13 ஆகஸ்ட் 2011

மின் சாதனங்கள்


வளர்ந்துவரும் இலத்திரனியல் தொழில்நுட்பமும் நாங்களும்:
கல்தோன்றி மண்தோன்றா காலத்திற்கு முன் தோன்றியஎன்றெல்லாம் பெருமை பேசியே காலத்தை கடத்தினோம். இதனால் கால நீரோட்டத்தில் எதிர்நீச்சல் அடிக்காமல் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்ததோமே அன்றி உருமாறிக் கொண்டு ஒடும் உலகத்துடன் நாங்களும் பங்காளிகளாக மாறாது நேரத்தை வீணடித்தோம்.
மின்சாரம் இருந்தும் அதன் பாவனையை முழுமையாகப் பயன்படுத்தினோமா என்றால் இல்லை. விறகு வெட்டியே உணவு சமைத்தோம். இன்று மின்சாரம் இல்லை என்றால் எம்மால் வாழமுடியாத நிலைக்கு வந்தபின் தான் முன்னர் அதனை முறையாகப் பயன்படுத்தவில்லை என விட்ட தவறுக்காக மனம் வருந்துகிறோம். எமக்கு கிடைக்கும் அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அதனால் கிடைக்கும் பயனை சிறந்த முறையில் முழுமையாக கையாளத் தெரிந்து வைத்திருத்தல் வாழ்க்கைக்கு அவசியம். இல்லையேல் இருந்தும் உபயோகமற்றதாகிவிடும். ஒரு உபகரணமானாலும் அதை தவறாகப் பயன் படுத்துவதனால் தனக்கும், ஏன் மற்றவர்களுக்கும் கெடுதி விளைவிப்பதில் தான் முடியும். ஆனால் இவற்றை மாற்றியமைக்க இன்னும் காலம் கடந்து விடவில்லை.
இன்றைய நவீன உலகில் எமது வாழ்வோடு பின்னிப்பிணைந்துள்ள இலத்திரனியல் இணைய ஊடகங்களை நாம் எடுத்துப் பார்ப்போமேயானால் இவற்றின் ஆதிக்கம் எம்வாழ்வில் ஏற்படுத்தி இருக்கும் மாற்றங்கள் எமக்குப் புரியும். வங்கிக்குப்போகாமல் பண மாற்றீடுகளும், தபாற்கந்தோருக்குப் போகாமல் தபால் பரிமாற்றமும், கடைக்குப் போகாமல் உணவு(ப்பொருட்கள்) வீட்டுக்கு வருதலும், அலுவலகத்திற்குப் போகமலேயே வீட்டில் இருந்து கடமையை செய்வதும், விமானச் சீட்டை வீட்டில் இருந்தே கொள்வனவு செய்வதும், இன்னும் எத்தனை…. இவற்றுக்கெல்லாம் மூலகாரணமாக கணணியும் இணையமுமே உள்ளன.
இங்கு இணையத்தளங்கள் பற்றிய எமது பார்வையைத் திருப்புவோமானால், சுமார் 50 வருடங்களிற்கு முன்பு இருந்தே இதன் பாவனை குறிப்பிடப்பட்ட அளவில் இருந்து வந்துள்ளது. ஆரம்ப காலங்களில் அரச துப்பறியும் மற்றும் பாதுகாப்பு பிரிவினரால் உபயோகப்படுத்தப்பட்டு காலப்போக்கில் அலுவலகங்களிலும் பின்னர் சாதாரண மக்களிடையும் பாவனைக்கு வந்தது. கடந்த 17 வருட காலத்தில் அபார வளர்ச்சி கண்ட இலத்திரனியல் ஊடகங்கள் மக்களின் அன்றாட வாழ்வில் பிரிக்க முடியாத ஒன்றாகவே அமைந்து விட்டன. ஆரம்ப காலங்களில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே உபயோகப்படுத்தும் உபகரணமாக பார்க்கப்பட்ட கணணி இன்று எமது இல்லங்களில் சாதாண பாவனைப்பொருளாக மாறிவிட்டது. ஆனால் அதன் உபயோகம் இன்னும் பரந்த அளவில் பயன்படுத்தப்படுகின்றதா என்பதும் இதன் பாவனை எம்மவர் மத்தியில் எவ்வாறு வேர் ஊன்றி உள்ளது என்பதும் சிந்தித்துப் பார்க்கபடவேண்டி ஒன்றாகும்.
தொலைபேசியை எடுத்துக் கொண்டாலோ வயது வித்தியாசம் இன்றி எல்லோரும் உபயோகப் படுத்துகின்றோம். தொலைக்காட்சியை எல்லோரும் பார்க்கின்றோம்., அதேபோல பத்திரிகைகளையும் எல்லோரும் வாசிக்கின்றோம்.,இதை எல்லாம் ஒருங்கே தன்னகத்தே கொண்ட கணணியை அல்லது இணையத்தை உபயோகிக்க அல்லது கற்றுக்கொள்ள பின்னிற்பது கவலைக்குரியது ஒன்றாகும். இது சிறுவர்களுக்கோ அல்லது மாணவர்களுக்கோ என உருவாக்கப்பட்டதோ ஒன்றல்ல.
கற்பதற்கோ வயது, காலம், நேரம் என்று ஒன்றும் வரையறை கிடையாது. யார் வேண்டுமானாலும் எதையும் எப்போதும் கற்றுக் கொள்ள முடியும். ஆர்வம் ஒன்றே தேவை. இதற்கு உதாரணமாக சில நாட்களுக் முன் கணணி கல்வியை கற்பிக்க ஆசிரியர் தேவை என்ற விளம்பரம் ஒன்று வந்திருந்தது. மாணவர்கள் யார் என வாசித்த போது சிறு அதிர்ச்சியும் காத்திருந்தது. 80முதல்90வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனப்போடப்பட்டிருந்தது. அங்கு அவர்களின் வயதைவிட ஆர்வமே முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியதாகும். அது பாரட்டப்படவேண்டியதுமாகும். இந்த இடத்தில் இன்னுமொரு சம்பவம் ஞாபகம் வருகின்றது சில நாட்களுக்கு முன்பு நீண்ட நாட்களாக (சுமார்10 ஆண்டுகள்) தொடர்பு இன்றியிருந்த நண்பர் ஒருவருடன் தொலைபேசியில் உரையாட சந்தர்ப்பம் ஏற்பட்டது உரையாடிமுடிந்ததும் அவருடைய இமெயில் முகவரியை பெற்று அதனுடாக தொடர்பு கொள்ள முயன்றேன். அதற்க்கு அவர் அளித்தபதில் "எனக்கு உது ஒண்டும் நோடிக்காது என்பதுதான்" அவரை கணனியின் முன் அமர்ந்து முயர்ச்சி செய்யும்படியும், அதற்க்கான சில எளிய வழிமுறைகளையும் கூறி  தொடர்பை துண்டித்தோம். என்ன அதிசயம் அடுத்த ஒருகிளமையில் அவர் இண்டநேற்ரில் face book வழியாக தொடர்பு கொண்டார். இங்கு எம்மவரின் முயற்ச்சி இன்மையையே சுட்டி காட்ட விரும்புகின்றேன்.
எம்மவர் மத்தியில் கணணியின் பாவனை வளர்சி அடைந்து வருவது பாராட்டப்படவேண்டிய ஒன்றாகும்.ஆனால் இன்னும் பெருகவேண்டும் என்பதே எதிர்பார்ப்பு. இவ் இணையத்தளத்திலேயே தற்போது எமது ஊர் பெரியவர்களின் தன்னார்வ முயற்சிகளான வரலாற்றுகட்டுரைகள், ஆய்வுகள் போன்ற ஆக்கங்கள்  மிகவும் வரவேற்கத்தக்கது. இதனையே ஏனையவர்களும் தொடர வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். பிரிந்தவர் இணையவும், வாழ்நாளிலே காணதவர் உறவு பாராட்டவும், தெரிந்தவர் நட்பைப் பேணவும் இவ் இணையத்தளம் பாலம் அமைப்பது போல, மேலும் எங்கள் கிராமத்தின் தொன்மியங்களை எடுத்துரைக்க பெரியோர் வரவு அவசியமானது ஆகும். பலர் இங்கு இணைந்தால் தான் பயன் பெரிதாகும்., ஊர் ஒன்று கூடினால் தான் தேர் இழுக்கலாம்.
எங்கும் எதிலும் நன்மையும் தீமையும் இருக்கவே செய்யும். அசுர வளர்சி அடைந்து வரும் இலத்திரனியல் ஊடக வாழ்வில் எவ்வளவு எமக்கு பயன் இருக்கிறதோ அதே போல அதன் தவறான உபயோகத்தால் பல தீமைகளும் நிகழ்வதை நாம் நாளாந்த வாழ்வில் காண்கின்றோம். எதையும் எமக்கு நன்மை தரக்கூடிய வகையில் உபயோகிப்பதன் மூலம் எமது வாழ்வை வழமாக்கிக் கொள்வோமாக.
                                                 
-Electricity is a good servant, but a bad master-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முனைவர்.இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phil.,Ph.D., அவர்களது வாழ்க்கைக்குறிப்பு... (Dr.R.K.Manikkam, professor,Writer)

                                                                                                        முனைவர். இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phi...