31 மே 2014

மருந்தாகும் எளிய பொருட்கள் !

மரியாதைக்குரியவர்களே,
           வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.
மருந்தாகும் எளிய பொருட்கள் !
வயிற்றுவலி
வயிற்று வலி, வாயு, மலச்சிக்கல், உப்புசம் போன்றவை இருந்தால் 5 வெற்றிலையை எடுத்து நன்றாகக் கழுவி 1 கோப்பை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி காலை, மாலை 3 நாளைக்குக் குடித்துவந்தால் எந்த மாதிரி வயிற்று வலி இருந்தாலும் சரியாகிவிடும்.
தலைவலி
தலைவலி பொறுக்க முடியாமல் இருந்தால், ஒரு பக்கெட்டில் சுடு நீர் எடுத்து அதில் 1 மேசைக்கரண்டி சுக்குப் பொடியைப் போட்டுக் கால்களைத் தண்ணீரில் வைத்துக் கண்களை மூடிக்கொண்டு 20 நிமிடங்கள் உட்காரவும். இப்படிச் செய்தால் தலைவலி குறையும்.
பூண்டு மருந்து
பூண்டை 2 பல் எடுத்து நன்றாக நசுக்கி 1 ஸ்பூன் தேனில் கலந்து சாப்பிட்டாலும் தலைவலி குணமாகும்.
செரிமானமின்மை
அசிடிட்டி, செரிமானமின்மை இருந்தாலோ சாப்பாடு எதுக்களித்து வந்தாலோ, 1 உருளைக் கிழங்கைக் கழுவித் தோல் சீவி கேரட் சீவலில் துருவ வேண்டும். அதை அப்படியே பிழிந்தால் ஜூஸ் வரும். அதை வடிகட்டி 1 சின்ன ஸ்பூன் எடுத்து, அரை கப் வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து நிதானமாகக் குடித்தால் நல்லது. 2 நாட்களுக்கு இப்படிக் குடிக்கலாம்.
கண் அரிப்பு
வறண்ட கண்கள் இருந்தால், கண் அரிக்கும். சில நேரம் எரிச்சலாகவும் இருக்கலாம். சுத்தமான வெள்ளைத் துணியை வெதுவெதுப்பான தண்ணீரில் நனைத்துக் கண் மேல் போட்டு 5, 10 நிமிடங்கள் கண்ணை மூடிக்கொண்டிருக்கவும். துணி குளிர்ந்ததும் எடுத்துவிடவும். ஒரு நாளைக்கு 2 முறை இப்படிச் செய்தால் நல்லது. கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்களுக்கு இது நல்ல பலன் அளிக்கும்.
வாயுப் பிடிப்பு
வாயுப் பிடிப்பு இருந்தால் சுக்கு காப்பி செய்து குடித்தால் பிடிப்பு போய்விடும். இதைச் செய்வதற்குக் கொத்த மல்லி 1 மேசைக்கரண்டி, மிளகு 1 தேக்கரண்டி, சீரகம் 1 தேக்கரண்டி, சுக்கு 1 சிறிய துண்டு, ஓமம் 1 தேக்கரண்டி எடுத்துக்கொண்டு, இவற்றைத் தனித்தனியாக வெறும் வாணலியில் போட்டு வறுத்துப் பொடி செய்துகொள்ளவும். ஒரு டம்ளர் தண்ணீரில் இதை 1 ஸ்பூன் போட்டு நன்றாகக் கொதிக்க வைத்து வடிகட்டி பால், பனைவெல்லம் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துக் குடிக்கவும்.
குழந்தை சோர்வு
குழந்தைகளுக்குப் பேதி ஆகிச் சோர்ந்துவிட்டால் உடனே காய்ச்சி ஆற வைக்கப்பட்ட தண்ணீரில் 1 ஸ்பூன் சர்க்கரை, 1 சிட்டிகை உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கொடுக்கவும். பிறகு டாக்டரிடம் காட்டவும்.
நாமக்கட்டி
தொண்டைக் கட்டு இருந்தால் நாமக்கட்டியை நன்றாகக் குழைத்துத் தொண்டைக் குழியில் தடவினால் தொண்டைக் கட்டு போய்விடும்.
புதினா
வயிற்றுப் புண், வாய்ப்புண் இருந்தால் மணத்தக்காளிக் கீரையைப் போல் புதினாவும் நல்ல மருந்தாகப் பயன்படும். புதினா 1 கைப்பிடி, சுண்டைக்காய் அளவு புளியைச் சுட்டுப் போடவும். உப்பு, பெருங்காயம் சேர்த்துத் துவையலாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டுக் கடுகு தாளித்து அரைத்த விழுதைப் போட்டு 1 நிமிடம் கிளறி முதல் சாதத்தில் சேர்த்துச் சாப்பிடவும். காரத்தைத் தவிர்க்கவும்.
மார்புச் சளி
கருந்துளசி சற்றுக் காரமாக இருக்கும். ஒரு பிடி எடுத்து 1 கோப்பை தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி, 1 அவுன்ஸ் இரண்டு வேளை எடுத்துவந்தால் கபம், மார்புச் சளி நீங்கிவிடும்.
உண்மையை உணருங்கள்,

சைபர் க்ரைமில் ஏற்றுக்கொள்ளப்படும் புகார்கள்:

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.

CYBER CRIME COMPLAINTS
********************
சைபர் க்ரைமில் ஏற்றுக்கொள்ளப்படும் புகார்கள்:
******************************************
சைபர் க்ரைம் தொடர்பான குற்றங்களுக்காக போலீஸ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தால் ஐ.டி சட்டம் 2008 ன் படி மூன்று ஆண்டு முதல் ஆயுள் வரை தண்டனை வழங்கப்படும்.

ஒரு லட்சம் முதல் ஐந்து லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

இவர்களில் ஆபாச மெசேஜ் அனுப்புவது, ஆபாச போட்டோ போடுவது, ஆபாச வீடியோ காட்சிகளை வெளியிடுவது, போலி ID உருவாக்கி தன்னை வேருவர் போல் காட்டிக்கொள்வது, ஆண், பெண் உடல் பாகங்களை சட்ட விரோதமான முறையில் வெளியுடுவது, சைபர் டெரரிசம் இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்களில் ஈடுபடுதல், ஆபாச போட்டோ வெளியிடுதல், ஆபாச வீடியோ காட்சிகளை வெளியிடுதல், குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வெளியிடுதல் உள்ளிட்ட குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டால் அவர்கள் ஜாமீனில் வரமுடியாதபடி கைது செய்யப்படுவார்கள்.

1.ஹேக்கிங் [ HACKING ]
2.ஆபாசமாக மெஸ்சேஜ் அனுப்புதல். [ PORM SMS ]
3.கம்ப்யூட்டர் இன்டர்நெட் வழியாக திருடப்பட்டதை வாங்குவது.
4.அடுத்தவர்களின் டிஜிட்டல் சைன் , பாஸ்வேர்டுகளை திருடுவது.
5.போலி ID உருவாக்கி தன்னை வேருவர் போல் காட்டிக்கொள்வது.
6.ஆண், பெண் உடல் பாகங்களை சட்ட விரோதமான முறையில் வெளியுடுவது.
7.சைபர் டெரரிசம் இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்களில் ஈடுபடுதல்.
8.ஆபாச போட்டோ வெளியிடுதல்.
9.ஆபாச வீடியோ காட்சிகளை வெளியிடுதல்.
10.குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வெளியிடுதல்.

புகார்களை sms அனுப்ப : 95000 99100.

சைபர் க்ரைம் போலீசில் புகார் செய்ய
phone: 044-23452350

Cyber Crime Cell
Chennai
******
Sri Sudhakar
Assistant Comissioner of Police
Cyber Crime Cell
Commissioner office Campus
Egmore, Chennai- 600008

(044) 55498211
cbcyber@tn.nic.in
EMail: cidap@cidap.gov.in
EMail: info@cidap.gov.in

Tr.S.Aravind,
DSP, CBCID, Cyber Crime Cell
SIDCO Electronics Complex,
Block No. 3, First Floor,
Guindy Industrial Estate,
Chennai -32

தொலை பேசி எண்: 044-22502512

Chennai for Rest of Tamil Nadu,
Cyber Crime Cell
CB, CID
Off: 044 25393359

Delhi
****
Supdt. of Police,
Cyber Crime Investigation Cell Central Bureau of Investigation,
5th Floor, Block No.3, CGO Complex,
Lodhi Road,
New Delhi - 3, Phone: 4362203, 4392424

தகவல் பெறும் உரிமைச்சட்டம்-2005ன் கேட்கப்படும் தகவல்களின் விவரம்

மரியாதைக்குரியவர்களே,
  வணக்கம்.
 தகவல் பெறும் உரிமைச்சட்டம்-2005 இல் 
கேட்கப்படும் தகவல்களின் முழுவிவரம்;-
( What type questions can be asked in RTI act 2005 )

1) பதிவேடுகள் (Records),

2) ஆவணங்கள் (Documents),

3) மெமோ எனப்படும் அலுவலக குறிப்புகள்.( Memo Office Tips),

4) கருத்துரைகள் (Comments),

5) அதிகாரிகளின் கோப்பு குறிப்புகள்,

6) அலுவலகங்களின் செய்தி குறிப்புகள் (Offices of the Information notes),

7) சுற்றறிக்கைகள் (Circulars),

8) ஆவணகள் (Documentation),

9) ஒப்பந்தங்கள் (Agreements),

10) கடிதங்கள் (Letters),

11) முன்வடிவங்கள் (Model),

12) மாதிரிகள் (Models),.

13) கணினி சார்ந்த பதிவுகள் (Information stored in computer),

14) மின்னஞ்சல்கள் (Emails).

15) பொது நலன் சார்ந்த அனைத்து தகவல்கள் (All information of public good well),

16) சம்மந்தப்பட்ட ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளைப் பரிசீலனை செய்யும் உரிமை,
(The right to review relevant documents and records),

17) நகல் எடுக்கும் உரிமை (Right to take Xerox)

ஆகியன உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

26 மே 2014

அட்சரேகை மற்றும் தீர்க்க ரேகை பற்றி தெரிந்து கொள்வோம்.


மரியாதைக்குரியவர்களே,
              வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம். பூமியைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.
             Latitude என்னும் அட்ச ரேகைகள் (நில நேர்க்கோடு) கிழமேற்காக வரையப்பட்டுள்ள கற்பனைக் கோடு.
 (ஆமாங்க இந்தக்கோடு நம்ம எளிய பயனுக்காக கற்பனையாக கோடுகள் இருப்பது போல மனதில் எண்ணிக்கொள்வது).
  இந்தக்கோடு பூமியின் மையப்பகுதியில் அதிக விட்டத்தைக்கொண்டது.பூமியை சரிபாதியாக பிரிக்கிறது.அதனை பூமத்தியரேகை என்கிறோம்.இந்த நிலநேர்க்கோடு  தென் துருவம் மற்றும் வடதுருவம் செல்லச் செல்ல அதன் விட்ட அளவு குறையும்.அதாவது  வெவ்வேறு விட்டங்களைக் கொண்டது.
          பூமத்திய ரேகையை 0 டிகிரி என வைத்து வடதுருவம் வரை செல்லும்போது 90 டிகிரியாகவும்(N90 Degree) தென் துருவம் வரை செல்லும்போது 90 டிகிரியாகவும் கணக்கிடப்படுகிறது.

         Longitude என்னும் தீர்க்க ரேகைகள் (நிலநிரைக்கோடு) இவை பூமியின் தெற்கு வடக்காக வரையப்படும் கற்பனைக்கோடுகள்.இவை அனைத்தும் பூமியை இரு சம பகுதிகளாகப் பிரிக்கின்றன.ஒரே அளவு விட்டமுள்ளவை.வளைகோடுகளாகத் தெரிகின்றன.இங்கிலாந்து நாட்டில் உள்ள  கிரீன்விச் நகரத்தில் அமைந்திருக்கும் ராயல் வானிலை ஆய்வுக்கூடத்தை மையமாக வைத்து செல்லும் தீர்க்க ரேகையை 0 டிகிரி என ஆரம்பமாக கணக்கிட்டு கிழக்குப்பகுதி சர்வதேச தேதிக்கோடு வரை
180 டிகிரி கிழக்கு எனவும்,மேற்குப்பகுதி சர்வதேச தேதிக்கோடு வரை 180 டிகிரி மேற்கு எனவும் கணக்கிடப்படுகிறது.






இந்த படத்தில் காணப்படும் Equator என்பது பூமியின் மத்தியில் அமைந்துள்ள பூமத்திய அட்ச ரேகை ஆகும்.
Prime Meridian என்பது இங்கிலாந்து நாட்டின் கிரீன்விச் நகரத்தில் உள்ள ராயல் வானிலை ஆய்வு மையத்தின் வழியாக செல்லும் ஆரம்ப தீர்க்க ரேகை ஆகும். இதை  0 டிகிரி என துவக்கமாக வைத்து   காலநிலையைக் கணக்கிடப்படுகிறது.இந்த தீர்க்க ரேகையின் கிழக்கு நோக்கி செல்லச் செல்ல கூடுதல் மணியாகவும் இந்த தீர்க்க ரேகையின் மேற்கு நோக்கி செல்லச்செல்ல குறைவான மணியாகவும் கணக்கிடப்படுகிறது.இந்தக்கோட்டிற்கு மறுபகுதியில் அதாவது பூமிக்கு அடுத்த பாதியில் International Date Line எனப்படும் சர்வதேச தேதிக் கோடு  வரையப்பட்டு உள்ளது. அதன் தீர்க்க ரேகை 180 டிகிரி ஆகும்.

23 மே 2014

இம்மானுவேல் கண் நோய் நிவாரணக்குழு-குன்னூர் மேட்டுப்பாளையம்-2014

மரியாதைக்குரியவர்களே,
                  வணக்கம்.
               கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.


  

                     மார்ச் 6 முதல் 12ம் தேதி வரை க்ளாக்கோமா எனப்படுகிற கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு வாரமாக அனுஷ்டிக்கப் படுகிறது.'க்ளாக்கோமா’  என்பது கண்ணின் பார்வை நரம்பைப் பாதித்து, பார்வை இழப்பை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு ஆபத்து நிறைந்த கண் பிரச்னைகளின் தொகுப்பு. உலக  அளவில், கண் பார்வை இழப்புக்கான காரணிகளில், ‘க்ளாக்கோமா’ இரண்டாம் இடத்தில் இருக்கிறது. பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் வரை  எல்லோரையும் பாதிக்கிற இந்தப் பிரச்னையைப் பற்றி, அறிகுறிகள், தீர்வுகள் பற்றியெல்லாம் விளக்கமாகப் பேசுகிறார் விழித்திரை சிறப்பு சிகிச்சை  நிபுணர் வசுமதி வேதாந்தம்.

‘‘நம் கண்ணின் முன்பகுதியில் உள்ள அறையில் சுரக்கும் நீரின் அழுத்தம், சாதாரண நிலையிலிருந்து படிப்படியாக அதிகரிக்கும்போது ஏற்படும்  பிரச்னை இது. கண்ணின் உள் நீர் அழுத்தமானது, பார்வை நரம்பினால் தாங்கக் கூடிய அளவை தாண்டும்போது, 'க்ளாக்கோமா' ஏற்படுகிறது. ரத்த  அழுத்தம் போலவே கண்களுக்கும் ஒருவித அழுத்தம் உண்டு. அது அதிகமாவதால் உண்டாகிற பிரச்னை இது. ஆண்களைவிட, பெண்களை அதிகம்  பாதிக்கிற பிரச்னை. இந்தியப் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். 40 வயதில் பரவலாகக் காணப்படுகிறது.

இந்தப் பிரச்னையில் இரண்டு வகைகள் உண்டு. கண்ணின் திரவம் வெளியே போகிற வழியில் அடைப்பிருந்தால் விளக்கொளியைப் பார்க்கிற போது,  அதைச் சுற்றி கலர் கலராக வானவில் மாதிரித் தெரியும்.தலைவலி, கண்களில் வலி, சிவந்த கண்கள், குமட்டல், பக்கவாட்டுப் பார்வை பாதிப்பு,  படிப்படியான பார்வை இழப்பு போன்றவை இதன் அறிகுறிகள். மாலை நேரத்தில் இவை தீவிரமாகலாம். கண்ணின் திரவம் வெளியே போகிற வழியில்  அடைப்பில்லாவிட்டால், அதற்கான அறிகுறிகள் பெரிதாக வெளியே தெரியாமலிருக்கலாம்.

மருத்துவரால் மட்டும்தான் கண்டுபிடிக்க முடியும். எனவே தான் கண் அழுத்தம் அதிகமாகி கண்களில் பிரச்னை வரும் போது, எப்போதுமே கண்  மருத்துவரைப் பார்க்க வேண்டும். கண்ணாடிக்கடையில் போய் பரிசோதித்து, நீங்களாக கண்ணாடி வாங்கிப் போடக் கூடாது என்றும்  அறிவுறுத்தப்படுகிறது. மருத்துவர்கள் பரிசோதிக்கும் போதும், கண்களின் பிரஷர் நார்மல் எனக் காட்டலாம். அப்போது மருத்துவர், ஓசிடி எனப்படுகிற  சோதனையின் மூலம் கண்களின் அழுத்தம் அதிகமிருப்பதை உறுதி செய்வார். தவிர கண்களைத் தொடாமல் லேசரை செலுத்தி, பயாப்சி எடுப்பதன்  மூலமும், பெரிமெட்ரி எனப்படுகிற சோதனையின் மூலம் பக்கவாட்டுப் பார்வையை ஆராய்வதன் மூலமும் கண்களின் அழுத்தமானது உறுதி  செய்யப்படும்.

அப்படி க்ளாக்கோமா இருப்பது உறுதி செய்யப்பட்டால் பிறகு அதன் தீவிரத்தைப் பொறுத்து சிகிச்சைகள் பரிந்துரைக்கப்படும். ஏற்கனவே சொன்ன  மாதிரி திரவம் வெளியே போகிற வழியில் அடைப்பிருந்தால், அவர்களுக்கு லேசர் சிகிச்சையின் மூலம் வெறும் 2 நொடிகளில் சரி செய்து விடலாம்.  அடைப்பில்லாதவர்களுக்கு டிராப்ஸ் பரிந்துரைக்கப்படும். இந்த இரண்டிலும் சரியாகாத போது, அறுவை சிகிச்சை தேவைப்படலாம். 40 வயதில் சகஜம்  என்றாலும், இந்தப் பிரச்னை எந்த வயதிலும் வரலாம்.

பிறந்த குழந்தைக்குக் கூட வரும். பிறக்கிற போதே கண்களுக்குள் கேன்சர் கட்டி இருப்பது போன்ற தோற்றத்துடன், பெரிய கண்களுடன் இருப்பார்கள்  குழந்தைகள் அல்லது ஒரு கண் மட்டும் பெரிதாக இருக்கும். பிறந்த குழந்தைகளுக்கான சிகிச்சை முற்றிலும் வேறுபட்டது. அவர்களுக்கு மயக்க  மருந்து கொடுத்து, பிரத்யேக அறுவை சிகிச்சையின் மூலம்தான் சரி செய்ய வேண்டியிருக்கும். ஆனால், எத்தனை சீக்கிரம் செய்கிறார்களோ, அத்தனை  சீக்கிரத்தில் பலனைக் காணலாம்...’’ என்கிறார் விழித்திரை சிறப்பு சிகிச்சை நிபுணர் வசுமதி வேதாந்தம்.
தமிழ்நாட்டில் கண் மருத்துப்பரிசோதனை செய்யும் தன்னார்வ அமைப்புகளின் பட்டியல்.



Tamil Nadu State Blindness Control
Eye care factilities available at the Rural level, District level and Institution level.  Eye care services like the refraction services for adult and the school screening services for children are made available in the District Hospitals, PHCS and Medical Colleges.  Cataract prevention programme is being carried out by Surgical management by the respective District Ophthalmic Surgeons.  Modern cataract surgical management is being made available to Rural, Urban and City population .
The following major NGOs are also participating in Controling the  of Blindness in Tamil Nadu.
NON-GOVERNMENTAL ORGANISATIONS
    1. Sri Ramachandra Medical College & Research Institute, Porur
    2. Agarwal Eye Hospital, Velacherry
    3. Medical Research Centre, (Appasamy Krishna Hospital)
    4. Sankara Nethralaya,  (Jaslok Community Centre)
    5. Aravind Eye Hospital, Madurai
    6. Sankara Eye Hospital, Coimbatore
    7. K.G. Eye Hospital, Coimbatore
    8. M.G. Eye Hospital, Coimbatore
    9. G.M. Eye Hospital, Coimbatore
    10. Sabana Thomas  Eye Hospital, Coimbatore
    11. MV Eye Care, Coimbatore
    12. PSG Hospital, Coimbatore
    13. Joseph Eye Hospital, Trichy
    14. Vivekananda Eye Hospital, Tiruvannamalai
    15. Sri Ramana Maharishi Eye Hospital, Tiruvannamalai
    16. Shankara Eye Society, Coimbatore
    17. Coastal Vision Eye Hospital, Cuddalore
    18. A.L.C. Pakiyanathan Eye Hospital, Chengam
    19. Kanchi Kamakotti Medical Trust, Coimbatore
    20. Damien Eye care Centre, Nilakottai
    21. Christian Fellowship Eye Hospital, Periyakulam
    22. Meenakshi Mission Hospital, Madurai
    23. Seethalakshmi Eye Hospital, Gobicheetipalayam
    24. Luthern Eye Hospital, Dharapuram
    25. Arasan Eye Hospital, Erode
    26. Helan Keller Service Society, Madurai
    27. Lion's Eye Hospital, Vandamapalai
    28. Annai J.K.K. Trust Hospital, Kumarapalayam
    29. Emmanuel Blind Relief Society, Coonoor
    30. K.M.J. Hospital, Nilgiris
    31. Granet Memoral Hospital, Nilgiris
    32. C.S.I Hospital, Neyoor
    33. J.M. Charitable Trust, Nagercoil
    34. P.S. Medical Trust, Thalakulam
    35. Mahatma Eye Hospital, Trichy
    36. Vizhiyagam Eye Hospital, Madurai
    37. Sweedish Mission Eye Hospital, Pudukottai
    38. C.M.C.(Shell) Hospital, Vellore
    39. Sri Sankara Health Centre, Pammal
    40. Sir Ivan Stedford Hospital, Ambathur
    41. Poovai Lions, Poomanalle
    42. St. Joseph Hospital, Kilarchery
    43. Sathyasai (VHS, Tharamani)
    44. Bhora Eye Hospital, Avadi.
    எங்களது நன்றிகள்   http://www.tnhealth.org/blindcontrol/tsbcsip.htm வலைத்தளத்திற்கு.

17 மே 2014

நீங்களும் ஆட்சியர் ஆகலாம் வாங்க

மரியாதைக்குரியவர்களே,
                 வணக்கம்.கொங்குத் தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.நீங்களும் ஆட்சியர் ஆகலாம் வாங்க. பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

              இன்றைக்கு இளைஞர்கள் சீக்கிரம் பணக்காரராகி, சொகுசான வாழ்க்கை வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். ஆனால் ஒரு சிலர் மட்டும் தானும் உயர்ந்து, தன்னுடைய சமுதாயமும் உயர வேண்டும் என நினைக்கிறார்கள். அவர்களுக்காக இந்தப் பதிவு.
                 நம்முடைய நாடு சுதந்திரமடைந்த பின்பு, கடந்த 65 வருடங்களில் பல விஷயங்களில் முன்னேறி இருந்தாலும், இன்னும் பல பகுதிகளில் அடிப்படை வசதிகளான மருத்துவமனை வசதிகளும், தரமான கல்வி நிலையங்களும், நியாயமான விற்பனைக்கூடங்களும், குடியிருப்புக்கான இடமும், கழிப்பிட வசதிகளும் இல்லை. இத்தகைய இல்லாமையிலும், பல மட்டங்களில் ஊழல், சுரண்டல், ஆக்கிரமிப்பு, அபகரிப்பு என ஏகப்பட்ட ஓட்டைகள். இவைகளுக்கு இடையே, சத்து குறைப்பாடுள்ள பலவீனமான குழந்தைகள், நலிவடைந்த நிலையில் பெண்களும் மற்றும் பல்வேறு சமுதாய பிரிவினர்கள், உள்நாட்டில் வகுப்புவாத கலவரங்கள் என பல்வேறு பிரச்சனைகள். திட்டங்கள் பல இருந்தும் பயனடைவோருக்கும் தெரியாமலேயே நிறைவேறி வரும் நிலைகள். பாதுகாப்பு என்பது ஒரு காகிதத்தாளில் எழுதப்பட்ட வார்த்தை என இன்னும் பல விஷயங்களைச் அடுக்கிக் கொண்டே போகலாம். இத்தனை அடுக்கடுக்கான காயங்களை குணப்படுத்துவதற்கு மருந்துத் தேடாமல், நடந்த விஷயங்களை குறைச்சொல்பவர்கள் அதிகம்.
                         படித்த இளைஞர்கள், மேற்சொன்ன பிரச்சனைக்களுக்கான காரணம் என்ன என்பதையும், அதன் அடிஆழத்தையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். மாற்றம் இருந்தால் பரவாயில்லை என்று சொல்லுவதை விட மாற்றத்தை ஏற்படுத்திட உங்களுக்கும் வாய்ப்பு இருக்கிறது. அந்த அற்புதமான வாய்ப்பை பயன்படுத்திட வேண்டும். இதன் மூலம் சமுதாயமும் சிறக்கும் நீங்களும் உன்னதமான நிலையை அடைந்து சிறப்படையவும் முடியும். உங்களுக்காக காத்திருக்கிறது பல்வேறு கனவு பணிகள். இதில் மிக முக்கியமான இடத்தில் இருக்கிறது இண்டியன் அட்மினிஸ்ட்ரேட்டிவ் சர்வீஸ் மற்றும் இண்டியன் போலீஸ் சர்வீஸ் போன்ற பணிகள்.
                      இந்த பணிக்கான தேர்வில் நீங்கள் தேர்வாகிவிட்டால் போதும். வாழ்நாள் முழுவதும் நீங்கள் மதிப்புகுரியவராகி விடுகிறீர்கள். நாட்டு மக்களுக்கு நீங்கள் பல்வேறு வழிகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சேவை செய்ய முடியும். இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான அனைத்து தகுதிகள் இருக்கும் பல இளைஞர்களுக்கும் தகுந்த வழிகாட்டுதல்கள் இல்லாததால் இதுகுறித்த சிந்தனையில்லாமல் இருக்கிறார்கள். அவர்களைத் தட்டியெழுப்பவும், தகுந்த வழிகாட்டவும் தான் இந்த கட்டுரை. தொடர்ந்து வாசியுங்கள். சின்ன சின்ன வழிமுறைகளை கடைப்பிடியுங்கள். நீங்கள் நிச்சயம் வெற்றியடைந்து விடுவீர்கள்.
       எவ்வளவு பேரைத் தேர்ந்தெடுக்கிறார்கள்?
           அரசாங்க சேவைகளின் பணிகளுக்காக இளைஞர்களைத் தேர்வு செய்யும் பணியினை மேற்கொண்டு வருகிறது யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் என்றழைக்கப்படும் யூபிஎஸ்சி. ஒவ்வொரு ஆண்டும் 850 பேரை தேர்வு செய்து மத்திய மற்றும் மாநில பணிகளுக்கு அனுப்புகிறது. அதிக மதிப்பெண் பெறுபவர்களை இண்டியன் அட்மினிஸ்ரேட்டிவ் சர்வீஸ் என்றழைக்கப்படும் பணிகளுக்கும், அதற்கு அடுத்த இடத்தில் இருப்பவர்களுக்கு இண்டியன் போலீஸ் சர்வீஸ் பணிகளுக்கும், அதற்கு அடுத்து இண்டியன் •பாரீன் சர்வீஸ் மற்றும் இண்டியன் ரெவன்யூ சர்வீஸ் பணிகளுக்கு அனுப்பப்படுகிறார்கள். இப்படி மொத்தம் 20க்கும் மேற்பட்ட பணிகள் இருக்கின்றன. இவர்கள் இந்தியாவின் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வார்கள். இந்த பணிகளின் சிறப்பை ஏற்கனவே அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், மிகவும் உயர்தர பயிற்சி வழங்கப்பட்டு அவர்களுக்கு பொறுப்பையும், அரசு சேவையையும் உணர வைக்கப்படுவார்கள்.
            எத்தனை தேர்வுகள் எழுத வேண்டும்? தேர்வு எப்போது நடத்தப்படுகிறது?

           நேர்மையான மற்றும் அறிவார்ந்த இளைஞர்கள், இளைஞிகள் மத்திய தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளை எழுதலாம். இந்த தேர்வில் முதல் கட்டமாக முதல்நிலை தேர்வு நடத்தப்படும். இரண்டாவதாக முதன்மை எழுத்து தேர்வு நடத்தப்படும். மூன்றாவதாக நேர்முகத்தேர்வு நடைப்பெறும். பெண்களுக்கும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தை சார்ந்தவர்களுக்கு எந்தவிதமான கட்டணமும் இல்லை. இதர பிரிவினருக்கு 150 ரூபாய் மட்டுமே கட்டணம். முதல் நிலையில் தேர்ச்சி பெறுகிறவர்கள் இரண்டாம் நிலை தேர்வு எழுதவும், இரண்டாம் நிலையில் தேர்ச்சி பெறுபவர்கள் நேர்முகத்தேர்வுக்கும் அழைக்கப்படுவார்கள். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் முதல் நிலை தேர்வு எழுத விளம்பரம் செய்யப்படுகிறது. தேர்வு ஜூன் மாதத்தில் நடைப்பெறும். முதன்மை தேர்வு அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் நடைப்பெறும். நேர்முகத்தேர்வு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் நடைப்பெறும். மே மாதம் முடிவு அறிவிக்கப்படுகிறது. அனைத்து மாநில அரசுகளும் பயிற்சி வகுப்புகளை நடத்துகின்றன. உங்களுக்கு மிகவும் அருகில் உள்ள பயிற்சி மையத்தை தேர்ந்தெடுத்து பயிற்சி மேற்கொள்ளவும் செய்யலாம்.
என்ன மாதிரியான பாடங்கள் படிக்க வேண்டும்?
                 ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பதவியில் இருப்பவர்களுக்கு சமூக அறிவியல், அறிவியல் , கணிதம் ஆங்கிலம் போன்ற அறிவு அவசியம். இது குறித்த கேள்விகள் முதல்நிலை தேர்வில் அதிகளவில் கேட்கப்படுகிறது. இதில் இரண்டு பொது அறிவு தாள்கள் இருக்கின்றன. முதல் தேர்வில் வரலாறு, இந்திய சட்டம், பூகோளம், தேசிய மற்றும் சர்வதேச செய்திகள் மற்றும் பிரச்சனைகள் குறித்தும், அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த கேள்விகளும் கேட்கப்படும். இரண்டாவது தேர்வில் பத்தாவது வகுப்பிற்கு இணையான ஆங்கிலம், கணிதம், லாஜிக்கல் மற்றும் பகுப்பாய்வு திறன் சார்ந்தவைகள், முடிவெடுக்கும் தன்மையை பரிசோதித்தல் போன்றவை சார்ந்த கேள்விகள் கேட்கப்படும். இதுகுறித்து ஒவ்வொரு ஆண்டும் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் வேலைவாய்ப்பு செய்தித்தாளில் அனைத்து செய்திகளையும் உள்ளடக்கிய வகையில் வெளியிடப்படுகிறது. மேலும் நீங்கள் விவரம் தெரிந்துக் கொள்ள http://employmentnews.gov.in/ அல்லது http://www.upsc.gov.in என்ற இணையத்தளங்களுக்கு நேரடியாக சென்று பார்வையிடலாம்.
           தேர்வில் அதிக மதிப்பெண் வாங்குவதற்கு என்ன செய்ய….
                        முதலில், இந்த தேர்வு குறித்து வெளியிடப்படும் செய்தியை முழுமையாக படித்துக் கொள்ளவும். இந்த தேர்வுக்கு NCERT வெளியிடும் பத்தாவது மற்றும் அதற்கு கீழே வகுப்புக்களுக்கான பாடநூல்கள் குறிப்பாக வரலாறு, புவியியல், அறிவியல், பொருளாதாரம், அரசியல் அறிவியல் போன்றவற்றை நன்றாக படித்துக் கொள்ள வேண்டும். மேலும் ஒரு அட்லஸ் வைத்துக் கொள்ள வேண்டும். தேசிய அளவில் வெளியாகும் இரண்டு மூன்று செய்தித்தாள்களை தினமும் படிக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு ஆண்டு அரசு வெளியிடும் இயர் புத்தகத்தையும், மனோரமா இயர் புத்தகம் போன்றவற்றையும் படிக்க வேண்டும். நீங்கள் தேர்வுக்கு திறம்பட தயாராக வேண்டும். தினமும் ஆல் இண்டியா ரேடியாவில் நியூஸ் அனாலிசிஸ் இரவு 9 மணியில் இருந்து 9.30 மணி வரை ஒலிபரப்பாகிறது. இதனை தவறாமல் கேட்க வேண்டும். இப்படி தொடர்ந்து கேட்டு வரும் போது உங்களுக்குள் ஒரு நம்பிக்கை பிறக்கும்.
  வெற்றிக்கான வழிமுறைகள் தொடரும்…
                         கட்டுரையாளர்: காரைக்கால் பகுதியைச் சார்ந்த முருகராம். இவர் இந்த ஆண்டு ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதி, 623 ரேங்க்கை பெற்று இண்டியன் ரெவன்யூ சர்வீஸ் பணிகளுக்கு தேர்வாகிறார். இவர் பி.டெக் பட்டதாரி. முதலில் டாடா கன்சல்டான்ஸி சர்வீஸ் பணியாற்றியிருக்கிறார். ஐ.ஏ.எஸ் தேர்வுக்காக தனது பணியினைத் துறந்துவிட்டு மும்முரமாக தயார் செய்து தேர்வாகி இருக்கிறார்.
ஐ.ஏ.எஸ் தேர்வு சார்ந்த சந்தேகங்களை கடிதம் வாயிலாக எழுதி அனுப்பினால், உங்களுக்கு உரிய முறையில் வழிகாட்டப்படும்.
தகவல் :  Mourugaram S.V, Karaikal, peace2047@gmail.com
தமிழாக்கம் : சக்திவேல் , MSSRF, Chennai

16 மே 2014

இந்தியா பாராளுமன்றத்தேர்தல்-2014 தமிழ்நாடு.


மரியாதைக்குரியவர்களே,
                    வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.2014 இந்திய பாராளுமன்றத்தேர்தலில் நம்ம தமிழகத்தில் வெற்றி பெற்ற கட்சிகளும் தொகுதிகளும் பற்றி காண்போம். 
வெளியிட்ட மாண்புமிகு தேர்தல் ஆணையத்திற்கு நன்றிகள் பல....
.தங்கள் பார்வைக்கு
இந்திய தேர்தல் ஆணையத்தின்  வலைத்தள முகவரி 
             ..http://eciresults.nic.in/statewiseS22.htm?st=S22
ELECTION COMMISSION OF INDIA
GENERAL ELECTION TO LOK SABHA TRENDS & RESULT 2014
Click Here for: Vidhan Sabha Trends and Result 2014

Click links below for
Partywise
Constituencywise-All Candidates
Constituencywise Trends
Constituencywise Trends
Select State  


Tamil Nadu Result Status


Status Known For 39 out of 39 Constituencies
Constituency Const. No.Leading CandidateLeading PartyTrailing CandidateTrailing PartyMarginStatus

Arakkonam7HARI, G.All India Anna Dravida Munnetra KazhagamELANGO, N.RDravida Munnetra Kazhagam240766Result Declared
Arani12V.ELUMALAIAll India Anna Dravida Munnetra KazhagamR.SIVANANDAMDravida Munnetra Kazhagam243844Result Declared
Chennai central4S.R. VIJAYAKUMARAll India Anna Dravida Munnetra KazhagamDAYANIDHI MARANDravida Munnetra Kazhagam45841Result Declared
Chennai North2VENKATESH BABU .T.GAll India Anna Dravida Munnetra KazhagamGIRIRAJAN .RDravida Munnetra Kazhagam99704Result Declared
Chennai South3DR. J. JAYAVARDHANAll India Anna Dravida Munnetra KazhagamT.K.S.ELANGOVANDravida Munnetra Kazhagam136625Result Declared
Chidambaram27CHANDRAKASI, MAll India Anna Dravida Munnetra KazhagamTHIRUMAAVALAVAN, THOLViduthalai Chiruthaigal Katchi128495Result Declared
Coimbatore20NAGARAJAN, P.All India Anna Dravida Munnetra KazhagamRADHAKRISHNAN, C.P.Bharatiya Janata Party42016Result Declared
Cuddalore26ARUNMOZHITHEVAN.AAll India Anna Dravida Munnetra KazhagamNANDAGOPALAKRISHNAN.K.Dravida Munnetra Kazhagam203125Result Declared
Dharmapuri10ANBUMANI RAMADOSSPattali Makkal KatchiMOHAN.P.SAll India Anna Dravida Munnetra Kazhagam77146Result Declared
Dindigul22UDHAYA KUMAR .MAll India Anna Dravida Munnetra KazhagamGANDHIRAJAN SDravida Munnetra Kazhagam127845Result Declared
Erode17SELVAKUMARA CHINNAYAN SAll India Anna Dravida Munnetra KazhagamGANESHAMURTHI.AMarumalarchi Dravida Munnetra Kazhagam211563Result Declared
Kallakurichi14KAMARAJ. KAll India Anna Dravida Munnetra KazhagamMANIMARAN. RDravida Munnetra Kazhagam223507Result Declared
Kancheepuram6MARAGATHAM KAll India Anna Dravida Munnetra KazhagamSELVAM GDravida Munnetra Kazhagam146866Result Declared
Kanniyakumari39RADHAKRISHNAN P.Bharatiya Janata PartyVASANTHA KUMAR H.Indian National Congress128662Result Declared
Karur23THAMBIDURAI,M.All India Anna Dravida Munnetra KazhagamCHINNASAMY, M.Dravida Munnetra Kazhagam195247Result Declared
Krishnagiri9ASHOK KUMAR.KAll India Anna Dravida Munnetra KazhagamCHINNA PILLAPPA.PDravida Munnetra Kazhagam206591Result Declared
Madurai32R.GOPALAKRISHNANAll India Anna Dravida Munnetra KazhagamV VELUSAMYDravida Munnetra Kazhagam197436Result Declared
Mayiladuthurai28BHARATHI MOHAN R.KAll India Anna Dravida Munnetra KazhagamHYDER ALI.SManithaneya Makkal Katchi277050Result Declared
Nagapattinam29GOPAL. DR. KAll India Anna Dravida Munnetra KazhagamVIJAYAN. A.K.SDravida Munnetra Kazhagam106079Result Declared
Namakkal16SUNDARAM P.RAll India Anna Dravida Munnetra KazhagamGANDHISELVAN.SDravida Munnetra Kazhagam294374Result Declared
Nilgiris19GOPALAKRISHNAN, C.All India Anna Dravida Munnetra KazhagamRAJA, A.Dravida Munnetra Kazhagam104940Result Declared
Perambalur25MARUTHARAJAA, R.P.All India Anna Dravida Munnetra KazhagamSEEMANUR PRABU, S.Dravida Munnetra Kazhagam213048Result Declared
Pollachi21MAHENDRAN.CAll India Anna Dravida Munnetra KazhagamESWARAN.E.R.Bharatiya Janata Party140974Result Declared
Ramanathapuram35ANWHAR RAAJHAA.AAll India Anna Dravida Munnetra KazhagamMOHAMED JALEEL .SDravida Munnetra Kazhagam119324Result Declared
Salem15PANNERSELVAM.VAll India Anna Dravida Munnetra KazhagamUMARANI. SDravida Munnetra Kazhagam267610Result Declared
Sivaganga31SENTHILNATHAN PRAll India Anna Dravida Munnetra KazhagamDHURAI RAAJ SUBHADravida Munnetra Kazhagam225144Counting In Progress
Sriperumbudur5RAMACHANDRAN, K.N. THIRUAll India Anna Dravida Munnetra KazhagamJAGATHRAKSHAKAN, S. THIRUDravida Munnetra Kazhagam102646Result Declared
Tenkasi37VASANTHI.MAll India Anna Dravida Munnetra KazhagamDR.KRISHNASAMY.K.Puthiya Tamilagam161774Result Declared
Thanjavur30PARASURAMAN.KAll India Anna Dravida Munnetra KazhagamBAALU.T.RDravida Munnetra Kazhagam144119Result Declared
Theni33PARTHIPAN, R.All India Anna Dravida Munnetra KazhagamPON. MUTHURAMALINGAMDravida Munnetra Kazhagam314532Result Declared
Thiruvallur1VENUGOPAL.P.(DR)All India Anna Dravida Munnetra KazhagamRAVIKUMAR.DViduthalai Chiruthaigal Katchi323430Result Declared
Thoothukkudi36JEYASINGH THIYAGARAJ NATTERJEE.JAll India Anna Dravida Munnetra KazhagamJEGAN. PDravida Munnetra Kazhagam124002Result Declared
Tiruchirappalli24KUMAR.PAll India Anna Dravida Munnetra KazhagamANBHALAGAN.MUDravida Munnetra Kazhagam150476Result Declared
Tirunelveli38PRABAKARAN.K.R.PAll India Anna Dravida Munnetra KazhagamDEVADASA SUNDARAMDravida Munnetra Kazhagam126099Result Declared
Tiruppur18V.SATHYABAMAAll India Anna Dravida Munnetra KazhagamN.DINESHKUMARDesiya Murpokku Dravida Kazhagam179315Result Declared
Tiruvannamalai11VANAROJA RAll India Anna Dravida Munnetra KazhagamANNADURAI C NDravida Munnetra Kazhagam168606Result Declared
Vellore8SENGUTTUVAN, B.All India Anna Dravida Munnetra KazhagamSHANMUGAM, A.C.Bharatiya Janata Party59393Result Declared
Viluppuram13RAJENDRAN SAll India Anna Dravida Munnetra KazhagamMUTHAIYAN K DRDravida Munnetra Kazhagam193367Result Declared
Virudhunagar34RADHAKRISHNAN TAll India Anna Dravida Munnetra KazhagamVAIKOMarumalarchi Dravida Munnetra Kazhagam145551Result Declared
Last Updated at 7:22 AM On 17/5/2014

இந்தியா தேர்தல்-2014 இன்று காலை நிலவரம்....


மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.நம்ம இந்தியா தேர்தல்-2014 இன்று காலை நிலவரப்படி.........

ELECTION COMMISSION OF INDIA
GENERAL ELECTION TO LOK SABHA TRENDS & RESULT 2014
Click Here for: Vidhan Sabha Trends and Result 2014

Click links below for
Partywise
Constituencywise-All Candidates
Constituencywise Trends

Partywise Trends & Result
Select State  
Last Updated at 5:22 AM On 17/5/2014
View vote share

ALL INDIA Result Status
Status Known For 543 out of 543 Constituencies
Party WonLeadingTotal
Bharatiya Janata Party2784282
Communist Party of India101
Communist Party of India (Marxist)909
Indian National Congress43144
Nationalist Congress Party606
Aam Aadmi Party404
All India Anna Dravida Munnetra Kazhagam36137
All India N.R. Congress101
All India Trinamool Congress34034
All India United Democratic Front303
Biju Janata Dal17320
Indian National Lok Dal202
Indian Union Muslim League202
Jammu & Kashmir Peoples Democratic Party303
Janata Dal (Secular)202
Janata Dal (United)202
Jharkhand Mukti Morcha202
Kerala Congress (M)101
Lok Jan Shakti Party516
Naga Peoples Front101
National Peoples Party101
Pattali Makkal Katchi101
Rashtriya Janata Dal404
Revolutionary Socialist Party101
Samajwadi Party505
Shiromani Akali Dal404
Shivsena18018
Sikkim Democratic Front101
Telangana Rashtra Samithi6511
Telugu Desam51116
All India Majlis-E-Ittehadul Muslimeen101
Apna Dal202
Rashtriya Lok Samta Party303
Swabhimani Paksha101
Yuvajana Sramika Rythu Congress Party369
Independent303
Total51132543

12 மே 2014

இந்திய சீர்தர நேரம். IST +5.30மற்றும் புவியிடங்காட்டி..

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
                   கொங்கு தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
                   இந்திய சீர்தர நேரம் என்பது இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மிசாப்பூர் நகரத்தை மையமாக வைத்து ஒருங்கிணைந்த உலக சீர்தர நேரத்தின் +5.30 மணி நேர வித்தியாசத்தை அடிப்படையாக வைத்து 82.5 டிகிரி தீர்க்க ரேகை அதாவது நெட்டாங்கு (Longititude) புள்ளியினை இந்திய சீர்தர நேரத்துக்கான புள்ளியாக கொண்டு இந்திய நாட்டின் நேரத்தை கணக்கிடப்படுகிறது.
        UTC - Universal Time  Co-ordinated ஒருங்கிணைந்த சீர்தர நேரம் என்பது இங்கிலாந்து நாட்டின் இலண்டன் மாநகரத்திலுள்ள கிரீன்விச் சிறு நகரத்தில் உள்ள ராயல் வானிலை ஆராய்ச்சி மையத்தின் இடைநிலை சூரிய நேரத்தை நண்பகல் நேரத்தை 12.00மணி என மையமாக வைத்து கணக்கிடப்படுகிறது.இந்த நேரத்தை கிரீன்விச் மீன் டைம் என்றும் கூறுவர்.அதாவது GMT - Greenwich Mean Time என்பர்.
                         
                    (இந்த கிரீன்விச் நகரத்தை மையமாக வைத்து வடக்கில் 180 பாகை (டிகிரி) எனவும்,தெற்கில் 180பாகை (டிகிரி)எனவும் பூமியின் வட்டத்தை கணக்கிட்டு இத்தனை பாகை,இத்தனை கலை,இத்தனை விகலை தூரத்தில் ஓர் இடம் அமைந்து உள்ளது என்று கணக்கிட்டு அறியலாம்.இதுவே இன்றைக்கு புவியடங்காட்டி என்னும் GPS (Global Positioning System) முறையில் கூகுள் வரைபடம் உள்ளிட்ட எந்த முறை புவியிடங்காட்டுதல் முறையிலும் குறிப்பிட்ட இடத்தை காண முடிகிறது.)

             கனடா நாட்டைச் சேர்ந்த ஸ்டேண்ட்ஃபோர்டு ஃபிளெம்மிங் (Standford Fleming) என்பவர் 1876ஆம் ஆண்டு பீமியின் உருண்டை வடிவத்தை 360 பாகையாக (டிகிரி) கொண்டு அதன்படி ஒவ்வொரு 15 பாகைக்கும் (டிகிரிக்கும்) ஒரு மணி நேரம் என கணக்கிட்டு 24 மணி நேரத்தை உலகம் முழுவதும் பயன்படும் விதத்தில் 24மணி நேரவலயத்தை அமைத்து வெளியிட்டார்.

   கிரீன்விச் 0பாகை(டிகிரி) கற்பனைக்கோட்டை மையமாக வைத்து   வரையப்பட்ட நேர்கோட்டிலிருந்து நிலநடுக்கோடு என்னும் பூமத்திய ரேகையை தொடும் இடத்தை   0பாகை (டிகிரி) என  கணக்கிட்டு பூமத்திய ரேகையிலிருந்து கிழக்கிலும்,மேற்கிலும் பசிபிக் பெருங்கடலிலுள்ள 180 பாகை (டிகிரி) வரை EAST & WEST என  கணக்கிட்டு IST -(International Date Time) உலக நாள்காட்டி நேரம் குறிக்கப்படுகிறது.

             உதாரணமாக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் GPS முறைப்படி அல்லது சோதிடவியல் முறைப்படி சத்தியமங்கலம் அமைந்துள்ள இடம்11பாகை 30கலை வடக்கு,& 77பாகை 14விகலை கிழக்கு என்று குறிப்படப்பட்டு இருக்கும்.இதில்  (11 Degree 30 Minutes) 11பாகை 30 கலை வடக்கு என்று குறித்துள்ளதை வைத்து பூமத்திய ரேகையிலிருந்து வடக்கில்  11பாகை 30 கலை தூரத்தில் சத்தியமங்கலம் அமைந்துள்ளது என தெரிந்து கொள்ளலாம்.அடுத்து 77டிகிரி 14 விகலை தூரத்தில் கிழக்கு என்று குறிக்கப்பட்டுள்ளதை கிரீன்விச் நகரத்தின் 0டிகிரி நேர்கோட்டிலிருந்து கிழக்கில் 77 டிகிரி 14 விகலை தூரத்தில் சத்தியமங்கலம் அமைந்துள்ளது என அறியலாம்.
                    அதாவது வடக்காக மற்றும் கிழக்காக (11பாகை 30கலை வடக்கு,& 77பாகை 14விகலை கிழக்கு) வெட்டும் அல்லது இணைக்கும் இடம் சத்தியமங்கலம் என தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறாக உலகின் அனைத்து இடங்களையும் அறியலாம்.

01 மே 2014

ALL INDIA DRIVERS APPRECIATION DAY

மரியாதைக்குரியவர்களே,
             வணக்கம்.”அனைத்திந்திய சாரதிகள் தினவிழா” நம்ம சத்தியமங்கலத்தில் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கருத்தரங்கம் நடத்த உள்ளோம்.









ஓட்டுநர்கள் அடையாளச்சின்னம்

மரியாதைக்குரியவர்களே,
          வணக்கம். இது தொழில் சார்ந்த ஓட்டுநர்களுக்கான அடையாள சின்னம்.



முனைவர்.இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phil.,Ph.D., அவர்களது வாழ்க்கைக்குறிப்பு... (Dr.R.K.Manikkam, professor,Writer)

                                                                                                        முனைவர். இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phi...