30 டிசம்பர் 2015

மக்கள் நலவாழ்வு மற்றும் மக்கள் பாதுகாப்பு சங்கம் ஐம்பெரும்விழா தொடர்ச்சி-03

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். 2015டிசம்பர்30 ந் தேதி இன்று நுகர்வோர் நலவாழ்வு மற்றும் மக்கள் பாதுகாப்பு சங்கம் சார்பாக  கோபிசெட்டிபாளையம் சீதா கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற 30வது தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினம் மற்றும் 27வது சாலை பாதுகாப்புவாரவிழா உட்பட ஐம்பெரும்விழா நிகழ்வுகளின் தொடர்ச்சி... 
  

நம்ம கோபியில்   10வது ஆண்டு துவக்கவிழா,30 வது ஆண்டு தேசிய நுகர்வோர் தினவிழா,27வது ஆண்டு சாலை பாதுகாப்பு வாரவிழா,சிறந்த சமூக சேவகர்களுக்கு பாராட்டுவிழா,மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவி வழங்கும் விழா -









         கோபி நகரின் மூத்த குடிமகன் திருமிகு.K.S. பச்சியப்பன் ஐயா அவர்கள் துவக்கவுரையில்  தான் 1956 ஆம் ஆண்டு ஓட்டுநர் உரிமம் எடுக்க மகிழுந்து வாகனத்தை ஒரு பர்லாங் தூரம் பின்னோக்கி ஓட்டி சாலையில் வளைவுகளில்,சந்துகளிலும் பின்னாலேயே ஓட்டிச்சென்று அதற்கான கூடாரத்தில் நிறுத்திய பிறகே உரிமம் பெற்றதாக பழைய நினைவுகளைக் கூறி இன்றைய உரிமம் எடுக்கும் அவல நிலையையும் வேதனையுடன் எடுத்துக் கூறி சாலை பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தினார்.தம் தேவை கருதி எந்தப்பொருளையும் வாங்க வேண்டும் எனவும் அவ்வாறு வாங்கும்போது அவசியம் ரசீது கேட்டு வாங்கி பத்திரப்படுத்தவேண்டும் எனவும் கூறினார். நுகர்வோர் பாதுகாப்பு கல்வியும் சாலை பாதுகாப்பு கல்வியும் அவசியம் அனைருக்கும் கொடுத்து விழிப்படையச்செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.




 மாண்புமிகு நீதியரசர் A.முகமது ஜியாவுதீன் அவர்கள் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி,திருப்பூர்.தமது சிறப்புரையில்  மனிதவாழ்வில் நேயம் மிகுபட வேண்டும்.குறிப்பாக பெண்கள் அந்தரங்க விசயத்தில் கதை எழுதும் கதாசிரியர்கூட  தன் கதையின் பெண் கதாபாத்திரத்தில் தலையிடக்கூடாது.கோத்தகிரியில்  வரதட்சிணைக்கொடுமை சம்பந்த வழக்கில் திருமணமாக ஆறுமாதமே ஆன புதுமணப்பெண் தற்கொலை செய்துகொண்ட காரணத்தையும் அதற்கு காரணமான கணவனுக்கு தண்டனை கொடுத்த நிலையையும் எடுத்துக்கூறியபோது சட்டம் வெற்றி பெற்றது ஆனால் சமூதாயம் தோற்றுவிட்டது என வேதனைபடக்கூறி அரங்கத்திலுள்ள அனைவரையும் சிந்திக்க வைத்தார்.

         சாலை பாதுகாப்பு உரையில், ஒரு  விபத்து நேரும்போது அனுபவிக்கும் வேதனைகளையும் இழப்புகளையும் எடுத்துக்கூறிய போது வாகன ஓட்டிகள் அனைவரும் தவறாமல் உரிமம் எடுப்பது அவசியம்.இன்றைய சூழலில் விபத்தின் இழப்புகளை நினைத்துப்பார்த்து படிக்கமாட்டேன் என்றாலும் பரவாயில்லை.தகுதியான வயது நிறைவு அடையும் முன்னர் தம் குழந்தைகளுக்கு எக்காரணம் கொண்டும் மோட்டார் ஓட்டவோ,புதிய வாகனம் வாங்கிக்கொடுக்கவோ கூடாது.
சாலை விதிகளை மதிக்க வேண்டும்.போக்குவரத்துச்சட்டங்களை மதிக்க வேண்டும். உரிய காலத்தில் தம் உரிமத்தையும் வாகன காப்பீட்டையும் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்றார்.


     திருமிகு. K.K.சொக்கலிங்கம் அவர்கள்,ஒருங்கிணைப்பாளர் மற்றும் பயிற்றுநர்,குடிமக்கள் நுகர்வோர் மன்றம் தமிழ்நாடு  உணவு பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு சிறப்புரையில், 

        நுகர்வோராகிய நமது எட்டு உரிமைகள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்று கூறியபோது  தங்கம் விற்பனையில் நடைபெறும் மோசடிகள் பற்றி உதாரணங்களுடன் எடுத்துரைத்தார்.அதேபோல தற்போதைய கறிக்கோழிகள் வேதிப்பொருட்களால் வளர்க்கப்படுவதால் விலை குறைவு என்று நோயை விலைகொடுத்து வாங்கி வருவதை தவிர்க்க வேண்டும்.
           வீட்டில் சாப்பிடுவதை விட்டுவிட்டு வீதியில் ருசியாக இருக்கிறதே என விலை கொடுத்து வியாதியை வாங்கும் அவலநிலை தவிர்க்க வேண்டும்.அதேபோல தெருவோரக் கடைகளில் சுகாதாரமின்றி நச்சுத்தன்மையுடன்  உணவுப்பொருட்கள் தயாரிப்பதை ஆதாரத்துடன் நினைவூட்டியபோது

                உதாரணமாக பஜ்ஜி போடுபவர் கையைக்கழுவிக்கொண்டு தம் மூக்கை குடைந்துகொண்டே இருப்பார் ,அதே கையில் பஜ்ஜியை நமக்கு பரிமாறுவதையும்,புரோட்டா மாஸ்டர்  சொறி,சிரங்கு இருந்தாலும் தம் முழங்கை வரை  புரோட்டா மாவை உருட்டிப்பிசைந்து தம் இடுப்பில் கட்டியுள்ள துண்டையே ஈரப்படுத்தி மாவின் மீது மூடுவதையும் எடுத்துகூறி புரோட்டாவின் தீங்குகளையும் விளக்கி அரங்கத்திலுள்ள அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தார்.

          விளம்பர மோசடிகள் பற்றி விழிப்புணர்வு கொடுத்தபோது நடிகர்,நடிகைகள் பணத்துக்காக நடிப்பவர்கள்.அதனால் அவர்கள் மீதுள்ள மோகத்தில் உடலுக்குத்தீங்கு விளைவிக்கும் பொருட்களை வாங்கவோ,பயன்படுத்தவோ கூடாது என்றார்.

        கோகோ கோலா,பெப்ஸி போன்ற பானங்களில் கெடாமல் இருக்க40 சதவீதம் நச்சுப்பொருட்கள் கலப்பதாக கூறினார்.

          பால் போன்ற உணவுப்பொருட்களும் அதுபோலவே பால்  நீண்ட காலம் கெடாமல் இருக்க பூச்சிக்கொல்லி மருந்துகள் கலக்கப்படுகின்றன அதுவே குறிப்பிட்ட நேரத்துக்குள் கெட்டுப்போனால்தான் நல்ல பால்  என்பதை தெளிவுபடுத்தினார்.

            விலை கொடுத்து வாங்கும் பொருட்களுக்கு கட்டாயம் ரசீது கேட்டுப்பெற  வேண்டும்.சமையல் எண்ணெய் போன்ற பொருட்கள் வாங்கும்போது கட்டாயம் அதிலுள்ள லேபிளைப்படித்துப்பார்க்க வேண்டும்.பொன்னி அரிசி குறைந்த விலையில் விற்கப்படுகிறது என்றால் அது ரேசன் அரிசியை பாலீஸ் செய்து இருக்கலாம்.அல்லது தற்போதைய  67 ம் நெம்பர் புதிய ரக நெல்லின் அரிசியாக இருக்கலாம்.வாங்கும்போது நமக்குத்தான் விழிப்புத்தேவை என்றார்.2006ம் ஆண்டு உணவுப்பாதுகாப்பு சட்டம்,2011ஆம் ஆண்டு லேபிள் சட்டம் பொதுமக்களாகிய,நுகர்வோராகிய நமது பாதுகாப்பு கருதியே இயற்றப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது என்றார்.


நுகர்வோர் நலவாழ்வு மற்றும் மக்கள் பாதுகாப்பு சங்கம் - பகுதி2

 மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். 2015டிசம்பர்30 ந் தேதி இன்று நுகர்வோர் நலவாழ்வு மற்றும் மக்கள் பாதுகாப்பு சங்கம் சார்பாக  கோபிசெட்டிபாளையம் சீதா கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற 30வது தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினம் மற்றும் 27வது சாலை பாதுகாப்புவாரவிழா உட்பட ஐம்பெரும்விழா நிகழ்வுகளின் தொடர்ச்சி... 
  

நம்ம கோபியில்   10வது ஆண்டு துவக்கவிழா,30 வது ஆண்டு தேசிய நுகர்வோர் தினவிழா,27வது ஆண்டு சாலை பாதுகாப்பு வாரவிழா,சிறந்த சமூக சேவகர்களுக்கு பாராட்டுவிழா,மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவி வழங்கும் விழா -





கோபியில் நடைபெற்ற தேசிய நுகர்வோர் தினம் மற்றும் சாலை பாதுகாப்பு விழாவில் கோபி சீதா கல்யாண மண்டப வாயிலில் ஆர்வத்துடன் வரவேற்கும் தன்னார்வலர்கள்..

                        முதன்மை அரங்கத்தில் ..........
 Dr.P.வெங்கடாச்சலம் B.A.,M.D.,(Acu) அவர்கள் பொது செயலாளர்
கோபியில் நடைபெற்ற தேசிய நுகர்வோர் தினம் மற்றும் சாலை பாதுகாப்பு விழாவில் 
முன்னுரை ஆற்றிய காட்சி..

மாண்புமிகு நீதியரசர் A.முகமது ஜியாவுதீன் அவர்கள் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி,திருப்பூர். கோபியில் நடைபெற்ற தேசிய நுகர்வோர் தினம் மற்றும் சாலை பாதுகாப்பு விழாவில்  மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய காட்சி.


மாண்புமிகு நீதியரசர் A.முகமது ஜியாவுதீன் அவர்கள் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி,திருப்பூர். கோபியில் நடைபெற்ற தேசிய நுகர்வோர் தினம் மற்றும் சாலை பாதுகாப்பு விழாவில்  மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய காட்சி.
மாண்புமிகு நீதியரசர் A.முகமது ஜியாவுதீன் அவர்கள் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி,திருப்பூர். கோபியில் நடைபெற்ற தேசிய நுகர்வோர் தினம் மற்றும் சாலை பாதுகாப்பு விழாவில்  மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய காட்சி.
மாண்புமிகு நீதியரசர் A.முகமது ஜியாவுதீன் அவர்கள் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி,திருப்பூர். கோபியில் நடைபெற்ற தேசிய நுகர்வோர் தினம் மற்றும் சாலை பாதுகாப்பு விழாவில் திருமிகு. சித்ரா அம்மையார் , மோட்டார் வாகன ஆய்வாளர் அவர்களுக்கு சிறந்த சமூக சேவகர் விருது வழங்கி பாராட்டிய காட்சி.
தொடர்ச்சி அடுத்த பக்கம் காண்க............

நுகர்வோர் நலவாழ்வு மற்றும் மக்கள் பாதுகாப்பு சங்கம்-கோபி செட்டிபாளையம்

                                            ஐம்பெரும் விழா-

                                
              சீதா கல்யாண மண்டபம் முதன்மை அரங்கம்
                            கோபிசெட்டிபாளையம். 
                            தேதி 2015டிசம்பர் 30ந் தேதி ,
  10வது ஆண்டு துவக்கவிழா,30 வது ஆண்டு தேசிய நுகர்வோர் தினவிழா,27வது ஆண்டு சாலை பாதுகாப்பு வாரவிழா,சிறந்த சமூக சேவகர்களுக்கு பாராட்டுவிழா,மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவி வழங்கும் விழா -

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். இன்று கோபி சீதா கல்யாண மண்டபத்தில் நுகர்வோர் நலவாழ்வு மற்றும் மக்கள் பாதுகாப்பு சங்கம் சார்பாக 30வது தேசிய  நுகர்வோர் தினம் மற்றும் 27 வது சாலை பாதுகாப்புவாரவிழா பேரணி உட்பட ஐம்பெரும்விழா நடைபெற்றது.

         கோபி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு  திரு.S. முருகன்B.A., அவர்கள்,துணை காவல் கண்காணிப்பாளர் -கோபிசெட்டிபாளையம், மாலை 3.00 மணியளவில் துவக்கி வைத்த 27வது சாலை பாதுகாப்பு வாரவிழா-விழிப்புணர்வுப் பேரணி  புறப்பட்டு,வட்டாட்சியர் அலுவலகம், கச்சேரி மேடு,பெரியார் திடல்,தினசரிச்சந்தை, பேருந்து நிலையம்,புதுப்பாளையம்,அரசு போக்குவரத்துக்கழக பணிமனை வழியாக சீதா கல்யாண மண்டபம் சென்றடைந்தது. 
 27வது சாலை பாதுகாப்பு வாரவிழா பேரணியில் மோட்டார் வாகன ஆய்வாளர் திருமிகு சித்ரா அம்மையார் அவர்களும்,மோட்டார் வாகன ஆய்வாளர் திருமிகு N.தனசேகரன் அவர்கள் உள்ளிட்ட சமூக ஆர்வலர்களும்,தன்னார்வ அமைப்பினர்களும்,காவல்துறை,போக்குவரத்து துறை,வருவாய்த்துறை மற்றும் சாரதா கலை அறிவியல் கல்லூரி மாணவிகள்,பேராசியர்கள்,ஆண்டவர் பாலிடெக்னிக் மாணவ,மாணவியர் இவர்களுடன் நுகர்வோர் நலவாழ்வு மற்றும் மக்கள் பாதுகாப்பு சங்கம் தலைவர் மற்றும் பொதுசெயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகளும்,உறுப்பினர்களும்...
 நுகர்வோர் நலவாழ்வு மற்றும் மக்கள் பாதுகாப்பு சங்கம்-உறுப்பினர்கள்
  சாலை பாதுகாப்பு பேரணியில் வாகன ஒலிபெருக்கி விழிப்புணர்வு பிரச்சாரம்.திரு.C பரமேஸ்வரன் அவர்கள்.சத்தியமங்கலம்.
 கோபி வட்டாரத்திலுள்ள  கல்லூரி  மற்றும் பள்ளி மாணவ,மாணவிகள்.
          சாலை பாதுகாப்பு பேரணியில் சமூக ஆர்வலர்களின் பங்கேற்பு
  நுகர்வோர் நல வாழ்வு மற்றும் மக்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள்..

  இதன் தொடர்ச்சி அடுத்த பக்கம் பார்க்கவும்............

27 டிசம்பர் 2015

கண்காணிப்பு கேமரா வகைகளும்,அவைகளை பொருத்தும் முறைகளும்

CCTV Camera என்றால் closed-circuit television அதாவது மறைக்கப்பட்ட மின்சுற்று தொலைக்காட்சிப் பதிவி என்று விளக்கம் எடுத்துக்கொள்ளுங்க.அல்லது தமிழாக்கத்தில் நல்ல பொருள் இருந்தால் பகிருங்க.

 
மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். CCTV என்னும் கண்காணிப்பு கேமரா தற்போது அனைத்து பொது இடங்களிலும்,அதாவது,மருத்துவமனைகள்,போக்குவரத்து சாலைகள்,வங்கிகள்,வியாபார நிறுவனங்கள்,வணிக மையங்கள் நகைக்கடைகள்,பேருந்து நிலையங்கள்,புகைவண்டி நிலையங்கள்,போன்ற பொதுமக்கள் பயன்படுத்தும் இடங்களிலும், பாதுகாப்பு கருதி பொருத்தப்பட்டு நம்மை கண்காணித்து வருகின்றன.நம்மை கண்காணிக்கும் கேமரா வகைகளைப்பற்றி எனக்குத்தெரிந்தவற்றை தங்களுக்காக பதிவிடுகிறேன்.தங்களுக்குத்தெரிந்தவற்றையும் கூறுங்க.பகிருவோம் மற்றவர்களுக்கும் பயனளிக்கட்டும்.
 ( இன்னும் சேகரித்து கூடுதலாக இந்தப்பதிவில் சேர்ப்பேன்,நீங்களும் உதவுங்க.)

கண்காணிப்புக்கேமரா
இதை IP  camera அதாவது INTERNET PORTOCOL CAMERA என்று கூறலாம்.கண்காணிப்புக்கேமரா NVR என்னும்  NETWORK VIDEO RECORDER  முறையில் செயல்படுகிறது.இது VIDEO AND ALARAM MANAGEMENT அதாவது காணொளி மற்றும் எச்சரிக்கை மணி ஒலிப்பு முறைகளைக்கூட  நிர்வாகம்  செய்யும்.கண்காணிப்புக்கேமரா சேகரிக்கும் தகவல்களை
PC/SERVER அதாவது நமது கணினி  NAS என்னும்  NETWORK ATTACHED STORAGE முறையில் தகவல்களை சேகரிக்கும்.
கண்காணிப்புக் கேமரா எட்டு வகைகள் உள்ளன.
அவை (1) Dome CCTV CAMERA,(2)Bullet CCTV CAMERA, இவையிரண்டும் PTZ Camera என்னும் PAN,TILT,ZOOM வசதியுள்ள வகையைச் சேர்ந்தவை.(3)C-Mount  CCTV CAMERA, (4)Infrared / Night vision  CCTV CAMERA, (5)Day/Night CCTV CAMERA, (6)Network/IP CCTV CAMERA, (7)Wireless CCTV CAMERA, (8) High Definision HD CCTV CAMERA, ஆகியன ஆகும்.
 கண்காணிப்புக்கேமராவின் நன்மைகள்.,
          கண்காணிப்புக் கேமராக்கள் கண்டிப்பாக பொய் சொல்லாது.நடப்பு நிகழ்வுகளை அப்படியே படம் பிடித்துப்பதிவு செய்யும்.ஒரு முறை குறைந்தபட்ச செலவு அதாவது சிறிய முதலீடு ஆனால் வாழ்நாள் முழுவதும்  பலனளிக்கும்.

(ஆனால் என்ன காரணத்தாலோ சில போக்குவரத்துக்கழகம் போன்ற கண்காணிக்க வேண்டிய  செலவு சிக்கனத்தைக் கடைப்பிடிக்கக்கூடிய அரசு நிறுவனங்களில்கூட பயன்படுத்த தாமதிக்கின்றனர்.கண்காணிப்புக்கேமரா பொருத்தினால் அனைவரும் பணியின்போது சோம்பலாகவோ,அரட்டை மற்றும் சொந்தவேலைகளை செய்யவிடாமலோ அதாவது பணியின் நேரத்தை திருடாமல் முறையாக பணி புரிய வைக்கும். ).

            கண்காணிப்புக் கேமராக்களில் தூரக்காட்சிகளை பெரிதுபடுத்தி துல்லியமாக பதிவு செய்யும் வசதிகள் உள்ளன. தேவையான பகுதியான குறிப்பிட்ட இடத்தை மட்டும் தெளிவாக பதிவு செய்யும் வசதிகள் உள்ளன. சுற்றுப்புறக்காட்சிகளை பார்வைக் கோண அளவை விட கூடுதலாக அதாவது அகல காட்சிகளை  360 டிகிரி என்னும் கோண அளவில் கூட பதிவு செய்யும் வசதிகள் உள்ளன, காட்சிகளை புகைப்படங்களாகவோ,காணொளிகளாகவோ பதிவு செய்யும் வசதிகளும் உள்ளன.இரவு அல்லது பகல் அல்லது இரவுபகலாக என 24மணிநேரமாக எல்லா நேரங்களிலும் பதிவு செய்யும் வசதிகள் உள்ளன.கலராகவோ,கறுப்பு வெள்ளையாகவோ பதிவு செய்யும் வசதிகளும் உள்ளன.ஒயர் இணைப்புகளுடனோ,ஒயர் இல்லாமல் வைபை வசதியுடனோ கண்காணிக்கும் வசதிகளும் உள்ளன.வீடுகளிலும்,கம்பெனிகளிலும்,தொழிற்சாலைகளிலும்,
கார்,பேருந்து ,மோட்டார் சைக்கிள் போன்ற போக்குவரத்து வாகனங்களிலும்,நடைபாதைகளிலும் என தேவைப்படும் இடத்திற்கேற்ப தூரத்திற்கேற்ப வசதிக்கேற்ப நாம் பொருத்திக்கொள்ளலாம்.மொபைல் மூலமாக எங்கிருந்துகொண்டும் கண்காணிக்கலாம்.ஒருவரே பல இடங்களை,பல வேலைகளை கண்காணிக்கலாம். 





நான் அறிந்தவரை,
 கண்காணிப்புக் கேமரா தயாரிக்கும் கம்பெனிகளின் பெயர்கள் இதோ.......
(1)Godrej CCTV Camera  (2)LG CCTV Camera  (3)Panasonic CCTV Camera  (4)Samsung CCTV Camera  (5) Hi-Focus CCTV Camera  (6) HikVision CCTV Camera  (7)Sony CCTV Camera   (8)Sparsh CCTV Camera  (9)Zicom CCTV Camera   (10)Canon CCTV Camera   (11)Bosch CCTV Camera  (12)Sanyo CCTV Camera  (13)CP Plus CCTV Camera  (14)Navkar CCTV Camera   (15) Endroid CCTV Camera   (16) Sampix CCTV Camera  (17),Maximus CCTV Camera  (18)Secure U CCTV Camera  (19)Dahua CCTV Camera  (20)Active Feel Free Life CCTV Camera   (21)Advision CCTV Camera   (22)Shine Tech CCTV Camera   (23)Zenex CCTV Camera    (24)USP CCTV Camera   (25)Simoco CCTV Camera   (26)iClear CCTV Camera  (27)Rega CCTV Camera  (28)Leopard CCTV Camera   (29)Laksh Tech CCTV Camera   (30)Compucare CCTV Camera   (31)Cadyce CCTV Camera   (32)BS SPY CCTV Camera     (33)Auric CCTV Camera   (34)Axis CCTV Camera
  • Sonitrol will install the right CCTV camera for your business (including IP, infrared, low-light, HD, verified, wireless, day/night, c-mount, bullet, dome, waterproof)
  • 24/7 CCTV camera monitoring at our remote monitoring station
  • DVRs (digital video recorders)
  • CCTV camera towers and columns
  • CCTV telemetry systems
  • Deterrent CCTV systems
  • Covert CCTV systems
  • Motion detection systems
  • Integrated audio / CCTV systems
  • Video Analytics/Predictive software
  • CCTV camera lenses
  • CCTV monitors
  • CCTV multiplexors
  • CCTV illumination
  • CCTV switchers
  • Fibre optic CCTV transmission
  • Networked CCTV transmission (IP CCTV transmission)
  • Wireless CCTV camera systems
  • Software systems for CCTV camera control, CCTV management & CCTV diagnostics

09 டிசம்பர் 2015

சென்னையின் எச்சரிக்கை பகுதிகள் எவை? -தி இந்து நாளிதழ்

மரியாதைக்குரியவர்களே,வணக்கம். தி இந்து நாளிதழ் செய்தி சிந்தனைக்குரிய செய்தி.நீங்களும் படியுங்க,

ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு

சென்னையை எட்டிப் பார்த் திருக்கிறது சூரியன். வெயிலை பார்த்து வெறுமையோடு புன்னகைக்கிறார்கள் மக்கள். வீடுகளில் தேங்கிய சேறுகளை மெல்ல அப்புறப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் மக்கள். வீதியெங்கும் மக்கள் சாரை சாரை யாக வாகனங்களைத் தள்ளிக் கொண்டு செல்கிறார்கள். திட்டமிடாத நகரமயமாக் கலின் நாசங்களை நன்றாகவே உணர்ந்து விட்டோம். தென் சென்னையின் நவீனத்தைப் பார்த்து பிரமித்தவர்கள் எல்லாம் திக் பிரமை அடைந்திருக்கிறார்கள். இது வளர்ச்சி அல்ல; வீக்கம் என்று புரிந்துவிட்டது.
திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதிகளில் ஏராளமான ஏரிகள் உடைந்துவிட்டன. வயல்கள் மூழ்கிவிட்டன. கடந்த காலங்களில் ஏரிகளில் நடந்த பணிகள் எல்லாம் கண் துடைப்பு என்று புலம்புகிறார்கள் விவசாயிகள். அவர்கள் சொல்வது உண்மைதான். நமது நீர் நிலைகளைக் காக்க இங்கே திட்டங்கள் இல்லாமல் இல்லை. நிதி இல்லாமல் இல்லை. உள்ளூர் பஞ்சாயத்து தொடங்கி உலக வங்கி வரை கை கொடுக்கின்றன. தமிழகத்தின் ஏரிகள், குளங்கள் எவ்வளவு சீரழிந்துக் கிடக்கின்றன என்பது கண்கூடாக எல்லோருக்கும் தெரியும். ஆனால், தொடர்ச்சியாக 30 ஆண்டுகளாக ஏரிகளில் பணி நடந்திருப்பதாக சொல்கின்றன அரசின் புள்ளிவிவரங்கள்.
1984 தொடங்கி 1998 வரை தமிழகத்தில் ஏரிகளை மேம்படுத்த ஐரோப்பிய பொருளாதாரக் குழு (European commission) ரூ.175 கோடி மானியம் அளித்தது. இந்த நிதியில் 200 ஏரிகள் சீரமைக்கப்பட்டதாக சொல்கிறார்கள். அதைத் தொடர்ந்து உலக வங்கி கடனில் நீர்வள ஆதாரத் திட்டம் ரூ.1,252 கோடியில் செயல்படுத்தப்பட்டது. அதிலும் நூற்றுக்கணக்கான ஏரிகளை சீரமைத்ததாகச் சொல்கிறார்கள்.
மிக சமீபத்தில் உலக வங்கி கடன் உதவியுடன் நீர்வள - நிலவளத் திட்டத்தில் கடந்த 2015, ஜூன் வரை ரூ.2,500 கோடியில் ஏரிகள் சீரமைக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். அதாவது, 1985 தொடங்கி 2015 வரை தொடர்ந்து 30 ஆண்டுகள் ஏரிகளில் வேலை பார்த்திருக்கிறார்களாம். எல்லாம் விழலுக்கு இறைத்த நீரானது ஏரிகளில் கொட்டிய மக்களின் வரிப் பணம். உண்மையில் அப்படி வேலை நடந்திருந்தால் இன்று இப்படி ஓர் அழிவு நடந்திருக்காது. இனியாவது திட்டமிடுவோம்.
சென்னையின் மழைப் பொழிவு (மி.மீ)
சோளிங்கர் சுற்றுவட்டாரம் : 800 - 900
திருத்தணி, காவேரிப்பாக்கம் சுற்றுவட்டாரம் : 900 - 1,000
அரக்கோணம், மணப்பாக்கம், ராணிப்பேட்டை சுற்றுவட்டாரங்கள் : 1,000 - 1,100
பூண்டி, திருவொற்றியூர், தாமரைப்பாக்கம் சுற்றுவட்டாரங்கள் : 1,100 - 1,200
சத்தியவேடு, பொன்னேரி, வல்லூர், திருவள்ளூர்,
சோழவரம், கொரட்டூர், பெரும்புதூர், தாம்பரம்,
மகாபலிபுரம், நுங்கம்பாக்கம் சுற்றுவட்டாரங்கள் : 1,200 - 1,300
மீனம்பாக்கம், ரெட் ஹில்ஸ் சுற்றுவட்டாரங்கள் : 1,300 - 1,400
செம்பரம்பாக்கம் சுற்றுவட்டாரம் : 1,400 - 1,600
கூவம் ஆற்றங்கரை பாலங்கள்
கடந்த காலங்களில் கூவம் ஆற்றில் கீழ்கண்ட பகுதிகளில் இருந்த குடியிருப்புகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்டுள்ளன. அண்ணாநகர் பாலம், அமைந்தகரை பாலம், முனிரோ பாலம், கல்லூரி பாலம், கமாண்டர் இன் சீஃப் பாலம், ஹாரிஸ் பாலம், ஆண்ட்ரியூ’ஸ் பாலம், கால் லா’ஸ் பாலம், வெலிங்கடன் பாலம், ஹட்டன் பாலம், வாலாஜா பாலம், நேப்பியர் பாலம்.
முன் எச்சரிக்கை பகுதிகள் 36
மேற்கண்ட பகுதிகளைத் தவிர, 2005-ம் ஆண்டு வெள்ளத்தின் அடிப்படையில் சென்னை நகருக்குள் முத்தமிழ் நகர், கண்ணதாசன் நகர், எம்.கே.பி.நகர், சத்தியமூர்த்தி நகர், கொளத்தூர், தண்டையார்பேட்டை, ராயபுரம், புளியந்தோப்பு, கொசப்பேட்டை, புரசைவாக்கம், சூளை, பெரியமேடு, நம்மாழ்வார்பேட்டை, எஸ்.எஸ்.புரம், அயனாவரம், அண்ணா நகர், வில்லிவாக்கம், அரும்பாக்கம், சூளைமேடு, டிரஸ்ட்புரம், வள்ளுவர்கோட்டம், மிர்சாகிப்பேட்டை, ஐஸ் ஹவுஸ், ஃபோர் சோர் எஸ்டேட், அடையாறு, கிழக்கு மற்றும் மேற்கு வேளச்சேரி, சைதாப்பேட்டை, விருகம்பாக்கம், கே.கே.நகர், அசோக் நகர், திருவான்மியூர், மாம்பலம், ரங்கராஜபுரம், பெரம்பூர், தாண்டவராய சத்திரம் ஆகிய 36 பகுதிகள் வெள்ள அபாய இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. வெள்ள அபாய காலங்களில் மேற்கண்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் வீட்டை விட்டு வெளியேறாவிட்டாலும் தங்கள் உடைமைகளை பத்திரப்படுத்திக்கொள்வது முக்கியம்.
எங்கெல்லாம் எச்சரிக்கை தேவை?
அடையாற்றங்கரை: ஆற்றோரங்களில் வசிக்கும் மக்கள் முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அந்த வகையில் அடையாற்றில் கடந்த காலங்களில் கீழ்கண்ட பகுதிகளில் அதிக வெள்ளம் வந்திருக்கும் பகுதிகளைப் பார்ப்போம். நந்தம்பாக்கம் - போரூர் பகுதியில் 1985-ல் 9.75 மில்லியன் கனஅடி தண்ணீரும், 2005-ல் 9.75 மில்லியன் கனஅடி தண்ணீரும் புகுந்தது. ஜாபர்கான்பேட்டையில் 1985-ல் 7.85 மில்லியன் கன அடி தண்ணீர் புகுந்தது. சைதாப்பேட்டை மறைமலை அடிகள் பாலத்தில் 1985-ல் 7 மில்லியன் கன அடியும், 2005-ல் 5.6 மில்லியன் கனஅடியும் தண்ணீர் புகுந்தது. 1985-ல் அடையாறு வடக்குப் பகுதியில் 3.75 மில்லியன் கனஅடி தண்ணீர் புகுந்தது. இவைத் தவிர, சைதாபேட்டை ரயில் பாலம், வீராணம் பைப் பகுதி, திருவிக பாலம், கோட்டூர்புரம் ஆகிய பகுதிகளிலும் கடந்த காலங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேற்கண்ட பகுதிகளில் மக்கள் முன் எச்சரிகையுடன் இருப்பது நல்லது.
கால்வாய்கள் நிலவரம்
சென்னையில் பலர் கழிவு நீர் கால்வாய் களில் அடித்துச் சென்றுதான் இறந்திருக் கிறார்கள். மழைக் காலங்களில் இவற்றில் எவ்வளவு கழிவு நீர் ஓடும் என்று ஆய்வு களில் தெரியவந்துள்ளது. அதன் விவரம்:
கலக்கும் கழிவு நீரின் அளவு
கூவம் ஆறு : 31%
அடையாறு : 16%
ஓட்டேரி நல்லா : 12%
தெற்கு பக்கிம்காம் கால்வாய் : 7%
மத்திய பக்கிம்காம் கால்வாய் : 8%
வடக்கு பக்கிம்காம் கால்வாய் : 16%
ரெட் ஹில்ஸ்
உபரி நீர் கால்வாய் : 4%
மாம்பலம் கழிவு நீர் : 4%
கேப்டன் காட்டன் கால்வாய் : 4%
கொடுங்கையூர்
புதிய கால்வாய் : 1%
அம்பத்தூர் ஏரி
உபரி நீர் கால்வாய் : 1%
கலக்கும் வெள்ள நீரின் அளவு
கூவம் : 13%
அடையாறு : 49%
ஓட்டேரி நல்லா : 9%
தெற்கு பக்கிம்காம் : 2%
வடக்கு பக்கிம்காம் : 11%
மாம்பலம் கால்வாய் : 17%
(நீர் அடிக்கும்) 
2015டிசம்பர் 9 ந்தேதியிட்ட ,தி இந்து நாளிதழுக்கு நன்றிங்க. 

08 டிசம்பர் 2015

நீரழிவு நோய்..என்னும் சர்க்கரை நோய்

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.

இன்றைய காலத்தில் நீரிழிவு நோய் வயது வேறுபாடின்றி  பெரும்பாலானவர்களை தாக்கி வருகிறது.காரணம் நமது உணவுப்பழக்க வழக்கங்களும் காரணம் ஆகும் ஆதலால் நீரிழிவு நோய் பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ளுங்க..

நீரிழிவு நோயைச் சமாளிப்பது எப்படி
நீரிழிவு நோய்
அறிகுறிகள்
விளைவுகள்
நீரிழிவு நோயைச் சமாளிப்பது எப்படி?
உணவு முறை
நீரிழிவு நோய்க்கான உணவு வகைகள்
மாற்று உணவு வகைகள் என்றால் என்ன?
உடற்பயிற்சி
உடற்பயிற்சியில் கவனிக்க வேண்டியவை
மாத்திரைகள்
இன்சுலின்
இன்சுலின் எப்படி செயலாற்றுகிறது?
இன்சுலினின் வகைகள்
இன்சுலின் ஊசி எப்படி தாமாகவே போட்டுக் கொள்வது?
நினைவில் வைத்திருக்க வேண்டியவை
நீரிழிவு நோய்
அன்றாட அலுவல்களுக்குத் தேவையான சக்தியை உற்பத்தி செய்யும் குளுக்கோஸ் (சர்க்கரை) தான் உடலிலுள்ள செல்களுக்குத் தேவை. நாம் சாப்பிடும் உணவுதான் செரித்த பிறகு குளுக்கோஸாக மாறுகிறது. குளுக்கோஸ் இரத்த ஓட்டத்தில் கலந்து உடலிலுள்ள வெவ்வேறு செல்களைச் சென்றடைகிறது. உடலிலுள்ள கணையம் உற்பத்தி செய்யும் இன்சுலின் என்னும் ஹார்மோன்தான் உடலிலுள்ள செல்களைச் சென்றடையும் குளுக்கோஸ்க்கு மிகவும் அத்தியாவசியமாகும். போதுமான இன்சுலின் சுரக்காத போது, குளுக்கோஸ் செல்களுக்கு செல்ல இயலுவதில்லை. எனவே இரத்த ஓட்டத்தில் குளுக்கோஸ் அதிக அளவில் தங்கிவிடுகிறது. இந்த நிலைதான் ஹைப்பார்க்ளைசீமியா எனப்படும் நீரிழிவு நோய் ஆகும்.
அறிகுறிகள்
அடிக்கடி சிறுநீர் கழித்தல்
எப்போதும் பசித்தல்
தண்ணீர் அதிகமாகக் குடிப்பது
எப்போதும் களைப்பாக இருக்கும்
ஆறாத புண்
பிறப்புறுப்பில் இன்பெக்சன்
உடலுறவில் ஈடுபாடு இல்லாதிருத்தல்
காரணமில்லாமல் எடை குறைதல்
இரத்த சொந்தங்களில் வேறு எவருக்கேனும் நீரிழிவு
மிகக் கூடுதல் எடை
கால் மரத்துப் போய் உறுத்துதல்
மங்கலான பார்வை
இந்த அறிகுறிகள் காணப்பட்டால் உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கலாம். எனவே தகுந்த மருத்துவரை அணுகி உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கிறதா? என்பதை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
விளைவுகள்
நீரிழிவை துவக்கத்திலேயே கவனிக்கவில்லை என்றால் நிலைமை மோசமாகிவிடும் . கட்டுக்குள் இல்லாத நீரிழிவு ,பல முக்கியமான உடல் உறுப்புகளையும் செயல்பாடுகளையும் பாதித்துவிடும். குறிப்பாக,
பார்வையை இழக்க நேரிடலாம் அல்லது பார்வை மங்கலாம்.
சிறுநீரகங்கள் சேதமடையலாம்.
இன்பெக்சன் அடிக்கடி ஏற்படலாம்.
காங்கரீன் எனும் புண், பாதத்தில் பிரச்சனைகள் வரலாம்.
உடலுறவில் இயலாமை ஏற்படலாம்.
மூளைச்சேதமும் ,மாரடைப்பும் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கலாம்.
நீரிழிவு நோயைத் துவக்கத்திலேயேக் கட்டுப்படுத்திவிட்டால் ,பல சிக்கல்கள் தடுக்கப்பட்டு நீங்கள் சாதாரண வாழ்க்கை வாழ உதவும்.
நீரிழிவு நோயைச் சமாளிப்பது எப்படி?
நீரிழிவு நோயின் சிகிச்சையில்
உணவுமுறை
உடற்பயிற்சி
நோயின் தீவீரத்தைத் தவறாமல் கண்காணித்தல் மற்றும் மாத்திரைகள் எடுத்துக்கொள்தல்
இன்சுலின் பயன்படுத்துதல்
இந்த சிகிச்சைகளைத் தகுந்த மருத்துவர்களின் ஆலோசனைகள் மூலம் எடுத்துக் கொள்வதால் நீரிழிவைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும். உங்களுக்கு நீரிழிவு இருந்தால் அதைக் குணப்படுத்த முடியாது. எனவே குணப்படுத்துவதாகச் சொல்லி ஏமாற்றுபவர்களின் வலையில் விழுந்து விடாமல் கவனமாயிருக்க வேண்டும்.
உணவு முறை
சப்பாத்தி அல்லது கோதுமை ரொட்டி , அரிசி, கேழ்வரகு போன்ற கார்போ-ஹைட்ரேட்கள் நிறைந்தவற்றைச் சாப்பிடுங்கள். இவைகளால் செலவுகளுமில்லை. நீங்கள் பசியுடன் இருந்தாலும் இனிப்புப் பதார்த்தங்கள் சாப்பிடும் பழக்கத்தை நிறுத்திவிடும்.
கொஞ்சமாகவும், நேரம் தவறாமலும் சாப்பிடவும். சாப்பாட்டு நேர இடைவெளியில் குறிப்பிட்ட சில பழங்கள் அல்லது காய்கறிகள் போன்ற சத்துள்ளவற்றைச் சாப்பிடவும்.
கொழுப்பு நீக்கப்பட்ட பால் மற்றும் தாவர எண்ணெய்யைப் பயன்படுத்தவும்.
சமையல் முறையை மாற்றி, வேகவைத்த, தீயில் வாட்டிய, நீராவியில் சமைத்த பதார்த்தங்களைச் சாப்பிடுங்கள்.
கொழுப்பு நிறைந்தவற்றை அதிகம் சாப்பிடக்கூடாது. கொழுப்பு பதார்த்தங்களான நெய், வெண்ணெய், பொறித்தவைகளான பூரி, சமோசா போன்றவற்றை தவிர்க்க வேண்டும். கொழுப்பு மிக்க இறைச்சி, வெண்ணெய் மற்றும் பொறித்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.
சர்க்கரை, வெல்லம், தேன், ஜாம், கேக்குகள் மற்றும் சாக்லேட்கள் போன்ற சர்க்கரைச் சத்து அதிகமுள்ள உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.
மீன், கோழி, பாலாடைக்கட்டி மற்றும் ஸ்டார்ச் சத்துள்ள பதார்த்தங்களைக் குறைவாகச் சாப்பிட வேண்டும்.
நீரிழிவு நோய்க் கட்டுப்பாட்டிற்குள் இருந்த நீங்கள் விரதம் கடைப்பிடிக்க விரும்பினால் முதலில் உங்கள் மருத்துவரை சந்தித்து ஆலோசிக்கவும். அவர் உடல்நிலைக்கேற்ப உணவு முறைகளையும் மருந்துகளையும் தெரிவிக்கலாம்.
நீரிழிவு நோய்க்கான உணவு வகைகள்
உங்கள் மருத்துவரிடம் உங்களுக்காக ஒரு உணவு அட்டவணையைத் தயார் செய்யச் சொல்லுங்கள். அது திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான சலிப்படையச் செய்யும் வகையில் இருக்காது. ஒருவருடைய தேவைக்கேற்பவும் விருப்பத்திற்கேற்பவும் பல மாற்று உணவு வகைகளை நீங்கள் சேர்த்துக் கொள்ள முடியும்.
மாற்று உணவு வகைகள் என்றால் என்ன?
ஆகாரத்தில் மாற்றங்கள் எளிதாக இருக்கும் வண்ணம் உருவாக்கப்பட்ட சமமாக இருக்கும் மற்ற உணவு வகைகள்தான் மாற்று உணவு வகை.ஓர் உணவு வகைக்குப் பதிலாக கீழ்கண்ட 7 மாற்று உணவு வகைளை மாற்றி மாற்றி சாப்பிடலாம்.
காய்கறிகள்.
கார்போஹைட்ரேட்ஸ்.
பழங்கள்.
இறைச்சி, மீன் மற்றும் பருப்புகள்.
பால் மற்றும் பால் தயாரிப்புகள்.
தானியங்கள்.
எண்ணெய்,கொழுப்பு மற்றும் கொட்டை வகைகள்.
உடற்பயிற்சி
நீரிழிவு நோய் உள்ளவர்கள் உடற்பயிற்சி செய்வதால்,
இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
எடையைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
நல்ல உடல்நலத்துடன் இருக்கிறோம் என்ற உணர்வை அதிகரிக்கிறது.
உங்கள் உடலில் இன்சுலினுக்கு உகந்த நிலையை அதிகரிக்கிறது.
உடற்பயிற்சியில் கவனிக்க வேண்டியவை
உங்கள் உடலுக்கேற்ற பயிற்சியைப் பற்றி முதலில் உங்கள் மருத்தவரிடம் கலந்தாலோசித்துக் கொள்வது நல்லது.
கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்து தவறாமல் செய்யவும்.
மிதமான ஓட்டம், நீச்சல் போன்ற திடமான விளையாட்டுக்களில் பங்கெடுத்துக் கொள்ளவும்.
காலி வயிற்றுடன் உடற்பயிற்சி செய்யக் கூடாது.
இன்சுலின் ஊசி போட்டுக் கொண்ட உடனேயே உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமானதாக இருந்தால் உடற்பயிற்சி செய்யக் கூடாது. நீரிழிவு கட்டுக்குள் இல்லாத போதும் உடற்பயிற்சி செய்யக் கூடாது.
மாத்திரைகள்
சில சமயங்களில் , இரத்தத்தில் உள்ள அதிக சர்க்கரையைக் குறைக்க உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி மட்டும் போதாது. சர்க்கரை அளவை இரத்தத்தில் குறைக்கும் மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம். இது இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைய உதவும்.
சில மாத்திரைகள் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்க, கணையத்தைத் தூண்டிவிடுகிறது. மாத்திரைகள் சிறப்பாகச் செயல்புரிய , இன்சுலின் சுரக்கும் அளவிற்கு நோயாளியின் கணையம் நல்ல நிலையில் இருக்க வேண்டும்.
சில மாத்திரைகள் , செல்லினுள் இன்சுலின் நுழைந்து செயல்புரிய உதவுகிறது. சில மாத்திரைகள் குடலிலிருந்து குளுக்கோஸ் இரத்தத்தில் கலப்பதைக் குறைக்க உதவுகின்றன.
இன்சுலின்
நீரிழிவு முற்றினால், பல நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் தவிர்க்க இயலாததாகி விடுகிறது. உங்கள் மருத்துவர் உங்களுக்கு இன்சுலின் போட்டுக் கொள்ள பரிந்துரை செய்து விட்டால் இன்சுலின் போட்டுக் கொள்ளத் தொடங்குவது நல்லது.
இன்சுலின் எப்படி செயலாற்றுகிறது?
இரைப்பைக்குப் பின்னால் உள்ள உறுப்பான கணையத்திலிருந்து உற்பத்தியாகும் ஒரு ஹார்மோன்தான் இன்சுலின். இன்சுலின் சுரக்காமல் போனால் அல்லது குறைவாகப் போனால் அல்லது செயல்பட முடியாமல் போனால் செல்களுக்குள் சர்க்கரை (குளுக்கோஸ்) செல்ல முடியாது. இரத்தத்திலேயே அதிக அளவில் தங்கிவிடும். எனவே நீரிழிவு முற்றினால், இன்சுலின் தவிர்க்க இயலாததாகி விடுகிறது. இன்சுலின் ஊசி போட்டுக் கொண்ட பிறகு இரத்த ஓட்டத்தில் கலந்து , உடல் முழுவதும் பரவுகிறது. செல்லின் மேற்பரப்பில் படர்ந்து செல்லினுள் சர்க்கரை புக வழி செய்கிறது.
இன்சுலினின் வகைகள்
இன்சுலின் இனம், செயல்பாடு மற்றும் அதன் சக்தியை வைத்து பிரிக்கப்பட்டுள்ளது.
இன்சுலின் அதன் மூலத்தைப் பொறுத்து ஹியூமன், போர்சைன், போவைன் போன்ற வகைகளாகப் பிரிக்கப் பட்டுள்ளன. ஹியூமன் இன்சுலின் மரபியல் மூலமாக அல்லது செமி சிந்தெடிக் முறையில் தயாரிக்கப்படுகிறது. போர்சைன், போவைன் இன்சுலின் முறையே பன்றி மற்றும் மாடுகளின் கணையங்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
இன்சுலின் செயல்படும் கால அளவு, அதன் செயல்படும் திறன்களைக் கொண்டும் பல வகைகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.
இன்சுலின் ஊசி எப்படி தாமாகவே போட்டுக் கொள்வது?
முதலில் உங்கள் கைகளை நன்றாகக் கழுவிச் சுத்தம் செய்து கொள்ளவும்.
உங்கள் இன்சுலின் சக்திநிலைக்கு ஏற்ற சிரின்ஜைத் தேர்வு செய்து கொள்ளுங்கள். அதாவது 40 ஐ.யூ.இன்சுலினுக்கு 40 ஐ.யூ. சிரின்ஜ். நீங்கள் கலங்கலான இன்சுலினைப் பயன்படுத்தினால், உள்ளே இருக்கும் வண்டல் முழுவதும் நன்கு கலக்கும் வரையில் பாட்டிலைக் கவிழ்த்துக் குலுக்கவும்.
இன்சுலின் செலுத்த வேண்டிய அளவு வரை சிரின்ஜ் மூலம் பாட்டிலை நேராகப் பிடித்து காற்றை மெதுவாக உள்ளே செலுத்தவும்.
தேவையான அளவு இன்சுலினை இழுக்கவும். காற்றுக் குமிழிகளைப் போக்க சிரின்ஜை மெதுவாகத் தட்டவும்.
ஊசி போட வேண்டிய இடத்தில் உள்ள தோலைப் பிடித்து அகலமான மடிப்பினுள் தோலின் அடியில் உள்ள அடுத்த திசுவிற்கு எதிராக 90 டிகிரி கோணத்தில் ஊசியைக் குத்தவும்.
இன்சுலினை மெதுவாகச் செலுத்தவும் ஊசியை வெளியே எடுக்கும் பொழுது, அந்த இடத்தில் வேறொரு விரலால் அழுத்திக் கொண்டே எடுக்கவும்.
தோலின் அடியில் உள்ள திசுவில் மாறுதல் வராமல் இருக்க ஊசி போடும் இடத்தை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டியது அவசியம்.
நினைவில் வைத்திருக்க வேண்டியவை
நீங்கள் நீரிழிவைப் பற்றி அறிந்து, புரிந்து சமாளிக்க மனம் வைத்தால் போதும். மற்றவரைப் போல ஆரோக்கியமாக, உற்சாகமிக்க, மனம் நிறைந்த வாழ்க்கை வாழலாம்.
உங்கள் நோயைக் கட்டுப்படுத்த வேண்டிய முக்கிய நபர் நீங்கள்தான். மருத்துவரும்,மற்றவர்களும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள் அறிவுரை வழங்குவார்கள்.
நீங்கள் நோயுற்றிருந்தாலும் இன்சுலினைத் தொடர்ந்து எடுத்துக் கொள்ளுங்கள். உங்களால் சாப்பிட முடியாத போது திரவநிலை உணவை எடுத்துக் கொள்ளுங்கள்.
சிகிச்சை எடுத்துக் கொண்டால் மட்டும் போதாது. சிகிச்சையின் முடிவுகளைத் தவறாமல் குறித்து வைத்துக் கொண்டால்தான் நீரிழிவை சிறப்பாகச் சமாளிக்க முடியும்.
தவறாமல் பரிசோதனைகள் செய்வதும், கவனமாகக் குறிப்பெடுத்துக் கொள்வதும் மிக முக்கியம்.
ஹைப்போக்ளைசீமியாவை உடனடியாக சமாளிக்க கையில் குளுக்கோஸ், சர்க்கரை போன்ற இனிப்புகளை வைத்துக் கொள்ளுங்கள்.
உங்கள் கைகள், பாதங்கள், கண்கள், பற்கள் மற்றும் சருமத்தை நன்கு கவனித்துக் கொள்ளவும்.
சரிவிகித உணவு, தவறாத உடற்பயிற்சி, மருந்துகள் மற்றும் நடக்கும் என்ற நம்பிக்கை போன்றவற்றால், நீரிழிவு இருந்தாலும் உங்கள் இலக்கை அடைய உதவும்.
ஆதாரம் : தேசிய நீரழிவு ஆராய்ச்சி மையம்.

அடையாறு ஆற்றின் படுகையும்,கடல் மட்ட அளவும்.......

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.அடையாறு ஆற்றின் படுகை அமைந்துள்ள விதமும்,அதன் போக்கு இடங்களின் கடல் மட்டமும் தெரிந்துகொள்ளுங்க..ஆக்கிரமிப்பே பெரும் சேதத்தை கொடுத்துள்ளது என்பதையும் அறிந்துகொள்ளுங்க..

            அடையாறு ஆற்றின் படுகை, கடலை நோக்கி எவ்வாறு சரிந்து இறங்குகிறது என்பதை ஆராய்ந்தால் அதிர்ச்சியாக இருக்கிறது. கடல்மட்டத்தை நோக்கிய ஆற்றின் பயணம் எவ்வாறு அடி அடியாக இறங்கி வருகிறது என்பதை கூகுள் எர்த் கூறுகின்ற கடல்மட்ட உயரத்தளவின்படி கணக்கிட்டுப் பார்க்கலாம். எவ்வளவோ வெள்ளம் சென்றாலும் காவிரி பள்ளிபாளையத்திற்குள் புகுந்ததில்லை, பவானியை மேவியதில்லை. இந்த ஆறு மட்டும் ஏன் இவ்வாறு நடந்துகொண்டது ?
ஆற்றின் தோற்றுவாயான செம்பரம்பாக்கம் ஏரி, கடல்மட்டத்திலிருந்து 62 அடி உயரத்தில் இருக்கிறது. சென்னையின் பெருவாரியான பகுதிகள் கடல்மட்டத்திலிருந்து சுமார் 25 முதல் 35 அடி வரையிலான உயரத்தில் இருக்கின்றன.
திருவல்லிக்கேணி 30 அடி உயரத்திலும் சென்ட்ரல் இருப்பூர்தி நிலையம் 18 அடி உயரத்திலும் புரசைவாக்கம் 23 அடி உயரத்திலும் இருக்கின்றன. இதில் வேளச்சேரியிலுள்ள ஏரிக்குத் தெற்குப் பகுதி கடல்மட்டத்திலிருந்து வெறும் 14 அடி உயரமே இருக்கிறது. கொட்டிவாக்கத்திலுள்ள கண்ணகி நகர் என்னும் பகுதி கடல்மட்டத்திலேயே ( 0 அடி) இருக்கிறது. ஒவ்வொரு பகுதியின் தாழ்வான நிலமட்டத்தைப் பற்றிய எளிய கணக்கீடு இருந்தாலே எங்கெங்கு வெள்ளம் தேங்கி நிற்கும் என்பதை யாரும் உணரலாம்.
62 அடி உயரமுள்ள செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 0 அடி உயரமுள்ள கடல்மட்டத்திற்கு அடையாற்றில் திறந்துவிடப்படுகின்ற தண்ணீர் ஆற்றுப் படுகையின் வழியே வடிந்து செல்லவேண்டும். அவ்வாறு செல்வதற்கு ஆற்றின் வழி சிறிதளவே ஆனாலும் தொடர்ச்சியாக, சரிவாக இருக்கவேண்டும் என்பதை நாம் அறிவோம். கடல்மட்டத்திலிருந்து ஆற்றுப் படுகையின் உயரத்தைக் காண்பதன்மூலம் அந்தச் சரிவைப் புரிந்துகொள்ள முடியும்.
செம்பரம்பாக்கத்திலிருந்து இறங்கி வரும் அடையாற்றுத் தண்ணீர் குரோம்பேட்டைக்கு மேற்கே சென்னை வெளிவட்டச் சாலையை (பைபாஸ்) ஒட்டிப் பாய்கையில் கடல் மட்டத்திலிருந்து 35 அடி என்னும் அளவுக்குத் தாழ்ந்து வந்துவிடுகிறது. அடுத்து மீனம்பாக்கம் விமான நிலைய ஓடுபாதையை ஒட்டிய அடையாற்றுப் படுகை கடல்மட்டத்திலிருந்து வெறும் 12 அடி என்ற தாழ்நிலையை அடைந்துவிடுகிறது.
அங்கிருந்து கடலைச் சேரும்வரை அடையாறு தொடர்ச்சியாகச் சரிந்து இறங்குவதில்லை. அடுத்தடுத்து வரும் அடையாற்றின் படுகைகள் 10 முதல் 20 அடிவரை உயர்வதும் பின்பு சரிவதுமாகவே இருக்கிறது. இதை கூகுள் எர்த் செயலியில் ஒவ்வொரு இடத்தையும் சுட்டி வைத்து அளந்து உணரலாம். திறந்துவிடப்படும் வெள்ளம் ஆற்றின் தங்குதடையின்றிப் பாயாமல் தேங்கி நிரம்பிய பின் வழிவது என்னும் முறைப்படிதான் நகர்கிறது.
விமான நிலையத்திலேயே 12 அடிக்குத் தாழ்ந்த அடையாற்றுப் படுகை, அங்கிருந்து வடக்கு நோக்கித் திரும்புகையில் 35 அடி உயரம் வரை தேங்கிய பின்பே வழிய நேர்கிறது. 35 அடிவரை முன்னுள்ள வழி உயரமாய் இருக்கப்போய் பக்கவாட்டில் வெள்ளம் கரையுடைத்து விமான நிலையத்தில் தேங்கியிருக்க வேண்டும்.
விமான நிலையத்தைவிட்டு வெளியேறிய் அடையாறு நந்தம்பாக்கத்தையொட்டிய இடத்தில் மீண்டும் 15 அடி அளவுக்குத் தாழ்கிறது. அதற்கடுத்து ஈக்காட்டுத்தாங்கலுக்கு வடக்கேயுள்ள அடையாற்றுப் படுகை 30 அடி என்னும் அளவுக்கு உயரமாக இருக்கிறது. நந்தம்பாக்கம் பகுதியிலிருந்து ஈக்காட்டுத் தாங்கலில் உள்ள பாலத்திற்கு வரும்வரை (NH 45) இந்தப் பத்தடிக்கு நீர் நின்று படுகை முழுக்கத் தேங்கவேண்டும்.
பாலம் தாண்டியவுடன் திருவிக இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்டை ஒட்டி 12 அடி அளவுக்கு மீண்டும் தாழ்கிறது. அன்னை வேளாங்கண்ணி பள்ளி மற்றும் கல்லூரியை ஒட்டிய அடையாற்றுப்படுகை மீண்டும் 28 அடிக்கு உயர்ந்திருக்கிறது. 28அடி வரை தேங்கும்போது தண்ணீர் பக்கவாட்டில் உடைத்துவிட்டிருக்க வேண்டும்.
அங்கிருந்து அண்ணாசாலைப் பாலத்தை நெருங்கும் முன் படுகை மீண்டும் 12 அடிக்குத் தாழ்கிறது. சைதைப் பாலத்தைத் தாண்டியபின் ’டர்ன்பல்ஸ் சாலை’ என்ற பாலத்தை அடுத்து மீண்டும் 28 அடி உயரம். அதைத் தாண்டி திடீர்நகர் என்ற பகுதியை வந்தடையும் அடையாறு கடல்மட்டத்திலிருந்து 0 அடி என்ற நிறைவை அடைந்துவிடுகிறது. அங்கிருந்து கடல்வரை சென்று கலப்பது ‘முழுக்க முழுக்கத் தேங்கி அதன்பின் வழியும்’ வகையால்தான்.
அடையாற்றுவழி முழுக்கவே ‘தேங்கி தேங்கி பத்து அல்லது இருபது அடியுயர வெள்ளத் தேக்கமாகி பிறகு வழிந்து, மீண்டும் தேங்கி மீண்டும் சரிந்து’ என்பதாகவே இருக்கிறது. இத்தகைய ஆற்றுப் படுகையால் திடீரென்று ஏற்பட்ட மிகுவெள்ளம் வலுவில்லாத கரைப்பகுதியை மீறிப்பாய்ந்து ஊருக்குள் புகுந்துவிட்டது. ஆற்றுப்படுகையே ஏற்றத் தாழ்வாக இருக்கும்போது அதன் வழிநெடுக ஆக்கிரமிப்புகளும் அடைப்புகளுமாக இருந்தால் என்னாவது ? அதுதான் நடந்தது.
திருமிகு.கவிஞர் மகுடேஸ்வரன் அவர்களுக்கு நன்றிங்க..

நீங்களும் உதவுங்க..



சென்னை,கடலூர் மக்களுக்கு உதவ .........
         முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு உங்க ஊரிலிருந்தே  பணம் அனுப்புங்க...
           

மரியாதைக்குரியவர்களே,
           வணக்கம். சென்னைமற்றும் கடலூர்  இதுவரை சந்தித்திராத மழையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.நமது உறவுகள் உறைவிடம்,உணவு,உடை உட்பட தங்கள் உடைமைகளை இழந்து  மிகவும் கொடுமையாக பாதிக்கப்பட்டு துன்பப்பட்டு வருகிறார்கள்.

          தமிழ்நாடு அரசு மற்றும் நமது தேசத்தின் மற்ற மாநில அரசுகள்,உலக நாடுகள்,தனியார் நிறுவனங்கள்,பல்வேறு சமூக நல அமைப்புகள்,தொண்டு நிறுவனங்கள்,தன்னார்வலர்கள்,என  அனைவரும் உதவி செய்வதை  தம் கடமையாக,பொறுப்பாக,மனித நேயப்பணியாக ஏற்று  மீட்பு பணிகளிலும்,நிவாரணப்பணிகளிலும்,சுகாதாரப்பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.ஊடகங்களும் தக்க உதவிகளைச் செய்து வருகின்றன.இவ்வாறு உடனடியாக உதவி செய்து வரும் அனைவரையும் தமிழக மக்கள் சார்பாக நமது நன்றிகளைத்தெரிவித்துக்கொள்வோம்.

     அதே நேரத்தில் தம்மால் இயன்ற நிதியை எப்படி சேர்ப்பது என தெரியாமல் தவிப்பவர்கள் இதோ கீழ்கண்ட முகவரிக்கு உங்க பக்கத்து வங்கியில் சென்று பணத்தை செலுத்தி நீங்களும் நிவாரணப்பணிகளில் பங்கேற்க அன்புடன் வேண்டுகிறோம். 

     விருப்பமுள்ள தாங்கள் அவ்வாறு நிதி உதவி செய்ய  chief minister's public relief fund என்ற பெயரில் காசோலை/ வரைவோலை மூலம் நிதித்துறை இணைச் செயலாளருக்கு அனுப்பி வைக்கலாம். அல்லது நிதித் துறை இணைச் செயலாளரை நேரில் சந்தித்தும் வழங்கலாம். இந்த நிவாரண நிதிக்கு 100 விழுக்காடு வருமான வரி விலக்கு அளிக்கப்படும்.



முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு பணம் அனுப்ப வேண்டிய முகவரி:
 The Joint Secretary & Treasurer, 
Chief Minister's Public Relief Fund, 
Finance (CMPRF) Department, 
Government of Tamil Nadu. 
Secretariat, 
Chennai 600 009 
Tamil Nadu, 
INDIA. 
 மின்னஞ்சல்: 
jscmprf@tn.gov.in 
வங்கி கணக்கில் இணையம் (ECS) மூலம் பணம் செலுத்துவோர் கீழ்காணும் விவரங்களை கொண்டு பணம் அனுப்பலாம்
 Bank : Indian Overseas Bank 
Branch : Secretariat Branch, 
Chennai 600 009 
S.B. A/c No. : 11720 10000 00070 
IFS Code : IOBA0001172 
CMPRF PAN : AAAGC0038F 
         இணையம் மூலமாக நிதி செலுத்துவோர், தங்களது பெயர், பண மதிப்பு, வங்கி மற்றும் அதன் கிளை விவரம், பணம் செலுத்திய நாள், பரிவர்த்தனை எண் போன்றவற்றுடன், தங்களது தொடர்பு முகவரி, இ-மெயில் முகவரி ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். அப்போது தான் பெற்ற பணத்துக்கான ரசீது அனுப்பி வைக்க வசதியாக இருக்கும்.  வருமான வரி கணக்கின்போது அந்த ரசீதை சமர்ப்பிக்கவும் உதவியாக இருக்கும்.
          அன்புடன், C. பரமேஸ்வரன். சத்தியமங்கலம்-ஈரோடு மாவட்டம்.

05 டிசம்பர் 2015

கல்லணை முதல் திருக்குறள் வரை.......



மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். உங்களுக்காக இதோ............
 தமிழனின் சாதனை பட்டியல்கள்...............
  நமது வரலாறு நமக்கு அவசியம் தெரிந்திருக்க வேண்டும்................


கல்லணை :-
             உலகிலுள்ள அணைகளுக்கு முன்னோடியான கல்லணை கட்டப்பட்டு ஈராயிரம் ஆண்டுகள் முடியப் போகும் நிலையிலும், நொடிக்கு இரண்டு இலக்கம் கன அடி நீர் செல்லும் காவேரியை, கரைபுரண்டோடும் காட்டாற்றை தடுத்து கரிகாலன் அணை கட்டிய தொழில் நுட்பத்தை , இன்றைய ஆங்கில அறிவியலாளர்களால் கண்டறிய இயலவில்லை. கரிகாலன் என்ன ஆங்கில அறிவை பெற்றா கல்லணையை கட்டினான் ?

மாமல்லபுரம் :-
              கடற் சீற்றத்திற்கு இடையே, கடற்கரையோரமாக 1400 ஆண்டுகளுக்கு முன் பெரும் பாறை ஒன்றின் முகப்பை மட்டும் பட்டையாகச் செதுக்கி, அதன் பின் உள்நோக்கி குடைந்த வகையில் உருவாக்கப்பட்டவையே மாமல்லபுரம் குடைவரைக் கோயில்கள். மாமல்லபுரத்தின் உச்சி கோபுரம் மட்டும் 60 அடி. கோபுரத்தை தாங்கும் வகையில் முதலில் தூண்கள் செதுக்கப்பட்டன. மாமல்லபுரத்தை உலக வழி தோன்றல் சின்னமாக யுனேசுகா அறிவித்துள்ளது. நரசிம்ம பல்லவன் என்ன ஆங்கிலம் பயின்றனா ?

அங்கோர்வாட் கோயில் :-
                உலகின் மிகப் பெரிய கோயிலை இரண்டாம் சூரிய வர்மன் என்ற தமிழ் மன்னன் கம்போடியாவை கைப்பற்றிய போது அங்கு உள்ள அங்கோர்வாட் என்ற இடத்தில் இக்கோயிலை கட்டியுள்ளான். இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களிலேயே இது தான் மிகப் பெரியது.
திரும்பிய திசை எல்லாம் சிற்பங்கள். இந்த கோயிலின் நான்கு பக்க சுற்று சுவர்களும் முறையே 3.6 கிலோ மீட்டர்கள் நீளமுடையவை. 40 ஆண்டுகளில் இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு இருக்ககூடிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட 300 ஆண்டுகள் ஆகும். இக்கோயிலின் முழு உருவத்தை காண வானத்தில் 1000 அடிக்கு மேல் சென்று அங்கிருந்து பார்த்தால் மட்டுமே இதை முழுமையாக காண முடியும். இதை முழுமையாக ஒளிப்படம் எடுக்க முடியும் .இதன் முழு கட்டிடமும் அப்போது தான் பதிவாகும்.

திருநள்ளாறு காரி ஈசன் கோயில் :-
                  எந்த ஒரு செயற்கைகோளும் தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி திருநள்ளாறு கரி ஈசன் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் போது 3வினாடிகள் செயலிழந்து விடுகிறது. அதே நேரத்தில் செயற்கை கோள்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை. இதை பற்றி நாசா அறிவியலாளர்கள் ஆராய்ந்தனர். முடிவு வியப்பை தந்தது.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்து கொண்டே இருக்கிறது. இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் போது இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும் போது செயலிழந்துவிடுகிறது. அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த விதபாதிப்பும் ஏற்படுவதில்லை.
இன்றைய ஆங்கில அறிவியல் தொழில் நுட்ப செயற்கை கோள்களால் கண்டறியயப்படும் காரியின் கதிர்வீச்சை , கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டுபிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள் மிகுதியாக விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனி பெயர்ச்சி என்று அறிவிக்கும் தமிழர்களின் அறிவியல் திறமையை,என்ன வென்று சொல்வது. தமிழ் வழி கல்வி பயின்ற தமிழர்கள் செய்த செயலை ஆங்கில அறிவியல் தொழில் நுட்பத்தால் இன்றளவும் செய்யவும் முடியவில்லை கண்டறியவும் இயலவில்லை.

கடல் நடுவே ராமேசுவரம் :-
        கடலுக்கு நடுவே உள்ள ராமேசுவரம் தீவில் மலைகளோ பாறைகளோ கிடையாது. ராமேசுவரம் கோயில் 1500 ஆண்டு பழமையானது . 1212 மிகப் பெரிய தூண்கள், 590 அடி நீளம் 435 அடி அகலம் கொண்ட உலகின் மிகப் பெரிய நடை மண்டபம், மற்றும் கற்கோயிலை எவ்வாறு உருவாகியிருக்க முடியும். பெரும் பாறைகளை பாம்பனிலிருந்து கடற் கடந்து எவ்வாறு ராமேசுவரம் கொண்டு சென்றிருக்க முடியும் என்பதை ஆங்கிலம் பயின்ற அறிவாளிகள் கண்டறிந்து சொல்லட்டும்.

தஞ்சாவூர் பெருவுடையார் கற்கோயில்:-
            கற்களே கிடைக்காத காவேரி சமவெளி பகுதியில் 66 மீட்டர் உயரம், 15 தளங்கள் கொண்ட தஞ்சாவூர் பெருவுடையார் கற்கோயிலை இராஜ இராஜ சோழன் எவ்வாறு கட்டினான் என்பது புரியாத புதிர். கோயிலின் கடை கால் வெறும் 5 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. புவி ஈர்ப்பு மையத்தை கண்டறிந்து அதற்கேற்ப வெற்றிட அமைப்பில் கட்டப்பட்ட அறிவியல் நுட்பம் கொண்டது. சுமார் 80 ஆயிரம் கிலோ எடை கொண்ட ஒற்றை கல்லை எவ்வாறு கோயிலின் உச்சியில் நிறுவியிருக்க முடியும். பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகளை ஆயிரம் ஆண்டுக்கும் முன்பே தமிழர்கள் கண்டறிந்துள்ளனர். அதன் அடிப்படையிலேயே ஒற்றை கல்லை உச்சியில் நிறுவி சிற்பிகள் கோயிலை உருவாகிள்ளனர். கோயில் முழுவதும் ஒரே தன்மையான செந்நிறக் கற்களால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதை இந்திய வழி தோன்றல் சின்னமாக யுனேசுகா அறிவித்துள்ளது. ஆங்கில வழியில் பயின்றவர்களாலும், அவர்களது அறிவியல் தொழில் நுட்பத்தாலும் இன்றளவும் கண்டறிய இயலவில்லை. இராஜ இராஜ சோழன் என்ன ஆங்கிலம் கற்றவனா?

தொல்காப்பியமும் திருக்குறளும் :-
            5000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட தொல்காப்பியமே, உலகில் உள்ள மொழிகளின் இலக்கண நூல்களுக்கு முன்னோடியாக விளங்குகிறது. தமிழ் நாட்டின் எல்லைகளை வரையறைத்து கூறியுள்ளது. ஓருயிர் முதல் ஆறறிவு உயிர் வரை பகுத்து கூறியுள்ளது. பன்னெடுங்காலத்திற்கு முன் இயற்றப்பட்ட இலக்கண நூல் அகத்தியம் என்று குறிப்பிடுவதன் மூலமாக தமிழில் தொன்மைக்கு சான்றாக இருக்கிறது.

            2000 ஆண்டுக்கு முன் இயற்றப்பட்ட உலக பொது மறையான திருக்குறள் உலகின் 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.ஆங்கிலத்தில் 40 பேர் மொழி பெயர்த்துள்ளனர். தமிழ் மொழியின் சிறப்பை அறிந்த ஆங்கில மொழி அறிவு பெற்றவர்கள் தமிழ் மொழியை போற்றி கை கூப்பி வணங்குகின்றனர். இது போன்ற சொற்செழுமை வாய்ந்த நூல்களை ஆங்கிலத்தில் இயற்ற முடியமா ?எல்லா உறவு முறைகளுக்கும் ஆண்டி அங்கிள் என்றும் விளிக்கும் ஆங்கிலத்தில் இது சாத்தியமா? தமிழர்கள் சிந்திக்க வேண்டும் ?

அணு :-
அணுவின் அணுவினை ஆயிரங் கூறிட்டு
அணுவின் அணுவினை ...அணுகவல்லார்க்கு
அணுவின் அணுவினை அணுகலுமாமே"
-ஆசான் திருமூலர்

          சித்தர்களின் அறிவியலின்படி எண்ணிலாடங்கா கோடி அண்டங்கள், பேரண்டங்கள், தோன்றுவதற்கு மூல காரணமாக விளங்கி எல்லாப் படைப்புக்கும் அடிப்படையாக இருப்பது ஒரு அணு ஆற்றல். ஒரணுவை ஆயிரங்கூறாக்கினால் கிடைக்கும் அளவற்ற ஆற்றலையே சித்தர்களும் ஞானிகளும் பரமாணு என்று சொல்கிறார்கள். பரமாணு என்பது பிரிக்க முடியாத அணு என்பது பொருள். அந்தப் பரமணுவே பரந்து விரிந்து கிடக்கின்ற அண்ட பேரண்டங்களை இயக்கிக் கொண்டிருக்கின்றது என்பதை பல்லாயிரம் ஆண்டுகளு க்கு முன்பே கண்டறிந்து கூறியவர்கள் சித்தர்கள். அணுவை சுற்றி மின் காந்தம் அமைத்திருப்பதை கண்டறிந்து கூறியவர்கள் சித்தர்கள். அவ்வை பாட்டியும் அணுவைத் துளைத்து................... என்று பாடி உள்ளார்.

சித்தர்கள் :-
            சித்தர்கள் என்பவர்கள் மருத்துவர்கள், அறிவியலாளர்கள் ,மக்களை நல்வழிப்படுத்தும் சான்றோர்கள். நூறு ஆண்டுகள் கடந்து வாழும் சூத்திரத்தை கண்டறிந்தவர்கள். அவர்கள் கண்டறிந்த சித்த மருத்துவ முறையை நாம் மதிக்கக் தவறி விட்டோம். தீராத நோய்களுக்கெல்லாம் சித்த மருத்துவத்தில் தீர்வு உண்டு. கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சலுக்கு சிறந்த மருந்து சித்த மருத்துவ முறையே என தமிழக அரசு அறிவித்த பொழுதே தமிழர்கள் அதன் பயனை சிறப்பை முழுமையாக உணர்ந்தனர். இத்தகைய சித்த மருத்துவ முறையை சித்தர்கள் ஓலை சுவடிகளில் தங்களது தாய் மொழியான தமிழிலேயே எழுதி வைத்துள்ளனர்.

வானியல் அறிஞர்கள் :-
                  பூமி உருண்டை என்றும், சூரியனை சுற்றியே ஒன்பது கோள்கள் வலம் வருகின்றன என்றும், அதைத் தொடர்ந்து நிகழும் கும்மிருட்டு, முழுநிலவு மற்றும் பருவ மாற்றங்கள் என அனைத்தையும் அன்றே கணித்த வானியல் வல்லுனர்கள் தமிழர்களே! சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே ஒன்பது கிரகங்களை நன்றாக கவனியுங்கள். அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளின் நிறம் கோள்களின் நிறத்தை அடிப்படையாக கொண்டே இருக்கும். தமிழர்கள் என்றோ கண்டுபிடித்ததை ஆங்கில அறிவு பெற்றவர்கள் இன்று கண்டறிந்து கூறுவதை நாம் உயர்வாக மதிக்கிறோம்.

பூம்புகார் .......உலகின் தொன்மையான நகரம் :-
                  9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடற்கோளில் மூழ்கிய நகரம் பூம்புகார் ஆகும். கிறித்து பிறப்பதற்கு 7500 ஆண்டு முந்தைய நகரம் இதுவாகும். அதாவது 9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல் கோளில் மூழ்கின. பூம்புகாரும் குசராத்தின் காம்பேவும் அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விடப் பழமையானவை ஆகும். பூம்புகார் நகர் கடலில் மூழ்கியுள்ளதை ஆங்கிலேயே அறிஞர் கிரகாம் குக் என்பவர் காணொளி, ஒளிபடச் சான்றுகளுடன் உலக நாடுகளுக்கு நிரூபித்தார். அதில் மண் கல்லான கருவிகள், மனித எலும்புகள், வீட்டுச் சுவர்கள், பாத்திரங்கள், ஆபரணங்கள், வீட்டு முற்றங்கள் ஆகியவை காணப்படுகின்றன.

உலகை கட்டி ஆண்ட தமிழன்:-
                   கடற் வழியே படை எடுத்து சென்று உலகை கட்டி ஆண்ட அருள்மொழித்தேவன் அறிமுகப்படுதியதே உலகம் முழுவதும் சனநாயகம் என்று போற்றி புகழும், மக்கள் வாக்களித்து தலைவனை தேர்ந்தெடுக்கும் குட வோலை முறையை அறிமுகப்படுத்தியவன் பேரரசன் அருள் மொழித் தேவனே.. வெற்றி பெற்ற நாடுகளில் எல்லாம் அம்மக்களை அடிமைபடுத்தாது சிறப்பான ஆட்சி புரிந்து, அம்மக்களை விடுதலையோடு வாழ வைத்தவன் தமிழனே.

               அத்தகைய உயரிய பண்பாடு ஒழுக்க நெறிகளோடு வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்பது நிரூபனமாகிறது. இவ்வளவும் நமது பாட்டன் முப்பாட்டனின் பெருமைகள் நாம் இவற்றை பாதுகாப்பு அழியாமல் காப்பாற்றினாலே போதும் இவையணைத்தும் நான் படித்து ரசித்தவையே உங்களது மேலான பார்வைக்கும் பதிந்திருக்கிறேன் நிறைய பகிருங்கள் நமது வரலாற்றை நமக்கு அடுத்துவரும் தலைமுறையினர் தெரிந்து கொள்ளவும் நமது முன்னோர்கள் எவ்வளவு சிறப்பான வாழ்க்கையினை வாழ்ந்துள்ளார்கள் என்பதை அறிய இது உதவும் நன்றி வணக்கம்.

தனியார் பேருந்து நிறுவனமே! பணம் ஒன்றே குறிக்கோளாக பாராதீர்,மனித நேயமும் உங்க மனதில் இருக்கட்டும்.

இலவசமாக போக்குவரத்து சேவை செய்த தமிழ்நாடு,கேரளா,ஆந்திரா,கர்நாடகா அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு நன்றிகள் பல..
மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். 
சென்னையில் கடந்த வாரம் பெய்த கடும் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஏராளமான தொழில் நிறுவனங்கள் உட்பட மக்கள் அனைவரும் மிகவும் பாதிக்கப்பட்டனர்.அதுசமயத்தில் வெளியூர்வாசிகள் மின்தடை காரணமாக ஏடிஎம் இயங்காத நிலையில்,தம் உடைமைகள் நீரில் மூழ்கிவிட்ட நிலையில்,தாம் தப்பியதே பெரும் அதிர்ஷ்டம் என்ற நிலையில்  தங்களது ஊருக்குச்செல்ல பயணிக்கும்போது தனியார் பேருந்து நிறுவனங்கள் சாதாரண நேரங்களில் 600ரூபாய் வசூலித்த அதே தூரத்திற்கு மழை பெய்து நெருக்கடியில் சிக்கித்தவித்தவர்களிடம்  ஐயாயிரம் ரூபாய் வரை வசூலித்துள்ளது மிகவும் வேதனையை அளிக்கிறது...பணம் ஒன்றே குறிக்கோளாக பாராதீர்,மனித நேயமும் உங்க மனதில் இருக்கட்டும்.
            
 Chennai Rain Breaks 100 Year Record and NEW RECORD CREATED in 2015 with a HIGHEST RAINFALL OF 119.73cms - 100 வருட ரெக்கார்டை உடைத்த சென்னை மழை........
இன்று மாலை வரை பெய்த மொத்த மழையின் அளவு 119.73 செமீ ஆகும். கடைசியாய் 1918 ஆம் ஆண்டு தான் சென்னையில் ஒரே நேரத்தில் 108.8 செமீ பெய்த ரெக்கார்ட்டை உடைத்திருக்கிறது இந்த 21 நாள் மழை. ஆயினும் 1943 முதல் 1951 வரை இரண்டாம் உலக போரினால் எந்த வித ரெக்கார்ட்டும் சென்னையின் நுங்கம்பாக்கத்து வானிலை நிலையத்தில் இல்லாததால் இந்த சென்னை 2015 ஆம் ஆண்டு அதிக மழை பெய்து 100 வருடத்திற்கு பிறகு சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த 119.73 மீனம்பாக்க அப்ஸர்வேர்ட்டியில் இருந்து எடுக்கபட்ட தகவல் சேகரிப்பாகும். நுங்கம்பாக்க டேட்டாவின் படி இது வரை 106.83 செமீ மழை கொட்டியுள்ளது. 

All i can say is STAY SAFE

ஈரோடு கதிர்.....

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.பிறமொழி மற்றும் பிற மாநில நடிகர்கள் சத்தமில்லாமல் செய்து வரும் உதவிகளை முன்வைத்த கதிர் ஐயா அவர்களுக்கு நன்றிங்க..


              கடந்த நான்கு நாட்களாக, வெள்ளம், மீட்பு, நிவாரணம் தவிர்த்து எதுவும் பேசக்கூடாது பகிரக்கூடாது என்றிருந்த கட்டுப்பாடு இந்தச் செய்தியைக் கண்டவுடன் தளர்கிறது. ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட திரையுலக ஜாம்பவான்கள்(!) வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன செய்தார்கள் என்ற எதிர்பார்ப்பில் எழுதப்படுவது அல்ல. இன்றைய நிலையில் மக்கள் மக்களுக்காக அல்லும் பகலும் உழைக்கும் நேரத்தில் திரை “நட்சத்திரங்கள்” நீங்கள் செய்வது குறித்து எந்தக் கவலையும் இல்லை. ஆனால் திரையைத் தாண்டி நிஜத்தில் நீங்கள் நடிக்க முற்படுவது மட்டும் காணச் சகியாதது.
உங்கள் விஸ்வரூபம் அரசியல் விளையாட்டில் தள்ளாடியபோது தமிழகமே உங்கள் இன்னல் கண்டு தவித்தது, மருகியது, நீங்கள் நல்லாயிருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தும் தொலைத்தது. நீங்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறேன் என ஒவ்வொரு பேட்டியிலும் மிரட்டல் விடுத்தீர்கள். சில நாட்கள் கழித்து உங்களை அலைக்கழித்த அதே அரசின் தலைமைப் பீடத்திற்குச் சொந்தமான தொலைக்காட்சியில் பட்டிமன்றம் நடத்தினீர்கள். இந்தக் கருமத்தையெல்லாம் விட்டுத்தொலைப்போம்.
உங்களைப் போலவே தமிழ் திரையுலகில் சித்தார்த் என்ற ஒரு நடிகர் இருக்கிறார். மன்னிக்கவும் உங்களைப் போலவே என்று சொல்வதை உங்கள் ரசிக சமஸ்தானமும் ஏற்றுக்கொள்ளாது, சித்தார்த்தை உண்மையாய் உணர்ந்தவர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அந்த சித்தார்த்துக்கு ரசிகர் மன்றமெல்லாம் இருக்கிறதா என்று தெரியவில்லை. ”யேய்ய்ய்.. சித்தார்த் படம் ரிலீசாகப்போவுது... நா கட்டாயம் பாப்பேன்” எனச் சொல்லும் ரசிகர்கள் இருக்கிறார்களா என்றெல்லாம் தெரியவில்லை. சித்தார்த்க்கு கட்அவுட் வைப்பார்களா, அதில் ஒரு கிறுக்கன் பால் அபிஷேகம் செய்திருக்கிறானா என்றும் தெரியாது. தமிழ் திரையில் இருக்கும் நூற்றில் ஒரு நடிகனாகத்தான் சித்தார்த் இருக்க முடியும். சித்தார்த்துக்கென்று தனி மார்கெட் எதும் இருக்கிறதா என்றெல்லாம் தெரியாது. ஆனால் சித்தார்த்திற்கு மனம் இருக்கின்றது.
தன் வீட்டில் தண்ணீர் புகுந்தபோது “அய்யய்யோ என் வூட்லய தண்ணி பூந்துடுச்சு, இந்த கேடு கெட்ட அரசாங்கம் வரி கட்டும் எனக்கு என்ன பாதுகாப்பு தருது!?” என்பது போன்றெல்லாம் எதும் புலம்பவில்லை. சித்தார்த் எனும் நடிகனையும் தாண்டிய மனிதன் களத்தில் இறங்கினார். ”நல்ல இடத்தில் வசிக்கும் எனக்கே இந்த நிலையென்றால், மற்றவர்கள் நிலை என்னவாக இருக்கும்” என்ற ஆதங்கத்தோடு களம் இறங்கினார். BIG எஃஎம் RJ பாலாஜியுடன் இணைந்து தனது ட்விட்டர் தளத்தின் மூலம் மட்டுமே பல நூறு தகவல்களை பகிர்ந்துகொள்ளத் துவங்கினார். இரவு பகல் பாராது களப்பணியாற்றுபவர்களை ஒருங்கிணைத்தார். அவரின் செயல்பாடுகள் மூலம் மட்டுமே பல நூறு உயிர்கள் பிழைத்ததையும், பல்லாயிரம் பேர் பசியாறியதையும் அதே பாதுகாப்பான அறையில் இருந்து வெட்கத்துடனோ, பொறாமையுடனோ நீங்கள் பார்க்க வேண்டும் திரு.கமல் அவர்களே.
இன்னொன்றும் சொல்ல வேண்டும், உங்கள் விஸ்வரூபத்திற்கு பிரச்சனை வந்ததுபோல், சித்தார்த்தின் ஏதாவது ஒரு படத்திற்கு பிரச்சனை வந்திருந்தால் இந்தத் தமிழகம் மிகச் சிறிய சலனத்தைக்கூட ஏற்படுத்தியிருக்காது. “யாரு அந்த சித்தார்த்!?” என்ற கேள்வியை மட்டும் கேட்டிருக்கும். அதன் பின் கடந்து போயிருக்கும். தெலுங்கு நடிகர்கள் பணத்தை அள்ளிக்கொடுக்க, மலையாள நடிகர் மம்முட்டி தன்னால் இயன்ற 30 இடங்களில் மக்கள் தங்கிக்கொள்ள ஏற்பாடு செய்ததையும் நீங்கள் பார்த்திருக்க முடியும் திரு.கமல் அவர்களே.
அடுத்து அறிவுப்பூர்வமான ஒரு கணக்கு சொல்லியிருக்கிறீர்கள். கார்ப்ரேட் திட்டங்களுக்கு அளிக்கும் 4000 கோடியை 120 கோடி மக்களுக்கு பிரித்துக் கொடுத்தால் எல்லோரும் கோடீஸ்வரர்களாக மகிழ்வார்களே என்று அரிய கண்டுபிடிப்பைச் சொல்லியுள்ளீர்கள். மேலோட்டமாய்ப் படிக்கும் எல்லோருக்கும் ”வாவ் நம்மாளு எவ்ளோ சுலுவா சொல்லிட்டார்டா… இதுக்குத்தான் ப்ரெய்ன் வேணும்ங்கிறது”ன்னுட்டுப் போவான். அது கவுண்டமணி – செந்தில் காமடிக்கு நிகரான அறிவார்ந்த கண்டுபிடிப்பு என எளிதாக புரிந்துவிடுமா என்ன? நீங்கள் பேட்டிகளில் புரியாதுபோல் பேசுவதை போன்ற ஒரு கணக்கு இதுவும் என்று புரியாது.
திரு.கமல் அவர்களே… நீங்கள் கணக்குப் போட்டது போல் 4000 கோடியை 120 பேருக்கு பிரித்துக் கொடுத்தால் தலைக்கு 33.33 கோடி வரலாம், ஆனால் கால்குலேட்டர் எடுத்து அறிவைப் பயன்படுத்தி எல்லா சைபர்களும் நிரப்பி கணக்குப் போடுங்கள், 4000 கோடியை 120 கோடி மக்களுக்குப் பிரித்தால் தலைக்கு வெறும் 33.33 ரூபாய் தான் வரும். இந்த வெங்காயக் கணக்கை அறிவார்ந்த கணக்காக நீங்களும் சொல்லியுள்ளீர்கள், உங்களைப் பேட்டியெடுத்தவரும் சரி செய்யாமல் வெளியிட்டிருக்கிறார். ஒருவேளை அவர்களுக்கு புரிந்திருந்தாலும் உங்கள் சாயம் வெளுக்கட்டுமே என்று விட்டிருந்திருக்கலாம்.
திரு.கமல் அவர்களே, பாதுகாப்பான அறையில் இருந்து கொண்டு சக சென்னை மக்கள் வெள்ளத்தில் அடைந்த இன்னல்களை கண்டு வெட்கப்படுவதாக பேட்டியில் நடிப்பதற்குப் பதில் உண்மையில், எழுந்து சென்று உங்கள் வீட்டுக் கண்ணாடியில் உங்கள் முகத்தைப் பாருங்கள் அல்லது ஒரே ஒரு நிமிடம் நேர்மையாக மனசாட்சியிடம் பேசுங்கள். உங்களைக் கண்டோ அல்லது உங்களை நினைத்தோ நீங்கள் கூசிப்போகும் சாத்தியமுண்டு.
.

முனைவர்.இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phil.,Ph.D., அவர்களது வாழ்க்கைக்குறிப்பு... (Dr.R.K.Manikkam, professor,Writer)

                                                                                                        முனைவர். இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phi...