23 மே 2017

தீண்டாமை ஓட்டடா!

 மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை அவர்களின் தீண்டாமை ஒழிப்புக் கவிதை..சிந்திக்க படியுங்க!

                          தீண்டாமை என்ற தீமையை  ஓட்டடா!

ஓட்டடா! ஓட்டடா!


நாட்டைவிட்டே ஓட்டடா!
தீட்டடா மனிதருக்குள்
தீண்டாலென்ற தீமையே.

தொத்து நோய்கள் மெத்தவும்
தொடர்ந்து விட்ட பேரையும்
தொட்டுக் கிட்டிச் சொஸ்தமாக்கல்
தர்ம மென்று சொல்லுவார்.
சுத்த மேனும் ஜாதியால்
தொடப்ப படாதிங் கென்றிடில்
தொத்து நோயைக் காட்டிலும்
கொடிய ரென்று சொல்வதோ?

நாய்கு ரங்கு பூனையை
நத்தி முத்த மிடுகிறோம் ;
நரக லுண்ணும் பன்றியும்
நம்மைத் தீண்ட ஒப்புவோம் ;
ஆயும் நல்ல அறிவுடை
ஆன்ம ஞான மனிதனை
அருகி லேவ ரப்பொறாமை
அறிவி லேபொ ருந்துமோ?

செடிம ரங்கள் கொடிகளும்
ஜீவ ரென்ற உண்மையை
ஜெகம றிந்து கொள்ளமுன்பு
செய்த திந்த நாடடா!
முடிவ றிந்த உண்மைஞானம்
முற்றி நின்ற நாட்டிலே
மூடரும் சிரிக்கு மிந்த
முறையி லாவ ழக்கமேன்?

உயிரி ருக்கும் புழுவையும்
ஈச னுக்காம் உறையுளாய்
உணரு கின்ற உண்மைஞானம்
உலகி னுக்கு ரைத்தநாம்
உயருகின்ற ஜீவருக்குள்
நம்மொ டொத்த மனிதனை
ஒத்திப் போகச் சொல்லுகின்ற
தொத்துக் கொள்ள லாகுமோ?

அமல னாகி அங்குமிங்கும்
எங்கு மான கடவுளை
ஆல யத்துள் தெய்வமென்றே
அங்கி ருந்தே எண்ணுவோம் ;
விமல னான கடவுள்சக்தி
மனிதன் கிட்டி விலகினால்
வேறு ஜீவன் யாவும்அந்த
விமல னென்ப தெப்படி?

ஞாய மல்ல ஞாயமல்ல
ஞாய மல்ல கொஞ்சமும்
நாடு கின்ற பேர்களை
நாமி டைத்த டுப்பது ;
பாயு மந்த ஆற்றிலே
பருகி வெப்பம் ஆறிடும்
பறவை யோடு மிருகமிந்தப்
பாரி லார்த டுக்கிறார்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சதுரங்கம் வாழ்க்கைக்கு தரும் பாடம்.

  ஒவ்வொரு அசைவும் முக்கியமானது. ஆட்டத்தில் மட்டுமல்ல வாழ்க்கையிலும். வாழ்வில் நாம் செய்யும் ஒவ்வொரு நிகழ்வையும் மிகவும் கவனமாக செயல்படுத்த வ...