29 ஆகஸ்ட் 2015

இந்திய அரசியல் சாசனம்




நதிகள் இணைப்புத் திட்டம்.

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். நதிகளை இணைப்போம் - நாடு முன்னேறும்..விவசாயத்திற்கு உயிரூட்டுவோம்..நம் வாழ்வு முன்னேறும்.



நீர்வழி திட்டத்திற்கு முன்னுரிமை கொடுப்போம்!
கடந்த இரு நாட்களாக, இந்தியாவின் நீர் பயன்பாடு மற்றும் தமிழக ஆறுகளை எவ்வாறு இணைக்கலாம் என்பது குறித்து பார்த்தோம்.இனி, தமிழகம், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா ஆகிய நான்கு மாநிலங்களையும் உள்ளடக்கக் கூடிய தென்னக இணைப்பை, எப்படி உருவாக்குவது எனப் பார்ப்போம்.

இந்த மாநிலங்கள் அனைத்தும், கிருஷ்ணா, கோதாவரி, காவிரி, தாமிரபரணி, முல்லைப் பெரியாறு, வைகை, பாலாறு ஆகிய ஆறுகளையே, நீர்பாசனத்துக்கு பெரிதும் சார்ந்திருக்கின்றன. வெள்ளம் ஏற்படும்போது, இம்மாநிலங்களில், நீருக்கு பிரச்னை இருப்பதில்லை. 30, ஜனவரி 2013 அன்றைய மத்திய நீர் ஆணையத்தின் தரவுகளின்படி, தென்னிந்திய ஆறுகளின் மொத்த நீர் கொள்திறன், 15 ஆயிரத்து 300 கோடி கன அடி தான். அவற்றில், தற்போதுள்ள நீர் சேகரிப்பு இடங்கள் அனைத்தும் சேர்ந்து, 4,800 கோடி கன அடி நீரை மட்டுமே, தேக்கக் கூடிய வசதிகளைக் கொண்டிருக்கின்றன.
ஆனால், வெள்ளப் பெருக்கின்போது, கோதாவரி, கிருஷ்ணா நதிகளில் மட்டும், 2,000 - -3,000 டி.எம்.சி., நீர் ஆந்திராவின் அணைகள், நீர்த் தேக்கங்கள், ஏரிகள் ஆகியவற்றை நிரப்பிய பிறகும், கடலில் சென்று கலக்கிறது. அதே நேரத்தில், தெலுங்கானாவில் பல பகுதிகளில், நீர்ப்பற்றாக்குறை நிலவுகிறது.வறட்சி பருவங்களில், தென் மாநிலங்கள் அனைத்துமே வறண்டு விடுகின்றன. இந்தப் பிரச்னை, மாநிலங்களில் அரசியல் மயமாகிறது. அரசுகளும், கட்சிகளும், கடுமையான நிலைப்பாடுகளை எடுத்து, மாநிலங்களுக்கிடையில் பதற்றத்தை உருவாக்குகின்றன. முன் முடிவுடன் இந்தப் பிரச்னையை அணுகினால், பேரம் பேசுவதற்கான சந்தர்ப்பம் அமையாமல் போய் விடும்.நீதிமன்ற வழக்குகள், தீர்ப்பாய முடிவுகள், கோரல்கள், எதிர்கோரல்கள் என, இந்தப் பிரச்னைகள் நீள்வதால், நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமல் போகும் நிலை ஏற்படுகிறது. நீதிமன்ற உத்தரவை நிராகரிக்கும் முடிவுகள், சட்டமன்ற தீர்மானங்கள் மூலம் எடுக்கப்படுகின்றன.மோசமான நீர் மேலாண்மை காரணமாக ஏற்படும் இந்தநிலை, குழப்பத்துக்கு காரணமாகி, யாருக்கும் எந்த மாநிலத்துக்கும், நன்மை உருவாக்கக் கூடிய வாய்ப்பையும் கெடுக்கிறது. இறுதியாக, எல்லா மாநிலங்களிலும் உள்ள விவசாயிகளும், மக்களுமே பாதிக்கப்படுகின்றனர்.இந்த நிலையை தவிர்க்க, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழக மாநிலங்களில் உருவாகும் வெள்ளப் பெருக்கை, அதி -திறன் நீர்வழிகளில் செலுத்தி, சேகரித்து, வறட்சி ஏற்படும் போதெல்லாம் பகிர்ந்து கொள்ளலாம். ஆந்திர பிரதேச அதி -திறன் நீர்வழிகளும், தமிழக அதி -திறன் நீர்வழிகளும் ஒரே மட்டத்தில் இணையக் கூடியவையாகவும், தமிழக - -ஆந்திர எல்லையில், வேலுார் அருகே இணையக் கூடியதாகவும் இருக்கின்றன. கட்டுக்கடங்காத வெள்ளப் பெருக்கையும், இந்த இணைப்பு தவிர்க்கும். வெள்ள காலத்தில், 3,000 முதல் 4,000 டி.எம்.சி., நீரை, தென்னக நீர்வழி இணைப்பு பெற முடியும். இது, எல்லா பருவ காலங்களிலும், எல்லா மாநிலங்களுக்குமான தேவையைப் பூர்த்தி செய்யும்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு FB விண்ணப்பம்.



 போக்குவரத்துக்கு  தடை ஏற்படுத்துவதை தடுக்க கோரி விண்ணப்பம்.

அனுப்புநர்;
               C.பரமேஸ்வரன்,
                        செயலாளர் ,
                         நுகர்வோர் பாதுகாப்பு மற்றும்
                                         சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு,
             (அரசு பதிவு பெற்ற தன்னார்வ நுகர்வோர் அமைப்பு)
                  Mobile Number: 9585600733   

மரியாதைக்குரிய ஐயா,
        வணக்கம்.கடந்த சில தினங்களாக தாளவாடி சுற்றுவட்டாரங்களில் வெட்டப்படும் கரும்புகளை பொதுமக்கள் போக்குவரத்துக்கு இடையூறாக நடுரோட்டில் லாரிகளை நிறுத்தி ஏற்றுகின்றனர்.
              
              குறிப்பாக பேருந்துகள் ஒருமணி நேர இடைவெளியில் இயக்கப்படும் சூழ்நிலையில் அதிலும் மாலை நேரங்களில் பள்ளி மாணவர்களை ஏற்றி இயக்கும் நேரங்களில் பயணிகளின் சூழ்நிலையை பற்றிக் கவலைப்படாமல் மணிக்கணக்கில் தாமதம் செய்து பிறகு வழி விடுகின்றனர்.அத்துடன் அனுமதிக்கப்பட அளவை விட அதிகமான  பாரங்களை ஏற்றி இயக்குவதால் எதிர் வரும் வாகனங்களுக்கு வழிவிடுவதற்கு மாறாக நடுச்சாலையில் நிறுத்திக்கொள்கின்றனர்.இதனால் சாலை ஓரம் ஆபத்தாக ஒதுங்கிச்செல்லும் நிலை.சம்பவ இடத்திலிருந்து உரிய பாதுகாப்பு அல்லது உதவி கேட்டு காவல்துறையை தொடர்பு கொள்ள இயலாத நிலையில் பயணிகள் பேருந்தை பாதுகாப்பில்லாமல் இயக்க வேண்டி உள்ளது.
            
              எனவே தங்கள் மேலான சமூகம் அவர்கள்  பயணிகள் மற்றும் மாணவர்கள் பாதுகாப்பு மற்றும் பிற வாகன இயக்கங்களின் நலன் கருதி போக்குவரத்து இல்லாத நேரங்களில் கரும்பு ஏற்றவும்,அனுமதிக்கப்பட்ட அளவு பாரங்களை ஏற்றி இயக்கவும்,அனைத்து வாகனங்கள் போக்குவரத்துக்கு தடை செய்யாமல் வழிவிட்டு சாலை பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுத்து மலைவாழ் பொதுமக்களுக்கு உதவி செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

               உதாரணத்திற்காக இத்துடன் புகைப்படம் ஒன்று அனுப்பி உள்ளேன்.
(நாள் 28.08.2015 மாலை4.15மணி தாளவாடி-பனகஹள்ளி செல்லும் வழியில் எரகனஹள்ளி தாண்டி பசப்பதொட்டி என்ற ஊர் அருகில் மற்ற போக்குவரத்து தடை ஏற்படுத்திக்கொண்டு பயணிகளைப்பற்றி கவலைப்படாமல்  வழிவிட மறுத்தது மட்டுமின்றி  ஓட்டுநர் லாரியின் கூரைமேல் நின்றுகொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறார்.)

 இப்படிக்கு,சமூக நலன் கருதி தங்கள் உண்மையுள்ள C.பரமேஸ்வரன், (Mobile Number :9585600733)
செயலாளர்,
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும்
 சாலை பாதுகாப்பு சங்கம்-
தமிழ்நாடு.


அனுப்பிய தேதி ;29.08.2015 இரவு 8.57மணி

26 ஆகஸ்ட் 2015

இந்திய அடிப்படைச் சட்டங்கள்

 இந்திய  அடிப்படை சட்டங்கள்  தெரிந்துகொள்ளுவோம் இன் புகைப்படம்.

மரியாதைக்குரியவர்களே,
                வணக்கம்.பயனுள்ள தகவல் பதிவிட்ட,முகநூல் நண்பர்''இந்திய அடிப்படை சட்டங்கள் தெரிந்துகொள்வோம் '' அவர்களுக்கு நன்றிங்க.
இந்திய அடிப்படை சட்டங்கள் தெரிந்துகொள்ளுவோம்.
      
இந்திய அரசியலமைப்புச் சட்ட வரலாறு
அரசியலமைப்புச் சட்டம் என்றால் என்ன?

சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் உலகம் முழுவதும் அனைத்து நாடுகளிலும் அரசர்களின் ஆட்சியே நடைபெற்று வந்தது. அந்தக் காலங்களில் ஒரு நாட்டை ஆள்வதற்கு நிலையான சட்டங்கள் இருந்திருக்கவில்லை. அரசர்களின் விருப்பப்படியும், மத சம்பிரதாயங்களின் படியும், தலைமுறைகளாக பின்பற்றி வந்த நடைமுறைகளின் படியும் நாடுகள் ஆளப்பட்டு வந்தன. கடந்த முன்னூறு ஆண்டுகளாக நடைபெற்றுவந்த தொடர்ச்சியான அரசியல், சமூகப் போராட்டங்களாலும், விழிப்புணர்வாலும் அரசர்களின் அதிகாரங்கள் ஒழிக்கப்பட்டு, சட்டத்தின் அடிப்படையில் மக்களால் அல்லது மக்கள் பிரதிநிதிகளால் ஆட்சி செய்வது உலக நாடுகள் அனைத்திலும் நடைமுறைக்கு வந்துவிட்டது.
அரசு என்று சொன்னால் அது மக்கள் தொகை, அவர்கள் வாழும் நிலப்பரப்பு, அரசாங்கம், இறைமை ஆகிய நான்கு அம்சங்களையும் கொண்டிருக்க வேண்டும். ஆள்வோர், ஆளப்படுவோர் என இரு முக்கிய பகுதிகளை கொண்டுள்ள அரசில், அந்த இரண்டு பக்திகளையும் இணக்கமாக இயங்கச் செய்வதற்கான ஏற்பாடுதான் அரசியலமைப்பு (constitution) எனப்படுகிறது.
அரசியலமைப்பானது அரசாங்கத்தின் அடிப்படை அம்சங்களையும், பணிகளையும், அதிகாரங்களையும் நன்கு வரையறுப்பதுடன், மக்களின் உரிமையையும் பாதுகாக்கிறது. சட்டம் எவ்வாறு இயற்றப்பட வேண்டும், சட்டத்தின் ஆட்சி எப்படி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதையும் அரசியலமைப்பு வரையறுக்கிறது.
இந்திய அரசியலமைப்புச் சட்ட உருவாக்கம்
இந்தியாவுடன் வாணிபம் செய்ய கிழக்கிந்திய கம்பெனிக்கு அனுமதி அளித்து, இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் அரசியார் கி.பி.1600ல் வழங்கிய உரிமை ஆணைகள் தான் இந்தியாவின் நவீன சட்டத்தின் ஆரம்பம் எனலாம். வியாபாரம் செய்யவந்த கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவின் நிலப்பகுதிகளை படிப்படியாக வென்று ஆளவும் ஆரம்பித்தது. அப்போது கம்பெனியின் அதிகாரத்தையும், நிர்வாகத்தையும் முறைப்படுத்த 1773ல் ஒழுங்குமுறைச் சட்டம், 1784ல் பிட் இந்தியச் சட்டம் ஆகியவை இயற்றப்பட்டன. அவ்வப்போது தேவை ஏற்படும் போது கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரத்தை முறைப்படுத்த 1853 வரை பல பட்டயச் சட்டங்கள் இயற்றப்பட்டன. 1857ல் சிப்பாய் புரட்சி என்னும் மக்கள் எழுச்சிக்கு பின்னர், இந்தியாவை ஆளும் பொறுப்பை கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து ஆங்கிலேய அரசு எடுத்துக்கொண்டது. அதைப் பின்பற்றி 1858ல் சட்டம் கொண்டு வரப்பட்டது.
அரசு நிர்வாகத்தில் மண்ணின் மைந்தர்களான இந்தியர்கள் பங்குபெற வேண்டும் என்ற எண்ணத்திலும், மக்களின் சுதந்தர போராட்டத்தை பலவீனப்படுத்தவும் சிறு சலுகைகள் அளிக்கும் பல சட்டங்கள் அவ்வப்போது இயற்றப்பட்டன. எனினும் 1935ல் கொண்டுவரப்பட்ட இந்திய அரசியலமைப்பு சட்டம் ஓரளவு முழுமையான அரசியல் சட்டம் எனலாம். அதன் பின்னர் இந்தியா சுதந்தரம் பெறும் நேரத்தில் நமக்கென்று சொந்தமான அரசியல் சட்டம் வேண்டும் என்ற நோக்கில், பிரிட்டனின் கேபினட் தூது குழுவின் பரிந்துரையின் பேரில் இந்திய அரசியல் நிர்ணய சபை அமைக்கப்பட்டது. ஜவஹர்லால் நேரு, டாக்டர் அம்பேத்கர், ராஜாஜி, வல்லபாய் படேல், டாக்டர் ராஜேந்திர பிரசாத் போன்ற முக்கிய தலைவர்கள் உள்பட 389 உறுப்பினர்களுடன் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் பணி 1946ல் தொடங்கப்பட்டது. இச்சபைக்கு டாக்டர் ராஜேந்திர பிரசாத் தலைமையேற்றார். இரண்டு வருடம் பதினோரு மாதம் பதினெட்டு நாள்கள் உழைத்து , பல நாட்டு அரசியல் அமைப்புகளையும், அரசியல் போக்குகளையும் ஆராய்ந்து விவாதித்து சுதந்தர இந்திய அரசியலமைப்பை உருவாக்கியது இவ்வாறு உருவாக்கப்படும் அரசியலமைப்பை நுண்மையாக ஆராய்ந்து இறுதி செய்ய டாக்டர் அம்பேத்கர் தலைமையில் ஆறு உறுப்பினர்கள் அடங்கிய வரைவுக் குழு (draft committee) ஆகஸ்ட் 29, 1947 ல் அமைக்கப்பட்டது. அரசியலமைப்பு வரைவுக் குழு அளித்த அரசியலமைப்பின் இறுதி வடிவத்தை நவம்பர் 26, 1949ல் அரசியல் நிர்ணய சபை ஏற்றுக்கொண்டு டாக்டர் ராஜேந்திர பிரசாத் அதில் கையெழுத்திட்டார். அதில் அப்போது 22 பகுதிகளும் (parts), 315 உறுப்புகளும் (articles), 12 அட்டவணைகளும் (schedules) இருந்தன. அவ்வப்போது ஏற்பட்ட கால மாற்றம், தேவைகளுக்கு ஏற்ப திருத்தப்பட்டு தற்போது 22 பகுதிகள், 395 உறுப்புகள், 12 அட்டவணைகள், 94 திருத்தங்களுடன் உலகிலேயே மிகப்பெரிய எழுதப்பட்ட அரசியலமைப்புச் சட்டமாக இந்திய அரசிலமைப்புச் சட்டம் விளங்குகிறது.
ஜனவரி 26, 1930ல் இந்திய மக்கள் சுதந்தர சபதம் எடுத்துக்கொண்டதை நினைவுகூரும் பொருட்டு, 1950ஆம் அண்டு ஜனவரி 26-ஆம் நாள் இந்திய குடியரசு தினமாக அறிவிக்கப்பட்டது. அன்று முதல் இந்தியா தனக்கென உருவாக்கிக்கொண்ட இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. இந்தியாவின் முதல் குடியரசு தலைவராக டாக்டர் ராஜெந்திர பிரசாத் பதவியேற்றார்.
இந்திய அரசியலமைப்பின் சிறப்புகள்
மக்களின் இறைமை என்ற கோட்பாட்டின் அடிப்படையில், இந்திய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அரசியல் அமைப்பின் முகப்பில் இவ்வாறு அளிக்கப்பட்டுள்ளது:
இந்திய மக்களாகிய நாங்கள் இந்தியாவை மனம் விரும்பி ஒரு முழு இறைமை பெற்ற, சமதர்ம, மதசார்பற்ற, மக்களாட்சிக் குடியரசாக அமைப்பது என்று உறுதி கொண்டு அதன் குடிமக்கள் யாவருக்கும்
“சமூக, பொருளாதார, அரசியல் துறைகளில் நீதியையும்;
“எண்ணம், பேச்சு, கருத்து, நம்பிக்கை, வழிபாடு தொடர்பான உரிமைகளையும், வாய்ப்புகள், அந்தஸ்து ஆகியவற்றில் சமத்துவத்தையும்;
நாட்டின் ஒற்றுமைக்கு கேடு விளையாமல், தனிமனித உரிமையைப் பாதுகாத்து உறுதிப்படுத்தி சகோதரத்துவத்தை வளர்க்கவும்;
“1949-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் நாள், இவ்வரசியல் அமைப்பை உருவாக்கி, நிறைவேற்றி எங்களுக்கு நாங்களே வழங்கிக் கொண்டிருக்கிறோம்.”
இவ்வாறு உலக நாடுகளின் அரசியலமைப்பில் உள்ள அனைத்து சிறப்பம்சங்களையும் ஒருங்கே கொண்டதாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் விளங்குகிறது. அடிப்படை உரிமைகள், நீதித்துறை ஆகியவை அமெரிக்க அரசியலமைப்பிலிருந்தும், பாராளுமன்ற ஆட்சி முறை பிரிட்டனிலிருந்தும், அரசு வழிகாட்டும் நெறிமுறைகள் அயர்லாந்திலிருந்தும், குடியரசு தலைவரின் அவசர நிலைக் கால அதிகாரங்கள் ஜெர்மனியிலிருந்தும் பெறப்பட்டுள்ளன. அனைத்துக்கும் மேலாக இந்திய அரசியலமைப்பு, பிரெஞ்சுப் புரட்சியின் முழக்கமான சுதந்தரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பதன் அடிப்படையில் அமைந்துள்ளது.
ஒரு முழு இறைமை பெற்ற மக்களாட்சிக் குடியரசாகவும், சமய சார்பற்ற சமதர்ம குடியரசாகவும், அடிப்படை ஜனநாயக உரிமைகளை குடிமக்களுக்கு அளித்து, அவர்களுக்கான கடமைகளையும் வரையறுத்து, ஒரு கூட்டாட்சி அரசாங்கமாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை கொண்டு இயங்கும் பாராளுமன்ற ஆட்சி முறையும், சுதந்தரமான நீதித்துறையையும் கொண்டு இந்திய அரசமைப்பு இயங்குகிறது. வயது வந்தோர் அனைவருக்கும் முழு வாக்குரிமை அளித்து ஒரு முழுமையான ஜனநாயக நாடாக இந்தியா விளங்குகிறது. இச்சிறப்புகளுக்கெல்லாம் காரணம் இந்திய அரசியலமைப்பு தான்.
சென்ற நூற்றாண்டில் சுதந்தர நாடுகளான பல நாடுகளிலும் அரசியலமைப்புகள் சீர்குலைந்தும், சர்வாதிகாரமும் குழப்பமும் ஆட்சி செய்து கொண்டிருக்கையில், இந்திய நாடு மட்டும் தனித்துவமான பாதையில், மேலும் மேலும் செழுமைப் பெற்ற ஒரு மக்களாட்சி நாடாக விளங்குவதுடன், உலகின் முன்னணி நாடுகளுக்கு சவால் விடும் அளவுக்கு வேகமாக வளர்ந்து வருகிறது. இத்தகைய அமைதியுடன் கூடிய முன்னேற்றத்துக்கு அடிப்படைக் காரணம் நமது அரசிலமைப்பு தான் என்றால் அது மிகையில்லை. இதை உணர்ந்து கொள்ளும் போதுதான் குடியரசு தினத்தை நாம் சிறப்புடன் கொண்டாடுவதன் முக்கியத்துவம் விளங்கும்.
இந்திய குடிமக்களுக்கு அரசியலமைப்பு வழங்கும் அடிப்படை உரிமைகள்:
1. சமத்துவ உரிமை
2. சுதந்தர உரிமை
3. சுரண்டலுக்கு எதிரான உரிமை
4. சமய சுதந்தர உரிமை
5. பண்பாடு, கல்வி உரிமை
6. அரசியலமைப்புக்கு உள்பட்டு பரிகாரங்களைப் பெறும் உரிமை

இந்திய குடிமக்களுக்கு அரசியலமைப்பு விதித்துள்ள அடிப்படை கடமைகள்:
1. அரசியலமைப்புச் சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடத்தல், தேசிய கொடி, தேசிய கீதம் ஆகியவற்றுக்கு மதிப்பளித்தல்
2. இந்திய விடுதலைப் போராட்டத்துக்கு தூண்டுதலாக அமைந்த கொள்கைகளை போற்றுதல், பின்பற்றுதல்
3. இந்தியாவின் இறையான்மை, ஒற்றுமை, ஒருமைப்பாட்டை நிலைநிறுத்த்தல், பாதுகாத்தல்
4. நாட்டை பாதுகாக்கவும், தேசப் பணியாற்றவும் அழைக்கும்போது வந்து அவ்வாறு பணியாற்றுதல்
5. சமயம், மொழி, வட்டாரம் ஆகியவற்றைக் கடந்து ஒற்றுமையுடன் சகோதர நேயத்தையும், இணக்கத்தையும் பேணுதல்; பெண்களின் கண்ணியத்தைச் சிறுமைப்படுத்தும் செயல்களை விட்டுவிடுதல்
6. நமது கூட்டுக் கலாசாரத்தின் மிக உயர்ந்த பாரம்பரியத்தை மதித்தல், பாதுகாத்தல்
7. காடுகள், ஏரிகள், ஆறுகள் மற்றும் வனவிலங்குகள் உள்ளிட்ட இயற்கைச் சுழ்நிலைகளைப் பாதுகாத்தல், மேம்படுத்தல், வாழும் உயிர்களிடம் இரக்கம் காட்டல்
8. அறிவியல் சிந்தனை, மனித நேயத்தை வளர்த்தல்
9. பொதுசொத்தை பாதுகாத்தல், வன்முறையை ஒழித்தல்
10. தேசத்தை முன்னேற்ற தனிப்பட்ட முறையிலும், கூட்டாகவும் முயற்சித்தல், தொண்டாற்றுதல்
11. நிலவரத்துக்கேற்ப குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளர், அந்தக் குழந்தை ஆறு வயது முதல் பதினான்கு வயதுவரை கல்வி கற்க வசதி ஏற்படுத்தித் தருதல்...

சமைக்கும் முறைகளால் உணவு நஞ்சாகின்றன

மரியாதைக்குரியவர்களே,
                           வணக்கம். சமைக்கும் பாத்திரங்களாலேயே சமைக்கும் முறைகளிலேயே உணவு நஞ்சாகி பலவித நோய்களை உருவாக்குகின்றன..
 
                           
                 சமைக்கும் எந்த உணவாக இருந்தாலும் சமைக்கும்போது  காற்று, வெளிச்சம் இருக்க வேண்டும். சூரிய ஒளி, காற்று படாத ஆகாரம் விஷத்துக்கு சமம். இந்த விஷம் இரண்டு வகையாக இருக்கும். ஒன்று உடனடியாக வேலை செய்யும். அதை தான் ‘ஃபுட் பாய்சன்’ என்று சொல்லுகிறோம். இரண்டாவது சில மாதங்களுக்கு அல்லது வருடங்களுக்கு அதன் தன்மையை உணர்த்தும்.
உதாரணம் – ப்ரஷர் குக்கர் – இதில் ஆகாரம் சமைக்கும் பொழுது எந்த விதமான காற்றும், சூரிய ஒளியும் படுவதற்கான வாய்ப்பில்லை. இது முழுவதுமாக விஷமானது. இதில் இன்னொரு ஆபத்தான விஷயம் என்னவென்றால் இது தயாரிக்கப்படுவது கால்சியம் அலுமினியம் சிலிகேட் என்னும் வேதிப்பொருள் மூலப்பொருளாகக் கொண்டது.இந்த அலுமினியம் உடலுக்குள் சென்றால் உடலின் துப்புறவுத்தொழிற்சாலை எனப்படும் சிறுநீரகத்தில் படிந்து தங்கி அல்சர்,கேன்சர்,ரத்த சம்பந்தமான வியாதிகள் என பலவித நோய்களை உண்டாக்குகின்றன.
  அலுமினியத்தில்  சமைப்பது. இது மிகவும் ஆபத்தானது. இதன் உபயோகம் பிரிட்டிஷ்காரர்களால் சிறைச்சாலையில் உள்ள பாரதீய கலவரக்காரர்களை சக்தியற்றவர்களாக ஆக்குவதற்கு நம் தேசத்திற்கு கொண்டு வரபட்டது என்றால் எவ்வளவு ஆபத்தான விஷ பாத்திரத்தில் நாம் உணவருந்துகிறோம் என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.
ப்ரஷர் என்றால் நிர்பந்தம். அப்படி என்றால் நாம் ப்ரஷக் குக்கரில் சமைக்கும் பதார்த்தம் நிர்பந்தத்திற்கு உள்ளாகி விரைவில் மிருதுவாகும். ஆனால் வேகாது. பதார்த்தம் வேகுவது வேறு, மிருதுவாவது வேறு.
உதாரணம் – துவரம்பருப்பு விளைவதற்கு 7 முதல் 8 மாதங்கள் ஆகும். ஏனென்றால் எல்லா சத்துக்களும் செடியின் வேர்களில் சேர்ந்து படிப்படியாக பலன் தரும். அதனால் தான் அவ்வளவு காலமாகும். அதனால் பருப்பில் எல்லா விதமான சத்துக்களும் நம் சரீரத்தில் சேர வேண்டுமென்றால் பதார்த்தம் சமைக்கப்பட வேண்டும். மிருதுவானால் போதாது.
போஜனம் சமைப்பதற்கு யோக்கியமான பாத்திரங்கள். அவற்றில் சமைத்தால் சத்துக்களின் மதிப்பு.
மண்பாண்டம் – 100%
வெண்கலம் – 97%
பித்தளை – 95%
இதுவே அலுமினியம் ப்ரஷர் குக்கரில் சமைத்தால் 7% - 13% தான் இருக்கும். இதில் சமைத்த பதார்த்தங்களை சாப்பிடுவதன் மூலம் சர்க்கரை வியாதி, முழங்கால் வலி, விரைவில் முதுமை, இதர வியாதிகளுக்கு ஆளாக்கப்படுவார்
கள். எதுவாக இருந்தாலும் சாப்பிடும் ஆகாரம் தான் பிரதானம்.
இதைப் போன்றே ரிஃப்ரெஜிரேட்டர், மைக்ரோ வேவ் போன்ற காற்று, ஒளி படாத வஸ்துக்கள் எப்பொழுதும் அபாயமே. Central Drug Research Institute (CRDI) அவர்களின் ஆராய்ச்சி மூலமும் இந்த விஷயம் உறுதி செய்யப்பட்டுள்ளது..




இன்று உலகம் முழுவதும் உள்ள உணவகங்களில் அலுமினிய பாத்திரங்களில்தான் சமைக்கிறார்கள். அலுமினிய சமையல் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என்பதை 60 ஆண்டுகளாக ஆராய்ச்சி மூலம் கண்டறிந்திருக்கிறார்கள். அலுமினியம் எளிதில் லீக் ஆகி உணவில் கலந்து வயிற்றுக்குள் சென்று விடும். உடலுக்கு அலுமினியத்தை வைத்து என்ன செய்வது என தெரிவது இல்லை. அதை வெளியேற்றவும் முடிவது இல்லை. முக்கியமாக உடலின் துப்புரவுத் தொழிற்சாலை எனப்படும் சிறுநீரக்கத்தில் கொஞ்சம் கொஞ்சமாக படியும் அலுமீனியம், அங்கே உலகின் மிக மெல்லிய மெமரண்ஸ் வடியகட்டியகாளக இருக்கும் ‘கிளாமருல்லாஸ்’ அமைப்பை ஓட்டைபோட்டுவிடும் படுபயங்கர உண்மையை கனடா மருத்துவ விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள். அலுமினியம் உணவுடன் உள்ளே செல்கிறது என்பதை உங்களால் நம்பமுடியவில்லையா? உங்கள் வீட்டில் அலுமினிய பாத்திரம் இருந்தால் அதன் உள்ளே பாருங்கள். சுரண்டியது போல் இருக்கும். மீதம் உள்ள அலுமினியம் எங்கே? உங்கள் உணவின் மூலம் உடலுக்குள் சென்று விட்டது என்று அர்த்தம். இரண்டில் ஒருவருக்கு அலுமினியம் ஒத்துக்கொள்ளாது. அல்சர் முதல் வயிற்றுவலி, தலைவலி வரை தெரிந்த நோய்களும் விநோத நோய்களும் ஏன் மனநோயும் கூட வரலாம் என்கிறது இந்த ஆராய்ச்சி. காரணம் அலுமீனியத் தாதுக்கள் ரத்தில் பயணித்து மூளைத்திசுக்களில் படிந்துவிடும் ஆபத்தும் இருக்கிறதாம்! மேலும் அலுமினிஞ்சை மருத்துவர்களால் கண்டுபிடிப்பது பெரும் சவாலாக இருப்பதை அனுபவமாக உணர்ந்திருக்கிறார்கள். வயிற்றுவலி என மருத்துவரிடம் போவீர்கள். ஆனால் அலுமினியத்தால் வரும் விளைவு இது என அவர்களுக்கு தோன்றாது. கோட்டட் அலுமினியம் என ஒருவகை அலுமினியம் உள்ளது. இதில் அதிக அளவு லீக் ஆகாது என்கிறார்கள். அன்கோட்டட் அலுமினியத்தில் லீக் அதிகம். அதுவும் ஆசிட் நிரம்பிய தக்காளி முதலிய உணவுகளை சமைத்தால் அலுமினியம் அதிக அளவில் லீக் ஆகும். ஆனால் கோட்டட் எது, அன்கோட்டட் எது என எப்படி கண்டுபிடிப்பது? உடலில் அலுமினியம் தேங்க இன்னொரு வழி டியோடரண்ட் போடுவது. டியோடரண்ட் தொடர்ந்து போட்டால் உடலில் அலுமினியம் அதிக அளவில் தங்கும். இது மார்புப் புற்றுநோய் முதல் பல வியாதிகளை வரவழைக்கும். வயிற்றில் போவதை நிறுத்த உண்ணும் மருந்துகள், ஆசிட் ரிப்ளக்சை குறைக்க உண்ணும் அல்கா செல்ட்சர் முதலான அன்டாசிடுகள், பல உணவுகளில் பயன்படுத்தும் பிரசர் வேடிவ்கள் (உதா: கல்சியம் அலுமினியம் சிலிகேட்) முதலானவற்றில் அலுமினியம் உள்ளது. இவற்றை தொடர்ந்து உண்பதும் ஆபத்தே! மற்றபடி இன்றைய அலுமினிய பாத்திரங்கள் மிக தரமானவை, லீக் ஆகாது எனவும் கூறுகிறார்கள். ஆனால் தொடர்ந்து அவற்றிலேயே வருடக் கணக்கில் சமைத்து, அதிக வெப்பத்தில் சமைத்தும் வந்தால் அவை ஆபத்தானவையாக மாறும் அபாயம் உண்டு. உங்கள் வீட்டு அலுமினிய பாத்திரங்களின் உள்ளே பாருங்கள். அலுமினியம் கரைந்து இருப்பது போல் தோன்றினால் தூக்கி போட்டு விடுங்கள். உங்கள் சமையலறையை விட்டு அலுமினியம் வெளியேறட்டும். - See more at: http://malarum.com/article/tam/2014/03/28/841/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html#sthash.rtszjdVb.dpuf

Read more: http://malarum.com/article/tam/2014/03/28/841/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html

Follow us: @malarumdotcom on Twitter | malarumdotcom on Facebook
© Copyright 2014 malarum.com
இன்று உலகம் முழுவதும் உள்ள உணவகங்களில் அலுமினிய பாத்திரங்களில்தான் சமைக்கிறார்கள். அலுமினிய சமையல் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என்பதை 60 ஆண்டுகளாக ஆராய்ச்சி மூலம் கண்டறிந்திருக்கிறார்கள். அலுமினியம் எளிதில் லீக் ஆகி உணவில் கலந்து வயிற்றுக்குள் சென்று விடும். உடலுக்கு அலுமினியத்தை வைத்து என்ன செய்வது என தெரிவது இல்லை. அதை வெளியேற்றவும் முடிவது இல்லை. முக்கியமாக உடலின் துப்புரவுத் தொழிற்சாலை எனப்படும் சிறுநீரக்கத்தில் கொஞ்சம் கொஞ்சமாக படியும் அலுமீனியம், அங்கே உலகின் மிக மெல்லிய மெமரண்ஸ் வடியகட்டியகாளக இருக்கும் ‘கிளாமருல்லாஸ்’ அமைப்பை ஓட்டைபோட்டுவிடும் படுபயங்கர உண்மையை கனடா மருத்துவ விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள். அலுமினியம் உணவுடன் உள்ளே செல்கிறது என்பதை உங்களால் நம்பமுடியவில்லையா? உங்கள் வீட்டில் அலுமினிய பாத்திரம் இருந்தால் அதன் உள்ளே பாருங்கள். சுரண்டியது போல் இருக்கும். மீதம் உள்ள அலுமினியம் எங்கே? உங்கள் உணவின் மூலம் உடலுக்குள் சென்று விட்டது என்று அர்த்தம். இரண்டில் ஒருவருக்கு அலுமினியம் ஒத்துக்கொள்ளாது. அல்சர் முதல் வயிற்றுவலி, தலைவலி வரை தெரிந்த நோய்களும் விநோத நோய்களும் ஏன் மனநோயும் கூட வரலாம் என்கிறது இந்த ஆராய்ச்சி. காரணம் அலுமீனியத் தாதுக்கள் ரத்தில் பயணித்து மூளைத்திசுக்களில் படிந்துவிடும் ஆபத்தும் இருக்கிறதாம்! மேலும் அலுமினிஞ்சை மருத்துவர்களால் கண்டுபிடிப்பது பெரும் சவாலாக இருப்பதை அனுபவமாக உணர்ந்திருக்கிறார்கள். வயிற்றுவலி என மருத்துவரிடம் போவீர்கள். ஆனால் அலுமினியத்தால் வரும் விளைவு இது என அவர்களுக்கு தோன்றாது. கோட்டட் அலுமினியம் என ஒருவகை அலுமினியம் உள்ளது. இதில் அதிக அளவு லீக் ஆகாது என்கிறார்கள். அன்கோட்டட் அலுமினியத்தில் லீக் அதிகம். அதுவும் ஆசிட் நிரம்பிய தக்காளி முதலிய உணவுகளை சமைத்தால் அலுமினியம் அதிக அளவில் லீக் ஆகும். ஆனால் கோட்டட் எது, அன்கோட்டட் எது என எப்படி கண்டுபிடிப்பது? உடலில் அலுமினியம் தேங்க இன்னொரு வழி டியோடரண்ட் போடுவது. டியோடரண்ட் தொடர்ந்து போட்டால் உடலில் அலுமினியம் அதிக அளவில் தங்கும். இது மார்புப் புற்றுநோய் முதல் பல வியாதிகளை வரவழைக்கும். வயிற்றில் போவதை நிறுத்த உண்ணும் மருந்துகள், ஆசிட் ரிப்ளக்சை குறைக்க உண்ணும் அல்கா செல்ட்சர் முதலான அன்டாசிடுகள், பல உணவுகளில் பயன்படுத்தும் பிரசர் வேடிவ்கள் (உதா: கல்சியம் அலுமினியம் சிலிகேட்) முதலானவற்றில் அலுமினியம் உள்ளது. இவற்றை தொடர்ந்து உண்பதும் ஆபத்தே! மற்றபடி இன்றைய அலுமினிய பாத்திரங்கள் மிக தரமானவை, லீக் ஆகாது எனவும் கூறுகிறார்கள். ஆனால் தொடர்ந்து அவற்றிலேயே வருடக் கணக்கில் சமைத்து, அதிக வெப்பத்தில் சமைத்தும் வந்தால் அவை ஆபத்தானவையாக மாறும் அபாயம் உண்டு. உங்கள் வீட்டு அலுமினிய பாத்திரங்களின் உள்ளே பாருங்கள். அலுமினியம் கரைந்து இருப்பது போல் தோன்றினால் தூக்கி போட்டு விடுங்கள். உங்கள் சமையலறையை விட்டு அலுமினியம் வெளியேறட்டும். - See more at: http://malarum.com/article/tam/2014/03/28/841/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html#sthash.rtszjdVb.dpuf

Read more: http://malarum.com/article/tam/2014/03/28/841/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html

Follow us: @malarumdotcom on Twitter | malarumdotcom on Facebook
© Copyright 2014 malarum.com
இன்று உலகம் முழுவதும் உள்ள உணவகங்களில் அலுமினிய பாத்திரங்களில்தான் சமைக்கிறார்கள். அலுமினிய சமையல் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என்பதை 60 ஆண்டுகளாக ஆராய்ச்சி மூலம் கண்டறிந்திருக்கிறார்கள். அலுமினியம் எளிதில் லீக் ஆகி உணவில் கலந்து வயிற்றுக்குள் சென்று விடும். உடலுக்கு அலுமினியத்தை வைத்து என்ன செய்வது என தெரிவது இல்லை. அதை வெளியேற்றவும் முடிவது இல்லை. முக்கியமாக உடலின் துப்புரவுத் தொழிற்சாலை எனப்படும் சிறுநீரக்கத்தில் கொஞ்சம் கொஞ்சமாக படியும் அலுமீனியம், அங்கே உலகின் மிக மெல்லிய மெமரண்ஸ் வடியகட்டியகாளக இருக்கும் ‘கிளாமருல்லாஸ்’ அமைப்பை ஓட்டைபோட்டுவிடும் படுபயங்கர உண்மையை கனடா மருத்துவ விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள். அலுமினியம் உணவுடன் உள்ளே செல்கிறது என்பதை உங்களால் நம்பமுடியவில்லையா? உங்கள் வீட்டில் அலுமினிய பாத்திரம் இருந்தால் அதன் உள்ளே பாருங்கள். சுரண்டியது போல் இருக்கும். மீதம் உள்ள அலுமினியம் எங்கே? உங்கள் உணவின் மூலம் உடலுக்குள் சென்று விட்டது என்று அர்த்தம். இரண்டில் ஒருவருக்கு அலுமினியம் ஒத்துக்கொள்ளாது. அல்சர் முதல் வயிற்றுவலி, தலைவலி வரை தெரிந்த நோய்களும் விநோத நோய்களும் ஏன் மனநோயும் கூட வரலாம் என்கிறது இந்த ஆராய்ச்சி. காரணம் அலுமீனியத் தாதுக்கள் ரத்தில் பயணித்து மூளைத்திசுக்களில் படிந்துவிடும் ஆபத்தும் இருக்கிறதாம்! மேலும் அலுமினிஞ்சை மருத்துவர்களால் கண்டுபிடிப்பது பெரும் சவாலாக இருப்பதை அனுபவமாக உணர்ந்திருக்கிறார்கள். வயிற்றுவலி என மருத்துவரிடம் போவீர்கள். ஆனால் அலுமினியத்தால் வரும் விளைவு இது என அவர்களுக்கு தோன்றாது. கோட்டட் அலுமினியம் என ஒருவகை அலுமினியம் உள்ளது. இதில் அதிக அளவு லீக் ஆகாது என்கிறார்கள். அன்கோட்டட் அலுமினியத்தில் லீக் அதிகம். அதுவும் ஆசிட் நிரம்பிய தக்காளி முதலிய உணவுகளை சமைத்தால் அலுமினியம் அதிக அளவில் லீக் ஆகும். ஆனால் கோட்டட் எது, அன்கோட்டட் எது என எப்படி கண்டுபிடிப்பது? உடலில் அலுமினியம் தேங்க இன்னொரு வழி டியோடரண்ட் போடுவது. டியோடரண்ட் தொடர்ந்து போட்டால் உடலில் அலுமினியம் அதிக அளவில் தங்கும். இது மார்புப் புற்றுநோய் முதல் பல வியாதிகளை வரவழைக்கும். வயிற்றில் போவதை நிறுத்த உண்ணும் மருந்துகள், ஆசிட் ரிப்ளக்சை குறைக்க உண்ணும் அல்கா செல்ட்சர் முதலான அன்டாசிடுகள், பல உணவுகளில் பயன்படுத்தும் பிரசர் வேடிவ்கள் (உதா: கல்சியம் அலுமினியம் சிலிகேட்) முதலானவற்றில் அலுமினியம் உள்ளது. இவற்றை தொடர்ந்து உண்பதும் ஆபத்தே! மற்றபடி இன்றைய அலுமினிய பாத்திரங்கள் மிக தரமானவை, லீக் ஆகாது எனவும் கூறுகிறார்கள். ஆனால் தொடர்ந்து அவற்றிலேயே வருடக் கணக்கில் சமைத்து, அதிக வெப்பத்தில் சமைத்தும் வந்தால் அவை ஆபத்தானவையாக மாறும் அபாயம் உண்டு. உங்கள் வீட்டு அலுமினிய பாத்திரங்களின் உள்ளே பாருங்கள். அலுமினியம் கரைந்து இருப்பது போல் தோன்றினால் தூக்கி போட்டு விடுங்கள். உங்கள் சமையலறையை விட்டு அலுமினியம் வெளியேறட்டும். - See more at: http://malarum.com/article/tam/2014/03/28/841/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html#sthash.rtszjdVb.dpuf

Read more: http://malarum.com/article/tam/2014/03/28/841/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html

Follow us: @malarumdotcom on Twitter | malarumdotcom on Facebook
© Copyright 2014 malarum.com

நிலக்கடலை மூலிகைதாங்க....

மரியாதைக்குரியவர்களே,
 வணக்க
வேர்கடலை கொழுப்பு அல்ல ...!
ஒரு மூலிகை…!!

நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் இந்தியாமுழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பிவிடப்பட்டுள்ளது.
நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக் காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம் . நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம்.
நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் கர்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியம். எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும். தினமும் பெண்கள் எடுத்துக் கொண்டால் மகப்பேறு நன்றாக இருக்கும். கருவின் மூளை மற்றும் நரம்பு வளர்ச்சி சிறப்பாக அமையும். கருத்தரிப்பதற்கு முன்பே உண்பது மிக மிக உத்தமம். இல்லையேல் கருவுற்ற பின்னும் எடுத்துக் கொள்ளலாம்.
நீரழிவு நோயை தடுக்கும்:
நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது.மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது . நாம் உண்ணும்உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
பித்தப் பை கல்லைக் கரைக்கும்:

நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 வருடம் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.
இதயம் காக்கும்:
நிலக் கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்துநிறைந்துள்ளது . இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும்தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது.
இளமையை பராமரிக்கும்
இது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது.நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது.
ஞாபக சக்தி அதிகரிக்கும்:
நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது மூளைவளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.
மன அழுத்தம் போக்கும்:
நிலக்கடையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட் டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும்.உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது.செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டுகிறது.மனஅழுத்தத்தை போக்குகிறது. நிலக்கடைலையை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது
.
கொழுப்பை குறைக்கும்
:
தலைப்பை படிப்பவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம்.ஆனால் அதுதான் உண்மை. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்று நம்மில் பலரும்நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை.மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில்உள்ளது. நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. 100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம்மோனோ அன் சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது. பாலிஅன்சாச்சுரேட்டேடு 16கிராம் உள்ளது.

இந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மைசெய்யும் கொழுப்பாகும். பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
அமெரிக்கர்களை கவர்ந்த நிலக்கடலை:

உலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில்தான் நிலக்கடலை அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது.இவ்விரு நாடுகளின் மக்கள்பெருக்கத்திற்கும் நிலக்கடலை முக்கிய காரணமாகும். இந்தியாவில் குழந்தைப் பேறுக்கான மருந்துகளின் விற்பனைவாய்ப்புக்கு நிலக்கடலை உண்ணும் வழக்கம் தடையாக இருக்கிறது மற்றும் சில இதய நோய்க்கான மருந்துகளை விற்பனை செய்ய முடியவில்லை. எனவே இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்களை பரப்பி நிலக்கடலை மற்றும் நிலக்கடலைஎண்ணெய் வகைகளை பயன்படுத்துவதை தடுத்துவிட்டார்கள். இதன் காரணமாக குழந்தையில்லாத தம்பதிகள் பெருகிவிட்டார்கள்.
கடந்த 20 வருடமாக இந்தியாவில் நிலக்கடலையின் விலை பெரியமாற்றம் ஏதும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இதே கால கட்டத்தில் அமெரிக்கர்களின் உணவில்நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன் விலையும் கூடிஇருக்கிறது. இந்தியர்கள் அனைவரும் நிலக்கடலை சாப்பிட ஆரம்பித்தால் அமெரிக்கர்கள்நிலக்கடலை அதிகம் விலை கொடுத்து சாப்பிட வேண்டும் என்று கருதிதான் இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது.
கருப்பை கோளாறுக்கு முற்றுப்புள்ளி:
பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறு ஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதையும் தடுக்கிறது.பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம்,பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம்,இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது. இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.
நிறைந்துள்ள சத்துக்கள்:
100கிராம் நிலக்கடலையில் கீழ்க்கண்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.
கார்போஹைட்ரேட்- 21 மி.கி.
நார்சத்து- 9 மி.கி.
கரையும்(நல்ல HDL) கொழுப்பு – 40 மி.கி.
புரதம்- 25 மி.கி.
ட்ரிப்டோபான்- 0.24 கி.
திரியோனின் – 0.85 கி
ஐசோலூசின் – 0.85 மி.கி.
லூசின் – 1.625 மி.கி.
லைசின் – 0.901 கி
குலுட்டாமிக் ஆசிட்- 5 கி
கிளைசின்- 1.512 கி
விட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி
கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) – 93.00 மி.கி.
காப்பர் – 11.44 மி.கி.
இரும்புச்சத்து – 4.58 மி.கி.
மெக்னீசியம் – 168.00 மி.கி.
மேங்கனீஸ் – 1.934 மி.கி.
பாஸ்பரஸ் – 376.00 மி.கி.
பொட்டாசியம் – 705.00 மி.கி.
சோடியம் – 18.00 மி.கி.
துத்தநாகச்சத்து – 3.27 மி.கி.
தண்ணீர்ச்சத்து – 6.50 கிராம்.
போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. போலிக் ஆசிட் சத்துக்களும் நிரம்பி உள்ளது.

பாதாம், பிஸ்தாவை விட சிறந்தது:
நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா,முந்திரிப்பருப்புகளில்தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில் தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோய்எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு
ம்.

படர் தாமரையா?????

மரியாதைக்குரியவர்களே,
          வணக்கம். மனிதனுக்கு வரும் வியாதிகளில் படர்தாமரையும் ஒன்று.படர்தாமரையை குணமாக்க இதோ மருத்துவமுறை...
படர்தாமரையை குணப்படுத்தும் இயற்கை வைத்தியம் :-
                    அதிகமாக வெயில் காலங்களில் வரும் தோல் அரிப்பு நோய்களில் ஒன்று தான் படர்தாமரை. 
              பூஞ்சையினால் ஏற்படும் படர்தாமரை உங்களது சருமத்தில் அழற்சி போன்று வட்ட வடிவில் சிவப்பாக இருக்கும். இது சருமம், நகம், ஸ்கால்ப், உள்ளங்கை அல்லது பாதங்களில் தான் அதிகம் ஏற்படும்.
கடுமையான அரிப்புகளை ஏற்படுத்துவதுடன் பிறருக்கு எளிதில் பரவக்கூடியது. எனவே உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

1. பூண்டை அரைத்து சாறு எடுத்து அதனை படர்தாமரை உள்ள இடங்களில் தடவி வந்தால் நிவாரணம் பெறலாம்.

2. படர்தாமரை உள்ள இடத்தில் தேங்காய் எண்ணெயை தடவி வர படர்தாமரை நீங்குவதோடு பரவுவதும் தடுக்கப்படும்.

3. கடுகு அல்லது அதன் எண்ணெயை அல்லது ஆலிவ் எண்ணெயை தடவி வந்தாலும் படர்தாமரை மறையும்.

4. ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் கற்பூரத்தில் பூஞ்சை எதிர்ப்பு பொருள் இருப்பதால் படர்தாமரைக்கு விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

5. மஞ்சள் தூள் பூஞ்சையின் தாக்குதல்களை தடுக்கும் வல்லமை படைத்தது. இதனை தடவி வந்தால் படர்தாமரை நீங்கும்.

மருதாணியின் மருத்துவக்குணங்கள்..

மரியாதைக்குரியவர்களே,
            வணக்கம். மருதாணி இலையின் பயன் பற்றி அறிந்துகொள்வோம்..
 
மருதாணியின் பயன்கள்
உடல் வெப்பம் தணிய.
            மருதாணி இலையை அரைத்து கைககளுக்கு வைத்து வர, உடல்வெப்பம் தணியும்.

 மருதாணியால் சளியா?
                  சிலருக்கு மருதாணி இட்டுக் கொண்டால் சளி பிடித்து விடும்.இதற்கு மருதாணி இலைகளை அரைக்கும் போது கூடவே 7அல்லது 8 நொச்சி இலைகளை சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளலாம்.

          மருதாணி இட்டுக் கொள்வதால் நகங்களுக்கு எந்த நோயும்வராமல் பாதுகாக்கலாம். ஆனால் இந்த பயன்கள் எல்லாம் தற்போது கடைகளில் கிடைக்கும் மருதாணி கோன்களில் கிடைக்கவாய்ப்பே இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

கருந்தேமல்..
                 சிலருக்கு கழுத்திலும், முகத்திலும் கருந்தேமல் காணப்படும்.இதற்கு நல்ல கை மருத்துவம் உள்ளது.
மருதாணி இலையுடன் சிறிது குளியல் சோப்பைச் சேர்த்துஅரைத்து பூசி வர விரைவில் கருந்தேமல் மறையும்.
மருதாணி இலை கிருமி நாசினி, கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்க வல்லது. நகசுத்தி வராமல் தடுக்கும்.புண்ணை ஆற்றவும் நல்ல மருந்து. கை, கால், விரல் நகங்களுக்கு அரைத்துப் பூசி அழகூட்டுவார்கள்.

தோல் நோய்
            தோல் பற்றிய அரிப்பு, படை ஆகிய நோய்களுக்கு, இந்த இலையை அரிசிச் சோற்றுடன் இரவு ஊறப் போட்டக் காலை வெறும் வயிற்றில் நீராகாரமாகச் சாப்பிட வேண்டும். உப்பில்லாத பத்தியம் இருத்தல் வேண்டும். 10 - 15 நாள் சாப்பிட வேண்டும்.


புண்கள்
                ஆறாத வாய்ப் புண், அம்மைப் புண் ஆகியவற்றிற்கு இதன் இலையை அரைத்து நீரில் கரைத்து வடித்து வாய் கொப்பளிக்கலாம். அரைத்து அம்மைப் புண்களுக்குப் பூசலாம். 3-5 நாளில் குணமாகும். கட்டிகளுக்கும் அரைத்துப்பற்றிடலாம்.


முடிவளர
              இதன் தைலம் முடி வளர்க்கும் இள நரையை அகற்றும்.இரும்பு வாணலியில் தேங்காய் நெய் 500 மி.லி. விட்டு இதன் இலை 100 கிராம் போட்டு பொரித்து எடுக்கவும். இலையின் சாறு எண்ணெயில் சேர்த்து சிவப்பாக மாறிவிடும். நறுமணத்திறுகாக 10 கிராம் சந்தனத் தூள் போடலாம். அரைத்துப் போட்டுக் காய்ச்சலாம். இந்த தைலத்தை நாளும் தலைக்குத் தேய்க்க முடி வளரும் நரைமாறும்.


தூக்கமின்மை
                தூக்கமின்மைக்குத் தூக்க மாத்திரை சாப்பிடுதல் கூடாது. அது நரம்புத் தளர்ச்சியை உண்டாக்கும். மருதாணிப் பூவினை ஒரு துணியில் சுற்றி, தலைமாட்டில் வைத்துப் படுத்தால் தூக்கம் வரும். பூவின் மணம் தூக்கத்தை வரவழைக்கும். ஒருசிலருக்கு இம்மணம் தலைவலியை உண்டாக்கும்.


கால் ஆணி
            உள்ளங்காலில் ஆணி ஏற்பட்டிருந்தால் மருதாணி இலையுடன் சிறிது வசம்பு, மஞ்சள் கற்பூரம் சேர்த்து அரைத்து, ஆணிஉள்ள இடத்தில் தொடர்ந்து கட்டி வர ஒரு வாரத்தில்குணமாகும்.


படைகள்
                 கரும்படை, வண்ணான் படை கால் இடுக்கிலும், இடுப்பிலும், கழுத்து, கை இடுக்கிலும் வரும். இதற்கு ஒரு பிடி மருதாணி இலையுடன் 5 கிராம் 501 பார் கதர் சோப்புவைத்து அரைத்துக் களிம்பு போல தடவி வந்தால் கரும்படை யாவும் சுகமடையும். 10 -15 நாள் பூச வேண்டும். வண்டு கடிக்கும் சொறி, சிரங்கிற்கும் இதனைப் பூச்சு மருந்தாகப் பயன்படுத்தலாம்.


இளநரையை போக்கும் மருதாணி
             இன்றைய இளைஞர்களுக்கு உள்ள ஒருசில பிரச்னைகளில் இளநரையும் ஒன்று. இதற்கு மருதாணியைக் கொண்டு இயற்கை முறையில் எளிதாகத் தீர்வு காணலாம்.
மருதாணி இலை அரைத்து அதன் விழுதை ஒரு கப்பில் எடுத்து வைத்துக் கொள்ளவும். அத்துடன் எலுமிச்சம்பழச்சாறு, 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 2 ஸ்பூன் நெல்லி முல்லி பொடி ஆகியவற்றை, ஒரு கப் தயிருடன் கலந்து கொள்ளுங்கள்.இந்த கலவையை இரவு முழுவதும் ஒரு பாத்திரத்தில் மூடி வைத்துவிட வேண்டும். பின்னர், இதனை காலையில் எழுந்து தலை முடியில் தேய்த்துக் கொள்ள வேண்டும்.
சுமார் ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம் வரை காய வைத்துவிட்டு, பின்னர் சீயக்காய் தேய்த்து குளிக்க வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், தலையில் உள்ள இளநரை மறைந்துவிடும்

உணவு உண்ணும்போது கவனத்தில் கொள்ளுங்க...

மரியாதைக்குரியவர்களே,
         வணக்கம். உணவு உண்ணும்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் பற்றி காண்போம்.

அளவிற்கு அதிகமாக உண்டால் நோய்வரும் ஆயுள் குறையும்.
எனவே வயிறு புடைக்க மூச்சு முட்ட உண்ணக் கூடாது.
பசிக்கும்போது தான் சாப்பிட வேண்டும்.
மிளகு சேர்ப்பதால் உணவில் உள்ள விஷம் நீங்குகிறது.
உடலில் உள்ள விஷமும் முறிகிறது.
உணவில் சீரகம் சேர்ப்பதால் உடம்பை சீராக வைப்பது மட்டும் அல்லாமல் குளிர்ச்சியை தருகிறது.
வெந்தயம் உஷ்ணத்தைக் குறைக்கிறது.
வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் தண்ணீருடன் பருகி வந்தால் உடம்பில் உள்ள உஷ்ணத்தை குறைக்கிறது.
கடுகு, உடலில் உள்ள உஷ்ணத்தை ஒரே அளவாக வைக்கிறது.
இஞ்சியை உணவில் சேர்ப்பதால் பித்தம், தலை சுற்றல், வாந்தி போன்ற கோளாறுகள் வருவதில்லை.
உணவு உண்பதற்கு முன்பு கை, கால், வாய், போன்றவற்றை நீரால் கழுவவேண்டும்.
காலில் ஈரம் உலர்வதற்கு
முன்பே உணவு உண்ணத்தொடங்க
வேண்டும்.

உணவு உண்ணும்போது பேச க்கூடாது,
படிக்கக் கூடாது,

இடது கையை கீழே
ஊணக் கூடாது.

டி.வி பார்க்கக்கூடாது.
வீட்டில் கதவை திறந்து வைத்துக் கொண்டுவாசலுக்கு எதிரே அமர்ந்து உண்ணக் கூடாது.
காலணி அணிந்துகொண்டு உண்ணக் கூடாது.
சூரிய உதயத்திலும், மறையும் பொழுதும் உண்ணக் கூடாது.
உணவு உண்ணு ம்போது உண்பதில் கவனமாக
இருக்கவேண்டும்.

இருட்டிலோ, நிழல்படும் இடங்களிலோ உண்ணக்கூடாது.
சாப்பிடும்பொழுது நடுவில் எழுந்து சென்று மீண்டும் வந்து சாப்பிடக் கூடாது.
நின்றுகொண்டு சாப்பிக்கூடாது.
அதிக கோபத்துடன் உணவு உண்ணக்கூடாது.
சாப்பிடும்போது தட்டினைக் கையில் எடுத்துக் கொண்டு உண்ணக்கூடாது.
தட்டை மடியில் வைத்துக் கொண்டும், படுத்துக் கொண்டும் உண்ணக்கூடாது.
இலையைத்துடை த்து வழித்துச் சாப்பிடுவதும், விரலில் ஒட்டிக் உள்ளதை சப்பிச் சாப்பிடுவதும்
தரித்திரத்தை வளர்க்கும்.

ஒரே நேரத்தில் பல வித பழங்க ளைச் சாப்பிடக் கூடாது.
எள்ளில் தயாரித்த உணவை இரவில் உண்ணக் கூடாது.
வெங்கலம், அலுமினியம்
மற்றும் செம்பு பாத்திரங்களில் சமையல் செய்யக் கூடாது.

புரச இலையில் சாப்பிட்டால் புத்தி வளரும்.
வெள்ளித் தட்டில் சாப்பிட்டால் நல்ல அழகு, அறிவு, மன ஒருமைப்பாடு, குடும்ப ஒற்றுமை கிடைக்கும்.
நாம் சாப்பிட்ட தட்டுக்களை வைத்து சாப்பாட்டையோ அல்லது மற்ற உணவு
பதார்த்தங்களையோ மூடி வைக்கக் கூடாது.

இரவில் இஞ்சி, கீரை, பாகற்காய், கஞ்சி, தயிர், நெல் லிக்காய் ஆகியவற்றை சேர்க் கக் கூடாது.
உண்ணும் தட்டில் அல்லது இலையில் முதலில் காய்கறிகளோ, அப்பளமோ உப்போ பரிமாறாமல்
சாதத்தை பரிமாறக்கூடாது.

அதே போல முதலில் கீரையோ, வத்தலோ இலையில் வைக்கக் கூடாது.
அசுப காரியத்தில் மட்டுமே பயன்படுத்துவர்.
மேற்கண்ட நடைமுறைகளை கடை பிடிப்பது சிறப்பைத்தரும்.

இருபது ரூபாய் டாக்டர்...

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். இதோ படியுங்க..இருபது ரூபாய் டாக்டர் பற்றி தெரிந்துகொள்ளுங்க..
 
இன்று இந்த பதிவை படித்து விட்டு, பிரிஸ்கிரிப்சன்
ரிஸிப்ட்டில் குறிப்பிட்டிருக்கும் அவரது செல்லில்
அழைத்து, "எனது சந்தேகங்கள் சிலவற்றுக்கு விளக்கம்
கேட்கலாமா? நீங்க பிசியா ப்ரீயா" என்றபோது "தாராளமா
கேளுங்க" என்றார். போனில் பேசக்கூட தயங்கும் டாக்டர்கள்
உலகில், எல்லா விபரமும் சொல்லிவிட்டு, "சந்தேகமிருந்தா
திரும்ப கூப்பிடுங்க!" என்றார். நோயை பார்க்கின் அசராமல்
கல்லாக்கட்டும் இவ்வுலகில், இந்த டாக்டர் ரொம்பவே வித்தியாசமானவர்.
-------
கோவை ஆவாரம் பாளையம் போகும் வழியில்
ராமகிருஷ்ணா கல்லூரி எதிரில் ஒரு சிறிய கிளீனிக். .

வழி தெரியாவிட்டால் "இருபது ரூபாய்" டாக்டர் கிளீனிக்
எங்க இருக்குங்க" என்று கேட்டால் போதும். . அனைவரும்
வழி காட்டுவார்கள். .

சாதாரண காய்ச்சல் என்று போனாலே ஆயிரக்கணக்கில்
புடுங்கும் ஆஸ்பத்திகளுக்கு மத்தியில். . என்ன வியாதியாக இருந்தாலும். .அதற்கு தகுந்த ஆலோசனை. . கொடுத்து
குறைவான விலையுள்ள மருந்துகளை எழுதி கொடுத்து
ஊசி (தேவைபட்டால்) போடுவார். அவ்வளவுதான். இதற்கு
அவர் வாங்கும் பணமே இருபது ரூபாய் தான். . அதுவும்
பதினைந்து ரூபாய் வாங்கிக் கொண்டு இருந்தவர். சில்லரை தட்டுப்பாட்டால் நோயாளிகள் கேட்டுக்கொண்டதற்க்கு
இணங்க இருபது ரூபாய் வாங்குகிறார். .

சில வியாதிகளுக்கு நாட்டு மருந்து, அயுர்வேதம் தான்
சிறந்தது என யோசித்தால் அதையும் அவரே கூறி அந்த
அந்த மருத்துவர் பெயரை பரிந்துரை செய்து சீட்டு
எழுதியும் கொடுப்பார். .

"சீட்டை காட்டுங்க காசு கம்மியா வாங்குவாங்க புரியுதா"
என அதட்டுவதை கேட்க நன்றாக இருக்கும். .

முதல் முதலாக கேள்விபட்டதும் நான் நம்பவேயில்லை. .
பிறகு போய் பார்த்தேன். இதுவரை மூன்று முறை
சென்றுள்ளேன். . அதில் கல் அடைப்பு பிரச்சனைக்கு ஒரு
முறை போய் பார்த்தேன். .

"தம்பி இதுக்கு நாட்டு மருந்து தான் கரெக்ட்டு" என்று ஒரு
சீட்டை எடுத்து எழுதி எந்த பஸ்ஸில் ஏற வேண்டும் இறங்கும்
இடம். . சில அடையாளங்கள் என குழந்தைக்கு கூறுவதை
போல் கூறி, "பாத்துட்டு என்னானு போன் பண்ணி சொல்லு
புரியுதா?" என்பார்.

மிகவும் வயதானவர்களை வீட்டிலேயே வந்து பார்பார். .
வியாபாரமாகி போன இந்த மருத்துவ உலகில் சேவை மனப்பான்மையுள்ள சிலரில் இந்த "இருபது ரூபாய்"
டாக்டரும் ஒருவர்.

டிரஸ்ட் மருத்துவமனை ஈரோடு


மரியாதைக்குரியவர்களே,
        வணக்கம்.ஈரோடு  டிரஸ்ட் மருத்துவமனை என்னும் கூட்டுறவு மருத்துவமனைபற்றி அறிந்துகொள்ள ஆவலா?இதோ தங்களது ஆர்வத்திற்கு............













தெரு விளக்கு
"பணக்காரர்களுக்கு கார்ப்பரேட் மருத்துவமனைகள் இருக்கின்றன. ஏழைகளுக்கு அரசு மருத்துவமனைகள் இருக்கின்றன. இடையில் உள்ள மிடில் கிளாஸ் மக்கள் இரண்டுக்கும் இடையில் சிக்கித் தவிக்கின்றனர். அரசு மருத்துவமனைக்குச் செல்வதற்கு அவர்களின் கௌரவம் தடுக்கிறது. கடன் வாங்கி, சொத்துக்களை விற்று கார்ப்பரேட் மருத்துவமனைக்குப் போனால், அங்கே இருப்பதையும் இழக்க வேண்டியிருக்கிறது. இதற்கான மாற்றாக உருவானதுதான் டிரஸ்ட் ஹாஸ்பிடல். இது மக்கள் மருத்துவமனை!'' - மென்மையான குரலில் பேசுகிறார் மருத்துவர் ஜீவானந்தம். ஈரோட்டில் 'டிரஸ்ட் ஹாஸ்பிடல்’ என்ற கூட்டுறவு மருத்துவமனைக்கான விதை விதைத்தவர்.
ஊழலும் கொள்ளையும் மிகுந்துவிட்ட இன்றைய தனியார் மருத்துவத் துறையில் இவர் நிகழ்த்தியிருப்பது ஒரு சாதனை. பணமும் மனமும் உள்ள நல்லவர்களிடம் ஆளுக்கு ஒரு லட்சம், இரண்டு லட்சம் எனப் பணம் வாங்கி, ஈரோட்டில் உருவான டிரஸ்ட் ஹாஸ்பிடல், இன்று இன்னும் பல ஊர்களிலும் கிளைவிடத் துவங்கியுள்ளது. ''இதற்குத் தனிப்பட்ட உரிமையாளர் என யாரும் இல்லை. பணம் போட்ட அனைவருமே உரிமையாளர்கள்தான். மக்கள் பங்கேற்புடன் ஒரு விஷயம் நடக்கும்போது, ஒவ்வொரு செயலுக்கும் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு இருக்கிறது. இது இலவச மருத்துவமனை அல்ல. மருந்து, மாத்திரை, கட்டில், ஸ்கேன் என அனைத்துக்கும் கட்டணம் உண்டு. ஆனால், மிக மிகக் குறைவாக இருக்கும். வெளியில் 500 ரூபாய் என்றால், நாங்கள் 250 ரூபாய். குறைந்த லாபம், அதிக மக்களுக்கான சேவை... இதுதான் எங்கள் நோக்கம்!'' என்று எளிமையாகப் பேசுகிறார் மருத்துவர்.
''அந்தக் காலத்தில் நான் எம்.பி.பி.எஸ். படித்தபோது ஒரு வருட ஃபீஸ், 1,200 ரூபாய்தான். ஆனால், இப்போது தனியார் மருத்துவக்கல்லூரி களில் எம்.பி.பி.எஸ். சீட் ஒன்றுக்கு 70 லட்சம், 1 கோடி. நான் 3,000 ரூபாய் செலவில் படித்த அனஸ்தீஸியாவை இப்போது படிக்க 1 கோடி ரூபாய் வேண்டும். காலம் மாறியிருக்கிறது, விலைவாசி ஏறியிருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், இது மலைக்கவைக்கும் ஏற்றம் இல்லையா? அன்று 5,000 சம்பாதித்த யாரும் இன்று 50 லட்சம் சம்பாதிக்கவில்லை. 50 ஆயிரம், அதிகபட்சம் 1 லட்சம் சம்பாதிக்கலாம். ஆனால், மருத்துவப் படிப்பு மட்டும் கோடிகளில் மாறிஇருக்க என்ன காரணம்? முழுக்க முழுக்க கார்ப்பரேட் மருத்துவமனைகளின் கொள்ளை.
மருத்துவர்களின் கிளினிக்கும் உள்ளூரில் சிறு சிறு அளவில் தனியார் மருத்துவமனைகளும் இயங்கிய காலம் வரை மனிதாபிமானம் இருந்தது. அப்போது பெரும்பாலும் சொந்த ஊர்க்காரர்கள், தெரிந்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள் என்றுதான் வருவார்கள். மருத்துவருக்கும் நோயாளிக்குமான உறவு என்பது பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு நெருக்கமானதாக இருக்கும். கிளினிக் வைத்திருக்கும் டாக்டர் பிறகு ஹாஸ்பிடல் கட்டினால்கூட, அவரது பெயர்தான் மக்களுக்கு ஞாபகம் இருக்குமே தவிர, மருத்துவமனை நினைவில் இருக்காது. அந்த அளவுக்கு அந்த உறவில் ஒரு நெகிழ்ச்சி இருக்கும். இல்லாத நோயைச் சொல்லி கொள்ளை அடிப்பது இல்லை. இறந்தவர்களுக்கு மருத்துவம் பார்த்துப் பணம் பிடுங்குவதும் இல்லை. ஆனால், இன்றைய கார்ப்பரேட் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்குப் பெயர்கள் இல்லை. நம்பர்கள் மட்டும்தான். அங்கு மனிதர்கள் பேசுவது இல்லை. கம்ப்யூட்டர் மட்டுமே பேசுகிறது. மனிதாபிமானத்துக்கும் மருத்துவமனைகளுக்கும் தொடர்பு இல்லாமல் போய்விட்டது.
இந்த சீர்கெட்ட நிலை என் மனதை அரித்தது. ஏதாவது செய்ய வேண்டும் என ஆசைப்பட்டபோதுதான் நாங்கள் ஏற்கெனவே செயல்படுத்திய கூட்டுறவு முறை கை கொடுத்தது.
1980-ம் ஆண்டுகளில் நான் மருத்துவம் முடித்து ஈரோட்டில் பிராக்டீஸ் செய்ய ஆரம்பித்திருந்த நாட்களில், வசதியான நண்பர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களிடம் பணம் இருந்தது. என்னிடம் ஆர்வமும் திட்டமும் இருந்தது. ஆகவே, அதைவைத்து ஏதாவது செய்ய வேண்டும் என விரும்பினோம். அப்போது மெட்ரிக் பள்ளிகள் ஒரு சூறாவளியைப்போல எங்கும் முளைத்திருந்த நேரம். குறைவான ஃபீஸ் வாங்கிக்கொண்டு தரமான கல்வியை வழங்கும் நோக்கத்தில், 20 பேர் ஆளுக்கு 5,000 ரூபாய் போட்டு, ஒரு தனியார் மெட்ரிக் பள்ளியை ஆரம்பித்தோம். இப்போதும் ஈரோட்டில் வாடகை இடத்தில் மற்ற பள்ளிகளைவிட குறைவான கட்டணத்துடன் அந்தப் பள்ளி வெற்றிகரமாக இயங்கிவருகிறது. இதே அடிப்படையில் உருவாக்கப்பட்டதுதான் கூட்டுறவு மருத்துவமனைத் திட்டம்.
கேரளாவின் கொச்சின் நகரத்தில் இப்படிப்பட்ட கூட்டுறவு மருத்துவமனைகள் இயங்குகின்றன. அவற்றை நேரில் சென்று பார்வையிட்டபோது, கூட்டுறவு என்ற நல்ல வழிமுறை, அரசு அதிகாரிகளின் தலையீட்டால் லஞ்ச லாவண்யத்தில் சிக்கிச் சீரழி வதைக் கண்டோம். அதனால், கூட்டுறவு என்ற வார்த்தையைத் தவிர்த்து விட்டு, டிரஸ்ட் ஹாஸ்பிடல் என்று துவங் கினோம். 25 மருத்துவர்கள், 25 பொதுமக்கள், ஒரு நபருக்கு மூன்று லட்ச ரூபாய் முதலீடு. இதில் 50 ஆயிரம் டிரஸ்ட்டுக்குச் சேர்ந்துவிடும். மீதம் உள்ள 2.5 லட்ச ரூபாய் வட்டியுடன் திருப்பித் தரப்படும். இப்படி 1.5 கோடி ரூபாய் சேர்ந்தது. மேலும் 3 கோடி ரூபாய் வங்கியில் கடன் பெற்று, 4.5 கோடி ரூபாய் முதலீட்டில் 2001-ம் ஆண்டில் இந்த மருத்துவமனை உருவானது.
இங்கு அனைத்துவிதமான நடைமுறை களும் வெளிப்படையாக நடைபெறும். மருந்துப் பொருட்களின் விலை, சிகிச்சைக்கான செலவு, ஆக்ஸிஜன் வைத்தால் எவ்வளவு, செயற்கை சுவாசத்துக்கு எவ்வளவு, ஸ்கேனிங், அறை வாடகை, மருத்துவர்களுக்கான கன்சல்டிங் ஃபீஸ்... அனைத்துமே அறிவிப்புப் பலகையில் இருக்கும். எதுவும் மறைமுகம் இல்லை. மருந்து, மாத்திரைகளை மக்களே வாங்கி வரலாம். முடிந்து திரும்பச் செல்லும்போது மீதம் இருக்கும் மருந்து, மாத்திரைகளைக் கொடுத்து பணம் வாங்கிக்கொள்ளலாம். கட்டணத்தையும் முடிந்த வரை குறைவாகவே நிர்ணயிக்கிறோம். ஜெனரல் வார்டு பெட்டில் சேர்ந்து ஒரு நாள் சிகிச்சை பெற, மருத்துவரின் ஆலோசனையும் சேர்த்து நாங்கள் வாங்குவது 150 ரூபாய். இது அரசு மருத்துவமனையில் கம்பவுண்டருக்குக் கொடுக்கும் லஞ்சத்துக்குச் சமம். இப்படிப் பல மருந்துப் பொருட்களை மிகக் குறைவான லாபத்துக்குத்தான் தருகிறோம்.
ஆனால், மருத்துவ உலகில் 300 சதவிகிதம், 400 சதவிகிதம் லாபம் வைத்துத்தான் மருந்துகள் விற்கப்படுகின்றன. உதாரணத்துக்கு ஒன்று சொல்கிறேன். உயிர் காக்கும் மருந்தான ஹீமோ தெரபிக்குப் பயன்படும் ஊசி மருந்து 900 ரூபாய்க்கு வருகிறது. நாங்கள் அதை 1,300 ரூபாய்க்குத் தருகிறோம். ஆனால், அதில் இருக்கும் எம்.ஆர்.பி. விலை 3,700 ரூபாய். பல இடங்களில் இந்த விலைக்குத்தான் விற்பனை செய்கின்றனர். மை தடவி அச்சில் அடித்தால், இங்கு மறுத்துப் பேச ஆள் இல்லை. எத்தனை மடங்கு லாபம் என்று பாருங்கள். ஆனால், குறைவான லாபம் வைத்து நடத்தப்படும் இந்த மருத்துவமனையிலும் எங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது. ஒரு நாள் வருமானம் ஒரு லட்சம் ரூபாய் என்றால், அதில் 18 ஆயிரம் ரூபாய் லாபம். இது போதாதா? இந்த லாபத்தைக் கொண்டு தஞ்சாவூர், ஊத்துக்குளி ஆகிய இடங்களில் மேலும் இரண்டு மருத்துவமனைகளை உருவாக்கியிருக் கிறோம். இப்போது பாண்டிச்சேரியி லும் பெங்களூரிலும் வேலை நடந்துவருகிறது. ஊத்துக்குளியில் அந்த ஊரை சேர்ந்த 100 பேர் ஆளுக்கு 2 லட்சம் பணம் போட்டு 2 கோடி ரூபாய் முதலீட்டில் மருத்துவமனையை உருவாக்கியிருக்கிறார்கள்'' என்று ஜீவானந்தம் பேசப் பேச... ஆச்சர்யமாக இருக்கிறது.
''தரமான, இலவச மருத்துவம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். கல்வியும் அரசின் வசம்தான் இருக்க வேண்டும். ஏனெனில், தரமான கல்வியும் மருத்துவமும் பெறுவது, ஒரு குடிமகனின் அடிப்படை உரிமை. ஆனால் நம் அரசு, தனியார் மருத்துவத்தை ஊக்குவிக்கும் அளவுக்கு அரசு மருத்துவமனைகளில் அக்கறை செலுத்துவது இல்லை. அது மேலும், மேலும் சீரழிவு மிகுந்ததாக மாறிக்கொண்டே இருக்கிறது. நேர்மையான, ஊழல் அற்ற நிர்வாகம், அனைத்து மக்களுக்கும் தரமான இலவச மருத்துவத்துக்கான உத்தரவாதம் என்ற நிலை அரசுத் துறையில் வருமானால், எங்கள் மருத்துவமனைகள் அனைத்தையும் அரசிடம் ஒப்படைக்கவும் நாங்கள் தயார்!''
''கிராமப்புறங்கள் மருத்துவத்தில் தன்னிறைவு பெற என்ன செய்ய வேண்டும்?''
''ரேஷன் கடைகளைப்போல ஒவ்வோர் ஊராட்சிக்கும் சிறு மருத்துவமனை இருக்க வேண்டும். இரண்டு மருத்துவர்கள் போதும். மருந்துப் பொருட்களை அரசே குறைந்த விலைக்கு வழங்கலாம். கிராமத்து மக்கள் குறைந்த முதலீட்டில் இப்படிப்பட்ட சிறு கூட்டுறவு மருத்துவமனைகளை உருவாக்க, இந்திய மருத்துவ சங்கம் முன்முயற்சி எடுக்க வேண்டும்!''
''இந்தியாவிலேயே சென்னைதான் மருத்துவத் துறையின் தலைநகரம் என்கிறார்களே?''
''எப்படி சாராய முதலாளிகள் கல்வி நிறுவனங்களைத் துவங்கினார்களோ... அதுபோல, மருத்துவத்துக்கு எந்த விதத்திலும் தொடர்பு இல்லாத கார்ப்பரேட் நிறுவனங்கள் மருத்துவமனைகளைக் கட்டிவருகின்றன. சென்னையில் முளைத்திருப்பவை சரிபாதி இவைதான். நம் ஊரில் ஒவ்வோர் ஆண்டும் மருத்துவம் படிப்பவர்களின் எண்ணிக்கையே குறைவுதான். அவர்களில் அதிகபட்சம் பேரை இந்த நிறுவனங்கள் கூலிக்கு எடுத்துக்கொள்கின்றன. எனில், கோடிக்கணக்கான நடுத்தர, ஏழை மக்களுக்கு மருத்துவம் பார்ப்பது யார்? மருத்துவத் துறையில் கார்ப்பரேட் நிறுவனங்களைத் தடை செய்ய வேண்டும்!''
பாரதி தம்பி
படங்கள் : தி.விஜய்
ஆனந்தவிகடன் - 2012

21 ஆகஸ்ட் 2015

நாட்டு சர்க்கரை பயன்படுத்துங்க...

மரியாதைக்குரியவர்களே,
          வணக்கம். வெள்ளை சர்க்கரை என்னும் சீனி சர்க்கரை உடல் நலத்துக்கு கேடு..எனவே நாட்டு சர்க்கரை அல்லது வெல்லம்,கருப்பட்டி பயன்படுத்துவோம்.
                         கரும்புச்சாறு பிழிந்தால் என்ன கலர் வரும் என எல்லோருக்கு தெரிந்தும் அது வெள்ளை சர்க்கரையாக எப்படி வருகிறது என்பது நிறைய பேருக்கு தெரியாது. கரும்பு சாறில் இருந்து கிடைக்கும் சர்க்கரை பிரவுன் கலரில் தான் கிடைக்கும். 

       அதை சுத்தபடுத்தும் பிராசஸ் தான் கொடுமையானது. 

                           ஒரு காலத்தில் கால்நடை எலும்புகள் பயன்படுத்தபட்டு பின்பு சர்க்கரை வெள்ளையாக மாறியது. அது இன்னமும் 20% சர்க்கரை ஆலைகள் அந்த பிரசாஸிங் முறையை பின்பற்றுகிறது. மீதம் உள்ள 80% சதவிகித ஆலைகள் "சல்ஃபர் டையாக்ஸைடு" கரும்பு சாற்றை கொதிக்கவைக்கும் போது குமிழ்களாக செலுத்தி அந்த கெமிக்கள் கலரை "பிளீச்" செய்யும். அதன பிறகு தான் உங்களுக்கு முழுதான் வெள்ளை வெளேர் சர்க்கரை கிடைக்கிறது. அடுத்து ரீஃபைனிங் சர்க்கரை இன்னும் சில கெமிக்கல்கள் சேர்க்கப்பட்டு "அஃப்ஃபினேஷன்" எனும் முறையில் சுழற்சி செய்யபட்டு மேல் உள்ள துகள்கள் ரீஃபைன்ட் சர்க்கரை. மீதீ இருக்கும் துகள்கள் சிரப்புக்கு பயன்படுத்தபடுகிறது
                   தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சீனிகளை சாப்பிடக்கூடாது. காரணம், அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது
உங்களின் இனிப்பு தேவைகளுக்கு கெமிக்கல் கலப்பு இல்லாத நாட்டுசர்க்கரை ,வெல்லம் ,பனம்கருப்பட்டி, பனம் கற்கண்டு , மலைத்தேன் போன்றவற்றை பயன்படுத்துங்கள் .

TAN என்னும் டான் எண் என்றால் என்ன?


மரியாதைக்குரியவர்களே,
           வணக்கம்.PANஎன்னும்  நிரந்த கணக்கு எண் அட்டை பற்றி தெரியும். TAN என்னும்  வரி கணக்கு எண் என்றால் என்ன? தெரிந்து கொள்வோம்.. 

டான் எண் என்றால் என்ன? அதன் பயன் என்ன?
                டான் (TAN) எண் என்று அழைக்கப்படும் 1௦ இலக்க எண் வரிமூல வசூல் அல்லது வரி கழித்தல் சேவைகளை வழங்கவும் மற்றும் வருமான வரி சார்ந்த பணிகளையும் செய்யவும் இந்த எண் பயன்படுகிறது. எனவே இந்த எண்ணை வருமான வரி செலுத்தும் அனைத்து அமைப்புகளும் மற்றும் தனி நபர்கள், நிறுவனங்கள் உட்பட அனைவரும் கட்டாயம் பெறவேண்டும். இந்த 1௦ இலக்க டான் எண் வருமானவரித் துறையினறால் வழங்கப்படுகிறது. 
  
டான் எண்ணை ஏன் வாங்க வேண்டும்? 
             வருமான வரி சட்டப் பிரிவு 203 அ வின்படி "வரிமூலவசூல் அல்லது வருமான வரிப்பிடித்தம் உட்பட்ட சேவைகளை பொது மக்களுக்கு வழங்கும் அனைத்து அமைப்புகளும், நிறுவனங்களும் மற்றும் தனி நபர்களும் கட்டாயம் டான் எண்ணை வருமான வரித்துறையிடம் விண்ணப்பித்து பெற வேண்டும்" என்று அறிவிக்கப்பட்டது. மேலும் வருமான வரி சட்டத்தின் அப்பிரிவு (மின்னணு உட்பட) வருமான வரி மூலக்கழித்தல்/வருமான வரி வசூல் விண்ணப்ப படிவங்கள், சான்றிதழ்கள் மற்றும் கட்டணப்படிவங்கள் போன்றவற்றில் டான் எண் குறிக்கப்பட வேண்டும். TDS/TCS படிவங்களில் டான் எண் சேர்க்கப்படாவிட்டால், அப்படிவங்கள் குறிப்பிட்ட அலுவலக அதிகாரிகளைச் அல்லது அலுவலகங்களை சென்று சேராது, அதாவது டான் எண் சேர்க்கப்படாத விண்ணப்பங்கள் வருமான வரித்துறையினரால் பரிசீலீக்கப்படாது . இதேபோல், வங்கிகளும் டான் எண் சேர்க்கப்படாத TDS/TCS படிவங்களை ஏற்காது. 
 
யார் டான் எண் வாங்க வேண்டும் ?
               தனிநபர், தனிநபர் தொழில் நிறுவன கிளைகள், தனி நபர்களின் சங்கம் (AOPs)/ தனிநபர்களின் கூட்டமைப்பு (BOIs)/ செயற்கை நீதி துறை நபர், நீதி நிறுவனம் அல்லது கிளை; நிறுவனம் அல்லது கிளை, தன்னாட்சி / சட்டரீதியான அமைப்புகள் மற்றும் மாநில அல்லது மத்திய அரசு அல்லது உள்ளாட்சி அமைப்புகள் உட்பட்டோர் டான் எண்ணைப் பெறமுடியும். 
 
டான் எண்ணின் விளைவுகள் 
            மேற்கூறிய சேவைகளை,பணிகளை வழங்கக்கூடிய தனி நபர்கள், அமைப்புகள் அல்லது நிறுவனங்கள் டான் எண்ணைப் பெறாவிட்டால் அல்லது தேவையான சான்றிதழ்களில் டான் எண்ணை குறிக்க தவறிவிட்டால் 1௦,௦௦௦ ரூபாய் முதல் அல்லது அதற்கும் அதிகமான அளவிலும் அபராதம் விதிக்கப்படும். 
 
எவ்வாறு விண்ணப்பிப்பது ?
              டான் எண் பெறவிரும்பும் மேற்கூறிய தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள், அமைப்புகள் (49B) என்ற விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து tin nsdlயின் இணையம் வழியாகவோ அல்லது TIN மையங்களிலோ சமர்ப்பிக்க முடியும்.  

                   உங்களுக்கு அருகாமையிலுள்ள TIN மையங்களை கண்டறிய http://tin.nsdl.com அல்லது www.incometaxindia.gov.in என்ற இணைய தளத்திற்கு செல்லுங்கள். 
           TIN மையங்களில் நேரடியாகச் சென்று சமர்ப்பிக்கப்படும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் எந்தவித சான்றிதழ்களையும் இணைக்கத் தேவை இல்லை. ஆனால் இணையம் ஊடாக செலுத்தப்பட்ட விண்ணப்பத்துடன் NDLS இணையம் வழங்கிய ஒப்புமைச் சீட்டையும் இணைக்கவேண்டும். விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு, விண்ணப்பத்தில் தரப்பட்ட முகவரிக்கு டான் எண் அனுப்பப்படும்.

20 ஆகஸ்ட் 2015

PAYMENT BANK - சம்பள வங்கி பற்றி தெரிந்து கொள்ளுங்க...

மரியாதைக்குரியவர்களே,
          வணக்கம். PAYMENT BANK என்னும் சம்பள வங்கி பற்றி தெரிந்து கொள்வோம்.

(1) PAYMENT BANK பேமெண்ட் வங்கிகள் என்றால் என்ன? பயன்கள் என்ன?

          ஆதித்ய பிர்லா, ஏர்டெல். ரிலையன்ஸ்,  வோடஃபோன்,  உள்ளிட்ட 11 தனியார் நிறுவனங்கள் பேமெண்ட் வங்கிகள் தொடங்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. இவ்வங்கிகள் செயல்பாட்டுக்கு வந்தால் கிராமப்புற அளவில் வங்கி சேவைகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

(2) PAYMENT BANK  பேமெண்ட் வங்கி எப்படி செயல்படும்?
              பேமெண்ட் வங்கி தொடங்குவதற்கான உரிமம் பெற்ற ஒரு நிறுவனம், வாடிக்கையாளர்களிடமிருந்து ( ஆரம்பத்தில் நபர் ஒருவருக்கு ரூ. 1 லட்சம் வரை) டெபாசிட்டுகளை பெறலாம். மேலும் இண்டர்நெட் பேங்கிங், பண பரிமாற்ற வசதி, இன்சூரன்ஸ் விற்பனை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் போன்ற சேவைகளை அளிக்கலாம்.


(3) PAYMENT பேமெண்ட்வங்கியின் நோக்கம் என்ன?
            பேமெண்ட் வங்கி அமைக்கப்படுவதினால் நிதி பரிவர்த்தனை நடவடிக்கைகள் மேலும் அதிகமாகும். குறிப்பாக சேமிப்பு கணக்குகள், பேமண்ட்ஸ் மற்றும் ரெமிட்டன்ஸ் ( remittance ) சேவைகள் கூலித்தொழிலாளர்கள், குறைந்த வருவாய் உடையோர், சிறிய வியாபாரிகள் மற்றும் இதர அமைப்பு சாரா துறை சார்ந்த தொழிலாளர்கள் மற்றும் இதர பிரிவினருக்கு கிடைக்கும்.


(4) DEBIT & CREDIT டெபிட்/கிரெடிட் கார்டு கிடைக்குமா?
            கிரெடிட் கார்டு கிடைக்காது. ஆனால் பேமெண்ட் வங்கிகள் ஏடிஎம்./டெபிட் கார்டுகளை வழங்கும்.


(5) BANKING &PAYMENT பேங்கிங் முறைக்கு பேமண்ட் வங்கிகளின் பங்களிப்பு என்ன?
                   வழக்கமான வங்கிகளுக்கு மேலும் அதிகமான நிதி வருவதையும், கிராமப்புற பகுதிகளில் உள்ளவர்களுக்கு வங்கி சேவைகள் கிடைக்கவும் இதுபோன்ற பேமண்ட் வங்கிகள் உதவும். மேலும் தற்போது பேமெண்ட் வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமங்கள், நாடு முழுவதும் உள்ள 1,54,000 தபால் அலுவலகங்களும் ( 1,30,000 கிராமப்புற தபால் அலுவலகங்கள் உட்பட) மக்களுக்கு வங்கி சேவைகள் அளிக்க வகை செய்யும்.


(6)NRI  என்ஆர்ஐ கணக்கு தொடங்க முடியுமா?
          இந்த பேமெண்ட் வங்கிகளில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ) இதில் கணக்கு தொடங்க முடியாது.


(7) LOAN லோன் கிடைக்குமா?
          இந்த பேமெண்ட் வங்கிகள் கடன் வழங்குதல் போன்ற சேவைகள் எதிலும் ஈடுபட ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள் அனுமதிக்கவில்லை.எனவே லோன் பெற நினைப்பவர்கள் வழக்கமான வங்கிகளுக்குத்தான் செல்ல வேண்டும்.


(8) COMPLAINT குறை தீர்க்கும் அமைப்பு உண்டா?
           நிச்சயம் உண்டு. பேமெண்ட் வங்கிகளின் வாடிக்கையாளர்கள் தெரிவிக்கும் புகார்கள் மற்றும் குறைகளை தீர்க்க உயரதிகாரம் கொண்ட வாடிக்கையாளர்கள் குறை தீர்ப்பு அமைப்பு செயல்படும். பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறைகள் மற்றும் தரத்தை ஒட்டி இந்த வங்கியின் செயல்பாடுகள் அமைய உறுதி செய்யப்படுவதோடு, பேமண்ட் வங்கிகளின் செயல்பாடுகள் அனைத்தும் முற்றிலும் வலையமைப்புக்கு உட்பட்டு இருக்கும்.

          முன்னதாக நேற்று தனியார் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் பேமெண்ட் வங்கிகள் தொடங்குவதற்கு ரிசர்வ் வங்கி கொள்கை அளவிலான ஒப்புதல் வழங்கியது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஏர்டெல், வோடஃபோன், இந்திய தபால் துறை (இந்தியா போஸ்ட்), டெக் மஹிந்திரா, ஆதித்யா பிர்லா நூவோ, பினோ பேடேக், என்.எஸ்.டி.எல். சோழமண்டலம் டிஸ்டிரிபியூஷன் சர்வீசஸ் ஆகிய நிறுவனங்களுக்கும் இரண்டு தனிநபர்களுக்கும் இந்த அனுமதி கொடுக்கப்பட்டது.
சன்பார்பா தலைவர் திலிப் சாங்வி மற்றும் பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் சர்மா ஆகியோருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பேமெண்ட் வங்கி தொடங்க 41 விண்ணப்பங்கள் வந்திருந்தன. கடந்த பிப்ரவரி இறுதியில் விண்ணப்பிப்பதற்கான இறுதி கெடு முடிந்தது. அதன் பிறகு விண்ணப்பங்களை பரிசீலனை செய்ய ரிசர்வ் வங்கி, ஆறு மாத காலம் எடுத்துக்கொண்டது.

      இந்த ஒப்புதல் என்பது கொள்கை அளவிலான ஒப்புதல் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 
                18 மாதங்களுக்கு இந்த ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது. அதன் பிறகு இதற்கான முறையான உரிமம் வழங்கப்படும்.
                    இந்த அனுமதி கொடுக்கப்பட்ட அனுபவத்தை வைத்து வருங்காலத்தில் தொடர்ந்து அனுமதி கொடுக்க முடிவு செய்துள்ள ரிசர்வ் வங்கி, அதற்கு ஏற்ப விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வரப்படும் என்று தெரிவித்துள்ளது. 
                 அதாவது குறிப்பிட்ட கால அளவை நிர்ணயம் செய்யாமல் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்பிப்பதற்கு ஏதுவாக விதிமுறைகள் மாற்றி அமைக்கப்படும். ஒரு முறை தேர்வு செய்யப்படாவிட்டாலும் அடுத்த முறை அந்த நிறுவனங்கள் தேர்வு செய்யப்படும் என்று ரிசர்வ் வங்கி நம்புகிறது.
விகடன் செய்திகள் - 20.08.2015

பான் கார்டு -PAN CARD

மரியாதைக்குரியவர்களே,
            வணக்கம். பான்கார்டு அதாவது  PAN CARD என்னும் PERMAMNENT ACCOUNT NUMBER CARD பற்றி அவசியம் பற்றி இந்தப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
           சென்னை:
     PAN CARD என்னும் PERMAMNENT ACCOUNT NUMBER CARD  அவசியம்
       இந்தியாவில் பல்வேறு பணப் பரிவர்த்தனைகளுக்குப் பான் நம்பர் எனப்படும் நிரந்தக் கணக்கு எண் கட்டாயமாகத் தேவைப்படுகிறது. இந்த எண் குறிப்பிடப்படும்போது வருமான வரித் துறைக்கு அதன் தொடர்பான அனைத்து விவரங்களையும் தொடர்புப்படுத்திக்கொள்ள உதவும் என்பதால் இது அவசியமானதாகிறது. வருமான வரி செலுத்துபவர் பற்றிய விவரங்களை ஆராயவும் அவரது பல்வேறு முதலீடுகள், கடன்கள் மற்றும் பிற வர்த்தக நடவடிக்கைகளை ஒப்பிட்டுப் பார்க்கவும் இந்த இணைப்புகள் உதவும். இந்நிலையில் பான் எண் அவசியமாகத் தேவைப்படும் சில முக்கிய இடங்களையும், அதன் வழிமுறைகளையும் பார்ப்போம்...

(1)பணப் பரிவர்த்தனை
PAN CARD என்னும் PERMAMNENT ACCOUNT NUMBER CARD  அவசியம்
            ஒரு லட்சம் அல்லது அதற்கு அதிகமான மதிப்புடைய வியாபாரத்திற்கு நிரந்தரக் கணக்கு எண் அல்லது பான் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது டீலர்களுக்குத் தரப்படும் தொகை மற்றும் தங்க நாணயம் வாங்குதல் ஆகியவற்றையும் உள்ளடக்கியது.


(2)ஹோட்டல் அல்லது உணவு விடுதி
PAN CARD என்னும் PERMAMNENT ACCOUNT NUMBER CARD  அவசியம் 
              ஒரே நேரத்தில் இருபத்தைந்தாயிரம் அல்லது அதற்கு அதிகமான தொகையை ஒரு ஹோட்டலுக்கோ அல்லது உணவு விடுதிக்கோ தரப்படும்போது பான் எண் குறிப்பிடப்பட வேண்டும்.

(3)விமானப் பயணம்
          PAN CARD என்னும் PERMAMNENT ACCOUNT NUMBER CARD  அவசியம்    வெளிநாடு செல்ல ஒரே சமயத்தில் பயணக் கட்டணமாகச் செய்யப்படும் செலவு இருபத்தைந்தாயிரம் அல்லது அதற்கு மேல் இருந்தால் விமான நிறுவனங்கள் பான் எண்ணை அவசிமாகப் பெறப்படுகிறது.

(4)ஆயுள் காப்பீடு
 PAN CARD என்னும் PERMAMNENT ACCOUNT NUMBER CARD  அவசியம்
         ஒரு வருடத்திற்குள் ஐம்பதாயிரம் அல்லது அதற்கதிகமான தொகைக்கு ஆயுள் காப்பீட்டுப் பிரிமியத் தொகை செலுத்தும் போது பான் எண் அவசியம்.

(5)வைப்பு நிதி திட்டம்
PAN CARD என்னும் PERMAMNENT ACCOUNT NUMBER CARD  அவசியம்
           வங்கிக் கணக்கு அல்லது அஞ்சலகத்தில் செலுத்தப்படும் ஐம்பதாயிரம் ரூபாய் அல்லது அதற்கு அதிகமான வைப்புத் தொகை செலுத்தும் போது பான் எண் அவசியம்.

(6)தொலைப்பேசி இணைப்பு
PAN CARD என்னும் PERMAMNENT ACCOUNT NUMBER CARD  அவசியம்
               தனிநபர் அல்லது அலுவலகத்திற்குத் தொலைப்பேசி அல்லது செல்ஃபோன் இணைப்புப் பெறத் தரப்படும் விண்ணப்பத்தில் கூடப் பான் எண்ணை முக்கியமாக ஆவணமாகக் கருதப்படுகிறது.

(7)காசோலை
          PAN CARD என்னும் PERMAMNENT ACCOUNT NUMBER CARD  அவசியம்                  ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்புள்ள வங்கி ஆணை அல்லது காசோலைகளை வங்கிகளில் பெற விண்ணப்பிக்கும் போது பான் எண்ணைத் தெரிவிக்க வேண்டியது அவசியம்

(8)பங்கு அல்லது கடன் பத்திரங்கள்
PAN CARD என்னும் PERMAMNENT ACCOUNT NUMBER CARD  அவசியம்
         ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமான மதிப்பில் பங்கு அல்லது கடன் பத்திரங்கள் வாங்க அல்லது விற்கப்படும்போது செய்யப்படும் ஒப்பந்தத்தில் பான் எண் குறிப்பிடப்பட வேண்டும்.

(9)வங்கிக் கணக்கு
PAN CARD என்னும் PERMAMNENT ACCOUNT NUMBER CARD  அவசியம்
                 வங்கிக் கணக்கை துவக்கும் நபர் இளையவராக அதாவது மைனர் இருந்தால், அவருடைய தந்தை, தாய் அல்லது காப்பாளர் பான் எண் குறிப்பிடப்பட வேண்டும்.

(10)கிரெடிட் அல்லது டெபிட் கார்டு
PAN CARD என்னும் PERMAMNENT ACCOUNT NUMBER CARD  அவசியம்
             வங்கிகள் உங்கள் சேமிப்பு கணக்கின் மீது நீங்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு வாங்க விரும்பினால், இதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் போது பான் எண் கட்டாயமாகக் கோரப்படுகிறது.

(11)மியூச்சுவல் ஃபண்டு
PAN CARD என்னும் PERMAMNENT ACCOUNT NUMBER CARD  அவசியம்
              மியூச்சுவல் ஃபண்டு யூனிட்டுகள் அல்லது பங்குகள் வாங்கும்போது அதன் மதிப்பு ஐம்பதாயிரம் அல்லது அதற்கு அதிகமாக இருந்தால்
பான் எண் குறிப்பிடப்பட வேண்டும்.


(12)ரிசர்வ் வங்கி
PAN CARD என்னும் PERMAMNENT ACCOUNT NUMBER CARD  அவசியம்
           ஐம்பதாயிரத்திற்கு அல்லது அதற்கும் அதிகமான தொகைக்கு ஒரு நிறுவனம், அமைப்பு அல்லது ரிசர்வ் வங்கி வெளியிடும் கடன்பத்திரங்கள் அல்லது பங்குப்பத்திரங்கள் வாங்கும்போது பாண் எண்ணை கட்டாயமாகச் சமர்ப்பிக்க வேண்டும்

(13)வாகனம்
PAN CARD என்னும் PERMAMNENT ACCOUNT NUMBER CARD  அவசியம்
            கடந்த சில மாதங்களாக எந்த ஒரு வாகனம் அல்லது மோட்டார் வாகனங்களை வாங்கும்போதும் பாண் எண் பெறப்படுகிறது. இதன் மூலம் அரசு அதிக மதிப்புடைய உங்களின் ஒவ்வொரு பரிவர்த்தனையும் கவணிக்கத் துவங்கியுள்ளது தெளிவாகத் தெரிகிறது.

(14)படிவ எண் 60 மற்றும் படிவ எண் 61
PAN CARD என்னும் PERMAMNENT ACCOUNT NUMBER CARD இல்லாதவர்களுக்கு. 
                 பான் எண் இல்லாமல் மேற்குறிப்பிட்ட ஏதாவது ஒன்றைச் செய்ய விரும்புபவர் படிவ எண் 60ஐ சமர்ப்பிக்க வேண்டும். 

               விவசாயத்தின் மூலம் வருமானம் பெறும் நபர் படிவ எண் 61ஐ சமர்ப்பிக்க வேண்டும்.
 
ஆதாரம் ; குட்ரிட்டன்ஸ் » தமிழ் = 20.08.2015 மற்றும்
        பகிர்ந்த திரு. செல்வம் பழனிசாமி அவர்களுக்கு நன்றிகள் பல......

19 ஆகஸ்ட் 2015

shanthi social services - coimbatore

               சாந்தி சோசியல் சர்வீசஸ் - கோயம்புத்தூர்.

மரியாதைக்குரியவர்களே,
                         வணக்கம். கோவையில் செயல்பட்டுவரும்  சாந்தி சோசியல் சர்வீசஸ் அறக்கட்டளையின் சமூக நலப்பணிகளைப் பற்றி அறிந்துகொள்வோம். வாழ்த்து கூறி நாமும் விழிப்புணர்வு பெறுவோம்.

              கோவை சிங்காநல்லூரில் அமைந்திருக்கும் சாந்தி கேண்டீன் அல்லது சாந்தி பெட்ரோல் பங்க் பற்றி தெரிந்திருக்கும்.. அதைப் பற்றிய மேலும் பல முக்கியத் தகவல்கள் இங்கே..

சாந்தி கியர்ஸ் திரு பி.பழனிசாமி அவர்கள். தன் மனைவியின் நினைவாக "சாந்தி சோசியல் சர்வீசஸ்" என்ற மக்களுக்கான பொது நல அமைப்பை நிறுவியவர். 
காண்க வலைத்தள முகவரி    http://www.shanthisocialservices.org/

சாந்தி கியர்ஸ் பி.பழனிசாமி அவர்கள் செயல்படுத்தும் சமூக நலப்பணிகளில் தங்களது பார்வைக்காக  சில...

1.கோவையில் அதிக விற்பனை மற்றும் தரம் நிறைந்த எரிபொருள் விநியோகிக்கும் பெட்ரோல் பங்க். (இதன் சிறப்பு, எவ்வளவு பெட்ரோல் அல்லது டீசல் விலை ஏற்றம் இருப்பினும், முற்றும் முழுதாக அவை இங்கே தீரும் வரை பழைய விலை தான்.)

2. 24 மணி நேரமும் செயல்படும் மருந்தகம். நம்பினால் நம்புங்கள், எம்.ஆர்.பி. யில் இருந்து 20 சதவிகிதம் தள்ளுபடி இங்கே கிடைக்கிறது.. (மேலும் விற்பனை விலை மீதான கட்டணம் அறக் கட்டளையால் ஏற்றுக் கொள்ளப் படுகிறது, 15 முதல் 20 கிலோமீட்டருக்கு  குறைவான தூரத்தில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவச டோர் டெலிவரி.)

3. சாந்தி மருத்துவக ஆய்வகத்தில் அமைந்திருக்கும் ஆய்வகத்தில் எடுக்கப் படும் ஸ்கேன் , எக்ஸ்.ரே , உள்ளிட்ட பல விதமான முக்கியமான டெஸ்டுகளுக்கு மற்ற இடங்களில் இருந்து 50 இல் இருந்து 70 சதவிகிதம் வரை விலை குறைவு.

4. சாந்தி மருத்துவமனை - மருத்துவருக்கான கட்டணம் 30 ரூபாய் என்பதில் இருந்து, இவர்களின் லாப நோக்கமற்ற சமூக சேவையை நீங்கள் புரிந்து கொள்ளலாம். மற்ற விவரகங்களுக்கு இணையதளத்தைப் பார்க்க.

5.டயாலிசிஸ் - முழுக்க முழுக்க அதிநவீன மருத்துவ உபகரணங்களைக் கொண்டு செயல்படும் இங்கே, ஒரு முறை டயாலிசிஸ் செய்து கொள்ள கட்டணம் வெறும் 500 ரூபாய்.

மேலும், 750 ரூபாய்க்கு மின் மயானம், ஒரு நாளைக்கு 10000 பேர் தற்போது உபயோகிக்கும் உணவகம், ரேடியாலஜி சென்டர் ,
ஏழை மாணவர்களுக்கு கல்வி நிதி உதவி, அரசுப் பள்ளிகளில் புதிய கட்டிடங்கள் கட்டிக் கொடுத்தல், ஆசிரியர்கள் குறைவாக உள்ள பள்ளிகளுக்கு தன் செலவில் ஆசிரியர்களை பணியில் அமர்த்தல் என்று எண்ணற்ற சேவைகளைச் செய்து வரும் சாந்தி சோஷியல் சர்வீசஸ் அறக்கட்டளைக்கும், அதை நிறுவியவர்களுக்கும் சமூமகத்தின் சார்பாக வாழ்த்துக்களும்,சிரம் தாழ்ந்த வணக்கங்களும்.

இதுவரை இந்த அறக்கட்டளைக்காக பொது மக்களிடம் அல்லது வேறு எங்கும் ஒரு ரூபாயாகக் கூட நிதி வசூலித்ததில்லை 
 என அன்புடன்,
 C.பரமேஸ்வரன்,
சத்தியமங்கலம். 

முனைவர்.இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phil.,Ph.D., அவர்களது வாழ்க்கைக்குறிப்பு... (Dr.R.K.Manikkam, professor,Writer)

                                                                                                        முனைவர். இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phi...