28 செப்டம்பர் 2014

MAKKU Tamil Short Film

மீசை - சமூக விழிப்புணர்வுக்கான குறும்படம்

எண்ணெய் புரோட்டா


மரியாதைக்குரியவர்களே,
                       வணக்கம்.விருதுநகரில் எண்ணெய் புரோட்டா செய்யும் முறை பற்றி இப்போ பாருங்க........
விருதுநகர் 'எண்ணெய்’ பரோட்டா
பரோட்டாவுக்கு பேர் போனது விருதுநகர். காரணம், எண்ணெயில் பொரித்து எடுத்த முறுக்கு போல கிரிஸ்பியாக இருப்பதுதான். விருதுநகரில் பரோட்டாவுக்கு பேர் சொல்லும் கடையான 'பிரின்ஸ் ஹோட்டல்’ உரிமையாளர் கணேசன் எண்ணெய் பரோட்டா செய்முறை பற்றி நமக்காக விளக்குகிறார்.
தேவையானவை: மைதா மாவு - ஒரு கிலோ, தண்ணீர் - 450 மில்லி, கடலை எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மைதா மாவை மலை போல் குவித்து, நடுவில் ஆழமான குழி தோண்டிக் கொள்ளுங்கள். இதில் 450 மில்லி தண்ணீர், 100 கிராம் கடலை எண்ணெய், உப்பு சேர்த்துக்கொள்ள வேண்டும். இவை அத்தனையையும் கலக்குமாறு மாவை மெதுவாக பிசைய வேண்டும். பிசையும்போது மைதா மாவு திரள் திரளாகத்தான் வரும். அதனால் மாவு நைஸாக ஆக, மாவை கையால் அடித்து, அடித்து பிசைய வேண்டும். எவ்வளவு நைஸாக பிசைகிறோமோ அந்த அளவுக்கு பரோட்டா 'சாஃப்டாக’ இருக்கும்.

பிசைந்த நைசான மாவை பெரிய உருண்டையாக உருட்டி வைத்துக் கொள்ளுங்கள். இது வறண்டு போய்விடாமல் இருக்க, மேலே எண்ணெய் தேய்த்த அல்லது தண்ணீரில் நனைத்த துணியை வைத்து மாவை மூடி வைத்துவிடுங்கள். அரை மணி நேரம் மாவு இப்படியே ஊற வேண்டும். பிறகு, பிசைந்த மாவின் மேல் இருக்கும் துணியை எடுத்துவிட்டு, சின்னச் சின்ன உருண்டைகளாக பிரித்து, அவற்றின் மீது கொஞ்சம் எண்ணெயை தடவி அப்படியே வைத்துவிடுங்கள். பிறகு ஒவ்வொரு உருண்டை யாக எடுத்து உள்ளங்கையில் வைத்து, உளுந்த வடையை தட்டுவது தட்டி, மேஜை மீது வைத்து சப்பாத்தி போல வட்டமாக தேய்த்துக் கொள்ளுங்கள்.
இனி, தேய்த்து வைத்த பரோட்டாவை வீசி வீசி பெரிதாக்க வேண்டும். பெரிதான மாவை ஒரு பக்கத்தில் பிடித்துக் கொண்டு முறுக்கு வடிவத்துக்கு சுற்றி வைக்க வேண்டும். பின்பு மாவின் மேல் ஒரு தட்டு தட்டி, வாணலியில் தேவையான அளவு கடலை எண்ணெய் ஊற்றி, மிதமான தீயில் ஐந்து நிமிடம் வைத்து பொரித்தெடுக்க வேண்டும். பின்பு, எண்ணெயை வடிகட்டினால்... உங்கள் மனதை தொடும் மொறுமொறு எண்ணெய் பரோட்டா தயார்.
குறிப்பு: சாதா பரோட்டாவுக்கு தண்ணீர் அதிகம் சேர்க்க வேண்டும். ஆனால், எண்ணெய் பரோட்டாவுக்கு தண்ணீர் குறைவாகத்தான் சேர்க்க வேண்டும். அப்போதுதான் பரோட்டா அதிகம் எண்ணெய் குடிக்காமல் மிருதுவாக, மொறுமொறு என்று இருக்கும். இதற்கு சிக்கன் சாப்ஸ் சரியான சைட் டிஷ்.
------------------------------------------------------------------------------------------
சைதாப்பேட்டை வடைகறி
சென்னையைப் பொறுத்தவரை சைதாப்பேட்டை 'வடை கறி’ ரொம்ப ஃபேமஸ். 65 ஆண்டுகாலமாக வடைகறிக்கு புகழ்பெற்றது... சைதாப்பேட்டை 'மாரி ஹோட்டல்’. இங்கே, உங்களுக்காக 'வடை கறி' சீக்ரெட் பகிர்கிறார் கடையின் உரிமையாளர் குமரன்.
ஐந்து பேருக்கு வடைகறி செய்ய... தேவையானவை: கடலைப்பருப்பு (அ) பட்டாணிப் பருப்பு - அரை கிலோ, இஞ்சி - 50 கிராம், பச்சை மிளகாய் - 50 கிராம், பூண்டு - 100 கிராம், ஏலக்காய் - 5, கிராம்பு - 5, பட்டை, லவங்கம் - 25 கிராம், சோம்பு - 50 கிராம், மஞ்சள்தூள் - 10 கிராம், தனியாத்தூள் - 50 கிராம், மிளகாய்ப்பொடி - 50 கிராம், உப்பு - தேவையான அளவு, பெரிய வெங்காயம் - அரை கிலோ, புதினா - ஒரு கட்டு.
செய்முறை: கடலைப்பருப்பு / பட்டாணி பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து, வடைக்கு அரைப்பதுபோல் கெட்டியாக அரைத்துக் கொள்ளுங்கள். கனமான சட்டியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி, கடலைப்பருப்பு விழுதை பக்கோடா போல பொரித்து எடுங்கள். பின்பு, இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளுங்கள். ஏலக்காய், கிராம்பு, பட்டை, லவங்கம், சோம்பு ஆகியவற்றை மிக்ஸியில் பொடி செய்து, இஞ்சி - பூண்டு பேஸ்ட்டுடன் கலந்துகொள்ளுங்கள். கடாயில் எண்ணெய் விட்டு, நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து, பொன்னிறமாக வதக்கி வைத்துக் கொள்ளுங்கள். அதே எண்ணெயில் இஞ்சி - பூண்டு விழுது, பட்டை - சோம்பு பொடி கலவையை வதக்கி, தேவையான தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடுங்கள். ஒரு கொதி வந்ததும், வதக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். நன்றாக கொதித்ததும், பொரித்து வைத்துள்ள கடலைப்பருப்பு பகோடாக்களை சேர்த்து, அரை மணி நேரம் கொதிக்கவிடுங்கள். புதினா தூவி, இறக்குங்கள்.
இட்லி, தோசை, பூரி ஆகியவற்றுக்கு ஏற்ற சைட் டிஷ் இது.

----------------------------------------------------------------------
காரைக்குடி வெண்டைக்காய் மண்டி
செட்டிநாட்டு ரெசிபிகளில்... இந்த மண்டி மணம் பரவாமல் இருக்காது.. பரம்பரை சமையல் கலைஞர் குடும்பத்தில் இருந்து வந்திருக்கும் ராமசந்திரன் நமக்காக வெண்டைக்காய் மண்டி ரெசிபியை இங்கே தருகிறார்.
தேவையானவை: வெண்டைக்காய் - கால் கிலோ, வெள்ளை மொச்சை - 150 கிராம், பழைய புளி - 50 கிராம், மாங்காய் - ஒன்று, சின்ன வெங்காயம் - 100 கிராம், தக்காளி - 100 கிராம், பச்சை மிளகாய் - 100 கிராம், பெருங்காயம் - சிறிதளவு, கடுகு - 2 டீஸ்பூன், வெந்தயம் - அரை டீஸ்பூன் உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், நல்லெண்ணெய் - 100 மில்லி, பூண்டு - 50 கிராம், காய்ந்த மிளகாய் - 5, மஞ்சள்தூள், தனியாத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, உப்பு - தேவையானஅளவு.
செய்முறை: முந்தைய நாள் இரவே மொச்சையை ஊற வைத்து, அடுத்த நாள் தண்ணீரை வடித்துவிடுங்கள். குக்கரில் மொச்சை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி ஒரு விசில் வரும் வரை வேகவிடுங்கள். பழைய புளியில் தண்ணீர் ஊற்றி ஊற வைத்து ஒரு கப்பில் கரைத்துக் கொள்ளுங்கள். வெண்டைக்காயை புளிக்குழம்புக்கு போடுவது போன்ற நீளத்துக்கு வெட்டி, வாணலியில் போட்டு எண்ணெய் விடாமல் வதக்கி தனியாக வைத்துக் கொள்ளுங்கள். அதே வாணலியில் 50 மில்லி நல்லெண்ணெய்யை ஊற்றி... கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், பெருங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துத் தாளியுங்கள். இதில் நறுக்கிய சின்ன வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் போட்டு மிதமான சூட்டில் வதக்க வேண்டும். ஓரளவு வதங்கும்போதே மஞ்சள்தூள், தனியாத்தூள், உப்பு, பூண்டு சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். இத்துடன் கரைத்து வைத்த புளித் தண்ணீர், வதக்கிய வெண்டைக்காய் மற்றும் வேக வைத்த மொச்சையை சேர்த்து 15 முதல் 20 நிமிடம் வரை கொதிக்க வைத்து இறக்கினால்... வெண்டைக்காய் மண்டி ரெடி. மேலும் புளிப்புக்காக மாங்காயையும் நறுக்கி இதோடு சேர்த்துக் கொள்ளலாம். மொச்சை பிடிக்காதவர்கள், வெள்ளை கொண்டைக்கடலையை பயன்படுத்திக்கொள்ளலாம்.
நன்றி :-http://pettagum.blogspot.sg/
Baskar Jayaraman-ன் படம்.
Baskar Jayaraman-ன் படம்.
Baskar Jayaraman-ன் படம்.
LikeLike · · பகிர்

சொரியாசிஸ் நோய் மருத்துவக்குறிப்பு.

மரியாதைக்குரியவர்களே,
                   வணக்கம். சொரியாசிஸ் என்னும் தோல் நோய் பற்றிய மருத்துவக்குறிப்பு படியுங்க.........


சோரியாஸிஸ் டிப்ஸ்
மழைக்காலத்தில் சளி இருமல் மட்டுமல்ல, சில தோல் நோய்களும்
அதிகம் வாட்டும். குறிப்பாக சோரியாஸிஸ் எனும் தோல் நோய்
சிலருக்கு மழைக்காலத்தில் அதிகம் துன்பம் தரும். நன்கு குணமாகி,
அப்பாடா ஒருவழியாய் ஓய்ந்து விட்டது சோரியாஸிஸ் என பெருமூச்சு
விடுகையில், மடமடவென மீண்டும் தலைதூக்கும் இந்த நோய், சிலருக்கு
குளிர்காலத்தில்/ பனிக்காலத்தில் பெரும் தொல்லை தருவதுண்டு.
அவர்கள் இப்பருவத்தில் நோய் இல்லையென்றாலும் முன்பு வந்து போன
இடங்களில் சித்த மருத்துவ தைலங்களைப் பூசுவதும், உணவில் புளிப்பை
அறவே தவிர்ப்பதும் நல்லது. மீன், நண்டு, கோழிக்கறி-போன்றவற்றை
மழைக்காலத்தில் சோரியாஸிஸ் நோய் உள்ளவர்கள் தவிர்ப்பதும்
நல்லதே. ஆனால், நல்ல உடலினருக்கு மழைக்காலத்தில் புளிப்பு நல்லது.

சோரியாஸிஸ் குணமாக:
சோரியாஸிஸ் எனப்படும் ஒரு வகை தோல் நோய் ரத்தம், எலும்பு போன்றவற்றின் சீர்கேடால் நமது சருமத்தைப் பாதிக்கும். இதற்கு இன்றைய நவீன மருத்துவம்கூட முறையான மருந்துகள் இன்றி தவித்து வருகிறது. ஆனால் சித்தர்கள் அருளிய சித்த மருத்துவத்தில் ஏராளமான மருந்துகள் இந் நோயை முற்றிலும் குணப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் அகத்தி "சோரியாஸிஸ்' எனப்படும் தோல் நோய்க்கு மிகச் சிறந்த பலன் தருவதாக சொல்லக் கேட்டிருக்கிறேன்.
அகத்திக்கீரை, தேங்காய் பத்தை வகைக்கு 100 கிராம்; சீரகம், கஸ்தூரிமஞ்சள் வகைக்கு 100 கிராம் இவற்றை நீர் சேர்த்து விழுதாய், அதாவது துவையல்போல் அரைத்து, பாதிக்கப்பட்ட பகுதி முழுவதும் தேய்த்துக் குளித்துவர, தோல் நோய்கள் அனைத்தும் விலகும். "சோரியாஸிஸ்' எனப்படும் தோல் நோய்க்கு முறையாக உள்மருந்து எடுத்துக் கொண்டு, இதனை வெளிப்பூச்சாய் பயன் படுத்தி வர, நோயிலிருந்து விரைவில் மீண்டு விடலாம்.

சோரியாஸிஸ் எளிய மருத்துவம்
கார்போக அரிசி-50கிராம்
வெள்ளை மிளகு-10கிராம்
பரங்கி பட்டை சூரணம்-25கிராம்
வேப்பில்லை பொடி-50கிராம்
அனைத்தையும் பொடியாக்கி ஒன்றாக சேர்த்து காலை இரவு சிறிது(கேப்சூல்)அளவு சாப்பிடவும்.

தனியாக திரிபலா சூரணம் சாப்பாட்டிற்கு முன் தேனில் கலந்து சாப்பிடவும்.
சோரியாசிஸ் குணமாகும்
சோரியாசிஸ் என்னும் கடுமையான தோல் வியாதி மற்றும் மஞ்சள்காமாலை நோயாளிகள் குணமாக 15 மிளகைப் பொடியாக்கி, இரண்டு தேக்கரண்டி கற்கண்டு சேர்த்து ஒன்றரை டம்ளர் தண்ணீரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் அருந்தவும். பத்து நாட்கள் இதே முறையில் அருந்திப் பிறகு அடுத்த ஐந்து நாட்கள் இந்தக் கலவையில் 5 பாதம் பருப்பையும் ஊறவைத்துச் சேர்த்து அரைத்து அருந்தவும். இந்த மருத்துவம் மிகவும் சக்தி வாய்ந்தது. முதல் பதினைந்து நாட்களில் ஓரளவுதான் குணமாகி இருந்தால், அடுத்து பத்துநாட்கள் இடைவெளிவிட்டு மீண்டும் 15 நாட்கள் இதே முறையில் அருந்தி வரவும். இதனால் கல்லீரல் பலம் பெறும்

சோரியாசிஸ் 
சில உடல் ஆரோக்கிய வழி முறைகள்:
 

           சோரியாசிஸ் இருப்பவர்களுக்கு இது நிச்சயமாக உதவும் என்பதால் இதை பற்றிய சில உடல் ஆரோக்கிய வழிமுறைகளை பற்றி பார்ப்போம்.இந்த அலர்ஜியை பொறுத்தவரை மன அழுத்தம் மற்றும் உணவு ஆகியவற்றை முக்கியமாக பார்க்க வேண்டும்.

முதலில் நாம் என்ன செய்கின்றோமோ இல்லையோ ஒரு நாளைக்கு குறைந்தது ஆறு மணிநேரம் முதல் எட்டு மணி நேரம் வரை உறங்குவதிலேயே பாதி ஆரோக்கியம் நமக்கு கிடைத்து விடும்.அடுத்ததாக காலையில் எழுந்தவுடன் அரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.ஆனால் நாம் யாரும் அதிகமாக தண்ணீர் குடித்து நம்முடைய வயிற்றை சுத்தமாக வைத்து கொள்வதில்லை.நாம் எப்படி வகை வகையாக சாப்பிட்டு விட்டு அடுத்த முறை சாப்பிடுவதற்கு தட்டினை கழுவிகின்றோமோ அது போலவே தான் நம்முடைய வயிறும்.முதல் நாள் நாம் சாப்பிட்ட உணவுடன் கலந்தே அடுத்த நாளைக்கான உணவு ஜீரணிக்க படுகின்றது.காலையில் நமக்கு தண்ணீர் தாகம் இருக்காது.முதன் முதலாக குடிக்கும் போது ஒரு மாதிரி இருக்கும்.ஆனால் போக போக சரி ஆகிவிடும். தண்ணீர் குடிக்க பழகி கொண்டால் அதன் பின்னர் உங்களுக்கே சில உடல் ஆரோக்கிய மாற்றம் தெரிய வரும்.
அடுத்ததாக யோகா.சில அறிவாளிகள் யோகாவையும் உடற்பயிற்சியையும் சேர்ந்து செய்வர்.

யோகா என்பது உடற் சக்தியை சேர்ப்பது.உடற் பயிற்சி என்பது சேர்த்து வைத்ததை வீணாக்குவது.

       இந்த இரண்டும் சேர்ந்து செய்தால் பளு தாங்காமல் ஸ்ப்ரிங் அறுந்த கதை தான்.அதனால் இதில் எதாவது ஒன்றை மட்டுமே செய்ய வேண்டும்.
காலையில் யோகா செய்தவுடன் மூலிகை சாறு குடிக்க பழக வேண்டும்.கற்றாழை (சதை பகுதியை மட்டும் எடுத்து கொள்ளலாம்.தோலில் மட்டுமே கசப்பு தன்மை இருக்கும்),வேப்பங் கொழுந்து(சிறிது சேர்த்தல் போதும்),துளசி (சற்று அதிகமாக சேர்த்து கொள்ள வேண்டும் ஏன் என்றால் வேப்பிலை கசப்பு தன்மையை குறைக்க உதவும்.அதை விட பல மருத்துவ குணங்களை கொண்டதும் கூட ),அருகம் புல்.(நம்முடைய உடம்பை ரத்தத்தை சுத்தமாக வைத்து கொள்ளும்).
அடுத்தாக யோகா செய்ய வேண்டிய நேரங்கள் என்று பார்த்தால் காலை சூரிய வெளிச்சம் நம் மீது பட தொடங்கி அது நமக்கு சுடுவதாக உணரும் வரை(அதற்காக சூரிய வெளிச்சம் எனக்கு சுடவில்லை என்று நண்பகல் வரை உட்கார்ந்து இருக்க கூடாது).மாலையில் அது போலவே சூரியன் சூடு குறைந்த பின் மாலை வெயில் முதல் மறையும் வரை இருக்கும் நேரத்தினை எடுத்து கொள்ளலாம்.சோரியாசிஸ் உள்ளவர்கள் சுடும் சூரிய வெளிச்சத்தை தவிர்ப்பது நல்லது.காலை மாலை வெயில் வெயிலில் நன்றாக செல்லலாம்.முடிந்த வரை தவிர்த்தால் சோரியாசிஸ் கூடுவதை தவிர்க்கலாம்
சோரியாசிஸ் - குணமாக ஒரு விடிவு காலம் :
 

முன்குறிப்பு :
சோரியாசிஸ் உள்ளவர்கள் உங்கள் வீட்டில் பெட்டி பெட்டியாக அடுக்கி வைத்து இருக்கும் மருந்துகளை முதலில் குப்பையில் போட்டு விட்டு வந்து இந்த மருந்தினை உபயோகிக்க வாருங்கள்.

சோரியாசிஸ் குணமாக:
சோரியாசிஸ் குணமாக சித்தாவிலும் ஹோமியோபதியிலும்(உட்பிரிவு மலர் மருந்து)மருந்து உண்டு.சித்தாவில் பார்த்தால் அது உடல் சம்பந்தபட்டது.ஆனால் ஹோமியோபதியை எடுத்து கொண்டால் அது மன சம்பந்தபட்டது.அதனால் நாம் உடலுக்கு மருந்து கொடுக்கும் சித்தா எடுத்து கொள்வோம்.

          சரி இனி சோரியாசிஸ் குணப்படுத்துவதற்கான மருந்து என்னவென்றால் "வெட்பாலை" -(Holarrhena Antidysenterica).இதனை வட்டார மொழிகளில் 'வெம்பாலை' என்று கூறுவர்.இந்த மருந்தினை பற்றி கூறும் முன் சில விசயங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.நான் இந்த மருந்தினை தைரியமாக பரிந்துரைப்பதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.
என்னடைய தோழி ஒருத்திக்கு சோரியாசிஸ் வந்து அவளுக்கு தலையில் இருந்து ஆரம்பித்து தற்போது நான் யூகித்தபடி அவளுக்கு இடுப்பு வரை வந்து இருக்க வேண்டும்.ஆனால் அவளை
ஒரு இரண்டு மாதங்கள் கடந்து அவளை பார்த்தேன்.எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.ஏன் என்றால் அவளுக்கு சோரியாசிஸ் முற்றிலுமாக மறைந்து போய் தழும்பு கூட தெரியவில்லை.அவள் இந்த மருந்தை பற்றி கூறினாள்.அடுத்ததாக என்னுடைய சித்தா மருத்துவ நண்பர் நான் இந்த மருந்தை பற்றி அவரிடம் கூறிய போது அவருடைய மருந்துகளில் வெட்பாலையின் இலைகளை கொண்டு தான் மருந்து தயாரித்து வந்து கொண்டு இருக்கின்றார் என்பதை தெரிந்து கொண்டேன்.அவர் இந்த வெட்பாலை உட்பொருளாக கொண்டு சோரியாசிஸ்சிற்காக மருந்து தயாரித்து இதுவரை அவர்களிடம் சென்றவர்கள் மீண்டும் சோரியாசிஸ் வந்ததாக யாரும் இல்லை என்பதை கூறினார்.சரி இனி இந்த வெட்பாலையை எப்படி பயன்படுத்தவது என்பதை பற்றி பார்க்கலாம்.

வெட்பாலை -(Holarrhena Antidysenterica):
முதலில் தூய்மையான தேங்காய் எண்ணெய்யில் வெட்பாலையின் கொழுந்து ( நுனி பகுதி ) அதை ஒடித்து பார்த்தால் அதில் பால் வடியும்.அந்த பாலினை சேகரித்து தேங்காய் எண்ணையில் கலந்து வெயிலில் வைக்க வேண்டும்.இதில் கால் லிட்டர் தேங்காய் எண்ணெயில் இரண்டு ஸ்பூன் வெட்பாலையின் பாலை கலக்க வேண்டும்.அது சிறிது நேரம் கழித்து கத்திரிகாய் நிறத்தில்(purple color)அந்த எண்ணெய் மாறும் வரை வைக்க வேண்டும்.அப்படி நிறம் மாறாமல் இருந்தால் இன்னும் சிறிது நேரம் அதை வைத்து இருக்க வேண்டும்.கண்டிப்பாக மாறி விடும்.இதனை நன்றாக உடம்பில் பூசி செதில்களில் நனையும்படி தேய்த்து கொள்ளவும்.தினமும் இதனை தேய்த்து வந்தாலே போதுமானது.
எப்போதும் இந்த எண்ணெய் உங்கள் உடம்பில் சிறிது அளவு இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும்.தலைக்கும் இந்த எண்ணெய் தேய்த்து சீகக்காய் தேய்த்து குளித்து விட்டு மீண்டும் இதே எண்ணெய் தேய்த்து கொள்ள வேண்டும்.இது பொதுவாக சித்தா மூலிகை தோட்டத்தில் கிடைக்கும்.அப்படி கிடைக்காவிட்டால் எதாவது ஒரு சித்த மருத்துவரிடம் கேட்டால் அவர் கூறிவிடுவார்.மதுரையில் இருந்து மேலூர் செல்லும் வழியில் உள்ள யானைமலையின் உச்சியில் இந்த செடி அடர்ந்து கிடக்கும்.அது போக இதே எண்ணையை எந்த ஒரு வெட்டு காயமோ அல்லது தோல் சம்பந்தபட்ட அனைத்திற்கும் இதே எண்ணையை உபயோகபடுத்தலாம்.
அடுத்ததாக உணவு முறை :
உணவு முறையை பொறுத்த வரை நீங்கள் கீழே உள்ளதை மட்டும் மனதில் வைத்து கொள்ளுங்கள்.இதனை மட்டும் தவிர்த்தல் போதும்.

*பால்
*மது
*செயற்கை நிறம் ஊட்டுபவை மற்றும் ப்ரிசெர்வேடிவ்கள்
*காளான் (இது பூஞ்சான் வகைகளை சேர்ந்தது.சோரியாசிஸ் அல்லாதவர்களும் இதனை உட்கொள்ள கூடாது என்பதே உண்மை.).
*உங்களுக்கு ஒவ்வாமை ஏற்படும் உணவு வகைகள்.

இதனை மட்டும் கடை பிடித்தால் போதுமானது.காளான் எதற்காக சேர்க்க கூடாது என்றால் அதில் விஷ காளான்கள் இருக்கும்.சுத்தமான காளான்களை சாப்பிடுவதில் தவறு இல்லை.இதை எப்படி கண்டு பிடிப்பது என்றால் சுடுநீரில் காளான்களை போட்டு அதில் ஒரு வெள்ளி காசினை போட்டால் அது நிறம் மாற கூடாது.அப்படி இல்லாமல் மாறினால் அது விஷ காளான்கள்.சோரியாசிஸ் உள்ளவர்கள் சுத்தமான காளான்களாக இருந்தாலும் சேர்க்க கூடாது.
www.psoriyasis.blogspot.com/  இந்த வலைத்தளத்தில் பார்வையிட்ட தகவல்களை இங்கு பதிவிட்டுள்ளேன்.எனவே மேற்கண்ட தளத்தில் சென்று அதிக விவரங்களை அறிந்துகொள்ள வேண்டுகிறேன்.

27 செப்டம்பர் 2014

ஆதார் அட்டையில் பிழை திருத்தம் நீங்களே செய்யலாம்..

மரியாதைக்குரியவர்களே,
                     வணக்கம். ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய வேண்டுமா? இதை ப்       படியுங்க...........


22 செப்டம்பர் இல் 06:23 PM · 
ஆதார் கார்டில் பிழைகள் உள்ளதா?            நீங்களே ஆன்லைனில் Edit செய்திடுங்கள்!

     http://uidai.gov.in/update-your-aadhaar-data.html

இந்தியாவில் ஒரு சிலருக்கு ஆதார் கார்டு இந்திய அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும்

              முகவரி, மொபைல் எண் அல்லது மற்ற குறிப்புகளில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், அந்த மாற்றத்தை ஆன்லைன் மூலம் அப்டேட் செய்ய முடியும்.
             அதாவது மாற்றம் ஏற்பட்டிருக்கும் குறிப்புகளை ஆன்லைனில் அப்டேட் செய்யலாம். அல்லது அந்த குறிப்புகளை தபால் மூலம் அனுப்பலாம்.

        ஆதார் கார்டில் உள்ள குறிப்புகளை ஆன்லைன் மூலம் எவ்வாறு மாற்றம் செய்வது?

1. ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள் சென்று லாகின் செய்ய வேண்டும்.

2. மாற்றம் செய்ய வேண்டிய குறிப்புகளை அந்த வெப்சைட்டில் அப்டேட் செய்ய வேண்டும்.

3. டாக்குமென்டுகளை அப்லோட் செய்ய வேண்டும்.
          ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள் செல்வதற்கு முன் உங்களிடம் கண்டிப்பாக மொபைல் எண் இருக்க வேண்டும்.
ஏனெனில் 
            வெப்சைட்டில் ரிஜிஸ்டர் செய்யும் போது அதற்கான பாஸ்வேர்ட் உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும்.

       இந்திய குடிமக்கள் தங்களுடைய பெயர், முகவரி, பாலினம், பிறந்த தேதி மற்றும் மொபைல் எண்கள் ஆகியவற்றை இந்த வெப்சைட்டில் அப்டேட் செய்யலாம்.

  ஆன்லைனில் ஆதார் கார்டை அப்டேட் செய்ய தேவையான குறிப்புகள்:
          
              1. ஆதார் கார்டு வெப்சைட்டைப் பயன்படுத்த வேண்டும் என்றால் கண்டிப்பாக நீங்கள் மொபைல் வைத்திருக்க வேண்டும்.

          2. ஆதார் கார்டு வெப்சைட்டில் சேரும் போது, அந்த வெப்சைட்டில் உங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். பின் உங்கள் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். உடனே உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒன் டைம் பாஸ்வேர்ட் (ஒடிபி) அனுப்பி வைக்கப்படும்.

          ஒருவேளை நீங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்யவில்லை என்றால், அந்த வெப்சைட்டில் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்யவும். தற்போது மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
அப்போதுதான் நீங்கள் ஒடிபி பெற முடியும். ஒருவேளை மொபைல் எண்ணைத் தவறவிட்டிருந்தால், உங்கள் அப்டேட்டைத் தபால் மூலம் தான் அனுப்பி வைக்க முடியும்.

        3. ஒடிபி கிடைத்தவுடன் அதை வெப்சைட்டில் பதிவு செய்ய வேண்டும்.

     4. எந்தந்த குறிப்புகளையெல்லாம் அப்டேட் செய்ய விரும்புகிறீர்களோ, அவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

        5. தேர்ந்தெடுத்த குறிப்புகளை, ஆங்கிலம் மற்றும் தாய்மொழியில் அப்டேட் செய்யவும்.

         அ. அப்டேட் செய்யப்படும் குறிப்புகளுக்கு தேவையான உறுதிச் சான்றிதழ்களை இணைக்க வேண்டும் என்று வெப்சைட்டில் குறிக்கப்பட்டிருந்தால், அதற்கான சான்றிதழ்களை அப்லோட் செய்ய வேண்டும்.

       ஆ. பெயர் மாற்றத்தை அப்டேட் செய்தால், பெயர் மற்றும் உங்கள் தோற்றம் ஆகியவற்றிற்கான உறுதிச் சான்றதழ் மற்றும் உங்கள் புகைப்படம் ஆகியவற்றை அப்லோட் செய்ய வேண்டும்.

         இ. பிறந்த தேதியை அப்டேட் செய்யும் போது அதற்கான உறுதிச் சான்றிதழையும் அப்லேட் செய்ய வேண்டும்.

          6. முகவரியை அப்டேட் செய்யும் போது, புதிய முகவரிக்கான உறுதிச் சான்றிதழை அப்லோட் செய்ய வேண்டும்.

         7. தேவையான உறுதிச் சான்றிதழ்களை ஆன்லைனில் அப்லோட் செய்ய முடியவில்லை என்றால் தபால் மூலம் அனுப்பி வைக்கலாம்.

பழங்களின் மகத்துவம்

மரியாதைக்குரியவர்களே,
                   வணக்கம். பழங்களின் மகத்துவம் 
 
அதிகம் பழங்கள் சாப்பிடுங்கள்
சிறுவர்கள் முதல் பெரியவர் வரை எல்லோரும் கட்டாயமாக பழங்கள் சாப்பிட வேண்டும் .பல விட்டமின் சத்துக்கள் இந்த பழங்களில் இருந்து கிடைக்கிறது . பல நோய்கள் வராமல் தடுக்கும் சக்தி பழங்களுக்கு உண்டு.
எல்லோரும் திராச்சை பழம் உண்ணலாம் . ஆனால் வாழைபழம் எல்லோரும் சாப்பிட மாட்டார்கள். தோடம்பழம் எல்லோரும் சாப்பிடலாம்.பப்பா பழம் எல்லோரும் சாப்பாட்டுக்கு பின் உண்டால் மிகவும் நல்லது. மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்த பழத்தை வாங்கி சாப்பிடலாம். நமது ஊர்களில் என்றால் மரத்தில் இருந்து சும்மா விழுந்து கிடக்கும். சாப்பிட ஆக்கள் இல்லை. ஆனால் இங்கு பப்பா பழம் எண்பது ரூபாய் ஒன்று . ம்ம்ம்ம்ம் அது இருக்கட்டும் . இடத்துக்கு இடம் எல்லாம் வித்தியாசம் தானே.
ஆப்பிள் , அன்னாசி , பலா, வாழை என பழங்கள் உண்டு . உங்கள் உடல் நலத்துக்கு சிறந்தது எதுவோ அவற்றை வாங்கி உண்ணுங்கள் . எதுவும் அளவோடு இருக்கட்டும் . அதற்காக வாழை பழம் கூட இருக்கிறது தானே என்று நான்கு , ஐந்து என்று சாப்பிட்டு விட்டு பின்பு எனக்கு சர்க்கரை வியாதி கூடி விட்டுது டாக்டர் என்று வைத்தியசாலையில் நிக்கும் அளவுக்கு இருக்க கூடாது.
என்ன பழம் என்றாலும் ஒரு நாளைக்கு ஒன்று என்று சாப்பிடுங்கள் .கடையில் விற்கும் பானங்களை குடிப்பதை விட வீட்டில் நாமே நல்ல சுத்தமாக ஜூஸ் போல் பழங்களை அடித்து குடிக்கலாம் . தாகமும் தீரும் . உடம்புக்கும் நல்லது . மாம்பழ ஜூஸ் , விளாம் பழ ஜூஸ் , அன்னாசி ஜூஸ் என நாமே பழங்களை கடையில் வாங்கி வீட்டில் செய்து சாப்பிடலாம்.
ஒவ்வொரு பழங்களிலும் ஒவ்வொரு ருசி இருக்கும் . ஒன்று புளிப்பு தன்மை கொண்டதாகவும் , இனிப்பாகவும் இருக்கும் .காய்ச்சல் இருக்கும் போது பழச்சாறு சாப்பிடலாம். ஏனெனில் காய்ச்சல் இருக்கும் நிலையில் வெப்ப வெளியேற்றம் காரணமாக உடலின் உயிர்ச்சத்துகளில் ஒன்றான நீர்ச் சத்து அளவு குறையும். இதனால் ஆப்பிள் , ஆரஞ்சு போன்ற பழங்களை சாப்பிடலாம்.
சிவப்புத் திராட்சை உண்பது உயர் குருதி அழுத்தம், கொழுப்புப் பாதிப்புகள், இதய நோய் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கும் தன்மை கொண்டது. அதிக நீருள்ள பழங்கள், திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சை, அன்னாசி, தர்ப்பூசணி, போன்றவற்றில் விட்டமின் சத்துக்கள் குறிப்பாக, எல்லா விற்றமினும் உண்டு . மற்ற எல்லாப் பழங்களையும் சாப்பிடலாம்.
உணவிற்கு முன்பு ஒரு ஆப்பிள், வெள்ளரிக்காய், தக்காளி சாப்பிடுங்கள். வயிறு பாதி நிரம்பிவிடும். பின்னர் மற்றஉணவைக் குறைவாக உட்கொண்டால் கூட வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படும். ஆப்பிள், வெள்ளரிக்காய், வெங்காயம் மற்றும் தக்காளியில் கலோரிகள் மிக மிகக் குறைவு என்பதை கருத்தில் கொள்ளவும் .இதெல்லாம் நாம் படித்து வைத்து இருந்தும் நாம் எப்பதான் இப்படி எல்லாம் செய்கிறோம் எனவும் யோசிக்க தோன்றுகிறது . எப்ப கையில் என்ன அகப்படுகிறதோ அதை சாப்பிட வேண்டியது தான் . நேரம் , காலம் பார்ப்பதில்லை . பழகின பழக்கம் அப்படியே .அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்களை தினமும் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

அதிமதுரம்.


மரியாதைக்குரியவர்களே,வணக்கம். அதிமதுரம் சர்வதேச மருத்துவ மூலிகைங்க! மேலும்........
அதிமதுரம்.
ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள்ளன. வேர்ப்பகுதி மட்டுமே மருத்துவ குணம் கொண்டதாக உள்ள அதிமதுரத்தின் சக்தி, அதைப் பயன்படுத்தியவர்களுக்குத் தான் தெரியும். நீங்களும் தெரிந்து கொண்டால் தேவையான சமயத்தில் தயங்காமல் பயன்படுத்தலாமே!
அதிமதுரம் சர்வதேச மருத்துவ மூலிகையாகும். அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. அதிமதுரம் மிக எளிய முறையில் பயன்படுத்தப்பட்டாலே அனேக நோய்களை நீக்கி விட முடியும். மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்திகள் நிரம்பியது. நவீன ஆய்வின் மூலம் இந்த உண்மை வெளியாகியுள்ளது.
செரிமானத்திற்கும் மலச்சிக்கலுக்கும்...
அதிமதுரத்தில் உள்ள பசைப் பொருளும் பிசின் பொருளும் உணவு மண்டலத்தில் செயல்பட்டு உணவு செரிப்பதற்கு உதவுகிறது. மலச்சிக்கலை நீக்குவதில் நிகரற்ற முறையில் செயல்படுகிறது.
கல்லடைப்பு நீங்க...
ஊட்டச் சத்தாகவும் இரத்தப் போக்கை நிறுத்துவதிலும், சொட்டு மூத்திரத்தை நிவர்த்திக்கவும், சிறுநீர்ப்பை புண்களை ஆற்றவும். கல்லடைப்பை நீக்கவும் பயன்படுகிறது.
இருமல் நீங்க...
அதிமதுரம், கடுக்காய், மிளகு மூன்றையும் சம எடையில் எடுத்து இளவறுப்பாய் வறுத்து, சூரணம் செய்து வைத்துக் கொண்டு 5 கிராம் அளவில் தேனில் குழைத்துச் சாப்பிட்டால், அதிகச் சூட்டினால் ஏற்படும் இருமல் தீரும்.
பிரசவத்திற்கு முன் வரும் உதிரப் போக்கைத் தடுக்க...
அதிமதுரம், சீரகம் சரி எடை எடுத்து பொடித்து வைத்துக் கொண்டு 20 கிராம் பொடியை 200 மில்லி தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து 100 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி காலை வேளையில் மூன்று தினங்கள் சாப்பிட்டால் கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்னதாக உள்ள காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கை நிவர்த்தி செய்து விடலாம்.
மஞ்சள் காமாலை நீங்க...
அதிமதுரம், சங்கம் வேர்ப்பட்டை சமமாக எடுத்துப் பொடி செய்து எலுமிச்சம் பழச்சாற்றில் அரைத்து தேற்றாங்கொட்டை அளவு மாத்திரை செய்து உலர்த்தி வைத்துக் கொண்டு, பசும்பாலில் மூன்று தினங்கள் சாப்பிட்டால், மஞ்சள் காமாலை நிவர்த்தியாகும். புளியில்லா பத்தியம் இருக்க வேண்டும். சுகப் பிரசவத்திற்கு...
அதிமதுரம், தேவதாரம் இவைகள் வகைக்கு 35 கிராம் பொடி செய்து, பிறகு வெந்நீர் விட்டு நன்றாக அரைத்து, பிரசவ வலி துவங்கிய உடன் இரண்டு முறை கொடுத்தால் சுகப்பிரசவம் ஏற்படும்.
தொண்டைக் கட்டு இருமல் சளிக்கு...
அதிமதுரச் சூரணத்தைத் தயாரித்து வைத்துக் கொண்டு 1_2 கிராம் அளவில் தேனில் குழைத்து, தினம் மூன்று வேளை சாப்பிட்டால் தொண்டைக் கட்டு, இருமல், சளி குணமாகும். இதைச் சாப்பிட்டு வருபவர்களுக்கு ஆண் தன்மை பலவீனம் நீங்கும். உடல் பலமும், ஆரோக்கியமும் விருத்தியாகும்.
பெண் மலடு நீங்க...
பெண்களுக்கு ஏற்படும் கருப்பைத் தொடர்பான நோய்கள் நிவர்த்தியாகும். ஆரோக்கியமான பெண்களின் மலட்டுத்தன்மை நீங்கும்.
மலச்சிக்கல் நீங்க...
அதிமதுரம், ரோஜா மொக்கு, சோம்பு இவற்றைச் சம அளவில் எடுத்து இடித்துச் சலித்து வைத்துக்கொண்டு, இரவு படுக்கும் போது 4_6 கிராம் பாலில் கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் இருக்காது. இலகுவாக மல விருத்தியாகும்.
சூடு தணிந்து சுறுசுறுப்பாக...
சோம்புச்சூரணம், அதிமதுரச் சூரணம் தலா 5 கிராம் அளவில் இரவு படுக்கும்போது சாப்பிட்டு சுடு தண்ணீர் சாப்பிட்டால், இலகுவாக மல விருத்தியாகும். உள் உறுப்புக்கள் சூடுதணிந்து, சுறுசுறுப்பாக உடல் இயங்கச் செய்யும்.
ரத்த வாந்தி நிற்க...
அதிமதுரச் சூரணம் கலப்படம் இல்லாத சந்தனச் சூரணம் வகைக்கு அரை கிராம் எடுத்து பாலில் கலந்து 3_4 வேளை சாப்பிட்டால், வாந்தியுடன் இரத்தம் வருதல் நிற்கும்... உடலில் உள் உறுப்பு ரணங்கள் ஆறிவிடும்.
தாய்ப்பால் பெருக....
போதுமான அளவு தாய்ப்பால் இல்லாதவர்கள் ஒரு கிராம் அதிமதுரச் சூரணத்தைப் பாலில் கலந்து சிறிதளவு இனிப்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும். இதன் மூலம் குழந்தைகளுக்குக் கூடுதலாக ஊட்டச்சத்து கிடைக்கும்.
வரட்டு இருமல் நீங்க...
அதிமதுரம், வாதுமைப் பிசின், வேலம் பிசின் சமமாக வகைக்கு 10 கிராம் அளவில் சேகரித்து வைத்துக் கொண்டு, 250 கிராம் சர்க்கரையைத் தண்ணீர் சிறிதளவு விட்டு பாகு பதம் வரும்வரை காய்ச்ச வேண்டும். தேன் பதம் வரும்போது மேற்கண்ட சூரணங்களைக் கொட்டிக் கிண்டி லேகியம் தயாரித்து வைத்துக் கொண்டு, இரண்டு தேக்கரண்டியளவு மூன்று முறை சாப்பிட்டால், வரட்டு இருமல் தீரும். கோழையுடன் உள்ள இருமலும் தீரும். தொண்டைப் புண் ரணங்கள் விரைவில் ஆறிவிடும்.
இளநரை நீக்க...
அதிமதுரத்தை நன்றாக அரைத்துப் பசும்பாலில் கலந்து தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளநரை ஏற்படாமல் தடுக்கும். தலை மயிர் உதிர்தல் இருக்காது.
நெஞ்சுச் சளி நீங்க....
அதிமதுரம், அரிசித்திப்பிலி, சித்தரத்தை மூன்றையும் தலா பத்து கிராம் அளவில் சேகரித்து வைத்துக்கொண்டு, இதில் முசுமுசுக்கை இலை பத்து கிராம். ஆடா தொடை இலை பத்து கிராம், இவைகளை 200 மில்லி தண்ணீரில் விட்டுக் காய்ச்சி 50 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி, காலை, இரவு இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், நெஞ்சுச் சளியும் அனைத்து வகைச் சளிகளும் வெளியாகும். இருமல் நின்று விடும். ஆஸ்துமா நோயாளிகளுக்குச் சிறந்த நிவாரணமாகும். இம்முறையில் தயாரிக்கப்பட்ட மருந்தை சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பருக, சளித்தொல்லை நீங்கும்.
இருமல் நீங்க...
அதிமதுரம், வால்மிளகு, சித்தரத்தை, திப்பிலி ஆகியவை வகைக்கு 5 கிராம் எடுத்து சன்னமாகப் பொடித்து 250 மில்லி கொதிக்கும் நீரில் போட்டு மூடி 30 நிமிஷங்கள் சென்றபின் வடிகட்டி காலை, மாலை இருவேளை 30 மில்லி வீதம் சாப்பிட்டால் இருமல் தீரும்..
மஞ்சள்காமாலை தீர...
அதிமதுரம் 15 கிராம், சீரகம் 15 கிராம், வெங்காயம் 20 கிராம், சங்கம் வேர்ப்பட்டை 15 கிராம் இவைகளை பசும்பால் தெளித்து நன்றாக அரைத்து காலை வேளையில் மூன்று தினங்கள் மட்டும் சாப்பிட்டால் மஞ்சள் காமாலை தீரும். மூன்று தினங்களுக்கும் ஆகாரத்தில் உப்பு, புளி சேர்க்காமல் பத்தியம் இருக்க வேண்டும்.
தாது விருத்திக்கு...
அதிமதுரத்தை நன்கு பொடித்து பாலில் கலக்கி சிறிதளவு தேன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாது விருத்தி உண்டாகும். போக சக்தி அதிகரிக்கும். போக சக்தியை இழந்த வாலிபர்களுக்குப் புத்துயிர் அளிக்கும் சிறந்த மூலிகையாகும்.
கருத்தரிக்க உதவும்...
அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50_100 கிராம் எடுத்து தண்ணீரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 2_3 மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.
வழுக்கை நீங்கி முடி வளர
அதிமதுரத்தை நன்றாகப் பொடி செய்து, அம்மியில் வைத்து எருமைப்பால் விட்டு நன்றாக விழுதாகும் வரை அரைத்து, தேவையான அளவு எருமைப்பாலில் கலக்கித் தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளவயதில் ஏற்பட்ட தலை வழுக்கை நீங்கி மீண்டும் மயிர் முளைக்கும். தலையில் உள்ள பொட்டு, பொடுகு, சுண்டு முதலியவை நீங்க, இதைப் பயன்படுத்துவதால் மேற்கண்ட குறைகள்நிவர்த்தியாகும்.
தலைவலிகள் நீக்க...
அதிமதுரம், சோம்பு, சர்க்கரை இவைகளை வகைக்கு 35 கிராம் எடுத்து, தனித்தனியாக நன்கு சூரணம் செய்து, பின் ஒன்று கூட்டி வைத்துக் கொண்டு தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால், உடல் சூட்டினால் ஏற்பட்ட தலைவலி நீங்கும். இதையே தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொடர்ந்து தொல்லை கொடுக்கும் தலைவலி, தீராத தலைவலி, ஒற்றைத் தலைவலி தீரும். அதிமதுரம், கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் இவைகளை சம எடையாக எடுத்துச் சூரணம் செய்து அரைத் தேக்கரண்டியளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டால் சீதளத்தால் ஏற்பட்ட தலைவலி தீரும். இதே சூரணத்தை நெய்யில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் அதிக வெப்பத்தால் ஏற்பட்ட தலைவலி நீங்கும்.
தொண்டை கரகரப்பு நீங்க...
அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும்... தொண்டையில் உள்ள சளிக் கட்டு கரைந்து விடும்.
ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்த...
பொதுப்பிரயோகமாக அதிமதுரச் சூரணத்தை தினசரி ஒரு தேக்கரண்டியளவு சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா நோயைக் கட்டுப்படுத்தலாம். சளி, இருமல் இருக்காது. தொண்டை சம்பந்தப்பட்ட தொல்லைகளும் நீங்கிவிடும்.

அதிமதுரம் மருத்துவ குணம்.

மரியாதைக்குரியவர்களே,
                              வணக்கம். நாட்டு மருத்துவம் படியுங்க...
அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் !
சர்க்கரையை விட 50 மடங்கு இனிப்பான பொருளை தெரியுமா? அது தான் அதிமதுரம்! உலகின் சில பகுதிகளில் குழந்தைகள், மிட்டாய் போல் அதிமதுர வேரை சுவைக்கின்றனர். இனிப்பது மட்டுமல்ல, அதிமதுரம் ஆயுர்வேதத்தில் முக்கியமான மருந்து. சக்தி வாய்ந்த ‘டானிக்’! தவிர மேலும் பல மருத்துவ குணங்கள் கொண்டது.
*அதிமதுரத்தில் உள்ள பசைப் பொருள், உணவு மண்டலத்தில் செயல்பட்டு உணவு செரிப்பதற்கு உதவுகிறது. மலச்சிக்கலைத் தீர்ப்பதில் நிகரற்ற முறையில் செயல்படுகிறது.
* ஊட்டச்சத்தாகவும், ரத்தப்போக்கை நிறுத்துவதிலும், சிறுநீர்ப்பை புண்களை ஆற்றவும், கல்லடைப்பை நீக்கவும் பயன்படுகிறது.
* அதிமதுரம், கடுக்காய், மிளகு மூன்றையும் சம அளவில் எடுத்து இலேசாக வறுத்து சூரணம் செய்து வைத்துக்கொண்டு 5 கிராம் அளவில் தேனில் குழைத்துச் சாப்பிட்டால், அதிகச் சூட்டினால் ஏற்படும் இருமல் தீரும்.
* அதிமதுரம், சீரகம் இரண்டையும் சம அளவு எடுத்துப் பொடித்துக் கொண்டு, 20 கிராம் பொடியை 200 மி.லி. தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து 100 மி.லி.யாக சுண்டியதும் வடிகட்டி, காலை வேளையில் மூன்று நாட்கள் சாப்பிட்டால், கர்ப்பிணிப் பெண்களுக்கு பிரசவத்துக்கு முன்னதாக உள்ள காலங்களில் ஏற்படும் ரத்தப்போக்கை நிறுத்திவிடலாம்.
* அதிமதுரச் சூரணத்தை தயாரித்து வைத்துக்கொண்டு 1 அல்லது 2 கிராம் அளவில் தேனில் குழைத்துச் சாப்பிட்டு வருபவர்களுக்கு ஆண்மைப் பலவீனம் நீங்கும். உடல் பலமும் ஆரோக்கியமும் கூடும்.
* பெண்களுக்கு ஏற்படும் கருப்பை தொடர்பான நோய்களை அதிமதுரம் நிவர்த்தி செய்யும்.
* அதிமதுரம், ரோஜா மொக்கு, சோம்பு இவற்றைச் சம அளவில் எடுத்து இடித்துச் சலித்து வைத்துக் கொண்டு, இரவு படுக்கும்போது சிறிது பாலில் கலந்து சாப்பிட்டால் மலச் சிக்கல் இருக்காது.
* சோம்புச் சூரணம், அதிமதுரச் சூரணம் இரண்டையும் தலா 5 கிராம் அளவில் இரவு படுக்கும்போது சாப்பிட்டு வெந்நீர் பருகினால் இலகுவாக மலம் வெளியாகும். உள்உறுப்புகள் சூடு தணிந்து, சுறுசுறுப்பாக உடல் இயங்கச் செய்யும்.
* அதிமதுரச் சூரணம், தூய சந்தனச் சூரணம் இரண்டையும் தலா அரை கிராம் எடுத்து பாலில் கலந்து, மூன்று வேளை சாப்பிட்டால் வாந்தியுடன் ரத்தம் வருவது நிற்கும். உடல் உள்உறுப்பு ரணங்கள் ஆறிவிடும்.
அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் !

சர்க்கரையை விட 50 மடங்கு இனிப்பான பொருளை தெரியுமா? அது தான் அதிமதுரம்! உலகின் சில பகுதிகளில் குழந்தைகள், மிட்டாய் போல் அதிமதுர வேரை சுவைக்கின்றனர். இனிப்பது மட்டுமல்ல, அதிமதுரம் ஆயுர்வேதத்தில் முக்கியமான மருந்து. சக்தி வாய்ந்த ‘டானிக்’! தவிர மேலும் பல மருத்துவ குணங்கள் கொண்டது.

*அதிமதுரத்தில் உள்ள பசைப் பொருள், உணவு மண்டலத்தில் செயல்பட்டு உணவு செரிப்பதற்கு உதவுகிறது. மலச்சிக்கலைத் தீர்ப்பதில் நிகரற்ற முறையில் செயல்படுகிறது.

* ஊட்டச்சத்தாகவும், ரத்தப்போக்கை நிறுத்துவதிலும், சிறுநீர்ப்பை புண்களை ஆற்றவும், கல்லடைப்பை நீக்கவும் பயன்படுகிறது.

* அதிமதுரம், கடுக்காய், மிளகு மூன்றையும் சம அளவில் எடுத்து இலேசாக வறுத்து சூரணம் செய்து வைத்துக்கொண்டு 5 கிராம் அளவில் தேனில் குழைத்துச் சாப்பிட்டால், அதிகச் சூட்டினால் ஏற்படும் இருமல் தீரும்.

* அதிமதுரம், சீரகம் இரண்டையும் சம அளவு எடுத்துப் பொடித்துக் கொண்டு, 20 கிராம் பொடியை 200 மி.லி. தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து 100 மி.லி.யாக சுண்டியதும் வடிகட்டி, காலை வேளையில் மூன்று நாட்கள் சாப்பிட்டால், கர்ப்பிணிப் பெண்களுக்கு பிரசவத்துக்கு முன்னதாக உள்ள காலங்களில் ஏற்படும் ரத்தப்போக்கை நிறுத்திவிடலாம்.

* அதிமதுரச் சூரணத்தை தயாரித்து வைத்துக்கொண்டு 1 அல்லது 2 கிராம் அளவில் தேனில் குழைத்துச் சாப்பிட்டு வருபவர்களுக்கு ஆண்மைப் பலவீனம் நீங்கும். உடல் பலமும் ஆரோக்கியமும் கூடும்.

* பெண்களுக்கு ஏற்படும் கருப்பை தொடர்பான நோய்களை அதிமதுரம் நிவர்த்தி செய்யும்.

* அதிமதுரம், ரோஜா மொக்கு, சோம்பு இவற்றைச் சம அளவில் எடுத்து இடித்துச் சலித்து வைத்துக் கொண்டு, இரவு படுக்கும்போது சிறிது பாலில் கலந்து சாப்பிட்டால் மலச் சிக்கல் இருக்காது.

* சோம்புச் சூரணம், அதிமதுரச் சூரணம் இரண்டையும் தலா 5 கிராம் அளவில் இரவு படுக்கும்போது சாப்பிட்டு வெந்நீர் பருகினால் இலகுவாக மலம் வெளியாகும். உள்உறுப்புகள் சூடு தணிந்து, சுறுசுறுப்பாக உடல் இயங்கச் செய்யும்.

* அதிமதுரச் சூரணம், தூய சந்தனச் சூரணம் இரண்டையும் தலா அரை கிராம் எடுத்து பாலில் கலந்து, மூன்று வேளை சாப்பிட்டால் வாந்தியுடன் ரத்தம் வருவது நிற்கும். உடல் உள்உறுப்பு ரணங்கள் ஆறிவிடும்.

24 செப்டம்பர் 2014

அவசர உதவிக்கு தொடர்பு எண்கள்

மரியாதைக்குரியவர்களே,
                        வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம். அவசர உதவிக்கான தொடர்பு எண்கள் இதோ......
 
                   இன்றைய சூழல் நமது வாழ்க்கையில் எப்போது, என்ன நடக்கும் என்று சொல்ல முடியாத நிலையில் உள்ளோம். 

         உதாரணமாக பேருந்து பயணத்தின்போது,சுற்றுலா செல்லும் போது நாம் நினைத்துப் பார்க்க முடியாத சம்பவங்கள் எங்குவேண்டுமானாலும் நடந்துவிடலாம். 

        அப்போது உதவிக்கு யாரை அழைப்பது என்று பரிதவிப்போம்.
  செல்போன்களில் இதற்கு பணம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. 
            மேலும் போனில் கீபேட்லாக் ஆகியிருந்தால் கூட 1,2,9 ஆகிய இந்த மூன்று எண்களை மட்டும் டயல் செய்ய முடியும். உங்கள் மொபைல் சிம் பிளாக் ஆகியிருந்தாலும், சிம் பிளாக் ஆகியிருந்தாலும், சிம் கார்டே இல்லாமலும் கூட இந்த 911, 112 எண்களை அழைக்க முடியும். மொபைல் சிக்னல் இல்லாத இடங்களில் கூட டயல் செய்ய முடியும். எனவே

          உலகம் முழுவதும் அவசர உதவிக்கு அழைக்கக் கூடிய 911, 112 எண்களை நாம் நினைவில் வைத்திருப்பது நல்லது
 

        இதற்காகவே 24 மணி நேரமும் செயல்படக்கூடிய அவசர எண்கள் உள்ளன.

           காவல் துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள 044-28447200 என்ற எண்ணில் எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம். 
           கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட இந்த சேவையில் சம்பந்தப்பட்ட துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். 

          இதுபோக ஒவ்வொரு துறைக்கும் இலவச அவசர அழைப்பு எண்கள் உள்ளன. இவை அனைத்தும் 24 மணி நேர சேவை கொண்டவை.
 

     அவசர போலிஸ் உதவிக்கு 100, 
     தீயணைப்புத் துறைக்கு 101, 
    போக்குவரத்து முறைகேட்டிற்கு 103, 
  ஆம்புலன்ஸ் உதவிக்கு 108, 
குழந்தைகளுக்கான உதவிகளுக்கு 1098, 
பெண்களுக்கான உதவிக்கு 1091, 
முதியோருக்கான உதவிக்கு 1253, 
மீனவர்கள் மற்றும் கடலோர பாதுகாப்பு உதவிக்கு 1093, 
விலங்குகள் பாதுகாப்பு உதவிக்கு 12700, 
ராகிங் தொல்லை உதவிக்கு 155222 அல்லது 18001805512 

             என்று ஒவ்வொன்றிற்கும் ஒரு எண் உண்டு. இவை அனைத்தையும் நினைவில் வைத்துக்கொள்வது சிரமம். அதிலும் வெளிநாடு சென்றிருக்கும் போது நமது நாட்டிற்கான அவசர உதவி எண்கள் பயன்படாது.
 

       இன்றைக்கு வெளிநாட்டு பயணம் என்பது சாதரணமானதாக உள்ளது. அங்கு நாம் ஏதேனும் பிரச்சனையில் மாட்டிக்கொண்டால், அவசர உதவிக்கு என்ன செய்வது? அதற்காகத்தான் உலகம் முழுக்க ஒட்டுமொத்த உதவிக்கு ஒரு அவசர உதவி எண்ணை வைத்துள்ளனர். 

  அந்த எண் 911, 112.
இந்த எண்ணை ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டில் இருக்கும் காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கோ அல்லது உதவிமையத்திற்கோ சென்றடையும்படி அமைத்திருப்பார்கள். 


                   நமது தமிழகத்தில் 911, 112 எண்களை டயல் செய்தால், அது தானாக அவசர எண் 100க்கு சென்று சேர்வது போல் அமைத்துள்ளனர். இந்த எண்ணிற்கு மிஸ்டுகால் கொடுத்தால் கூட போதும் அவர்கள், நம்மை தொடர்பு கொண்டு உதவி செய்வார்கள்
Nandri – today india info

22 செப்டம்பர் 2014

புற்றுநோய்க்கு மருந்து!...

மரியாதைக்குரியவர்களே,
             வணக்கம்.புற்றுநோய் குணமாக மருந்து கண்டுபிடிப்பு! இதை அனைவருக்கும் தெரிவியுங்க........
 தயவு செய்து அதிகமாக பகிரவும்
நண்பர்களே:-
இதுவரை கொடிய நோயாக இருந்த இரத்த
புற்றுநோயை(Blood Cancer)-யை முழுவதுமாக
குணமாக்குவதற்கு புதிதாக
மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.....
அந்த மருந்தின் பெயர் "Imitinef Mercilet"
ஆகும்.
இந்த மருந்து நம்ம சென்னையில் உள்ள
கேன்சர் ரிசர்ச் சென்டரில் இலவசமாக
வழங்கப்படுகிறது.....
அணுக வேண்டிய முகவரி :----
Cancer institute Adyar,
East Canal Bank Road,
Gandhi Nagar Adyar,
Chennai-600020 Land Mark,
Near Michael School.
PHONE:---------
044 -24910754
044 -24911526
044 -22350241
நண்பர்களே நம்மால் ஒருவர் பயன்
அடைந்தாலும் அந்த
இறைவனுக்கு நன்றி சொல்ல
கடமை படுவோம்........."""

என் நண்பா...!!!!!!!!.......

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.

புலம்பாதே போராடு ...
================
புதைபட்டு விட்டோமென்று
புலம்பாதே என்நண்பா ...
புதைக்காமல் முளைக்கும்விதை
மரமாக மாறாது ...

அடிமேலே அடியென்று
அலடிக்காதே நீசும்மா ...
தானாக சிதையும்கல்
சிலைவடிவம் காணாது ...
வெற்றியால் பிறருக்குன்
வீரத்தைக் காட்டலாம் ...
தோல்வியால் மட்டும்தான்
உன்திறனைக் கூட்டலாம் ...
திறனைநீ கூட்டாமல்
தீர்க்கம்பெற முடியாது ...
மூர்க்கத்தோடு முயலாட்டி
முன்னேற்றம் நிலையாது ...
எதிராளியின் தவறால்கூட
என்றோஒருநாள் வெல்லலாம் ...
சும்மாகிடந்த உன்னக்கூட
யோகம்தூக்கிச் செல்லலாம் ...
ஆனால்அந்த வெற்றியெல்லாம்
ஆலமரம் இல்லையப்பா ...
நேற்றுமுளைத்து இன்றுவாடும்
கோரைப்புல்லு போலதாம்பா ...
போராடு தோற்றாலும்
போராளி பட்டம்கிட்டும் ...
சாகும்வரை தோற்றாலும்
சரித்திரம்உன் பெயரைவெட்டும் ...
என்றும் எழுத்தாணி முனையில் ...
கவிஞர்.செந்தமிழ் தாசன் ( பாடலாசிரியர் )

கணவனுக்கு மனைவி தரும் பரிசு!

மரியாதைக்குரியவர்களே,
                   வணக்கம். இதோ ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் அலுவலர் ஒருவருக்கு  நோய்வாய்ப்பட்டமைக்காக அவரது மனைவி தரும் மருத்துவ ஆலோசனை? இல்லைங்க அது ஒரு  அன்பு பரிசு!!!!!!!!!!
 
           ஒரு பெரிய நிர்வாகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் நோய்வாய்ப்பட்டார்.
பெரிய பெரிய மருத்துவர்களிடம் காண்பித்தும் பயனில்லை.
குணமாகவில்லை. என்னசெய்வது? என்று யோசித்துக் கொண்டிருந்தவரிடம் அவர் மனைவி, "நீங்கள் ஏன் ஒரு வெட்னரி டாக்டரிடம் அதாவது கால்நடை மருத்துவரிடம் போகக் கூடாது?" என்றார்.
அதிர்ச்சி அடைந்த கணவன், "உனக்கு என்ன மூளை கெட்டுப் போச்சா?" என்றார்.
மனைவி சொன்னாள்:
எனக்கொன்றும் கெடவில்லை. உங்களுக்குத் தான் எல்லாம் கெட்டுப்போச்சு!!!.
காலங்காத்தால கோழி மாதிரி எந்திரிச்சு, அப்புறம் காக்கா மாதிரி குளிச்சிட்டு, குரங்கு மாதிரி லபக் லபக்னு தின்னுட்டு, பந்தயக் குதிரை மாதிரி வேக வேகமாக ஆபிசுக்கு ஓடி, அங்க மாடு மாதிரி உழைக்கிறீங்க.
அப்புறம் உங்களுக்குக் கீழே உள்ளவங்க கிட்ட கரடி மாதிரி கத்துறீங்க. சாயந்திரம் வீட்டுக்கு வந்ததும் எங்கிட்ட நாய் மாதிரி  குறைக்கிறீங்க.
அப்புறம் முதலை மாதிரி ராத்திரி சாப்பாட்டை சரக் சரக்னு முழுங்கிட்டு, எருமை மாடு மாதிரி தூங்கறீங்க.
அதனால தான் சொல்றேன், இப்படி இருக்கிற உங்களை கால்நடை டாக்டர் தான் குணப்படுத்த முடியும்."
என்ன சொல்வதென்று கணவன் முழிக்க, "என்ன கோட்டான் மாதிரி முழிக்கிறீங்க?" என்று முத்தாய்ப்புடன் முடித்தாள் மனைவி.
(படித்ததில் ரசித்தது)

முதியோர் இல்லம்-OLD AGE HOME

மரியாதைக்குரியவர்களே,
                வணக்கம். ஒரு பெற்றோரின் வேதனை! 

 
அன்பு மகனுக்கு அப்பா,,அம்மா எழுதுவது….!!!
வசதியாகத்தான் இருக்கிறது மகனே…
நீ கொண்டு வந்து சேர்த்த முதியோர் இல்லம்....
பொறுப்பாய் என்னை ஒப்படைத்து விட்டு சலனமின்றி நீ
வெளியேறிய போது, முன்பு நானும்
இது போல் உன்னை வகுப்பறையில் விட்டு விட்டு
என் முதுகுக்குப் பின்னால் நீ கதறக் கதறக்
கண்ணீரை மறைத்தபடி புறப்பட்ட காட்சி
ஞாபகத்தில் எழுகிறது!

முதல் தரமிக்க இந்த இல்லத்தை தேடித் திரிந்து
நீ தேர்ந்தெடுத்ததை அறிகையில்கூட
அன்று உனக்காக நானும்
பொருத்தமான பள்ளி
எதுவென்றே ஓடி அலைந்ததை ஒப்பீடு செய்கிறேன்!

இதுவரையில் ஒருமுறையேனும் என் முகம் பார்க்க
நீ வராமல் போனாலும் என்
பராமரிப்பிற்கான மாதத் தொகையை மறக்காமல்
அனுப்பி வைப்பதற்காக மனம் மகிழ்ச்சியடைகிறது
நீ விடுதியில் தங்கிப் படித்த காலத்தில்
உன்னைப் பார்க்க வேண்டும் என்ற
ஆவல் இருந்தாலும் படிப்பை நினைத்து உன்னை சந்திக்க
மறுத்ததன் எதிர்வினையே இதுவென்று இப்போது அறிகிறேன்!

இளம் வயதினில் நீ சிறுகச் சிறுக
சேமித்த அனுபவத்தை என் முதுமைப் பருவத்தில் மொத்தமாக எனக்கே செலவு செய்கிறாய்
ஆயினும்… உனக்கும் எனக்கும் ஒரு சிறு வேறுபாடு.

நான் கற்றுக்கொடுத்தேன் உனக்கு…
வாழ்க்கை இதுதானென்று!
நீ கற்றுக் கொடுக்கிறாய் எனக்கு…
உறவுகள் இதுதானென்று!

14 செப்டம்பர் 2014

மதுரைக்குத்தான் போகலாமுங்க! அக்டோபர் 26ஆம் தேதிதாங்க!!

மரியாதைக்குரியவர்களே,
           வணக்கம். இதோ எனது பெயர் பதிவு நான் 59ஆவது நபராக பதிவு செய்துள்ளேன்.அப்ப நீங்க!!!!!!
 
           னைவருக்கும் வணக்கம். மதுரையில் அடுத்த மாதம் 26ம் தேதி நடக்க இருக்கும் மூன்றாமாண்டு வலைப்பதிவர்  திருவிழாவிற்கான ஏற்பாடுகள் சிறப்பான முறையில் நடந்து வருகின்றன. தமிழ்வாசி பிரகாஷ், திண்டுக்கல் தனபாலன் மற்றும் மின்னல்வரிகள் என்னும்  தளத்தில் பதிவர்களின் வருகையை உறுதி செய்து கொள்ளும்படியான படிவம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். அதனைப் பூர்த்தி செய்து 15 -09-2014 இன்றைய தினம் வரையில் தங்களின் வருகையை உறுதி செய்திருக்கும் பதிவர்களின் பட்டியல் இதோ...

1. சிதம்பரம் என்ற சீனா (வலைச்சரம்), 2) தமிழ்வாசி பிரகாஷ் (தமிழ்வாசி), 3. பொன். தனபாலன் (திண்டுக்கல் தனபாலன்), கவிஞர். 4. திருமலை சோமு (thirumalaisomu.blogspot.com), 5. பகவான்ஜி (ஜோக்காளி), 5. பாலகணேஷ் (மின்னல் வரிகள்), 6. கவியாழி (கவியாழி), 7. sithayan sivakumar (விழிப்புணர்வு), 7. சங்கர இராமசாமி (கனிச்சாறு), 8. செல்வின் (அஞ்சாசிங்கம்), 9.வேணுகோபாலன் (சேட்டைக்காரன்), 10. சசிகுமார் (வந்தேமாதரம்), 11. ஜீவானந்தம் (கோவை நேரம்), 12. சித்தூர் முருகேசன் (அனுபவஜோதிடம்) , 13. கருப்பணன் (karuppanan), 14. நா.முத்துநிலவன் (வளரும் கவிதை), 15. சுரேஷ்குமார் (கடல் பயணங்கள்), 16. பாலாஜி (அநியாயங்கள்), 17. மு.கீதா (தென்றல்), 18. கா.ந.கல்யாணசுந்தரம் (கவிதைவாசல்), 18. முருகன் (gurumurugan.blogspot.com), 19.கருண்குமார் (வேடந்தாங்கல்), 20. யானைக்குட்டி (http://yanaikutty.blogspot.in), 20. கோவை ஆவி (பயணம்), 21. செல்வி ஷங்கர் (பட்டறிவும் பாடமும்), 21. வியபதி (ஏதாவது எழுதுவோம்), 22. இராய செல்லப்பா (செல்லப்பா தமிழ் டயரி), 23. முகமதுநவாஸ்கான் (99Likes (Tamil Computer Tips), 24. கரந்தை ஜெயக்குமார் (கரந்தை ஜெயக்குமார்), 25. கேபிள் சங்கர் (கேபிள் சங்கர்), 26. ஜெய் (பட்டிகாட்டான் பட்டணத்தில்), 27. இ.வரதராஜபெருமாள் (குமாரபாளையம் குடமுருட்டி), 28. திலிப் நாராயணன் (அழகிய நாட்கள்), 29. J. நிஷா (யாமிதாஷா), 30. புலவர் இராமாநுசம் (புலவர் குரல்), 31. மதுமதி (மதுமதி.காம்), 32. வெங்கட் நாகராஜ் (சந்தித்ததும் சிந்தித்ததும்), 33. ம.கோகுல் (கோகுல் மனதில்), 34. விமலன் (சிட்டுக்குருவி), 34. ஆர்.வி.சரவணன் (குடந்தையூர்) 35. முனைவர் துரை.மணிகண்டன் (மணிவானதி), 36. துளசி கோபால் (துளசிதளம்), 37. விஜயன் துரை (கடற்கரை), 38. சி.வெற்றிவேல் (இரவின் புன்னகை), 39. சரவணன் (ஸ்கூல் பையன்), 40. கவி. செங்குட்டுவன் (கல்விக்கோயில்), 41. எஸ்.விஜயநரசிம்மன் (svijayanarasimhan.blogspot.in), 42. ஸபி (சக்கரக்கட்டி), 43. சம்பத்குமார் (தமிழ் பேரண்ட்ஸ்), 44. முனைவர் நா.சிவாஜி கபிலன் (தூரிகை கபிலன்), 45. அரசன் (கரைசேரா அலை), 46. ரூபக் ராம் (சேம்புலியன்), 47. தி தமிழ் இளங்கோ (எனது எண்ணங்கள்), 48. வெ.கோபாலகிருஷ்ணன் (மதுரகவி), 49. அ.ரா.சங்கரலிங்கம் (உணவு உலகம்), 50. அகிலா (சின்ன ச்சின்ன சிதறல்கள்), 51. கோவிந்தராஜ்.வா (தமிழன்), 52. பொய்யாமொழி (தமிழ் கம்ப்யூட்டர் நண்பன்), 53. அறிவு விக்னேஷ்குமார் (தோழன்), 54. சிவபார்கவி (சிவபார்கவி), 55. வஹாப் ஷாஜஹான் (டாஸ்மாக் செய்திகள்), 56. நிவாஸ் (medimiss), 57. நக்கீரன்.ஜெ (நாய் நக்ஸ்), 58. சைதை அஜீஸ் (saidaiazeez), 59. பரமேஸ்வரன் (கொங்குதென்றல்).


13 செப்டம்பர் 2014

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.

       மருத்துவம் என்பது ஒரு புனிதமான தொழில். ஒரு மருத்துவர் தனது திறமை, அறிவை வைத்து நோயாளியை குனபடுத்த முழு முயற்சி எடுக்க வேண்டும். ஒவ்வொரு வழக்கிலும், ஒரு நோயாளிக்கு அதிக பட்ச அல்லது மிக குறைவான கவனிப்பு தரப்பட்டதா என்று நீதிமன்றம் கணிக்கிறது.
வேண்டுமென்றே கவனக்குறைவாகவோ, அல்லது ஒரு மருத்துவர் எப்படி நடந்து கொள்ள கூடாதோ அப்படி ஒரு மருத்துவர் நடந்து கொண்டால் மட்டுமே, மருத்துவ சேவை கவனக்குறைவு ஆரம்பிக்கிறது. மக்களிடம் உள்ள எழுத்தரிவின்மையும், வறுமையுமே, அவர்கள் மருத்துவர்கள் கையில் பலியாக நேரிடுகிறது. தெருவில் நிற்கும் ஒரு நோயாளிக்கு மாற்று மருந்தோ அல்லது காலாவதியான மருந்தோ தரப்படுகிறது. ஒரு சில வழக்குகளில், நோயாளிகளின் முக்கிய உறுப்புகள் அவர்களுக்கு தெரியாமலேயே எடுக்கப்பட்டு, கள்ள சந்தையில், அதிக பட்ச விலைக்கு விற்கபடுகிறது. இந்த விஷயம் நோயாளிக்கு தெரிய வந்தால், மருத்துவர் அவனது வறுமையை பயன்படுத்தி, குறைந்த தொகை கொடுத்து, அவனை அமுக்கி விடுகிறார். ஒரு நோயாளி இரண்டாவது ஒபினியன், வேறு மருத்துவரிடம் வாங்கும்போது, ஒரு வேளை, இரண்டாவது டாக்டர், முதல் டாக்டரின் தவறான சிகிச்சையை பற்றி நோயாளிக்கு சொல்லலாம்.
குறை தீர் வழிமுறை :
ஒரு மருத்துவ சேவை குறைபாட்டில், ஒரு நுகர்வோருக்கு ஒரு மருத்துவமனை (அரசு / தனியார் ) மீதோ, ஒரு மருத்துவர் மீதோ, ஏதும் புகாரோ அல்லது குறையோ இருந்தால், முதலில் அதே துறையில் இருக்கும் இன்னொரு மருத்துவரிடம், இரண்டாவது கருத்து வாங்க வேண்டும். அந்த இரண்டாவது மருத்துவர் சொல்வதை வைத்து பார்க்கும்போது, நோயாளி, முதலில் தனக்கு மருத்துவம் செய்த மருத்துவர், சேவை குறைபாடாக தனக்கு வைத்தியம் அளித்துள்ளார் என்று முடிவு செய்தால், தான் வைத்தியம் பார்த்த மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளருக்கு Medical Superintendent (M.S), தனது புகாரை அனுப்ப வேண்டும். இதன் நகலை தனது ஏரியாவில் உள்ள முதன்மை மருத்துவ அதிகாரிக்கும் Chief Medical Officer (CMO) அனுப்ப வேண்டும். தனக்கு பதில் ஏதும் வராவிட்டாலோ, அல்லது பதில் கிடைத்து அதில் நோயாளி திருப்தியுராவிட்டாலோ, தனது ஏரியாவில் உள்ள மாநில மெடிக்கல் கவுன்சில்க்கு அந்த புகாரை மீண்டும் அனுப்ப வேண்டும். இதற்கு கட்டணம் ஏதும் இல்லை. மாநில மருத்துவ கவுன்சில் அனுப்பிய பதிலிலும் திருப்தி இல்லாவிட்டால், நோயாளி மீண்டும் அகில இந்திய மருத்துவ கவுன்சில்க்கு அனுப்ப வேண்டும். அகில இந்திய மருத்துவ கவுன்சில், இந்த நடைமுறைக்கு, நோயாளி வசம் ரூபாய் 500/ – ஐ, வசூலிக்கும். இதில் குற்ற நிகழ்வு ஏதும் நடந்திருந்தால், அருகாமையில் உள்ள காவல் துறைக்கும் புகார் அளிக்கலாம். (உதாரணமாக, கிட்னி திருட்டு)
எப்படி இருந்தாலும், காவல் துறை வழக்கு பதிவு செய்ய, நிபுணர்களின் ஆலோசனை பெற்றே, முடிவெடுப்பார்கள். பாதிக்கப்பட்ட நோயாளி, நுகர்வோர் நீதிமன்றம், சிவில் மற்றும் கிரிமினல் நீதிமன்றங்களில் தனக்கு தவறான சிகிச்சை கொடுத்ததற்காக அல்லது உடல் உறுப்புகளை தனது சம்மதம், அறிவுக்கு எட்டாமல் எடுத்ததற்காக இழப்பீடு கேட்டும், மருத்துவர்கள் , மருத்துவமனைகள் மீது வழக்கு தொடுக்கலாம்.
நன்றி – கன்சூமர் கவுன்சில் ஓப் இந்தியா

கோவை மாநகர காவல்துறையின் அசத்தல் பாதுகாப்பு வழிமுறை

மரியாதைக்குரியவர்களே,
                  வணக்கம். கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம். 
                     கோவை மாநகரக் காவல் துறை , மாவட்டத்தில் நடக்கும் குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கில் பொதுமக்களிடம் இருந்து சமூகவிரோத செயல்களைப் பற்றியத் தகவல்களைப் பெறவும், நேரடியாக பொதுமக்களே எந்த ஒரு குற்றச் சம்பவத்தைப் பற்றிய தகவல்களைக் கொடுக்கவும் மொபைல் எண்ணை அறிமுகப் படுத்தி இருக்கிறது. மெயில் மூலமாகவும் காவல்துறைக்குத் துப்புக் கொடுக்கலாம். எஸ்.எம்.எஸ் அனுப்ப வேண்டிய மொபைல் எண் : 9843100100 (இது நேரடியாக கமிஷனர் மற்றும் டெபுடி கமிஷனரின் பார்வைக்குப் போகும்) பொதுமக்கள் தொலைபேசியில் நேரடியாக டெபுடி கமிஷனரிடம் பேச : 0422-6545464 மெயில் மூலம் தகவல் தெரிவிக்க : copcbe@yahoo.com தொடர்ச்சியான ரோந்துப் பணியின் காரணமாகவும், காவல்துறையின் உடனடி நடவடிக்கையின் காரணமாகவும் , 2012 ம் ஆண்டை விட , 2013 ம் ஆண்டில் கோவையில் குற்றச் செயல்கள் கணிசமாகக் குறைந்திருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். மக்களுடைய பங்களிப்பின்றி காவல்துறையினால் மட்டுமே எல்லாவற்றையும் கட்டுக்குள் வைத்திருக்க முடியாது. ஆகவே நாமும் நம் காவல்துறையினரோடு இணைந்து பணியாற்றுவோம்.

இலவச தொலைபேசி தொடர்பு எண்கள்.

மரியாதைக்குரியவர்களே,
                     வணக்கம் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
 
இந்தியாவின் முக்கிய நிறுவனங்களின் இலவச தொலைபேசி எண்கள்!!!
---------------------------------------------------------------------

இந்தியாவில் உள்ள முக்கிய நிறுவனங்கள் ,அமைப்புகள் ,தொழிற்சாலைகள்
ஆகியவற்றின் இலவச எண்கள் நான் பார்த்தது நீங்களும் அறிந்து கொள்ளுங்கள் .
குறிப்பாக வங்கிகள் , விமானங்கள் ,மொபைல் நிறுவனங்கள் ,கம்ப்யூட்டர் ஐ.டி கஸ்டமர் சேவை ,கோரியர்ஸ் ,நலபிரிவு ,கல்வி நிறுவனங்கள் ,உணவு விடுதிகள் , பயண முன் பதிவு போன்ற இலவச தொலைபேசி எண்கள் கீழே ....

Airways Toll Free Numbers
Air India / Indian Airlines 1800 180 1407
Jet Airways 1800 22 55 22
SpiceJet 1800 180 3333

Automobiles “1-800″ Numbers
Mahindra Scorpio 1800 22 6006
Maruti 1800 111 515
Tata Motors 1800 22 5552
Windshield Experts 1800 11 3636

Banks Toll Free Customer Care
ABN AMRO 1800 11 2224
Axis Bank 1860 425 8888
Canara Bank 1800 44 6000
Citibank 1800 44 2265
Corporatin Bank 1800 443 555
Development Credit Bank 1800 22 5769
HDFC Bank 1800 227 227
ICICI Bank 1800 333 499
ICICI Bank NRI 1800 22 4848
IDBI Bank 1800 11 6999
Indian Bank 1800 425 1400
ING Vysya 1800 44 9900
Kotak Mahindra Bank 1800 22 6022
Lord Krishna Bank 1800 11 2300
Punjab National Bank 1800 180 2222,1800 122 222
State Bank of India 1800 233 7933,1800 44 1955
Syndicate Bank 1800 44 6655

Mobile Phone Companies Customer Service Numbers
BenQ 1800 22 08 08
Bird CellPhones 1800 11 7700
Motorola Customer Care number 1800 3000 4343
Motorola MotoAssist 1800 11 1211
Nokia 1800 425 3388
Samsung 1800 110011
Sony Ericsson 3901 1111
Computers/IT Customer Care
Adrenalin 1800 444 445
AMD 1800 425 6664
Apple Computers 1800 444 683
Canon 1800 333 366
Cisco Systems 1800 221 777
Compaq / HP 1800 425 4999,
1800 112 267,
1800 444 999
Data One Broadband 1800 424 1800
Dell 1800 425 9046
1800 444 026
Epson 1800 44 0011
eSys 3970 0011
Genesis Tally Academy 1800 444 888
HP 1800112267
HCL 1800 180 8080
IBM 1800 443 333
Lexmark 1800 22 4477
Marshal’s Point 1800 33 4488
Microsoft 1800 111 100
Microsoft Virus Update 1901 333 334
Quickheal 18002333733
Seagate 1800 180 1104
Symantec 1800 44 5533
TVS Electronics 1800 444 566
WeP Peripherals 1800 44 6446
Wipro 1600 345 3456,
1800 200 3456,
1800 333 312
xerox 1800 180 1225
Zenith 1800 222 004

Couriers/Packers & Movers
ABT Courier 1800 44 8585
AFL Wizz 1800 22 9696
Agarwal Packers & Movers 1800 11 4321
Associated Packers P Ltd 1800 21 4560
DHL 1800 111 345
FedEx 1800 22 6161
Goel Packers & Movers 1800 11 3456
UPS 1800 22 7171

Education
Edu Plus 1800 444 000
Hindustan College 1800 33 4438
NCERT 1800 11 1265
Vellore Institute of Technology 1800 441 555
Healthcare
Best on Health 1800 11 8899
Dr Batras 1800 11 6767
GlaxoSmithKline 1800 22 8797
Johnson & Johnson 1800 22 8111
Kaya Skin Clinic 1800 22 5292
LifeCell 1800 44 5323
Manmar Technologies 1800 33 4420
Pfizer 1800 442 442
Roche Accu-Chek 1800 11 45 46
Rudraksha 1800 21 4708
Varilux Lenses 1800 44 8383
VLCC 1800 33 1262

Home Appliances
Haier 1800 200 9999
Aiwa/Sony 1800 11 1188
Anchor Switches 1800 22 7979
Big TV 1800 200 9001
Blue Star 1800 22 2200
Bose Audio 1800 11 2673
Bru Coffee Vending Machines 1800 44 7171
Daikin Air Conditioners 1800 444 222
DishTV 1860 180 3474,
1800 12 3474
Electrolux 1860 200 1212,
MTNL / BSNL Users dial – (0124/022) 33001212
Faber Chimneys 1800 21 4595
Godrej 1800 22 5511
Grundfos Pumps 1800 33 4555
IFB 1800 425 5678 (For BSNL and MTNL)
Kelvinator 800 419 4040
Kenstar 1800 419 40 40
LG 1800 180 9999
ONIDA 1800 300 99000
Philips 18601801111
1800 22 4422
Philips (LCD, LED, TFT) 18004256396
Samsung 1800 113 444
Sanyo 1800 11 0101
Sharp 1800 4254 322
Sony 1800 103 7799
TCL 1800 102 5060
Voltas 1800 33 4546
WorldSpace Satellite Radio 1800 44 5432

Hotel Reservations
GRT Grand 1800 44 5500
InterContinental Hotels Group 1800 111 000
Marriott 1800 22 0044
Sarovar Park Plaza 1800 111 222
Taj Holidays 1800 111 825
Insurance
AMP Sanmar 1800 44 2200
Aviva 1800 33 2244
Bajaj Allianz 1800 22 5858
Chola MS General Insurance 1800 44 5544
HDFC Standard Life 1800 227 227
LIC 1800 22 4077,
1800 33 4433
Max New York Life 1800 33 5577
Royal Sundaram 1800 33 8899
SBI Life Insurance 1800 22 9090

Mattresses
Kurl-on 1800 44 0404
Sleepwell 1800 11 2266

Investments/Finance
CAMS 1800 44 2267
Chola Mutual Fund 1800 22 2300
Fidelity Investments 1800 180 8000
Franklin Templeton Fund 1800 425 4255
J M Morgan Stanley 1800 22 0004
Kotak Mutual Fund 1800 222 626
LIC Housing Finance 1800 44 0005
SBI Mutual Fund 1800 22 3040
Sharekhan 1800 22 7500
Tata Mutual Fund 1800 22 0101

Paints
Asian Paints Home Solutions 1800 22 5678
Berger Paints Home Decor 1800 33 8800

Teleshopping
Asian Sky Shop 1800 22 1800
Jaipan Teleshoppe 1800 11 5225
Tele Brands 1800 11 8000
VMI Teleshopping 1800 447 777
WWS Teleshopping 1800 220 777

Travel
Club Mahindra Holidays 1800 33 4539
Cox & Kings 1800 22 1235
God TV Tours 1800 442 777
Kerala Tourism 1800 444 747
Kumarakom Lake Resort 1800 44 5030
Raj Travels & Tours 1800 22 9900
Sita Tours 1800 111 911
SOTC Tours 1800 22 3344

UPS
APC 1800 44 4272
Numeric 1800 44 3266

Others
Consumer Helpline 1800 11 4000
L’Oreal, GARNIeR 1800 223 000
KONE Elevator 1800 444 666
Indane 1800 44 51 15
Aavin 1800 44 3300
Pedigree 1800 11 2121
Kodak India 1800 22 8877
Domino’s Pizza 1800 111 123
World Vision India 1800 444 550
Telecom Monitoring Cell 1800 110 420
Bsnl(cdma) 1800 233 1500
Bsnl 1800 180 1800
: - இதில் உள்ள சில எண்கள் வேலை செய்யவில்லை என்றால்நான் பொறுப்பல்ல அந்த நிறுவனங்களே பொறு
ப்பு ..

உலக முதல் உதவி தினம்

மரியாதைக்குரியவர்களே,
               வணக்கம். கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
 
உலக முதலுதவி தினம் இன்று (செப்டம்பர் 13 )
ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் இரண்டாம் வாரத்தின் சனிக்கிழமை அன்று அனுசரிக்கப்படுகிறது. உலக செஞ்சிலுவை கூட்டமைப்பு கடந்த பதினான்கு வருடங்களாக உயிர்களை காப்பதில் முதலுதவியின் முக்கியத்துவத்தை உணர வைக்க இந்த நாளை கொண்டாடி வருகிறது.
ஒரு உயிரைக்காக்க,மேலும் ஆபத்து ஏற்படாமல் இருக்க,ஒரு குறிப்பிட்ட தாக்குதலில் இருந்து பாதிக்கப்பட்டவரை மீட்க என்று பலவற்றுக்கு முதலுதவி பயன்படுகிறது.
முதலுதவி என்பது ஒரு நோய் அல்லது காயத்திற்குக் கொடுக்கும் முதற்கட்டக் கவனிப்பாகும். சிறந்த மருத்துவ சிகிச்சை கிடைக்கும் வரை இம்முதலுதவி ஒரு நோய்வாய்ப்பட்ட அல்லது காயப்பட்ட நபர்க்கு அளிக்கப்படும்.
1859இல் தான் ஜீன் ஹென்ரி டுனன்ட் ,சல்பிரினோ போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய கிராமவாசிகளை திரட்டினார் .அவர்கள் முதலுதவியையும் செய்தனர். நான்கு ஆண்டுகளுக்கு பின்னர், நான்கு நாடுகள் ஜெனீவாவில் சந்தித்து ,போரால் பாதிக்கப்பட்ட வீரர்களுக்கு உதவுவது என்ற நோக்கத்தோடு ஒரு சங்கத்தை உருவாக்கின .அதுதான் பின்னாளில் செஞ்சிலுவை சங்கமாக வளர்ந்தது. அதன் பிறகு புனித ஜான் அவசர ஊர்தி 1877 இல் தொடங்கப்பட்டது.அது முதலுதவியை கற்பிப்பதற்கென தொடங்கப்பட்டது. அதோடு அதனுடன் நிறைய சங்கங்கள் இணைந்தன. இது போன்ற செயல்களால் முதலுதவி என்னும் சொல் 1878இல் முதன்முதலில் வழங்கப்பெற்றது.

10 செப்டம்பர் 2014

டயரின் கதை!

மரியாதைக்குரியவர்களே,


            வணக்கம். கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம். அன்றாடம் சொந்த வாகனத்திலோ,அல்லது வாடகை வாகனத்திலோ,அல்லது பொது வாகனத்திலோ  என ஏதோ ஒரு வாகனத்தில் பயணிக்கிறோம்.அதில் பொருத்தப்பட்டுள்ள டயரின் கதையை தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா? அதாங்க இது.......
 










வாகனத்தின் டயர் குறியீடு விவரம்.

மரியாதைக்குரியவர்களே,
                                 வணக்கம்.


                    கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம். 


     நாம் பயணிக்கும் அல்லது பயன்படுத்தும்  வாகனத்தின் டயர் குறியீடு விவரம் இந்தப்பதிவில் காண்போம்.உதாரணமாக டன்லப் டயரில் குறிப்பிட்டு உள்ள குறியீடுகளும் அவற்றின் விளக்கமும் காண்போம்.




  



1 - 
Size: 215/55 ZR16அதன் விளக்கம்  215 என்பது 215மில்லி மீட்டர் அளவு கொண்டது ஆகும். டயரின் பட்டன் உள்ள அகலப் பகுதி.
அடுத்த குறியீடான 55 என்பது55 மி.மீட்டர் . இது டயரின் அகலப்பகுதியான 215 மி.மீட்டரின் 55 சதவீத அளவு  ஆகும்.அதாவது 215மி.மீ ஐ 100ஆல் வகுத்து 55ஆல் பெருக்கு.இப்போது வரும் விடை 118.25மி.மீ.இது சைடு சுவர் அளவு ஆகும்.





2 - 
Manufacturer (trade name)தயாரிப்பாளர் பெயர்.

3 - 
Tread designation

4 - 
Code for tubeless tyres

5 - 
Radial-ply tyre construction (radially oriented fibres in carcass)

6 - 
Notes for versions with »rim protection«

7 - 
Date of manufacture - see Tyre ageing





8 - 
E number = Approval number. Tyre complies with European Directives/Regulations

q  
European Directives/Regulations ECE-R30, EEC92/93 or ECE - R 117
  Note
Tyres which comply with EU Regulation ECE - R117 (new road noise limits for tyres) also carry the marking „S“ (for Sound) on the sidewall.

For passenger car tyres with a cross sectional width of up to 185 mm: from 1 October 2009 onwards

For passenger car tyres with a cross sectional width of between 185 mm and 215 mm: from 1 October 2010 onwards

For passenger car tyres with a cross sectional width of over 215 mm: from 1 October 2011 onwards

9 - 
Country of manufacture - Made in Germany.

10 - 
Manufacturer's internal tread code

11 - 
Department of Transportation - the tyre conforms to the U.S. Department of Transportation guidelines

12 - 
Example: Dunlop SP Sport 9000

DOT- Code ID number for manufacturer's plant, tyre size and tyre model

13 - 
Maximum permissible load (load index)



Where applicable with an additional marking „Reinforced“ or „Extra Load“ or „XL“ for increased tyre load capacity

q  
Reinforced, Extra Load tyres → Chapter

14 - 
Number of plies in the centre of the tread and in the sidewalls and information about the material

15 - 
Position of TWIs (Tread Wear Indicators)




16 - 
Tread wear index - abrasion resistance - based on US standard test

17 - 
Traction rating - evaluation of wet braking capacity A, B or C according to US test

18 - 
Temperature rating - evaluation of temperature rating A, B or C according to US test

19 - 
Safety notes for use or fitting of tyre

20 - 
Reference to ultra lightweight tyre construction, tyres are up to 30% lighter

21 - 
Specified direction of rotation for tyre

22 - 
Inmetro designation, required only for Brazil










முனைவர்.இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phil.,Ph.D., அவர்களது வாழ்க்கைக்குறிப்பு... (Dr.R.K.Manikkam, professor,Writer)

                                                                                                        முனைவர். இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phi...