30 செப்டம்பர் 2011

அட்ச ரேகை, தீர்க்க ரேகை

அன்பு நண்பர்களே, 
    konguthendral.blogspot.com வலைப்பதிவிற்கு தங்களை வணங்கி வரவேற்கிறேன். சோதிடக்கலை பற்றி தெரிந்துகொள்ளும் ஆவலில் அட்ச மற்றும் தீர்க்க ரேகை விபரங்கள் பற்றி தேடும்போது,      

       உலகின் எந்த மூலையிலும் உள்ள ஊர்களின் அப்போதைய நேரம், உலக வரை படத்தில் அதன் இடம், அந்த ஊரின் அட்ச ரேகை, தீர்க்க ரேகை, எந்த நாடு என அனைத்து தகவல்களையும் மிகக் குறைந்த நேரத்தில் காட்டும் இணைய தளம் ஒன்றைப் பார்க்க நேர்ந்தது.   http://worldtimeengine.com/about என்ற முகவரியில் உள்ள தளம் தரும் தகவல்கள் வியப்பைத் தருகின்றன.
ஒரே நேரத்தில் நீங்கள் மூன்று வெவ்வேறு கண்டங்களில் இருக்கின்ற ஊரின் நேரத்தை அறியலாம்.எடுத்துக் காட்டாக சென்னை,லண்டன்,மாஸ்கோ (Chennai and London and Moscow) எனக் கொடுத்து நேரம் அறிய எணி என்ற பட்டனை அழுத்த வேண்டியதுதான். உடனே இந்த மூன்று ஊர்களின் சாட்டலைட் படம் மேப்பாகக் காட்டப்படுகிறது. நீங்கள் கேட்கும் ஊரின் மேலாக அடையாளம் காட்டப்படுகிறது. படத்திற்கு மேலாக ஊர் பெயர், ஊர் உள்ள நாடு, அது காலையா அல்லது மாலையா, இரவா எனக் காட்டி அப்போதைய நேரம், கிழமை மற்றும் தேதி காட்டப்படுகிறது. கீழாக சாட்டிலைட் மேப் தரப்படுகிறது. மேப்பில் அந்த ஊரின் மற்றும் சுற்றி உள்ள ஊர்களின் சீதோஷ்ண நிலை காட்டப்படுகிறது. வழக்கம்போல் கூகுள் மேப்பில்பெரியஅளவு செய்வது போல இதனையும் பெரியஅளவு  செய்து காணலாம். மூன்று வகை மேப்பினையும் காணலாம்.
இது பன்னாட்டளவில் பல ஊர்களுக்கு தொலைபேசி அல்லது இன்டர்நெட் மூலம் தொடர்பு கொள்பவர்களுக்கு அந்த ஊர்களின் அப்போதைய நேரத்தைத் தெரிந்து செயல்பட உதவும்.அனைவரும் பயன்பெறுங்கள். என 
  paramesdriver.blogspot.com //Sathy & thalavadi

28 செப்டம்பர் 2011

நான்கு பிரதான ஊட்டச் சத்துக்கள்
சர்க்கரை நோய் கொண்டவர்கள் அவர்களுடைய நோயைக் குணப்படுத்து வதற்கு ஏற்றவாறு அவர்களுடைய உணவை அமைத்துக் கொள்வது அவசியம். சரியான உணவைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால் முதலில் நம்முடைய உடம்பின் உணவுத் தேவை என்ன? மற்றும் நாம் சாப்பிடும் உணவை எத்தனை வகையாகப் பிரிக்கலாம் என்பதையெல்லாம் நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். நம் உடம்பு செயல்படுவதற்கும், வளர்வதற்கும் உணவை உட்கொள்ள வேண்டியிருக்கிறது. இத்தேவைகளை பூர்த்தி செய்ய நான்கு பிரதான ஊட்டச் சத்துக்கள் உதவுகின்றன. அவை பின்வருமாறு:
கார்போஹைட்ரேட்: இதை நாம் மாவுச்சத்து எனலாம். இந்த மாவுச்சத்து தானியங்கள், காய்கறிகள், பழவகைகள் மற்றும் நாமே தயார் செய்யும் ரொட்டி போன்றவற்றிலிருந்து கிடைக்கின்றன.
புரோட்டீன்: இதைப் புரதச்சத்து எனலாம். இந்தப் புரதச்சத்து பிராணிகள் மற்றும் தாவரங்களிலிருந்து கிடைக்கிறது. கறி, மீன், முட்டை மற்றும் கொட்டைகளிலிருந்து கிடைக்கிறது.
கொழுப்புச் சத்து: இந்தக் கொழுப்புச்சத்து தாவர எண்ணெய்களிலிருந்தும் மீன் எண்ணெய் மற்றும் பன்றிக் கொழுப்பு மற்றும் வெண்ணெய் ஆகியவற்றிலிருந்தும் கிடைக்கிறது.

திரவச்சத்து: திரவச் சத்துக்கள் குடி நீராகவும்
, பழச்சாறாகவும், நாமே தயாரிக்கின்ற டீ, காபி ஆகியவற்றிலிருந்து கிடைக்கிறது.
மேற்கூறப்பட்ட நான்கு வகை சத்துக்களைப் பற்றியும் விவரமாகப் பார்ப்போம்.
மாவுச்சத்து: மாவுச்சத்தின் முக்கிய பயன் நம் உடம்பின் செயல்பாட்டிற்குத் தேவையான சக்தியை வழங்குவதாகும். மாவுச்சத்தை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். சாதாரண சர்க்கரை முதல் வகை. நீண்ட சர்க்கரை இரண்டாம் வகை. சாதாரண சர்க்கரை ஒன்றல்லது இரண்டு சர்க்கரை moleculesஆல் ஆனது. நீண்ட சர்க்கரை பல moleculesஆல் ஆனது. குளுக்கோஸ் (glucose) ஃபுருக்டோஸ் (Fructose) கேலக்டோஸ் (Galactose) மற்றும் லேக்டோஸ் (Lactose) ஆகியவை சாதாரண சர்க்கரை வகையை சேர்ந்தவை. இவற்றை சாப்பிட்ட உடனேயே ஜீரணமாகிவிடுகின்றன. நம்முடைய கணையத்திலிருந்து இன்சுலின் சுரப்பதற்கு முன்பே இந்த ஜீரணம் தொடங்கிவிடுகிறது. இதனால் நம் இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு உடனேயே ஏறிவிடுகிறது. இதற்கு மாறாக ஸ்டார்ச் மற்றும் க்ளைகோஜன் (glycogen) ஆகிய நீண்ட சர்க்கரைகள் மெதுவாகவே ஜீரணமாகின்றன என்பதால் சீராக நமக்கு எனர்ஜியை வழங்குகின்றன.
ஒவ்வொரு கிராம் மாவுச்சத்தும் நமக்கு நான்கு கலோரி எனர்ஜி வழங்குகின்றது. உதாரணமாக ஒரு ஆப்பிளில் 25 கிராம் மாவு சத்துள்ளது. ஆகவே நமக்கு 25 ஙீ 4 = 100 கலோரி அளவிற்கு சக்தி கிடைக்கிறது.
புரோட்டின்: புரதச்சத்தை பயன்படுத்தி நம் உடம்பு புதிய திசுக்களை உருவாக்குகிறது. மேலும் பழுதாகியுள்ள தோல், தசை மற்றும் எலும்புகளை சீர் செய்கிறது. நோயை எதிர்க்கக்கூடிய antibodies என்பவற்றை நம்முடம்பு புரதச் சத்துக்களைக் கொண்டுதான் உருவாக்கிக் கொள்கிறது. மேலும் ஜீரணத்திற்கு உதவும் என்சைம்களையும் (enzymes) நம்முடம்பு புரதச் சத்துக்களிலிருந்துதான் தயார் செய்து கொள்கிறது.
அமினோ ஆசிட் (Amino acids) என்பவற்றைக் கொண்டுதான் புரோட்டீன்கள் உருவாக்கப்படுகின்றன. எட்டு அத்தியாவசியமான அமினோ ஆசிடுகளும் 17 அத்தியாவசியமில்லாத அமினோ ஆசிடுகளும் உள்ளன. (Leucine, lysine, isoleucine, methionine, phenylalanine, threonine, trytophan மற்றும் valine ஆகிய இந்த அத்தியாவசியமான அமினோ ஆசிடுகளை நம்முடம்பு தான் சாப்பிடும் உணவிலிருந்து சேகரித்துக் கொள்ள வேண்டும். மற்ற அத்தியாவசியமில்லாத அமினோ ஆசிடுகளை நம்முடம்பு தானே தயார் செய்து கொள்கிறது. கறி, கோழி, மீன், முட்டை, பால் மற்றும் ஞிடஞுஞுண் ஆகியவற்றிலிருந்து மேற்கண்ட எட்டு அமினோ ஆசிடுகளும் கிடைப்பதால் இவ்வெட்டும் முழுமையான புரோட்டீன்களாக கருதப்படுகின்றன.
புரதச்சத்துக்கள் நான்கு பிரதானமான மூலப்பொருட்களிலிருந்து கிடைக்கிறது.
1. தாவர மூலப்பொருட்கள்: கொட்டைகள், விதைகள், சோயாபீன் (soyabean) ஆகியவை இதிலடங்கும்.
2. கடல் பிராணிகள்: சால்மன், டூனா, சார்டின், மேக்கரல், டிரௌட், மற்றும் இறால், நண்டு ஆகியவை இதிலடங்கும்.
3. நிலப்பிராணிகள்: ஆட்டிறைச்சி, கோழிக்கறி, வான்கோழிக்கறி, பன்றிக்கறி, மான்கறி ஆகியவை இதிலடங்கும்.
4. பால் பொருட்கள்: பால், முட்டை மற்றும் சீஸ் ஆகியவை இதிலடங்கும்.
மேற்கண்டவைகளில் சோயா பீனைத் தவிர மற்றெல்லாம் முழு புரோட்டீன்களாகக் கருதப்படுகின்றன. மாவு சத்தைப் போலவே புரதச்சத்தும் ஒரு கிராமிற்கு 4 கலோரி சக்தி வழங்குகிறது. ஒரு முட்டையில் 13 கிராம் புரதம் அடங்கியிருக்கின்றது. ஆகவே ஒரு முட்டையிலிருந்து 13ஙீ4=52 கலோரி நமக்குக் கிடைக்கின்றது.
கொழுப்புச் சத்து: கொழுப்புச் சத்தின் முக்கிய பயன் எனர்ஜியை சேமிப்பு செய்வதும், நம்முடலுறுப்புகளுக்கு பாதுகாப்பாகவிருப்பதும், தட்பவெப்ப மாறுதல்களிலிருந்து நம்முடம்பைக் காப்பாற்றுவதும்தான். கூடுதலாக கொழுப்புச் சத்து நம்முடம்பிலுள்ள செல்களுக்கு கவசமமைக்கவும், மேலும் நம்முடைய தோல் மற்றும் முடி ஆரோக்கியமாகவிருக்கவும் உதவுகிறது.
கொழுப்பு சத்து நான்கு வகையாக பிரிந்துள்ளது. அவை பின்வருமாறு:
1. தனியான கலப்பில்லாத கொழுப்புச் சத்து: (Monosaturated): இவை பிரதானமாக தாவரப் பொருட்களான ஆலிவ் எண்ணெய், ஆல்மண்ட் கொட்டை மற்றும் வால்நட் கொட்டை ஆகியவற்றிலிருந்து கிடைக்கின்றன.
2. கூட்டுக் கலப்பில்லாத கொழுப்புச் சத்து: இவையும் பெரும்பாலும் தாவரங்களி லிருந்துதான் வருகின்றன. ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 என்ற அத்தியாவசிய– மான கொழுப்பு அமிலங்களை (fatty acids) கொண்டுள்ளன. ஒமேக 3 கொழுப்பு அமிலங்கொண்ட கூட்டு கலப்பில்லாத கொழுப்புச் சத்து பூசணி விதைகளிலும், வால்நட் கொட்டைகளிலும், சால்மன், சார்டின், மற்றும் மேக்கால் போன்ற மீன்களிலிருந்து கிடைக்கின்ற எண்ணெயிலிமிருந்து கிடைக்கின்றது. ஒமேகா6, கொழுப்பு அமிலம் கொண்ட கூட்டு கலப்பில்லாத கொழுப்பு சத்துக்கள் பிரிம்ரோஸ் எண்ணெயிலிருந்து கிடைக்கிறது.
3. கலப்புள்ள கொழுப்புச் சத்து: (Saturated fats) மேற்கண்ட கொழுப்புச் சத்தும் உடம்பிற்கு மிகவும் அவசியமானதாகும். ஏனென்றால் ஆரோக்கியமான செல்களுக்குள் இருக்கும் முக்கிய பகுதிகள் சிலவற்றை உருவாக்க இந்த கொழுப்புச் சத்து தேவைப்படுகிறது. மேலும் இவ்வகை கொழுப்புச் சத்துதான் இதயம் மற்றும் சதைகளுக்கு எனர்ஜி அளிக்கக் கூடிய எரிபொருளாக பயன்படுகிறது. மேலும் இவை புற்றுநோயை எதிர்க்கப் பயன்படுகின்றன. இவ்வகை கொழுப்புச் சத்து கறி, பால் மற்றும் சீஸ்ஸில் காணப்படுகிறது.
4. மாறிய கொழுப்புச் சத்து: (Trans fats): இவ்வகை கொழுப்புச் சத்து ஹைட்ரஜன் வாயு கலந்து மனிதனால் தயாரிக்கப்படும் செயற்கை கொழுப்புச் சத்தாகும். துவக்கத்தில் கடைகளில் விற்கப்படும் பாக்கிங் செய்யப்பட்ட உணவு பொருட்களின் ஆயுட்காலத்தை நீட்டிக்க இவ்வகையான கொழுப்புச் சத்து பயன்படுத்தப்பட்டது. மார்ஜரின், வறுக்கப்பட்ட உருளைக்கிழங்கு சீவல்கள் மற்றும் கேக் வகைகள் இதிலடங்கும்.
கொழுப்பு சத்தின் கலோரி மதிப்பு
மாவுச்சத்து மற்றும் புரதச் சத்துக்களைவிட கொழுப்புச்சத்து அதிகமாக எனர்ஜியை சேகரம் செய்து தருகின்றது. மாவுச்சத்தும், புரதச்சத்தும் கிராமிற்கு 4 கலோரி எனர்ஜியை கொடுக்கும் பொழுது, கொழுப்புச்சத்து கிராமிற்கு 9 கலோரி எனர்ஜியை வழங்குகின்றது. உதாரணமாக ஒகு தேக்கரண்டி அளவிற்கான ஆலிவ் எண்ணெயை எடுத்துக் கொண்டால், அதில் 14 கிராம் எடை இருக்கின்றது. அதன்படி பார்க்கும் பொழுது, 14ஙீ9=126 கலோரி எனர்ஜி கிடைக்கின்றது.
திரவங்கள்
நாம் உட்கொள்ளும் மிக முக்கியமான திரவப் பொருள் தண்ணீராகும். தண்ணீரைக் கொண்டுதான் நம்மால் உணவை ஜீரணம் செய்ய முடிகின்றது. நம் உடம்பில் 75 % தண்ணீர்தான் இருக்கின்றது. இரத்தம் 90% தண்ணீராலானது. நாம் குடிக்கின்ற டீ, காபி மற்றும் பழச்சாறுகள் எல்லாம் மாவுச்சத்து அடங்கிய திரவப் பொருட்களாகத்தான் கருதப்படும்.
திரவப் பொருட்களின் வகைகள்
குடிநீர் குழாய் மூலம் வருகின்ற தண்ணீரானது கெமிக்கல் கலந்த தண்ணீராக இருப்பதால் காலப்போக்கில் நம் உடம்பை அது ஊறு செய்யக்கூடும். ஆகவே குடிநீர் குழாயிலிருந்து எடுக்கும் தண்ணீருக்குப் பதிலாக, வடிகட்டி பாட்டிலில் விற்கப்படும் தண்ணீர் மேலானது.
காய்கறிச் சாறுகள்
பச்சைக் காய்கறிகளை பிழிந்து நாம் காய்கறிச் சாறை எடுக்கலாம். இவற்றின் மூலம் நமக்கு பல ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன.
தேநீர்
பச்சை நிற தேநீர் மற்றும் மூலிகை தேநீர் ஆகியவற்றில் ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ் நிறைய உள்ளன. அவை நம் உடம்பின் ஆரோக்கியத்திற்கு உதவும்.
பழச்சாறுகள்
கேன் மற்றும் பாட்டில்களில் விற்கப்படும் பழச்சாறுகள் அதிக அளவில் சர்க்கரை கொண்டு இருப்பதால், சர்க்கரை நோயாளிகளுக்கு உதவாது.

திரவங்களின் கலோரி மதிப்பு
தண்ணீருக்கு எந்தக் கலோரி மதிப்புமில்லை. ஆனால் பழச்சாறுகள் கிராமுக்கு
4 கலோரி எனர்ஜி தருகின்றன. உதாரணமாக ஒருகிண்ணம் ஆப்பிள் ஜூஸ் 29 கலோரிகளைக் கொண்டது. அப்படி என்றால் 116 கலோரி (29ஙீ4) எனர்ஜி கிடைக்கின்றது. நாம் உண்கின்ற உணவின் கலோரி மதிப்பைக் கணக்கிடும் பொழுது, நாம் சாப்பிடுகின்ற அத்தனை பொருட்களின் கலோரி மதிப்பையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

படலம் 2
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஒத்துவரக் கூடிய மற்றும் ஒத்துவராத உணவு வகைகள்
நம் உடம்பிற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச் சத்து மற்றும் தண்ணீர் என நான்கு வகையென நாம் தெரிந்து கொண்டோம். அடுத்த கட்டமாக இந்த நான்கு ஊட்டச் சத்துகளில் இருந்து என்ன அடிப்படையில் நமக்குத் தேவையான உணவை தேர்வு செய்ய வேண்டும் என இப்பொழுது பார்ப்போம். நம் உடம்பிற்கு முக்கியமாக தேவைப்படுகின்ற ஊட்டங்கள் 7 ஆகும். ஆகவே இந்த 7 ஊட்டச் சத்துக்களை வழங்கும் உணவு வகைகளைத்தான் நாம் உட்கொள்ள வேண்டும் என்றாகிறது. அந்த 7 ஊட்டச் சத்துக்கள் முறையே விட்டமின்கள், தாதுக்கள், ஆன்டி-ஆக்ஸிடண்ட்ஸ், நார்ச்சத்து, என்சைம்கள், எண்ணை மற்றும் தண்ணீராகும்.
விட்டமின்கள்: நம் உடம்பில் உள்ள செல்கள் மற்றும் திசுக்களுக்கு தேவையான எனர்ஜியை வழங்குகின்றன. மேலும் நாம் உண்கின்ற உணவு சரியாக பயன்படவும் உதவுகின்றன. உதாரணமாக விட்டமின் அ, ஆ காம்ளக்ஸ் விட்டமின் மற்றும் விட்டமின் ஈ ஆகியவற்றை சொல்லலாம்.
தாதுக்கள்: தாதுக்கள் எலும்பு மற்றும் பல் வளர்ச்சி, தசை இயக்கம், நரம்பு செயல்பாடு ஆகியவற்றிற்கு உதவுகின்றன. நம் உடம்பிற்கு பயன்படும் தாதுக்களுக்கு உதாரணமாக கால்சியம், பொட்டாசியம், மக்னீஷியம் மற்றும் குரோமியம் ஆகியவற்றை சொல்லலாம்.
ஆன்டி–ஆக்ஸிடண்ட்ஸ்: இந்த ஊட்டசத்து நம் உடம்பில் நிகழும் தேவையற்ற ஆக்ஸைடேஷனைத் தடுக்க உதவுகின்றது. இவற்றிற்கு உதாரணமாக விட்டமின் இ விட்டமின் உ மற்றும் செலேனியம் ஆகியவற்றைச் சொல்லலாம்.
நார்சத்து: இந்த நார்ச்சத்துக்கள் நம் உடம்பிலுள்ள கழிவுப் பொருட்களை வெளியேற்ற உதவுகின்றது. உதாரணமாக சைலியம் பௌடர், (psyllium powder) தவிடு மற்றும் பெக்டின் (pectin) ஆகியவற்றை கூறலாம். ——-

கலோரி அளவுகள்

தினமும் நீங்கள் பயன்படுத்தும் உணவுப் பொருள்களின் கலோரி அளவுகள் இதோ....

தானியம்/தானியம் சார்ந்த உணவுப் பொருள்கள்(100 கிராம் அளவுக்கு உள்ள கலோரி )
அரிசி (பச்சை அரிசி)- 345 கலோரி
புழுங்கல் அரிசி - 325 கலோரி
வேகவைத்த அரிசி (சோறு)- 100 கலோரி
இட்லி- 65 கலோரி
பொங்கல் - 220 கலோரி
அடை- 140கலோரி
புட்டு- 280கலோரி
இடியாப்பம்- 260கலோரி
ஊத்தாப்பம்- 250கலோரி
கோதுமை மாவு (100கிராம்)- 341கலோரி
சப்பாத்தி-1 (35கிராம்)- 119கலோரி
பரோட்டா- 215கலோரி
பூரி3- 240கலோரி
ரவா ஆப்பம்- 318கலோரி
ரவா புட்டு- 56கலோரி
பிரட் துண்டு-1- 60கலோரி
பன்- 280கலோரி
கேழ்வரகு- 328கலோரி
சோளமாவு- 355கலோரி
பாப்கார்ன் (50கிராம் )- 170கலோரி
தோசை-1- 130கலோரி
பருப்பு வகைகள்

கடலை (வறுத்தது)- 369கலோரி
உளுந்து- 347கலோரி
பயறு- 334கலோரி
காராமணி- 343கலோரி
சோயாபீன்- 432கலோரி
வேகவைத்த பருப்பு- 92-145கலோரி
ரசம் (1 கப்) - 12கலோரி
சாம்பார் (அரை கப் )- 105கலோரி
காய் கறி/கீரைகள்
முட்டைக் கோஸ்- 45கலோரி
முளைக்கீரை- 45கலோரி
முள்ளங்கி கீரை- 28kalori
பூசணி- 25கலோரி
பாகற்காய்- 25 கலோரி
சுரைக்காய்- 12கலோரி
கத்தரிக்காய்- 24கலோரி
காலிபிளவர்- 30கலோரி
ஏலக்காய்- 229கலோரி
பச்சை மிளகாய்- 29கலோரி
காய்ந்த milaga 246கலோரி
கொத்துமல்லி 288கலோரி
பீன்ஸ்- 26கலோரி
பூண்டு- 145கலோரி
இஞ்சி- 67கலோரி
வெண்டைக்காய் 35கலோரி
காளான்கள்- 42கலோரி
நெல்லிக்காய்- 58கலோரி
பட்டாணி- 93கலோரி
மிளகு- 304கலோரி
மஞ்சள்- 349கலோரி
உருளைகிழங்கு- 97 கலோரி
வள்ளிகிழங்கு- 120 கலோரி
மரவள்ளிகிழங்கு- 157 கலோரி

பழங்கள்
ஆப்பிள்- 56கலோரி
வாழைப்பழம்- 153கலோரி
பேரீச்சம்பழம்- 283காலோர்
கொய்யாபழம்- 66கலோரி
திராட்சை- 45கலோரி
மாம்பழம்- 50-80கலோரி
ஆரஞ்சு- 53கலோரி
பப்பாளி- 32கலோரி
அன்னாசி- 46கலோரி
மாதுளை- 77கலோரி
சப்போட்டா- 94கலோரி

 

உடல் எடை -கலோரி


      உடல் எடை நமது உடல் நலத்திற்கான ஒரு நல்ல அளவுகோலாகும். உடல் எடைகுறிப்பிட்ட அளவை விட குறையவும் கூடாது. அதே வேளையில் அதிகம் ஆகிவிடவும்கூடாது.அதற்கு எளிய கணக்கு என்னவென்றால் உங்களது உயரம் எத்தனை செ.மீ. என்று அளந்து அதனை 100ஆல் கழித்தால் வரும் எண் அளவான எடைதான் கிலோ கிராமில் இருக்க வேண்டும். அதாவது உயரம் 163செ.மீ.என்றால் 163-100=63 இந்த 63  என்ற அளவில்தான் கி.கி. இருக்க வேண்டும்.

உடல்நலத்தை
பொறுத்த விஷயங்களில் யூகங்களுக்கு (Guess) இடமில்லை. இன்னும்
சொல்லப்போனால் அது மிகவும் ஆபத்தானது.(உதாரணமாக நெஞ்சு வலி என்றால் அது வாயுக்கோளாறு என்று அலட்சியப்படுத்துவது.)
     ஒரு முழு உடல்நல பரிசோதனை (Full Health Check-up) செய்ய வேண்டும்.
உடலில் எல்லா உறுப்பு மண்டலங் களும் சரியாக இயங்குகின்றன என்பதைத்தெரிந்து கொள்வது வருமுன் காக்கும் செயலாகும்.
உணவு
உணவே மருந்து” – ஹிப்போகிரேட்ஸ் (கி.மு. 460 – 370)
உடல்நலத்தைக்காப்பது எது? என்ற கேள்விக்கு ஒரு வார்த்தையில் பதில் சொல்லுங்கள் என்றால்அதற்கு உணவுஎன்றே பதில் சொல்வேன். இரண்டு வார்த்தைகளில் பதில்சொல்லுங்கள் என்றால் அளவான உணவுஎன்று பதில் கூறுவேன்.
உணவின்முக்கியத்துவத்தை 2000 ஆண்டு களுக்கு முன் ஒருவருக்கு ஒருவர் தொடர்புஇல்லாமல் வாழ்ந்த அறிஞர்கள் வற்புறுத்தி யுள்ளனர். உணவே மருந்து என்றார்
கிரேக்க நாட்டைச் சேர்ந்த அறிஞர் ஹிப்போகிரேட்ஸ். 
இவர்தான் மருத்துவத்தின்தந்தை (Father of Medicine) என்று அழைக்கப்படுகிறார்.       இன்றும் மருத்துவ
பட்டப்படிப்பு (MBBS) முடித்த மாணவர்கள் ஹிப்போகிரேட்ஸ் கோட்பாடு
களைத்தான் உறுதிமொழியாக எடுத்துக் கொள்கிறார்கள்.
உடல்நலத்தின்திறவுகோல் அளவான உணவு (Moderate Food) அளவுக்கு மீறினால் அமிர்தமும்நஞ்சு. அளவான உணவு என்றால் என்ன? எது அளவான உணவு என்பதைத் தெரிந்துகொள்ளும் முன்னர், கலோரி என்றால் என்ன என்று தெரிந்திருக்க வேண்டும்.

      கலோரிகள்
   ஒருவாகனம் ஓட வேண்டும் என்றால் அதற்கு எரிபொருள் தேவைப்படுகிறது. பெட்ரோல்அல்லது டீசல் எரிக்கப்பட்டு கிடைக்கும் வெப்பத்தால் (ஆற்றல்) இயந்திரங்கள்இயக்கப்பட்டு பின்னர் அதன் மூலம் சக்கரம் சுற்றுகிறது. வாகனம் ஓடுகிறது.மனிதனின் இயக்கமும் அப்படியே. நமது உடலின் எரிபொருள் நாம் உண்ணும் உணவு.
வெப்பஆற்றலின் அளவுகோல்தான் கலோரி. உயரத்தை செ.மீட்டரால் அளப்பது போல் எடையைக்கிலோகிராமில் அளப்பது போல, வெப்ப ஆற்றலை (Energy) கலோரிகளால் அளக்கிறோம்.

      ஓர் உணவுப் பொருள் தரும் வெப்பம் (அதாவது ஆற்றல்) எவ்வளவோ அதைத்தான் கலோரிஎன்கிறோம். 

     கலோரி என்பது 1 கிராம் எடையுள்ள தண்ணீரை 0 டிகிரி
சென்டிகிரேட்டிலிருந்து 1 டிகிரி சென்டிகிரேடு வரை சூடாக்க தேவைப்படும்
ஆற்றல் அல்லது வெப்பம் ஆகும். 

      இந்த அளவை ஆயிரத்தால் பெருக்கினால் அது கிலோ
கலோரி ஆகும். இந்தக் கிலோ கலோரியைத்தான் நாம் கலோரி என்று சாதாரணமாகக்கூறுகின்றோம்.

      எரிதல் (Burning) என்றால் என்ன?
உணவுப் பொருட்களில்
உள்ள ஊட்டச் சத்துகள் (கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு) உடலில்
எரிக்கப்பட்டு கலோரி களைப் பெறுகிறோம். உடலில் கொழுப்பு கூட எரிந்துகரைந்துவிடுகிறது. ஆனால், சாதாரண வெப்பத்தால் கொழுப்பை எரிக்க வேண்டும்என்றால் 360ர்இ வெப்பம் அதற்கு தேவைப்படும். 

    ஆனால் உடலில் ஊட்டச்சத்துகள்
எரிவது என்பது வேறு.உதாரணமாக, ஒரு பழைய வீட்டை இடித்து பின்னர், அங்கேபுதிய வீட்டைக் கட்டுகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். பழைய வீட்டில்இருந்த மரச்சட்டம், கதவு, ஓடு ஆகியவற்றைப் பத்திரப்படுத்தி, அவற்றையேபயன்படுத்தி, புதிய வீடு கட்டப்படுகிறது. 

    இதைப்போலத்தான் நாம் உண்ணும்கார்போஹைட்ரேட் குளுக்கோஸாக மாற்றப்பட்டு பின்னர் செல்களில் ஆக்சிஜன்
முன்னிலையில் மாற்றி அமைக்கப்பட்டு (எரிதல்), கார்பன்-டை-ஆக்ஸைடாகவும்,நீராகவும் மாற்றப்படுகிறது. அப்போது வெளியேறும் ஆற்றலைத்தான் கலோரிஎன்கிறோம். இவ்வாற்றலைப் பயன்படுத்தித்தான் நமது உடல் உறுப்புகள் வேலைசெய்கின்றன.

    நாம் உண்ணும் உணவில் உள்ள கொழுப்பு, கொழுப்பு அமிலமாக
மாற்றப்பட்டு, பின்னர் செல்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு எரிக்கப்
படுகிறது. நாம் உண்ணும் புரதம் கூட அமினோ அமிலங்களாக (அம்ண்ய்ர்
அஸ்ரீண்க்ள்) மாற்றப்பட்டு, பின்னர் செல்களுக்குச் சென்றவுடன் எரிக்கப்
பட்டு கார்பன்-டை-ஆக்ஸைடாகவும், நீராகவும், ஆற்றலாகவும் மாற்றப்படுகிறது.இதை மாற்றி அமைக்கும் பணியைத்தான் எரிதல்என்கிறோம். 
 செல்களில் உள்ளமைட்டோ கான்ட்ரியாவில் தான் எரிதல் நடைபெறுகிறது.மனிதர்களுக்குத் தேவைப்படும் கலோரி யின் அளவு அட்டவணையில் கொடுக்கப் பட்டுள்ளது.

   கலோரியின் தேவை

ஒரு மனிதனின் வயதிற்கேற்ப கீழ்க்கண்ட வாறு கலோரிகள் தேவைப்படுகின்றன.
வயது ஆண் பெண்
20-30   -    3200      2300
30-40    -   3100      2200
40-50 -     3000       2160
50-60  -   2750        2000
60-70  -   2500        1800
>70     -   2200        1500
- *நன்றி : தமிழ்நாடு பாடநூல் நிறுவனம்

நாம்
உண்ணும் உணவு ஜீரணமடைந்து பின்னர் இரத்தத்தில் உள்ள ஆக்சிஜனின் உதவியுடன்எரிந்து சக்தியாக மாறுகிறது. இந்தச் சக்தியால்தான் மூச்சுவிடுவது, இதயம்துடிப்பது, நடப்பது, ஓடுவது, படிப்பது, சிந்திப்பது என்ற வேலைகளையும் உடல்செய்கிறது. வேலை எதுவும் செய்யாமல் அமைதியாக இருந்தால் குறைந்தபட்சசக்தியே தேவைப்படுகிறது. கடினமான வேலைகளைச் செய்தால் சக்தி அதிகம்
தேவைப்படுகிறது.



நன்றி;-முனைவர் செ. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.

சுகாதார வாழ்விற்காக பின்பற்ற வேண்டிய உணவு பழக்கங்களும், சமையல் முறைகளும்

  • உணவுப் பழக்கங்களை கலாச்சாரம் பெரிதும் பாதிக்கிறது.
  • உணவு பற்றிய நம்பிக்கைகள், ஊட்டச்சத்தையும், சுகாதாரத்தையும் பாதிக்கிறது.
  • சமைப்பதன் முலம் உணவு சுவையாவதோடு,  சுலபமான செரிமானம் ஆகிறது.
  • தீங்கு விளைவிக்கக் கூடிய நோய்கிருமிகள், சமைக்கும் பொழுது அழிந்து விடுகின்றது.
  • முறையாக சமைக்காவிடில் சத்துகள் இழப்பு ஏற்படும்.
  • அதிகமான  வெப்பத்தில் சமைக்கும் பொழுது, சத்துகள் அழிவதோடு நச்சுப் பொருட்களும் உருவாகிறது.
  • உணவு பழக்கவழக்கங்கள் பற்றிய முட நம்பிக்கைகளை தவிர்க்கவும்.
  • சமைக்கும் முன்பு, உணவு தானியங்களை அடிக்கடி கழுவக் கூடாது.
  • காய்கறிகளை வெட்டிய பிறகு கழுவக் கூடாது.
  • வெட்டிய காய்கறிகளை நீண்ட நேரம் தண்ணீரில்  ஊற வைக்கக் கூடாது.
  • வேகவைத்த எஞ்சிய நீரை வெளியேற்றக் கூடாது.
  • சமைக்கும் பொழுது மூடி வைத்து சமைக்கவும்.
  • அதிகமாக சுடுதல் / வறுத்தலுக்கு பதிலாக குக்கர் / நீர் ஆவி கொண்டு சமைக்கவும்.
  • முளைத்த தானியங்கள் / புளித்த உணவுகள் உண்ணவும்.
  • பயறுகள் மற்றும் காய்கறிகள் சமைக்கும் பொழுது சோடா பயன்படுத்தக் கூடாது.
  • எஞ்சிய எண்ணெயை அடிக்கடி சூடு ஏற்றக்கூடாது.


உப்பைக் குறைவாக பயன்படுத்தவும்

  • செல்களில் உள்ள திரவங்களில் மின் பகுப்பானாக உள்ளது.
  • நரப்பு கடத்தியாகவும், உடலில் உள்ள திரவ சமன்படுத்தியாகவும் பயன்படுகிறது.
  • சோடியம் சமன்பாடடைப் பொருத்து சிறுநீரகம் செயல்படுகிறது.
  • அதிகம் உப்பு சேர்ப்பதால் இரத்த அழுத்தம் அதிகரிப்பதோடு, வயிற்றுப் புற்றுநோயும் ஏற்படுகிறது.
  • எல்லா உணவுகளிலும் சோடியச்சத்து உள்ளதால், குறைவான அளவு உப்பு பயன்படுத்தவும்.
  • பொட்டாசியம் உட்கொள்வதைப் பொருத்து, சோடியம் உட்கொள்ளவும்.
  • சின்ன வயதிலிருந்தே, உப்பு குறைவாக எடுத்துக் கொள்ளும் பழக்கத்தை உருவாக்கவும்.
  • குறைவான உப்புள்ள உணவை சுவைக்கக் கற்றுக் கொள்ளவும்.
  • பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளான அப்பளம், ஊறுகாய், சாஸ், கெச்சப், தொக்கு, பாலாடை,  மீன் உண்பதை குறைக்கவும்.
  • பொட்டாசியம் சத்து பெற அதிக அளவு காய்கறிகள் மற்றும் பழங்கள் சாப்பிடவும்.
  • ஐயோடின் ஏற்றப்பட்ட உப்பு பயன்படுத்தவும்.
ஐயோடின் உள்ள உணவை அதிகமாக சாப்பிடவும் / ஐயோடின் ஏற்றப்பட்ட உப்பை பயன்படுத்தவும்
  • தைராய்டு ஹார்மோன்கள் சுரப்பதற்கு ஐயோடின் தேவை.
  • உடல் வளர்ச்சிக்கும், பராமரிப்பிற்கும் தைராய்டு ஹார்மோன் தேவை.
  • ஐயோடின் பற்றாக்குறையினால், தைராய்டு சுரப்பி வீக்கம் ஏற்படுகிறது.
  • தண்ணீரிலும், உணவிலும் ஐயோடின் இல்லாததால் ஐயோடின் குறைபாடு அறிகுறிகள் ஏற்படுகிறது.
  • கர்ப காலத்தில் ஐயோடின் பற்றாக்குறை ஏற்படின், குறைபிரசவம், கருச்சிதைவு, கிரிட்டினிசம் ஏற்படுகிறது.
  • ஐயோடின் ஏற்றப்பட்ட உப்பு சாப்பிடுவதன் மூலம் உடலிற்கு அதிக அளவு ஐயோடின் கிடைக்கிறது.

சமையல் எண்ணெய்கள் மற்றும் மாமிச உணவுகளை குறைந்த அளவிலும், வனஸ்பதி / நெய் / வெண்ணெய் ஆகியவற்றை எப்பொழுதாவதும் பயன்படுத்தவும்

  • கொழுப்பு மற்றும் எண்ணெய்களில் அதிக அளவு சக்தி உள்ளது.
  • கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின், கொழுப்பில் உள்ள கொழுப்பு அமிலங்கள் மூலம் உட்கிரகித்தல் திறனை அதிகப்படுத்துகிறது.
  • உடலுக்குத் தேவையான செயலாக்க பொருட்கள் உருவாக்கத்திற்கு கொழுப்பு பயன்படுகிறது.
  • அதிக அளவு கலோரிகள் உள்ள கொழுப்பு உணவுகள் இரத்தத்தில் கொழுப்பை அதிகரிக்கிறது.
  • அதிக கொழுப்புச் சத்துள்ள உணவை உண்ணும் பொழுது உடல் பருமனாவதோடு, இருதய நோய்கள், பக்கவாதம் மற்றும் புற்றுநோய்களை ஏற்படுத்துகிறது.
  • வாழ்வின் முற்பகுதியில் அதிக கொழுப்புள்ள உணவுகளை உண்ணவும்.
  • போதுமான அளவு உணவை மட்டும் உண்ணவும்.
  • ஓன்றுக்கும் மேற்பட்ட சமையல் எண்ணைகளை பயன்படுத்தவும்.
  • வனஸ்பதி / நெய் / வெண்ணெய் ஆகியவற்றை குறைவாக பயன்படுத்தவும்.
  • லினோலெனிக் அமிலம் நிறைந்த (பயறுகள், பச்சை கீரைகள் மற்றும் காய்கறிகள், வெந்தயம், கடுகு) உணவு பயன்படுத்தவும்.
  • ஆட்டுக்கறி, கோழிக்கறி ஆகியவற்றிற்கு பதிலாக அடிக்கடி மீன் சாப்பிடவும்.
அதிக எடை போடுவது உடல் பருமனாவது ஆகியவற்றை தடுக்க அளவுக்கு அதிகமாக   சாப்பிடக் கூடாது.  உடல் எடையைப் பராமரிக்க முறையான உடற்பயிற்சி அவசியம் 
  • உடலில் அதிக அளவு கொழுப்பு படிவதால் உடல் பருமன் ஏற்படுகிறது.
  • உடல் பருமனால் பலவிதமான உடல் உபாதைகளை ஏற்படுத்துவதோடு, சீக்கீரம் மரணத்தை வரவழைக்கிறது.
  • இதனால் இரத்த அழுத்தம், இரத்தக் கொழுப்பு டிரை கிளிசரைடுகள் அதிகரிக்கிறது.  இருதய நோய்கள், நீரழிவு, சிறுநீரகக் கற்கள், சிலவகைப் புற்று நோய்கள் ஏற்படுகிறது.
  • அளவுக்கு அதிகமான உணவு சாப்பிடுவதால் மட்டும் பருமன் ஏற்படுதில்லை. மனரீதியான சமுக விளைவுகளும் உண்டு.
  • மெதுவாக நிதானமாக உடல் எடையைக் குறைக்கவும்
  • அதிகமாக விரதம் இருப்பதினால், பல உடல் நலக் கேடுகள் வருகின்றன.
  • உங்களது உடல் செயல்பாட்டு அளவை ஈடுசெய்ய பல வகை உணவுகளை உட்கொள்ளவும்.
  • குறைவான அளவு உணவை முறையான இடைவெளியில் சாப்படவும்.
  • சக்கரை, கொழுப்புச் சத்துள்ள உணவு வகைகள் மற்றும் மதுபானங்களை நிறுத்தவும்.
  • குறைவான கொழுப்புள்ள பாலை பயன்படுத்தவும்.
நல்ல உடல் நலத்திற்கான குறிப்புகள்
  • முறையாக  உடற்பயிற்சி செய்யவும்.
  • புகைபிடித்தல், புகையிலை சாப்பிடுதல், மதுஅருந்துதல் ஆகியவற்றை தவிர்க்கவும்.
  • அடிக்கடி இரத்தத்தின்  குளுக்கோஸ், கொழுப்பு மற்றும் இரத்த அழுத்தம் ஆகியவற்றை 30 வருடத்திற்கு மேல் பரிசோதனை செய்து கொள்ளவும்.
  • சுயமாக மருந்துகளை எடுத்துக் கொள்ளக் கூடாது.
  • அழுத்தத்தை குறைக்கும் யுக்திகளை செய்யவும் (யோகா மற்றும் தியானம்).
  • குழந்தைகள் மற்றும் கர்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போடவும்.



பச்சைக் கீரைகள், காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகமாக சாப்பிடவும்

  • சாதாரண திட்ட உணவு முழுமைபெறவும், சுவையாக இருக்கவும், பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்கள் சேர்த்துக் கொள்ளவும்.
  • காய்கறிகள் மற்றும் பழங்களில் அதிக அளவு நுண்ணுாட்டச் சத்துகள் உள்ளன.
  • பழங்கள் மற்றும் காய்கறிகளில், நார்ச்சத்துகளும் கண் பார்வைக்கான ஒளி வேதிப்பொருட்களும் உள்ளன.
  • கீரைகள், காய்கறிகள் (மஞ்சள் / ஆரஞ்சு) மற்றும் பழங்கள் சாப்பிடுவதன் முலம் நுண்ணுாட்டக் குறைபாட்டினால் ஏற்படும் சத்துக்குறைவு நோய்கள் மற்றும் நெடுநாள் நோய்களைத் தவிர்க்கலாம்.
வைட்டமின் ''   நிறைந்துள்ள உணவுகளை அதிக அளவில் சாப்பிடவும்
  • கண் பார்வைக்கு வைட்டமின் 'ஏ' தேவை.
  • வைட்டமின் 'ஏ' குறைபாடு, மாலைக்கண் நோய் மற்றும் கண்களில் மாற்றங்களை ஏற்படுத்தும்.
  • அதிகமான வைட்டமின் 'ஏ' குறைபாடு இருப்பின், இளங் குழந்தைகளுக்கு கண் குருடாகிவிடும்.
  • குழந்தைப் பருவங்களால் ஏற்படும், வயிற்றுப்போக்கு, அம்மை, மூச்சுக் கோளாறுகள் மற்றும் தொற்று நோய்களினால் வைட்டமின் 'ஏ' உட்கிரகித்தல் குறைகிறது.
  • பால், முட்டை, ஈரல் மற்றும் மாமிச உணவுகளில் வைட்டமின் 'ஏ' உள்ளது.
  • தாவர பொருட்களில், வைட்டமின் 'ஏ', பீட்டா கெரோடின் வடிவில் உள்ளது.
  • அடர் பச்சைக் கீரை வகைகளான முருங்கைக் கீரை, தண்டுக் கீரை, வெந்தய கீரை, பருப்புக் கீரை மற்றும் பழங்கள், கேரட், மஞ்சள் பூசணி, மாம்பழம், பப்பாளி ஆகியவற்றில் அதிக அளவில் கரோட்டின் உள்ளது.
  • அன்றாட உணவில் பச்சைக் கீரைகள் மற்றும் காய்கறிகள் சேர்த்துக் கொள்ளவும்.
  • காய்கறிகளை பச்சையாக சாப்பிடவும்.
  • வீட்டுக் காய்கறித் தோட்டத்தில், வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை சாகுபடி செய்யவும்.
  • பச்சைக் கீரைகள் மற்றும் காய்கறிகளை சுத்தம் செய்து சமைத்து உண்ணவும்.  பச்சிளம் குழந்தைகளுக்குக் கூட இதனைக் கொடுக்கலாம்.

சமவிகித உணவுப் பட்டியலின் நோக்கங்கள்
1.      மக்களை நல்ல சுகாதாரமான உடல் நலனை பேணவைத்தல். 2.     கர்ப்பிணி  மற்றும்  தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு ஊட்ட    அளவு பட்டியல் அளித்தல். 3.     பிறந்த குழந்தையின் எடை அதிகரிப்பு மற்றும் அந்தந்த பருவத்திற்கேற்றவாறு வளர்ச்சியை ஊக்குவித்தல். 4.     ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்து, அதன் பற்றாக்குறையினால்        ஏற்படும் நோய்கள் தவிர்த்தல். 5.     வயது வந்தோரின் நலனைப் பராமரித்து, ஆயுட் காலத்தை அதிகரித்தல்.


ஊட்டம் நிறைந்த திட்ட உணவை, பல்வேறு உணவுகள் மூலம் தேர்வு செய்ய வேண்டும்
  • நல்ல நிலையான வாழ்வு வாழ ஊட்டச்சத்து அடிப்படைத் தேவையாகும்.
  • பல்வகை உணவுமுறை, வாழ்கைக்கு மட்டுமின்றி, ஊட்டச்சத்திற்கும், உடல் நலத்திற்கும் அவசியம்.
  • அனைத்து உணவு வகைகளிலும் இருந்து தயார் செய்யப்படும் திட்ட உணவில், தேவையான அளவு ஊட்டச்சத்து கிடைக்கிறது.
  • தானியங்கள், சிறுதானியங்கள் மற்றும் பயறுகளில் அதிகமான அளவு ஊட்டச்சத்து கிடைக்கிறது.
  • நல்ல தரமான புரதம் மற்றும் கால்சியம் (சுண்ணாம்புச் சத்து) நிறைந்த பாலை, கைக்குழந்தைகள், குழந்தைகள் மற்றும்  பெண்களுக்கான திட்ட உணவில் கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • எண்ணெய் மற்றும் முந்திரி பருப்புகளில் அதிக அளவு சக்தி உள்ளது.
  • முட்டை, மாமிச உணவுகள் மற்றும் மீன் ஆகியன திட்ட உணவின் தரத்தை உயர்த்துகின்றன.  எனினும் சைவ உணவு உண்பவர்கள் தானியங்கள், பயறுகள் மற்றும் பால் பொருட்களில் இருந்து அனைத்து வகை ஊட்டச்சத்துகளையும் பெறலாம்.
  • காய்கறிகள் மற்றும் பழங்களில் வைட்டமினும் தாது உப்புகளும் உள்ளன.
  • வயது, இனம், உடல்நிலை, வேலை ஆகியவற்றிற்கேற்ப உணவைத் தேர்வு செய்யவும்.
  • தானியங்கள், பயறுகள் மற்றும் கீரைகள் ஆகியவற்றைக் கலந்து உண்ணவும்.  சக்தி பற்றாக்குறையை ஈடுசெய்ய, வெல்லம் / சக்கரை அல்லது சமையல் எண்ணெய்  சேர்க்கவும்.
  • அதிக அளவு, பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்கள் சேர்க்கவும்.
  • கர்ப்பிணி, தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான திட்ட உணவில், பால், முட்டை மற்றும் மாமிச உணவுகளை சேர்க்கவும்.
  • முதிர்ந்த பருவம் வந்தோருக்கு, குறைந்த அளவு கொழுப்புள்ள புரதம் நிறைந்த, மீன், பயறுகள் மற்றும் குறைந்த கொழுப்புள்ள பால் ஆகியவற்றைச் சேர்க்கவும்
  • நல்ல சுகாதார உணவு பழக்க வழக்கங்களையும் முறையான உடற் பயிற்சியையும் பின்பற்றவும்.

உணவுப் பட்டியல் குறிப்புகள்

1.       ஊட்டச் சத்துள்ள, திட்ட உணவு உட்கொள்ள பல்வேறு உணவு        வகைகளைத் தேர்வு செய்தல். 2.      கர்ப்பகாலம் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் காலங்களில் கூடுதல்       உணவும், அதிக கவனமும் தேவை. 3.      பிறந்த குழந்தைக்கு 4-6 மாதத்திற்கு தாய்ப்பால் மிகவும் அவசியம்.       இரண்டு ஆண்டுகள் வரை தாய்ப்பால் கொடுக்கலாம். 4.      குழந்தைக்கு திட உணவுகளை 4-6 மாதத்தில் இருந்து துவங்க வேண்டும். 5.      குழந்தைகளும், விடலைப் பருவத்தினரும் நல்ல உடல் நலனைப் பெறவும்        நோய்களை எதிர்க்கவும், போதுமான அளவு ஊட்ட உணவு  உட்கொள்ளவும். 6.      கீரைகள், காய்கறிகள் மற்றும் பழங்களை அதிக அளவில் சேர்த்துக் கொள்ளவும். 7.      சமையல் எண்ணெய்கள் மற்றும் மாமிசங்களைக் குறைவாகப்   பயன்படுத்தவும் வனஸ்பதி / நெய் / வெண்ணெய் ஆகியவற்றைக்        குறைவாகப் பயன்படுத்தவும். 8.      உடல் பருமன் மற்றும் அதிக எடையைத் தவிாக்க அதிகமாக      உணவு உட்கொள்ளக் கூடாது.   உடல் பயிற்சி செய்து உடல் எடையைப் பராமரிக்கவும். 9.      மிதமான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். 10.     சுத்தமான, பாதுகாப்பான உணவை உட்கொள்ளவும். 11.      சுகாதாரமான உணவுப் பழக்க வழக்கங்களையும் சமையல்       முறைகளையும் பின்பற்ற வேண்டும். 12.     அதிகமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். மிதமான அளவு         பானங்கள் குடிக்கவும். 13.     பதப்படுத்தப்பட்ட,  டின்னில் அடைத்த உணவுகளை கவனமாக உட்கொள்ளவும்.  குறைவான அளவு சக்கரையை சோக்கவும். 14.     வயதானோர்கள், தங்களை சுறுசுறுப்பாகவும், நன்றாகவும்        வைத்துக்      கொள்ள ஊட்டச்சத்து நிறைந்த உணவை  உண்ணவும்.

ஞாபக சக்தியை அதிகரிக்கும் எளிய உணவு முறைகள்


      ஞாபக சக்தியை அதிகரிக்கும் எளிய உணவு முறைகள்
கம்ப்யூட்டரில் இருப்பது போல மனிதனுக்கும் ‘மெமரி சிப்ஸ்’கள் உள்ளன. பெரும்பாலும் இந்த நினைவுக் காப்பங்களின் வலிமையும் எண்ணிக்கையும் பரப்பரைத்தன்மை உடலின் ஊட்டம் ஆகியவற்றைப் பொறுத்தே அமைகின்றன. மாவுச்சத்து வைட்டமின்கள் அமினோ அமிலங்கள் தாது உப்புக்கள் முதலியவையே இந்த ஊட்டத்தை நிர்ணயிக்கவல்லவை.
மனித மூளையில் 100 பில்லியன் நரம்பணுக்கள் உள்ளன. இவை உணவில் கிடைக்கும் வைட்டமின்களைப் பொறுத்து இரசாயன மாற்றங்கள் ஏற்படுத்தியபடி இருக்கின்றன.
ஒரு நாளைக்குப் பத்து இலட்சம் தடவைகளுக்கு மேல் நமது சிந்தனைகளை வகைப்படுத்தும் வேலையை மூளை செய்து கொண்டிருக்கிறது. தினசரி நம் உணவில் கிடைக்கும் (எரிக்கும்) மொத்தக் கலோரியல் முப்பது சதவிகிதத்தை மூளைதான் பயன்படுத்திக் கொள்கிறது. எனவே வயது வித்தியாசம் இன்றி மூளை நன்கு செயல்பட வேண்டும் எனில் இனிப்பு மற்றும் மாவுச்சத்துப் பொருட்களில் உள்ள குளுகோஸில் இருந்துதான் தேவையான சக்தி தொடர்ந்து கிடைக்க வேண்டும். இந்தச் சத்துணவில் குறைவு ஏற்படும் போது ஞாபக சக்தியிலும் சிக்கல் வந்துவிடுகிறது.
இது மட்டுமல்ல இரத்த ஓட்டம் தேவையான ஆக்ஸிஜனை மூளைக்கு விநியோகித்து புத்துணர்ச்சியை ஏற்படுத்துவதும் முக்கியமானது. தேவையான சத்துணவு கிடைக்காத போது மூளைக்கு ஆக்ஸிஜன் கிடைப்பது குறைந்த ஞாபகசக்தியில் குறைபாடு ஏற்படுகிறது.
இதைத் தடுக்க சிறந்த உணவு முறையையே மருந்தைப்போல் பயன்படுத்தினால் புத்திக்கூர்மையும் ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.
ஞாபக சக்தி குறைவாக இருப்பவர்கள் பைரிடாக்ஸின் என்ற வைட்டமின் அதிகம் உள்ள பாதாம் பருப்பு சோயா பீன்ஸ் முதலியவற்றை நன்கு உணவில் சேர்க்க வேண்டும். இது நம் உடலில் சோடியம் மற்றும் பொட்டாசியம் ஆகிய உப்பு வகைகளை சமன் செய்து உடலை கட்டுப்பாட்டில் வைக்கிறது. இத்துடன் பி12 வைட்டமினை உடல் ஏற்றக் கொள்ளவும் உதவுகிறது.
தேவையான அளவு ஆழ்ந்து சிந்தித்துச் செயல்பட பாலிக் அமிலம் அதிகம் உள்ள தண்டுக்கீரை கொண்டைக்கடலை முதலியவற்றை சேர்த்துக் கொள்வது அவசியம்.
பால்இ தயிர் மற்றும் அசைவ உணவு வகைகளால் பி12 கிடைப்பதால் சோம்பேறித்தனம் குறையும். சைவ உணவுக்காரர்கள் பி12ஐ ஊசியாகப் போட்டுக் கொள்ளவும்.
அரிசி கோதுமை கேழ்வரகு மேற்கண்ட உணவு வகைகளுடன் இரும்புச்சத்து நிறைந்துள்ள பேரிச்சம்பழம் பட்டாணி முதலியவற்றையும் தினமும் உணவில் சேர்த்து வந்தால் நரம்புமண்டலம் அமைதியாகி மூளை சுறுசுறுப்பாக இருக்கும். இது சிந்தித்து செயல்படுவதில் அக்கறை காட்டத் தூண்டிக் கொண்டே இருக்கும். இந்த உண்மைகளை போஸ்டனின் டப்டஸ் பல்கலைக் கழகமும் வேல்ஸின் ஸ்வான்ஸீ பல்கலைக்கழகமும் பல ஆண் பெண்களையும் பரிசோதனை செய்து கண்டுபிடித்தன.
எல்லா வயதுக்காரர்களும் கூர்மையாகச் சிந்திக்க அரிசிஇ பருப்பு மற்றும் பழவகைகளைத் தவிர்த்துவிடாமல் உணவில் சேருங்கள்.
ஞாபக சக்தியை அதிகரிக்கும் எளிய உணவு முறைகள்
ஆரஞ்சு கொய்யா திராட்சை ஆப்பிள் வாழைப்பழம் முலாம்பழம் பேரீச்சம்பழம் காரட் அன்னாசி காலிபிளவர் முட்டைக்கோஸ் பசலைக்கீரை கொத்துமல்லி முருங்கைக்கீரை பச்சைப் பட்டாணி பால் தயிர் ஈரல் போன்ற உணவு வகைகளில் உள்ள பீட்டா கரோட்டின் வைட்டமின் சி இரும்புச்சத்து முதலியன ஞாபக சக்தியை அதிகரிக்க வல்லவை.
இனிப்பு வகைகளைச் சாப்பிடுவதால் அசிட்டியல்சோலைன் என்ற பொருளை மூளை நரம்புகள் வெளியேற்றுகின்றன. இதனால் ஞாபசக்தி அதிகரிக்கிறது. குளுகோஸ் சாப்பிடுவது நன்று. இல்லையெனில் மாதம் ஒரு நாள் கோதுமை அல்வா சாப்பிடலாம். இதில் சோலைன் அதிகம் இருக்கிறது. ஆனால் முடிந்தவரை இயற்கை இனிப்புகளையே விரும்புங்கள். செயற்கை இனிப்புத் தேவை இல்லை. ஆக ஞாபகச் சக்தியையும் சிந்தனைத் தெளிவையும் தேர்ந்தெடுக்கப்பட்ட உணவின் மூலம் எளிதில் அதிகரித்துக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

மனித குரோமோசோம்கள்

மனிதனுக்கு மட்டும்தான் 23   ஜோடி குரோமோசோம்கள் இருக்கின்றன. மனிதனின் மூதாதையர்கள் என்று போற்றப்படும் சிம்பன்சி குரங்குகளுக்கு 24  ஜோடி குரோமோசோம்கள் இருக்கின்றன. அவற்றை போலவே கொரில்லா, உராங் உட்டாங் குரங்கு வகைகளுக்கும் 24   ஜோடி தான் உள்ளது.


மனிதனுக்கு ஒரு ஜோடி குரோமோசோம்கள் குறைகிறதா என்றால், இல்லை என்று தான் சொல்ல வேண்டும். 23  குரோமோசோம்களில்  இரண்டாவது ஜோடி  குரோமோசோம்  மட்டும், மற்ற எல்லாவற்றையும்  விட பெரிதாக இருக்கும். ஏப் என்ற மனித குரங்குகளின் இரண்டு ஜோடி குரோமோசோம்கள் ஒன்றுடன் ஒன்றாக ஒட்டி  விட்டதன் விளைவுதான்  இந்த ஆறறிவு மனிதன்.

மனிதன் ஒரு உன்னத படைப்பு என்பது கொஞ்சம் உண்மைதான். ஏனென்றால் மனித மூளையால் மட்டுமே பிரபஞ்சத்தின்  ஆரம்ப தோற்றத்தைப் பற்றி சிந்திக்க முடிகிறது. இந்த அறிவு  வேறெந்த  ஜீவராசிகளுக்கும்  ஒரு போதும் கிடையாது. உன்னத படைப்பு  என்பது மனித மூளை  தானா ...? என்றால் இல்லை.

அது ஒரு தனித் தன்மை. அந்த தனித்தன்மை என்பது பரிணாம   வளர்ச்சிதத்துவத்திற்கு  மிக முக்கியம். ஒவ்வொரு உயிரினமும் ஏதாவது ஒரு தனித்தன்மையைக் கொண்டிருக்கும். மனிதனின் தனித்தன்மை சிந்திப்பது. ஏப் வகை குரங்கிலிருந்து தான் மனிதன் தோன்றினான். அந்த வகை குரங்கில் இருந்து மனிதனாக உருமாற சுமார் 1.5  கோடி  வருடங்கள் ஆனது. ஒரு குரங்குக்கும்  மனிதனுக்கும்  வேறுபாடுகள் அதிகம் இல்லை.  24  குரோமோசோம்கள், 23 ஆன பின்புதான், மனிதனுக்கு தனி வடிவம் கிடைத்தது. அதன் உடம்பில் ஏகப்பட்ட ரோமங்கள், தலை வேறு வடிவமாக இருக்கிறது. கை கால்களெல்லாம் நீளம். ஆனால் அடிப்படை அமைப்பில் அதற்கும் மனிதனுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. 32  பற்கள், இரண்டு கண்கள், கை, கால்களில் 5  விரல்கள், கல்லிரல், ஈரமற்ற சருமம் முதுகெலுப்பு  எல்லாம் ஒரே மாதிரிதான். சிம்பன்சி குரங்கின் மூளையில் உள்ள எல்லா ரசாயன பொருட்களும் மனித மூளையிலும் உண்டு. ஜீரண அமைப்பு, நோய் எதிர்ப்பு சக்தி, ரத்த ஓட்ட அமைப்பு, சுரப்பிகள் எல்லாம் ஒன்று தான்.

மத்திய ஆப்பிரிக்காவில் மனிதனும், குரங்கும் 3   லட்சம் வருடங்களுக்கு  முன்பு ஒரு மூதாதையில் இருந்து பிரிந்து, மனிதனானது. மீண்டும் குரங்காக மாறும்வாய்பெல்லாம் மனிதனுக்கு இல்லை. இந்த 3  லட்சம் வருடங்கள் என்பது மனித பரிணாம காலத்தில் ஒரு சில மணித்துளிகள் தான். ஒரு குரோமோசோம் வித்தியாசமே இத்தனை மாறுதல் என்றால், நான்கைந்து குரோமோசோம்கள்  வித்தியாசப் பட்டிருந்தால்.....ஒரு வேளை மனிதனுக்கு இரண்டு இதயமும்,  நெற்றியில்  ஒரு கண்ணும் வந்திருக்குமோ என்னவோ....

சமையல் வகைகள்

சமையல் வகைகள்

1) 20 வகை தோசைகள்
2) 30 வகை காலைச்சிற்றுண்டிகள்
3) 30 வகை "சைடு டிஷ்" கள்
4) 30 வகை "வெரைட்டி ரைஸ்"
5) 30 வகை பஜ்ஜி மற்றும் பக்கோடா வகைகள்
6) 30 வகை பிரியாணி
7) 30 வகை போண்டா மற்றும் வடைகள்
8) 30 வகை சப்பாத்திகள்
9) 30 வகை "பருப்பு உணவுகள்"
10)30 வகை சிறப்பு தோசைகள்
11) 30 வகை முட்டை சமையல்
12) 30 வகை "பழங்களால் செய்த உணவுகள்"
13) 30 வகை "அழகான மற்றும் ஆரோக்கியமான" உணவுகள்
14) 30 வகை "ஐஸ் கிரீம்கள்"
15) 30 வகை "ஐஸ் டிஷ்கள்"
16) 30 வகை "இட்லிகள்"
17) 30 வகை "கஞ்சி"
18) 30 வகை "கூட்டுகள்"
19) 30 வகை "குழம்பு" (2 )
20) 30 வகை "எண்ணெய் குறைந்த சமையல்"
21) 30 வகை "மாம்பழ உணவு பதார்த்தங்கள்"
22) 30 வகை "பச்சடி"
23) 30 வகை "பச்சடி" (2 )
24) 30 வகை "பருப்பு மசியல்"
25) 30 வகை "பாயாசம்"
26) 30 வகை "பொடிகள்"
27) 30 வகை "பூரிகள்"
28) 30 வகை "பொரியல்"
29) 30 வகை "புட்டு"
30) 30 வகை "ரசம்"
31) 30 வகை "கிழங்கு சமையல்"
32) 30 வகை "சேமியா சமையல்"
33) 30 வகை "சூப்கள்"
34) 30 வகை "இனிப்பு உருண்டைகள்"
35) 30 வகை "இனிப்பும் காரமும்"
36) 30 வகை "சிற்றுண்டிகள்" (2 )
37) 30 வகை "தக்காளி சமையல்"
38) 30 வகை "வடைகள்"
39) 30 வகை "வெரைட்டி ரைஸ்" (2 )
40) 30 வகை "வறுவல்"

மாதங்களும் தாக்கும் நோய்களும்

ஜனவரி -  பிப்ரவரி           மாதங்கள்  பனிக்காலம்   என்பதால்   தோல்  பிரச்சனைகள்    ஏற்படும்.   குளிர்  அதிகமாக  இருப்பதால்  போதைப்  பார்ட்டிகளின்  மது  அளவும்  கூடும்,  இதனால்  நெஞ்செரிச்சல்,  தொண்டை வலி, ரத்த  அழுத்தம்  ஆகியவையும்  எட்டிபார்க்கும்.

முன்  எச்சரிக்கை :       நெஞ்சு  எரிச்சல்,  சுவாசத்தடை  ஆகியவை  வந்தால்...அதுவே  தொடர்ந்தால்... அதிகமாக  வலி  எடுத்தால்  அது  இதய  நோயின்  அறிகுறியாக  இருக்கலாம்.  உடனே ரத்த  பரிசோதனை  செய்து  கொள்வது  நல்லது.  உணவில்  உளுந்து,  கோதுமை  அதிகமாக  சேர்த்துக்கொள்ளவும்  அதோடு  பருப்பு, பயிறு,  கீரை  ஆகியவற்றையும்  சேர்த்துக்கொள்வது  நல்லது.  எண்ணெய்  குளியல்  உடல்  வெப்பத்தை  சீராக்கும்.  வெயில்  நம்  உடம்பில்  படுமாறும்  இருப்பது  நல்லது.

தவிர்க்க  வேண்டியவை :     குளிர்ந்த நீர்,  கூழ்  டிரிங்ஸ்,  பிரிஜ்ஜில்  வைத்த  உணவுகள்  ஆகியவற்றைத்  தொடவே  கூடாது.  அதே போல,  குளிர்ந்த  நீரில்  குளிப்பதும்  நல்லதல்ல.

மார்ச் -  ஏப்ரல்            மாதங்களில்  வெய்யிலின்  தாக்கம்  அதிகரிக்கும்.  இதனால் உடலில்  நீர்த்  தன்மை  வற்றிப் போகும்.  நமது  உடலில்  வெப்பத்தின் அளவும்  கூடும்.  வாந்தி,  வயிற்று போக்கு,  ஆஸ்துமா,  இருமல்,  பசியின்மை,  சளித்  தொல்லை,  அலர்ஜி,  தலைவலி  மற்றும்  வைரஸ்  நோய்கள்   நம்மை  தாக்கும்.

முன்  எச்சரிக்கை   :       ஆஸ்துமா  வந்தால்  கவனமாக  இருக்கவும்.  வந்த   தொடக்கத்திலேயே  அதை   கட்டுப்படுத்திவிடவும்.  இல்லாவிட்டால்  காய்ச்சல்  வந்து  நிமோனியாவாக   மாறிவிடும்.  பசியின்மை  ஏற்பட்டால்  சாதரணமாக  எடுத்துக்  கொள்ளாமல்   உடனே   டாக்டரை  அனுகுவது  நல்லது.  கீரை, பழவகை, சார்ந்த  உணவுகளை   அதிகமாக   சாப்பிடவும்.  அடிக்கடி  ஜீரணக்  குறைவு  ஏற்படும்  என்பதால்   சுக்கு, சீரகம்  கலந்த  நீரைக்  குடிக்கப்  பயன்படுத்தவும்.
                      
தவிர்க்க  வேண்டியவை  :   பகல்  தூக்கம்   ஆகவே  ஆகாது.  கொழுப்புள்ள   உணவை   அறவே  தவிர்க்கவும்.  அதுபோல்,  உளுந்து  சேர்த்த  உணவுகளை  சாப்பிட  வேண்டும்.

மே -  ஜூன்            மாதங்கள்  பருவக்காலம்  மாற்றம்  ஏற்படும் சமயம்.  வெயில்  உச்சத்தை  அடையும்.  இதனால்  அம்மை  நோய்,  கண்  தொடர்பான  நோய்கள்,  மஞ்சள்  காமாலை,  வாத  நோய்,  மூட்டு பிரச்சனைகள்  உடல்  சோர்வு   ஏற்படும்.  குழந்தைகள்  மண்ணில்  விளையாடுவதால்  அவர்களுக்கு  தோல்  சம்மந்தப்பட்ட  நோய்கள்  வரும்.

முன்  எச்சரிக்கை  :      அம்மை நோய்  மற்றும்  கண்   தொடர்பான   நோய்கள்  சீக்கிரமாகவே   அடுத்தவருக்கும்   பரவும்  என்பதால்  மிகவும்  கவனமாக   இருப்பது  நல்லது.  நமது  உடலை  சுத்தமாகவும், சுகாதாரமாகவும்   வைத்திருக்க  வேண்டும்.  பழங்களை  சாப்பிடும்  போது  சுத்தமான  நீரில்  நன்றாக  கழுவிய   பிறகு   சாப்பிடவும்.  இனிப்பான  உணவு,  பயறு,  உளுந்து,  காய்கறிகளை   அதிகமாக   சாப்பிடவும்.

தவிர்க்க வேண்டியவை  :   கடினமான உடற்பயிற்சிகள் செய்ய வேண்டாம்.  வெயில்  உடம்பில்,  தலையில்  படாமல்  இருப்பது  நல்லது.

ஜூலை - ஆகஸ்ட்           மாதங்கள்  சிக்கன்  கோனிய போன்ற  நோய்கள் வரும்  காலம்.  கண் நோய்,  பசியின்மை,  அலர்ஜி  ஆகிய  பிரச்சனைகளும்  ஏற்படும்.
               
முன்  எச்சரிக்கை  :            காய்ச்சல்,  கண்  நோய்  போன்ற  தொற்று  வியாதிகளின்    அறிகுறிகள்   தெரிந்தவுடன்  டாக்டரை  அனுகவும்.  அரிசி,  கோதுமை,  பயறு,  உளுந்து,  பச்சை  பட்டானி,  மசாலா  சேர்த்த  உணவுகளை  சாப்பிடலாம்.  குறிப்பாக  பயறு  கஞ்சி  நல்லது.

தவிர்க்க   வேண்டியவை :          மதிய  தூக்கம்   கூடாது.  அதிக  சூடான   உணவுகளை   சாப்பிட  வேண்டாம்.  வெயிலில்  அலையக்  கூடாது.  கொசு   கடிக்காமல்   கவனமாக  இருக்கவும்.  அலர்ஜி  உணவுகளை  தவிர்க்கவும்.  சுற்றுப்புறத்தை  சுத்தமாக  வைத்துக்கொள்வது   நல்லது.

செப்டம்பர் -  அக்டோபர்             மாதங்கள்   மழைக்காலம்   என்பதால்   ஜலதோசம்,  வயிற்று  நோய்கள்,  தலைவலி,  ஒற்றைத்  தலைவலி,  இதய நோய்,  வாத நோய்,  நெஞ்சு  எரிச்சல்,  பித்தம்  தொடர்பான  நோய்கள்,  கண் நோய்  ஆகியவை  தாக்கும்.

முன்  எச்சரிக்கை  :      இதயத்தில்   ஏதாவது  பிரச்சனை  என்றால்  உடனடியாக   டாக்டரிடம்  செல்லவேண்டும்.  டாக்டர்  ஆலோசனைப்படி  தேவையான   மருந்து,  மாத்திரைகளை   சாப்பிடவும்.  கண்களில்,  காதுகளில்  ஏதாவது  பிரச்சனைகள்  என்றாலும்  கவனமாக  இருக்கவும்.  பால்,  பால்வகை  பொருட்கள்,  முட்டை,  மீன்,  மாமிசம்   ஆகிய  உணவுகளை  சாப்பிடலாம்.

தவிர்க்க  வேண்டியவை  :      குளிர்ந்த  உணவு,  பகல்  தூக்கம்,  வெயிலில்  அலைவது  கூடவே  கூடாது.  அதே போல்  பெண்கள்  இந்த  காலங்களில்  விரதம்  இருப்பதை  தவிர்ப்பது  நல்லது.

நவம்பர் -   டிசம்பர்         மாதங்களில் மழையும்  பனியும்   சேர்ந்த  காலம்   என்பதால்  சுவாசத்தடை,  தும்மல்,  வயிற்றுக்  கோளாறு,  தோல்  நோய்  மற்றும்   குழந்தைகளுக்கு  பிரச்சனைகள்   ஆகியவை  ஏற்படும்.  குளிர்காலம்  என்பதால்  அதிகமாக  மது  குடிப்பவர்களுக்கு  அது  தொடர்பான  நோய்கள்  தாக்கும்.

முன்  எச்சரிக்கை :  ரத்த அழுத்தத்தை  கட்டுப்பாட்டோடு வைத்திருப்பது   நல்லது.  மது குடிப்பதை  தவிர்க்கவும்.  எண்ணெய்  உணவுகளை  ஓர்  அளவு  சாப்பிடலாம்.  எண்ணெய்  குளியல்  நல்லது.  உடலில்  வியர்வை  சொட்டும்  அளவிற்கு  உடற்பயற்சி  அவசியம்.  கெட்டியான  உணவுகளை  சாப்பிடவும்.  உடம்பில்  வெயில்  படுவது  நல்லது. 

தவிக்க   வேண்டியவை :   குளிர்ந்த  நீர்  மற்றும்  கூல்டிரிங்ஸ், ஐஸ்கிரீம்   ஆகியவற்றை  தவிர்க்கவும்.  இரவில்  குளிக்கக்  கூடாது.  பிரிட்ஜ்  உணவுகளை  தவிக்கவும்.   

நீண்ட ஆயுளுடன் வாழ தேரையர் சித்தரின் அறிவுரைகள்.

காடு,  மலைகளில்  வாழ்ந்த  சித்தர்கள்  நூற்றாண்டுகளை  கடந்தும்   வாழ்தார்கள்.  நோய்கள் அவர்கள்   அருகே  வர   அஞ்சியது.  தங்கள்  ஆயுள்  ரகசியத்தை அவர்கள்  சொல்லி  இருந்தாலும்,  நாம்  தான்  அதன்படி  வாழ மறுக்கிறோம்.  18  சித்தர்களில்  ஒருவரான  தேரையார்  எப்படி  வாழ  வேண்டும்  என்பதை  ஒரு  பட்டியலே  இடுகிறார்.

மனிதன்  எதை  மட்டும்  செய்ய  வேண்டும்  என்பதற்கு   அவர்  இப்படி  சொல்கிறார் :
  •  பால்  உணவு  உட்கொள்ளுங்கள்.
  • எண்ணெய்   தேய்த்து  குளிக்கும்போது   வெந்நீரில்   குளியுங்கள்.
  • படுக்கும்போது   எப்போதும்  இடது  கைப்புறமாகவே   ஒருக்களித்து  படுங்கள்.
  • புளித்த  தயிர்  உணவை   விருப்பி   உட்கொள்ளுங்கள்.
  • பசிக்கும்போது   மட்டுமே  உணவை  உட்கொள்ளுங்கள்.
  • ஒரு  நாளைக்கு  இரண்டு  முறை  மட்டுமே  உணவு  உட்கொள்ள     வேண்டும்.
  • இரவில்  நன்றாக  தூங்குங்கள்.
  • பெண்ணுடன்   மாதம்  ஒருமுறை  மட்டுமே  உறவு  வைத்துக்கொள்ள  வேண்டும்.
  • வாழைக்காயை   உணவுக்கு  பயன்படுத்தும்போது   பிஞ்சிக்  காய்களை        மட்டுமே   பயன்படுத்த  வேண்டும் .  முற்றிய  காய்களை  கறி  சமைத்து        உண்ணக்கூடாது.
  • உணவு   உட்கொண்ட  உடனேயே  சிறிது  தூரம்   நடக்கும்   பயிற்சியை   செய்ய    வேண்டும்.
  • 6   மாதத்திற்கு  ஒருமுறை   வாந்தி  மருந்து  உட்கொள்ள  வேண்டும்.
  • 4   மாதங்களுக்கு  ஒருமுறை   பேதி  மருந்து  சாப்பிடுங்கள்.
  • 1 1/2  மாதத்திற்கு  ஒருமுறை   மூக்கிற்கு  மருந்திட்டு  சளி  போன்ற  நோய்கள்   வராமல்  பார்த்துக்  கொள்ளுங்கள்.
  • வாரம்  ஒருமுறை  முகச்சவரம்  செய்துகொள்ள   வேண்டும். ( இது  ஆண்களுக்கு  மட்டும்  )
  • 4  நாட்களுக்கு  ஒருமுறை   எண்ணெய்  தேய்த்து  குளிக்க  வேண்டும்.
  • 3  நாட்களுக்கு   ஒருமுறை   கண்ணுக்கு  மை  இட  வேண்டும். (பெண்களுக்கு மட்டும்)
  • விரும்பிய  தெய்வங்கள்,  குருவை  வணங்குங்கள்.
இவற்றை   எல்லாம்  ஒருவர்  தனது  வாழ்நாளில்  பின்பற்றி  வந்தால்  எமன்
அவரை   நெருங்கி  வரவே  பயப்படுவான்   என்கிறார்  தேரையார்.

எவற்றை  எல்லாம்  செய்யக்கூடாது  என்பதற்கு   தேரையாரின்   அறிவுரை : 
  • பகலில்  உடலுறவு  கொள்வதையும்,  தூங்குவதையும்  தவிர்த்து  விடுங்கள்.
  • கரும்பு  போன்ற  இனிப்பவர்களாக  இருந்தாலும்  வயதில்  மூத்த பெண்களுடனும்  இனிய  வாசம்  தரும்  தலைமுடியைக்  கொண்ட  விலைமாதர்களுடன்  உடலுறவு  கொள்ளாதீர்கள்.
  • காலை  இளம்  வெயிலில்  அலையாதீகள்.
  • மலம்,  சிறுநீர்  போன்றவற்றை  அடக்கி  வைத்திருக்காதீர்கள்.
  • முதல்  நாள்  சமைத்த  கறி  உணவு,  அமுதம்  போன்று  இருந்தாலும்  அதை  மறுநாள்   உண்ணவேண்டாம்.
  • உலகமே  பரிசாக  கிடைக்கிறது  என்ற  போதும்,  பசிக்காத  போது  உணவு  உட்கொள்ளாதீர்கள்.
  • உணவு  உட்கொள்ளும்போது  தாகம்  அதிகம்  எடுத்தாலும்,  இடைஇடையே  தண்ணீர்   குடிக்கக்கூடாது.
  • மயக்கும்   மனம்   வீசும்  கந்தம்,  மலர்கள்  போன்றவற்றை   நள்ளிரவு    நேரத்தில்    நுகரக்கூடாது  .
  • மாத  விலக்கான  பெண்கள்,     ஆடு, கழுதை  போன்றவை   வரும்  பாதையில்  எழும்   புழுதி  உடல்மேல்   படும்படி  நெருங்கி   நடந்து  செல்லாதீர்கள்.
  • இரவில்,  விளக்கு  வெளிச்சத்தில்   நிற்பவர்   நிழலிலும்,  மர  நிழலிலும்  நிற்பதை  தவிர்த்திடுங்கள்.
  • பசியின்  போது   உணவு   உட்கொண்ட  உடனேயும்   உடலுறவு   வைத்துக்கொள்ளாதீர்கள்.
  • மாலை  நேரத்தில்  தூங்குதல்,  உணவு  உட்கொள்ளுதல்,  அளவுக்கு  மீறிய   காமச்  செயல்களில்  ஈடுபடுதல்,  அழுக்கான  ஆடை   அணிந்திருத்தல்,  தலையை  வாரி  முடி   உதிரச்செய்தல்   போன்ற  செயல்களில்  ஈடுபடாதீர்கள்.
  • மற்றவர்கள்  கை  உதறும்போது  அவர்களது   நகத்திலிருந்து  விழும்  தண்ணீரும்,  குளித்து  தலை  துவட்டும்  போது  உதிரும்  தண்ணீரும்   மேலே  தெரித்து விழும்  இடத்தில்  நடக்காதீர்கள்.
-இப்படி  சொல்கிறார்  அவர்.

தேரையார்   சித்தர்  கூறிய  அனைத்தையும்  ஒரே  நாளில்  பின்பற்றுவது   என்பது  இயலாத  காரியம்.  ஏனென்றால்,  நாம்  இப்போது   வாழ்ந்து  கொண்டிருக்கிற   வாழ்க்கை   அப்படி.  அதனால்,  படிப்படியாக   முயற்சிப்போம்.  நோய்,  நொடியின்றி   நாளும்   நலத்தோடு   வாழ்வோம்.

முனைவர்.இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phil.,Ph.D., அவர்களது வாழ்க்கைக்குறிப்பு... (Dr.R.K.Manikkam, professor,Writer)

                                                                                                        முனைவர். இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phi...