10 மே 2017

விஜயகாந்த் என்னும் அற்புத மனிதர்.

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.கேப்டன் அவர்களை சிலர் தமிழ்நாட்டில் உள்ள விஜயகாந்த் எனும்
முட்டாள் என்கின்றனர்.இதோ கேப்டன் விஜயகாந்த்  பற்றிய செய்தி :
இலங்கைப் போர்,
அகதிகள் மறுவாழ்வு,
கார்கில் போர்,
கும்பகோணம் தீ விபத்து,
ஆந்திரா புயல்,
ஒரிசா வெள்ளம்,
குஜராத் நிலநடுக்கம்,
தமிழகத்தின் சுனாமி
இது போன்ற பேரிடர்கள்
இந்தியாவில் எங்கு
நடந்தாலும் முதல்
முட்டாளாக இவர் தான்
தன் சொந்தப் பணத்தை
கொடுத்து துணை நிற்பார்...
தான் சுயமாக சம்பாதித்த
பணத்தில் பாதிக்கப்பட்ட
மக்களுக்காக கொடுத்த
நிவாரணத் தொகை மட்டும்
ருபாய் 10 கோடிக்கு மேல்....
ஊழல் செய்த பணம் இல்லை...
ஏமாற்றி சேர்த்த பணம் இல்லை...
உழைத்து சம்பாதித்த பணம் !!!
அன்றைய காலத்தில் 10 கோடி
இன்றைய 100 கோடிக்கு சமமானதே....
(மக்களுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ்நாட்டின் தெய்வங்களாகிய கருணாநிதியும், ஜெயலலிதாவும் இந்த இழப்புக்கு தங்கள் சொந்த பணத்திலுருந்து ஒரு ரூபாய் கூட வழங்கியதில்லை)
2002 ல் நெசவுத் தொழில்
நழிவுற்ற போது நெசவாளர்கள்
சாப்பாட்டிற்கே கஷ்டபட்ட போது
நம் தெய்வங்கள் ஜெயா & கருணா
கஞ்சி தொட்டி திறந்து கஞ்சி
வழங்கிய போது...
இந்த முட்டாள் மட்டும் நேரில் சென்று
பத்து லட்சத்திற்கு நெசவு துணி வாங்கிவிட்டு...
இன்று நான் வாங்கியிருக்கிறேன்,
என்னை பார்த்து நிறைய பேர் வாங்க வருவாங்க, உங்கள் தொழில் முடங்கி விடாதுகவலை பட வேண்டாம்
என்று கூறினார்....
மேலும் இந்த முட்டாள்
சென்னையில் இலவச
மருத்துவமனை கட்டி
கடந்த 20 வருடங்களாக
இலவச மருத்துவம்
வழங்கி கொண்டிருக்கிறார்....
இவர் சுயமாக சம்பாதித்த பணத்தில்
மிகப் பெரிய மண்டபம் கட்டி
அதற்கு தாய் தந்தை பெயர் சூட்டி
தினமும் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கிய ஒரு அடி முட்டாள்
இவர்தான்....

காது கேளாதோர்,
வாய் பேச முடியாதோர்
இல்லங்களுக்கு மாதா மாதம் நன்கொடை.....
கை, கால் ஊனமுற்றவர்கள் இல்லங்களுக்கு மாதா மாதம் நன்கொடை.....
தன்னோடு பணியாற்றிய 100 க்கும் மேற்பட்டவர்களுக்கு பென்சன் வழங்க ஏற்பாடு......
இது போன்ற எண்ணற்ற
செயல்களுக்காக இந்த பிழைக்க
தெரியாத முட்டாளுக்கு
அப்துல்கலாம் அவர்கள் கையால்
சிறந்த குடிமகன்
என்ற விருதும் வழங்கபட்டது.....
சென்னை வெள்ளத்தில்
மக்களின் முதல்வர் முகத்தை பார்த்தாங்களோ இல்லையோ,
இந்த ஆளு முகத்தை அனைவருமே பார்த்தனர்....
சினிமா உலகில் எண்ணற்ற புதுமுகங்களை அறிமுகப்படுத்தி அவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றியவர் யாருன்னு தெரியுமா??
இந்த முட்டாள் தான்....
பல அறிவு ஜீவிகள்
நடிகர் சங்க தலைவர்களாக
இருந்தும் அவர்களால்
நிர்வகிக்க முடியாமல்,
கடனை அடைக்க முடியாமல்
வெளியேறிய ஜாம்பவான்களில்
எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி தாங்க...
ஆனால் நம்ம சொல்ற
இந்த முட்டாள் தாங்க
தூக்கி விட்டாரு அந்த சங்கத்தை....
இன்னைக்கு பேஸ்புக்,
வாட்ஸ் அப் ல இந்த
முட்டாளை தாங்க நம்ம கிண்டல்
பண்ணிட்டு இருக்கோம்.....
நான் எனக்கு தெரிந்த
விஷயங்களை மட்டும் தான் சொல்லியிருக்கேன்.
இதுபோன்று அவர் செய்த
முட்டாள்த்தனமான உதவி்கள்
இன்னும் பல.....
அன்று அப்துல்கலாம் மறைவுக்கு
இந்த நாடே வருந்தியது.
அன்றும் இத்தனை மக்கள் இருக்காங்களேனு பார்க்காம,
பெரிய பெரிய தலைவர்கள்
இருக்காங்களேனு பார்க்காம
இந்த ஆளு அழுததுல
எவ்வளவு உண்மை இருந்ததுனு
பார்த்த எல்லாருக்குமே தெரிஞ்சுருக்கும்.
(அவரோட மறைவுக்கு கூட வராம உடல்நிலை சரியில்லைனு சொன்ன கருணாநிதியும் ஜெயலலிதாவுக்கும் இப்போ எப்படி ஓட்டு கேட்க வரப்ப உடம்பு சரியாச்சுனு தெரியல.)
இது போன்ற தேச துரோக செயலுக்காக இந்த முட்டாளுக்கு நாம் அளித்து கொண்டிருக்கும் தண்டணைகள்
ஏராளம் ஏராளம் ஏராளம்..
தைராய்டு பிரச்சினை இருப்பதால்
குரல் வளம் குறைந்திருப்பதாலும் எதார்த்தமான மக்கள் மொழியில் பேசுவதாலும்,
நாம் இவரை கோமாளி,
குடிகாரர் என்றும் அழைக்கிறோம்....
நீங்களே ஒரு முடிவெடுங்கள்.....
பதிவிட்ட  முகநூல் நண்பர் அருண்குமார் அவர்களுக்கு நன்றிங்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சதுரங்கம் வாழ்க்கைக்கு தரும் பாடம்.

  ஒவ்வொரு அசைவும் முக்கியமானது. ஆட்டத்தில் மட்டுமல்ல வாழ்க்கையிலும். வாழ்வில் நாம் செய்யும் ஒவ்வொரு நிகழ்வையும் மிகவும் கவனமாக செயல்படுத்த வ...