07 மார்ச் 2015

கிரிக்கெட் -வரலாறு

             கிரிக்கெட் எங்கு ஆரம்பித்தது, யாரால் தோற்றுவிக்கப்பட்டது என்பதற்கு ஆதாரம் இல்லை.இது யாராலும் அறியப்படாத ஒரு உண்மை ஆகும். கிரிக்கெட் எப்படி தோன்றியது என்பதற்கு எந்த வித பலமான ஆதாரமும் இல்லை.என்றாலும், இந்த விளையாட்டு சாக்சன் அல்லது நார்மன் காலத்தில், வேல்ட் என்ற அடர்ந்த காடுகள் மற்றும் சம வெளிகளில் (இங்கிலாந்துக்கு தென் மேற்கு பகுதி மற்றும்கென்ட், சயாதுக்சுக்கு அருகில்) வாழ்ந்த சிறுவர்களால் விளையாடப்பட்டு வந்தது என்று கூறப்படுகிறது. இடைக்காலங்களில் வேல்ட் பகுதியின் மக்கள் சிறு வேளாண்மைத் தொழிலிலும், உலோகப் பொருட்களை கொண்டு வேலை செய்யும் தொழிலிலும் ஈடுபட்டிருந்தனர். பதினேழாம் நூற்றாண்டுவரை பெரிதும் குழந்தைகள் விளையாட்டாக இருந்து வந்த கிரிக்கெட், இந்த நூற்றாண்டில் பெரியவர்களாலும் விளையாடப்பட்டது.
குழந்தைகளால் கண்டுபிடிக்கப்பட்ட கிர்க்கெட் விளையாட்டு, பல தலைமுறைகளுக்கு அவ்வாறே இருந்து வந்தது. 17 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் பெரியவர்கள் இந்த ஆட்டத்தை ஆடினார்கள் என்று நம்மால் கேள்விப்பட முடியவில்லை. பவுல்ஸ் மிக பழமை வாய்ந்த ஆட்டம் என்பதால், கிரிக்கெட் பவுல்சில் இருந்து பிறந்திருக்கக் கூடும் என்று நம்பப்படுகிறது. ஒரு பந்து அதன் இலக்கை அடைவதற்கு முன்னர் மட்டையை வைத்திருக்கும் ஒருவன் அதனை தடுத்து இலக்கில் இருந்து தள்ளிப்போகும் அளவுக்கு அந்த பந்தை இந்த ஆட்டத்தில் அடிக்கவேண்டும். ஆடு மேயும் இடங்களிலும், சம வெளிகளிலும் விளையாடப்பட்டு வந்த இந்த ஆட்டம், ஆரம்பத்தில் செம்மறி ஆட்டிலிருந்து எடுக்கப்பட்ட கம்பிளி உருண்டைகளை பந்தாகக் கொண்டும், (அல்லது ஒரு கல் அல்லது இரு சிறிய மரத்துண்டு); ஓர் குச்சி அல்லது ஒரு வளைந்த கோலைக் கொண்டோ அல்லது பண்ணையில் இருக்கின்ற ஒரு கருவியை மட்டையாக பயன்படுத்தி விளையாடினர்; மற்றும் முக்காலி, ஒரு மரத்ததண்டு, வாயிற்கதவு (எ.கா., விக்கெட் கேட்) ஆகியவற்றை விக்கேடாக பயன்படுத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முனைவர்.இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phil.,Ph.D., அவர்களது வாழ்க்கைக்குறிப்பு... (Dr.R.K.Manikkam, professor,Writer)

                                                                                                        முனைவர். இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phi...