22 ஏப்ரல் 2013

இன்று உலக புத்தக தினவிழா - 2013

 மரியாதைக்குரிய நண்பர்களே,வணக்கம். 
         இன்று புத்தக தினவிழா.  கொங்குத் தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை வரவேற்கிறேன்.புத்தகத்திற்கு செய்யும் செலவு,நமது வாழ்க்கை முன்னேற்றத்திற்கான முதலீடு.வாசிப்பை ஊக்கப்படுத்துவோம்.சமூகம் சார்ந்த நல்ல கருத்துக்களை,நிகழ்வுகளை,எண்ணங்களை,எதிர்பார்ப்புகளை,சீரழிவுகளை,சிறுகதைகள் எழுதலாம்.நாடகங்கள் எழுதலாம்.கவிதைகள் எழுதலாம்.
        எழுதும் கதைகள்.....
 (1) வாசகரை கற்பனை செய்ய வைக்க வேண்டும்.
(2) வாசகருக்கு ஆர்வத்தைத் தூண்டும் வகையில் எழுத்துநடை அமைய வேண்டும்.
(3)வாசகர் கதையைப் படிக்கும்போதே வியப்பும்,வேகமும் உண்டாகும் வகையில் எழுத வேண்டும்.
(4)கதையைப் படிக்கும்போது பலவாறாக யூகித்து வாசகரின் எண்ண ஓட்டங்கள் சுறுசுறுப்பாக இயங்கும் வகையில் புனைந்தபடி அதாவது அப்படி இருக்குமா? இப்படி இருக்குமா? என்ன ஆகும்? என்ற திகைப்புடன் வாசிக்கும் வகையில் எழுத வேண்டும்.
(5)எதுகை,மோனை,உவமை,நகைச்சுவை, கருத்துகள், எதிர்பார்ப்பு,ஆர்வம்,திருப்பம்,எளிதில் புரிதல்,பேச்சுத்தமிழ், என படிக்கும்போதே ஆர்வம் மேலோங்கி இன்பம் அடையும் வகையில் எழுத வேண்டும்.
(6) வாசகர் கதையை எப்படி யூகிப்பார்? என்று கதை ஆசிரியரே ஒரு முடிவு செய்து அதற்கு மாறான போக்கில் திருப்பத்துடன்  கதையை முடிக்க வேண்டும்.
(7) சமூகத்தின் கருத்துக்களையும்,நம்பிக்கைகளையும் வலியுறுத்தும் பொருட்டு கதை அமைக்க வேண்டும்.
(8) கதை எழுதுவதற்கு முன்னதாக சிறந்த சிறுகதைகள் சிலவற்றை பலமுறை படித்து கதையின் கட்டமைப்பை நுணுக்கமாக ஆராய்ந்து குறிப்பெடுத்து அதன்வழி எழுதப் பழகலாம்.
 கதையின் அம்சங்களாக கதாபாத்திரங்கள்,எதிர்கதாபாத்திரங்கள்,கதைக்களம்,கதை முடிச்சு,திருப்பம்,என அமைத்துப் பழகிவிட்டால் கதை சிறப்பாக அமையும்.

 கதை எழுத ஆர்வமுள்ளவர்கள் முயற்சிக்கலாமே!. 
   வாழ்த்துக்களுடன்......
    சி.பரமேஸ்வரன்
  அரசுப்பேருந்து ஓட்டுநர்,
 தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்,
தாளவாடி கிளை. 
 ஈரோடு மாவட்டம்.

19 ஏப்ரல் 2013

இல்லறம் நல்லறமாக -தம்பதியினருக்காக



    மரியாதைக்குரிய நண்பர்களே,வணக்கம்.
                           கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன். தம்பதியினரின் இல்லற வாழ்க்கையின் நலன் கருதி இந்தப்பதிவுங்க.



                 திருமணம் செய்து கொள்வதே மனித இன சந்தோசத்திற்காகவும்" குடும்ப உறவு மேம்பாட்டிற்காகவும்தாங்க. 
     மணமுறிவு செய்து கொள்வதற்காக யாரும் மணம் செய்து கொள்வதில்லை. ஒரு விசயம் அல்லது வேலை சிறப்பாக அமைய நாம் நேரத்தை ஒதுக்கி நிறைய முயற்சி செய்கிறோம். அதுபோலவே திருமண வாழ்க்கையும். மண வாழ்க்கை பந்தம் தொடர்ந்திருக்க தம்பதிகள் பரஸ்பரம் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதற்காக நேரத்தை ஒதுக்கி கொள்ள வேண்டும்.  
        திருமண வாழ்க்கை எல்லாவற்றிலும் ஏற்றத் தாழ்வுகள் இருக்கவே செய்கின்றன. வெளியிலிருந்து பார்த்தால், இருவரும் இணை பிரியா தம்பதிகளாக தெரிவர். ஆனால் அவர்களுக்குள் எத்தனையோ கசப்புகள் இருக்கலாம். இவற்றை களைந்து உள்ளும் புறமும் இணை பிரியாமல் இருப்பதற்கு அந்த தம்பதிகள் சேர்ந்து செயலாற்ற வேண்டும்.    
                    எனவே புதிதாக திருமணம் செய்து கொண்டவர்களே, மற்றும் விவாகரத்து கோருவதற்காக  நீதிமன்றத்தில் வழக்கிட சிந்தித்து கொண்டிருக்கும் தம்பதிகளே, பிறப்பின் போதே இறப்பும் நிச்சயிக்கப்பட்டு விடுகிறது.இந்த இடைப்பட்ட காலத்தில் இனிய இல்லற வாழ்க்கை அமைத்து அனுசரித்து வாழ சில ஆலோசனைகளை இங்கு பதிவிட்டுள்ளேன். கடைப்பிடிக்க முயற்சியுங்கள்.
                     இதோ அந்த ஆலோசனைகள் ....

                  1. உங்கள் இல்வாழ்க்கை துணையை கலந்து ஆலோசித்தே எந்த செயலையும்  செய்யுங்கள். அவர் கூறும் கருத்தை கூர்ந்து கேளுங்கள்.

                   2.   வாழ்க்கையில்  தவறுகள் நிகழ்வது மனித இயல்பு என்பதை இருவரும்ஏற்றுக் கொள்ளுங்கள். அந்த தவறுகளில் இருந்து சரியானதை அறிந்து கொள்ளுங்கள். ஒருமுறை செய்த தவறை மீண்டும் செய்யாதீர்கள்.

                3. ஆணும் பெண்ணும் வேறுபட்டவர்கள், மாறுபட்ட உணர்ச்சி கொண்டவர்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

              4. உங்கள் துணையிடம் எந்த ஒரு விசயத்தையும்  மனம் விட்டுப் பேசுங்கள், கேளுங்கள், கற்றுக் கொள்ளுங்கள்.

              5. மண வாழ்க்கைக்கு புறம்பான தொடர்புகளை கை விடுங்கள்.

             6. ஏற்பட்ட பிரச்சனை தீராமல் இருந்தாலும், இரவில் தனித்தனி படுக்கைகளில் படுக்காதீர்கள். படுப்பதற்கு முன் அப்பிரச்சனையை தீர்க்க ஏதேனும் வழிகளை கண்டுபிடிக்க முயலுங்கள்.

              7. உங்களை பற்றியே பேசிக் கொண்டிருக்க வேண்டாம். அது உங்கள் துணையை சலிப்படைய செய்து விடும்.

             8. சிறு சிறு கேலியும் கிண்டலும் இருக்கலாம். ஆனால் அதுவே புண்படுத்தும்  வன்மமாக மாறி விடக்கூடாது.

                  9. ஒருவருக்கொருவர் நல்ல நண்பர்களாகவும், அன்பான காதலர்களாகவும் இருங்கள்.

                10. உங்கள் துணையின் நண்பர்களை உங்கள் துணையை அருகில் வைத்து கொண்டு குறை கூறாதீர்கள். குறிப்பாக உங்கள் நண்பர்களின் முன்னிலையில் உங்கள் துணையை குறை கூறாதீர்கள்.

                11. உங்கள் துணையின் பெற்றோர்களை இழிவு படுத்தாதீர்கள் அல்லது குறை கூறாதீர்கள்.

                12. கொடுத்து, பெற்று கொள்ளுங்கள்.

               13. . ஆசையும், காதலும் கொண்டு ஒருவரை ஒருவர் உள்ளன்புடன் அணுகுங்கள்.

               14. அதிகாரத்தோடு செயல்படாதீர்,கட்டுப்பாடு தேவை.

              15. உங்கள் துணையர் சோர்ந்திருக்கும் போது அவரை உற்சாகப்படுத்துங்கள், ஊக்கப்படுத்துங்கள், நம்பிக்கை கொடுங்கள். மாறாக அவரது சோர்வை அதிகப்படுத்தி விட வேண்டாம்.

                 16. உங்கள் தோற்றத்தை பொலிவாக வைத்திருங்கள். ஆரோக்கியம் பேணுங்கள். அழகு படுத்திக் கொள்ளுங்கள். அழுது வடியாதீர்கள்.

                17. ஒருவருக்கொருவர் நேர்மையுடன் நடந்து கொள்ளுங்கள்.

                  18. சமாதானம்தான் தீர்வு என்பதை உணருங்கள்.

                  19. மன்னிக்க கற்றுக் கொள்ளுங்கள்.

                 20. எதையாவது கடனாக பெற விரும்பினால், அது பற்றி உங்கள் துணையிடம் கேளுங்கள்.

                 21. உங்களது எல்லா தகவல்களையும் உங்கள் துணையிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

               22. நீங்கள் உங்கள் துணையரை அதிகம் நேசிப்பதாக அவரிடம் அடிக்கடி கூறிக்கொண்டே இருங்கள்.

                23. ஒருவருக்கொருவர் பாராட்ட பழகுங்கள். உள்அன்போடு வாழ்த்துகளை சொல்லி மகிழுங்கள்.

               24. சுகத்திலும், துக்கத்திலும் பங்கு கொள்ளுங்கள். குறிப்பாக துக்கத்தின் போது ஆறுதல் கூறி ஆதரவாக இருங்கள்.

                25. பொறுப்புகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
              26. ஒருவருக்கொருவர் நன்றி மறவாதீர்.

                 27. உங்கள் துணையை ஒருபோதும் ஏமாற்ற முயலாதீர்கள்.

               28. விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை அவசியம் வளர்த்துக்கொள்ளுங்கள்.

              29. இயன்ற அளவு உங்கள் துணையை திருப்திபடுத்துங்கள். இயலாத நிலைக்கு வருத்தம் தெரிவியுங்கள்.

                30. சகித்து கொள்ளுங்கள்.

                           31. சச்சரவுகளை கலந்து பேசி தீருங்கள். குறிப்பாக கணவன் எச்சமயத்திலும் மனைவியிடம் வன்முறையை கையாளக் கூடாது.

                32. சேர்ந்து வாழ்ந்து இன்பம் காண்பதே இல்வாழ்க்கை என்பதை அடிக்கடி நினைவு படுத்தி கொள்ளுங்கள்.



                          நன்றிங்க
மரியாதைக்குரிய நிகழ்காலத்தில் சிவா அவர்களுக்கு

எண்ணெய்க்குளியல் ஒரு அலசல்.



     மரியாதைக்குரிய நண்பர்களே,வணக்கம்.
          கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.உடலுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பதன் அவசியம் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.         

       கடுமையான வேலை, மன இறுக்கத்திற்குப் பிறகு, நம்ம உடம்பை அமைதி நிலைக்குக் கொண்டு வர ஒரு சிறந்த தீர்வு, எண்ணெய் தேய்த்துக் குளிப்பதுதான்.
       எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது, வெயிலில் காயணும்; தண்ணீர் காயணும்; சீயக்காய் வெந்நீரில் கரைத்து வெதுவெதுப்பாக இருக்கணும்.சூரிய வெளிச்சம் வர்றதுக்கு முன்னாடியே, எண்ணெய்க் குளியல் எடுக்கக் கூடாது. சூடான எண்ணெயின் வீரியத்தால், உடம்பின் உட்புற குழாய்களில் உள்ள, அழுக்குகள் நெகிழும்.

           வெந்நீரை உடம்பில் ஊற்றும் போது, உடம்பின் உட்புறக் குழாய்களில் உள்ள அழுக்குகள் கரைந்து, மலம், சிறுநீர், வியர்வை போன்ற கழிவுகளின்மூலமாக, வெளியேறத் தொடங்கும். 
        இரும்புக் கரண்டியில் நல்லெண்ணெயுடன், மிளகு, சீரகம் போட்டு பொரித்து, அந்த மிளகு, சீரகத்தை, அப்படியே வாயில் போட்டு மென்று கொண்டு கூடவே, எண்ணெய் இளஞ்சூட்டில் உள்ளபோதே உடம்பில் தேய்க்கணும்.
        இரும்புடன் எண்ணெய் சேரும் போது, நரம்புகளை வலுப்படுத்தும் தன்மை அதிகரிக்கும். உச்சி முதல் பாதம் வரை, எண்ணெயை ஊற வைத்து, 20 நிமிடம் வரை, மசாஜ் பண்ணலாம். அதிகபட்சம், 45 நிமிடங்கள் வரைஎண்ணெய் ஊறலாம். 
      எண்ணெய் தேய்க்கும் போது, மேலிருந்து கீழாக தேய்ப்பதே சரியான முறை. சில பேருக்கு வயிற்றில், வாயுத் தொல்லை இருக்கும். அவர்கள் வலது பகுதியில் இருந்து, இடது பகுதிக்கு உருட்டி உருட்டி, தேய்க்க சரியாகும்.
               இடுப்பு வலி இருந்தால், விளக்கெண்ணெய் சூடு பண்ணி, அந்தப் பகுதியில் தேய்த்துக் குளிக்கலாம். மலச் சிக்கலும் போகும்.தலையில் நல்லெண்ணெயை அரக்கித் தேய்க்கும் போது, மூளை நரம்புகள் வலுப் பெறும். மூளையில் உள்ள ஹைபோதாலமஸ், பிட்யூட்டரி கிளாண்ட் சரியாய் இயங்கும். பிட்யூட்டரி சீராய் இயங்க, உடம்பில் அத்தனை சுரப்பிகளும் சீராகும்.

          ஆனால், முடி கொட்டும் நிலை உள்ளவர்கள் தலையை அரக்கித் தேய்க்கக் கூடாது. அது முடி உதிர்தலை மேலும் அதிகரிக்கும். அவர்கள் எண்ணெயை பஞ்சில் ஊறவைத்து உச்சந்தலையில் வைக்க, எண்ணெயோட வீரியம் அப்படியே தலையில் இறங்கும். அதுவே அவர்களுக்கு போதுமானது.

        பெண்கள் கவனிக்கவும் மாதவிடாய் காலங்களில், உடம்பில் ஏகப்பட்ட ஹார்மோன்ஸ் மாற்றங்கள் இருக்கும். அன்று, எண்ணெய் குளியல் கூடவே கூடாது.  
     எப்போதும் குளித்த பிறகு, தலைக்கு எண்ணெய் தடவக் கூடாது. அப்படி தடவினால், கை, கால் வலி வர வாய்ப்புண்டு.
                  திருமிகு. சுவாமிநாதன் அவர்கள்,
             ஆயுர்வேத மருத்துவர்,
   ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி ஆயூர்வேத கல்லூரி டீன்,  
     (தினமலர் 13/01/2013 நாளிதழில்  கொடுத்த தகவல்.)
                    வணக்கத்துடன் 
                          கூடிய
                     நன்றிகளுடன்,
             தாளவாடி பரமேஸ் டிரைவர் 
                 சத்தியமங்கலம்

தண்டுவடம் பிரச்சினைகள்




     மரியாதைக்குரிய நண்பர்களே,
            வணக்கம். இந்த வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.இந்தப்பதிவில்
தண்டுவடத்தில் ஏற்படும் பிரச்சனைகளும் தீர்வுகளும் பற்றி காண்போம்.

          வாகன விபத்தில் இறப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது என்கிறது ஆய்வு. மோசமாக பராமரிக்கப்படும் சாலைகளும், தரமாகப் பராமரிக்கப்படாத வாகனங்களுமே இதற்குக் காரணம் என்றும் விவரிக்கப்படுகிறது. இதனால் ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய முதுமைக்கு முன்னரே கழுத்து, மார்பு, இடுப்பு மற்றும் மூளை பகுதிகளில் பாதிப்பை வரவழைத்துக்கொள்கிறான்.
           மூளையும், தண்டுவடமும் இறைவன் நமக்களித்த கொடை என்றே சொல்லவேண்டும். தண்டுவடத்தைப் பொருத்தவரை, அதனை மூன்று பகுதிகளாக பிரித்து வைத்திருக்கிறோம். கழுத்துப் பகுதி தண்டுவடம், இடுப்பு பகுதி தண்டு வடம் மற்றும் மார்புப் பகுதி தண்டுவடம் என்று மூன்று பிரிவாக பிரித்து வைத்திருக்கிறோம். தண்டுவடத்தில் உள்ள எலும்புகளுக்கிடையே டிஸ்க் என்றழைக்கப்படும் மெத்தைபோன்ற பகுதி உள் ளது. இதன் பயன்பாடு மிக முக்கியமானது. விபத்தின்போது குறிப்பிட்ட சில எலும்புகள் பாதிப்பிற்குள்ளாகி தண்டுவடத்தின் மீது அழுத்தத்தைக் கொடுக்காமலிருப்பதில் இதன் பங்களிப்பு முக்கியமானது. முதுகெலும்பில் அடிப்பட்டாலும், அது ஏனைய எலும்புகளைப் பாதிக்காதவண்ணம் பாதுகாப்பதிலும் முக்கிய பங்காற்றுகிறது.

இந்த டிஸ்க்கில் ஏதேனும் கோளாறுகள் ஏற்பட்டால் தண்டுவடம் பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக கை, கால் பகுதிகள் பாதிக்கப்பட்டு செயலிழக்கும் நிலை உருவாகிறது. ஒரு சிலருக்கு தண்டுவடத்தைச் சுற்றிலும் ஏற்படும் கிருமித் தொற்றின் மூலமும் தண்டுவடம் பாதிக்கப்படலாம். புற்றுநோயால் கூட தண்டுவடம் பாதிக்கப்பட வாய்ப்புண்டு.
தண்டுவடம் பலவீனமாக இருக்கிறது என்பதையோ அல்லது தண்டுவடம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதையோ எப் படி உணரமுடியும்?
மூளையில் உள்ள அனைத்து நரம்புகளும் தண்டுவடத்தின் வழியாகத்தான் உடலின் மற்ற பாகத்திற்கு எடுத்துச்செல்லப்படு கின்றன. தண்டுவடத்தின் மூலமாக செல்லும் நரம்புகளே நம்மை இயங்க வைக்கும் சக்தியைப் பெற்றிருக்கின்றன. தண்டுவடத்தில் ஏதேனும் ஒரிடத்தில் சிக்கல் என்றால், அப்பகுதியில் உள்ள நரம்புகளின் மூலம் செயல்படும் பகுதிகளில் அதன் பாதிப்பு தெரியவரும். குறிப்பாக அப்பகுதிகளில் உணர்ச்சி குறைவாக இருக்கும். சிறுநீர் கழிப்பதிலோ அல்லது மலம் கழிப்பதிலோ ஏதேனும் சிக்கல்கள் எழும். அதனால் நோயாளியை முழுமையாகப் பரிசோதித்த பின்னரே எப்பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை அறி முடியும்.
உடற்பருமன் மற்றும் முதுமை காரணமாக தண்டுவடம் பாதிக்கப்படுமா?
     கழுத்துப்பகுதி மற்றும் இடுப்புப்பகுதி தண்டுவடம் தேய்மானம் காரணமாக பாதிக்கப்படுவது இயற்கை. ஏனெனில் இவையிரண்டும் அதிகமாக பயன்படுத்தப்படும் உடலுறுப்பு பகுதிகள். கழுத்துப் பகுதியில் உள்ள தண்டுவடத்தில் தேய்மானம் ஏற்பட்டால் கை, கால்கள் செயலிழப்பதற்கான வாய்ப்பு உண்டு.

இடுப்பு பகுதியில் உள்ள தண்டுவடத்தில் சிக்கல்கள் ஏற்பட்டால் கால்களின் செயல்பாட்டைப் பாதிக்கும் வாய்ப்பு இருக்கிறது. முதுமையின் காரணமாகவும், உடலில் கால்சியம் சத்தின் குறைவினாலும் தான் இவை ஏற்படுகிறது. முறையான உடற்பயிற்சி மற்றும் சத்தான உணவு ஆகியவற்றினை ஆரம்ப காலத்தில் இருந்தே தொடர்ந்தால் இதனைத் தவிர்க்க முடியும்.


இருசக்கர வாகனங்களில் பயணிப்பவர்களுக்கு கழுத்துப்பகுதியில் ஏற்படும் பாதிப்புக்கு, அப்பகுதியில் அணியக்கூடிய பட்டை ஒன்றை வழங்கி நிவாரணம் தருகிறார்கள். ஆனால் இதனைத் தொடர்ந்து அணியக்கூடாது என்கிறார்களே ஏன்?
கழுத்துப்பகுதி தண்டுவடத்தில் ஏழு எலும்புகள் உள்ளன. இரு சக்கர வாகனத்தில் உள்ள ஷாக் அப்ஸர்களில் ஏதேனும் குறைபாடு இருந்தாலோ அல்லது கரடுமுரடான பாதைகளில் தொடர்ந்து பயணித்தாலோ கழுத்துப்பகுதியில் உள்ள எலும்புகள் தேய்மானமடைந்து பாதிக்கப்படுகின்றன. இதில் கழுத்தில் உள்ள எலும்புப் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டாலோ அல்லது அதனிடையே உள்ள பாதுகாப்பான பகுதியான  டிஸ்க் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டலோ அதிலிருந்து தற்காலிக நிவாரணம் பெறவே கழுத்துப் பகுதியில் அணியக்கூடிய பட்டையை அதாவது சர்வைகல் காலரை மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். கழுத்துப்பகுதியில் வலி அதிகமாக இருக்கும் போது மட்டுமே இதனை பயன்படுத்தவேண்டும். தொடர்ந்து பயன்படுத்தினால் கழுத்துப் பகுதியில் இயற்கையாக நடைபெறும் செயல்பாடுகளில் சமச்சீரின்மை ஏற்படும்.


இரு சக்கர வாகனங்களில் பயணிக்கும் போது தலை கவசத்தை அவசியம் அணிந்துக் கொள்ளுங்கள். நான்கு சக்கர வாகத்தை ஓட்டும் போது சாரதியும், உடன் பயணிப்பவர்களும் அவசியம் பாதுகாப்பு உறையை அணிந்தகொண்டே பயணிக்கவேண்டும். ஏனெனில் வரும் முன் காப்பதில் கவனம் செலுத்துவது தான் சிறந்தது.


    . இதயம், மூளை மற்றும் முதுகொலும்பிலான தண்டுவடம் ஆகியவற்றிலான எவ்வித நலக்குறைவுகளும் மிக சிக்கலானதாக எண்ணப்படுகின்றன. ஆனால் தண்டுவடத்தில் ஏற்படும் சிதைவால் அல்லது காயத்தால் தொடர்பற்று போகின்ற மூளை அனுப்பும் செய்தி தொடர்புகள் சிறு நரம்பு இழைகளால் தன்னிச்சையாகவே குணமாக்கப்படுகின்ற திறன் நமது உடலில் உள்ளது என்பதை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளது மருத்துவத் துறையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்னலாம்.
மனதில் நினைக்கப்பட்ட ஒரு செயல் நிறைவேற்றப்பட மூளை உடல் உறுப்புகளுக்கு கட்டளையிடுகிறது. இந்த கட்டளை செய்திகள் நரம்பு மண்டலம் மூலம் உடல் உறுப்புகளுக்கு அனுப்பப்படுகிறது. கட்டளைகளை எடுத்துச் செல்லும் நீளமான நரம்பு இழைகள் மற்றும் சிறு நரம்பு இழைகள் நமது இயங்குதிறனில் மிக முக்கிய பங்கு ஆற்றுபவை. குறிப்பாக தண்டுவடப்பகுதியில் அதிக அளவிலான இத்தகைய முக்கிய நரம்பு இழைகள் அமைந்துள்ளன. தண்டுவடத்தில் ஏதாவது சிதைவு ஏற்பட்டுவிட்டால் அது நரம்பு இழைகளை பாதிப்படைய செய்வதோடு நமது இயக்குதிறனிலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.

இவ்வாறு தண்டுவடத்தின் மேலும் கீழுமாக அமைந்துள்ள நரம்புகள் திரும்பபெற முடியாத அளவு முடமாகி போகின்ற காயங்களை கூட கடந்து இயங்க கூடியவை என்று அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மத்திய நரம்பு மண்டலம், மூளைக்கும் நமது இயக்கங்களை கட்டுபடுத்தும் நரம்பு இழைகள் உயிரணுக்களுக்கும் இடையில் சிறிய நரம்பு வழிப்பாதைகளை உருவாக்கி தடைப்பட்ட செய்தித்தொடர்புகளை தானாகவே மாற்றியமைக்கும் திறன் கொண்டது என தெரிய வந்துள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கல்போர்னியா பல்கலைக்கழகத்தில் சோதனை எலிகளின் மீது நடத்தப்பட்ட முடிவுகள் இதனை முதல் முறையாக எடுத்துக்காட்டியுள்ளது. திகைப்புட்டக்கூடிய இந்த கண்டுபிடிப்பு சிதைவுற்ற தண்டுவடத்திற்கு புதிய சிகிச்சை முறைகளுக்கான பாதைகளை திறப்பதோடு, வலிப்பு மற்றும் பலவித நரம்புதசை நோய்களின் காரணத்தையும் அறிய செய்யும். மூளை நடப்பது அல்லது ஓடுவது ஆகியவற்றை கட்டுபடுத்தும் செய்திகளை நீளமான நரம்பு இழைகள் மூலம் அனுப்புகிறது. சாலை அல்லது விளையாட்டு விபத்தில் இந்த நீளமான நரம்பு இழைகள் நசுக்கப்பட்டால் அல்லது காயப்படுத்தப்பட்டால் செய்தி தொடர்புகளுக்கான பாதை தடைபடுகிறது. விளைவு இயக்கம் குறைகிறது அல்லது முடம் ஏற்படுகிறது. பிறப்பிலேயே மூளை அமைக்கப்பட்டுள்ளது என்றும் சிதைவை அல்லது காயத்தை ஏற்கும் திறன் அதற்கு கிடையாது என்றும் இதுவரை எண்ணப்பட்டு வருகிறது. ஆனால் மூளை காயங்களுக்கு தக்க பதிலளித்து தன்து வழிமுறைகளை மாற்றி அமைத்து கொள்ளும் சிறந்த திறன் கொண்டது என இந்த புதிய கண்டுபிடிப்பு எண்பித்துள்ளது என்று இவ்வாய்வை நடத்திய நரம்பியல் நிபுணர் மைக்கிள் சொஃரோனைவ் AFP செய்தியில் தெரிவித்துள்ளார். இதனை விளக்குவதற்காக மூளையிலிருந்து தண்டுவடத்தின் கீழ்ப்பகுதி வரை இருக்கக்கூடிய நீளமான நரம்பு இழைகளையும் அதனோடு அதே வேலையில் உதவி செய்கின்ற சிறு நரம்பு இழைகளையும் ஒப்பிட்டு கூறியுள்ளார். நெடுஞ்சாலைகளில் விபத்து அல்லது வாகன நெரிசல் ஏற்பட்டுவிட்டால் அதிக நேரம் காத்திருப்பதற்கு பதிலாக வாகன ஓட்டுனர்கள் சுற்று அல்லது மாற்றுப்பாதைகளில் புகுந்து கடந்து செல்வதுண்டு. இத்தகையப் பாதைகள் நேரான நெடுஞ்சாலையில் பயணம் செய்வதைவட சிறிது அதிக நேரம் எடுத்தாலும் ஓட்டுனர்கள் சென்று சேர வேண்டிய இடங்களை அடைய உதவுகிறது. அதைபோல தண்டுவடம் என்பது நமது உடலிலான நெடுஞ்சாலை. அதில் ஏதாவது சிதைவு ஏற்பட்டுவிட்டால் இவ்வாறு மேலும் கீழுமாக செல்லக்கூடிய சிறு நரம்பு இழைகள் மாற்றுப்பாதைகளை அமைக்கின்றன. இந்த மாற்றுப்பாதைகள் மூளை அனுப்புகின்ற செய்திகளை முறையாக பெற செய்வதோடு முடமாவதை தடுத்து நம்மை இயங்க செய்ய முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
தண்டுவட சிதைவு பிரச்சனை என்பது நமக்கில்லையே ஏன் நாம் கவலைப்பட வேண்டும் என நினைக்கிறீர்களா? உலக அளவில் தண்டுவடப் பகுதியில் ஏற்படும் சிதைவு முக்கியமான பிரச்சனையாக வளர்ந்து வருகிறது
தண்டுவட பிரச்சனை ஏற்பட்டதென்றால் தன்னிச்சையாக சிறு நரம்பு இழைகள் அதனை குணப்படுத்தும் என பாராமுகமாய் இருந்து விடாதீர்கள். இந்த கண்டுபிடிப்பு மருத்துவ துறைக்கு அதிக சவால்களை கொடுத்து நாம் நலம் பெறும் கால அளவை குறைப்பதை ஏதுவாக்கும். இத்தகைய புதிய கண்டுபிடிப்புகள் நாம் முடமாகி போவோம் என்ற எதிர்மறையான நம்பிக்கைகளை தகர்த்து மறுவாழ்வு பெறக்கூடிய ஆழமான நம்பிக்கைகளை ஏற்படுத்த முடியும்

நன்றிங்க என 
        THALAVADY PARAMES DRIVER 
              SATHYAMANGALAM

            

முனைவர்.இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phil.,Ph.D., அவர்களது வாழ்க்கைக்குறிப்பு... (Dr.R.K.Manikkam, professor,Writer)

                                                                                                        முனைவர். இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phi...