26 அக்டோபர் 2011

முதல் உதவிப் பெட்டி

  அன்பு நண்பர்களே,

    கொங்குத் தென்றல் வலைப்பதிவிற்கு தங்களை வணங்கி வரவேற்கிறேன்.

     நாம் அனைவரும் முடிந்த அளவு முதலுதவி சிகிச்சை பற்றியும்,சாலை பாதுகாப்பு பற்றியும்,அவசியம் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.சரியான நேரத்தில் செய்யக்கூடிய முதலுதவியானது உயிரையே காக்கும்,சிறிது கவனக்குறைவு வாழ்க்கையையே மாற்றிவிடும்.

      இங்கு முதல் உதவிப் பெட்டியில் வைத்திருக்க வேண்டிய மருந்துப் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் பற்றி காண்போம்.  

     முதல் உதவிப் பெட்டி

          அலுவலகம், வீடு, தொழிற்சாலை,வாகனம், பள்ளிக்கூடம் என எல்லா இடங்களிலும் முதலுதவிப் பெட்டி இருக்க வேண்டும். எளிதாக எடுத்துப் பயன்படுத்தக்கூடிய விதத்தில் இருக்க வேண்டும். மருந்து கடைகளில் இது கிடைக்கிறது. வீட்டிலுள்ள டப்பாவையோ சிறிய அட்டைப் பெட்டியையோகூட இதற்குப் பயன்படுத்தலாம். 
      
      எளிதில் எடுக்கக்கூடிய இடத்தில் முதலுதவிப் பெட்டியை வைத்திருங்கள். மருந்துகள் காலாவதியானதும் மாற்றிவிடுங்கள்.
PARAMESDRIVER.BLOGSPOT.COM

    முதலுதவிப் பெட்டியில் இருக்க வேண்டியவை :



  • சுத்தமான ஒட்டக்கூடிய பேண்டேஜ்கள் - பல அளவுகளில்
  • பேண்டேஜ் துணி ரோல்கள்
  • ஒட்டும் டேப்புகள்
  • முக்கோண, மற்றும் ரோலர் பேண்டெஜ்கள்
  • பஞ்சு (1 ரோல்)
  • பேண்ட் எய்ட்- பிளாஸ்டர்
  • கத்திரிக்கோல்
  • சிறியடார்ச்


  • லேடெக்ஸ் கையுறைகள் (2 ஜோடிகள்)
  • சிறிய கிடுக்கிகள்
  • ஊசி
  • ஈரப்பதம் கொண்ட டவல்கள், சுத்தமான, உலர்ந்த துணிகளின் துண்டுகள்
  • ஆன்ட்டி செப்டிக் (சவ்லான், டெட்டால்)
  • தெர்மாமீட்ட்ர்
  • பெட்ரோலியம் ஜெல்லி ட்யூப்
  • ஊக்குகள் – பல அளவுகளில்
  • சுத்தப்படுத்தும் கரைசல் அல்லது சோப்
மருந்துகள் (டாக்டரின் பரிந்துரை தேவைப்படாதவை)
  • ஆஸ்பிரின் அல்லது பாரசட்டமால் வலி நிவாரணிகள்
  • வயிற்றுப் போக்கை நிறுத்தும் மருந்து
  • பூச்சிக்கடி, தேனீக்கள் கொட்டுதல் ஆகியவற்றுக்கான ஆண்டிஹிச்டமீன் க்ரீம்.
  • ஆண்டாசிட் (வயிற்றுப் போக்குக்கு)
  • லக்ஸேட்டிவ்

தமிழர் கலைகள் பட்டியல்

தமிழர் கலைகள் பட்டியல்

  • சிலம்பம்
  • கோலாட்டம்
  • பட்டிமன்றம்
  • வில்லுப்பாட்டு
  • ஆட்டங்கள்
    • கும்மி
    • மயிலாட்டம்
    • காவடியாட்டம்
    • பொய்கால் குதிரை ஆட்டம்
    • தெருக்கூத்து
    • ஒயிலாட்டம்
    • பாம்பாட்டம்
    • உருமி ஆட்டம்
    • புலி ஆட்டம்
    • பறை ஆட்டம்
    • கரகாட்டம்
    • மாடு ஆட்டம்
    • உறியடி ஆட்டம்
    • கொல்லிக் கட்டை ஆட்டம்
    • புலி ஆட்டம்
    • சிலம்பாட்டம்
    • குறவன் குறத்தி ஆட்டம்
    • கைச்சிலம்பாட்டம்
    • தேவராட்டம்
    • தப்பாட்டம்
    • காளியாட்டம்
    • சேவையாட்டம்
    • பேயாட்டம்
    • சாமியாட்டம்
  • கூத்துக்கள்
    • சாந்திக் கூத்து
      • சாக்கம்
      • மெய்க் கூத்து
      • அபிநயக் கூத்து
      • நாட்டுக்கூத்து
    • விநோதக் கூத்து
      • குரவைக் கூத்து
      • கலிநடனம் என்னும் 'கழாய்க் கூத்து'
      • கரகம் என்னும் 'குடக் கூத்து'
      • பாய்ந்தாடும் 'கரணம்'
      • நோக்கு 'பார்வைக் கூத்து'
      • நகைச்சுவை கொண்ட 'வசைக் கூத்து'
      • 'சாமியாட்டம்' அல்லது 'வெறியாட்டு'


  • தமிழர் சிற்பக்கலை
  • தமிழர் கட்டிடக்கலை
  • தமிழர் கப்பற்கலை
  • தமிழர் பெருங்கற்காலக் கட்டிடக்கலை
  • தமிழர் மட்பாண்டக்கலை
  • தமிழர் மரவேலைக்கலை
  • தமிழ் வரைகலை
  • கலைகள்
  • கலை வரலாறு
  • கலைப் பாணிகள், காலம் மற்றும் இயக்கங்கள்

தமிழர்களின் அளவைகள்

அன்பு நண்பர்களே,வணக்கம். 

   இந்த பதிவில் தமிழர்களின் அளவைகள் பற்றி காண்போம்.


கால வாய்ப்பாடு

2 கண்ணிமை = 1 நொடி
2 கைநொடி = 1 மாத்திரை
2 மாத்திரை = 1 குரு
2 குரு = 1 உயிர்
2 உயிர் = 1 சணிகம்
12 சணிகம் = 1 விநாடி
60 விநாடி = 1 விநாடி நாழிகை
2 1/2 நாழிகை = 1 ஓரை
3-3 1/2 நாழிகை = 1 முகூர்த்தம்
2 முகூர்த்தம் = 1 சாமம்
4 சாமம் = 1 பொழுது
2 பொழுது = 1 நாள்
15 நாள் = 1 பக்கம்
2 பக்கம்-30 நாள் = 1 மாதம்
6 மாதம் = 1 அயனம்
2 அயனம் -12 மாதம் = 1 ஆண்டு
60 ஆண்டு = 1 வட்டம்

   நீள வாய்ப்பாடு

10 கோன் - 1 நுண்ணணு
10 நுண்ணணு - 1 அணு
8 அணு - 1 கதிர்த்துகள்
8 கதிர்த்துகள் - 1 துசும்பு
8 துசும்பு - 1 மயிர்நுணி
8 மயிர்நுணி - 1 நுண்மணல்
8 நுண்மணல் - 1 சிறுகடுகு
8 சிறுகடுகு - 1 எள்
8 எள் - 1 நெல்
8 நெல் - 1 விரல்
12 விரல் - 1 சாண்
2 சாண் - 1 முழம்
4 முழம் - 1 பாகம்
6000 பாகம் - 1 காதம்(1200 கெசம்)
4 காதம் - 1 யோசனை

     முகத்தலளவை

1 சோடு - 360 நெல்
1 ஆழாக்கு - 168 மி.லி.
1 உழக்கு - 336 மி.லி.
1 உரி - 672 மி.லி.
1 நாழி - 1.3 லி.
1 குறுணி - 5.3 லி.
1 பதக்கு - 10.7 லி.
1 முக்குறுணி - 16.1 லி.
1 தூணி - 21.5 லி.
1 கலம் - 64.5 லி.
1 தேக்கரண்டி - 4 மி.லி
1 குப்பி - 700 மி.லி.
1 தீர்த்தக்கரண்டி - 1.33 மி.லி.
1 நெய்க்கரண்டி - 4.0 மி.லி.
1 உச்சிக்கரண்டி - 16 மி.லி.
1 மேஜைக்கரண்டி - 16 மி.லி.
1 பாலாடை - 30 மி.லி.
1 எண்ணெய்க்கரண்டி - 240 மி.லி.

  முகத்தல் வாய்ப்பாடு

5 செவிடு = 1 ஆழாக்கு
2 ஆழாக்கு = 1 உழக்கு
2 உழக்கு = 1 உரி
2 உரி = 1 படி
8 படி = 1 மரக்கால்
2 குறுணி = 1 பதக்கு
2 பதக்கு = 1 தூணி

 

Liquid and grain measures:
2 செவிடு = 1 பிடி
5 செவிடு = 1 ஆழாக்கு
2 ஆழாக்கு = 1 உழக்கு
2 உழக்கு = 1 உரி
2 உரி = 1 நாழி
8 நாழி = 1 குறுணி
2 குறுணி = 1 பதக்கு
2 பதக்கு = 1 தூணி அல்லது காடி
3 தூணி = 1 கலம்

      நிறுத்தலளவை

1 உளுந்து அல்லது 1 கிரெயின் - 65 மி. கி.
1 குன்றி - 130 மி. கி.
1 மஞ்சாடி - 260 மி.கி.
1 மாஷம் - 780 மி.கி.
1 பனவெடை - 488 மி.கி.
1 வராகனெடை - 4.2 கி.
1 டிராம் - 4.2 கி.
1 கழஞ்சு - 5.1 கி.
1 பலம் - 41 கி. (35 கி.)
1 கஃசு அல்லது கைசா - 10.2 கி.
1 தோலா - 12 கி.
1 ரூபாவெடை - 12 கி.
1 அவுன்ஸ் - 30 கி.
1 சேர் - 280 கி.
1 வீசை - 1.4 கி.கி.
1 தூக்கு - 1.7 கி.கி.
1 துலாம் - 3.5 கி.கி.

பொன்நிறுத்தல் வாய்ப்பாடு

4 நெல் எடை = 1 குன்றிமணி
2 குன்றிமணி = 1 மஞ்சாடி
2 மஞ்சாடி = 1 பனவெடை
8 பனவெடை = 1 வராகனெடை
5 பனவெடை = 1 கழஞ்சு
4 கழஞ்சு = 1 கஃசு
4 கஃசு = 1 பலம்

 பண்டங்கள் நிறுத்தல் வாய்ப்பாடு

32 குன்றிமணி = 1 வராகனெடை
10 வராகனெடை = 1 பலம்
40 பலம் = 1 வீசை
6 வீசை = 1 தூலாம்
8 வீசை = 1 மணங்கு
20 மணங்கு = 1 பாரம்

தமிழர் அளவைகள்

     அன்பு நண்பர்களே,வணக்கம். 
இந்த வலைப்பதிவிற்கு வருகை தந்த தங்களை வருக வருக என வரவேற்கிறேன்.தமிழர்களின் அளவைகள் பற்றி இங்கு காண்போம்.          

       அளவைகள்
நீட்டலளவு
  • 10 கோன் - 1 நுண்ணணு
  • 10 நுண்ணணு - 1 அணு
  • 8 அணு - 1 கதிர்த்துகள்
  • 8 கதிர்த்துகள் - 1 துசும்பு
  • 8 துசும்பு - 1 மயிர்நுணி
  • 8 மயிர்நுணி - 1 நுண்மணல்
  • 8 நுண்மணல் - 1 சிறுகடுகு
  • 8 சிறுகடுகு - 1 எள்
  • 8 எள் - 1 நெல்
  • 8 நெல் - 1 விரல்
  • 12 விரல் - 1 சாண்
  • 2 சாண் - 1 முழம்
  • 4 முழம் - 1 பாகம்
  • 6000 பாகம் - 1 காதம்(1200 கெசம்)
  • 4 காதம் - 1 யோசனை
பொன் நிறுத்தல்
  • 4 நெல் எடை - 1 குன்றிமணி
  • 2 குன்றிமணி - 1 மஞ்சாடி
  • 2 மஞ்சாடி - 1 பணவெடை
  • 5 பணவெடை - 1 கழஞ்சு
  • 8 பணவெடை - 1 வராகனெடை
  • 4 கழஞ்சு - 1 கஃசு
  • 4 கஃசு - 1 பலம்
பண்டங்கள் நிறுத்தல்
  • 32 குன்றிமணி - 1 வராகனெடை
  • 10 வராகனெடை - 1 பலம்
  • 40 பலம் - 1 வீசை
  • 6 வீசை - 1 தூலாம்
  • 8 வீசை - 1 மணங்கு
  • 20 மணங்கு - 1 பாரம்
முகத்தல் அளவு
  • 5 செவிடு - 1 ஆழாக்கு
  • 2 ஆழாக்கு - 1 உழக்கு
  • 2 உழக்கு - 1 உரி
  • 2 உரி - 1 படி
  • 8 படி - 1 மரக்கால்
  • 2 குறுணி - 1 பதக்கு
  • 2 பதக்கு - 1 தூணி
பெய்தல் அளவு
  • 300 நெல் - 1 செவிடு
  • 5 செவிடு - 1 ஆழாக்கு
  • 2 ஆழாக்கு - 1 உழக்கு
  • 2 உழக்கு - 1 உரி
  • 2 உரி - 1 படி
  • 8 படி - 1 மரக்கால்
  • 2 குறுணி - 1 பதக்கு
  • 2 பதக்கு - 1 தூணி
  • 5 மரக்கால் - 1 பறை
  • 80 பறை - 1 கரிசை
  • 48 96 படி - 1 கலம்
  • 120 படி - 1 பொதி

தமிழ் எண்கள்(எழுத்து வடிவில்)

   அன்பு நண்பர்களே,வணக்கம்.இந்தப் பதிவில் தமிழ் எண்கள் எழுத்துவடிவில் இங்கு காண்போம்.

      தமிழ் எண்கள்(எழுத்து வடிவில்)

  • ௧ = 1
  • ௨ = 2
  • ௩ = 3
  • ௪ = 4
  • ௫ = 5
  • ௬ = 6
  • ௭ = 7
  • ௮ = 8
  • ௯ = 9
  • ௰ = 10
  • ௰௧ = 11
  • ௰௨ = 12
  • ௰௩ = 13
  • ௰௪ = 14
  • ௰௫ = 15
  • ௰௬ = 16
  • ௰௭ = 17
  • ௰௮ = 18
  • ௰௯ = 19
  • ௨௰ = 20
  • ௱ = 100
  • ௨௱ = 200
  • ௩௱ = 300
  • ௱௫௰௬ = 156
  • ௲ = 1000
  • ௲௧ = 1001
  • ௲௪௰ = 1040
  • ௮௲ = 8000
  • ௰௲ = 10,000
  • ௭௰௲ = 70,000
  • ௯௰௲ = 90,000
  • ௱௲ = 100,000 (lakh)
  • ௮௱௲ = 800,000
  • ௰௱௲ = 1,000,000 (10 lakhs)
  • ௯௰௱௲ = 9,000,000
  • ௱௱௲ = 10,000,000 (crore)
  • ௰௱௱௲ = 100,000,000 (10 crore)
  • ௱௱௱௲ = 1,000,000,000 (100 crore)
  • ௲௱௱௲ = 10,000,000,000 (thousand crore)
  • ௰௲௱௱௲ = 100,000,000,000 (10 thousand crore)
  • ௱௲௱௱௲ = 1,000,000,000,000 (lakh crore)
  • ௱௱௲௱௱௲ = 100,000,000,000,000 (crore crore)
  • paramesdriver.blogspot.com-நன்றி!

தமிழ் எண்கள்-ஏறு மற்றும் இறங்கு வரிசையில்


      அன்பு நண்பர்களே,
       கொங்கு தென்றல் வலைப்பதிவிற்கு வருகை தந்துள்ள தங்களை வணங்கி வரவேற்கிறேன்.இந்தப் பதிவில் தமிழ் எண்கள் பற்றி காண்போம்.

ஏறுவரிசையில்- தமிழ் எண்கள்


1 = ஒன்று -one
10 =
பத்து -ten
100 =
நூறு -hundred
1,000 =
ஆயிரம் -thousand
10,000 =
பத்தாயிரம் -ten thousand
1,00,000 =
நூறாயிரம் -hundred thousand
10,00,000 =
பத்துநூறாயிரம் – one million
1,00,00,000 =
கோடி -ten million
10,00,00,000 =
அற்புதம் -hundred million
1,00,00,00,000 =
நிகர்புதம் – one billion
10,00,00,00,000 =
கும்பம் -ten billion
1,00,00,00,00,000 =
கணம் -hundred billion
10,00,00,00,00,000 =
கற்பம் -one trillion
1,00,00,00,00,00,000 =
நிகற்பம் -ten trillion
10,00,00,00,00,00,000 =
பதுமம் -hundred trillion
1,00,00,00,00,00,00,000 =
சங்கம் -one zillion
10,00,00,00,00,00,00,000 =
வெல்லம் -ten zillion
1,00,00,00,00,00,00,00,000 =
அன்னியம் -hundred zillion
10,00,00,00,00,00,00,00,000 =
அர்த்தம் -
1,00,00,00,00,00,00,00,00,000 =
பரார்த்தம்
10,00,00,00,00,00,00,00,00,000 =
பூரியம் -
1,00,00,00,00,00,00,00,00,00,000 =
முக்கோடி -
10,00,00,00,00,00,00,00,00,00,000 =
மஹாயுகம்
 
PARAMESDRIVER.BLOGSPOT.COM-நன்றி!
   இறங்குவரிசையில்-
    தமிழ் எண்கள்

1 –
ஒன்று
3/4 –
முக்கால்
1/2 –
அரை கால்
1/4 –
கால்
1/5 –
நாலுமா
3/16 –
மூன்று வீசம்
3/20 –
மூன்றுமா
1/8 –
அரைக்கால்
1/10 –
இருமா
1/16 –
மாகாணி(வீசம்)
1/20 –
ஒருமா
3/64 –
முக்கால்வீசம்
3/80 –
முக்காணி
1/32 –
அரைவீசம்
1/40 –
அரைமா
1/64 –
கால் வீசம்
1/80 –
காணி
3/320 –
அரைக்காணி முந்திரி
1/160 –
அரைக்காணி
1/320 –
முந்திரி
1/1,02,400 –
கீழ்முந்திரி
1/21,50,400 –
இம்மி
1/2,36,54,400 –
மும்மி
1/16,55,80,800 –
அணு
1/1,49,02,27,200 –
குணம்
1/7,45,11,36,000 –
பந்தம்
1/44,70,68,16,000 –
பாகம்
1/3,12,94,77,12,000 –
விந்தம்
1/53,20,11,11,04,000 –
நாகவிந்தம்
1/7,44,81,55,54,56,000 –
சிந்தை
1/48,96,31,10,91,20,000 –
கதிர்முனை
1/9,58,52,44,36,48,00,000 –
குரல்வளைப்படி
1/5,75,11,46,61,88,80,00,000 –
வெள்ளம்
1/5,75,11,46,61,88,80,00,00,000 –
நுண்மணல்
1/2,32,38,24,53,02,27,20,00,00,000 –
தேர்த்துகள்
PARAMESDRIVER.BLOGSPOT.COM-நன்றி!

18 அக்டோபர் 2011

பசுமை ஆக்கும் திட்டம்


             தமிழக காடுகளில் உயிர்ப்பன்மை மற்றும்  

                 பசுமை ஆக்கும் திட்டம்:

           ஜப்பான் நிதியில் விரைவில் துவக்கம்



      தமிழகத்தில் குறைந்து வரும் காடுகளின் பரப்பளவு மற்றும் வெளிநாட்டு தாவரங்களின் ஆக்கிரமிப்பை சீர் செய்யும் வகையில், உயிர்ப்பன்மை மற்றும் பசுமை ஆக்கும் திட்டம், 686 கோடி ரூபாய் செலவில், விரைவில் துவங்கவுள்ளது. இதன்படி, ஆண்டுக்கு இரண்டு கோடி மரங்களை தனியார் நிலங்களில் வளர்க்கவும், காடுகளின் உயிர்பன்மையை பாதுகாக்கவும், ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவன நிதியுதவியுடன் செயல்படுத்த, தமிழக வனத்துறை திட்டமிட்டுள்ளது.

       உயிர்ப்பன்மை திட்டம்:
காடுகளை பொறுத்தவரை "லன்டானா, வேலி கருவை முள் மரம்' உள்ளிட்ட வெளிநாட்டு புதர் செடிகள் அதிகமாக வளர்ந்துள்ளன. இவை உள்நாட்டு வகைகளை வளரவிடாமல் தடுக்கின்றன. மேலும், இவை விலங்குகளின் உணவுக்கு உகந்தது அல்ல. உள்நாட்டு தாவரங்கள் வளரும் இடத்தில் ஆக்கிரமித்துள்ள லன்டானா, வேலி கருவை போன்றவற்றை வேரோடு அகற்றி, அந்த இடத்தில் உள்ளூர் மரங்கள் நடுவதற்கு புதிய திட்டத்தில் நடவடிக்கை எடுக்கப் படும். குறிப்பாக, யானைகளின் உணவான மூங்கில், புல் வகைகள், விலா மரங்களின் கன்றுகளை நட்டு உருவாக்கும் திட்டமாக உயிர்ப்பன்மை திட்டம் விளங்குகிறது. மேற்கு தொடர்ச்சி மலை, தர்மபுரி,சேலம், கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

சூழல் சுற்றுலா:
இத்திட்டத்துடன் இணைந்து "சூழல் சுற்றுலா' ஆரம்பிக்கும் திட்டமும் கூடுதலாக உருவாக்கப்பட்டுள்ளது. சரணாலயம் அமைந்த காடுகளில் பழங்குடி மக்கள் ஒத்துழைப்புடன் ஆங்காங்கே சூழல் சுற்றுலா உருவாக்கப்படுகிறது. சுற்றுலாவுக்கு வரும் மக்கள் தங்கும் விடுதிகளை பராமரிக்கவும், அவர்களுக்கு வழிகாட்டியாக விளங்குவதற்கும், மலை வாழ் மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கவும் இத்திட்டம் பயன் அளிக்கக் கூடியதாக உள்ளது. ஒகேனக்கல், முதுமலை, கோவை, சத்தியமங்கலம், ஆசனூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய காடுகளில் "சூழல் சுற்றுலா' உருவாக்கும் இடமாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளன.

பசுமை ஆக்கும் திட்டம்:
வனங்களுக்கு வெளியே தனியார் நிலங்களில் மரங்களை வளர்க்கும் இத்திட்டம், அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படுகிறது. ஆண்டுக்கு இரண்டு கோடி மரங்கள் வீதம் ஐந்தாண்டில், 10 கோடி மரங்களை நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. தரிசு நிலங்களில் தேக்கு, குமிழ், மலை வேம்பு, சவுக்கு, பெருமரம் போன்ற மரக்கன்றுகள் வனத்துறை சார்பில், தனியார் நில உரிமையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. அம்மரங்களை வளர்க்க ஆண்டு தோறும் ஒரு ஏக்கருக்கு ஆயிரம் ரூபாய் பராமரிப்பு தொகையும் வனத்துறை சார்பில் வழங்கப்படுகிறது.
சில ஆண்டுகளுக்கு பின் வளர்ந்த மரங்களை வெட்டி, அதை விற்பனை செய்து கொள்ளும் உரிமையும் நில உரிமையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. மரங்களை சந்தையில் விற்பதால் கிடைக்கும் பணம் விவசாயிகளுக்கு லாபத்தை தருகிறது. இதனால், இத்திட்டத்தை செயல்படுத்த விவசாயிகள் ஆர்வம் காட்டுவர். அப்போது தான் மரப்பரப்பளவு அதிகரிக்கப்படும் என வனத்துறை கருதுகிறது.

ஜப்பான் நிதி
இந்த இரண்டு திட்டங்களை செயல்படுத்துவதற்கு, ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனம் சார்பில், 686 கோடி ரூபாய் மாநில அரசுக்கு கடன் வழங்கவுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான அறிவிப்பை பட்ஜெட் கூட்டத் தொடரில் அரசு அறிவிக்கும் என, வனத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தின் மொத்த நிலப்பரப்பு, ஒரு லட்சத்து 30 ஆயிரம் சதுர கி.மீ., இதில் மூன்றில் ஒரு பங்கு காடுகள் இருக்க வேண்டும். அப்போது தான் இயற்கை சமன்பாடு கிடைக்கும்; மழை பொழியும்; சுத்தமான காற்று வீசும். எனவே மரப்பரப்பு அதிகரிக்க வைக்கும் வகையில் தனியார் நிலங்களில் பசுமையாக்கும் திட்டம் தர்மபுரி, கோவை, ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் அதிக அளவில் செயல்படவுள்ளது. நில உரிமையாளர்களுக்கு இலவச மரக்கன்றுகளை, வன விரிவாக்கம் பிரிவில் பணியாற்றும் ஊழியர்கள் வழங்கி விடுவர். இவ்வாறு அவர் கூறினார்.

வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்கள்...

லன்டானா, வேலி கருவை முள் மரங்களை வெட்டாமல் விட்டால் சுற்றுச்சூழல் பாதிக்குமா என்ற கேள்விக்கு, தாவரவியல் ஆராய்ச்சியாளர் முத்துகார்த்திக் அளித்த பதில்: அவற்றை வெட்டாமல் விட்டால் கண்டிப்பாக பாதிக்கும். உலகளவில் ஆக்கிரமிப்பு செடி வகைகளில் இடம் பெற்ற பத்து மரங்களில் லன்டானா, வேலி கருவை முள் இடம் பெற்றுள்ளது. கோல்கட்டாவில் உள்ள பொட்டானிக்கல் கார்டனின் அழகு கண்காட்சியில் வைப்பதற்காக லத்தீன், அமெரிக்கா காடுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட செடி தான் லன்டானா. விறகு தட்டுப்பாட்டை போக்க, மெக்சிக்கோ நாட்டிலிருந்து வேலிகருவை முள் மரம் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது. இந்த இரண்டு மரங்களும் வனவிலங்குகளின் தாவரங்களை வளர விடாமல் தடுக்கின்றன. மேலும் வனவிலங்குகளின் நடமாட்டத்திற்கும் இந்த மரங்கள் இடையூறாகவே விளங்குவதால், இதை அழிக்கும் திட்டம் வரவேற்கக்கூடியது. இவ்வாறு அவர் கூறினார்.

17 அக்டோபர் 2011

மாநில தேர்தல் ஆணையம்.

               
    உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி படைத்த அத்தனை வாக்காளர்களும் தவறாமல் தங்களது ஜனநாயகக் கடமையைச் செய்ய வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டு உள்ளது.
     மாநிலத் தேர்தல் ஆணையம்வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று (திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு முடிவடைகிறது.

முதல் கட்ட வாக்குப்பதிவில்

        நகர்ப்புறங்களில் 1 கோடியே 37 லட்சத்து 97 ஆயிரத்து 898 வாக்காளர்களும், ஊரகப் பகுதிகளில் 1 லட்சத்து 32 ஆயிரத்து 929 வாக்காளர்களும் வாக்களிக்க உள்ளனர். 

           நகர்ப்புறங்களில் 17 ஆயிரத்து 690 வாக்குச்சாடிகளும், ஊரகப் பகுதிகளில் 30 ஆயிரத்து 681 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 10 மாநகராட்சிகளிலும் முதல் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

     வாக்காளர்கள் மாநிலத் தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள புகைப்படத்துடன் கூடிய பூத் சிலிப்பை காண்பித்து வாக்களிக்கலாம்.

       வாக்காளர் அடையாளச்சீட்டு பெற இயலாதவர்கள், வாக்குப்பதிவன்று வாக்குசாவடி அருகில் தேர்தல் பணியாளர்களால் வழங்கப்படும் அடையாளச்சீட்டினை பெற்று வாக்களிக்கலாம்.

       அல்லது ஏற்கனவே விளம்பரப்படுத்தப்பட்டுள்ள ஆவணங்களை சமர்ப்பித்தும் வாக்களிக்கலாம். 
                நகர உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் முதன்முறையாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்காக 80 ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.

      கிராம ஊராட்சிகளில் ஒவ்வொரு வாக்காளரும் 4 ஓட்டுப்போட வேண்டும். அதனால் வாக்குப்பதிவு தாமதமாகலாம்.

      எனவே, ஓட்டுப்பதிவு நடக்கும் நாளில் வாக்குச்சாவடிகளுக்கு மாலை 5 மணி வரை வரும் வாக்காளர்கள் அனைவரும், எவ்வளவு நேரம் ஆனாலும் ஓட்டுப்போட அனுமதிக்கப்படுவார்கள் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

       தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் மற்றும்  பணியாளர்கள் நியாயமாகவும், அச்சமின்றியும்  பணிபுரியவேண்டும் எனவும், ஏதேனும் இடையூறுகள் ஏற்பட்டால் உடனடியாக தேர்தல் ஆணையத்தை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க வேண்டும்எனவும் அறிவித்துள்ளது..

      இந்த வாக்குப்பதிவினை சுதந்திரமாகவும், நேர்மையாகவும், , வெளிப்படையாகவும், அமைதியாகவும், உரிய பாதுகாப்புடன் நடத்திட அனைத்து விதமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

     வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். அனைத்து வேட்பாளர்கள் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் தேர்தலை அமைதியாக நடத்திட ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

10 அக்டோபர் 2011

பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம்.-கோபி

                      பெற்றோர் சங்க நிர்வாகிகள்-தேர்வு
  
    அன்பு நண்பர்களே,வணக்கம்.

     கொங்கு தென்றல் வலைப்பதிவிற்கு தங்களை வருக! வருக!! என வரவேற்கிறோம்.
       
       கோபி செட்டிபாளையத்தில் அமைந்துள்ள   கோபி கலை & அறிவியல் கலைக்கல்லூரியின் இந்த ஆண்டுக்கான செயற்குழு உறுப்பினர்கள் இன்று தேர்வு செய்யப்பட்டனர்.
          கல்லூரி முதல்வர் மரியாதைக்குரிய முனைவர். ஆர். செல்லப்பன். அவர்கள் அனுமதியின்பேரில்  10-10-2011 அன்று நடைபெறும்   பெற்றோர் சங்க பேரவைக் கூட்டத்திற்கான அழைப்பிதழை பெற்றோர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.என 27-09-2011ந்தேதியன்றே  அனைத்து மாணவ,மாணவியர்களிடம் பெற்றோர்களுக்கு சென்றடையும் வண்ணம் கொடுத்து அனுப்பப்பட்டன.
            அதன்படி, பெற்றோர் சங்கப் பேரவைக்கூட்டம் 10-10-2011 இன்று மாலை 3-30மணிக்கு (KAM)கல்லூரி கருத்தரங்கு அறையில் நடைபெற்றது.கல்லூரி முதல்வர் அவர்கள் முன்னிலை வகிக்க இந்த ஆண்டுக்கான பெற்றோர் சங்க செயற்குழுக் கூட்ட நிர்வாகிகள் பெற்றோர்களால் தேர்வு செய்யப்பட்டனர்.
          கடந்த ஆண்டு செயற்குழு நிர்வாகிகள் புதியதாகத் தேர்வு செய்யப்பட்ட பெற்றோர் சங்க பேரவை நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தும்,  கடந்த ஆண்டுகளைப் போலவே மாணவ,மாணவியராகிய நமது குழந்தைகள் நலனுக்காகபெற்றோர் சங்கப் பேரவை சிறப்பாக செயல்பட ஒத்துழைப்புக்கொடுப்பதாகவும் உறுதி அளித்தனர்.
        புதியதாகப் பொறுப்பேற்றுக் கொண்ட பேரவை நிர்வாகிகள்  தம் குழந்தைகளான மாணவ,மாணவியருக்கு ஒழுக்கம்,சமுதாயச்சிந்தனை,ஆளுமைத்திறன்,வேலைவாய்ப்பிற்கான தகுதிகளை மேம்படுத்துதல்,பிறருக்கு உதவும் மனப்பாங்கு,தொழில்நுட்பத் தெரிவுகள், பல்கலைக்கழகத்திலேயே மிகச்சிறந்த   இக்கல்லூரியின் நூலகத்தைப் பயன்படுத்த மற்றும் மரியாதைக்குரிய பேராசிரியப்    
பெருமக்களோடு இணைந்து  இக்கல்லூரியில் எளிதாகக் கிடைக்கும் வசதிவாய்ப்புகளைப்பயன்படுத்த,  இன்னும் ஊக்கம் அளித்தல் இவை சம்பந்தமான அனைத்து முன்னேற்ற திட்டங்களுக்கும் மாணவ,மாணவியருக்கு விழிப்புணர்வு கொடுத்து கூடுதலாக பல்வேறு நலத்திட்டங்களுக்காக  கல்லூரி நிர்வாகத்திற்கும் ஒத்துழைப்பது மற்றும் செயல்படுவது மற்றும் இக்கல்லூரியின் அனைத்து வசதிகளையும் மாணவ,மாணவியர்கள் அறியச்செய்வதுடன் பெற்றோர்களாகிய நாமும் அறிந்து கொள்ளவேண்டும்.இந்த வசதிகளை நம் குழந்தைகள் எந்தளவு பயன்படுத்துகிறார்கள் என்பதனையும் கண்காணிப்பது.என உறுதி ஏற்றுக்கொண்டனர்.
   தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் இணைந்து செயல்பட அனைவருக்கும் ஊக்கமளிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
 திருமதி ;  பெற்றோர் சங்கப் பேரவைத் துணைத்தலைவி அவர்கள் நன்றியுரையாற்ற பெற்றோர் சங்கக்கூட்டம் நிறைவு பெற்றது.

07 அக்டோபர் 2011

கணிணியில் அதிக நேரம் செலவிடுபவரா?

     கணிணியில் அதிக நேரம் செலவிடுபவரா?    

கண் பாதிப்பு: இமைக்காமல் அதிக நேரம் கணினித் திரையயே பார்த்துக் கொண்டிருப்பது கண் அழுத்தம்(glucoma), மற்றும் விழி உலர்வு நோய்(dry eye syndrom) க்கு காரணமாகிறது. குறிப்பாக கிட்டப் பார்வை (short sight) உள்ளவர்களை அதிகம் பாதிக்கிறது. அதிக வெளிச்சமான் திரையை அதிக நேரம் உற்றுப் பார்ப்பது கண்களை மிகவும் பாதிக்கிறது. இதை மிக சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இதன் ஆபத்தை மெல்ல நாம் உணருமுன் பார்வையை நிரந்தரமாக இழக்க நேரிடும்.கண் எரிச்சல், கண் அரிப்பு, வலி இதெல்லாம் இதன் முன்னெச்சரிக்கை.
* கணினினி திரை வெளிச்சத்தை மிதமாக வைத்துக்கொள்ளவும்.
* கணினி இருக்கும் அறையில் ஓரளவு வெளிச்சம் இருக்க வேண்டும்.
* அடிக்கடி கண்ணை இமைப்பது நல்லது.
* இடையிடையே கண்ணை முழுவதுமாக மூடி கண்ணுக்கு சிறிது ஓய்வு கொடுக்க வேண்டும்.
* அடிக்கடி திரையிலிருந்து பார்வையை விலக்கி தூர உள்ள பொருளை காட்சியைப் பார்க்க வேண்டும்.
* மானிட்டருக்கு பின் புறம் ஜன்னல் இருந்தால் நல்லது.
* குளிரூட்டப்பட்ட அறைகளில் உள்ள உலர்ந்த குளிர் காற்று கண் உலர்வுக்குக் காரணமாகும்.
கை மற்றும் மணிக்கட்டு பாதிப்பு: எப்போதும் கீ போர்டில் தடடிக் கொண்டிருப்பதும். மவுசை கிளிக்கிக் கொண்டிருப்பதும் விரல்க்ள், மணிக்கட்டு ஆகியவற்றில் வலி ஏற்படுத்துகிறது.இது RSI (Repetitive Strain Injury) எனப்படுகிறது. இது வெறும் வலி என்று அலட்சியப்படுத்தாதீர்கள். கைகளில் மின்சாரம் தாக்கினால் என்ன பாதிப்பு உண்டாகுமோ அந்த பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது.
ஒரு சிறிய துண்டுதுணி அல்லது பஞ்சு போன்ற பொருளை மணிக்கட்டு சப்போர்ட்டாக வைத்துக் கொண்டு மவுசில் வேலை செய்யுங்கள். இதற்கென்றே தயாரிக்கப்பட்ட மவுஸ் பேட்களும் கிடைக்கின்றன.
கைகளும் கீ போர்டும் சரியான தூரத்தில் சரியான உயரத்தில் இருக்கவேண்டும். அப்போது தான் கைக்கு அதிக ஸ்ட்ரெஸ் இல்லாமல் இருக்கும்.
கழுத்துவலி: மானிட்டரைப் பார்க்கும் போது நேராகப் பார்க்கும் நிலையில் இருக்கை உயரம் இருக்க வேண்டும். கழுத்தை திருப்பி ஒரு பக்கமாகவோ அண்ணாந்தோ , குனிந்தோ பார்ப்பது கழுத்து வலியையும் நாளடைவில் எலும்புத் தேய்வுகளையும் ஏற்டுத்தும்.
முதுகு வலி: நல்ல வசதியான இருக்கை, சரியான உயரத்தில் இருக்க வேண்டும். முதுகை வளைக்காமலும் திரும்பாமலும் நேராக உட்கார்ந்திருக்க வேண்டும். தவறான பொசிசனின் உட்கார்ந்திருப்பது, கை கால்களுக்கு செல்லும் சரியான இரத்த ஓட்டத்தை பாதிக்கும். வலி, எலும்புகள் தேய்வுண்டாகும்.
சமூக பாதிப்பு: என்னேரமும் கணினியிலேயே நேரத்தை செலவிட்டால் மனைவி, குழந்தைகள், நண்பர்கள் போன்ற நம்மைச் சார்ந்தவர்களிடம் செலவிட நேரம் கிடைப்பதில்லை. இது அவர்களை நம்மிடமிருந்து பிரித்து பல்வேறு பிரச்சினகளை உருவாக்கும்.
தினசரி கொஞ்ச நேரமாவது முற்றிலும் கணினியை மறந்து நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்காக ஒதுக்க வேண்டும்.
அதிக கொலெஸ்ட்ரால் ஆபத்து: எப்போதும் கணினி முன்னே உட்கார்ந்தே இருப்பதால் உடலில் எரிக்கப்படும் கலோரி அளவு உண்ணும் உணவை விட குறைவாக இருக்கும். இதனால் இரத்ததில் சேரும் அதிகப்படியான கொழுப்பு சத்து கொலெஸ்ட்ராலாக இரத்தக் குழாய்களில் படிகிறது. இது நாளடைவில் இரத்தக் குழாய்களைக் குறுகச் செய்து உயர் இரத்த அழுத்தத்தை உருவாக்குகிறது. அதோடு இதய நோய். சர்கரை நோய் எல்லாம் உருவாகி ஆயுளுக்கு முற்றுப் புள்ளி வைத்து விடும்.
தொடர்ந்து கணினியில் இருக்காமல் இடையிடையே எழுந்து சென்று சில தூரம் நடைப் பயிற்சி கொள்வது மிகவும் நல்ல பழக்கம்.தொடர்ந்து பணிபுரியத் தேவையான புத்துணர்வு இது தரும்
நன்றி:குமுதம்

சரிவிகித உணவும் நோய்கள் இல்லா வாழ்க்கையும்

சரிவிகித உணவும் நோய்கள் இல்லா வாழ்க்கையும்

சரிவிகித உணவும் நோய்கள் இல்லா வாழ்க்கையும்
(Balanced diet )
இப்போதைய விரைவு
வாழ்க்கை முறையில் உடலுக்கு தேவையானதை முறையாக தேடி சேமித்து உண்ணும் வழக்கம் இருப்பதில்லை . அதற்க்கு நேரமும் வாய்ப்பதில்லை .முறையான அறிவிகித உணவு என்பது என்ன?எந்த விழுக்காட்டில் எந்த உணவை எப்படி உண்பது ? இதைப்பற்றி கதைப்பதே இந்த இடுகை 


சர்க்கரை சத்து

இது
மாவு சத்து என்றும் ,சர்க்கரை சத்து என்றும் (carbohydraret ) என்றும் அழைக்கப்படும் .இந்த உணவே நமதுபெரும் பான்மையான உணவு எனலாம் .உடலுக்கு தேவையான அதிவிரைவான சக்தியை அது தருகிறது என்பதால் இந்த உணவை தேடி எடுத்துக்கொண்டான்மனிதன் .இந்த சக்தி இனிப்பில் இருந்து மட்டுமல்லாமல் தவசங்கள் (தாணியம்) கிழங்கு வகைகள் போன்றவற்றில்இருந்தும் பெறப்படுகிறது . இந்த உணவுகள் இரைப்பையில் சென்ற உடன் நொதிக்கப்பட்டு (enzymes ) உடைக்கப்பட்டு குளுக்கோசாகமாற்றப்பட்டு மனித பொறி (இயந்திரம் )சிறப்பாக இயங்க எரியூட்ட படுகிறது .இந்த குளுக்கோசு உயிர்அணுக்களில் விரைந்து புகுந்து சக்தியாகமாறிமனிதத்தை இயக்குகிறது .இதனால்தான் உடலுக்கு (நோயிலிருக்கும்போது) விரைந்து சக்திதர குளுக்கோசு தரப்படுகிறது ஒருகிராம் சர்க்கரை சக்தியில் இருந்து நான்கு கலோரிவெப்பம் கிடைப்பதாக கணக்கிட்டு உள்ளனர் .ஒருகிரம்தன்நீரை ஒருடிகிரி செல்சியசு அளவு சூடு படுத்த தேவைப்படும் வெப்பமே ஒருகலோரி எனப்படும் .சர்க்கரையைவிட வெல்லமே சிறந்த உணவு எனலாம் .நூறு கிராமில் (சர்க்கரை )புரதம் 0 .1 கி , கால்சியம் 12 மிகி பசுபரசு 1 மிலி
(வெல்லம்) புரதம் 0 .4 கால்சியம் 80 மிகி பாசுபரசு 40 மிகி தமிழர்களின் உணவு முறை எவ்வளவு சிறந்தது என்பது தெரிகிறதல்லவா ?

கொழுப்பு சத்து

இது நிலைத்திணை (தாவர),மாமிச , எண்ணைகளில் ,இருந்து கிடைக்கிறது .கொழுப்பு சத்துக்களில் கார்பன் ,ஹைட்ரஜன் , உயிர்வளி (ஆக்சிஜன் ),ஆகிய மூன்றும் , பாசுபரசு ,கந்தகம்,நைட்ரஜன் ,போன்ற வையும் காணப்படும். உணவுமுறைகளில் (FAT )எனப்படும் கொழுப்பே மிகையாக உண்ணப்படுகிறது. ஒருகிராம் கொழுப்பில் இருந்து ஒன்பது கலோரி சக்தி கிடைப்பதாக கணக்கிட்டு உள்ளனர் .உடலுக்கு சக்தி வெளியில் இருந்து கிடைக்காத போது சேமித்து வைக்கப்பட்டு இருக்கும் கொழுப்பில் இருந்து எடுத்து கொள்ளபடுகிறது .

கொழுப்பு நிறைந்த உணவுகள் ஊண்,(மாமிசம் )தேங்காய்,எள்,நிலக்கடலை , பனை,சூரியகாந்தி, கடுகு, சோயா,ஆமணக்கு,வெண்ணை ,நெய்,அரிசிதவிடு போன்றவற்றில் இருந்து கிடைக்கிறது.

புரதம்

சர்க்கரையும் ,கொழுப்பும் சக்தியை தருகிறது அனால் புரதம் தான் உடலின் வளர்ச்சிக்கும் ,உடலின் வளர்ச்சி நிலைக்கவும் தேவைப்படுகிறது.பின்தங்கிய (கொள்ளையடித்து ஒருசிலரே வைத்து கொள்ளும் நம் நாட்டைப்போல்)இடங்களில் இந்த புரத பற்றாக்குறை நோய் பெரிதும் காணப்படுகிறது .இந்த புரத பற்றாக்குறை காரணமாகவே பெரிதும் நோய் காணப்படுகிறது . கோடிகணக்கான உயிர் அணுக்களினால்ஆனது இந்த உடல் இந்த உயிர் அணுக்களின் அமைப்பில் மூகாமையனது இந்த புரதமே .ஒருகிராம் புரத்தத்தில் நான்கு கலோரி வெப்பசக்தி கிடைப்பதாக கணக்கிட்டு உள்ளனர். அரிசியில் உள்ள புரதத்தில் லைசின் (Lysine ) குறைந்தே இருந்தாலும் பருப்புவகைகளில் மித்தியோனின் (methionine )குறைந்தே இருந்தாலும் இந்தஇரு வகைகள் சேர்த்து உண்ணுவதால் சக்தி ஈடு செய்யபடுவதாக கூறுகின்றனர் .
நிலைத்திணை (தாவர )உணவு உண்ணுபவர்கள் பலவித தவச (தானிய) வகைகள் , கனிவகைகள்
கீரைகள் ,பால் போன்றவைகள் சேர்க்கபடுவதால் அவற்றினின்று தரமான புரதம் கிடைப்பதாக கணக்கிட்டு உள்ளனர் .
புரத உணவுகள் மொச்சை , குதிரை மசால்,பாசிபயறு , வேர்கடலை , பருத்தி சோளம் , போன்ற வற்றில் தரமான புரதம் கிடைக்கிறது என்கிறனர்

நார்சத்து
இந்த நார் சத்தை பொறுத்தவரை உடலுக்கு எந்த சக்தியையும் கொடுப்பதில்லை என்றாலும் மிகையாக உண்ணப்படும்
மாவு சத்து ஒட்டும் தன்மை கொண்டதாகையால் ஈற்றுணவு (மலம் )வெளியேறுவதில் சிக்கல் உண்டாகும் என்பதாலும் மிகுதியான கொழுப்பை வெளியேற்றும் என்பதால் நார் சத்து தேவையாகிறது . எனவே நார் சத்து நிறைந்த உணவு எடுக்க வேண்டியதும் தேவையாகிறது.

உயிர் சத்துகள்

இவைகள் உடலின் சீரான வளர் ,சிதை மாற்றத்திற்கு துணை செய்கிறது . இது நம் உணவில் சேர்க்கவேண்டிய அங்கக வேதிபொருலாகும். இந்த பொருட்கள் உணவில் குறைந்தால் எந்த பொருள் பற்றாக்குறை உண்டாகியதோ அதற்க்கு ஏற்ற உணவு பற்றாக்குறை நோய் உண்டாகிறது .
வைட்டமின் பி 1 இது கைகுத்தல் அரிசி , மாமிசம் போன்ற வற்றில் உள்ளது .

வைட்டமின் பி 2 நிலைத்திணை (தாவர )உணவில் காய் ,கனி ,கீரைகள்,நிறைந்து உள்ளது.
வைட்டமின் பி 12 இது மாமிசத்தில் ஈரல் பகுதியில் உள்ளதாக கணக்கிட்டு உள்ளனர் . மரக்கறியில் குறைந்தே காணப்படுகிறது என்கிறனர்.

போலிக் அமிலம் (Folic acid )இலத்தீன மொழியில் போலிக் என்றல் இலை என்று பொருள் தாவர உணவில் இது மிகையாக காணப்படுகிறது என்கிறனர் . இது நாளும் 30 முதல் 400 மைகிரோகிரம் அளவு எடுக்க வேண்டும் என்கிறனர்
.
வைட்டமின் சி இது எலுமிச்சை குடும்பத்தை சேர்ந்த பழங்களான அரஞ்சு ,சாத்துக்குடி, போன்றவற்றிலும் ,தக்காளி பச்சைமிளகு ,கோசு, போன்றவைகளில் காணப்படுகிறது இருப்பினும் இவைகள் உணவுக்காக வேகவைக்கும் போது வெப்பத்தில் அழிந்து போகிறது . அனால் நெல்லி கையில் இருந்து கிடைக்கும் இச்சத்து எவ் வகையிலும் கெடுவதில்லை.
இவைகள் நாளும் 35 மிகி முதல் 60 மிகி வரையில் உணவில் சேரும்படி பார்த்து கொள்ள வேண்டும்
.
வைட்டமின் A இது பால் ,முட்டை , மீன் கல்லீரல் போன்றவற்றில் இருந்து கிடக்கிறது

வைட்டமின் D வெய்யல் படாமலே இருக்கும் மனிதர்களிடம் மிகையாக குறைந்து காணப்படுகிறது . இது மாலை வெய்யிலில் இருந்து கிடைகிறது .

வைட்டமின் E இது கோதுமை , அரிசி தவிட்டு எண்ணெய் போன்ற வற்றில் உள்ளது .

வைட்டமின் K தாவர எண்ணெய் ,காய், கொதுமைதவிடு போன்றவற்றில் உள்ளது
.
இந்த சத்துகள் நிறைந்த உணவுகளை முறைப்படி எடுத்து கொண்டாலே நோய்களில் இருந்து விடுபட முடியும் முயல்வோம்

குறிப்பு : சராசரியாக நம் நாட்டை பொறுத்தவரை கடுமையான உழைப்பாளிகள் என்பதால் அவர்களுக்கு ஏற்ற உணவுமுறைகளை கூறுகிறோம் .

நாளும் கலோரிகள் தேவை 3900

புரதம் 55 கிராம் , கால்சியம் 5 மிகி , இரும்பு 20 மிகி , வைட்டமின் A 750 மைக்ரோ கிராம் , தயமின் 1 .2 மிகி ,ரைபோ பிளேன் 1 .3
மிகி , நிகோடின் 16 மிகி , C 50 மிகி , போலிக் 100 மைக்ரோ கிராம் ,B 12 1 மைக்ரோகிராம் ,வைட்டமின் D 200 மைக்ரோ கிராம் .

   இஞ்சி என்பது சரிவிகித உணவு. இதை கண்டிப்பாக அடிக்கடி சேர்த்துக்கொள்ளுங்கள்.

சரிவிகித உணவு

     நாம் வாழும் வாழ்க்கையின் முழுப் பலனைப் பெற, உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். சுவரில்லாமல் சித்திரமில்லை. ஆரோக்கியமான உடலுக்கு தேவை உணவு. அதாவது தேவையான எல்லா சத்துக்களும் சேர்ந்த நல் உணவு. உணவே கடவுள். உணவே மருந்து. உணவை சீர்திருத்தினால், ஆரோக்கியம் பெருகும். ஆயுள் உயரும். பெட்ரோல் போடாத வண்டி ஒடாது. காருக்கு எப்படி பெட்ரோலோ, உடலுக்கு உணவு. உணவை கண்டபடி உண்ணமால் கட்டுப்பாட்டுடன் உண்ண வேண்டும். வயதிற்கேற்ப உணவு கட்டுப்பாடுகள் அவசியமானது.ஆரோக்கியத்திற்கு தேவை சத்துள்ள, ருசிமிக்க, சரிசம விகித உணவை தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும்.
நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள்
புரதம்,  மாவுச்சத்து, கார்போஹைட்ரேட், கொழுப்பு, வைட்டமின்கள், உப்பு, உலோக தாதுப் பொருட்கள் இவை உடலுக்கு தேவையான சத்துப் பொருள்கள். உடலுக்கு தேவையான எரிசக்தியை கலோரி என்று கணக்கிடுகிறோம். ஒரு மனிதனுக்கு தேவையான கலோரிகள் எவ்வளவு என்று நிர்ணயிப்பது அவன் செய்யும் வேலையைப் பொருத்தது.
இவை கர்ப்பிணி பெண்கள், தாய்ப்பால் தரும் தாய்மார்களுக்கு இன்னும் அதிக கலோரிகள் தேவை.
சமச்சீர் உணவு
தினசரி உணவுடன் அரிசி, பால், பருப்பு, காய்கறி, கீரை, இத்யாதி கலக்க வேண்டும். சாப்பாடு கீழ்க்கண்ட விகிதத்தில் இருக்க வேண்டும்.
அரிசி     - 350 கிராம்
மில்லேட்
தானியங்கள் 175 கிராம்
பால் – 280 கிராம் (275 – 300 மி.லிட்டர்)
பருப்பு – 105 கிராம்
காய்கறிகள் – 210 கிராம்
கீரைகள் – 140 கிராம்
எண்ணெய் – 70 கிராம் (70 – 75 மி.லிட்டர்)
பழங்கள் – 70 கிராம்.
இது ஒரு மனிதனின் ஒரு தினத்திற்கு சராசரி தேவை. கிடைக்கும் கலோரிகள் – 2600. மேலே குறிப்பிடப்பட்ட சத்துக்கள் முழுமையாக கிடைக்க, உங்கள் சமையல் முறையும் உதவ வேண்டும். இவற்றை தினந்தோறும் தராசில் அளந்து, நிறுத்தி தயாரிப்பது சாத்தியமில்லை. ஒரு தடவை செய்து பிறகு மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.
அரிசி உணவு
தென்னிந்தியர்களின் அடிப்படை உணவு அரிசி. அரிசியில் புரதம் குறைவாக (6.5 சதவிதம்) இருப்பதால் பருப்பு போன்ற புரதம் மிகுந்தவற்றை கலந்து உண்ணுவது இக்குறையை சீராக்குகிறது. கஞ்சியை வடிக்காமல் சமைப்பது சிறந்தது. ஆனால் இப்பொழுது ப்ரஷர் குக்கர்கள் பரவலாக உபயோகிப்பதால் கஞ்சி வடிக்கட்ட வேண்டிய நிலைமை ஏற்படுவதில்லை. ஆவியில் வேகும் அரிசியும் கஞ்சி வடிக்கப்படாத சாதத்திற்கு சமமே. மிஷினில் நெல்லை அரைத்து, பாலிஷ் செய்யப்பட்ட அரிசியை விட கைக்குத்தல் அரிசி சிறந்தது. இதில் புரதம் 8.49% சதவிகிதம் உள்ளது.
கோதுமை
முழுக்கோதுமையில் புரதம் 11.77 சதவிகிதம் உள்ளது. கோதுமை குடலுக்கு குணமளிக்கும். கோதுமையை அடிக்கடி சேர்த்துக் கொள்வது நல்லது.
பருப்புகள்
அரிசியில் உள்ள புரதக்குறைபாட்டை பருப்புகள் சரி செய்து விடும். துவரம் பருப்பில் 23%, பாசிப்பயற்றில் 24%, உளுந்தில் 24%, கடலைப்பருப்பில் 17%, புரதம் உள்ளது. அன்னத்துடன் கலந்து சாப்பிடும் பருப்புகளை அதிகம் வேக வைக்க வேண்டும். மற்றபடி, கறிகாய்களுடன் வேக வைத்து கூட்டு செய்து உண்ணலாம். தினமும் பருப்பை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். உடைத்த பருப்புகளை விட முழுப்பருப்புகள் நல்லவை. முளை கட்டிய பருப்புகள் வைட்டமின் ‘சி’ செறிந்தவை.
பால்
பால் ஒரு பரிபூரண உணவு. நோயைத் தடுக்கும். எலும்புகள் உறுதியடையும். தைராய்ட் சுரப்பியை மேம்படுத்தும். பசும்பாலில் 3.30% புரதமும், 3.60% கொழுப்பும், எருமைப்பாலில் 4.75% புரதமும், 7.70% கொழுப்பும் உள்ளன. பெண்கள் குறிப்பாக, தாய்மார்கள் பசும்பாலை தவறாமல் குடிக்க வேண்டும்.
கொழுப்புச் சத்துணவு
இதுவும் முக்கியமாக உணவில் கலக்கப்பட வேண்டும். மிருகக் கொழுப்பில் வைட்டமின் ஏ அதிகமாக கிடைக்கிறது. பசும்பாலில் 3.6%, எருமைப்பாலில் 8.8% கொழுப்பு சக்தி உள்ளது. எள¢ள¤ல் 43% , தேங்காயில் 41%, நிலக்கடலையில் 40%, பாதாம் பருப்பில் 59%, கொழுப்பு உள்ளது.
கீரைகள்
கீரைகள் மலிவாகவும் எளிதாக கிடைக்கும் சத்துள்ள உணவு. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கீரையை உணவில் கட்டாயமாக சேர்த்து கொள்ள வேண்டும். கீரையை அதிகம் வேக விடாமல் குறைந்த நீரில் வேக வைக்க வேண்டும். இல்லை, ப்ரஷர்குக்கரில் வேக வைக்கவும். பச்சை கொத்தமல்லி-0.9கி., சிறுகீரை-2.8கி., மணத்தக்காளிக் கீரை-5.8கி., பசலைக்கீரை-    2.0கி.,
பழங்கள்
மனிதன் உண்ணக்கூடியதில் ஏதாவது ஒரு பழத்தை தினமும் உண்ணுவது அவசியம். பழங்கள் எளிதில் ஜீரணமாகும். அந்தந்த காலத்தில் கிடைக்கும் பழங்களை உண்ணுவது நல்லது. பொதுவாக பழங்களை பகல் 1 மணிக்குள் சாப்பிடுங்கள். ஆப்பிள் இதற்கு விதிவிலக்கு. ஆப்பிள் ஜலதோஷத்தை போக்கும். ஆப்பிளைத் தவிர, நேந்திரம் பழம், எலுமிச்சம் பழம், சதைப்பற்றுள்ள பழங்கள் இவற்றை காய்கறிகளுடன் சேர்த்து உண்ணாதீர்கள்.
ராகி
இது ஒரு மில்லேட் தானியம். இதில் 7.1% புரதமும், 1.3% கொழுப்பும் தவிர வைட்டமின் ஏ, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு செறிந்தது. மலிவான ராகியால் ரத்தம் சுத்தமாகும், எலும்பு உறுதியடையும், மலச்சிக்கல் நீங்கும். ராகியை சிறிது சிறிதாக உணவில் சேர்த்து கொண்டு வரலாம். கஞ்சியாகவோ, மொத்தையாகவோ இதை தயாரிக்கலாம்.
பச்சை உணவு
நாம் சாப்பிடும் காய்கறி, பழங்களில் 50 சதவிகிதம் பச்சையாக உண்ண வேண்டும். சமைப்பதில் பல காய்கறிகள் தங்கள் சத்தை இழக்கின்றன. வேக வைத்த, சமைத்த காய்கறிகளை உண்பவர்கள் திடீரென்று பச்சை காய்கறிகளுக்கு மாற வேண்டாம். கொஞ்சம் கொஞ்சமாக பச்சை காய்கறி உணவை பழக்கத்தில் கொண்டு வர வேண்டும். இதனால் வைட்டமின்கள், தாதுப்பொருட்கள், என்ஸைம்கள் எல்லாம் உடலுக்கு கிட்டும்.
சீரான, ஆரோக்கியமான உணவு பற்றி குறிப்புகள்
நோயாளிகளுக்கு மட்டுமல்ல, சராசரி மனிதனுக்கும் உணவுக்கட்டுப்பாடு தேவை. கல்லூரி செல்லும் மாணவ மாணவியர்களுக்கு தேவையான உணவு 60 வயதுள்ளவர்களுக்கு ஒத்து வராது. வயது ஏற ஏற உணவுக்கட்டுப்பாடு மிக அவசியம். 60 வயதானவர்களின் அன்றாட வேலை குறைவு. அவர்களுக்கு 1550 கலோரி போதுமானது.
பசிக்கும் போது உண்ண வேண்டும். வயிறு புடைக்க அளவில்லாமல் உண்ணுவது கூடாது. அவசர அவசரமாக சாப்பிடக்கூடாது. நன்கு மென்று உண்ண வேண்டும்.
நல்ல தரம் உடைய, இயற்கையான, முழுமையான உணவுப் பதார்த்தங்களை தேர்ந்தெடுத்து உண்ணவும்.
சமையல் விஸ்தாரமாக செய்யாமல், குறைவான நேரத்தில் சமையலை முடியுங்கள். அதிக நேரம் அடுப்பில் சுட வைத்தால் வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் இவை அழிந்து விடும்.
பழரசமாக மாற்றுவதை விட, பழங்களை நேரடியாக சாப்பிடுவது நல்லது. நார்ச்சத்து முழுமையாக கிடைக்கும்.
பல தரப்பட்ட உணவுகளை டயட்டில் சேர்த்துக் கொள்ளவும்.
பூரித கொழுப்பை தவிர்க்கவும்.
புகையிலை, சிகரெட், மது வேண்டாம்.
தினமும் 6 – 8 டம்ளர் தண்ணீர் பருகவும்.
உண்ணும் போது பாதி வயிற்றில் காய்கறிகள், பழங்கள் தெளிவான ரசம், வெண்ணெய் எடுக்கப்பட்ட மோர் இவற்றால் நிரப்பி, கால் வயிற்றில் அரிசி அல்லது கோதுமை பண்டங்களால் நிரப்பி பாக்கியை காலியாக வைக்கவும்.
எந்த வேளை உணவையும் முழுமையாக தவிர்க்க வேண்டாம். காலை உணவை எக்காரணம் கொண்டும் தவிர்க்க வேண்டாம்.
அதிகமாக எப்போதாவது சாப்பிட்டால், அதிகப்படி கலோரிகளை எரிக்க அதிக உடல் உழைப்பு தேவை.
காய்கறிகளையும், பழங்களையும் சமைக்கும் முறை
காய்கறிகளை நறுக்கும் முன்பு நன்றாகக் கழுவவும். நறுக்கிய பிறகு காய்களை கழுவினால் முக்கிய ஊட்டச்சத்துக்கள் கரைந்து விடும். சமைப்பதற்கு சற்று முன்பே காய்கறிகளை நறுக்கவும். துண்டுகளை தண்ணீரில் 5 நிமிடத்திற்கு மேல் போட்டு வைக்கக் கூடாது. காய்கறிகளை குளிர்ந்த தண்ணீரில் போட்டு காய்ச்ச வேண்டாம். முதலில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் காய்கறி துண்டுகளை போடுவது நல்லது. இதற்கு உருளைக்கிழங்கு விதிவிலக்கு. சிறந்த முறை பிரஷர் குக்கரில் வேக வைப்பது.
காய்கறி, பழங்களின் தோலை ஆழமாக சீவி எடுக்காதீர்கள். ஆப்பிள், வெள்ளரிக்காய் இவற்றின் தோலின் அடியிலேயே சத்துக்கள் நிறைந்திருக்கும். இவற்றை பச்சையாக சாப்பிடவும்.
காய்கறிகளை மிகச் சிறிய துண்டுகளாக நறுக்க வேண்டாம். கூடிய மட்டும் மிகப் பெரிய துண்டுகளாக நறுக்கவும். காய்கறிகளை தேவைக்கதிகமாக வேக வைக்க வேண்டாம்.
உருளைக்கிழங்கை வாங்கும் பொழுது பச்சை நிறம் மற்றும் முளைகள் இருந்தால் வாங்க வேண்டாம்.
மஞ்சள், சிவப்பு பரங்கிக்காய் பூசணிக்காய் அதிக நாள் வைத்திருந்து உபயோகிப்பது நல்லது. அதிக நாட்கள் இருந்தால் அவற்றின் மருத்துவப் பலன் அதிகரிக்கும்.
ஆப்பிளில் உள்ள நார்ச்சத்து ரத்த கொலஸ்ட்ரால¢ அளவை குறைக்கும். ஆப்பிளை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். அதே போல் ஆரஞ்சு பழங்களும் மாங்காய் மற்றும் எலுமிச்சம் பழங்கள் ரத்த கொலஸ்ட்ராலை குறைக்கும்.
ஆரஞ்சு பழங்கள் கொலஸ்ட்ராலை குறைப்பதும் மட்டுமன்றி புற்றுநோயை தவிர்க்கும். பழங்களை சாறு பிழிவதை விட அப்படியே உண்பது நல்லது.
அரை வேக்காடு செய்யப்பட்ட முட்டைகளை அவித்த உடனே உண்பது நல்லது. முட்டைகளை பால் அல்லது தயிர் அல்லது மோருடன் சேர்த்துக் கலந்து உண்ணக் கூடாது.
கோழி, வாத்து போன்றவற்றை சமைக்காமல் பச்சையாக ஒரு போதும் உண்ணக் கூடாது.
         நன்றி ;-உணவுநலம் ஆகஸ்ட் 2011

முனைவர்.இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phil.,Ph.D., அவர்களது வாழ்க்கைக்குறிப்பு... (Dr.R.K.Manikkam, professor,Writer)

                                                                                                        முனைவர். இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phi...