25 ஜூன் 2017

GSTவரி விதிப்பு முறை!-

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.
                           வருகிற 2017 ஜூலை மாதம் முதல் தேதி முதல்,ஒரே நாடு ஒரே வரி என்ற விதி உருவாக்கி ‘சரக்கு மற்றும் சேவை வரி (GST) என்னும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறை அமல்படுத்த உள்ளது.எனவே,

ஜி.எஸ்.டியை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்!
நமது நாட்டில் பலவிதமான வரிகள் அரசு மூலமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. தனிநபரிடமோ அல்லது நிறுவங்களிடம் இருந்தோ அரசு வசூலிக்கும் வரிகளை வைத்துதான் அரசு இயந்திரம் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் பலவிதமான வரிகள் விதிக்கப்படுகிறது.
இவற்றை இரண்டு வகைகளாக பிரிக்கலாம்.
 ஒன்று நேர்முக வரி மற்றொன்று மறைமுக வரி.

(1) நேர்முக வரி.
                 தனிநபர் வருமான வரி, நிறுவன வருமான வரி, சொத்து வரி, போன்றவைகள் நேர்முக வரி எனப்படும். இந்த வரியானது குறிப்பிட்ட நபரிடமோ, நிறுவனத்திடமோ அரசாங்கத்தால் நேரடியாக வசூலிக்கப்படும்.

(2)மறைமுக வரி:
                   கலால் வரி, சுங்க வரி, விற்பனை வரி அல்லது மதிப்புக்கூட்டு வரி போன்றவைகள் மறைமுக வரிகளாகும். நாம் அன்றாடம் வாங்கும் பொருட்கள், சேவைகள் அனைத்தும் இந்த வரியை உள்ளடக்கித்தான் விலைக்கு வாங்குகிறோம். இந்த வரிகள் பல வகையான நபர்களிடம் பெறப்பட்டாலும் ,இதனை அரசிடம் கட்டும் பொறுப்பு இதனை வசூல் செய்பவரிடம் இருக்கிறது. .

ஜி.எஸ்.டி:
                          ஒரு பொருளின் மீதோ, சேவையின் மீதோ நாம் இப்படி மறைமுகமாக கட்டும் வரிகளுக்கு மாற்றாக கொண்டுவரப்பட்டதுதான் ஜி.எஸ்.டி வரி (Service and goods tax ). தற்போதைய கலால் வரி, மதிப்புக் கூட்டு வரி மற்றும் சேவை வரி அனைத்தும் நீக்கப்பட்டு அனைத்தையும் ஒரு வரியின் கீழ் கொண்டு வரப்படுவதுதான் இந்த ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை.

                தற்போது பல்வேறு மாநிலங்களும் பல்வேறு விதமான மதிப்புக் கூட்டு வரிகளை வசூலித்து வருகிறது. பாண்டிச்சேரில் நீங்கள் ஒரு பொருளை 50 ரூபாய்க்கு வாங்குகிறீர்கள் என்றால் தமிழகத்தில் அதே பொருளின் விலை சற்று அதிகமாக இருக்கும். இந்த விலை கேரளா, கர்நாடக, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் வேறுபடும். இந்த விலைமாற்றத்திற்கான காரணம் அந்தந்த மாநிலங்களில் மாறுபடும் வரிவிதிப்பு தான். மாநிலங்கள் தங்களுக்குள் வர்த்தகம் செய்து கொண்டு இருக்கும் நிலையில் இந்த வரியால் குழப்பம்தான் நிலவி வருகிறது.

                இந்தக் குழப்பங்களைப் போக்கும் வகையில் அனைத்து வரிகளும் ஒரு வரியின் கீழ் கொண்டு வரவே ஜிஎஸ்டி கொண்டு வரப்படுகிறது. நாடு முழுவதும் ஒரே வரி பின்பற்றப்படும். நாடு முழுவதும் வர்த்தகம் கையாளுவதில், வரி வசூலிப்பதில் இருக்கும் சிக்கல்களை களைவதற்கு இந்த முறை பின்பற்றப்படுகிறது.

                     ஜி.எஸ்.டி வரியானது மத்திய அரசின் ஜிஎஸ்டி (CGST),மாநில அரசின் ஜிஎஸ்டி (SGST), மாநிலங்களுக்கு இடையேயான ஜிஎஸ்டி (IGST) என மூன்று வகையாக வசூலிக்கப்படும்.

                         மத்திய அரசின் ஜிஎஸ்டி (CGST): இந்த வருவாய் முழுவதும் மத்திய அரசின் மூலம் வசூலிக்கப்படும்.

                        மாநில அரசின் ஜிஎஸ்டி (SGST) : இந்த வருவாய் முழுவதும் மாநில அரசுகளால் வசூலிக்கப்படும்.

                 மாநிலங்களுக்கு இடையேயான ஜிஎஸ்டி (IGST) : மாநிலங்களுக்கு இடையில் நடைபெறும் விற்பனையின் மூலம் வரும் வருவாய் மத்தியஅரசால் வசூலிக்கப்படும்.

எடுத்துக்காட்டு:
                  ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு வணிகர் சுமார் 10,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்களை அதே மாநிலத்தில் உள்ள ஒரு வாடிக்கையாளருக்கு விற்கிறார் என்று வையுங்கள். இந்த விற்பனையில், CGST விகிதம் 9% மற்றும் SGST விகிதம் 9% , இரண்டையும் உள்ளடக்கிய சரக்கு மற்றும் சேவை வரி 18% ஆகும். இந்த விற்பனையில் வணிகர் 1800 ரூபாயை வரியாக வசூல் செய்வார். இந்த தொகையானது ஆந்திர அரசின் பங்கு 900 ரூபாய் மற்றும் மத்திய அரசின் பங்கு 900 ரூபாய் ஆகிய இரண்டையும் உள்ளடக்கியது ஆகும். இந்த வரியில் தங்களுக்கான தொகையை மத்திய, மாநில அரசுகள் பகிர்ந்து எடுத்துக்கொள்ளும்.

                       இப்போது, ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு வணிகர், தமிழகத்தில் உள்ள ஒரு வணிகருக்கு சுமார் 10,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்களை விற்பனை செய்கிறார் என்று வையுங்கள். இந்த விற்பனையில், CGST விகிதம் 9% மற்றும் SGST விகிதம் 9% இரண்டையும் உள்ளடக்கிய சரக்கு மற்றும் சேவை வரி 18% ஆகும். இந்த விற்பனையில் வரியாக 1800 ரூபாயை IGST ஆக வணிகர் வசூல் செய்கிறார். இந்த IGST தொகை மத்திய அரசுக்கு செலுத்தப்படும். ஆகையால் CGST மற்றும் SGST ஆகியவைகளை தனியாக செலுத்த வேண்டி இருக்காது.
மேலே, சொல்லப்பட்ட அனைத்து வரிகளுக்கான விலையும் அந்தந்த பொருளின் மீது கூட்டப்பட்டு கடைசியாக ஒரு பொருளை வாங்கும் நுகர்வோரிடம் அந்த தொகை வசூலிலிக்கப்படும்.

                      உதாரணமாக, நாம் ஒரு சோப்பை 100 ரூபாய் கொடுத்து வாங்குகிறோம் என்றால், அதில் மேலே சொன்ன ஜிஸ்டி வரிகளும் சேர்த்துதான் விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையால் இனி இந்தியா எங்கும் ஒரே வரிவிகிதம் செயல் படுத்தப்பட்டு இனி அனைத்து மாநிலங்களிலும் ஒரே விலையில் பொருட்கள் கிடைக்கும்.

                         இவ்வாறு மத்திய மற்றும் மாநில அரசுகள் எண்ணற்ற மற்றும் சிக்கலான மறைமுக வரிகளை நீக்கி, இந்த சரக்கு மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி) அமல்படுத்துவதன்மூலம் வரி நிர்வாகம் மிகவும் எளிமையாக்கப்படும் என்று நம்பப்படுகிறது. மேலும் வெளிப்படையான வரிவிதிப்பு முறையால் நுகர்வோர்கள் பயனடைவார்கள். மேலும், உற்பத்தியாளர்கள் வரியை எளிதாகக் கட்டவும், நிர்வாகம் செய்யவும் இந்த மசோதா உதவும் எனவும் கூறப்படுகிறது. இருப்பினும், இந்த வரியானது மாநில வரி வருவாயை பாதிக்கும் எனவும் ஒருசாரார் தொடர்ந்து குற்றச்சாட்டை கூறிவருகின்றனர். சாதாரணமாக அனைவரும் அறிந்து வைத்திருப்பது வீட்டு வரி, தண்ணீர் வரி, விற்பனை வரி என்பதுதான். மேலும் சில முக்கிய வரி வகைகள் உள்ளன. அவற்றைப் பற்றி அறிந்துகொள்வோம்.

நேர்முக வரிகள்: 
ஒரு தனிநபர் அல்லது நிறுவனம் அல்லது வருமானத்தின் மீது போடப்படுவது. எ.கா. வருமானவரி, சொத்துவரி, நிலவரி.

மறைமுக வரிகள்: 
பண்டங்களின் மீது விதிக்கப்படுவது. எ.கா. இறக்குமதிவரி, கேளிக்கைவரி, விற்பனைவரி, சுங்கவரி, கலால்வரி.

மையஅரசு வரிகள்: 
வருமானவரி, சிறப்பு தீர்வைகள், செல்வவரி, ஏற்றுமதி இறக்குமதி வரி, ஆயத்தீர்வைகள்.
(மத்திய அரசுக்கு அதிக வருவாய் அளிப்பது கலால்வரி.)

மாநில அரசு வரிகள்:
நிலவரி (வேளாண்மை)பதிவுக்கட்டணங்கள், தொழில், வணிகம், வேலை மீதான வரிகள், விற்பனை வரி, கேளிக்கை வரி, மோட்டார் வாகன வரி, வேளாண்மை வரி.
(மாநில அரசுக்கு அதிக வருவாய் தருவது விற்பனை வரி)

ஆக்ட்ராய் வரி: 
நகருக்குள் வரும் பொருட்கள் மீது நகராட்சி விதிப்பது.

VAT (Value Added Tax) : மதிப்பு கூட்டப்பட்ட வரி.
ஒரு பொருளின் உற்பத்தியின் ஒவ்வொரு கட்டத்திலும் விதிக்கப்படும் வரி.

MODVAT:  

ஏற்றுமதியாளர்களுக்கு உலக சந்தையில் போட்டியிட உதவுவது.

ஓட்டுநர் இருக்கையின் சிறப்பு

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.ஓட்டுநரின் சிறப்பும்..!
அவர் இருக்கையின் பற்றிய
சிறப்பும்.மதிப்பும்
தெரியுமா உங்களுக்கு..!?
நடத்துனர் அமர்ந்திருக்கும்
இருக்கையை
CI வந்தால் எழுந்து நின்று
சீட் தரவேண்டும்.
JE வந்தால் CI எழந்துநின்று
சீட் தரவேண்டும்.
AEவந்தால் JE எழுந்து நின்று
சீட் தரவேண்டும்.
BM வந்தால் AE எழுந்து நின்று
சீட் தரவேண்டும்.
DM வந்தால் BM எழுந்து நின்று
சீட் தரவேண்டும்.
GM வந்தால் DM எழுந்துநின்று
சீட் தரவேண்டும்.
MD வந்தால் GM எழுந்து நின்று
சீட் தரவேண்டும்.
சேர்மன் வந்தால் MD எழுந்துநின்று
சீட் தரவேண்டும்.
செகரட்டிரி வந்தால் சேர்மன் எழுந்துநின்று
சீட் தரவேண்டும்.
அமைச்சர் வந்தால் செகரட்டிரி எழுந்துநின்று
சீட் தரவேண்டும்.
முதல்வர் வந்தால் அமைச்சர் எழுந்துநின்று
சீட் தரவேண்டும்.
கவர்னர் வந்தால் முதல்வர் எழுந்துநின்று
சீட் தரவேண்டும்.
பிரதமர் வந்தால் கவர்னர் எழுந்து நின்று
சீட் தரவேண்டும்.
ஜனாதிபதி வந்தால் பிரதமர் எழுந்துநின்று
சீட் தரவேண்டும். இந்தியாவில்
ஜனாதிபதி மட்டுமே யார் வந்தாலும்
எழுந்துநின்று சீட் தரவேட்டியது இல்லை.
அதுபோலதான் ஓட்டுநருக்கும் அவர்இருக்கைக்கும் ஒரு மதிப்பு இருக்கிறது. அவர்யார் வந்தாலும்
எழுந்து நிற்க்தேவையும் இல்லை.
ஒட்டுநர் இருக்கையை விட்டுதரவேண்டியது
இல்லை.
அவ்வளவு உயர்வானது ஓட்டுநர் இருக்கை.
என்பதை இனியாவது தெரிந்து
கொள்ளவேண்டியது நம் கடமை.

19 ஜூன் 2017

தமிழின் சிறப்பு...

மரியாதைக்குரியவர்களே,
              வணக்கம். தமிழின் சிறப்பு
ஒரே எழுத்தில் ஆரம்பிக்கும் வார்த்தைகளைக் கொண்டு கதை எழுத முடியுமா ?
அகரத்தில் ஓர் இராமாயணம்
இராமாயண கதை முழுதும்
'அ' என்று ஆரம்பிக்கும் வார்த்தைகளால் வடிவமைக்கப் பட்டுள்ளது.
*இதுவே #தமிழின் சிறப்பு*
அனந்தனே
அசுரர்களை
அழித்து,
அன்பர்களுக்கு
அருள
அயோத்தி
அரசனாக
அவதரித்தான்.
அப்போது
அரிக்கு
அரணாக
அரசனின்
அம்சமாக
அனுமனும்
அவதரித்ததாக
அறிகிறோம்.
அன்று
அஞ்சனை
அவனிக்கு
அளித்த
அன்பளிப்பு
அல்லவா
அனுமன்?
அவனே
அறிவழகன்,
அன்பழகன்,
அன்பர்களை
அரவணைத்து
அருளும்
அருட்செல்வன்!
அயோத்தி
அடலேறு,
அம்மிதிலை
அரசவையில்
அரசனின்
அரியவில்லை
அடக்கி,
அன்பும்
அடக்கமும்
அங்கங்களாக
அமைந்த
அழகியை
அடைந்தான் .
அரியணையில்
அமரும்
அருகதை
அண்ணனாகிய
அனந்தராமனுக்கே!
அப்படியிருக்க
அந்தோ !
அக்கைகேயி
அசூயையால்
அயோத்தி
அரசனுக்கும்
அடங்காமல்
அநியாயமாக
அவனை
அரண்யத்துக்கு
அனுப்பினாள்.
அங்கேயும்
அபாயம்!
அரக்கர்களின்
அரசன் ,
அன்னையின்
அழகால்
அறிவிழந்து
அபலையை
அபகரித்தான்
அங்கேயும்
அபாயம்!
அரக்கர்களின்
அரசன் ,
அன்னையின்
அழகால்
அறிவிழந்து
அபலையை
அபகரித்தான்
அந்த
அடியார்களில்
அருகதையுள்ள
அன்பனை
அரசனாக
அரியணையில்
அமர்த்தினர்.
அடுத்து
அன்னைக்காக
அவ்வானரர்
அனைவரும்
அவனியில்
அங்குமிங்கும்
அலைந்தனர்,
அலசினர்.
அனுமன்,
அலைகடலை
அலட்சியமாக
அடியெடுத்து
அளந்து
அக்கரையை
அடைந்தான்.
அசோகமரத்தின்
அடியில் ,
அரக்கிகள்
அயர்ந்திருக்க
அன்னையை
அடிபணிந்து
அண்ணலின்
அடையாளமாகிய
அக்கணையாழியை
அவளிடம்
அளித்தான்
அன்னை
அனுபவித்த
அளவற்ற
அவதிகள்
அநேகமாக
அணைந்தன.
அன்னையின்
அன்பையும்
அருளாசியையும்
அக்கணமே
அடைந்தான்
அனுமன்.
அடுத்து,
அரக்கர்களை
அலறடித்து ,
அவர்களின்
அரண்களை ,
அகந்தைகளை
அடியோடு
அக்கினியால்
அழித்த
அனுமனின்
அட்டகாசம் ,
அசாத்தியமான
அதிசாகசம்.
அனந்தராமன்
அலைகடலின்
அதிபதியை
அடக்கி ,
அதிசயமான
அணையை
அமைத்து,
அக்கரையை
அடைந்தான்.
அரக்கன்
அத்தசமுகனை
அமரில்
அயனின்
அஸ்திரத்தால்
அழித்தான்.
அக்கினியில்
அயராமல்
அர்பணித்த
அன்னை
அவள்
அதி
அற்புதமாய்
அண்ணலை
அடைந்தாள்.
அன்னையுடன்
அயோத்தியை
அடைந்து
அரியணையில்
அமர்ந்து
அருளினான்
அண்ணல் .
அனந்தராமனின்
அவதார
அருங்கதை
அகரத்திலேய
அடுக்கடுக்காக
அமைந்ததும்
அனுமனின்
அருளாலே.
உலகில் எந்த மொழியாலும் அசைக்க முடியாத நம் தமிழ்.
.....

வேட்டி அணியுங்க!

 மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். லுங்கி அணிவதை தவிர்த்து வேட்டி அணியுங்க, லுங்கி அணிவதால் அனுபவிக்கும் தொல்லைகளும்,வேட்டி அணிவதால் அனுபவிக்கும் நன்மைகளும் இதோ...
                 நீங்களே முடிவு செய்யுங்கள்.விலை குறைவாகவும், இயற்கையை பாதிக்காததும்,  மரியாதையான பார்வை தரக்கூடியதும், உடலுக்கும் நன்மை தரக்கூடிய  வேட்டியை பயன்படுத்துவதா..?அல்லது  மூன்று மடங்கு விலை கொடுத்து, பலர் குடிக்கும் நீரில் விஷம் கலந்து, ஆரோக்கியம் இல்லாத வெளிநாட்டு உடையாம் லுங்கியை உடுத்துவதா..?

                                          ஒரு லுங்கி தயாரிக்க சுமார் 4,000 லிட்டர் குடிநீர் சாய விஷம் கலக்கப்பட்டு நாசமாகிறது.லுங்கி என்பது இந்திய - தமிழ் கலாச்சாரமன்று. நம் நாட்டு சீதோஷ்ண நிலைக்கு லுங்கி சரியான உடை கிடையாது. மூட்டப்படுவதால் அதாவது முனைகள் இணைத்து தைக்கப்படுவதால், காற்றோட்டம் தடைபடுகிறது. அதில் பாரம்பரியமோ, ஆரோக்கியமோ, மரியாதையோ கிடையாது.
             மாறாக வெள்ளை வேட்டி, அதுவும் கைத்தறி வேட்டி சாயமிடாமல் கிடைக்கும். வீட்டில் இருக்கும்போது கட்டிக்கொள்ள பயன்படுத்தலாம். மிகவும் வசதியாக இருக்கும். நம் ஆரோக்கியத்துக்கு மிக நல்லது. கைத்தறி வேட்டியில் நூல் இடைவெளிகளால் காற்றோட்டம் மிக நன்றாக இருக்கும். மூட்டுதலும் இல்லையென்பது இன்னொரு நன்மைங்க. வீட்டில் தான் என்பதால் அனைவரும் நிச்சயம் செயல்படுத்தலாம். செலவும் மிக குறைவு. மிக நல்ல வேட்டி நூறு ரூபாய் விலைதான் இருக்கும். ஆனால் ஒரு நல்ல லுங்கி வாங்க முன்னூறு ரூபாய் செலவு செய்ய வேண்டும்!

17 ஜூன் 2017

காவல்துறை பற்றி.

மரியாதைக்குரியவர்களே,
                     வணக்கம்.நமது தமிழ்நாடு மாநில காவல்துறை பற்றி அறிவோம் வாங்க.பதிவிட்ட நணபர் திரு.சரவண அரவிந்த் அவர்களுக்கு நன்றிங்க.
தமிழ்நாடு காவல்துறை பற்றி..
முதன் முதலில் இது மதராசு நகரக் காவல்துறைச் சட்டம் 1888 (The Madras City Police Act 1888) இற்கு ஏற்பத் துவக்கப்பட்டது. இச்சட்டத்திற்கு ஆளுநரின் ஒப்புதல் 1888, ஏப்ரல் 12 இலும், Governor-General -ன் ஒப்புதல் 1888, சூன் 26 இலும் வழங்கப்பட்டது. தொடக்கத்தில் ஒரு ஆணையாளரைக் கொண்டு உருவாக்கப்பட்ட இது சென்னை மாநகர எல்லை முழுமைக்குமாகத்தான் தன் செயல் எல்லையைக் கொண்டிருந்தது.
தமிழ்நாடு காவல்துறையில் மொத்தம் 88,672 பேர் பணிபுரிகிறார்கள். தமிழ்நாடு காவல்துறை வடக்கு, மைய, மேற்கு மற்றும் தெற்கு என நான்கு காவல் மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை ஒவ்வொன்றும் ஒரு காவல் பொது ஆய்வாளர் (Inspector General of Police) தலைமையில் இயங்குகின்றன.
தமிழகத்தில் உள்ள 7 பெரிய நகரங்களான சென்னை, சென்னைப் புறநகர், மதுரை, கோயமுத்தூர், திருச்சிராப்பள்ளி, சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களில் காவல்துறை காவல் ஆணையாளர் (Commissioner of Police) தலைமையில் இயங்குகின்றது.
தமிழகம் 32 காவல் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்கள் காவல் கண்காணிப்பாளர் (Superintendent of Police) தலைமையில் இயங்குகின்றன. இரண்டு அல்லது மூன்று மாவட்டங்களுக்கு ஒரு துணை காவல் பொது ஆய்வாளர் (Deputy Inspector General of Police) மேற்பார்வை செய்கிறார்.
நகர்க் காவல்நிலையங்களில் காவல் ஆய்வாளர் (Inspector), துணைக் காவல் ஆய்வாளர் (Sub-Inspector), உதவியாளர் (A-2) மற்றும் காவலர்கள் (Constables) பணிபுரிகிறார்கள். தவிர காவலர்களில் எழுத்தர்களும் வண்டி ஓட்டுநர்களும் உள்ளனர்.
காவல் துறையின் பல்வேறு பிரிவுகள்
சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு (Law and Order)
ஆயுதம் அல்லது தமிழ்நாடு சிறப்புப் படை (Armed Police or Tamil Nadu Special Police)
பொதுமக்கள் பாதுகாப்பு (Civil Defence and Home Guards)
பொதுமக்கள் வழங்கல் மற்றும் உளவுத்துறை (Civil Supplies, CID)
கடலோர காவல் துறை (Coastal Security Group)
குற்றப் புலனாய்வு மற்றும் உளவுத்துறை (Crime Branch, CID)
பொருளாதார சிறப்புப் பிரிவு (Economic Offences Wing)
செயல்பாடு - தமிழக ஆயுதப்படை மற்றும் ஆயுதப்படை பள்ளி (Operations - T.N. Commando Force & Commando School)
இரயில்வே காவல்துறை (Railways)
சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் (Social Justice and Human Rights)
சிறப்புப் பிரிவு - உளவு மற்றும் பாதுகாப்பு (Special Branch , CID including Security)
குற்றப் பிரிவு (நுண்ணறிவு) (Co-Intelligence)
போக்குவரத்துக் காவல் பிரிவு (Traffic)
மதுவிலக்கு அமல் பிரிவு (Prohibition Enforcement Wing)
குடிமையியல் பாதுகாப்புப் பிரிவு (Protection and Civil Rights)
பயிற்சிப் பிரிவு (Training)
காவல்துறையில் பெண்கள்
இந்தியாவிலேயே தமிழக காவல்துறையில் தான் அதிக பெண் காவலர்கள் பணிபுரிகிறார்கள். தமிழக முதல்வராக ஜெயலலிதா (1991-1996) இருந்த போது பெண்களுக்கெதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்தவும், வரதட்சணைக் கொடுமையை ஒழிக்கவும் பெண் காவலர்கள் மட்டுமே பணியாற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் தமிழ் நாடு முழுவதும் தொடங்கப்பட்டன. பின்னர் ஜெயலலிதா முதல்வராக (2003-2006) இருந்த போது பெண்கள் மட்டுமே உள்ள சிறப்பு பெண்கள் ஆயுதப்படை தொடங்கப்பட்டது.
காவல்துறைப் பதவிகள்
தமிழ்நாட்டில் காவல்துறைப் பணியிலிருப்பவர்களுக்கென்று அவர்கள் அணிந்திருக்கும் சட்டையில் அவர்கள் பணிக்கேற்ற குறியீடுகள் இடம் பெற்றிருக்கின்றன. அது குறித்த அட்டவணை;
தமிழ்நாடு காவல்துறைப் பதவி மற்றும் குறியீடுகள்
பதவி
பதவிச் சின்னம்
காவல்துறைத் தலைமை இயக்குனர் (DGP)
அசோகச் சின்னம்,அதன் கீழ் குறுக்காக வைக்கப்பட்ட வாளும் குறுந்தடியும் அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து
காவல்துறைத் தலைவர் (IGP)
ஐந்துமுனை நட்சத்திரம் ஒன்று இதன் கீழ் குறுக்காக வைக்கப்பட்ட வாளும் குறுந்தடியும் அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து
காவல்துறைத் துணைத்தலைவர் (DIG)
அசோகச் சின்னம், அதன்கீழ் ஃ வடிவில் மூன்று நட்சத்திரங்கள், அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து
காவல்துறைக் கண்காணிப்பாளர் (SP)
அசோகச் சின்னம், அதன்கீழ் ஒரு நட்சத்திரம், அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS அல்லது TPS எழுத்து
காவல்துறை இணைக் கண்காணிப்பாளர் (JSP)
அசோகச் சின்னம், அதன்கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து
காவல்துறைக் கூடுதல் கண்காணிப்பாளர் (ADSP)
அசோகச் சின்னம், அதன்கீழ் ஆங்கிலத்தில் TPS எழுத்து
காவல்துறை உதவிக் கண்காணிப்பாளர் (ASP)
மூன்று நட்சத்திரம் ஒன்றன்பின் ஒன்றாக அமைந்திருக்கும். அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து
காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் (DSP)
மூன்று நட்சத்திரம் ஒன்றன்பின் ஒன்றாக அமைந்திருக்கும். அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் TPS எழுத்து
ஆய்வாளர் (Inspector)
மூன்று நட்சத்திரம் அதற்குக் கீழ் கருநீலம், சிகப்பு ரிப்பன் அதன் கீழ் தமிழில் த.கா.துறை என்று இருக்கும்
உதவி ஆய்வாளர் (Sub-Inspector)
இரண்டு நட்சத்திரம் அதற்குக் கீழ் சிகப்பு ரிப்பன் அதன் கீழ் தமிழில் த.கா.துறை என்று இருக்கும்
தலைமைக் காவலர் (Head Constable)
சட்டையின் மேற்கையில் மூன்று பட்டை ஆங்கில எழுத்து V வடிவில் இருக்கும்
முதல்நிலைக் காவலர் (PC-I)
சட்டையின் மேற்கையில் இரண்டு பட்டை ஆங்கில எழுத்து V வடிவில் இருக்கும்
இரண்டாம்நிலைக் காவலர் (PC-II)
பட்டை எதுவுமில்லை.
நன்றி: மோகன் வழக்கறிஞர்

05 ஜூன் 2017

பனை மரம்..

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.நமது மாநிலத்தின் மரம் பனை மரம் என்பது எல்லோருக்கும் தெரியும்.அப்படியானால் அதன் பயன்களும் தெரிந்துகொள்ள வேண்டும் அல்லவா? இதோ...
பனைமரம்:
பனை, புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம். அறிவியல் வகைப்பாட்டில் இதை போரசசு (Borassus) என்னும் பேரினத்தில் அடக்குவர். இப் பேரினத்தில் பல சிற்றினங்கள் அடங்குகின்றன.நெடிய மரமாக 30 மீட்டர் உயரம் வரை பனைமரம் வளரும். இலைகள் நீட்டமாக விசிறி போல் இருக்கும். இலைகள் 2-3 மீட்டர் நீளம் இருக்கும். பூக்கள் சிறியவை. பழங்கள் (நுங்கு) பெரியதாக, வட்டமாக, பழுப்பு நிறத்துடன் இருக்கும்.
பொது வழக்கில் மரம் என்று தமிழில் வழங்கப்படினும், இது மர வகையைச் சார்ந்தது அல்ல. தற்காலத் தாவரவியல் அடிப்படையில் மட்டுமன்றித் தமிழ் இலக்கண மரபுகளின்படியும் பனையை மரம் என்பது தவறு.
நெடிய மரமாக 30 மீட்டர் உயரம் வரை பனைமரம் வளரும். இலைகள் நீட்டமாக விசிறி போல் இருக்கும். இலைகள் 2-3 மீட்டர் நீளம் இருக்கும். பூக்கள் சிறியவை. பழங்கள் (நுங்கு) பெரியதாக, வட்டமாக, பழுப்பு நிறத்துடன் இருக்கும்.
பனையை, கேட்டதைக் கொடுக்கும் தேவலோகத்து மரம் எனத் தொன்மங்கள் கூறும் கற்பகதருவுக்கு ஒப்பிடுவர்.
பனை மரத்தில் இருந்து கிடைக்கும் நுங்கு நீரை தொடர்ந்து சாப்பிட்டு வர கோடை காலத்தில் ஏற்படும் வேர்குரு நீங்கும்.
தோலுடன் நுங்கை சாப்பிட்டு வர சீதக்கழிச்சல் நீங்கும்.
பணங்கற்கன்டை ஏதாவது ஒரு வகையில் அடிக்கடி பயன் படுத்தி வர அம்மை நோயால் ஏற்பட்ட உடல் வெப்பம் தாகம் போன்றவை நீங்கும்.
பனங்கிழங்கிற்கு ஊடல் குளிர்ச்சியை தரும் தன்மை உண்டு.இந்த கிழங்கை சாப்பிட்டு வந்தாலுடல் அழகு பெறும்.உடல் பலமும் அதிகரிக்கும்.
பதநீர் மகிமை:
பனை மரத்துல நுங்கு பிஞ்சு உருவானதும், அதை நாறைக் கட்டி, வளர்ச்சியை கட்டுப்படுத்துவாக பிஞ்சு ஓரத்தில் லேசாக கீறிவிட்டு, தினமும் மூன்று முறை மரம் ஏறி, அந்த பிஞ்சை அழுத்த, சொட்டுச் சொட்டாக மண்பானையில் பால்(கள்) இறங்கும். இப்படி ஒரு மரத்துல மூன்று மாதம் வரை பால் எடுக்கலாம். அந்த பாலில் சுண்ணாம்பு சேர்த்தால் பதநீர் ரெடி.
சில இடங்களில் மண்பானை அடியில் சுண்ணாம்பை தடவி கட்டிவிட்டுடுவாங்க. இதனால மரத்திலிருந்து பானையை இருக்கும்போதே பதநீர் தயார். இந்த பனைமர பதநீரைவிட, தென்னைமர பதநீர் போதை அதிகம் தரும். ஆனால் சுவையில் பனைமர பதநீரை மிஞ்சமுடியாது.இந்த பதநீரில் சோறு சமைக்கலாம்; பொங்கல் வைக்கலாம்; கொழுக்கட்டை தயாரிக்கலாம்; அவியல் அரிசி படைக்கலாம். யானை இறந்தால் ஆயிரம் பொன்னுனு சொல்லுவாங்க. பனை இருந்தாலும் ஆயிரம் பொன்தான். பிஞ்சிலிருந்து மரமாகி, கீழே விழும் வரை எல்லா வகையிலும் பயன்தரும் என்பது நிதர்சனம்'',
சுண்ணாம்பு சேர்த்து எடுக்கப்படும் பனஞ்சறுக்கு பதர்நீர் என்று பெயர்.மேக நோய் இருப்பவர்கள் இதை 40 நாட்களிடைவிடாஅது அருந்தி வர அந்த நோய் பாதிப்பில் இருந்து விடுபடலாம்.
பதநீரில் இருந்து எடுக்கப்படும் கருப்பட்டி, பனங்கற்கண்டு, ஆகியவற்றுக்கும் நோய் தீர்கும் குணங்கள் உண்டு.
பனை நுங்கு கோடை கலத்தில் ஏற்படும் தாகத்திற்கு மிகவும் ஏற்றது.
பனங்கிழங்கை உலர்த்தி இடித்து மாவாக்கி, அதனுடன் தேங்காய் உப்பு போட்டு சாப்பிட்டு வர உடலுக்கு பலம் உண்டாகும். மேலும் உடல் பருமன் ஆகும்.
பனம் பூவை சுட்டு சாம்பலாக்கி அதில் சிறிது தேங்காய் எண்ணெய் கலந்து புண்களின் மீது பூச ஆரும்.
பயன் தரும் பாகங்கள்:
நொங்கு, பனம்பழம், பனங்கிழங்கு, பனை ஓலை, குருத்து, பனை கருக்கு, பனைப்பால், முற்றிய மரம் முதலியன.
வளரியல்பு:
பனை கற்பக மரமாகும். கூந்தல் பனை, கரும்பனையில் கரும்பனையே மருத்துவ குணமுடையதாகும். பனை இந்தியாவில் அதிகமாகக் காணப்படும். இது எல்லா மண்வளத்திலும் வளர்க்கூடியது. வரட்சியைத் தாங்கி வளரக்கூடியது. பனை வைத்தவனுகுப் பயன் தராது என்பர். இதன் வளர்ச்சி ஆரம்பத்தில் மெதுவாக வளரும். நூறு ஆண்டுகள் உயிருடன் இருக்கும். இது தொண்ணூறு அடிக்கு மேல் வளரும். பனங்கை ஓலை 9 -10 அடி நீளம் வரை நீண்டிருக்கும். பக்கவாட்டில் அடுக்கடுக்காக பனங்கை வளர்ந்திருக்கும். இது விதை மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.
மருத்துவப் பயன்கள்:
பனை உடலுக்கு ஊட்டத்தை அளிப்பது. குளிர்ச்சி தருவது. வெப்பத்தைத் தணிப்பது, துவர்ப்பும் இனிப்பும் கலந்த சுவை உடையது.
பனை மரத்தின் பால் தெளுவு-தெளிவு எனப்படும். சுண்ணாம்பு கலவாதது கள் எனப்படும்.
வைகறை விடியல் இந்தப் பாலை 100 -200 மி.லி. அருந்தி வந்தால் போதும். உடல்குளிர்ச்சி பெறும். ஊட்டம் பெறும். வயிற்றுப் புண் நிச்சையம் ஆறிவிடும்.
புளிப்பேறிய கள் மயக்கம் தரும், அறிவை மயக்கும் ஆனல் உடல் நலத்தைக் கொடுக்கும். சுண்ணாம்பு சேர்த்த தெளிவு எல்லோருக்கும் சிறந்த சுவையான சத்தான குடிநீராகும். அதைக் காய்ச்சினல் இனிப்பான கருப்பட்டி கிடைக்கும்.
நுங்கு வெயிலின் கொடுமையைக் குறைக்க மனிதனுக்குக் கிடைத்த அரு மருந்தாகும். எல்லா வயதினருக்கும் ஏற்ற சிறந்த சத்துணவாகும். நுங்கின் நீர் வேர்க்கருவிற்குத் தடவ குணமாகும்.
பனம்பழம் சிறந்த சத்துணவாகும். உயிர் சத்து நிறைந்தது. பித்தம் தருவது. சுட்டு சாப்பிடலாம்.
பனங்கொட்டையை மிருதுவான மண் அல்லது ஈர மணலில் புதைத்து வைத்து இரண்டு மூன்று இலை விட்ட பின் தோண்டி கொட்டைக்குக் கீழ் உள்ள நீண்ட கிழங்கை எடுத்து வேக வைத்துச் சாப்பிட்டால் மிகச் சிறந்த ஊட்ட உணவாகும். சிறு குழந்தைகளுக்கு உடலைத் தேற்றும்.
பனை மரத்தின் அடி பாகத்தில் கொட்டினால் நீர் வரும் அதை கருப்படை, தடிப்பு, ஊரல், சொறி உள்ளவர்களுக்கு அதன் மீது தடவினால் குணமடையும். ஐந்தாறு முறை தடவ வேண்டும்.
பனையோலை வேய்த இருப்பிடம்ஆரோக்கிய வாழ்வைத் தரும். வெப்பம் அண்டாது. இதில் விசிறி, தொப்பி, குடை, ஓலைச்சுவடி தயார் செய்யப் பயன் படும். கைவினைப் பொருள்கள் செய்யலாம். இந்தோனேசியாவில் ஓலையை எழுதும் பேப்பராகப் பயன் படுத்தினார்கள். அதைப்பக்குவப்படுத்த கொதிநீரில் வேக வைத்து மஞ்சள் பொடி இட்டு ஓரத்தில் ஓட்டைகள் போட்டு ஏட்டுப் புத்தகம் உண்டாக்கினார்கள்.
கண்ணில் புண் ஆனால் பனை குருத்து மட்டையைத் தட்டிப் பிழிந்த சாறு மூன்று நாள் விட குணமடையும் எரிச்சில் தீரும்.
அடிப்பனை வெட்டிசோறு செய்தார்கள். பனங்கையில் பிரஸ் செய்தனர். கயிறுகள் தயார் செய்தனர். வேலிக்கும் பயன் படுத்தினர். பனையின் எல்லாபாகமும் உபயோகப் படுத்தினார்கள்.
பனை வெல்லம், பனங்கற்கண்டு வாத பித்தம் நீங்கும். பசியை தூண்டும். புஷ்டி தரும். முன்பு சொன்னபடி, நுரையீரல் மற்றும் தொண்டை பாதிப்புகளுக்கு கொடுக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளில் பனைவெல்லம் சேர்க்கப்படுகிறது.
எலிகளை வைத்து நடத்திய பரிசோதனையில் பனைவெல்லம், நிலக்கரி மற்றும் ஸிலிகா தூசிகளால் ஏற்படும் நுரையீரல் பாதிப்பை குறைக்கும் என்பது தெரிய வந்துள்ளது.
வெல்லம் அயச்சத்து மிகுந்தது. சோகை நோய்களுக்கு மருந்து. தமிழகத்தில் பனை மரத்தின் வெல்லத்தை இரண்டு வகையாக சொல்வார்கள். முற்றிலும் சுத்தப்படுத்தாத, கெட்டியான கரு நிற வெல்லத்தை “கருப்பட்டி” என்பார்கள். இதை சுத்தப்படுத்தப்பட்ட படிகங்களாக உருவாகும் சர்க்கரை ‘பனங்கற்கண்டு’ எனப்படும் இதற்கு மருத்துவ குணங்கள் உள்ளன.
பாலில் பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடித்தால் மார்புச்சளி இளகும். முக்கியமாக தொண்டைப்புண், வலி இவை அகலும். சங்கீத வித்வான்கள் எப்போதும் பனங்கற்கண்டு கலந்து காய்ச்சிய பாலையே அருந்துவது வழக்கம். அதனால் அவர்களின் குரல் வளம் குறையாமல், பாதுகாக்கப்படுகிறது. கூடவே சில மூலிகைகளும் சேர்க்கப்படுவது உண்டு.
தவிர பனங்கற்கண்டு, உடல் உஷ்ணம், காங்கை, நீர் சுருக்கு, ஜுர வெப்பங்கள் இவற்றுக்கு நல்லது. பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் பலவிதமான நோய்களை தீர்க்கும் மருந்தாக உள்ளது. பனை நீரிலுள்ள சீனி சத்து உடலுக்கு தேவையான வெப்பத்தை தருகிறது. இதிலிருக்கும் குளுக்கோஸ் மெலிந்து தேய்ந்து வாடிய உடலுடைய குழந்தைகளின் உடலை சீராக்கி நல்ல புஷ்டியை தருகிறது.
கருவுற்ற பெண்களுக்கும் மகப்பேறு பெண்களுக்கும் ஏற்படுகின்ற மலச்சிக்கல், வயிற்றுப் புண் முதலியவைகளை குணப்படுத்துகிறது. இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. டைபாய்டு, சுரம், நீர்க்கட்டு முதலிய வியாதிகளை போக்குகின்ற நல்ல மருந்தாகவும் இது செயல்படுகிறது.
இதை அருந்துவதால் இருதய நோய் குணமாகும். இருதயம் வலுவடையும். இதிலிருக்கும் கால்சியம் பற்களை உறுதிப்படுத்தி, ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதை தடுப்பதோடு பற்களின் பழுப்பு நிறத்தையும் மாற்றுகிறது.
இதிலிருக்கும் இரும்புச்சத்து பித்தத்தை நீக்கி சொறி, சிரங்கு உள்பட சகல தோல் வியாதிகளையும் நீக்குவதுடன் கண் நோய், ஜலதோசம், காசநோய் இவைகளையும் நீக்குகிறது.
மேலும் பதநீரானது சயரோகம், இரத்தக்கடுப்பு, அதிக உஷ்ணம், பசியின்மை, வயிற்றுப்புண், வாய்வு சம்பந்தமான நோய்களையும் குணப்படுத்துகிறது.

இதுதான் வாழ்க்கை?


மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.
   வாழ்வின் எந்தக் கணம் நம்முடைய வாழ்நாள் முழுமைக்குமான அனுபவத்தையும் பயத்தையும் கொடுக்கும் என்று தெரிவதேயில்லை. மிக இயல்பாகக் கடந்திருக்க வேண்டிய தினமாக இருந்திருக்க வேண்டியது. இனி அந்த முகமும் கணமும் அப்படியே நினைவுகளில் உறைந்து கிடக்கும். ஞாபகப் புதையலிலிருந்து எப்பொழுது வெளியே வந்து பயமூட்டும் என்று தெரியாது. கடுமையாக உழைக்க மட்டுமே தெரிந்தவர்.குடிபோதையில் தாறுமாறாக பேசினாலும் தக்க அறிவுரை சொன்னால் ஏற்கும் மனப்பக்குவம் உடையவர்.01.06.2017 வியாழக்கிழமை இன்று எங்களை எல்லோரையுமே பதறி நடுங்க வைத்துவிட்டார். மனித உயிரைப் போன்று பற்றுக் கோல் இல்லாதது எதுவுமேயில்லை. இல்லையா? நொறுங்கிய கண்ணாடிகளை அடுக்கி வைத்திருப்பது போலத்தான் அது- எந்தக் கணமும் சுக்கு நூறாகிவிடக் கூடும். அந்த நிரந்தரமின்மையோடுதான் ஒவ்வொரு காரியங்களையும் செய்து கொண்டிருக்கிறோம். ஏதோ பல்லாயிரம் ஆண்டு வாழ்ந்து கழிப்பது போல...
ஆடிய ஆட்டமென்ன? பேசிய வார்த்தை என்ன?
தேடிய செல்வமென்ன? திரண்டதோர் சுற்றமென்ன?
கூடுவிட்டு ஆவிபோனால் கூடவே வருவதென்ன...?

வீடுவரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ?  
(வீடுவரை உறவு)
ஆடும் வரை ஆட்டம்
ஆயிரத்தில் நாட்டம்
கூடிவரும் கூட்டம்
கொள்ளிவரை வருமா?  (வீடுவரை உறவு)

தொட்டிலுக்கு அன்னை
கட்டிலுக்குக் கன்னி
பட்டினிக்குத் தீனி
கெட்ட பின்பு ஞானி! 
(வீடுவரை உறவு)
 

சென்றவனைக் கேட்டால்
வந்துவிடு என்பான்
வந்தவனைக் கேட்டால்
சென்று விடு என்பான்! 
(வீடுவரை உறவு)

விட்டுவிடும் ஆவி
பட்டுவிடும் மேனி
சுட்டுவிடும் நெருப்பு
சூனியத்தில் நிலைப்பு...
(வீடுவரை உறவு)

முனைவர்.இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phil.,Ph.D., அவர்களது வாழ்க்கைக்குறிப்பு... (Dr.R.K.Manikkam, professor,Writer)

                                                                                                        முனைவர். இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phi...