27 அக்டோபர் 2012

கரட்டூர்-சொர்க்க பூமி--01, Crematorium-Karattur

மரியாதைக்குரிய நண்பர்களே,
       வணக்கம். 
                 இந்தப்பதிவில் சத்தியமங்கலம்-வட்டம்,அரியப்பம்பாளையம் பேரூராட்சி(5-வது வார்டு)-கரட்டூர் குக்கிராமம்- சொர்க்க பூமி (மயானம்) மேம்பாடு பற்றிய விபரம் சிறிது காண்போம்.


     மயானத்தை மேம்படுத்துவோம்!                    மன நிறைவு பெறுவோம்!!
               27-10-2012 இன்று சத்தியமங்கலம் வட்டம்-அரியப்பம்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட கரட்டூர் குக்கிராமம் ஊர்ப்  பொதுமக்கள் மற்றும் ஆர்வமுள்ள இளைஞர்களை ஒன்றுதிரட்டி ஓடைகளும்,பாறைகளும் நிறைந்த, புதர் மண்டிக்கிடந்த மயானத்தை சுத்தம் செய்து,அமரர்களை அடக்கம் செய்ய போதுமான மண் ஓட்டி மண்தளத்தை உயர்த்தி, மின்விளக்கு அமைத்து,தண்ணீர்த்தொட்டி கட்டி,மயானத்தின் உட்புறமாக சாலை ஒன்று தற்காலிகமாக அமைத்து,மரங்கள் நட்டு,முகப்புவாயிலில் அழகிய பூங்காவனம்,மூலிகைப்பண்ணை,சொர்க்க ரதம் மற்றும் நிறுத்த கொட்டகை, சுகாதாரம் பேணுதல், என பல்வேறு திட்டங்களின் முதற்கட்ட வேலை துவங்கப்பட்டுள்ளது.
       நீண்ட நாட்கள் முயற்சிக்குப்பிறகு தற்போதுதான்(27-09-2012) மகாசக்தி ஆண்கள் குழு என்ற பெயரில் குழு ஒன்று உருவாக்கப்பட்டது.
 சொர்க்க பூமியை பசுமைபூமியாக மாற்ற ஆர்வத்துடன் செயலாற்றும் சிறுவன்.

  மக்கள் பிரதிநிதி மற்றும் செயல்வீரர்கள்.


 மரக்கன்று நட குழி தோண்ட நில அளவையிட்டு உதவிடும் செயல்வீரர்கள்



   மண் தோண்டும் இயந்திரம் அதாங்க! JCB ,ஒருபுறம் வேலையில் ஈடுபட இன்னொருபுறம் துடிப்புடன் அளவிடும் பட்டதாரி இளைஞர்.
    

                  மற்ற பொறுப்பாளர்களைத் தொடர்பு கொண்டு  திட்டமிடும் செயல்வீரர்கள்


 கால்வைக்கமுடியாத இடத்திலும் கவனமாக அளவையிடும் ஆர்வலர்கள்.



    மண்தோண்டும் இயந்திரம் பூமியை சமப்படுத்தும் காட்சி.




                    

           
                 27-10-2012 இன்று மண்தோண்டும் இயந்திரம் கொண்டு (J.C.B) அன்றைய தினம் ஊரில் இருந்த நண்பர்கள் மேற்பார்வையில் காலை எட்டு மணிக்கு துவங்கிய வேலை மதியம் மூன்று மணிக்குத்தான் வேலை நிறைவு பெற்றது.

        அடுத்ததாக,  ஆர்வமும் விருப்பமும் உள்ள தொழிற்சாலைகள்,தனியார் நிறுவனங்கள்,சமூக சேவை அமைப்புகள்,தன்னார்வலர்கள்,தனிநபர்கள், என அனைவரிடமும் நிதியுதவி,பொருளுதவி போன்றவைகளைப்பெற்று அனைத்தையும் முழுமையாக சொர்க்க பூமிக்கே செலவிடுவது என முடிவு செய்யப்பட்டது.

                அவ்வாறு உதவி செய்யும் அனைத்து நன்கொடையாளர்களின் பெயர்கள் மற்றும் உதவி விபரத்தை  காண்போர் அனைவருக்கும் சமூக சேவை மனப்பான்மையை வளர்க்கும் வண்ணம்,வருங்கால சந்ததிகள் அத்தகைய நல்லோரை போற்றி வணங்கும் வண்ணம் பெயர்ப்பலகையில் பெயர்களைப்பதித்து பராமரிப்பது.

        பொதுமக்கள் நலன்கருதி அரசு மற்றும் அரசுத்துறையைச் சேர்ந்தவர்களை அணுகி  உதவி பெற்று செயல்படுத்துவது.இன்னும் பல செயல்பாடுகளைச் செய்வது என திட்டமிடப்பட்டுள்ளது. 
இன்னும் தொடரும்................பார்வையிட்ட தங்களுக்கு மிக்க நன்றிங்க!
  POST BY;-
 PARAMESWARAN.C
TAMIL NADU SCIENCE FORUM
THALAVADY
ERODE Dt.

2 கருத்துகள்:

  1. மரியாதைக்குரியவரே,வணக்கம்.தங்களது கருத்துரையை வணங்கி வரவேற்கிறேன்.மிக்க நன்றிங்க! என paramesdriver // thalavady-erode dt

    பதிலளிநீக்கு

முனைவர்.இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phil.,Ph.D., அவர்களது வாழ்க்கைக்குறிப்பு... (Dr.R.K.Manikkam, professor,Writer)

                                                                                                        முனைவர். இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phi...