16 மார்ச் 2015

கவியரசு என்னும் சமூக அக்கறையுள்ள இளைஞன்


      அவசியம் படியுங்க,பகிருங்க,சிந்தனை செய்யுங்க,
   கவியரசு என்னும் சமூக அக்கறையுள்ள இளைஞன்..


      மரியாதைக்குரியவர்களே,
        வணக்கம். 
      கடந்த14மார்ச்2015சனிக்கிழமைஅன்று மாலை5.00மணியளவில் சத்தியமங்கலத்தில் நண்பர் கவியரசு (வயது22) அவர்கள் என்னைச் சந்தித்தார்.சமூதாய நலனுக்கான சேவைகள் செய்ய ஆர்வமுடன் இருப்பதாகவும் அவரது நண்பர்கள் 15பேரையும் சேர்த்துக்கொண்டு மரம் வளர்க்க திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கு தக்க வழிகாட்டுமாறு என்னை ஆலோசனை கேட்டார்.
         நான் எனது அனுபவத்தை முன்னுதாரணமாகக்கூறி,  ''மரம் வளர்ப்பது என்பது நம்மைப்போன்றோர்களுக்கு இயலாத காரியம்.அரசியலும்,அதிகார வர்க்கமும்,சுயநலவாதிகளும் பொறாமையுள்ளவர்களும் உள்ள இக்காலத்தில் மரங்களை வளர்க்கவும் விடமாட்டார்கள் மாறாக நமக்கு பல இன்னல்களைத்தான் கொடுப்பார்கள்.நமது விருப்பம் நிறைவேறாது.
             எனவே சமூகநலனுக்காக மாற்று பணிகளை செய்யலாம் என ஆலோசனை வழங்கினேன்.
              அதன் பின்னர் மறுநாள் அதிகாலை கவியரசு அவர்கள்  4.46 மணிக்கு என்னிடம் முகநூல் இன்பாக்ஸ் இல் விவாதம் செய்த தகவலை தங்களுக்கு பகிர்கிறேன்.
                       இந்த கவியரசு போல இன்னும் பல கவியரசுகள் இருக்கத்தான் நம்ம நாடும் இந்த அளவிற்காவது சிறப்பாக இருக்கிறது.எனவே  கவியரசு என்னும் இளைஞனின் எண்ணத்திற்கு செயல்வடிவம் கொடுக்க ஆதரவளிப்போம் வாழ்த்தி வரவேற்போம் வாங்க.சமூகத்தின்பால் கொண்ட அக்கறை மாறாமல் இதேபோல நீட்டித்து பல்லாண்டு காலம் நீடூழி வாழ வாழ்த்துவோம் வாங்க..

  அவசியம் படியுங்க,பகிருங்க,சிந்தனை செய்யுங்க,

திங்கள் 04:46 AM
அன்பு நண்பரே இனிய இளங்காலை வணக்கம் இந்த சமுதாயம் எப்படி இருக்கிறது என்று அவ்வளவும் தெரியா தென்றாலும் ஏதோ தெரியும். ஒரு சமுதயத்தை சீர்படுத்துவது என்பது என்னற்ற மழலை செல்வங்களை நற்பண்புகளுடன் வளர்பதை காட்டிலும் மிகக் கடினமானது. சமுதாய சீர்குலைப்பது ஒரு மழலையை கற்பழிப்பு-கு ஈடானது என்று தாங்கள் கூறியது என்மனம் ஏற்க்க மறுக்கிறது. நல்லா பாருங்க எங்க குமரன்நகரில்.. எங்க வீட்டில் கொய்யா,நெல்லி மரங்கள் வைத்தோம். அதைக் கண்டு அருகில் வசிக்கும் அனைவரும் சிறு நெல்லி மரம் வேண்டும் என்று என்னிடம் அன்பு கட்டளையிட்டார்கள் சரி என்று கூறிவிட்டு எங்கள் வீட்டில் விதைகளை ஊன்றி பதியம் போட்டு வைத்திருந்தேன். விதை முளைத்தது மூன்று மாதங்கள் கடந்து ஒரு அடி அளவுக்கு சிறு நெல்லி 15 செடியும் கொய்யா 10 செடியும் வளர்ந்து விட்டது சரி நாளை கொடுத்துவிடலாம். என்று பார்த்தால் அனைத்து செடியும் காணவில்லை.;-( ஆத்திரத்துடன் கத்திக்கொண்டே வீட்டில் எனது வாதம் துவங்கியது எங்க செடியெல்லாம் என்று வீட்டில் சொன்னார்கள் அந்த செடியெல்லாம் முதலில் பக்கத்து தோட்டத்து காரங்க 3 நெல்லி செடியும் 2 கொய்யா செடியும் வேண்டும் என்றார்கள் குடுத்து விட்டேன் பக்கத்து வீட்டில் கேட்டார்கள் அவர்களுக்கும் இரண்டு செடிகளைக் குடுத்தேன் என்றார்கள். மீதி உன் சித்தி வீட்டில் போய் பாரேன். போய் பார்த்தேன் நெல்லி செடி 2 டும் கொய்யா செடி3 ம் இருந்து அங்கே கேட்டேன் சித்தி இருந்து உங்க சித்தப்பா யாரோ அந்த செடி வேண்டும் என்று வந்தார்கள். கொடுத்து விட்டார். என் சிந்தனை செயல் பட்டது என் இலட்சியம் நிறைவேறும் என்ற நம்பிக்கை இருக்கிறது உங்களை சந்தித்த தினமே விவாதம் செய்ய வேண்டுமா என்று தான் யோசித்தேன் மேலும் தங்களை "குரு'வாக கருதிகிறேன் இப்போது கூறுங்கள் நமது உழைப்பு பலரின் வயிற்றை நிரப்பா விட்டாலும் மயக்கநிலை இல்லாம் மனதை புத்துணர்வோடு வைத்து விட்டால் போதும். தங்கள் நற்பண்புக்கு நன்றி
19 மணி நேரம் முன்பு
 
 
தவறாக எண்ணிக்கொள்ளவேண்டாம் பிழைதிருத்த முடியவில்லை
 
12 நிமிடங்களுக்கு முன்பு
 மரியாதைக்குரிய நண்பரே,வணக்கம்.தங்களது வாதம் எனக்கான வாதமன்றுங்க.சமுதாய நலனுக்கான வாதம்தாங்க.முதலில் தங்களது மரம் வளர்ப்பு ஆர்வத்தை உளமார வாழ்த்துகிறேன்.அடுத்து தங்களைப்போன்றே பத்து சதம் நபர்களாவது தீவிரம் காட்டுவதால்தாங்க இன்னும் நாடு உள்ள பசுமையை காப்பாற்றிக்கொண்டு இருக்கிறது..தாங்களைப்போன்ற இளைய சமூகம் ஆர்வமிகுதியால் நாட்டின் மீது பற்று மிகுதியால் சமூக நலப்பணிகளை செய்ய விருப்பப்படுவதை வரவேற்கிறேன்.மீண்டும் தங்களுக்கு அன்புடன் கூறுவது என்னவென்றால்,தங்களது எண்ணங்களும்,செயல்களும் நாட்டின் நலன் கருதி!.சமூதாய நலன் கருதி! என்பதை அறியும்போது எனக்கு மிகவும் சந்தோசத்தைக்கொடுக்கிறது.தங்களுக்கு என்ன தேவை என்றாலும் என்ன சந்தேகம் என்றாலும் என்னை அணுகலாம்.காரணம் எனது அனுபவங்களையும் சந்தித்த வேதனைகளையும் பிழிந்து சாறாக தங்களைப்போன்று ஆர்வமுள்ள நண்பர்களுக்கு ஆலோசனையாக தருகிறேன்.சிலவேளை கசப்பாக இருக்கலாம்.அதே ஆலோசனை அடிபட்டவர்களுக்கு ஆற்றும் மருந்தாக இருக்கலாம்.எந்தவகையாயினும் சமுதாய நலனுக்காக இருக்கும் என்பதால்,சமூக நலனுக்காக எப்படியான வாதத்தையும் என்னிடம் நடத்தலாம்.அதற்காக பெருமைப்படுபவன் நான் என்பதை மீண்டும் நினைவுப்படுத்திக்கொண்டு என்னை எப்போதும் சந்திக்கவும்,எதிர் வாதம் செய்யவும் வேண்டும் என்ற மகிழ்ச்சி நிறைந்த எதிர்பார்ப்புடன் அன்பன் பரமேஸ்வரன். 9585600733
 
 
தங்களது ஆர்வப்படி, சிந்தனைப்படி,கொய்யா மரங்கள் போன்று தேவைப்படும் மரங்களை விருப்பமுடன் வளர்க்கும் ஆர்வலர்களுக்கு கொடுத்தால் கண்டிப்பாக வளர்ப்பார்கள்.அதேபோல பொதுச்சாலைகள்,வீதிகள்,புறம்போக்கு இடங்கள் போன்ற அரசுநிலங்கள் என மற்ற இடங்களில் வைக்கும் மரங்களை யார் காப்பாற்றுகிறார்கள்?உதாரணமாக நம்ம மக்கள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்தபோது  அவர்களது பிறந்த நாளை போற்றும் வகையில் 64இலட்சம் மரங்கள் அரசாங்கம்,அதாவது வனத்துறை,ஊராட்சித்துறை,கல்வித்துறை,நெடுஞ்சாலைத்துறை என அரசுத்துறைகள் உட்பட அரசியல்வாதிகளும் வைத்தார்கள்.அந்த மரங்களில்  எத்தனை மரங்கள் இன்றுவரை காப்பாற்றப்பட்டு உள்ளன? என கணக்கெடுத்துப்பார்க்க வேண்டும்.
அதனால்தாங்க,மரங்களை வைப்பது மிக எளிதானது.அதனை காப்பாற்றுவது மிக மிக கஷ்டமானது. என வாழ்த்துக்களுடன் மீண்டும் சந்திப்போம்.தங்களது எண்ணங்களும்,செயல்களும் சமூக நலன் சார்ந்தவையாக இருக்க வேண்டும். என்ற வாழ்த்துக்களுடன் அன்பன் பரமேஸ்வரன் டிரைவர் consumerandroad.blogspot.com
உரையாடல் முடிவு
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முனைவர்.இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phil.,Ph.D., அவர்களது வாழ்க்கைக்குறிப்பு... (Dr.R.K.Manikkam, professor,Writer)

                                                                                                        முனைவர். இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phi...