கைப் பெண்ணே''

மற்றும்

 ''அறிஞர் தம்இதய ஓடை
ஆழநீர் தன்னை மொண்டு
செறி தரும் மக்கள் எண்ணம்
செழித்திட ஊற்றி ஊற்றிக்
குறுகிய செயல்கள் தீர்த்துக்
குவலயம் ஓங்கச்செய்வாய்!
நறுமண இதழ்ப்பெண்ணே உன்
நலம் காணார் ஞாலம் காணார்,''

 மற்றும்

''தெருப்பெருக்கிடுவோருக்கும்
 செகம் காக்கும் பெரியோருக்கும்,கை
 இருப்பிற் பத்திரிக்கை நாளும்
இருந்திடல் வேண்டும்!மண்ணிற்
கருப்பெற்றுருப்பெற்றிளநடை
பெற்றுப் பின்னர் ஐந்தே ஆண்டு
வரப்பெற்றார்,பத்திரிக்கை நாளும்
உண்டென்றால் வாழ்க்கை பெற்றார்''
என்ற புரட்சிக்கவிஞர் பைந்தமிழ்ப்  பாவேந்தர் பாரிதாசனாரின் வாழ்த்துரைக்கேற்பவும்,

 திரு.லார்டு கிரே (Lord Gray)  அறிஞரின் கூற்றான,
     ''பத்திரிக்கைதான் நாட்டுச் சுதந்திரத்தின் மிகப்பெரிய காவலாளி''  
      என்ற வரிகளுக்கேற்பவும்,

        ஹெரால்டு பெஞ்சமின் (Harold Benjamin) என்ற புகழ்பெற்ற அமெரிக்க இதழியல் பேராசிரியரின் கூற்றான,
         ''பொது நோக்குடைய இதழியல்துறை ஓர் ஆற்றல் மிக்க கருவியாகும்.அதன் மூலம்தான் இன்றைய சமுதாயம் அதனுடைய வழிகளை வகுத்துக்கொண்டும் மாற்றிக்கொண்டும் தெளிவாக வரையறுக்கப்பெற்ற வளரும் மனித நலன் என்னும் இலட்சியத்தை நோக்கி நடைபயில்கின்றது'' 
என்ற வரிகளுக்கேற்பவும்,

ஜி.எப்.மோட்(G.F.Mott) என்பவரின் கூற்றான, 
          '' இதழியல் என்பது,பொதுமக்கள் தொடர்புக்குரிய புதிய சாதனங்களைப் பயன்படுத்தி பொதுச்செய்திகளையும்,பொதுக்கருத்துகளையும்,பொது பொழுதுபோக்குகளையும்,முறையாக நம்பிக்கைக்குரிய வகையில் பரப்புவதாகும்''
 என்ற வரிகளுக்கேற்பவும்,

   அண்ணல் காந்தியடிகளாரின் கூற்றான,
         ''செய்தித்தாளின் நோக்கங்களில் ஒன்றாக,மக்களின் உணர்வினை அறிந்து,அதனை வெளியிடுவது இருக்க வேண்டும்.மற்றொன்று,மக்களிடம் சில மிகவும் வேண்டிய உணர்வுப்பூர்வமான எண்ணங்களை உருவாக்க வேண்டும்.மூன்றாவதாக,பொதுமக்களிடம் இருக்கும் குறைகளையும் துணிச்சலாக எடுத்துரைக்க வேண்டும்''  
 என்ற வரிகளுக்கேற்பவும்,

    இங்கிலாந்தின் பத்திரிக்கை மன்றத்தின்(Press Council) கூற்றான,
              ''அநீதியை வெளிக்காட்டுவது,தவற்றைத் திருத்துவது,ஆலோசனை வழங்குவது,நண்பர்களில்லாதவர்களோடு நட்புக் கொள்வது,ஆதரவற்றவர்களுக்கு உதவுவது,செய்திகளையும் கண்ணோட்டங்களையும் துல்லியமாக நடுநிலையில் வெளியிடுவது  ஆகியவை செய்தித்தாள்கள் செய்யும் சேவைகளில் ஒன்றாக விளங்க வேண்டும்''. 
          என்ற வரிகளுக்கேற்பவும்,
மக்களிடம் எல்லா விவரங்களையும் உடனுக்குடன்,உண்மையாக,விருப்பு-வெறுப்பின்றி, சிதைக்காமல் முழுமையாக வழங்க வேண்டும்.நாட்டில் சமுதாயம்,அரசியல்,பொருளாதாரம்,கலை,பண்பாடு,சமூக நலசேவைகள் உட்பட அனைத்து நடவடிக்கைகளையும் விளக்கிகூற வேண்டும்.


தமிழ்த்தென்றல்.திரு.வி.க. அவர்களின் கவிதை வரிகளான,
 ''தமிழைப்போல் உயர்ந்த மொழி
 தரணியெங்கும் கண்டதில்லை;
தமிழரைப்போல மொழிக்கொலையில்
 தலை சிறந்தோர் எவருளரே''
என்ற வரிகளின் பொருள் உணர்ந்து சமுதாயத்தொடர்புகள் உயிரோட்டமானதாக அமையக்காரணமான செய்திகளை புரிகிற தமிழில் எழுதுவதோடு பேசுகிற தமிழிலும் எழுத வேண்டும்.படிக்கத்தெரிந்தவர்கள் அனைவரும் எளிதாகப் படித்து புரிந்துகொள்ளும் வகையில் பிறமொழிக்கலப்பில்லாமல் அதே நேரத்தில் தமிழைக்கொலை செய்யாமல் மக்களின் மொழிநடையில் செய்திகளை எழுத வேண்டும். என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
வாழ்த்துக்களுடன் ,
அன்பன்,
C.பரமேஸ்வரன்,
சத்தியமங்கலம்,
ஈரோடு மாவட்டம்.
paramesdriver@gmail.com ., 
+91 9585600733 .,
 http://paramesdriver.blogspot.com 


  

 



கிரீன் டீ,பிளாக் டீ,ஒயிட் டீ,ஹெர்பல் டீ,லெமன் டீ, குடித்திருக்கிறீர்களா?

                          தேநீரில் பலவகை ஒவ்வொன்றும் ஒரு வகை..
மரியாதைக்குரியவர்களே,
               வணக்கம்.  கொங்குத்தென்றல் வலைப்பதிவுக்கு  அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.டீ என்னும் தேநீர் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

 
                       விருந்தினர் வந்தால் உடனே அவருக்கு ஒரு கப் டீ தயாரித்து வழங்குகிறோம். ஏன்? தயாரிப்பது எளிதானது. சூடானது. ருசியானது. சரியாக, அளவோடு பயன்படுத்தினால் ஆரோக்கியமானது. அதனால்தான் ஒரு கப் டீ கொடுத்து எல்லோரையும் உபசரிக்கிறோம். அன்பு பாராட்டுகிறோம். டீயில் பல வகைகள் இருக்கின்றன.

                        டீ தூளை உபயோகிக்காமல் அதிக நாட்கள் வைத்திருந்தால் அதில் வாயு ஏற்றம் அதிகம் ஏற்பட்டு, பிளாக் டீ ஆகிறது. அதைத்தான் நாம் அதிகம் பயன்படுத்துகிறோம். வாயு ஏற்றம் இல்லாமல் இலையில் இருந்து எடுக்கப்படுவது கிரீன் டீ. அதில் அதிகமாக ஆன்டி ஆக்சிடென்ட் இருக்கிறது.

                     தேயிலை செடியின் முதல் மொட்டில் இருந்து தயாரிக்கப்படுவது, ‘ஒயிட் டீ’ எனப்படுகிறது. அதன் விலை மிக அதிகம். பயணத்தின்போது எல்லா இடங்களிலும் எளிதாக கிடைப்பது, இன்ஸ்டன்ட் டீ. வனிலா, ஏலக்காய், பழவகைகளின் மணத்தில் இந்த டீ கிடைக்கிறது. இதில் பால்பொடியும் சேர்ந்திருக்கும்.

                  பலவகை மூலிகை செடியின் இலைகள், பூக்கள், காய்கள், வேர்கள், பட்டைகள் போன்றவைகளில் இருந்து தயாரிக்கப்படுவது ஹெர்பல் டீ. இது அதிக உற்சாகம் தரத் தகுந்தது. கிரீன் டீயில் நிறைய சிறப்பம்சங்கள் உள்ளன. அதில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்டுகள், வைட்டமின்கள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரும்.

                 சிலருக்கு இந்த டீ உடல் எடையை குறைக்கும் மருந்துபோலவும் செயல்படுகிறது. குடல் தொடர்புடைய நோய்களை குறைக்கும். பற்களை பலப்படுத்தவும், ரத்த அழுத்தத்தை கட்டுக்குள்வைக்கவும் சில நேரங்களில் துணைபுரியும். ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை இது குறைப்பதால் இதயத்திற்கு ஏற்றது.

                 நல்ல டீ தயாரிப்பது எப்படி தெரியுமா? டேஸ்ட்டாக நீங்கள் ஒரு கப் டீ தயாரித்து பருக வேண்டும் என்றால், முதலில் கவனிக்கத் தகுந்தது, நீரின் சூடு. நீரை சூடாக்கி நீங்கள் டீ தூளை போட்டு இஷ்டத்திற்கு கொதிக்க வைத்துக்கொண்டே இருந்தால், அதில் இருக்கும் அனைத்து சத்துக்களும் விரயமாகி விடும். நீர் நன்றாக சூடாகி கொதிக்கும் முன்பே தீயை அணைத்துவிடுங்கள்.

                   தேவையான அளவு டீ தூள் சேர்த்து பாத்திரத்தை அடைத்துவைத்துவிடுங்கள். நீர் எவ்வளவு சூடாகவேண்டும் என்பது தேயிலைக்கு தக்கபடி மாறும். நீரில் போட்டு எவ்வளவு நேரம் மூடிவைக்கவேண்டும் என்பதும் உபயோகப்படுத்தும் டீ தூளுக்கு தக்கபடி மாறும். கிரீன் டீ என்றால் 60 டிகிரி செல்சியஸ்க்கு சூடாக்கி, அதில் டீ தூளைக்கொட்டி 1 முதல் 3 நிமிடங்கள் வைத்திருந்தால்போதும்.

               ஒயிட் டீக்கு 85 டிகிரி செல்சியஸ் சூடும் 4 முதல் 8 நிமிடமும் தேவை. பிளாக் டீக்கு 100 டிகிரி செல்சியஸ் சூடும், 3 முதல் 5 நிமிடமும் தேவை. நீங்கள் சுவையாக, ஆரோக்கியமாக ஒரு கப் டீ பருகவேண்டும் என்றால், அதை தயாரிப்பதற்கு முன்னால் இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

                  டீயை தயார் செய்வதற்கு முன்னால் அதில் பால் சேர்த்தால் அதில் இருக்கும் புரோட்டீன் தன்மையில் மாற்றம் ஏற்பட்டு டீயின் சுவை குறைந்துவிடும். தூளைக்கொட்டி டீ தயாரித்த   பின்பு, பால் சேர்த்தால்போதும். சில டீக்கடைகளில் கைதேர்ந்த டீ மாஸ்டர்கள் இரு கப்பில் டீயை வைத்து வெகு உயரத்துக்கு கொண்டு சென்று ஊற்றி ஊற்றி நுரை ஏற்படுத்துவார்கள்.

                      அது வேடிக்கையான விஷயம் அல்ல. அவ்வாறு ஊற்றி ஆற்றுவது, டீயின் சுவையை அதிகரிக்கச் செய்யும் முயற்சியாகும். சூடாக ஒரு கப் டீ குடித்தால், சோர்வு நீங்கி உற்சாகம் பிறக்கும் என்பது உண்மைதான். ஆனால் அதிகமாக பருகினால் அதிக உற்சாகம் கிடைக்காது. டீ அதிகம் பருகினால் பின் விளைவுகள் ஏற்படும்.

                முதலில் அதில் சில மூலக்கூறுகள் ஜீரணத்தன்மையை பாதிக்கும். அதனால் பசி தோன்றாது. நெஞ்சு எரிச்சல், புளித்த ஏப்பம், அல்சர் இருப்பவர்கள் டீயின் அளவை வெகுவாக குறைக்கவேண்டும். கிரீன் டீயை அதிகமாக பருகினால் பல்லும், எலும்பும் பாதிக்கும் சூழல் உருவாகும். உடலில் இருக்கும் இரும்புச் சத்தும் குறையும். அளவோடு பருகினால் டீ உற்சாக பானம். அளவுக்கு அதிகமானால் அதுவும் உபத்திரவம்தான்!  

முனைவர்.இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phil.,Ph.D., அவர்களது வாழ்க்கைக்குறிப்பு... (Dr.R.K.Manikkam, professor,Writer)

                                                                                                        முனைவர். இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phi...