14 மார்ச் 2015

தண்ணீர் குடியுங்க...

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.

தண்ணீர் தாகத்தை தீர்ப்பதோடு, உடலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வைத் தரக்கூடியதும் கூட....
நாம் வசிப்பது இந்தியாவில் இங்கு அதிக படியான வெயில் இருப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்..
அதனால் டீ-ஹைடிரேஷன் வர நிறைய வாய்ப்புகள் இருக்கு,
நாம் தண்ணீர் குடிப்பதை அலட்சியப்படுத்துவதால் ஏற்படும் பிரச்சனைகள் அதன் அடிப்படையிலேயே இந்த விழிப்புணர்வு பதிவு..
மேலும் தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால் பல்வேறு நோய்களில் இருந்து விடுபடலாம் என்பது தெரியுமா? அதிகாலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் அறிவீரா? (சர்க்கரை நோயாளிகளை தவிர )
1)அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளில் முதன்மையானது குடலானது சுத்தமாகும்
2)தண்ணீரானது உடலின் மூலைமுடுக்குகளில் தங்கியுள்ள நச்சுக்களை சிறுநீர் மூலமாக வெளியேற்றிவிடும். இதனால் உடலானது சுத்தமாக இருக்கும்.உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுக்கள் வெளியேறி, விரைவில் பசி எடுக்க ஆரம்பித்துவிடும்.
3)அதிகாலையில் வெறும் வயிற்றில் தாண்ணீர் குடித்து வந்தால், உடலின் நீர்ச்சத்தானது அதிகரித்து, தலைவலியானது குறையும்.#உண்மை..அல்சரை வரவிடமால் தடுக்கும்
தண்ணீர் சரியா குடிக்காமல் இருந்தால் மரணம் கூட ஏற்பட வாய்ப்பு இருக்கிறது #உண்மை
1) நம் உடம்பில் இருக்கும் ரத்தத்தில் தண்ணீரின் அளவு கூடுதல்%ல இருக்கிறது..அது குறையும் பட்சத்தில் இரத்தத்தின் தன்மை (thick) கெட்டியாக மாறும்.(blood volume drops)..சர்க்குலேஷன் குறைகிறது.
இரத்த அழுத்தம் குறையும்..
2) மூளைக்கு ரத்தத்தின் வழியே செல்லும் ஆக்சிஜன் அளவு குறையும்..
அதன் அளவு குறையும் போது மயக்கம் வரும்,இன்னமும் எழுந்து நிற்கும்போதே மயக்கம் வர வாய்ப்பு இருக்கிறது..இதனால் வரக்கூடியது Orthositic hypotension. இரத்தம் கெட்டி தன்மையடந்து முக்கியமான உறுப்புக்களுக்கு செல்லாமல் இருப்பதால்.”ஆர்கன் செயலிழப்புவரும் ( Hypovolemic shock )..இது உயிரிழப்பையும் கொண்டு வரும்.
3) ”கிட்னி” பிரச்சனைகளும் சரியாக தண்ணீர் அருந்தாமையால் வருவதே.
4)Mental Changes,confusion,seizures(fits) குழப்பமான மன நிலை,ஃபிட்ஸ் வரவும் வாய்ப்பு இருக்கிறது..
ஒரு நாளைக்கு நாம் அருந்த வேண்டிய தண்ணீரி அளவு 5 லிட்டர்
வயதானவர்களுக்கும்,மற்றும் குழந்தைகளுக்கும் இந்தவிதமான உடல் உபாதைகள் சீக்கிரத்தில் வந்துவிடும்.வயதானவர்கள்,சிறுபிள்ளைகள் யாரையவது சார்ந்துதான் இருக்கிறார்கள், மேலும் தண்ணீர்தானே என அலட்சியபடுத்தவும் கூடும்..ஒரு ”ஆர்கன்” செயலிழப்பு என்பது எத்துணை கொடுமையான விஷயம்..அதை நாம் வரும்முன்னே நீர் அருந்தி தடுப்போம்.
முக்கியமான விஷயம்: காலையில் எழுந்ததும் 2 டம்ளர் தண்ணீர் நிச்சயம் அருந்த வேண்டும்..தூங்கிக்கொண்டிருக்கும் “ஆர்கன்கள்” அதை நாம் “ஆக்டிவே”செய்வதற்காக..(internal organ activate).
சாப்பிடுமுன் ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்..(digestionக்காக)
அது போல குளிக்க போகும் முன் ஒரு டம்ளர் நிச்சயம் அருந்த வேண்டும்..(குளிக்கும்போது ரத்த அழுத்தம் குறையும் என்பதால்..)
அதே சமய தூங்குமுன் நிச்சயம் 1 டம்ளர் நீர் அருந்தணும்..(அது ஹார்ட் அட்டாக் மற்றும் ஸ்டோக்” வருவதை தடுக்கும்)
தண்ணீர் கலர் அற்றது..மணமற்றது..ஆனால் அது நம்மை நம் உடல் நிலையை சரியான முறையில் வைத்துக்கொள்ள பயன்படும் ஒரு அருமையான உணவு..அந்த உணவு நம் உயிருக்கு தேவையான ஒன்று..
தண்ணீரை அருந்துவோம்..
உடலை பேணுவோம்.
உயிரை காப்போம்..
வரும் நோயிலிருந்து காத்துக்கொள்வோம்..
‪#‎நேசவிழுதுகளின்_சிந்தனையில்_இருந்து99‬

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முனைவர்.இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phil.,Ph.D., அவர்களது வாழ்க்கைக்குறிப்பு... (Dr.R.K.Manikkam, professor,Writer)

                                                                                                        முனைவர். இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phi...