28 செப்டம்பர் 2011

மனித குரோமோசோம்கள்

மனிதனுக்கு மட்டும்தான் 23   ஜோடி குரோமோசோம்கள் இருக்கின்றன. மனிதனின் மூதாதையர்கள் என்று போற்றப்படும் சிம்பன்சி குரங்குகளுக்கு 24  ஜோடி குரோமோசோம்கள் இருக்கின்றன. அவற்றை போலவே கொரில்லா, உராங் உட்டாங் குரங்கு வகைகளுக்கும் 24   ஜோடி தான் உள்ளது.


மனிதனுக்கு ஒரு ஜோடி குரோமோசோம்கள் குறைகிறதா என்றால், இல்லை என்று தான் சொல்ல வேண்டும். 23  குரோமோசோம்களில்  இரண்டாவது ஜோடி  குரோமோசோம்  மட்டும், மற்ற எல்லாவற்றையும்  விட பெரிதாக இருக்கும். ஏப் என்ற மனித குரங்குகளின் இரண்டு ஜோடி குரோமோசோம்கள் ஒன்றுடன் ஒன்றாக ஒட்டி  விட்டதன் விளைவுதான்  இந்த ஆறறிவு மனிதன்.

மனிதன் ஒரு உன்னத படைப்பு என்பது கொஞ்சம் உண்மைதான். ஏனென்றால் மனித மூளையால் மட்டுமே பிரபஞ்சத்தின்  ஆரம்ப தோற்றத்தைப் பற்றி சிந்திக்க முடிகிறது. இந்த அறிவு  வேறெந்த  ஜீவராசிகளுக்கும்  ஒரு போதும் கிடையாது. உன்னத படைப்பு  என்பது மனித மூளை  தானா ...? என்றால் இல்லை.

அது ஒரு தனித் தன்மை. அந்த தனித்தன்மை என்பது பரிணாம   வளர்ச்சிதத்துவத்திற்கு  மிக முக்கியம். ஒவ்வொரு உயிரினமும் ஏதாவது ஒரு தனித்தன்மையைக் கொண்டிருக்கும். மனிதனின் தனித்தன்மை சிந்திப்பது. ஏப் வகை குரங்கிலிருந்து தான் மனிதன் தோன்றினான். அந்த வகை குரங்கில் இருந்து மனிதனாக உருமாற சுமார் 1.5  கோடி  வருடங்கள் ஆனது. ஒரு குரங்குக்கும்  மனிதனுக்கும்  வேறுபாடுகள் அதிகம் இல்லை.  24  குரோமோசோம்கள், 23 ஆன பின்புதான், மனிதனுக்கு தனி வடிவம் கிடைத்தது. அதன் உடம்பில் ஏகப்பட்ட ரோமங்கள், தலை வேறு வடிவமாக இருக்கிறது. கை கால்களெல்லாம் நீளம். ஆனால் அடிப்படை அமைப்பில் அதற்கும் மனிதனுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. 32  பற்கள், இரண்டு கண்கள், கை, கால்களில் 5  விரல்கள், கல்லிரல், ஈரமற்ற சருமம் முதுகெலுப்பு  எல்லாம் ஒரே மாதிரிதான். சிம்பன்சி குரங்கின் மூளையில் உள்ள எல்லா ரசாயன பொருட்களும் மனித மூளையிலும் உண்டு. ஜீரண அமைப்பு, நோய் எதிர்ப்பு சக்தி, ரத்த ஓட்ட அமைப்பு, சுரப்பிகள் எல்லாம் ஒன்று தான்.

மத்திய ஆப்பிரிக்காவில் மனிதனும், குரங்கும் 3   லட்சம் வருடங்களுக்கு  முன்பு ஒரு மூதாதையில் இருந்து பிரிந்து, மனிதனானது. மீண்டும் குரங்காக மாறும்வாய்பெல்லாம் மனிதனுக்கு இல்லை. இந்த 3  லட்சம் வருடங்கள் என்பது மனித பரிணாம காலத்தில் ஒரு சில மணித்துளிகள் தான். ஒரு குரோமோசோம் வித்தியாசமே இத்தனை மாறுதல் என்றால், நான்கைந்து குரோமோசோம்கள்  வித்தியாசப் பட்டிருந்தால்.....ஒரு வேளை மனிதனுக்கு இரண்டு இதயமும்,  நெற்றியில்  ஒரு கண்ணும் வந்திருக்குமோ என்னவோ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முனைவர்.இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phil.,Ph.D., அவர்களது வாழ்க்கைக்குறிப்பு... (Dr.R.K.Manikkam, professor,Writer)

                                                                                                        முனைவர். இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phi...