18 ஜூலை 2017

துப்புறவுத்தொழிலாளர்களின் அவலநிலை பற்றிய விவாத நிகழ்ச்சி..

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். 17 ஜூலை 2017 இன்று காலை 10 மணிக்கு சத்தியமங்கலம் ரீடு அமைப்பின் அலுவலக வளாகத்தில் துப்புறவுத்தொழிலாளர்களின் பணி மற்றும் வாழ்க்கையின் அவலநிலை பற்றிய ஆவணப்படம் 'கக்கூஸ்' திரையிடப்பட்டது.தொடர்ந்து விவாதநிகழ்ச்சி நடைபெற்றது.திரு. தணிக்காச்சலம் ஐயா அவர்கள் உட்பட திரு.முருகன் அவர்கள்,திரு.மணி அவர்கள்,வினோத் ராஜேந்திரன் அவர்கள்,உட்பட  42 சமூக ஆர்வலர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்து விவாதித்த நான் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான் -
           972 வது குறளுக்கேற்ப,
அனைவரும் ஒரே இனமே என்பதை உணர வேண்டும்.
மனிதனை மனிதனாக மதிக்க வேண்டும். 
 பொதுக்கழிப்பிடங்களை பயன்படுத்துவோர் சுத்தமாக வைத்திருக்க சரியான விழிப்புணர்வினை சமூகத்தினரிடையே ஏற்படுத்த வேண்டும்.
பொதுக்கழிப்பிடங்கள்,சாக்கடைகள்,மருத்துக்கழிவுகள்,
இறைச்சிக்கழிவுகள்,என குப்பைகள் தானாக உருவாவதில்லை,உருவாக்கப்படுகின்றன என்பதை உணர வேண்டும்.
                  துப்புறவுப்பணியை குல தொழிலாக எண்ணி தாமாக விரும்பி ஏற்பதை தவிர்க்க வேண்டும்.படித்து வேறு பணிக்கு செல்லலாம்,பொருளாதாரத்தில் முன்னேறுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கலாம்.
 .சாதியை ஒழிப்பதைவிட சாதிகள் சமநிலை அடைய வேண்டும்.தலித் இனத்தவர்களிடையே உள்ள சாதிப்படிநிலை சமநிலைப்பட வேண்டும்.தலித் இனத்தில் ஒரே சாதியில் பல உட்பிரிவுகள் அதுவும் மேல்சாதி,கீழ்சாதி என சாதிப்படிநிலை இருப்பது கொடுமையிலும் கொடுமை.
தலித் இனத்தவருக்காக அரசாங்கம் வழங்கும் சலுகைகளையும்,இலவசங்களையும்,இட ஒதுக்கீடு பணி வாய்ப்புகளையும் தலித் இனத்திலேயே ஒரு குறிப்பிட்ட இனம் மட்டுமே முழு பலனையும் அனுபவிப்பதை பட்டியலிடப்பட்ட சாதியினர் அனைவருக்கும் பகிர்ந்தளிக்க செய்யவேண்டும்.என விவாதம் செய்து தொடங்கி வைத்தேன்.

12 ஜூலை 2017

தாளவாடி புத்தகக் கண்காட்சி மற்றும் வாசிப்புத் திருவிழா-2017


மரியாதைக்குரியவர்களே,
                       வணக்கம்.வருகிற 2017 ஜூலை மாதம்15 ஆம் தேதி பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள்விழா,தாளவாடி புத்தகக் கண்காட்சி மற்றும் வாசிப்புத்திருவிழா,தாளவாடி சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு முதலாம் ஆண்டு நிறைவுவிழா ஆகிய முப்பெரும்விழா தாளவாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது.அனைவரும் வருகைபுரிந்து அறிவுச்செல்வத்தை அள்ளிச்செல்க! என அன்புடன் அழைக்கிறோம்...

முனைவர்.இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phil.,Ph.D., அவர்களது வாழ்க்கைக்குறிப்பு... (Dr.R.K.Manikkam, professor,Writer)

                                                                                                        முனைவர். இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phi...