02 ஜூலை 2016

வாசிப்பது சுவாசிப்பது போன்று தொடர்ச்சியாக இருக்கட்டும்.

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.
எழுத்தறிவு இல்லாமலிருப்பது பெருங்குற்றமல்ல!
.எழுத்தறிவுள்ளவர்கள் வாசிக்காமல் இருப்பதே பெருங்குற்றம்!!
                   இன்றைய சமூகம் வாசிப்பின் அவசியம் பற்றி தெரியாமலேயே பள்ளிப்படிப்பிலிருந்து பட்டப்படிப்பு முடித்து பலதரப்பட்ட தொழில்களிலும் பலதுறைகளில் பணியாற்றியும் வருகிறார்கள்.  நிறைய சம்பாதிக்க வேண்டும்,தான் நன்றாக இருக்க வேண்டும்.தம் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும்.என்ற குறுகிய வட்டத்துக்குள்ளேயே தம் வாழ்க்கையை ஓட்டி வருகிறார்கள்.paramesdriver@gmail.com
 இதுவே இன்றைய சமூகத்தில் பலதரப்பட்ட பிரச்சினைகளை உருவாக்குகிறது.வாசிப்பு என்றால் என்ன?வாசிப்பதால் பயன் என்ன?எதை வாசிப்பது?எப்படி வாசிப்பது? பள்ளிக்கூடத்திலும் பிறகு கல்லூரியிலும் புத்தகங்கள் வாசித்தாயிற்று! இன எதற்கு வாசிக்க வேண்டும்?என்றெல்லாம் கேள்விக்கணைகள் எழுப்புகிறார்கள்.இதனை சமூகத்தின் அறியாமையா அல்லது அறிந்தும் சோம்பலின் காரணமாக இவ்வாறு சாக்காடு பேசுகிறார்களா?எனத்தெரியவில்லை.
  பணம் சம்பாதிக்கவும்,வேலைகளுக்கு செல்லவும்,தொழில்களை செய்யவும் மட்டுமே பள்ளி மற்றும் கல்லூரிப்படிப்பு உதவுகிறது.ஆனால் பண்பட்ட மனிதனாக,அறிவார்ந்த மனிதனாக,மேம்பட்ட வாழ்க்கை வாழ பலதரப்பட்ட புத்தக வாசிப்பே உறுதுணை செய்கிறது.
வாழுகின்ற நமக்கு வாழ்ந்தவர்கள் பாடமடி என்ற வரிகளுக்கேற்ப நம் முன்னோர்கள் அனுபவத்தொகுப்பினை வாசித்து அதன் கருத்தினை  நமது வாழ்க்கைக்கு வழிகாட்டியாக ஏற்று நடக்க முடியும்.
 புத்தகங்கள் உயிரற்ற காகிதக்கட்டு அல்ல! புத்தகங்கள் உயிர்ப்புள்ள மனித மனங்கள்.அவ்வாறான நல்ல அறிவு சார்ந்த புத்தகங்கள் தொடர்ந்து வாசிப்பது மூலமே ஒருவன் தம் வாழ்க்கையில் உயர்வடைய முடியும்.அறிவுக்கு வேர் நல்ல புத்தகங்களே,வாசித்தலால்தான் நமக்கு அறிவு வளர்கிறது.அறிவுடைய சமூதாயத்தை உருவாக்க முடிகிறது.வாசிப்பு என்பது குறிப்பிட்ட வயதினருக்கு மட்டுமே சார்ந்தது அல்ல.தனிப்பட்ட மொழிக்கோ,இனத்துக்கோ,சமயத்துக்கோ உட்பட்டதல்ல.சாதி,சமய,மொழி வேறுபாடின்றி ஆண்,பெண் என அனைத்து மக்களும் வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொண்டே இருக்கலாம்.வாசிக்க என காலம் நேரம் கிடையாது.எந்நேரமும் வாசிக்கலாம்.அதனால்தான் வள்ளுவப்பெருந்தகை,''தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்தூறும் அறிவு'என்றார்.
            என வாசிப்பு பரப்புரையில் ஈடுபாடுகொண்ட
         அன்பன்,
   C.பரமேஸ்வரன்,
தாளவாடி 
9585600733

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முனைவர்.இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phil.,Ph.D., அவர்களது வாழ்க்கைக்குறிப்பு... (Dr.R.K.Manikkam, professor,Writer)

                                                                                                        முனைவர். இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phi...