21 டிசம்பர் 2016

ரகசிய கேமரா-விழிப்புணர்வு வீடியோ

மரியாதைக்குரியவர்களே,வணக்கம். ரகசியக்கேமரா பற்றிய விழிப்புணர்வு வீடியோ உங்களுக்காக...............

20 டிசம்பர் 2016

பணமுள்ள பரதேசிகள்!

தாகம் தீர இப்போது தேவைக்கான தண்ணீரை மறுநாள் குளிப்பாட்ட கிடைக்கும்? என்பது சரியா?
நிதர்சனமான உண்மை! அவசியம் படியுங்க!!
அவசரத்தேவை,அத்தியாவசியத் தேவை கூட புரிந்துகொள்ளாமல் இன்றைய அரசு நிலை உள்ளதைக்கண்டு வேதனைப்படுவதைத்தவிர?????
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டனைக்குள்ளாகக்கூடாது.என கேள்விப்பட்டிருக்கிறேன்.அதுபோல கறுப்பு பணத்தை ஒழிக்க வேண்டும். என்பதில் என் போன்றோருக்கு முரண்பாடு ஏதுமில்லைங்க.ஆனால் துர்நாற்றம் வீசுகிறதே என்று மூக்கை அரை மணி நேரம் பிடித்துக்கொண்டிருக்க முடியுமா?ஆக்ஸிஜன் என்னும் உயிர்க்காற்றின் ஒரு நிமிட தாமதத்துக்கு கூட உயிர் பொறுக்காது.அதுபோல உழைப்பின் ஊதியத்தையும்,ஏற்கனவே வைத்திருந்த 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களையும் செல்லாது என்ற அறிவிப்பால் வங்கியில் செலுத்த வேண்டிய கட்டாயத்தை உருவாக்கியதோடு உழைப்பின் கூலியையும் வங்கியிலேயே முடக்கிக்கொண்டு?
மாதந்தோறும் புழக்கத்திலிருக்கும் மாறாத செலவினங்களான ,பால் கணக்கு,மளிகைக்கணக்கு,கல்விக்கட்டணம்,காய்கறி செலவு,போக்குவரத்து செலவு,மருத்துவ செலவு,வீட்டு வாடகை செலவு,பெட்ரோல் மற்றும் டீசல் செலவு,விருந்தோம்பல் செலவு, பெறப்பட்ட கடனுக்கான வட்டி கட்டுதல்,திடீர் செலவினங்களான திருமணச்செலவு,ஈமச்சடங்கு செலவு,மின் கட்டணம்,போன் கட்டணம், குடிநீர் கட்டணம்,வீட்டு வரி,சொத்து வரி ,வாகனம்,மொபைல்,மிக்சி,கிரைண்டர்,போன்ற இயந்திரங்கள் பராமரிப்பு செலவு,பழுது நீக்கும் செலவு,இன்னும் எத்தனையோ செலவினங்களை நிர்வகிக்கும் நமக்கு நிதி ஆதாரம் மாதச்சம்பளம் ஒன்றே என்ற நிலையில் வாழ்ந்து வரும் நம்முடைய சம்பளத்தையும்,ஏற்கனவே வைத்திருந்த பணத்தையும் வங்கியில் செலுத்தவைத்துவிட்டு மின்னணு பண பரிவர்த்தனைக்கு மாறி ரொக்கமில்லா பயன்பாட்டுக்கு வாழ பழக்கப்படுத்திக்கொள்ளுங்க என்று விளம்பரப்படுத்தும் அதே நேரத்தில் ஸ்வைப் என்னும் உரசல் பரிமாற்றம் அரசுத்துறை நிறுவனங்கள் உட்பட நம்முடைய வழக்கமான பயன்பாட்டுத்தளங்கள் எங்கும் டிஜிட்டல் வசதியே இல்லாமல் நம்முடைய பணம் எங்கும் வீணாகாது.வங்கியில் பத்திரமாக அப்படியே இருக்கும் என்று ஆறுதல் சொல்லும் புண்ணியவான்களே,நாய் பெற்ற தெங்கம் போல (முழுத் தேங்காய் கிடைக்கப்பெற்ற நாய் உள்ளிருக்கும் தேங்காய்ப்பருப்புக்காக தேங்காயை உடைக்க முடியாமல் அங்கும் இங்கும் உருட்டி அலையும் நாய் போல)
இப்போது ஏ.டி.எம் கார்டை வைத்துள்ள எங்களை எந்த வங்கியின் ஏ.டி.எம்.மையத்தில் பணம் இருக்கும் என்று எ.டி.எம். மையங்களுக்காக தெருத்தெருவாக அலைய வைத்து வேதனைப்படுத்துவதை எப்படிங்க உங்களால் மட்டும் நியாயமாக பார்க்க முடிகிறது.
பிழைக்க அவசரத்தேவைக்கு உயிர்த்தண்ணீர் கேட்டால் சற்று பொறு? அடுத்த ஆண்டு புயல் மழையால் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரை பயன்படுத்திக்கொள் என்று சொல்வதைப்போல் அல்லவா உள்ளது.பின்னர் கிடைக்கும் பிரியாணியை விட தற்போது பசியை போக்கும் பழைய சோறு,கஞ்சி அல்லவா அமிர்தம் போன்றது.தேவைக்கான நேரமும்  , கால இடைவெளியும் பொருந்த வேண்டாமா? மிகவும் வேதனையுடன் 

எனது பணத்துக்காக அலையும் C. பரமேஸ்வரன் டிரைவர்,சத்தியமங்கலம்,ஈரோடு மாவட்டம்.

13 டிசம்பர் 2016

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மொபைல் பண பரிவர்த்தனை

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் மொபைல் போன் பண பரிவர்த்தனை செய்ய
           பதிவு செய்யும் முறை:
பதிவு செய்யும் முறை:
  • மொபைல் போனில் பின்வருமாறு டைப் செய்து 567676 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்புக. ‘MBSREG <இடைவெளி> <மொபைலின் கம்பெனி பெயர்> <இடைவெளி> <மொபைல் மாடல்> ‘ எ.கா: MBSREG Nokia 6600
  • உங்கள் கைபேசி ஜாவா மென்பொருள் கொண்டு செயல்படுமெனில் உங்களுக்கான பயனாளர் ஐடியும், எம்பின் நம்பர் (MPIN) எனப்படும் தனிநபர் அடையாள எண்ணும்(ரகசிய எண்) மற்றும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோட் செய்யத் தேவையான இணையதள முகவரியையும் எஸ்எம்எஸ் மூலம் பெறுவீர்கள். இதற்கு ஜிபிஆர்எஸ் இணைப்பு இருக்க வேண்டும்.
  • விண்ணப்ப படிவத்தை டவுண்லோட் செய்தவுடன் எஸ்எம்எஸ் மூலம் பெறப்பட்ட பயனாளர் ஐடியுடன் இணையதளத்தினுள் நுழைக.
  • பயனாளர் ஐடியை எஸ்எம்எஸ் மூலம் பெறப்பட்டபடியே டைப் செய்க.
  • மொபைல் பேங்கிங் செயலியைத் திறந்தவுடன் உங்களின் எம்பின்(MPIN) எண்ணை மாற்ற கேட்டுக்கொள்ளப்படுவீர்கள்.
  • அவ்வாறு கேட்கப்படவில்லையெனில் “Settings" என்ற முதன்மை மெனுவில் உள்ள “Change MPIN” என்பதைத் தேர்வு செய்க.
  • “old MPIN” என்ற இடத்தில் எஸ்எம்எஸ் மூலம் பெறப்பட்ட 'எம்பின்'எண்ணையும், “new MPIN” என்ற இடத்தில் நீங்கள் விரும்பும் புது 'எம்பின்' எண்ணையும் குறிப்பிடுக. இந்த புது 'எம்பின்' எண்ணை “Confirm new MPIN” என்ற இடத்திலும் குறிப்பிட வேண்டும்.பின்னர் அவற்றை அனுப்புக.
  • நீங்கள் புது 'எம்பின்' எண்ணை மாற்றியது எஸ்எம்எஸ் மூலம் உறுதி செய்யப்படும்.
  • 'எம்பின்' எண்ணை மாற்றியதற்கான உறுதிப்படுத்தும் எஸ்எம்எஸ் பெற்றவுடன் ஒரு ரகசிய கேள்வியைத் தேர்ந்தெடுத்து அதற்கான பதிலை அளிக்க வேண்டும். இதற்கு “Settings" என்ற முதன்மை மெனுவில் உள்ள “Validate Account” என்பதைத் தேர்வு செய்க. இதில் ஏதேனும் ஒரு கேள்வியைத் தேர்ந்தெடுத்து பதில் அளிக்கவும்.
  • இந்த ரகசிய கேள்வியையும் அதற்கான பதிலையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் நீங்கள் 'எம்பின்' நம்பரை மறந்துவிட்டாலோ அல்லது இச்சேவையை ரத்து செய்ய விரும்பினாலோ இது உங்களை அடையாளம் காண தேவைப்படும்.
  • பின்னர் அருகாமையில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் வழியாக இதனை ஆக்ட்டிவேட் செய்யுங்கள்.
  • ஏடிஎம் கார்டை நுழைத்தபின் ‘Services’ என்ற மெனுவில் ‘Mobile Banking’என்பதை தேர்ந்தெடுங்கள்
  • “Mobile Banking” என்பதன் கீழ் ‘Register’ என்பதைத் தேர்ந்தெடுத்து உங்கள் மொபைல் எண்ணைக் கொடுங்கள். பதிவினை உறுதிப்படுத்த மீண்டும் மொபைல் எண்ணைக் கொடுங்கள்.
  • மேற்கண்ட செயல்முறைகளை முடித்தவுடன் உங்கள் மொபைல் பேங்கிங் கணக்கு ஆக்டிவேட் செய்யப்படும்.
  • இதன் பின்னர் மொபைல் பேங்கிங் சேவையின் கீழ் வழங்கப்படும் அனைத்து சேவைகளையும் பெறலாம்.

மொபைல்போன் பணம் பரிவர்த்தனை?

       மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.மொபைல் போன் பாதுகாப்புக்கு நீங்கதாங்க பொறுப்பு!  
         ஸ்மார்ட்போன்கள் காலத்தில் இவ்வளவு சாதாரணமாக இந்த விஷயத்தைக் கையாள முடியவில்லை. செல்போன் பயன்படுத்துபவரின் தனிப்பட்ட தகவல்களும் சேர்ந்தே போய்விடுகிறது. குறிப்பாக பல்வேறு தேவைகளுக்கான செயலிகளை பயன்படுத்தும் இந்த நாட்களில் செல்போன் என்பது மிகவும் பாதுகாப்புக்குரிய முக்கிய பொருளாகவே மாறிவிட்டது.
பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக தளங்களை பெரும்பாலானோர் மொபைல் மூலமாகவே பயன்படுத்தி வருகின்றனர். தவிர இ-காமர்ஸ் நிறுவனங்கள் மொபைல் செயலி மூலமான விற்பனைக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வருகின்றன.
இந்த வகையிலான பொழுதுபோக்கு மற்றும் வர்த்தக செயலி களில் நமது தனி விவரங்களை ஒரு முறை பதிவு செய்துவிட்டால் போதும். செல்போன் மூலமாக அந்த தளத்துக்கு செல்லும் ஒவ்வொரு முறையும் பாஸ்வேர்ட் கொடுக்க தேவையில்லை.
இது போன்ற வசதிகள் காரணமாகத்தான் செல்போன் தொலைந்து போகாமல் இருக்க கூடுதல் எச்சரிக்கையோடு இருக்க வேண்டியிருக்கிறது.
டிஜிட்டல் மணிபர்ஸ்
தவிர தற்போது நிதி சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பல செயலிகள் வந்துவிட்டன. பெரும்பாலானவர்கள் இதை பயன்படுத்தவும் தொடங்கிவிட்டனர். குறிப்பாக வங்கிகளின் நெட் பேங்கிங் வசதிகளிலிருந்து தற்போது மொபைல் பேங்கிங் சேவைகளுக்கு மாறி வருகின்றனர். மேலும் சில வங்கிகள் மற்றும் செயலிகள் செல்போன் மூலம் கிரெடிட் கார்டு தகவல்களை சேமித்து வைத்து, இதன் மூலம் பண பரிவர்த்தனைகள் உள்ளிட்ட இதர வர்த்தகச் சேவைகளையும் வழங்கி வருகின்றன.
அதாவது சமீப காலமாக மொபைல் போன்கள் கிட்டத்தட்ட மணிபர்ஸ்களைப் போல உருமாற்றமும் அடைந்துள்ளன. மொபைல் வாலட்டுகள் இந்த வசதிகளை அளிக்கின்றன. நமது வங்கிக் கணக்கில் பணம் வைத்திருப்பதைப்போல மொபைல் வாலட்டில் வைத்துக் கொண்டு தேவைக்கு ஏற்ப செலவு செய்யலாம்.
இப்படி மொபைல் போன் மூலம் நிதியியல் சார்ந்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள் ளலாம் என்கிறபோது இன்னும் அதி முக்கியத்துவம் வாய்ந்த பயன்பாட்டு பொருளாக செல்போன் மாறியுள்ளது.
சரி இது போன்ற சூழ்நிலைகளில் செல்போன் தொலைந்து விடுகிறது என்றால் என்ன செய்வது? சட்ட ரீதியான நடவடிக்கைகள் என்பது அடுத்த கட்டம்தான். அது நமது தனிப்பட்ட விவரங்களை தவறாக கையாளப்படுவதிலிருந்து பாதுகாப்பளிக்கும். ஆனால் மொபைல் போன் கிட்டத்தட்ட ஒரு பர்ஸ் போல இருப்பதால் இதில் இருக்கும் நிதி சார்ந்த தகவல்கள் மற்றும் பணம் திருடப்பட்டால் என்ன செய்வது ? இதுதான் தற்போதைய நிலையில் மொபைல் பயனாளிகள் கவனிக்க வேண்டிய விஷயம்.
இது தொடர்பாக மொபைல் சர்வீஸ் மற்றும் செல்போன் விற்பனை நிறுவனங்கள் மற்றும் மொபைல் வாலட் பயனாளிகளிடமும் பேசினோம்.
ஸ்மார்ட்போன்களில் தற்போது கிடைக்கும் வசதிகளைப் போல பல மடங்கு வசதிகள் தினசரி அப்டேட் ஆகிக்கொண்டிருக்கின்றன. இதனால் போன்களின் பாதுகாப்பு என்பது முழுக்க முழுக்க தனிநபர்களின் பாதுகாப்பு சார்ந்ததாகவே இருக்கிறது.
பொதுவாக ஸ்மார்ட் போன்களை இயக்குவதற்கு ரகசிய குறியீடு உள்ளதுபோல அமைப்பை மாற்றிக் கொள்ள வேண்டும். என்றாலும் செல்போன் தொலைந்து போனால் ரகசிய குறியீடுகளை எடுக்க முடியாது என்றில்லை. மொபைல் சாப்ட்வேர் தெரிந்தவர்கள் அதை ஓப்பன் செய்துவிட முடியும். எனவே சிம்கார்டு மட்டும் செயலிழக்கச் செய்துவிட்டால் போது மானதல்ல என்பதை உணர வேண்டும்.
மொபைல் பயனாளிகள் கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கிய விஷயம் செயலிகளின் பாஸ்வேர்டுகள்.
பொதுவாக வங்கிச் செயலிகளில் பயன்பாடுகளை பொறுத்த வரை ஒவ்வொருமுறை பயன்படுத்தும் போதும் வாடிக்கையாளர் எண் மற்றும் ரகசிய எண் கேட்கும் வகையில்தான் வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஆனால் என்னதான் செக்யூரிட்டி பாஸ்வேர்டுகள் கொடுத்தாலும் அதையும் உடைக்கும் ஆட்கள் இருக்கத்தானே செய்கிறார்கள். அதாவது வாலட்டில் வைக்கும் பணமோ, கிரெடிட் கார்டு தகவல்களோ 100 சதவீதம் பாதுகாப்பாகத்தான் இருக்கும் என்றும் சொல்ல முடியாது என்கின்றனர்.
மொபைல் வாலட்டுகளுக்கு நுழைய பாஸ்வேர்டு தனியாகத்தான் உள்ளிட வேண்டும். இதை அவ்வப்போதும் கொடுக்கலாம். அல்லது 24 மணி நேரத்துக்கு மாற்றத் தேவையில்லை என்கிற வகையிலும் செட்டிங்குகள் இருக்கிறது. இந்த இரண்டாவது வகையில் செட்டிங் செய்திருப்பவர்களது மொபைல் போன் வாலட்டில் பணம் இருந்தால் எளிதாக எடுத்துவிட முடியும் என்கின்றனர்.
டிஜிட்டல் பரிவர்த்தனை
சமீப காலத்தில் மொபைல் வாலட் முறையிலான டிஜிட்டல் பரிவர்த் தனை நடவடிக்கைகளை அரசாங்கமும் ஊக்குவித்து வருகிறது. இந்த வகை யிலான சேவைகளுக்கு அனுமதி வழங்குவதில் புதிய நிறுவனங் களும் இறங்குகின்றன. ஏனென் றால் டிஜிட்டல் முறையிலான பண பரிவர்த்தனை நடவடிக்கைகள் தனிநபர் களது கணக்கில் முழுமையாக வந்துவிடு கிறது. இதில் சட்ட விரோத பண பரிவர்த் தனைகளுக்கு வாய்ப்பே இல்லை என்பதால் அரசு ஊக்குவிக்கிறது.
ஆனால் மொபைல் வாலட்டில் அதிகமான பணத்தை வைத்துக் கொள்ளாமல் அவ்வப்போது தேவைக்கு ஏற்ப கிரெடிட்கார்டு அல்லது டெபிட் கார்டிலிருந்து பணத்தை பரிமாற்றம் செய்து கொண்டு வாலட் மூலம் பயன்படுத்தலாம். இதுவரை வாலட் பரிமாற்றங்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாக தெரியவில்லை. ஆனால் இனி நடக்காது என்றும் சொல்ல முடியாது என்கின்றனர் இவர்கள்.
ஒவ்வொரு புதிய வசதியும் மனிதனை மேலும் சோம்பேறியாக்குவது என்கிற பேச்சும் இருக்கத்தான் செய்கிறது. அதை உறுதிபடுத்துவதுபோலத்தான் மொபைல் பயன்பாடு உருவாகி யுள்ளது. அதே சமயத்தில் நவீன கண்டுபிடிப்புகள் மனிதனை மேலும் நவீன மனிதனாக்குகிறது என்பதையும் மறுக்க முடியாது.
நாம் நவீன மனிதனாக இருக்கும் அதே வேளையில் சோம்பேறியாகவும் மாறாமல் இருக்க வேண்டும். அந்த வகையில் உங்கள் பாக்கெட்டில் இருக்கும் செல்போனுக்கு பாதுகாவலர் நீங்கள்தான். 
 தி இந்து நாளிதழுக்கு நன்றிங்க. 
மொபைல் பேங்கிங் - அறிந்திருக்க வேண்டிய தகவல்கள்
 
உங்கள் மொபைல்போன் மூலம், ஒரு நாளில் ரூ.5000 வரைப் பணப்பரிமாற்றமும், ரூ 10,000 வரை வர்த்தகப் பரிமாற்றங்களிலும் நீங்கள் ஈடுபடலாம்.

உரிமம் பெற்ற, நெறிபடுத்தப்பட்ட வங்கிகள் மற்றும் இந்தியாவில் செயல்படும் வங்கிகள் அனைத்தும் தங்கள் கிளைகள் மூலமாகவோ அல்லது வர்த்தக செயலர்கள் மூலமாகவோ மொபைல் பேங்கிங் சேவையை அளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.

வங்கியில் கணக்கு வைத்திருப்போர், வங்கியின் மூலம் டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு பெற்றவர்கள், இச்சேவைகளைப் பெறலாம்.
தற்சமயம், மொபைல் பேங்கிங் சேவை உள்நாட்டு பணப்பரிமாற்றங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

மொபைல் பேங்கிங் சேவையில், வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் குறைகள் வங்கிகளின் குறை தீர்ப்பாளர்கள் மூலம் நிவர்த்தி செய்யப்படும்.

சேவையைப் பயன்படுத்தும்போது உங்களுக்கு உள்ள பொறுப்புகள், கடமைகள் மற்றும் இடர்பாடுகளைப் பற்றி வங்கிகள் உங்களுக்கு சொல்லவேண்டும்.

இச்சேவையைப் பெறும் முன், பணப்பரிமாற்றத்திற்கான கட்டணங்கள், மாதம்/ஆண்டு சந்தா விவரங்களை கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

மொபைல் போன் கொண்டு நடைபெறும் பணபரிமாற்றங்கள் அனைத்துமே வங்கி அலுவலர் மூலமாகவே நிகழ்கிறது என்பதை உணருங்கள்.

மொபைல் பேங்கிங் சேவையைப் பெற்றபின் உங்கள் மொபைல்போனை நண்பரிடமோ அல்லது பிறரிடமோ கொடுக்காதீர்.

உங்கள் மொபைல் போன் தொலைந்துவிட்டால் உடனே உங்கள் வங்கிக்கு அதனைத் தெரியப்படுத்துங்கள்.

மொபைல் பேங்கிங்..எச்சரிக்கை


மரியாதைக்குரியவர்களே,
           வணக்கம். 
மொபைல் பேங்கிங் பற்றி தெரிந்துகொள்ளுங்க!..எச்சரிக்கையாக பணம் பரிமாற்றம் செய்யுங்க!! இந்த பதிவு https://senthilvayal.com/ அவர்களது பகிர்வு..
         இது மொபைல் யுகம். உள்ளங்கையில்  ஆண்ட்ராய்டு மொபைல் போன் இருந்தாலே போதும், அத்தனை விஷயங்களையும் இருந்த இடத்தில் இருந்தபடியே செய்துவிட முடியும் என்கிற அளவுக்கு நிலைமை மாறிவிட்டது. இந்த நிலையில், வங்கிச் சேவை மட்டும் மொபைலில் வராமல் போய்விடுமா என்ன? பணம் எடுத்தாலோ அல்லது பணம் நம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டாலோ அனைத்துக்கும் எஸ்எம்எஸ் வருவது தொடங்கி, மொபைல் பேங்கிங் ஆப்ஸ், இன்டர்நெட் பேங்கிங், இ-வேலட் வரை  பல்வேறாக கிளைத்து வளர்ந்து வருகிறது வங்கித் துறை.
இன்றைய தேதியில் இந்தியாவில் 92 கோடி செல்போன்கள் புழக்கத்தில் இருக்கின்றன. மத்திய ரிசர்வ் வங்கியின் கணக்கின்படி, இந்தியாவில் தற்போது 57.08 கோடி டெபிட் கார்டுகளும், 2.14 கோடி கிரெடிட் கார்டுகளும் பயன்பாட்டில் இருக்கின்றன. பணத்தை கையில் வைத்திருந்தால் பாதுகாப்பு இல்லை. எனவே, வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்து அதை கார்டு மூலம் எடுத்துக்கொள்வோம் என்கிற நிலை போய், தற்போது கார்டைவிட மொபைல் இ-வேலட்டில் பணத்தை வைத்துக்கொண்டால்தான் ஓ.கே என்கிற மனநிலைக்கு மாறிக் கொண்டிருக்கிறார்கள் நம்மவர்கள்.
இதனால் மொபைல் பேங்கிங் அசுர வேகத்தில் காற்றைப்போல எங்கும் பரவி வருகிறது. இந்த மொபைல் பேங்கிங்கை அடுத்த கட்டத்துக்கு கொண்டுசெல்ல இன்று சந்தையில் இ-வேலட்கள் நிறையவே வந்துவிட்டன. பேடிஎம் (Paytm), பேயூமணி (Payumoney), பாக்கெட் ஐசிஐசிஐ பேங்க் (Pocket ICICI Bank), ஆக்ஸிஜன் வேலட்  (Oxygen  wallet), மொபிவிக் வேலட்(Mobiwik wallet) போன்ற முன்னணி இ-வேலட்கள் வரிசை கட்டி நிற்கின்றன.
மொபைல்மயம்!
தனியார் நிறுவனங்களே கோலேச்சி வந்த இந்தத் தறையில் தற்போது பொதுத் துறை வங்கிகளும் காலடி எடுத்து வைக்கத் தொடங்கிவிட்டன. இந்தியாவின் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா கடந்த சில நாட்களுக்கு முன்புதான் எஸ்பிஐ படி (SBI Buddy) என்கிற பெயரில் தன் இ-வேலட்டை தொடங்கி இருக்கிறது. இதன் தொடக்க விழாவில் பேசிய எஸ்பிஐ வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா,  “இனி மொபைல்தான் பணப் பரிமாற்றத்தின் மையமாக இருக்கும்’’ என்று சொல்லி இருக்கிறார்.
இந்திய அளவில் மட்டும் இல்லாமல், உலக அளவிலும் இனி மொபைல் பேங்கிங் வங்கிச் சேவைகளில் மிக முக்கிய பங்கு வகிக்கும் என்பதை கணித்திருக்கிறார்கள். உலக மொபைல் பேங்கிங் (World Mobile Banking) அறிக்கையின்படி, அடுத்த நான்கு ஆண்டுகளில் மொபைல் பேங்கிங் சேவைகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 180 கோடியாக அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருக்கிறது. இது மொத்த உலக மக்கள் தொகையில் 25 சதவிகிதத்துக்கும் மேல். மொபைல் பேங்கிங் சேவையை பயன்படுத்துவதில் இந்தியா, சீனா போன்ற வளரும் நாடுகள், அமெரிக்கா, கனடா, பிரிட்டன் போன்ற வளர்ந்த நாடுகளை பின்னுக்குத் தள்ளி இருக்கிறது.
இந்த அசுர வளர்ச்சியால் எந்த அளவுக்கு நம் வேலை சுலபமாகிறதோ, அதே அளவுக்கு ஆழம் தெரியாத ரிஸ்க் இருக்கிறது என்பது அதிர்ச்சி தரும் உண்மை. பணத்தின் மறுபிம்பமாக இருக்கக்கூடிய வங்கிகளுக்கும், வங்கிச் சேவைகளை செல்போன் மற்றும் இணையம் மூலம் பயன்படுத்தும் வாடிக்கையாளர் களுக்கும் இன்று பெரும் பிரச்னையாக உருவெடுத்தி ருக்கிறது  மொபைல் போன்கள்.
வைரஸ் அபாயம்!
இன்றைய தேதியில் ஆசிய – பசிபிக் பிராந்தியத்தில் உள்ள 70 சதவிகித வங்கிகளின் ஆப்ஸ்கள் வைரஸ்களால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக விஜிலென்ட் (Wegilant) ஐ.டி செக்யூரிட்டி ரிசர்ச் நிறுவனம் கண்டறிந்து சொல்லி இருக்கிறது. இந்த வங்கிகள் பயன்படுத்தும் ஆப்ஸ்கள் எஸ்எஸ்எல் (SSL – Secure Socket Layer) என்கிற சான்றிதழ்கள் பெறாமல் இருப்பதாகவும் அந்த நிறுவனம் சொல்லி இருக்கிறது. எஸ்எஸ்எல் சான்றிதழ் இல்லாத ஆப்ஸ்களை பயன்படுத்தும்போது விவரங்களை மிக எளிதாக ஹேக் செய்துவிடலாம். வங்கி வாடிக்கையாளருக்கும் இணையத்துக்கும் இடையில் நடக்கும் தகவல் பரிமாற்றத்தை பாதுகாப்பதுதான் எஸ்எஸ்எல்-ன் முதல் பணி.
விஜிலென்ட் நிறுவனம் சொல்லும் இன்னொரு முக்கியமான தகவல், இந்தியாவில் உள்ள 33 வங்கிகளின் ஆப்ஸ்களை பரிசோதித்ததில் 29 வங்கிகளின் ஆப்ஸ்கள் வைரஸ்களால் பாதிப்படையும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருப்பதாக சொல்லி இருப்பதுதான். இதில் 5 வங்கிகளின் ஆப்ஸ்கள் மிக எளிதில் வைரஸ்களால் பாதிப்படையும் வகையில் இருக்கிறதாம்!
ஹேக்கர்கள்… உஷார்!
இன்றைக்கும் பலரும் பொது இடத்தில் கிடைக்கும் வைஃபை வசதியைக் கொண்டு  மொபைலிலிருந்து வங்கிச் சேவையைப் பயன்படுத்து கிறோம். அப்படி பயன்படுத்தும் போது நம் விவரங்கள் திருடப்பட வாய்ப்புகள் இருக்கின்றன. காரணம், வைஃபை மூலம் இணையத்தை வழங்குபவர் ஹேக்கராக இருந்தால், நம் லாக் ஃபைல்களை (log file) திருட வாய்ப்பு இருக்கிறது. இந்த லாக் ஃபைல்கள் இருந்தாலே, நம் போன் மூலம் என்ன செய்தோமோ, அதை நம் போன் இல்லாமலேயே ஹேக்கரால் செய்ய முடியும்.
இத்தனை நாளும் இணையத்தில்தான் வைரஸ்களின் அட்டாக் இருந்தது. ஆனால், இன்று நமது செல்போனில் இருக்கும் நிதி சார்ந்த விவரங்களை மட்டும் ஹேக் செய்வதற்கும், நம் பணத்தை நம் யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்டுகளை திருடவும் பல வைரஸ்கள் கண்டுபிடிக்கப் பட்டிருக்கின்றன. உதாரணமாக, ஃபிஸ்ஸிங் மற்றும் ஸ்பூஃபிங் (Phising, Spoofing) என்கிற முறையில், நம் போனுக்கோ அல்லது கம்ப்யூட்டருக்கோ வைரஸ்களை தாக்கவிட்டு, நம் விவரங்களை நமக்குத் தெரியாமலேயே எடுத்துக் கொள்கிறார்கள் ஹேக்கர்கள்.
நாம் எந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கிறோம் என்பதை மட்டும் தெரிந்துகொண்டு நம் வங்கியிலிருந்து மெயில் அனுப்புவதுபோல ஹேக்கர்கள் ஒரு மெயிலை அனுப்புவார்கள். நாமும் அந்த மெயில் உண்மையாகவே வங்கியிடமி ருந்துதான் வந்தது என்று எண்ணி, அந்த மெயிலுக்குப் பதிலளிப்போம். அப்படி அளித்துவிட்டால் அதன்பிறகு வங்கிக்குப் பதிலாக எப்போதும் அந்த ஹேக்கரிடம்தான் நாம் தொடர்பு கொள்ளவேண்டி இருக்கும். இந்த வகையான பாதிப்புகளை ‘ரீப்ளே அட்டாக்’ (Replay attack) என்கிறார்கள்.
இந்த மெயிலுக்கு பதில் அளிக்கும்போது நம்முடைய முக்கிய வங்கிக் கணக்கு விவரங்களான டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு எண்கள், பாஸ்வேர்டுகள், நெட் பேங்கிங்  செய்வதற்கான யூசர்நேம் பாஸ்வேர்டுகள் போன்றவை களை டைப் செய்யும்போது, வைரஸானது அந்த ரகசிய விவரங்களை ஹேக்கர்களுக்கு அனுப்பிவிடும். இதனால் நம் வங்கிக் கணக்குகளில் உள்ள பணத்தை நாமே திருட வழி சொல்லியது போல் ஆகிவிடுகிறது. கிடைத்த விவரங்களை வைத்து நமக்கு பதில் ஹேக்கர் பணப் பரிமாற்றங்களை மேற்கொள்வார். இதை  ‘அன் ஆத்தரைஸ்டு ஆக்சஸ்’ (Unauthorised access) என்பார்கள்.
எஸ்எஸ்எல் சான்றிதழ் இல்லாத வலைதளங்கள் மற்றும் ஆப்ஸ்களை பயன்படுத்தும் போது, வாடிக்கையாளருக்கும், இணையத்துக்கும் இடையில் தகவல் பரிமாற்றம் நடைபெறும்போது நமக்கே தெரியாமல் நம் ரகசிய தகவல்களைத் திருட முடியும். இந்த வகையான தாக்குதல்களை ‘மேன் இன் தி மிடில் அட்டாக்’ (Man in the middle attack) என்பார்கள். இந்த பாதிப்புதான் அதிக அளவில் நடைபெறுகிறது. எனவே, இதை தடுக்க எஸ்எஸ்எல் சான்றிதழ் உள்ள ஆப்ஸ்களை டவுன்லோடு செய்வது அவசியம். அதோடு வங்கியின் அதிகாரப்பூர்வமான வலைதளத்திலும், கூகுள் ப்ளேஸ்டோர், ஆப்பிள் ஐடியூன்ஸ் போன்ற நம்பகமான ஆப்ஸ் ஸ்டோர்களிலிருந்து டவுன்லோடு செய்தால் வைரஸ் தாக்குதல்களின் அளவை கணிசமாகக் குறைக்க முடியும்.
பாதுகாப்புக்கு வழி!
சமீபத்தில் கான்ஃபிக்கர்  (Confickr) என்று ஒரு வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த வைரஸ்களால் ஒரு மொபைல் பாதிக்கப்பட்டால், அதன்பிறகு ஆண்டிவைரஸ்களை கூட அந்த போனில் அப்டேட் செய்ய முடியாது. ஆண்டி வைரஸ்களை அப்டேட் செய்ய முடியவில்லை என்றால், சாதாரண வைரஸ்கள்கூட மொபைல் போனுக்குள் நுழைந்து முக்கியத் தகவல்களை வேட்டையாடத் தொடங்கி விடும். ஏடிஎம் பின், கிரெடிட் கார்டு பின், நெட்பேங்கிங், யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்டு என்று அனைத்தையும் நாம் மொபைல் போனிலேயே வைத்திருப்பதால், சொந்தச் செலவில் சூனியம் வைத்துக் கொண்ட மாதிரி ஆகிவிடும். கான்ஃபிக்கர் மட்டும் அல்ல, ஐலவ்யூ (Iloveyou), பாட்நெட் (botnet), கோட்ரெட் (codered) என்று தினமும் பல புதிய வைரஸ்கள் வந்துகொண்டேதான் இருக்கின்றன.
மொபைல் போனில் பணப் பரிமாற்றம் செய்யும்போது இத்தனை பிரச்னைகள் இருந்தாலும் அது இல்லாமல் இனி இருக்க முடியாது என்கிற நிலைக்கு வந்துவிட்டோம். இனி இணைய வெளியில் வங்கிப் பரிமாற்றங்களை எப்படி பாதுகாப்பாக மேற்கொள்வது என்பது முக்கியமான விஷயம். வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களின் பாதுகாப்புக்கு என்ன செய்கிறது என்கிற கேள்வியை நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (National Payment Corporation of India – NPCI) அமைப்பின் இம்மீடியட் பேமென்ட் சர்வீஸ் துறையின் (IMPS – Immediate Payment service) தலைவர் ராம் ரஸ்தோகியிடம் கேட்டோம்.
“நம் மொபைல் போன்கள் வைரஸ்களால் பாதிப்படைய பல காரணங்கள் இருக்கின்றன. வாடிக்கையாளர்கள் செய்யும் தவறுகளை சரிசெய்து கொண்டாலே பாதிப் பிரச்னை தீர்ந்துவிடும்.
ஆப்ரேட்டிங் சிஸ்டம் மூலம் வரும் வைரஸ்கள்! 
மால்வேர் வகையான வைரஸ்கள் நம் மொபைல் போன்களைத் தாக்கினால் பாதிப்பு ஏற்படும். குறிப்பாக, அங்கீகரிக்கப்படாத வலை தளங்களில்தான் அதிக மால்வேர்கள் இருக்கும். எனவே, அங்கீகரிக்கப்படாத வலை தளங்களில் உலாவுவதை நிறுத்தினாலே ஆப்ரேட்டிங் சிஸ்டம் மூலம் ஏற்படும் வைரஸ் தொற்று ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
ஹார்டுவேர் மற்றும் அப்ளிகேஷன்கள் மூலம் வரும் வைரஸ்கள்! 
பொதுவாக, நம்பகத்தன்மை இல்லாத எஸ்எஸ்எல் சான்றிதழ் அளிக்கப்படாத அப்ளிகேஷன்களைத் தவிர்ப்பது நல்லது.
அதேபோல, சிம் தொலைந்துவிட்டால் அதே எண்ணை வாங்குவதற்காக சிம் குளோனிங் செய்கிறார்கள் சிலர். இப்படி செய்யப்படும் சிம் கார்டை பயன்படுத்துவதால்,  வைரஸ் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே, சிம் கார்டு தொலைந்துவிட்டால், வேறு ஒரு புதிய எண்ணை வாங்கிக் கொள்வது நல்லது.
அத்துடன் அப்ளிகேஷன்களை டவுன்லோடு செய்யும்போது அந்த ஆப்ஸ்களில் பிஐஇ (Position Independent Executable) எஸ்எஸ்பி (Stack Smashing Protection) போன்றவைகள் இருக்கிறதா என்பதை எல்லாம் உறுதி செய்துகொண்டு டவுன்லோடு செய்வது நல்லது.
புரோட்டோக்கால்களில் உள்ள தவறு!
சில மொபைல் போன்கள் விற்பனைக்கு வந்தவுடனேயே வாடிக்கையாளரிடம் வரவேற்பு கிடைக்காமல் ஃபெயிலியர் மாடலாகிவிடும். இப்படி ஃபெயிலியர் ஆகும் மாடல்களில் சில போன்களின் புரோட்டோகால்கள் (விதிகள்) தவறாக எழுதப்பட்டிருக்கும். இந்த போனில் தரப்பட்டுள்ள அல்காரிதம்களும் வலுவில்லாத தாகவே இருக்கும் (Weak Cryptographic algorithms).
எனவே, அந்த போனை பயன்படுத்தி இணையத்தில் உலவும்போது, நம் முக்கியமான ஃபைல்களை எல்லாம் லாக் செய்துவிடுவார்கள். இப்படி தவறாக புரோட்டோகால் எழுதப்பட்ட போன்களை வாங்குவதையும் தவிர்ப்பது நல்லது.
வாடிக்கையாளர்களின் பிரைவஸி மற்றும் நம்பகத் தன்மையை அதிகப்படுத்த ஒன்டைம் பாஸ்வேர்டு (OTP) போன்ற வசதிகள் எல்லாம் கொண்டு வரப்பட்டிருக்கின்றன.
ஒருவேளை நீங்கள் வங்கிப் பரிமாற்றம் செய்யும்போது உங்களுக்கு ஓடிபி வரவில்லை என்றால் உடனே வங்கியுடன் தொடர்புகொண்டு ஏன் வரவில்லை என்று விசாரியுங்கள்.
இந்தியாவில் உள்ள பெரும்பாலான வங்கிகள் தங்கள் அதிகாரப்பூர்வமான அப்ளிகேஷன்களை வடிவமைக்கும் பணியை ஐபிஎம் (IBM), எஃப்எஸ்எஸ் (FSS), இன்ஃபோசிஸ் (Infosys) போன்ற நிறுவனங்களிடம் தந்திருக்கின்றன.
சமீபத்தில் இதுபோன்ற ஆப்ஸ் வடிவமைப்பு பணிகளுக்கு புதிய   ஸ்டார்ட் -அப்களான மொபிமி (Mobime), ஃபொனேபைஸா (Fonepaisa), ஜிஐகேஷ் (GI cash) போன்ற நிறுவனங்களும் இணைந்திருக்கின்றன.
செக்யூரிட்டி சிஸ்டம்!
வங்கி தவிர மற்ற நிறுவனங்களும் ஆப்ஸ்களை வடிவமைப்பதுடன் வேறு நிறுவனங்களின் சர்வர்களையும் பயன்படுத்தி வருகின்றன. பல வங்கிகள் வெளிநாட்டு சர்வர்களையும் பயன்படுத்துகின்றன. இப்போது ஒருபடி மேலே போய் க்ளவுட் ஸ்டோரேஜ்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
வங்கிகளின் ஆப்ஸ்கள் அங்கீகரிக்கப்பட்ட செக்யூரிட்டி லேப்களில் தணிக்கை செய்யப்பட்டு சான்றிதழ் அளிக்கப்பட வேண்டும். அதோடு குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை வங்கி தரும் ஆப்ஸ்களையும் அதிகாரப்பூர்வ வலைதளத்தையும் சரிபார்க்க வேண்டும். இந்த நடவடிக்கை களை இந்தியாவில் உள்ள பல வங்கிகள் செய்துவருகின்றன.அதுமட்டுமல்லாமல், அரசு மொபைல் மற்றும் இணைய வங்கிப் பரிமாற்றங்களுக்கு என்றே பல வழிமுறைகளை சொல்லி இருக்கிறது. இந்த வழிமுறைகள் நடைமுறையில் பின்பற்றப்பட்டும் வருகிறது.
வங்கிகளும் தங்கள் மொபைல் ஆப்ஸ்களை பல கட்ட பரிசோதனைகளுக்கு பிறகுதான் இயக்கத் தொடங்குகின்றன. ஒவ்வொரு வங்கியிலும் தனியாக ஐ.டி செக்யூரிட்டி மற்றும் ரிஸ்க் துறைகள் இருக்கின்றன.
இவை இன்று சந்தையில் நிலவும் ஐ.டி சவால்களை எல்லாம் சந்தித்து வாடிக்கையாளரின் பணப் பரிமாற்றத்துக்கு பாதுகாப்பு அளித்து வருகிறது” என்று சொல்லி முடித்தார்.
(ராம் ரஸ்தோகி கூறியுள்ள கருத்துக்கள் அவரது சொந்த கருத்துக்களே. இதற்கும் அவர் பணிபுரியும் நிறுவனத்துக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது.)
மொபைல் பேங்கிங் தொழில்நுட்பத்தில் புதிது புதிதாக பிரச்னைகள் வந்துகொண்டிருந்தாலும், அதற்கான தீர்வுகளும் வந்துகொண்டுதான் இருக்கிறது.
மேற்கூறிய பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி மொபைல் போன் மூலம் நம் பணப் பரிமாற்றங்களை பாதுகாப்பாக மேற்கொள்வோமே!

ஆண்ட்ராய்டில் அதிரடி அட்டாக்!
இந்தியா மட்டுமல்லாமல் உலக அளவிலும் மொபைல் பேங்கிங் பிரச்னைகளைச் சந்தித்து வருகிறது. சமீபத்தில் அமெரிக்காவை ஸ்வ்பென்க் (Svpeng) என்கிற மால்வேர் தாக்கி இருக்கிறது என்கிற செய்தியை அமெரிக்கன் பேங்கர் (American Banker) என்கிற வலைதளம் வெளியிட்டிருக்கிறது. இந்த வைரஸ் ஆண்ட்ராய்டு போன்களை குறிவைத்து தாக்கும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. இந்த வைரஸ்களால் நம் போன் பாதிக்கப்பட்டால் போனின் மொத்த செயல்பாடுகளும் முடக்கப்பட்டுவிடும்.
இன்று உலகில் அதிக அளவிலான மக்கள் ஆண்ட்ராய்டு போன்களைத்தான் பயன்படுத்துகிறார்கள். ஜூலை 2015 கணக்கின்படி, இந்தியர்கள் பயன்படுத்தும் மொபைல் போன்களில் 62.3 சதவிகித நபர்களின் மொபைல்கள் ஆண்ட்ராய்டு (Android) இயங்குதளத்தை கொண்டது என்று ஸ்டாடிஸ்டா(Statista) என்கிற நிறுவனம் கணித்திருக்கிறது.
ஆண்ட்ராய்டு போன்களைத் தாக்குவதுதான் மால்வேர் (Malware) வகை வைரஸ்களின் முதல் இலக்கு. இந்த மால்வேர் வகையில் பல வைரஸ்கள் இருக்கின்றன. இந்த மால்வேர் வகையான வைரஸ்கள் நம் போனை தாக்கினால் போன்தான் நம் கையில்தான் இருக்கும். ஆனால், நம் போனின் கட்டுப்பாடு ஹேக்கர்களின் கையில் இருக்கும் என்கிறார்கள். இதுபோன்ற வைரஸ் தாக்குதல்களிடமிருந்து பாதுகாத்துக்கொள்ளும் வழிகளை அறிவது அவசியம்..
 தகவல் அளித்த செந்தில்வயல் அவர்களுக்கு நன்றிங்க..

05 டிசம்பர் 2016

தமிழக முதல்வர் இன்று காலமானார்.

 டாக்டர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் பற்றிய சிறு குறிப்பு...
 
மரியாதைக்குரியவர்களே,வணக்கம்
     தமிழ்நாடு மாநிலத்தின்  11 வது,14 வது,16 வது,18 வது,19 வது முதலமைச்சராக பொறுப்பு வகித்தவரும் அ.தி.மு.க.பொதுச்செயலாளருமான டாக்டர் ஜெ.ஜெயலலிதா  அவர்கள்  கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்திலுள்ள பாண்டவபுரா தாலூக்காவிற்குட்பட்ட மேல்கோட்டை கிராமத்தில் 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ந் தேதி ஜெயராம் - வேதவள்ளி தம்பதியினருக்கு மகளாகப்பிறந்தார்.

                        பெங்களூருவிலுள்ள பிஷப் காட்டன் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும்,சென்னையிலுள்ள சர்ச் பார்க் பிரசென்டேசன் கான்வென்ட்டிலும் பள்ளிப்படிப்பை முடித்தவர்.சென்னை ஸ்டெல்லா மேரி கல்லூரியில் படிக்க சேர்ந்தபோது திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புக்கிடைத்த காரணத்தால் நடிப்புலகத்தில் கால் பதித்தவர்.

                   1961 ஆம் ஆண்டில் கன்னட நடிகர் ராஜ்குமாருடன் ஸ்ரீசைல மகாத்மா கன்னட திரைப்படத்தில் நடிக்கத்தொடங்கியவர் ஆங்கில திரைபடங்களிலும்,இந்தி திரைப்படங்களிலும்,தெலுங்கு திரைப்படங்களிலும் கதாநாயகியாக நடித்து திரைப்படங்களுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
1965 ஆம் ஆண்டில் ,'வெண்ணிற ஆடை'திரைப்படத்தில் ஸ்ரீகாந்த் நடிகருடன்  தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.புரட்சித்தலைவி அவர்களுக்கு 1980 ஆம் ஆண்டு சரத் பாபுவுடன் நடித்த, 'நதியைத்தேடி வந்த கடல்' என்ற தமிழ் திரைப்படம்தான் 127 வது மற்றும் கடைசித் திரைப்படமாகும்.

       1981 ஆம் ஆண்டு அ.இ.அ.தி.மு.க.வில் உறுப்பினராகி அரசியலில் நுழைந்தார்.
1984 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மாநிலங்கவை உறுப்பினரானார்.
1989ஆம் ஆண்டு அ.தி.மு.க. கட்சியின் தலைமைப்பொறுப்பேற்று அன்று முதல் பொதுச்செயலாளராகவும் அ.தி.மு.க. கட்சியை சிறப்பாக  நிர்வகித்து வந்தார்.தமிழ்நாட்டின் இரண்டாவது பெண் முதல்வர் என்ற சிறப்பும் பெற்றார்.
 இவர் பெற்ற விருதுகளில் கலைமாமணி விருது,சிறப்பு முனைவர்  என்னும் டாக்டர் பட்டம்,தங்க மங்கை விருது குறிப்பிடத்தக்கவை.
 உடல்நலக்குறைவால் 2016 செப்டெம்பர் 22 ந் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்ற நிலையில் லண்டன் மருத்துவர் உட்பட டெல்லி எய்ம்ஸ் சிறப்பு மருத்துவர்கள் குழு உட்பட உலகத்தரம் வாய்ந்த மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டும் இயற்கைவிதியால் 2016 டிசம்பர் 5 ந் தேதி இரவு 11.30மணியளவில் மருத்துவமனையிலேயே உயிர் பிரிந்தது.

03 டிசம்பர் 2016

இந்திய வங்கிகளில் கணினிமயமாக்கப்பட்டவைகளின் பட்டியல்..

மரியாதைக்குரியவர்களே,
                வணக்கம்.இந்தியாவிலுள்ள வங்கிகளில் கணினிமயமாக்கப்பட்ட வங்கிகளின் பட்டியல் உங்களது தகவலுக்காக பதிவு செய்துள்ளேன்.விடுபட்ட வங்கிகளின் பெயர்கள் தங்களுக்கு தெரிந்தால் இத்துடன் இணைக்க வேண்டுகிறேன்.
List of All  Computerised Banks
(1) ABHYUDAYA CO-OP BANK LTD
  (2)ABU DHABI COMMERCIAL BANK
  (3) AKOLA DISTRICT CENTRAL CO-OPERATIVE BANK
  (4) AKOLA JANATA COMMERCIAL COOPERATIVE BANK
  (5) ALLAHABAD BANK
  (6) ALMORA URBAN CO-OPERATIVE BANK LTD.
  (7) ANDHRA BANK
(8) ANDHRA PRAGATHI GRAMEENA BANK
  (9) APNA SAHAKARI BANK LTD
  (10) AUSTRALIA AND NEW ZEALAND BANKING GROUP LIMITED.
  (11) AXIS BANK
  (12) BANK INTERNASIONAL INDONESIA
  (13) BANK OF AMERICA
  (14) BANK OF BAHRAIN AND KUWAIT
  (15) BANK OF BARODA
  (16) BANK OF CEYLON
  (17) BANK OF INDIA
  (18) BANK OF MAHARASHTRA
  (19) BANK OF TOKYO-MITSUBISHI UFJ LTD.
  (20) BARCLAYS BANK PLC
  (21) BASSEIN CATHOLIC CO-OP BANK LTD
  (22) BHARATIYA MAHILA BANK LIMITED
  (23) BNP PARIBAS
  (24) CALYON BANK
  (25) CANARA BANK
  (26) CAPITAL LOCAL AREA BANK LTD.
  (27) CATHOLIC SYRIAN BANK LTD.
  (28) CENTRAL BANK OF INDIA
  (29) CHINATRUST COMMERCIAL BANK
  (30) CITIBANK NA
  (31) CITIZENCREDIT CO-OPERATIVE BANK LTD
  (32) CITY UNION BANK LTD
  (33) COMMONWEALTH BANK OF AUSTRALIA
  (34) CORPORATION BANK
  (35) CREDIT SUISSE AG
  (36) DBS BANK LTD
  (37) DENA BANK
  (38) DEUTSCHE BANK
  (39) DEUTSCHE SECURITIES INDIA PRIVATE LIMITED
  (40) DEVELOPMENT CREDIT BANK LIMITED
  (41) DHANLAXMI BANK LTD
  (42) DICGC
  (43) DOMBIVLI NAGARI SAHAKARI BANK LIMITED
  (44) FIRSTRAND BANK LIMITED
(45) GOPINATH PATIL PARSIK JANATA SAHAKARI BANK LTD
  (46) GURGAON GRAMIN BANK
  (47) HDFC BANK LTD
  (48) HSBC
  (49) ICICI BANK LTD
  (50) IDBI BANK LTD
  (51) IDRBT
  (52) INDIAN BANK
  (53) INDIAN OVERSEAS BANK
  (54) INDUSIND BANK LTD
  (55) INDUSTRIAL AND COMMERCIAL BANK OF CHINA LIMITED
  (56) ING VYSYA BANK LTD
  (57) JALGAON JANATA SAHKARI BANK LTD
  (58) JANAKALYAN SAHAKARI BANK LTD
  (59) JANASEVA SAHAKARI BANK (BORIVLI) LTD
  (60) JANASEVA SAHAKARI BANK LTD. PUNE
  (61) JANATA SAHAKARI BANK LTD (PUNE)
  (62) JPMORGAN CHASE BANK N.A
  (63) KALLAPPANNA AWADE ICH JANATA S BANK
  (64) KAPOL CO OP BANK
  (65) KARNATAKA BANK LTD
  (66) KARNATAKA VIKAS GRAMEENA BANK
  (67) KARUR VYSYA BANK
  (68) KOTAK MAHINDRA BANK
      KONGUTHENDRAL.BLOGSPOT.COM
  (69) KURMANCHAL NAGAR SAHKARI BANK LTD
  (70) MAHANAGAR CO-OP BANK LTD
  (71) MAHARASHTRA STATE CO OPERATIVE BANK
  (72) MASHREQBANK PSC
  (73) MIZUHO CORPORATE BANK LTD
  (74) MUMBAI DISTRICT CENTRAL CO-OP. BANK LTD.
  (75) NAGPUR NAGRIK SAHAKARI BANK LTD
  (76) NATIONAL AUSTRALIA BANK
  (77) NEW INDIA CO-OPERATIVE BANK LTD.
  (78) NKGSB CO-OP BANK LTD
  (79) NORTH MALABAR GRAMIN BANK
  (80) NUTAN NAGARIK SAHAKARI BANK LTD
  (81) OMAN INTERNATIONAL BANK SAOG
  (82) ORIENTAL BANK OF COMMERCE
  (83) PARSIK JANATA SAHAKARI BANK LTD
  (84) PRATHAMA BANK
    PARAMESDRIVER.BLOGSPOT.COM
  (85) PRIME CO OPERATIVE BANK LTD
  (86) PUNJAB AND MAHARASHTRA CO-OP BANK LTD.
  (87) PUNJAB AND SIND BANK
  (88) PUNJAB NATIONAL BANK
  (89) RABOBANK INTERNATIONAL (CCRB)
  (90) RAJGURUNAGAR SAHAKARI BANK LTD.
  (91) RAJKOT NAGARIK SAHAKARI BANK LTD
  (92) RESERVE BANK OF INDIA
  (93) SBERBANK
  (94) SHINHAN BANK
  (95) SHRI CHHATRAPATI RAJARSHI SHAHU URBAN CO-OP BANK LTD
  (96) SOCIETE GENERALE
  (97) SOLAPUR JANATA SAHKARI BANK LTD.SOLAPUR
  (98) SOUTH INDIAN BANK
  (99) STANDARD CHARTERED BANK
  (100) STATE BANK OF BIKANER AND JAIPUR
  (101) STATE BANK OF HYDERABAD
  (102) STATE BANK OF INDIA
  (103) STATE BANK OF MAURITIUS LTD
  (104) STATE BANK OF MYSORE
  (105) STATE BANK OF PATIALA
  (106) STATE BANK OF TRAVANCORE
  (107) SUMITOMO MITSUI BANKING CORPORATION
  (108) SYNDICATE BANK
  (109) TAMILNAD MERCANTILE BANK LTD
  (110) THANE BHARAT SAHAKARI BANK LTD
  (111) THE A.P. MAHESH CO-OP URBAN BANK LTD.
  (112) THE AHMEDABAD MERCANTILE CO-OPERATIVE BANK LTD.
  (113) THE ANDHRA PRADESH STATE COOP BANK LTD
  (114) THE BANK OF NOVA SCOTIA
  (115) THE BANK OF RAJASTHAN LTD
  (116) THE BHARAT CO-OPERATIVE BANK (MUMBAI) LTD
  (117) THE COSMOS CO-OPERATIVE BANK LTD.
  (118) THE DELHI STATE COOPERATIVE BANK LTD.
  (119) THE FEDERAL BANK LTD
  (120) THE GADCHIROLI DISTRICT CENTRAL COOPERATIVE BANK LTD
  (121) THE GREATER BOMBAY CO-OP. BANK LTD
  (122) THE GUJARAT STATE CO-OPERATIVE BANK LTD
  (123) THE JALGAON PEOPLES CO-OP BANK
  (124)THE JAMMU AND KASHMIR BANK LTD
  (125) THE KALUPUR COMMERCIAL CO. OP. BANK LTD.
  (126) THE KALYAN JANATA SAHAKARI BANK LTD.
  (127) THE KANGRA CENTRAL CO-OPERATIVE BANK LTD
  (128) THE KANGRA COOPERATIVE BANK LTD
  (129) THE KARAD URBAN CO-OP BANK LTD
  (130) THE KARNATAKA STATE APEX COOP. BANK LTD.
  (131) THE LAKSHMI VILAS BANK LTD
  (132) THE MEHSANA URBAN COOPERATIVE BANK LTD
  (133) THE MUNICIPAL CO OPERATIVE BANK LTD MUMBAI
  (134) THE NAINITAL BANK LIMITED
  (135) THE NASIK MERCHANTS CO-OP BANK LTD., NASHIK
  (136) THE RAJASTHAN STATE COOPERATIVE BANK LTD.
  (137) THE RATNAKAR BANK LTD
  (138) THE ROYAL BANK OF SCOTLAND N.V
  (139) THE SAHEBRAO DESHMUKH CO-OP. BANK LTD.
  (140) THE SARASWAT CO-OPERATIVE BANK LTD
  (141) THE SEVA VIKAS CO-OPERATIVE BANK LTD (SVB)
  (142) THE SHAMRAO VITHAL CO-OPERATIVE BANK LTD
  (143) THE SURAT DISTRICT CO OPERATIVE BANK LTD.
  (144) THE SURAT PEOPLES CO-OP BANK LTD
  (145) THE SUTEX CO.OP. BANK LTD.
  (146) THE TAMILNADU STATE APEX COOPERATIVE BANK LIMITED
(147) THE THANE DISTRICT CENTRAL CO-OP BANK LTD
  (148) THE THANE JANATA SAHAKARI BANK LTD
  (149) THE VARACHHA CO-OP. BANK LTD.
  (150) THE VISHWESHWAR SAHAKARI BANK LTD.,PUNE
  (151) THE WEST BENGAL STATE COOPERATIVE BANK LTD
  (152) TJSB SAHAKARI BANK LTD.
(153) TUMKUR GRAIN MERCHANTS COOPERATIVE BANK LTD.,
  (154) UBS AG
  (155) UCO BANK
  (156) UNION BANK OF INDIA
  (157) UNITED BANK OF INDIA
  (158) UNITED OVERSEAS BANK
  (159) VASAI VIKAS SAHAKARI BANK LTD.
  (160) VIJAYA BANK
  (161) WEST BENGAL STATE COOPERATIVE BANK
  (162) WESTPAC BANKING CORPORATION
  (163) WOORI BANK
  (164) YES BANK LTD
  (165) ZILA SAHKARI BANK LTD GHAZIABAD

 .நமது நாட்டில் உயர் மதிப்புக்கொண்ட பணம் மதிப்பிழப்பு செய்த பிறகு ஆங்காங்கே பலரிடமும் பல்வேறு ஆலோசனைகள் வந்துகொண்டே இருக்கின்றன.அவற்றில் ஒன்று இதோ.....
Digital currency எங்கு எங்கெல்லாம் கட்டாயம் ஆக்கப்பட வேண்டும்...
ஆனா நீங்க இங்கயெல்லாம் கொண்டு வர மாட்டிங்க.???என தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.அதாவது........
இன்றைக்கு , SBI அதிகாரிகள் சிலர் மயிலாப்பூரில் தெருவோர கடைக்காரர்களிடம் சென்று பிரசாரம் செய்தார்களாம் அந்த seen போடுற வேலையை எல்லாம் விட்டு விட்டு எங்கே அதை கட்டாயம் ஆக்க வேண்டும் ?
digital currency முதலில் அமல்படுத்த வேண்டிய இடம் , sub-register office ,RTO office,all govt offices including thasildhar office and collector office, மொத்தமாக-அனைத்து அரசு அலுவலகங்கள் இங்கே ரொக்க பரிவர்த்தனையே கிடையாது என்று ஆக்கட்டும் , அங்கே ரொக்க பணம் ஒரு ரூபாய் இருந்தாலும் , அவர்கள் கொண்டு வருபவர்கள் அல்லது பணியாற்றும் நபர்கள் யாராக இருந்தாலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படட்டும் .
---
digital currency காட்டாயம் ஆக்க பட வேண்டிய இடம் , அனைத்து மத, சாதி , கலாச்சார அறக்கட்டளையின் வங்கி கணக்குகள், கோவில்களின் digital hundi's
---
அனைத்து தனியார் கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் அரசே இடங்களை நிரப்பும் என்று admission நிர்வாகத்தை மட்டும்அ ரசு கையில் எடுத்து கொண்டு அதை digital currency வழியே பணி செய்யும் என்றால் பாராட்டலாம்
---
digital currency கட்டாயம் ஆக்கப் பட வேண்டிய இடம் அனைத்து தனியார் மருத்துவமனைகளில்
---
digital currency கட்டாயம் ஆக்கப்படவேண்டிய முக்கிய இடம் அனைத்து விமான நிலையங்கள் மற்றும் self Air ticket booking system not through any agents
---
digital currency கட்டாயமாக்கப் பட வேண்டிய இடம் அரசியல் கட்சிகளின் வங்கி கணக்குகள், அனைத்து அரசியல்வாதிகள், MLA,MP, அமைச்சர்கள் , அனைத்து உள்ளாட்சி பிரதிநிதிகள் என அனைவரும் நிர்வகிக்கும் அவர்களின் சொந்த தொழில்களில் அவரது குடும்ப உறுப்பினர்களின் வங்கி கணக்குகளை கண்காணித்து அதிலும் digital currency மூலம் மட்டுமே பரிவர்த்தனை வேண்டும் என்பதை கட்டாயமாக்க வேண்டும் .
---
digital currency கட்டாயமக்கப் பட்டு , 50,000 க்கு மேல் யார் காசை கையில் வைத்திருந்தாலும் சிறை என்று சொல்லட்டும் வரவேற்போம் .
---
digital currency மிக கட்டாயம் என்று இருக்க வேண்டிய இடங்கள் அனைத்து சம்பள நடவடிக்கைகள் .
---
digital currency கட்டாயம் இருக்க வேண்டிய இடங்கள்
அனைத்து அரசு ஒப்பந்ததாரர்களின் வங்கி கணக்குகள் மற்றும் அவரை சார்ந்த அனைவரின் வங்கி கணக்குகள்.
---
கலைத்துறையில் பணியாற்றும் அனைவருக்கும், மற்றும் அந்த பணிகளில் ஈடுபடும் அனைவருக்கும் , ஒரு திட்டம் (ஒரு project ) இல் ஒரு வங்கி கணக்கு தொடங்கப்பட்டு அதில் இருந்து மட்டுமே digital currency மூலம் பரிவர்த்தனைகள் நடக்க வேண்டும் . இதை மீறினால் சம்பந்தப்பட்டவர்கள் அனைவருக்கும் சிறை என்பதை கட்டாயம் ஆக்க வேண்டும்.
---
தேர்தல் நடக்கும் தொகுதியில் , முழுவதும் தேர்தல் முடியும் வரை , ஐம்பது ரூபாய்க்கு மேல் கையில் யாரிடமும் , அது அரசியல்வாதியாக இருந்தாலும் சரி வாக்காளராக இருந்தாலும் சரி , காசு இருந்தாலும் சிறை தண்டனை , எந்த பரிவர்த்தனையும் digital currency மூலம் மட்டுமே என்பதை உறுதி செய்யட்டும் .
---
நீதி துறையில் அனைத்து நடவடிக்கைகளும் , வக்கீல்களின் அனைத்து நடவடிக்கைகளிலும் digital currency முறை கட்டாயம் ஆக்கப்பட வேண்டும் .என்று திரு.
பெருமாள்சாமி சுப்புராஜ் அவர்கள் பதிவிட்டுள்ளார்.நல்ல விசயம்தானே! நாமும் வரவேற்போம்.....


                       கூடுதலாக மின்னணு பயன்பாடு பற்றி நீங்களும் தெரிந்துகொள்ள இணைய வழி தகவலை தங்களுக்காக பதிவிடுகிறேன்.படித்து பயனடையுங்க..
                  ( CALCULATER ):கால்குலேட்டர்களை கணக்குப்போடுவதற்கு மட்டும் நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் வேளையில் தொழில்நுட்ப முன்னேற்றம் அடைந்த நாடுகளில் பல்வேறு பயன்பாட்டுக்கும் கால்குலேட்டரைப் பயன்படுத்துகிறார்கள். சமையலில் எந்தப் பொருளை எவ்வளவு சேர்க்க வேண்டும் என்பதை அளந்து பார்க்க கிச்சன் கால்குலேட்டரை பயன்படுத்துகிறார்கள். ஒருவர் தனது உடல் எடைக்கு ஏற்ப எவ்வளவு சாக்லெட் சாப்பிடலாம் என்று பார்க்க சாக்லேட் கால்குலேட்டர் இருக்கிறது. நாம் சுவாசிக்கும் காற்றில் கார்பன் மிகுந்திருக்கிறதா? என்பதை கவனிக்க கார்பன் கால்குலேட்டர் இருக்கிறது. மருந்து சாப்பிடும் நோயாளிகளுக்கு சரியான அளவில் மருந்து சாப்பிட உதவும் `ஆர்கிமெடிஸ்` கால்குலேட்டர்கள் இருக்கின்றன.
                   ( CREDIT CARD) :கிரெடிட் கார்டை விட வேகமாகவும், பாதுகாப்பாகவும் பண பரிமாற்றம் செய்ய டிஜிட்டல் வாலட் உதவுகிறது. ஸ்வீடன் நாட்டை சேர்ந்த பிரெடரிக் பாம்பிளாட், `வாலட்` கருவியை வடிவமைத்தார். இது கடிகார வடிவிலான சிப். இதை கணினியுடன் இணைத்து யாருக்கு பணம் பரிமாற்றம் செய்ய வேண்டும் என்ற விவரத்தை தயாரித்துக் கொள்ள வேண்டும். பிறகு சம்பந்தப்பட்ட இருவரது வாலட் கருவிகளை ஒன்றுடன் ஒன்று இணைத்து, கருவியின் மேல்புறம் உள்ள திரையில் கொடுப்பவரும், பெறுபவரும் கைரேகையைப் பதிவு செய்தால் இருவர் கணக்கிலும் பணப்பரிமாற்றம் பாதுகாப்பாக நடந்து விடும். ஏமாற்றத்துக்கு வழியே இல்லை.
                       ( CREDIT CARD ALARM:) கிரெடிட் கார்டின் பயன்பாடு அதிகமாக இருந்தாலும் அது நிறைய சிக்கல்களையும் வரவழைக்கலாம். கார்டை தொலைத்துவிட்டால் எடுப்பவர் தங்கள் வசதிக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும். இதைத் தடுக்க `கிரெடிட்கார்டு அலாரம்` இருக்கிறது. கார்டை, பாதுகாப்பாக வைக்க உதவும் இந்த சிறு பெட்டி, கார்டை எடுத்த 20 விநாடிகளுக்குள் திரும்ப வைக்காவிட்டால் ஒலியெழுப்பும். இதனால் கார்டு பாக்கெட்டில் இல்லை என்பதை உணர்ந்து உஷாராகி விடலாம். அதேபோல கிரெடிட் கார்டு பயன்பாட்டின்போது ரகசியம் கசியாமல் பணப்பரிமாற்றம் நடக்க `ஸ்மார்ட் ஸ்வைப் மிஷின்` உதவுகிறது.
                     (ATM :) ஏ.டி.எம். உண்டியல் ஒன்று இருக்கிறது. காயின் பாக்ஸ் டெலிபோன் போல இருக்கும் இவை வீட்டிலேயே பயன்படுத்துவதற்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டவை. இதில் பணம் மற்றும் சில்லறைகளை போடலாம். அதிகபட்சம் எவ்வளவு சேமிக்க வேண்டும் என்பதையும் நாமே முடிவு செய்து பதிவு செய்து விடலாம். இதற்காக ஒரு ஏ.டி.எம். கார்டு தந்திருப்பார்கள். சேமிக்கும்போது திடீரென்று பணம் தேவைப்பட்டால் இந்த கார்டை உபயோகப்படுத்தி பணம் எடுக்கலாம். எவ்வளவு எடுத்திருக்கிறோம், எவ்வளவு இருப்பு இருக்கிறது என்பதும் தெரியும். குழந்தைகளுக்கு சேமிக்கும் ஆர்வத்தை அதிகப்படுத்தவும், வங்கிப் பயிற்சியை எளிதாக கற்கவும் ஊக்குவிக்கிறது இந்த நவீன உண்டியல்! 
                 ( SECURITY: ) கிரெடிட் கார்டில் செக்யூரிட்டி நம்பர் பதிந்து வைத்திருப்பார்கள். பின் நம்பரை பயன்படுத்தி நாம் உபயோகப்படுத்துவோம். இது தவறான நபர்களின் கையில் கிடைக்கும்போது சிக்கலை உருவாக்கி விடும். இந்த பிரச்சினையை தவிர்க்க `டிஜிட்டல் டிஸ்பிளே கிரெடிட் கார்டு’ இருக்கிறது. இதில் செக்யூரிட்டி நம்பரையும், பின் நம்பரையும் நாமே தேர்வு செய்து கொள்ளலாம். அதேபோல ஒன்றுக்கு மேற்பட்ட கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துபவர்கள் அத்தனை கார்டுகளையும் ஒன்றிணைத்து பயன்படுத்தலாம். அனைத்து கார்டுகளின் தகவல்களையும் சேமித்து விட்டு, ஓரமாக இருக்கும் `நாப்’ மூலம் தேவையான கார்டை மட்டும் தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும்.
                 (DIGITAL COUNTING JAR:) ரூபாய் நோட்டுகள் அதிகமானால் கூட சிரமப்பட்டு எண்ணி விடலாம். ஆனால் சில்லறைகள் சேர்ந்து விட்டால் எண்ணும் முன்பாக தலையைப் பிய்த்துக் கொள்ள வேண்டியிருக்கும். `டிஜிட்டல் கவுண்டிங் ஜார்` இந்த பிரச்சினையை தீர்க்கிறது. சாதாரண உண்டியலை விட கூடுதலாக இதன் மூடியில் ஒரு டிஜிட்டல் மீட்டர் இருக்கிறது. இது உண்டியல் துளை வழியே காசுபோடும்போது அது தானாகவே கணக்கிட்டு திரையில் இருப்புத் தொகையைக் காட்டி விடும். தேவைப்பட்டால் பணத்தை எடுத்துவிட்டு `ரீசெட்` செய்து சேமிக்கலாம். இது இயங்க இரண்டு சிறிய பேட்டரிகள் தேவை. இந்த ஜார், இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாணயங்களை மட்டுமே கணக்கிடும்.
                (ROBO CALCULATER:) சிறிய அளவிலான ரோபோ கால்குலேட்டர்கள், அநேக வேலைகளை தானே கணக்குப் போட்டு செய்து முடிக்கிறது. `ரிசிப்ட் ஸ்கேனர் கால்குலேட்டர்` என்ற நவீன கால்குலேட்டர் கருவி, கையால் எழுதும் கணக்குகளை ஸ்கேன் செய்து கணக்குப் பார்க்க உதவுகிறது. வங்கிக் கணக்கு, மளிகைச்சரக்கு பில் என அனைத்தையும் ஸ்கேன் செய்து கணக்குப் போட பயன்படுத்தலாம். ஏ.டி.எம். மிஷின்போல தங்கக் காசுகளை வழங்கும் கோல்டு ஏ.டி.எம்.கள் இருக்கின்றன. தாமஸ் இஸ்லர் என்ற ஜெர்மானியர் அபுதாபி தங்க மார்க்கெட்டில், கோல்டு ஏ.டி.எம்.-ஐ வடிவமைத்து பயன்பாட்டில் வைத்தார். இது அன்றைய கரன்சி மதிப்பிற்கு ஏற்ப 1, 5, 10 கிராம் தங்க காசுகளை வழங்கும். 
(COUNTING RING: )பணம் எண்ணும் இயந்திரத்தை வங்கிகளிலும், அலுவலகங்களிலும் பார்த்திருப்பீர்கள். அது அலுவலக உபயோகத்துக்கு வசதியானது தான். ஆனால் கைகளில் எப்போதாவது பணம் வந்துபோகும் தனிநபருக்கு அந்த எந்திரம் உபயோகப்படாது. தனிநபரும் வசதியாக பணம் எண்ணுவதற்காக உருவாக்கப்பட்டது தான் `கவுன்டிங் ரிங்`. மோதிரம் போல இருக்கும் இதை கட்டைவிரலில் மாட்டிக்கொண்டு, பணக்கட்டின் மீது வைத்து மெல்ல மேலிருந்து, கீழாக நகர்த்தினால் எத்தனை நோட்டுகள் இருக்கின்றன என்று எண்ணிவிடும். அகச்சிவப்பு கதிர்கள் மூலம் இது செயல்படுகிறது. *** 


                (ATM STORY:) ஏ.டி.எம். மெஷின் கண்டுபிடிக்கப்பட்ட கதை கொஞ்சம் சுவாரசியமானது. ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜான் ஷெப்பர்டு பாரோன் தன் மனைவிக்கு பரிசு வழங்க நினைத்தார். அதற்காக பணம் எடுக்க வங்கியில் வரிசையில் நின்றார். அவரது முறை வந்தபோது நேரம் முடிந்துவிட்டதாக கவுண்டரை மூடிவிட்டனர். வெறுங்கையோடு செல்ல விரும்பாத அவர் வென்டிங் மெஷின் மூலம் கொஞ்சம் சாக்லெட் வாங்கிக்கொண்டு மனைவியை சந்தித்தார். பரிசளிக்க முடியாத அதிருப்தியும், வென்டிங்மெஷினும் அவரது நினைவைக் குழப்ப, புதிய எண்ணம் உதயமானது. பிறகு ஜான், ஏ.டி.எம். மெஷினை உருவாக்கினார்.

                               இந்த ஜீடிபி, தங்க இருப்பு, எக்ஸ்சேஞ்ச் ரேட், சென்செக்ஸ்... இதெல்லாம் இந்தியாவில் முக்கால்வாசி மக்களுக்கு இன்னும் என்ன ஏதுன்னே தெரியாது.
                       மக்கள் தொகையில் பாதிப் பேருக்கு இன்னும் வங்கிக் கணக்கு இல்லை, என்ற நிலையில் இருக்கும் இந்தியாவில் இவ்வளவு அதிவேகமாக ரொக்கப் பரிவர்த்தனைக்கு எதிரான தீவிர பிரச்சாரங்களும் முனைப்புகளும் எதற்காக? யாருக்காக?

                    விவசாயக்கூலி ஒருவர் , 100 அல்லது, 200 ரூபாய்   பெறுகிற ஒருவர், அதை வங்கிவழியாகவே பெற்றுக்கொள்கிறார் என்று வைத்துக்கொள்வோம். உள்ளுர் பெட்டிக்கடையில் அல்லது மளிகைக் கடையில் அரிசியும், மளிகை சாமான்களும் 60 ருபாய்க்கு அன்றைய தேவைக்கு வாங்குவார். எதிர்த்த வீட்டில் உள்ள முருங்கை மரத்தில் இருந்து 15 ருபாய்க்கு முருங்கைக்காய் வாங்குவார். தெருவில் மீன்காரரிடம் 30 ருபாய்க்கு மீன் வாங்குவார். பூக்காரரிடம் 10 ருவாய்க்கோ, 20 ருபாய்க்கோ பூ வாங்குவார். தள்ளுவண்டியில் வளையல், பொட்டு ஃபேன்சி பொருள்கள் கொண்டு வருபவரிடம் 30 ருபாய்க்கு ஸ்டிக்கர் பொட்டு, கம்மல் வாங்குவார்... இத்தனையையும் வாங்குபவர்களும் அதற்கு பணம் பெற்றுக் கொள்பவர்களும் ரொக்கமில்லாத பரிமாற்றம் செய்வதைப் பற்றி யோசித்து பாருங்கள்.
                    வலுக்கட்டாயமாக இந்த டிஜிட்டல் புரட்சியை, செய்வதால் யாருக்கு லாபமும், லாப விகிதமும் அதிகமாக போய்ச்சேரும் என்பதையும் கணக்கில் கொள்ளவேண்டும்.
                 கறுப்பு பணமும், கள்ள பணமும் வச்சிருக்கிறவங்களை பிடிக்கிறோம்னு பெயர் சொல்லிட்டு, இது இந்தியாவின் முதுகெலும்பு என்று காலம்காலமாக நாம் சொல்லிக்கொண்டிருக்கும் கிராமங்களுக்கும் கிராம மக்களுக்கும் எதிரான செயல் தான். கருப்பு பணத்தையும் கள்ள பணத்தையும் பிடிக்க ஆயிரம் வழிகளும், சட்ட திட்டங்களும் அமைப்பும் இருக்கும்போது, இந்த வழி எதற்கு என்பது முற்றிலும் புரியாத ஒன்று தான்.

19 நவம்பர் 2016

சத்தி புத்தகத்திருவிழா-2016

 மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
                     2016நவம்பர் 19 ந் தேதி இன்று  சத்தியமங்கலம் புத்தகத்திருவிழாவிற்கான வாகன ஒலிபெருக்கி பிரச்சாரத்தில்  இசுலாமிய சகோதரருடன் நான்...


12 நவம்பர் 2016

ருசிகர விவாத நிகழ்ச்சி-2016

மரியாதைக்குரியவர்களே,
                 வணக்கம்.  நம்ம சத்தியமங்கலத்தில்  2016 வருகிற நவம்பர்  21ந் தேதி முதல் 27 ந் தேதி வரை புத்தகக்கண்காட்சி நடைபெறுகிறது.அது சமயம் நிறைவு நாளான 27 ந் தேதி அன்று சாலைப்பயணத்தில் தொல்லையா?இல்லையா? என்ற தலைப்பில் பொதுமக்களுக்கும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கும் சுவையான விவாத நிகழ்ச்சி நடைபெறுகிறது..அனைவரும் வருக.விவாதத்தில் பங்கு பெறுக.
 தொடர்புகொள்ள வேண்டிய எண்கள்... 
பரமேஸ்வரன் தாளவாடி கிளை   9585600733 
          குணசேகரன் சத்தி கிளை 9976617530

08 நவம்பர் 2016

சத்தி புத்தகத் திருவிழா-2016

                             தொட்டனைத்தூறும் மணற்கேணி - மாந்தர்க்குக்
                                                           கற்றனைத்தூறும் அறிவு  - குறள்.

   

 ''நான் சார்ந்துள்ள அரசியலையோ,மதத்தையோ,இனத்தையோ  பயன்படுத்தமாட்டேன்''.விதைகள் வாசகர் வட்டத்தில் இணைந்து எந்த பலனும் எதிர்பாராமல் இயன்றளவு பணிசெய்கிறேன்.இதை மனதார சம்மதிக்கிறேன்''-உறுதிமொழி
                  
                   சத்தியமங்கலம் விதைகள் வாசகர் வட்டம்
                             வழங்கும் மாபெரும் புத்தகத்திருவிழா.
                           மறு பரிசீலனைக்கூட்டம்.
                                நாள்; 2016நவம்பர்8 ந் தேதி  மாலை5.00மணி.
                              இடம்; பி.வி.லாட்ஜ் கூட்ட அரங்கு.
 மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.இன்று மாலை 5.00மணிக்கு சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகிலுள்ள பி.வி.லாட்ஜ் கூட்ட அரங்கில் விதைகள் வாசகர் வட்டம் சார்பாக நடத்தும் புத்தகக்காட்சி திருவிழா பற்றிய மறு பரிசீலனைக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இன்றைய கூட்டத்தில் கூடுதலாக  சமூக ஆர்வலர்கள் இருபது நபர்கள் பங்கேற்றனர்.
இன்றைய கூட்டத்தின் சிறப்பு என்னவென்றால்,

சமூக வளர்ச்சிக்காக பயன்படும் சத்தி புத்தகத் திருவிழாவில்
  ''நான் சார்ந்துள்ள அரசியலையோ,மதத்தையோ,இனத்தையோ  பயன்படுத்தமாட்டேன்''.விதைகள் வாசகர் வட்டத்தில் இணைந்து எந்த பலனும் எதிர்பாராமல் இயன்றளவு பணிசெய்கிறேன்.இதை மனதார சம்மதிக்கிறேன்''
என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.இத்துடன் அனுசரித்தும் விட்டுக்கொடுத்தும் ஒற்றுமை காப்பதாக ஏற்றுக்கொண்டதும் வரவு,செலவு உட்பட செயல்பாட்டில் குறைகளை சுட்டிக்காட்டவும்,தவறை உணர்ந்து திருத்திக்கொள்ளவும் வேண்டும் என்ற ஒருமித்த கருத்து ஏற்பும்.சமூக வளர்ச்சிக்கு கிடைத்த வெற்றி. 
என அன்பன்,
பரமேஸ்வரன், 9585600733
செயலாளர், 
விதைகள் வாசகர் வட்டம்,
சத்தியமங்கலம்-
ஈரோடு மாவட்டம்.
  

06 நவம்பர் 2016

சத்தியமங்கலம் புத்தகத் திருவிழா-2016

                       சத்தியமங்கலம் விதைகள் வாசகர் வட்டம்.
 
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்
              வாங்க, சாதி,மத,இன,அரசியல் வேறுபாடின்றி அனைவரும் ஒன்றிணைந்து ஏற்ற தாழ்வின்றி சமமாகப் பணியாற்றுவோம்.


 
மரியாதைக்குரியவர்களே,
                       வணக்கம்.
                           வருகிற 2016நவம்பர்21ந் தேதி முதல் 27ந் தேதி வரை நம்ம சத்தியமங்கலம் ஜேம்ஸ் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடத்த உள்ள புத்தகக் கண்காட்சிக்கான ஆலோசனை மறுபரிசீலனைக் கூட்டம் நாளை (அதாவது 2016 நவம்பர்8 ந் தேதி)மாலை 5.00மணிக்கு சத்தி பேருந்து நிலையம் அருகிலுள்ள (P.V.LODGE) பி.வி. லாட்ஜ் கூட்ட அரங்கில் திட்டமிட்டபடி குறித்த நேரத்திற்கு துவங்க உள்ளதால் முந்தைய கூட்டத்தில் கலந்துகொள்ள இயலாதவர்களும் தகவல் கிடைக்கப்பெறாமல் இதனை தகவலாகக் கிடைக்க பெற்றவர்களும் இதனையே அழைப்பிதழாக ஏற்று சமூகத்தின் மீது அக்கறையுள்ள மற்றவர்களையும் அழைத்துவந்து தவறாமல் பங்கேற்று தங்களது ஆலோசனைகளைக் கூறி சமூக வளர்ச்சிக்கு உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு,
ஒருங்கிணைப்புக்குழு,
விதைகள் வாசகர் வட்டம்,
சத்தியமங்கலம்-ஈரோடு மாவட்டம்.
 

தொடர்புகொள்ள,
ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்கள்,
தலைவர் -  திரு.யாழினி ஆறுமுகம் - 9003790297
செயலாளர் - திரு.C.பரமேஸ்வரன்,-   9585600733
பொருளாளர்-  திரு.வினோத் ராஜேந்திரன்,-  9626614491
ஆலோசகர்; அரிமா K. லோகநாதன் -   9443021196

செயற்குழு உறுப்பினர்கள்........
(அ) திரு.ஸ்டாலின் சிவக்குமார்,
(ஆ) திரு.சத்தியமங்கலம் முத்து,
(மந்திரமா?தந்திரமா?)
(இ) திரு.கருப்புசாமி-
கல்வி உரிமைக்கான மேம்பாட்டு மையத்தின் இயக்குநர்,
(ஈ) திரு.மாரிச்சாமி அரசுப்பள்ளி ஆசிரியர்,
(உ) திரு.தமிழ்ச்செல்வன் அரசுப்பள்ளி,
(ஊ) திரு.செல்வராஜ்,

04 நவம்பர் 2016

ஆலோசனைக் கூட்டம்,நம்ம சத்தியில்!....

                                  வாசிப்பே சுவாசிப்பு!

தொட்டனைத்தூறும் மணற்கேணி - மாந்தர்க்குக்
கற்றனைத்தூறும் அறிவு  - குறள்.


                                             சத்தியமங்கலம் புத்தகக்கண்காட்சி-2016-
                                                       ஆலோசனைக்கூட்டம்.
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.
            2016 நவம்பர் 4-ந் தேதி இன்று மாலை 5.00மணிக்கு சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகிலுள்ள யாழினி புத்தக நிலைய வளாகத்தில் சத்தியில் புத்தகக்கண்காட்சி நடத்துவதற்கான ஆலோசனைக்கூட்டம் திருமிகு.யாழினி ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது.


                சத்தியமங்கலத்தின் முதுபெரும் எழுத்தாளர் திருமிகு கால சுப்பிரமணியம் அவர்கள் உட்பட விதைகள் வாசகர் வட்ட உறுப்பினர்கள்,மற்றும் திருமிகு.ரமேஷ்குமார் ஆசிரியர் ஆசனூர் அரசு பழங்குடியினர் உண்டுஉறைவிட மேல்நிலைப்பள்ளி,திருமிகு.மாரிச்சாமி அரசுப்பள்ளி ஆசிரியர்,,திருமிகு.முத்துராஜ் அரசுப்பள்ளி ஆசிரியர்,திருமிகு.தமிழ்ச்செல்வன் அரசுப்பள்ளி,திருமிகு.ஸ்டாலின் சிவக்குமார்,ரீடு இயக்குநர் திருமிகு.கருப்புசாமி,ஈரோடு பாரதி புத்தகாலயா திருமிகு.இளங்கோ, பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக்கல்லூரி மாணவரும் மக்கள் சிந்தனைப்பேரவை உறுப்பினருமான திருமிகு.ராபின்ராஜாஜி, சத்திகிளைஅரசுப் பேருந்து நடத்துநரும் சமூக ஆர்வலருமான திருமிகு.குணசேகரன் உட்பட ஏராளமானோர் பங்கேற்று தங்களது ஆலோசனைகளை பதிவு செய்தனர்.
 

               அப்போது கீழ்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

(1)சத்தியில் வருகிற நவம்பர் 21ந் தேதி மாலை தொடக்கவிழா நடத்துவது,
 

(2)மாவட்ட கல்வி அலுவலர்,சத்தி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர்,மற்றும் ஸ்டாலின் குணசேகரன் ஆகிய சான்றோர்களால் புத்தகக்கண்காட்சியினை துவக்கிவைப்பது.
 

(3)புத்தகக்கண்காட்சி காலை10.30மணி முதல் இரவு 8.30மணிவரை நடத்துவது,
 

(4)கலைநிகழ்ச்சிகள் நடத்துவதற்காக படிப்பாளர் மேடை துவக்குவது,
 

(5)ஈரோடு நிமிர்வு கலையங்கத்தின் பறை இசை நடத்துவது,(மறைந்து வரும் கிராமியக்கலைகளை வெளிக்கொணர்வது)
 

(6)சத்தியமங்கலம் வட்டார எழுத்தாளர்களை அடையாளப்படுத்தி பாராட்டு வழங்குவது,
 

(7)சத்தியமங்கலம் முதுபெரும் எழுத்தாளர் திருமிகு காலசுப்பிரமணியம் அவர்களின் புத்தகங்கள் தொகுத்து வெளியிடுவது,
 

(8)பள்ளி மாணவ,மாணவியருக்கு அறிவுசார் போட்டிகள் நடத்துவது,
 

(9)மந்திரமா?தந்திரமா?நிகழ்ச்சி திருமிகு முத்து அவர்களால் நடத்துவது,
 

(10)நாளிதழ்கள்,தொலைக்காட்சி விளம்பரங்கள்,துண்டறிக்கைகள்,சுவரொட்டிகள்,விளம்பரத் தட்டிகள்,வாகன ஒலிபெருக்கி பிரச்சாரம் வாயிலாக விளம்பரங்கள் செய்வது,
 

(11)சமூக விழிப்புணர்வு ஆவணப்படங்கள் திரையிடுவது,
 

(12)சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு கொடுப்பது,
பட்டிமன்றங்கள் நடத்துவது,


 (13) சிறந்த பேச்சாளர்களை அழைத்து மக்களுக்கு விழிப்புரை நடத்துவது,
 

(14)சத்தியமங்கலம் இணையதள நண்பர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்துவது,
 

(15) ஆலோசனைக்கூட்டத்தில் சூழ்நிலை காரணமாக கலந்துகொள்ள இயலாதவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இம்மாத 8ந்தேதி செவ்வாய்க்கிழமை மாலை 5.00மணிக்கு இன்று நடைபெற்ற இடம் பற்றாக்குறை காரணமாக சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தின் அருகிலுள்ள  P.V.லாட்ஜில் இறுதிக்கட்ட ஆலோசனைக் கூட்டம் நடத்துவது,
போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

சத்தியமங்கலம் புத்தகக்கண்காட்சி 2016 நிகழ்ச்சி 
ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்களாக
             திருமிகு.யாழினி ஆறுமுகம் -9003790297
             திருமிகு.C.பரமேஸ்வரன்,-9585600733
             திருமிகு.வினோத் ராஜேந்திரன்,-9626614491
 ஆலோசகர்; அரிமா K. லோகநாதன் - 9443021196
(அ) திருமிகு.ஸ்டாலின் சிவக்குமார்,
(ஆ) திருமிகு.சத்தியமங்கலம் முத்து,
                            (மந்திரமா?தந்திரமா?)
(இ) திருமிகு.கருப்புசாமி-
கல்வி உரிமைக்கான மேம்பாட்டு மையத்தின் இயக்குநர்,
(ஈ) திருமிகு.மாரிச்சாமி அரசுப்பள்ளி ஆசிரியர்,
(உ)  திருமிகு.தமிழ்ச்செல்வன் அரசுப்பள்ளி,
(ஊ)  திருமிகு.செல்வராஜ்,

             ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.இன்று கலந்துகொள்ள இயலாத சமூக ஆர்வலர்கள் இதனையே அழைப்பாக ஏற்று  வருகிற 8 ந் தேதி செவ்வாய்க்கிழமை அன்று பேருந்து நிலையம் அருகிலுள்ள  P.V.லாட்ஜ் கூட்ட அரங்கில் நடைபெறும் ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்க வாருங்கள் என  அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
விவரங்களுக்கு தொடர்புகொள்ள வேண்டுகிறோம்.
என அன்பன்,
C.பரமேஸ்வரன்,9585600733
விதைகள் வாசகர் வட்டம்-
சத்தியமங்கலம்-ஈரோடு மாவட்டம்
.
தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் விவரம்.
   (1) திருமிகு.யாழினி ஆறுமுகம் -9003790297
  (2)திருமிகு.C.பரமேஸ்வரன்,-9585600733
  (3)திருமிகு.வினோத் ராஜேந்திரன்,-9626614491

28 அக்டோபர் 2016

ஆலோசனைக்கூட்டம்-சத்தியமங்கலம்.

 மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.சத்தியமங்கலம் - விதைகள் வாசகர் வட்டம் 28-அக்டோபர் 2016ஆம் தேதி இன்று யாழினி ஆறுமுகம் அவர்களது தலைமையில்  நடைபெற்ற அறிமுகக் கூட்டத்தில்  வருகிற 2016 நவம்பரில்  சத்தியமங்கலத்தில் புத்தகக்கண்காட்சி மற்றும் விற்பனைத் திருவிழா நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அதுசமயம் விதைகள் வாசகர் வட்டத்திற்கு அதிகப்படியான உறுப்பினர்களை சேர்த்து சமூகப் பணியாற்றவும் தீர்மானிக்கப்பட்டது.
       இந்த ஆண்டு நாம் நடத்த இருக்கும் புத்தகக்கண்காட்சி முதலாம் ஆண்டு ஆதலால் எளிமையாகவும்,சிக்கனமாகவும்,சிறப்பாகவும் நடத்துவதற்காக தங்களது ஆலோசனைகளை எதிர்பார்த்து  வருகிற 2016நவம்பர் 4 ந் தேதி வெள்ளிக்கிழமை அன்று மாலை 5.00 மணிக்கு சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகிலுள்ள யாழினி புத்தக நிலைய வளாகத்தில் புத்தக கண்காட்சி நடத்துவதற்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெற உள்ளது.அதுசமயம் அனைவரும் தவறாமல் பங்கேற்று நல்ல கருத்துக்களை வழங்கி சமூகநலனுக்கு உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.மேலும் தொடர்புக்கு 9585600733 மின்னஞ்சல் முகவரி paramesdriver@gmail.com  இந்தப்பதிவிலும் தங்களுடைய கருத்துக்களை பதிவிடுவீர் 
என எதிர்பார்க்கிறோம். 
என அன்பன், 
C.பரமேஸ்வரன்,
சத்தியமங்கலம்-
ஈரோடு மாவட்டம்.

விதைகள் வாசகர் வட்டம்- சத்தியமங்கலம்

 அறிவை வளர்க்க நல்ல புத்தகங்களை வாசிக்க விதைப்போம்.
மரியாதைக்குரியவர்களே,
                                         வணக்கம். ஈரோடு மாவட்டம் நம்ம சத்தியமங்கலத்தில் புத்தக வாசிப்பை அனைவரின் மனதிலும் விதைக்கும் நோக்கத்தில், 'விதைகள் வாசகர் வட்டம்'துவக்கியுள்ளோம்.ஆர்வமுள்ளவர்கள் இணைந்துகொண்டு நற்பணியாற்ற அன்புடன் அழைக்கிறோம். 
என அன்பன், 
C.பரமேஸ்வரன்,
சமூக ஆர்வலர் மற்றும் 
அரசுப் பேருந்து ஓட்டுநர், 
சத்தியமங்கலம் -
 ஈரோடு மாவட்டம்..
தொடர்புக்கு 9585600733
 மின்னஞ்சல் முகவரி paramesdriver@gmail.com

23 அக்டோபர் 2016

ஜாதகர்களே? ஜோதிட விவாதம் செய்யலாம் வாங்க!

 மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். 
          ஜோதிடமா? ஜாதகமா? கிரகங்களா? லக்னமா?ராசிகளா?நட்சத்திரங்களா? தோஷங்களா?சூனியமா?செய்வினையா?பரிகாரமா? எந்திரங்களா?மந்திரங்களா?தந்திரங்களா?


                    இவையெல்லாம் சமூகத்தின் மனதில் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது...
இதற்கெல்லாம் பரிகாரம் தேட இணையத்திலுள்ள ஜோதிடர்களை இணைத்து முகநூல் வாயிலாக விவாதம் நடத்தி ஒருமித்த கருத்தினை வெளிக்கொணர திட்டமிட்டுள்ளேன்.வாங்க விவாதிப்போம்...
என அன்புடன்,
C.பரமேஸ்வரன்,
சமூக ஆர்வலர் மற்றும் அரசுப் பேருந்து ஓட்டுநர்,
சத்தியமங்கலம்,
 ஈரோடு மாவட்டம்.
தொடர்புக்கு 
எனது அலைபேசி எண் +919585600733 மற்றும் 
எனது மின்னஞ்சல் முகவரி paramesdriver@gmail.com

05 அக்டோபர் 2016

இதுக்குப்போய் முட்டையா?

மரியாதைக்குரியவர்களே,
         வணக்கம். முகநூல் பதிவிலிருந்து...
ஒரு மாணவன் தனது தேர்வு ஒன்றில்..
முட்டை மதிப்பெண் கிடைத்ததால்
பெரும் அதிர்ச்சி ஆனான்..! காரணம்
அவன் அனைத்து கேள்விகளுக்கும்..
சரியாக பதிலளித்திருப்ப
தாகவே நம்பினான்..!

சரியான பதிலை எழுதியதாகவே.. அந்த மாணவன்
தொடர்ந்து பள்ளி நிர்வாகத்திடம்..
வாதாடினான்..!
சரி.. அப்படி என்ன தான்
கேள்விகளுக்கு பதில் அளித்தான்.. என பார்ப்போம்..!
(1)கேள்வி;- எந்த போரில் திப்பு சுல்தான்
உயிரிழந்தார்..?
பதில்;- அவரது கடைசி போரில்..!
(2)கேள்வி;- இந்திய சுதந்திரத்திற்கான..
பிரமாணம் எங்கே கையெழுத்திடப்பட்டது..?
பதில்;- காகிதத்தின் அடிப் பகுதியில்..!
(3)கேள்வி;- சுப நிகழ்ச்சிகளில்..
வாழை மரங்கள் எதற்காக
கட்டப்படுகிறது..?
பதில்;- அவைகள் கீழே விழாமல்
இருப்பதற்காக.. கட்டப்படுகிறது..!
(4)கேள்வி;- விவாகரத்திற்கான.. முக்கிய
காரணம் என்ன..?
பதில்;- திருமணம் தான்..!
(5)கேள்வி;- இரவு- பகல்..
எவ்வாறு ஏற்படுகிறது..?
பதில்;- கிழக்கே உதித்த சூரியன்..
மேற்கில் மறைவதாலும்.. மேற்கில்
மறைந்த சூரியன் மீண்டும் கிழக்கில்..
உதிப்பதாலும் இரவு- பகல்
ஏற்படுகிறது..!
(6)கேள்வி;- மகாத்மா காந்தி..
எப்போது பிறந்தார்..?
பதில்;- அவரது பிறந்த நாளன்று..!
(7)கேள்வி;- திருமணங்கள் சொர்க்கத்தில்
நிச்சயிக்கப்படுகிறதா..?
பதில்;- இல்லை.. திருமணங்கள்
செய்யும் அவரவர் வீட்டில்..!
(8)கேள்வி;- தாஜ்மகால் யாருக்காக.. யார்
கட்டினார்..?
பதில்;- சுற்றுலா பயணிகளுக்காக..
கொத்தனார்களால் கட்டப்பட்டது..!
(9)கேள்வி;- 8மாம்பழங்களை.. 6
பேருக்கு எப்படி சரியாக
பிரித்து கொடுப்பது..?
பதில்;- ஜூஸ் போட்டு.. 6 டம்ளர்களில்
சரியான அளவாக ஊற்றி கொடுக்கலாம்..!
இந்த மாணவன் பதிலில் சரியாக
தானே சொல்லிருக்கான்..???

29 செப்டம்பர் 2016

அரசு மேல்நிலைப் பள்ளி - ஒலகடம் (பவானி வட்டம்) .

நேற்றிரவு அரசு மேல்நிலைப்பள்ளியில்,
மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.
  கடந்த 2016 செப்டெம்பர் 29 ந் தேதி வியாழக்கிழமை அதாவது நேற்று மாலை 5.00மணியளவில் பவானி வட்டம்,ஒலகடம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சேவையாற்றும் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமின் ஆறாவது நாள் விழிப்புணர்வு  நிகழ்ச்சியில் சாலை பாதுகாப்பு பற்றி சிறப்பாக உரையாற்றினேன்.அது சமயம் மாணவர்களும் ,ஆசிரியப்பெருந்தகைகளும் நல்ல ஆதரவு கொடுத்து வரவேற்றனர்.மாலை5.00மணியளவில் சத்தியமங்கலம் காமதேனு கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர் திருமிகு.த.சரவணன் அவர்கள் சிறப்பு முகாமில் என்னை அறிமுகப்படுத்தி உரை நிகழ்த்தி துவக்கி வைத்தார்.சிறப்பு முகாமின் திட்ட அலுவலர் திருமிகு.ப.க.வெள்ளிங்கிரி முதுகலை பட்டதாரி ஆசிரியர் அவர்கள் அனைவரையும் வரவேற்று உரைநிகழ்த்தினார்.

           என்னை ஓட்டுநராகப் பாராமல் சிறப்பு விருந்தினராகப் போற்றி மதிப்பிடமுடியாத பொன்னாடை போர்த்தி வரவெற்று உபசரித்தனர்..
              முகாமில் சுவையான சுக்கு காப்பியும்,ஆரோக்கியமானஇரவு உணவும் என விருந்தோம்பல் அமர்க்களமாக இருந்தது.அன்றிரவு10.00மணி வரை மாணவர்களுடன் பயனுள்ள கலந்துரையாடல்களைச்செய்தும்,மாணவர்களோடு ஆடல் பாடல் என கொண்டாட்டம்தான்! இவ்வாறாக அன்றிரவு முழுவதும் நானும் மாணவர்களோடு மாணவனாக தங்கி  மனநிறைவு பெற்றேன். 
 

  என்னுரையில்;
          மாணவர்களாகிய நீங்கள்  கல்வியின் ஒவ்வொரு கட்டத்திலும் சமூக சேவையுடன் தொடர்புள்ளவர்களாக,தங்களது நேரத்தின் ஒரு பகுதியினை தன்னார்வ அடிப்படையில் செலவிட வேண்டும் என்ற அடிப்படையில்,''எனக்காக அல்ல உனக்காக'' என்ற கோட்பாட்டுடனும்,குறிக்கோளுடனும் சமூக சேவையின் மூலம் மாணவர்களாகிய உங்களிடம் சமூக சேவையின் மூலம் ஆளுமைப்பண்பினை வளர்க்கும் நோக்கத்துடன் திட்ட அலுவலரும்,இப்பள்ளி முதுகலை ஆசிரியருமான திருமிகு.ப.க.வெள்ளிங்கிரி M.A.,B.Ed அவர்களின் தலைமையில்,நாட்டின் நலனுக்காக பணி செய்யும் சிறப்பு முகாமினை நடத்திவரும் தங்கள் அனைவருக்கும்,இப்பள்ளிக்கும் நான் சார்ந்துள்ள ,'நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு'' அமைப்பின் சார்பாக முதற்கண் வணக்கத்தினை தெரிவித்துகொண்டு வாழ்த்துகிறேன்.
      இன்றைய காலகட்டத்தில் நம் ஒவ்வொருவரின் நலனும் தனி மனித நலனாக அமையாமல் முழு சமூகத்தின் பொது நலனைச்சார்ந்தே இருக்கிறது.ஆதலால் நாம் ஒவ்வொருவரும் சமூகத்தோடு சேர்ந்தே வாழவேண்டிய கட்டாயமாகி உள்ளது.இதனால் பல்வேறு பிரச்சினைகளையும்,தொல்லைகளையும் சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.எனவே இம்மாதிரியான சமுதாயப்பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போது சகித்துக்கொண்டு,பொறுமையுடன் சமூகத்தோடு ஒத்திசைந்து வாழும் பக்குவத்தை கற்றுக்கொள்ள வேண்டும்.அதற்கு முன்னதாக நாம் நம்மை காத்துக்கொள்ளத்தெரிந்து கொள்ள வேண்டும்.நமது உடலையும் காக்க வேண்டும்.மனதையும் காத்துக்கொள்ள வேண்டும்.அப்படியானால் நம் உடலையும்,மனதையும் பாதிக்கும் விசயங்களை தெரிந்துகொண்டால்தான் அவைகளை தவிர்க்கும் வழிகளை அறிந்துகொள்ள முடியும்.
 எனக்கு  கொடுத்துள்ள தலைப்பு,''சாலை பாதுகாப்பு'  அப்படியானால் சாலை பாதுகாப்பு என்றால் என்ன?எதற்காக
 சாலை பாதுகாப்பு? என்பதை முதலில் தெரிந்துகொள்வோம்.
 நமது அத்தியாவசியத்தேவைகளான உணவு,உடை,இருப்பிடம்,பொழுதுபோக்கு மற்றும் நமது சுகபோகத்திற்காகத்தேடிக்கொண்ட சில தொழில்நுட்ப வசதிகள்  என இவைகளைப்  பெற  நாம் தினந்தோறும் பயணிக்கிறோம்.சாலையில் போக்குவரத்து செய்கிறோம்.நாம் உயிர்வாழ்வதற்கானத்தேவைகளைப்பெற போக்குவரத்து செய்யும் சாலையில் நமது அறியாமையினாலும்,அஜாக்கிரதையினாலும்,பொறுமையின்மையினாலும்,போட்டி மனப்பான்மையினாலும்,சாலை விதிகளை மீறுவதாலும்,சுயநலப்போக்காலும்,தன் விருப்பம்போல பயணிப்பதால் விபத்து ஏற்பட்டு நாமும் பாதிக்கப்படுகிறோம்.சாலையில் பயணிக்கும் மற்றவர்களையும் பாதிப்புக்கு ஆளாக்குகிறோம்.இதனால் உடலும் கெட்டு மனமும் கெட்டு பெரிய இழப்புகளுக்கும்,தொல்லைகளுக்கும் ஆளாகிறோம்.
    .சாலை பாதுகாப்பு நமது பாதுகாப்பு என்பதால்தாங்க போக்குவரத்து செய்யும் சாலையில் பாதுகாப்பாக பயணிக்க வேண்டும்.என்பதை வலியுறுத்துகிறேன்.
 முதலில் விபத்து எப்படி ஏற்படுகிறது?விபத்து ஏற்பட்டால் என்னென்ன விளைவுகளும்,இழப்புகளும் ஏற்படுகிறது?விபத்தால் பாதிக்கப்பட்டவர்களின் சூழ்நிலை எவ்வளவு மோசமாகிறது? என்பதை சற்று கவனமாக சிந்திக்க வேண்டும்.என்னமாதிரியான பாதுகாப்புமுறைகளை கடைப்பிடித்தால் சாலையில் விபத்தை தவிர்க்க முடியும் என்பதை இங்கு தெரிந்துகொள்வோம்.முதலில் சாலையின் வகைகளை தெரிந்துகொள்வோம். சாலைகளை எக்ஸ்பிரஸ் சாலை ,தேசிய நெடுஞ்சாலை,மாநில நெடுஞ்சாலை,பெரிய மாவட்ட சாலை,மற்ற மாவட்ட சாலை,கிராமச்சாலை,வீதிகள் என பலவகைகளாகப்பிரிக்கலாம்.தேசிய நெடுஞ்சாலைகளில் கிலோமீட்டர் கற்களின் தலைப்பகுதியில் மஞ்சள் வர்ணம் பூசப்பட்டிருக்கும்.தேசிய நெடுஞ்சாலைகளின் கிலோமீட்டர் கற்களின் தலைப்பகுதிகளில் பச்சை வர்ணம் பூசப்பட்டிருக்கும்.பெரிய மாவட்ட சாலைகளின் கிலோமீட்டர் கற்களின் தலைப்பகுதிகளில் நீல வர்ணம் பூசப்பட்டிருக்கும்.மற்ற மாவட்டச்சாலைகளின் கிலோமீட்டர் கற்களின் தலைப்பகுதிகளில் ஊதா வர்ணம் பூசப்பட்டிருக்கும்.கிராமச்சாலைகளின் கிலோமீட்டர் கற்களின் தலைப்பகுதிகளில் வெள்ளை வர்ணம் பூசப்பட்டிருக்கும்.போக்குவரத்தின் வசதிக்கேற்ப ஒவ்வொரு சாலைகளும்அகலப்படுத்துதலும், பராமரிப்புகளும்,உறுதிப்படுத்துதலும் வேறுபட்டிருக்கும்.. அடுத்ததாக சாலையின் பாகங்களைப்பற்றித்தெரிந்துகொள்வோம். ஒவ்வொரு சாலைகளும்,பொதுவாக வாகனங்கள் ஓடுவதற்கான பாதை இருக்கும்.அதையடுத்து பக்கவாட்டில் புயங்கள் என்றுசொல்லக்ககூடிய பக்கவாட்டப்பாதை இருக்கும்.காப்புக்கற்கள் இருக்கும்,பிரதிபலிப்பான்கள் இருக்கும்,பாலங்கள் இருக்கும்,வேகத்தடை இருக்கும்.காப்புச்சுவர்கள் இருக்கும்,சாலை பிரிப்பான்கள் இருக்கும்,
   சாலையில் பாதசாரிகளாகப்பயணிக்கும்போது  சாலையிலும் நாம் நடந்துசெல்லும் பாதையிலும் நிரந்தரமாக கவனம் செலுத்த வேண்டும்.பார்வை மறைவுப்பகுதிகளை அடையாளம் காண வேண்டும்.சாலையை கடக்கும்போது வாகனம் போக்குவரத்து இல்லாத போது வேகமாகவும் கவனமாகவும் கடந்துசெல்ல வேண்டும்.சாலை சந்திப்புகளிலும்,வளைவான பகுதிகளிலும்,பார்வை மறைத்திருக்கும் பகுதிகளிலும் சாலையை கடக்காமல் சாலையின் இரு புறமும் பார்வைக்கு கிடைக்குமாறு உள்ள இடத்தில் கடக்க வேண்டும்.படியில் பயணம் செய்யக்கூடாது.ஓட்டுநருக்கு இடையூறு செய்யக்கூடாது.கைகளையும்,தலையையும் வெளியே நீட்டக் கூடாது. சாலையில் விளையாடிக்கொண்டும்,கைகோர்த்துக்கொண்டும் சாலையை அடைத்துக்கொண்டு செல்லக்கூடாது.நாமும் சைகை காட்டி நடக்க பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.ஓட்டுநர்களின்  சைகைகளை புரிந்துகொண்டு நடக்க வேண்டும்.

  அடுத்ததாக வாகனங்களின் பொதுவான பாகங்கள் பற்றித் தெரிந்துகொள்வோம்.முக்கியமாக வாகனங்கள் அனைத்தும் இயற்கைவிதிகளான இயக்க சக்திகளுக்கு உட்பட்டே இயங்குகின்றன. அதாவது உந்து சக்தி,புவி ஈர்ப்பு சக்தி,மார்க்க சக்தி,மைய நோக்கு விசை,திருப்பங்களில் பக்கவாட்டு விசை ஆகியவைகளை சமநிலைப்படுத்தி வாகனங்களை ஓட்ட வேண்டும்.மோட்டார் வாகனச்சட்டப்படி எந்த வாகனத்தை ஓட்டத்தெரிந்திருந்தாலும் அந்த வாகனத்தை ஓட்டுவதற்கான அத்தாட்சி அதாவது லைசென்ஸ் என்று சொல்லக்கூடிய ஓட்டும் உரிமம் பெற்று இருக்க வேண்டும்.16வயது நிரம்பியவர்கள் கியர் இல்லாத இரு சக்கர வாகனங்களை ஓட்ட உரிமம் பெறலாம்.18 வயது நிரம்பியவர்கள் கியர் உள்ள மோட்டார் சைக்கிள் உட்பட நான்கு சக்கர வாகனங்கள் ஓட்டுவதற்கான உரிமம் பெறலாம்.20வயது நிரம்பியவர்கள் நான்கு சக்கர வாகனங்கள் ஓட்டுவதற்கான உரிமம் பெற்று ஓராண்டு நிறைவடைந்திருந்த பிறகு பேட்ஜ் பெற்று கனரக வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் பெறலாம்.பொது போக்குவரத்து வாகனம் ஓட்டுவதற்கு உரிமம் பெறலாம்.உரிய லைசென்ஸ் இல்லாமல் ஒரு வாகனத்தை ஓட்டினால் மோட்டார் வாகனச்சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.வாகனம் ஓட்டுவதற்கு முன்னதாக  வாகனத்தை பரிசோதனை செய்து பழகிக்கொள்ள வேண்டும்.டயர்களில் காற்றழுத்தம்,எரிபொருள்,பிரேக்,கிளட்ச்,ஸ்டியரிங்,இன்டிகேட்டர்,ஹெட்லைட்,ஆர்ன்  போன்றவற்றை சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.நாம் ஓட்டும் வாகனத்திற்கு மூன்றாம் நபர் பாலிசியாவது இன்சூரன்ஸ் எடுத்திருக்க வேண்டும்.வாகனக்காப்பீடு ஆண்டிற்கு ஒரே தவணையாக ஒவ்வொரு ஆண்டும் இன்சூரன்ஸ் செய்ய வேண்டும்.சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக வாகனத்தில் வெளியேற்றும் புகையையும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
இனி சாலையுடன் பேசுவோமா?
 ஆமாங்க சாலையுடன் நாம் பேசலாம்.அதற்காக சாலையின் மொழியினை நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.சாலையில் வரையப்பட்டுள்ள கோடுகளும்,குறியீடுகளும்,சாலையோரத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள உத்தரவு,எச்சரிக்கை,தகவல் போன்ற போக்குவரத்துச்சின்னங்களும்,சாலையோரத்தில் நடப்பட்டுள்ள காப்புக்கற்களும்,பிரதிபலிப்பான்களும் ,ஓட்டுநரின் சைகைகளும்,காவலரின் சைகைகளும்,விளக்குச்சைகைகளும்,சாலையின் மொழிகளே..
என சாலையின் மொழிகளைப்பற்றி விரிவாக எடுத்தரைப்பட்டது.ஆயுள் காப்பீடு மற்றும் வாகனக்காப்பீடு அவசியம் பற்றி விளக்கப்பட்டது.வளைவுகளில் மெதுவாக நுழைந்து வேகமாக வெளியேறு  என்ற விதியை செய்முறை விளக்கங்களோடு எடுத்துக்கூறப்பட்டது.சாலை சந்திப்புகளிலும்,கிளைச்சாலையிலிருந்து மெயின் சாலைக்குள் நுழையும் முன்பாக நின்று கவனித்து பாதுகாப்பாக செல்லவேண்டும்.பார்வை மறைவுப்பகுதிகளை அடையாளம் கண்டு கவனமாகவும் எச்சரிக்கையாகவும் கடக்க வேண்டும்.வாகனம் ஓட்டும்போது M.S.M.P.S.L.முறையை கடைப்பிடிக்க வேண்டும்.சாலை எப்படி உள்ளது?சாலை மேல் என்ன உள்ளது?.அடுத்து நாம் என்ன வேண்டும்?என நிரந்தரக்கவனத்தோடு பயணிக்க வேண்டும் என்று விரிவாக விளக்கப்பட்டது. இரு சக்கர வாகனங்களில் தலைக்கவசம் கட்டாயம் அணியவேண்டும்.சீருந்துகளில் அதாங்க கார்களில் பயணிக்கும்போது சீட் பெல்ட் அணிவதும் நமக்குப்பாதுகாப்பு என்று விளக்கப்பட்டது.
    லோகு டிரைவிங் ஸ்கூல் சார்பாக வழங்கப்பட்ட ஓட்டுநர்களுக்கான பயிற்சிக்கையேடு,வேகக்கணிப்பீடு பற்றிய துண்டு பிரசுரங்கள்,போதைப்பொருட்களை தவிர்ப்போம் நம்மை நாமே காப்போம் பற்றிய துண்டு பரிசுரங்கள்,நெகிழியின் தீங்கு பற்றிய துண்டுபிரசுரங்கள்,புத்தக வாசிப்பின் அவசியம் பற்றியும் குறிப்பாக,நமது நாடு அடிமைப்பட்டதும் சுதந்திரத்துக்காக கொடுமைப்பட்டதும் பற்றியும் உரையாடினோம்.ஹெலன்கெல்லரின் வாழ்க்கை வரலாறு,கணித மேதை ராமானுஜனின் வரலாறு,சமகால அறிவியலறிஞரான,ஸ்டீவ்ஜாப்ஸ் வரலாறு பற்றியும் எடுத்துரைத்த்தோடு.தேவையே தேடலுக்கு அடித்தளம் என்பதை பல்வேறு உதாரணங்களுடன் எடுத்துரைக்கப்பட்டது.கூடவே மருத்துவத்தாவரங்கள் பற்றியும் கருத்துரையாடல் நடத்தப்பட்டது.
          (  பதிவின் நீளம் கருதி இத்துடன் நிறைவு செய்கிறேன்).

24 செப்டம்பர் 2016

தமிழ் எண்கள் ஒரு பார்வை


மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
உலகில் ஒரே ஒரு நாடு மட்டுமே தமிழ் எண்களை நாணயத்தாள்களில் பயன்படுத்துகிறது*.
----------------------------
*தமிழ் எண்கள்*
1 - க, 2 - உ, 3 - ங, 4 - ச, 5 - ரு, 6 - சு, 7 - எ, 8 - அ, 9 - கூ, 10 - கo,
11 - கக, 12 - கஉ, 13 - கங, 14 - கச, 15 - கரு, 16 - கசு, 17 - கஎ, 18 - கஅ, 19 - ககூ, 20 - உo
21 - உக, 22 - உஉ, 23 - உங, 24 - உச, 25 - உரு, 26 - உசு, 27 - உஎ, 28 - உஅ, 29 - உகூ, 30 - ஙo
31 - ஙக, 32 - ஙஉ, 33 - ஙங, 34 - ஙச, 35 - ஙரு, 36 - ஙசு, 37 - ஙஎ, 38 - ஙஅ, 39 - ஙகூ, 40 - சo,
41 - சக, 42 - சஉ, 43 - சங, 44 - சச, 45 - சரு, 46 - சசு, 47 - சஎ, 48 - சஅ, 49 - சகூ, 50 - ருo
51 - ருக, 52 - ருஉ, 53 - ருங, 54 - ருச, 55 - ருரு, 56 - ருஎ, 57 - ருஎ, 58 - ருஎ, 59 - ருகூ, 60 - சுo
61 - சுக, 62 - சுஉ, 63 - சுங, 64 - சுச, 65 - சுரு, 66 - சுசு, 67 - சுஎ, 68 - சுஅ, 69 - சுகூ, 70 - எo
71 - எக, 72 - எஉ, 73 - எங, 74 - ஏசு, 75 - எரு, 76 - எசு, 77 - எஎ, 78 - எஅ, 79 - எகூ, 80 - அo
81 - அக, 82 - அஉ, 83 - அங, 84 - அச, 85 - அரு, 86 - அசு, 87 - அஎ, 88 - அஅ, 89 - அகூ, 90 - கூo
91 - கூக, 92 - கூஉ, 93- கூங, 94 - கூச, 95 - கூரு, 96 - கூசு, 97 - கூஎ, 98 - கூஅ, 99 - கூகூ, 100 - கoo
101 - கoக, 102- கoஉ, 103 - கoங, 104 - கoச, 105 - கoரு, 106 - கoசு, 107 - கoஎ, 108 - கoஅ, 109 - கoகூ, 110 - ககo
111 - ககக, 112- ககஉ, 113 - ககங, 114 - ககச, 115 - ககரு, 116 - ககசு, 117 - ககஎ, 118 - ககஅ, 119 - கககூ, 120 - கஉo
121 - கஉக, 122- கஉஉ, 123 - கஉங, 124 - கஉச, 125 - கஉரு, 126 -கஉசு, 127 - கஉஎ, 128 - கஉஅ, 129 - கஉகூ, 130 - கஙo
131 - கஙக, 132- கஙஉ, 133 - கஙங, 134 - கஙச, 135 - கஙரு, 136 - கஙசு, 137 - கஙஎ, 138 - கஙஅ, 139 - கஙகூ, 140 - கசo
141 - கசக, 142- கசஉ, 143 - கசங, 144 - கசச, 145 - கசரு, 146 - கசசு, 147 - கசஎ, 148 - கசஅ, 149 - கசகூ, 150 - கருo
151 - கருக, 152- கருஉ, 153 - கருச, 154 - கருச, 155 - கருரு, 156 - கருஎ, 157 - கருஎ, 158 - கருஅ, 159 - கருகூ, 160 - கசுo
161 - கசுக, 162- கசுஉ, 163 - கசுங, 164 - கசுச, 165 - கசுரு, 166 - கசுசு, 167 - கசுஎ, 168 - கசுஅ, 169 - கசுகூ, 170 - கஎo
171 - கஎக, 172- கஎஉ, 173 - கஎங, 174 - கஏசு, 175 - கஎரு, 176 - கஎசு, 177 - கஎஎ, 178 - கஎஅ, 179 - கஎகூ, 180 - கஅo
181 - கஅக, 182- கஅஉ, 183 - கஅங, 184 - கஅச, 185 - கஅரு, 186 - கஅசு, 187 - கஅஎ, 188 - கஅஅ, 189 - கஅகூ, 190 - ககூo
191 - ககூக, 192- ககூஉ, 193 - ககூங, 194 - ககூச, 195 - ககூரு, 196 - ககூசு, 197 - ககூஎ, 198 - ககூஅ, 199 - ககூகூ, 200 - உoo
மொரீசியசு நாட்டின் ரூபாய் தாளில் தமிழில் எழுத்துக்களும், எண்களும் ( ரூ.10 தமிழில் ௧௦) இடம் பெற்றிருக்கிறது. எங்கோ தூரத்தில் ஆப்பிரிக்காவின் அருகில் உள்ள மொரிசியசு அரசு தமிழ் எண்களை பயன்படுத்துவது பெருமைக்குரியதே.
மொரீசியசில் 30000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர்.
----------------------------

23 செப்டம்பர் 2016

காவிரி ஆறு-

 மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.
          பதிவிட்ட முகநூல் நண்பர் திருமிகு.செல்வி மாறன் அவர்களுக்கு நன்றிங்க..
காவிரி நீர்:
பத்து வருடம் முன்பு பெங்களூருவில் நான் வேலை பார்த்த நிறுவனத்தில்,
27 ஊழியர்களுக்கு நான் மேலாளர். 27 பேரும் (ஆண் பெண் உட்பட முப்பது வயதுக்குக் குறைவான இளைஞர்/இளைஞிகள்.
7 கன்னடர்கள், 9 தமிழர்கள், 5 தெலுங்கர்கள், மீதி வடநாட்டவர்.
ஒரு நாள் coffee இடைவெளியில் பேசிக்கொண்டிருக்கும்போது, நந்தகுமார் என்ற இளைஞர் (கன்னடர்- மைசூர் - பிறந்து வளர்ந்தது - MBA பெங்களூரு பல்கலைக்கழகம்) சற்றுத் தயங்கி,
"சார், தப்பா நினைக்கக் கூடாது. நீங்கள் நியாயவாதி என்பதால் உங்களைக் கேட்கிறேன். கேட்கலாமா?" என்றார்.
அப்போது, இன்று போலவே காவிரி நீர்ப் பிரச்னை உச்சம்.
"கேளேன் நந்து" என்றேன். அவர் கேட்டது (ஆங்கிலத்தில்தான்)
"சார், கன்னட மக்கள் உழைப்பில், கர்நாடக அரசின் முதலீட்டில் விஸ்வேஸ்வரய்யா கஷ்டப்பட்டு கட்டிய காவிரியிலிருந்து தமிழக மக்கள் பங்கு கேட்பது எந்த விதத்தில் நியாயம் ?: என்று கேட்டார்.
""அதாவது KRS அணை பற்றிக் கேட்கிறீர்கள் இல்லையா" ? என்றேன்.
"அதுவும்தான்" என்றார். எனக்கு புரை ஏறிவிட்டது.
"காவிரியை விச்வேஸ்வரய்யா கட்டினாரா?" என்றேன்.
அவர் குழப்பத்துடன் "பின்னே" என்றார்.
அவரிடம் இருந்த குழப்பமே, மீதி இருந்த ஆறு MBAக்களிடமும் இருந்தது.
நான் உடனே சொன்னேன், "நந்து, இதற்குப் பதில் பின்னால் சொல்கிறேன். முதலில் உங்களுக்கு அரை நாள் விடுமுறை தருகிறேன். உங்கள் வேலையை நான் செய்து கொள்கிறேன். நீங்கள் கூகிள் இல் உட்காருங்கள். நான் இப்போது எழுதிக்கொடுக்கும் பத்து வார்த்தைகளைத் தேடி, விக்கிபீடியாவில் அவை எல்லாம் முழுதாகப் படித்து விட்டு, மாலை என்னிடம் வரவேண்டும்" என்றேன்.
"சரி சார்" என்றார். நான் எழுதிக் கொடுத்தேன்.
Cauvery River, Chola Kingdom, Kallanai, Karikaal Chola, Raja Raja Chola, Tanjore, Coorg, Upper Riparian State, Lower Riparian State, KRS Dam
மாலை தொங்கிப் போன முகத்தோடு வந்தார். "எல்லாம் படித்து விட்டேன். நீங்கள் சொல்ல ஏதும் இல்லை சார். சாரி" என்று சென்று விட்டார்.
"ஒரு நிமிடம்.... நந்து, நீங்கள் படித்ததையெல்லாம் உங்கள் மீதி நண்பர்களுக்கும் சொல்லுங்கள்" என்றேன்.
நான் மேலே சொன்னதை நம்புபவர்கள் நம்புங்கள். நம்பாதவர்கள், கர்நாடகாவில் யாரிடமாவது காவிரி பற்றிப் பேசிப் பாருங்கள்.
-----
நிறைய பேருக்கு ஒரு விஷயம் புரியவே இல்லை.
குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரி ஆறு அங்கிருந்து நேரடியாக ஓடி வந்து தமிழகத்தின் வழியாக ஓடிப்போய் கடலில் கலந்துவிடுவது போலவும், அப்படி கடலில் கலக்க விட்டுவிட்டு ஏதோ கர்நாடகக்காரன் தேக்கி வைத்திருக்கும் தண்ணீரில் பங்கு கேட்டு தமிழகம் தகராறு செய்வது போலவும் சிலர் பேசிட்டு இருக்காங்க.
அவங்க பேசுவதை பார்த்தால் காவிரி ஆறு உற்பத்தியாகி 200 ஆண்டுகள்தான் ஆனதுபோல இருக்கு.
ஒரு விஷயம் அவுங்களுக்கு புரியவே இல்லை, பூகோள ரீதியாக பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக காவிரி நதி கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர் வழியாக ஓடி கடலில் கலந்துகொண்டுதான் இருந்தது.
அப்போது காவிரி டெல்டாவில் முப்போகம் விவசாயம் நடந்துகொண்டேதான் இருந்தது.
ஆனால் பிரச்சனை ஆரம்பித்ததே 1932ல் காவிரியின் நீர்பிடிப்பு பகுதியில் கிருஷ்ண ராஜ சாகர் அணை கட்டப்பட்ட பிறகுதான்.
அதுவரை தடையின்றி ஓடிக்கொண்டிருந்த நதி காவிரி டெல்ட்டாவை தாண்டி தினமும் பல மில்லியன் லிட்டர் தண்ணீரை கடலுக்குள் கொண்டுபோய் சேர்த்துக்கொண்டே இருந்தது.
KRS அணை கட்டப்பட்ட பிறகு காவிரியில் ஒரு சொட்டு நீர்கூட வர முடியவில்லை. காரணம் காவிரியை தடுத்து கட்டப்பட்ட KRS அணையில் நீர் அடைபட்டது.
அந்த அணை நிரம்பும் தருவாயில் உபரி நீர் மட்டும் வெளியேறிக்கொண்டிருக்கும். அதாவது இயற்கையான போக்கில் ஓடின நதி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
(KRS அணையை தொடர்ந்து கபினி,ஹேமாவதி,ஹாரங்கி அணைகள் கட்டப்பட்டபோதும் அப்படித்தான்)
நம்முடைய நதி நீரை கேட்பது நமது உரிமை. சிலர் அதை என்னமோ யாசகம் போல நினைத்துக்கொண்டு மழை நீரை சேகரிக்க கூடாதா? கடல் நீரை குடி நீராக்கி குடிக்க கூடாதா என்கிறார்கள்.
அவர்களுக்கு ஒன்று புரியவில்லை. நதி நீர் என்பது நிலத்திற்கு மட்டும் சொந்தமானது அல்ல, கடலுக்கும் சொந்தமானது.
நதி நீர் கடலில் கலந்தேயாக வேண்டும். அது கட்டாயம். அதுதான் இயற்கை.
புவியியல் வல்லுந‌ர்களிடம் கேட்டுப்பாருங்கள் இதற்கான விளக்கத்தை தருவார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன் சீனா மஞ்சளாற்றின் குறுக்கே உலகின் மிகப்பெரிய ஒரு அணையை கட்டியது.
அந்த தண்ணீரை பாலைவனத்தின் பக்கம் திருப்பி பல லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை சோலைவனமாக்கியது. ஆனால் அந்த ஆறு கடலில் சேரும் பகுதியில் நதி நீர் ஓடாததால் உப்பு நீர் நிலத்தடி நீருக்குள் ஊடுறுவியது. அந்த பகுதி கடற்கரையின் உப்பு அளவு அதிகரித்தது.
கடற்கரையோரம் இருந்த மஞ்சள் ஆறு பாசன பகுதிகள் பாலைவனமானது. மிகப்பெரிய பாதிப்பை சந்தித்த சீனா தற்போது அதை சரி செய்ய முயன்று வருகிறது.
அதுபோல காவிரி நீர் கடலில் கலக்காவிட்டால் காவிரி கழிமுக மாவட்டங்கள் பாலைவனமாகும்.
நம் மாநிலத்திற்குள் அணைகளே கட்டக்கூடாது என நான் சொல்லவில்லை. அணைகள் கட்டி அந்த தண்ணீர் ஏரி, குளங்களில் சேமிக்கப்பட்டாலும் குறிப்பிட்ட அளவு தண்ணீர் கட்டாயம் கடலில் கலந்தேயாக வேண்டும்.
அணைகள் பற்றி பேசுவோம். கர்நாடகாவிலிருக்கும் KRS, கபினி, ஹேரங்கி, ஹேமாவதி அணைகளில் தேக்கப்படும் தண்ணீரை நம் மேட்டூர் ஸ்டேன்லி அணை என்ற ஒரு அணையில் தேக்கிவிடலாம். இந்த 5 அணைகளில் மேட்டூர் அணைதான் மிகப்பெரியது.
கர்நாடகத்திலிருக்கும் அனைத்து அணைகளும் மலைப்பாங்கான மேட்டு நிலத்தில் இருக்கும் அணைகள்தான்.
ஆனால் தமிழகத்தில் மேட்டூருக்கு கீழே அப்படிப்பட்ட நில அமைப்பு இல்லை. காவிரி டெல்டா மாவட்டங்கள் சமவெளிப்பகுதிகளை கொண்டது. அதில் கிருஷ்ணராஜ சாகர், மேட்டூர் ஸ்டேன்லி போன்ற அணைகளை கட்ட முடியாது ஆனால் சிறு சிறு தடுப்பணைகளை மட்டும் கட்ட முடியும்.
இது பூகோள ரீதியில் உள்ள நீர் வடி நிலம், டெல்டா சமவெளி.
சிலர் கல்லணை மட்டும் டெல்டா பகுதியில் இல்லையா என கேட்கலாம்.
ஆம். கேள்வி சரிதான்.
கல்லணை ஒன்றும் நீங்கள் நினைப்பதுபோல் டி.எம்.சி கணக்கில் நீரை தேக்கி வைத்து வறட்சி காலத்தில் திறந்துவிட்டு பயன்படுத்தும் அணை கிடையாது. அது ஓடும் காவிரியின் குறுக்கே தண்ணீரை தடுத்து நிறுத்தி பல சிறு சிறு வாய்க்கால்களுக்கு பிரித்து அனுப்பும் ஒரு மிகப்பெரிய மதகு போன்றது. கல்லணையில் ஒரு டி.எம்.சி நீரை கூட தேக்க முடியாது.
காவிரி நதியை பொறுத்தவரை மேட்டூர் ஸ்டேன்லி நீர் தேக்கம் ஒன்று மட்டுமே போதும்.
அதிலிருந்து வரும் தண்ணீரை சேமிக்க முயற்சிக்கலாம்.
நிறைய சிறு சிறு தடுப்பணைகள் கட்டி நிலத்தடிநீர் மட்டத்தை உயர்த்தலாம், அந்த நீரை ஏரி, குளங்களில் சேமிக்கலாம்.
ஆனால் ஒரு சொட்டு தண்ணீரைக்கூட கடலுக்கு விடமாட்டேன் என நாம் நினைத்தால் இயற்கை நம்மை பழிக்கும்.
டெல்டா மாவட்டங்களில் மிகப்பெரிய அணையை கட்டுவேன் என யாராவது சொன்னால் அது கற்பனையாகத்தான் இருக்கும்.
உண்மையில் காவிரி டெல்டா சமவெளியில் பெரிய அணைகளை கட்ட முடியாது. சிறு, குறு தடுப்பணைகளை மட்டுமே கட்ட முடியும்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் நிறைய தடுப்பணைகளை கட்டிக்கொள்ளாதது நம்முடைய தவறுதான். தர்க்க ரீதியில் தவறுதான் ஆனால் இயற்கையை நாம் மாற்ற முயற்சிக்கவில்லை என்ற வகையில் அது சரி.
இதற்காக நமக்கு காவிரியில் உரிமை இல்லாதது போலவும், கர்நாடகாவை தொந்தரவு செய்வது போலவும் யாரும் பேசாதீர்கள்.
சர்வதேச நதி நீர் தாவா சட்டத்தின்படி ஒரு நதி மீது அதிக உரிமை அதன் கீழ் பகுதியில் இருப்பவர்களுக்குத்தான்.
நமது உரிமையைத்தான் கேட்கிறோம் பிச்சை அல்ல. நமது அரசியல் சண்டைக்காக நமது உரிமையை ஏளனப்படுத்தாதீர்கள்!
முடிவாக ஒன்று. காவிரியில் நமக்கு இருக்கும் உரிமை போன்றே வங்கக்கடலுக்கும் உரிமை இருக்கிறது. பல லட்சக்கணக்கான ஆண்டுகளாக காவிரி நீரை வங்கக்கடலும் குடித்து வந்திருக்கிறது. அதை கர்நாடகாவும், நாமும் முழுவதும் எடுத்துக்கொண்டால் இயற்கைக்கான பங்கை யார் கொடுப்பது?
------
குருமூர் என்பவரது பதிவு.. :)

கவிஞர் இரவா- கபிலன் அவர்களிடம் இருந்து பகிரப் பட்டது

முனைவர்.இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phil.,Ph.D., அவர்களது வாழ்க்கைக்குறிப்பு... (Dr.R.K.Manikkam, professor,Writer)

                                                                                                        முனைவர். இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phi...