09 ஜூலை 2016

தாளவாடியில் கருத்தரங்கு.

                                                

                                                 ' வாசிப்பே நமது சுவாசிப்பு '
மரியாதைக்குரியவர்களே,
                  வணக்கம். 2016ஜூலை 9 ந் தேதி சனிக்கிழமை இன்று காலை11.00மணியளவில்
                 ஈரோடு மாவட்டம் தாளவாடியில் READ எனப்படும்  கல்வி உரிமைக்கான மேம்பாட்டு மைய அலுவலகத்தில் 

                   சமூக ஆர்வலர்களின் கூட்டமைப்பு சார்பாக,
              திருமிகுN.நஞ்சுண்ட நாயக்கர்,தாளவாடி ஊராட்சி மன்றத்தலைவர் அவர்கள் தலைமையில்,
''வாசிப்பே நமது சுவாசிப்பு'' என்ற தலைப்பில்
         கருத்தரங்கம் நடைபெற்றது..
READ அமைப்பின் இயக்குநர் திருமிகு.R.கருப்புசாமி அவர்களும்,
PALM2NGO அமைப்பின் நிர்வாகி திருமிகு S.யேசுதாசன் அவர்களும் முன்னிலை வகித்தனர்.
நுகர்வோர் மற்றும் சாலை பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் திருமிகு.C.பரமேஸ்வரன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.
வாசிப்பே நமது சுவாசிப்பாக இருக்க வேண்டும் என திருமிகு A..பாபு அவர்கள் மனித உரிமைகள் தலைவர் உரையாற்றினார்.
கருத்தரங்கில் ''மாணவ - மாணவியர் தனி மனித ஒழுங்குடன் துணிந்து செயல்பட்டு தம் வாழ்க்கையில் முன்னேறுவதுடன் சமூக ஒற்றுமை காப்பதற்கான வழிகாட்டல்'' என்ற தலைப்பில்  பத்திரிக்கையாளர் திருமிகு. T.V.ஆனந்த நாராயணன் அவர்களும்,திருமிகு அல்போன்ஸ் மணி PALM2NGO அவர்களும் திருமிகுP. ராஜூ TNSTC THALAVADI  அவர்களும் உட்பட அனைவரும் விவாதிக்கும்போது,   அரசியல்,சாதி,மத,இன,மொழி வேறுபாடின்றி சமூக ஒற்றுமை காப்பதற்காகவும்,தேச ஒற்றுமை காப்பதற்காகவும்,இளைய சமூகத்தின் வாழ்க்கை மேம்பாட்டிற்கு நல்வழிகாட்ட வேண்டும் என வலியுறுத்தினர்.
 அதன் பின்னர்  
கீழ்கண்டவாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    (1) மாணவர் நூலகம் வருகிற 2016ஜூலை 15 ந் தேதி காலை 10.30மணியளவில் தாளவாடியிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் துவக்குவது.
  (2)சமூக ஆர்வலர்களின் கூட்டமைப்பின் சார்பாக மாணவர் நூலகம்  செயல்படுவது,மாணவர் நூலகம் அரசியல்,சாதி,மத,இன,மொழி,வேறுபாடின்றி செயல்படுத்துவது.
          (3) மாணவர் நூலகத்திற்கு கௌரவ ஆலோசகராக தாளவாடி ஊராட்சி மன்றத்தலைவர் திருமிகு.N.நஞ்சுண்ட நாயக்கர் அவர்களை ஒருமனதாக தேர்ந்தெடுப்பது. 
   மாணவ வாசகர் வட்டம் துவக்கி செயல்பட
.(4)ஆர்வமுள்ள சமூக சேவை அமைப்புகளையும்
       விருப்பமுள்ள  தன்னார்வலர்களையும்  பங்கேற்க அழைப்பது.
(5) கல்வித்துறை உட்பட அரசு சார்ந்த அனைத்து துறைகளையும்,பங்கேற்க அழைப்பது.
(6)முதற்கட்டமாக தாளவாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவக்குழந்தைகளை உறுப்பினர்களாக சேர்ப்பது.அப்போது  8ம் வகுப்பு மாணவக்குழந்தைகளுக்கு மட்டும் புத்தகங்கள் சுழல்முறையில் வழங்குவது.
 (7)வருகிற2016 ஆகஸ்டு 5ந் தேதி ஈரோட்டில் துவங்கும் 12 வது புத்தக கண்காட்சியில் மாணவர்களுக்கான புத்தகங்களை இயன்றளவு வாங்குவது.
 (8) கடம்பூர் தொடங்கி கோட்டமாளம்,கேர்மாளம்,கோட்டாடை,ஆசனூர்,பெஜலட்டி,தலமலை,திகனாரை,
சூசைபுரம்,குன்னன்புரம்,கெட்டவாடி,பனகள்ளி, என தேவைக்கேற்ப செயல்படும் திறனுக்கேற்ப  மையங்களை ஏற்படுத்துவது.
 (9)அரசு நூலகங்களை அனைவரையும் பயன்படுத்த விழிப்புணர்வு கொடுப்பது.
(10)மாணவ வாசகர் மன்றம் துவக்கி செயல்பட வழிகாட்டுவது.
  என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நிறைவாக R.பிலவேந்திரன் PALM 2N.G.O.அவர்கள் தம் நன்றியுரையில் வாசிப்பே நமது சுவாசிப்பு என்னும் தலைப்பில் கருத்தரங்கம் இடவசதி அளித்து உதவிய READ அமைப்பின் இயக்குநர் திருமிகு.R.கருப்புசாமி அவர்களுக்கும், மாணவர் நூலகம் செயல்பட இடவசதி அளிக்க ஒப்புதல் அளித்த திருமிகு. N.நஞ்சுண்ட நாயக்கர் தாளவாடி ஊராட்சி மன்றத்தலைவர் அவர்களுக்கும், PALM2NGO நிர்வாகி திருமிகு S.யேசுதாசன் அவர்கள் உட்பட கலந்துகொண்டPALM2NGO பொறுப்பாளர்கள் அனைவருக்கும்,மனித உரிமைகள் கழகத்தின் தலைவர் திருமிகு. A.பாபு அவர்களுக்கும்,T.V.ஆனந்த நாராயணன் அவர்களுக்கும்,P.ராஜூ அவர்களுக்கும் நன்றி கூறினார்.

      

2 கருத்துகள்:

  1. மிக்க நன்றிங்க ஐயா,
    மரியாதைக்குரிய ஐயா,வணக்கம்.
    தங்களது எழுத்துப்பணியும் அதாவது ,''வித்தகர்கள்'' போன்ற புத்தக எழுத்துக்களும் என்னை ஊக்கப்படுத்துகின்றன.மகிழ்வுடன் அன்பன்,C.பரமேஸ்வரன்,தாளவாடி

    பதிலளிநீக்கு

முனைவர்.இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phil.,Ph.D., அவர்களது வாழ்க்கைக்குறிப்பு... (Dr.R.K.Manikkam, professor,Writer)

                                                                                                        முனைவர். இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phi...