10 ஏப்ரல் 2020

நாலடியார் & திருக்குறள்

                           நாலடியாரும் வாழ்வியல் நூலே!.....
 
மரியாதைக்குரியவர்களே,
                        வணக்கம்.கொங்குத் தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

                அறம், பொருள், இன்பம் என்னும் முப்பொருள்களையும் குறைந்த அடிகளில் சிறப்புற  உரைப்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் இயல்பாகும். சங்ககாலச் சான்றோர்கள் பட்டறிந்த உண்மைகளையே பிற்காலப் புலவர்கள் நீதிக் கருத்துக்களாகப் போற்றினர்.
நீதி நூல்களில் இலக்கியச் சுவையும் கற்பனையும் குன்றித் தோன்றினாலும் அவை மக்களின் வாழ்வைச் செம்மைப் படுத்தும் சீரிய தொண்டினைச் செய்கின்றன. 

                        நீதிகளைக் கூறுவதில் திருக்குறளும் நாலடியாரும் ஏறக்குறைய ஒரே முறையைப் பின்பற்றுகின்றன. திருக்குறளைப் போன்றே நாலடியாரும், அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் எனும் முப்பிரிவுகளை உடையதாக விளங்குகிறது. திருக்குறள் இரண்டு அடிகளில் சொல்ல, நாலடியார் நான்கு அடிகளில் சொல்கிறது. திருக்குறள் ஒரே ஆசிரியரால் இயற்றப்பட்டது. நாலடியாரோ சமண முனிவர் நானூறு பேர் பாடிய வெண்பாக்களின் தொகுப்பாகும். 

இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால்
தம்மை விளக்குமால் தாமுளராக் கேடின்றால்
எம்மை யுலகத்தும் யாம்காணோம் கல்விபோல்
மம்மர் அறுக்கும் மருந்து.
குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு.
                   நாலடியாரைத் தொகுத்து, அதிகாரம் வகுத்தவர் பதுமனார். முப்பாலாகப் பகுத்தவர் தருமர். 
இயற்றப்பட்ட காலம்; 
   சங்கம் மருவிய காலம் அதாவது கி.பி.250ஆம் ஆண்டுகள்.


   "ஆலும் வேலும் பல்லுக்குறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி', 

'சொல்லாய்ந்த நாலடி நானூறும் நன்கு இனிது',

 'பழகுதமிழ் சொல்லருமை நாலிரண்டில்' 

   என்ற நமது முன்னோர் உரைகள், நாலடியாரின்  பெருமையை திருக்குறளுக்கு இணையாக எடுத்துரைக்கின்றன
நாலடியார் பாடல்களின் எண்ணிக்கை
 கடவுள் வாழ்த்து : 1 
அறத்துப்பால் : 130 பாடல்கள் (13 அதிகாரங்கள்) 
பொருட்பால் : 240 பாடல்கள் (24 அதிகாரங்கள்)
 இன்பத்துப் பால் : 30 பாடல்கள் (3 அதிகாரங்கள்)
 மொத்தம் : 400 பாடல்கள் (40 அதிகாரங்கள்) 

    2020ஆம் ஆண்டு  திருக்குறள் மாமலை  ஏப்ரல் மாத இதழில் எனது கட்டுரை...



 
 என அன்புடன்,
செ.பரமேஸ்வரன்,
இலக்கியக் கூடல்,
விதைகள் வாசகர் வட்டம்,
சத்தியமங்கலம்,
ஈரோடு மாவட்டம்.
 தொடர்பு எண் 9585600733.
  (konguthendral.blogspot.com)

06 ஏப்ரல் 2020

Thirukkural Perumai Arivom Part 11

                               திருக்குறள் பெருமை அறிவோம் பகுதி - 11
                                         -----------------------------------------------------

மரியாதைக்குரியவர்களே,
                        வணக்கம்.கொங்குத் தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

                                    திரைப்படங்களில் திருக்குறள்.
                                                -------------------------------

                   (1)  பாடல் - அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே,

                                                படம் - அறிவாளி
                                                ஆண்டு - 1963
                                               பாடலாசிரியர் - அ.மருதகாசி,
                                               பாடியவர் - T.M. சௌந்திரராஜன்,
                                               இசை ;S.V.வெங்கட்ராமன்

 அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே 
அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே
வள்ளுவர் ஆக்கி நமக்களித்த அரும் பொருளே
அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே 
வள்ளுவர் ஆக்கி நமக்களித்த அரும் பொருளே
அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே

உலகுக்கு ஒளி போலே உடலுக்கு உயிர் போல 
உலகுக்கு ஒளி போலே உடலுக்கு உயிர் போலே 
பயிறுக்கு மழைபோல பயிறுக்கு மழைபோல
பைந்தமிழ் மொழியாலே
அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே

அறம் பொருள் இன்பம் எனப்படும் முப்பாலே
அனுபவத்தாலே தான் சுவைத்ததற்கப்பாலே
அறம் பொருள் இன்பம் எனப்படும் முப்பாலே
அனுபவத்தாலே தான் சுவைத்ததற்கப்பாலே 
அவனியில் உள்ளோர்கள் அனைவரும் தனைப்போலே
அவனியில் உள்ளோர்கள் அனைவரும் தனைப்போலே 
அவசியம் கற்றுணர்ந்து பயன்பெரும் நினைப்பாலே
அவசியம் கற்றுணர்ந்து பயன்பெரும் நினைப்பாலே 
அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே 

வாழும் வழி முறைக்கு இலக்கனமானது
மனம் மொழி மெய் இனிக்க வார்த்திட்ட தேனிது
வாழும் வழி முறைக்கு இலக்கனமானது
மனம் மொழி மெய் இனிக்க வார்த்திட்ட தேனிது
வானகம் போல் விரிந்த பெரும் பொருள் கொண்டதும் 
வானகம் போல் விரிந்த பெரும் பொருள் கொண்டதும் 
எம்மதத்திற்க்குப் பொதுவென்னும் பாராட்டைக் கண்டதும்
எம்மதத்திற்க்குப் பொதுவென்னும் பாராட்டைக் கண்டதும்
அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே வள்ளுவர்
அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே


      (2) பாடல்: வாழ்க்கை என்னும் ஓடம்.. 

                                           படம் : பூம்புகார் ,ஆண்டு ;1964 

                     பாடலாசிரியர் ; கலைஞர்.மு.கருணாநிதி,
                    பாடியவர் : கொடுமுடி கோகிலம் கே.பி.சுந்தராம்பாள் 
                     இசை : ஆர்.சுதர்சனம் 
                   இயக்கம் : ப.நீலகண்டன் 
                    தயாரிப்பு : மேகலா பிக்சர்ஸ்

ஒருவனுக்கு ஒருத்தியென்ற 
உயிர்மூச்சை உள்ளடக்கி..
அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன் பழிப்பதில்லாயின் நன்று எனும்
திருக்குறளை மறவாதே.. 
திருக்குறளை மறவாதே..
திசை தவறிப் போகாதே.. 
ஏஏஏஏஏஏஏ ஏஏஏஏஏஏஏஏ ஏஏஏஏஏஏஏஏஏ

வாழ்க்கை என்னும் ஓடம்.. 
வழங்குகின்ற பாடம்..
மானிடரின் மனதினிலே.. 
மறக்கவொண்ணா வேதம்..
வாழ்க்கை என்னும் ஓடம்.. 
வழங்குகின்ற பாடம்..
மானிடரின் மனதினிலே.. 
மறக்கவொண்ணா வேதம்..
வாழ்க்கை என்னும் ஓடம்..

வாலிபம் என்பது களைகின்ற வேடம்..
அதில் வந்தது வரட்டும் என்பவன் முழு மூடன்..
வாலிபம் என்பது களைகின்ற வேடம்..
அதில் வந்தது வரட்டும் என்பவன் முழு மூடன்..
வருமுன் காப்பவன்தான் அறிவாளி-துயர் 
வருமுன் காப்பவன்தான் அறிவாளி..
அது வந்தபின்னே தவிப்பவன்தான் ஏமாளி..

துடுப்புகள் இல்லா படகு
அலைகள் அழைக்கின்ற திசையெலாம் போகும்..
தீமையைத் தடுப்பவர் இல்லா வாழ்வும்..
அந்த படகின் நிலை போலே ஆகும்..
அந்த படகின் நிலை போலே ஆகும்..
வாழ்க்கை என்னும் ஓடம்.. 
வழங்குகின்ற பாடம்..
மானிடரின் மனதினிலே.. 
மறக்கவொண்ணா வேதம்..
வாழ்க்கை என்னும் ஓடம்.. 


 

                    (3) பாடல் - ஓரொண்ணு ஒண்ணு ....

                                         படம் - மகனே கேள்
                                          ஆண்டு - 1965
                                         பாடலாசிரியர் -பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார்
                                        பாடியவர் -A.M.ராஜா,
                                       இசை ;M.S.விஸ்வநாதன் ராமமூர்த்தி
 

            பையன்கள்: ஓரொண்ணு ஒண்ணு
    ஈரொண்ணு ரெண்டு
    மூவொண்ணு மூணு
    நாலொண்ணு நாலு

    வாத்தியார்: ஓரொண்ணு ஒண்ணு
    உள்ள தெய்வம் ஒண்ணு
    ஈரொண்ணு ரெண்டு
    ஆண் பெண் ஜாதி ரெண்டு
    மூவொண்ணு மூணு
    முத்துத் தமிழ் மூணு
    நாலொண்ணு நாலு
    நன்னிலம் நாலு
    உள்ள தெய்வம் ஒண்ணு
    ஆண் பெண் ஜாதி ரெண்டு
    முத்துத் தமிழ் மூணு
    நன்னிலம் நாலு

    பையன்: அஞ்சொண் அஞ்சு

    வாத்தியார்: அஞ்சுவதற்கு அஞ்சு

    பையன்: ஆறொண் ஆறு

    வாத்தியார்: நல்லறிவுகள் ஆறு

    பையன்: ஏழொண் ஏழு

    வாத்தியார்: இசைக்குலங்கள் ஏழு

    பெண் குழந்தை: ஸரிகமபதநிஸா

    பையன்: ஏழொண் ஏழு

    வாத்தியார்: இசைக் குலங்கள் ஏழு

    பையன்: எட்டொண் எட்டு

    வாத்தியார்: எட்டும் வரை எட்டு

    பையன்: ஒன்பதொண் ஒன்பது

    வாத்தியார்: உயர் மணிகள் ஒன்பது

    பையன்: பத்தொண் பத்து

    வாத்தியார்: பாடல்கள் பத்து
    லாலல்ல லாலல்ல லாலலல்லா
    லாலல்ல லாலல்ல லாலலல்லா

    வாத்தியார்: உன்னையெண்ணிப்பாரு
    உழைத்து முன்னேறு
    உண்மையைக் கூறு
    செம்மை வழி சேரு

    பெண் குழந்தை: உன்னை யெண்ணிப்பாரு
    உழைத்து முன்னேறு
    உண்மையைக் கூறு
    செம்மை வழி சேரு

    வாத்தியார்: அன்புக்கு வணங்கு
    அறிந்த பின் இணங்கு
    பண்புடன் விளங்கு
    பசித்தவர்க் கிரங்கு

    பையன்: அன்புக்கு வணங்கு
    அறிந்தபின் இணங்கு
    பண்புடன் விளங்கு
    பசித்தவர்க் கிரங்கு
    லாலல்ல லாலல்ல லாலலல்லா
    லாலல்ல லாலல்ல லாலலல்லா

    வாத்தியார்: பேதங்கள் தீர்த்து
    பெருமையை உயர்த்து
    நீதியைக் காத்து
    நேர்மையைக் காட்டு

    பெண் குழந்தை: நேர்மையைக் காட்டு
    பொன் மொழி கேட்டு
    பொய்மையை மாற்று
    பொறுப்புகள் ஏற்று
    பொதுப் பணியாற்று

    வாத்தியார்: திருக்குறள் நூலை
    சிறந்த முப்பாலை
    கருத்துடன் காலை
    படிப்பதுன் வேலை
    லாலல்ல லாலல்ல லாலலல்லா
    லாலல்ல லாலல்ல லாலலல்லா

                    (4)பாடல் - ஒன்றே குலமென்று பாடுவோம்....
                                                படம் - பல்லாண்டு வாழ்க,
                                                ஆண்டு - 1975
                                               பாடலாசிரியர் -புலமைப் பித்தன்,
                                               பாடியவர் -K.J.ஜேசுதாஸ்
                                               இசை K.V. மகாதேவன்,

அன்பிலார் எல்லாம் தமக்குரியர்
அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு.

தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி
தன்மெய் வருத்தக் கூலி தரும்.

ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தேவன் என்று போற்றுவோம்

அன்னை இதயமாக அன்பு வடிவமாக
வந்து வழிகாட்ட வேண்டுமென்று வணங்குவோம்.

ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தேவன் என்று போற்றுவோம்.

கடவுளிலே கருணை தன்னைக் காணலாம்
அந்தக் கருணையிலே கடவுளையும் காணலாம்

நல்லமனசாட்சியே தேவன் அரசாட்சியாம்
அங்கு ஒரு போதும் மறையாது அவன் காட்சியாம்

ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தேவன் என்று போற்றுவோம்..

பாவமென்ற கல்லறைக்கு பலவழி
என்றும் தர்மதேவன் கோவிலுக்கு ஒரு வழி
இந்த வழி ஒன்றுதான் எங்கள் வழி என்றுநாம்
நேர்மை தவறாமல் நடை போடுவோம்

ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தேவன் என்று போற்றுவோம்
இதயம் தெய்வம் நமது அண்ணா தோன்றினார்
அவர் என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார்...
இதயம் தெய்வம் நமது அண்ணா தோன்றினார்
அவர் என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார்

அந்த ஒளி காணலாம் சொன்ன வழி போகலாம்
நாளை வரலாறு நமக்காக உருவாகலாம்

ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தேவன் என்று போற்றுவோம்.

--------------------------------------------------------------------------------------------------------------
 திருக்குறள் சம்பந்தமான திரைப்படங்கள் விடுபட்டிருந்தால்

 9585600733 எண்ணிற்கு தகவலளித்து உதவுங்க....
                  --------------------------
 திருக்குறள் மாமலை மாத இதழ் வாசித்துவிட்டீர்களா?

                      
                                  இன்னும் தொடரும்...
-----------------------------------------------------------------------------------------------

 என அன்புடன்,
செ.பரமேஸ்வரன்,
இலக்கியக் கூடல்,
விதைகள் வாசகர் வட்டம்,
சத்தியமங்கலம்,
ஈரோடு மாவட்டம்.
 தொடர்பு எண் 9585600733.
  (konguthendral.blogspot.com)


05 ஏப்ரல் 2020

Thirukkural Perumai Arivom Part 10

                                    திருக்குறள் பெருமை அறிவோம் பகுதி 10

மரியாதைக்குரியவர்களே,
                        வணக்கம்.கொங்குத் தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.(தேதி;6-4-2020)
              திருக்குறளும் குளறுபடிகளும்...
(1)திருக்குறள் அடிப்படையில் ஒரு வாழ்வியல்நூல் ஆகும்.மாந்தர்தம் அகவாழ்விலும்,புறவாழ்விலும் சுமூகமாக வாழவும்,இன்பமுடனும்,இசைவுடனும்,நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது.
(2)நூலின் பெயரையோ,எழுதியவரின் பெயரையோ நூலின் எந்த இடத்திலும், எந்தவகையிலும்  குறிப்பிடப்படவில்லை என்பதை அறிந்துகொள்ளுங்க!..
(3) குறள்வெண்பா எனப்படும் வெண்பா வகையைச் சேர்ந்த நூல் (அந்தக்காலத்தில்வெண்பா வகையில் கிடைத்த ஒரேநூல்)  திருக்குறள் மட்டுமே.ஆதலால் 'குறள்' என்னும் காரணப்பெயரால் 'திரு' என்ற மரியாதை சேர்த்து அழைக்கப்படுகிறது.
(4)திருக்குறள் நூலுக்கு சமணம்,வைணவம்,பௌத்தம்,கிறிஸ்துவம் என எல்லா சமயநூல்களும் சொந்தம் கொண்டாடின.
(5)சென்னை தேனாம்பேட்டையில் 1972 ஆம் ஆண்டு நடைபெற்ற மறைதிரு.அருளப்பர் பாதிரியார் அவர்களது தலைமையிலான கிறிஸ்துவ மாநாட்டில்  திருக்குறள் எங்கள் நூல் என்று அறிவித்தனர்.
(6)உலகில் பொதுசமய கருத்துக்கள் கூறிகின்ற நூல்கள் பற்றிய சர்வ சமய மாநாடு ஒன்று இலங்கையில் 500ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்றது. பல சமயங்களைச் சேர்ந்த ஆன்மீகவாதிகளும்,சாமியார்களும்,பாதிரியார்களும் பங்கேற்று உலகதிதலுள்ள பல இலக்கியநூல்களை ஆய்வுசெய்தபோது திருக்குறள்தான் பொது சமயக் கருத்துக்களை கூறுகிறதுஅதாவது சமயத்துக்கு பொதுமை கூறுகின்ற அறநூல் திருக்குறள் என்று போர்த்துக்கீசிய பாதிரியாரால் எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது.
                    (konguthendral.blogspot.com)
(7)பிரெஞ்சுநாட்டு அறிஞர் ஏரியல் அவர்கள் திருக்குறள் மனித சிந்தனையின் தூயவெளிப்பாடுயென்று போற்றுகின்றார்.
(8)அதையறிந்த கவிஞர்.மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை அவர்கள் திருக்குறள் எதற்கும் இடம் தரும் விடு,விடு என்று கூறினார்.
(9)திருக்குறள் தோன்றி 2000ஆண்டுகள் ஆகின்றன என்று பெரும்பாலான அறிஞர்கள் கூறியிருந்தாலும் திருக்குறள் தோன்றி ஆயிரம் ஆண்டுகள் கழித்தே உரைநூல்கள் எழுதப்பட்டுள்ளன.
(10)ஒருநூலுக்கு உரை எழுதுவது என்பது சாதாரணமான காரியம் இல்லை.அந்த நூலின் ஒவ்வொரு சொல்லுக்கும் பொருள் அறிந்து எழுத வேண்டும்.ஒரு சொல்லுக்கு பொருள்கூற பல்வேறு மொழிப்புலமைகள் வேண்டும்.ஒருசொல் தோன்றிய காலத்தில் என்ன பொருளில் இருந்திருக்கும் என்ற வரலாற்று அறிவு தேவை.இந்தசொல்,இந்த தொடரில் என்ன பொருள்தரும் என்ற ஆய்வுச் சிந்தனை வேண்டும்.
(11)திருக்குறளுக்கு பத்துப் பேர் உரை எழுதியதாக
                                                                       பழம்பெரும் பாடல் ஒன்று பின்வருமாறு
 ''தருமர்,மணக்குடவர்,தாமதத்தர்,நச்சர்
பரிமேலழகர் - திருமலையர்,
மல்லர்,பரிப்பெருமாள்,காலிங்கர்
வள்ளுவர்நூற்கு
எல்லையுரை செய்தார் இவர்''.
                                                             என கூறுகிறது.
(12)இவர்களில் பரிமேலழகர்,மணக்குடவர்,காலிங்கர்,பரிதி,பரிப்பெருமாள், ஆகிய ஐவரின் உரை வெளிவந்துள்ளன.
 தருமர்,தாமதத்தர்,நாமச்சர் ஆகிய மூவரின் உரைகள் சில குறட்பாக்களுக்கு மட்டும் கிடைத்துள்ளன.
திருமலையர்,மல்லர் ஆகிய இருவரின் உரைகள்  கிடைக்கவில்லை.
                                    (konguthendral.blogspot.com)
(13) மணக்குடவர் மூல உரையின் திருக்குறளை முதன்முதலாக 1812 ஆம் ஆண்டு அச்சில் ஏற்றப்பட்டது.
(14)தஞ்சை மலையத்துவசன் மகன் ஞானப்பிரகாசமும் அம்பலவாணரும் இணைந்து மிகுந்த கவனமெடுத்து சிறிதளவு பிழைகூட நேர்ந்துவிடக்கூடாது என்று அன்றைய தமிழறிஞர்கள் எல்லோரிடத்திலும் கருத்துக் கேட்டு சரிபார்த்து பயபக்தியுடன் அச்சிட்டுள்ளனர்.திருக்குறள் முதல் பதிப்பில் முன்னுரைக்கு முன்பாக திருக்குறள் வரலாறு என்ற தலைப்பிலான மூன்றுபக்கங்களை வாசித்தாலே ஓலைச்சுவடி வடிவிலிருந்து அச்சுநூலுக்கு கொண்டுவர எத்தனை கஷ்டப்பட்டிருப்பார்கள் என்று அறியலாம்.இவ்விடத்தில் வந்திருக்கின்ற வித்வ சனங்கள் எடுத்துக்கொடுத்து பிழையின்றி சாத்து செய்யப்பட்டநூல் என்று அச்சிட்டு அனைவரின் கையெழுத்தும் பெற்று வெளியிடப்பட்டிருக்கிறது.(சாத்து என்றால் சான்று எனப் பொருள் அறிக).என முன்னுரையில் காணலாம்.
                           (konguthendral.blogspot.com)
(15)முதலில் உரை எழுதிய பத்து உரையாசிரியர்களில் பரிமேலழகர் உரையும்,முறைவைப்பும் சிறந்தது என்று இன்றுவரை நடைமுறையில் பயன்படுத்தப்படுகிறது.
(16)முதிர்ந்த மரத்தை கண்ட கட்டிடமேஸ்திரி நல்ல மரம் உத்திரம் போட்டால் நீண்டகாலம் உழைத்து நீடிக்கும் என்று நினைப்பதுபோல,தச்சர் மேஜை நாற்காலி போன்ற பொருட்கள் செய்ய சிறந்த மரம் என எண்ணுவதைப்போல,சிற்பி அழகான கோயிற் சிற்பம் செதுக்க ஏற்றமரம் என சிந்திப்பதுபோல உரையாசிரியர்களும் அவரவர் எண்ணங்களுக்கேற்ப  உரை எழுதி உள்ளனர்.
(17)சிலர் வடிவத்தை மாற்றி அமைத்து உரை காண முயன்றுள்ளனர்,சிலர் பால்களை மாற்றியுள்ளனர்.சிலர் அதிகாரங்களை மாற்றியுள்ளனர்.சிலர் குறட்பாக்களின் வைப்புமுறைகளை மாற்றியுள்ளனர்.சிலர் மேற்கூறிய மாற்றங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாற்றங்களைச் செய்து உள்ளனர்.
(17) இன்றுவரை 230க்கும் அதிகமானோர் உரை எழுதியுள்ளனர்.
(18)இவ்வாறான மாற்றங்களைக் கண்ணுற்று 33ஆண்டுகள் ஆய்வுசெய்த ஆய்வாளர், திருக்குறள் மாமுனிவர் கு.மோகனராசு அவர்கள் ''முறை மாறிய திருக்குறள் உரைகள்'' என்ற தலைப்பில் ஒருநூலினை  2005ஆம் ஆண்டில் மணிவாசகம் பதிப்பகத்தால்  வெளியிட்டார்.
(19)பரிமேலழகர் முறைவைப்பில் பொருட்பாலில் மூன்று இயல்கள் வைக்கப்பட்டுள்ளன.அவை முறையே (1)அரசியல்,(2)அங்கவியல்,(3)ஒழிபியல் ஆகும்.  (konguthendral.blogspot.com)
(20)மு.வரதராசன் அவர்கள் பொருட்பாலில் ஏழு இயல்கள் வைத்து எழுதியுள்ளார். அவை முறையே (1)அரசியல்,(2)அமைச்சியல்,(3)அரணியல்,(4)கூழியல்,(5)படையியல்,(6)நட்பியல்,(7)குடியியல் ஆகும்.
ஆதாரமாக இதோ.....
பரிமேலழகர் முறைவைப்பு இது...

மு.வரதராசனார் முறைவைப்பு இது....
                                                      இன்னும் தொடரும்.....


 என அன்புடன்,
செ.பரமேஸ்வரன்,
இலக்கியக் கூடல்,
விதைகள் வாசகர் வட்டம்,
சத்தியமங்கலம்,
ஈரோடு மாவட்டம்.
 தொடர்பு எண் 9585600733.
  (konguthendral.blogspot.com)

திருக்குறள் பெருமை அறிவோம் - பகுதி 09

                           திருக்குறள் பெருமை அறிவோம் பகுதி -09
                                        ---------------------------------------------------------

மரியாதைக்குரியவர்களே,
                        வணக்கம்.கொங்குத் தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

  திருக்குறளின் தனிச்சிறப்பு  இந்தப் பதிவில் அறிவோம்...

    (1)திருக்குறளின் பெருமையை உணர்த்தும்          நூல்,'திருவள்ளுவமாலை'நூலாகும்.
(2)திருக்குறள் எழுதியவர் திருவள்ளுவர்.
 (3)திருவள்ளுவர் வாழ்ந்த காலம் கி.மு.மூன்றாம் நூற்றாண்டுக்கும் கி.மு.முதலாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலமாக இருக்கலாம்?  என கருதப்படுகிறது.
(4)தமிழக அரசு திருவள்ளுவர் வாழ்ந்த காலம் என அறிவித்துள்ள ஆண்டு கி.மு.31ஆகும்.
(5)திருக்குறள் சங்க இலக்கிய நூல் ஆகும்.
(6)திருக்குறள் பதிணெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று.
(7)திருக்குறளின் முதற் பெயர் 'முப்பால்' ஆகும்.
(8)திருக்குறள் என பெயர் வரக் காரணம் பாடல்கள் அனைத்தும் குறள்வெண்பா வகையினைச் சேர்ந்தது ஆதலால் 'குறள்' என்ற காரணப் பெயரை வைத்து அதன் உயர்வு கருதி 'திரு' என்ற அடைமொழி சேர்த்து 'திருக்குறள்' என அழைக்கப்படுகிறது.
(9)உலக மக்கள் அனைவருக்கும் ஏற்றவகையில் எல்லாக் காலத்திற்கும் பொருந்தும்படியாக போதனைகள் அமைந்துள்ளதால் உலகப் பொதுமறை நூல் என்றழைக்கப்படுகிறது.அதாவது சாதாரண மனிதன் இவ்வுலகில் எவ்வாறு வாழ்ந்திட வேண்டும் என்பதை வலியுறுத்தியதால் பொதுமறை எனப்பட்டது.
(10) திருக்குறளின் மூல ஆசிரியர் மணக்குடவர் ஆவார். தொகுப்பு ஆண்டு தெரியவில்லை.
(11)திருக்குறள் நூலை முதன்முதலில் அச்சுப் பதிப்பித்தவர் தஞ்சை மலையத்து வசன் மகன் ஞானப்பிரகாசம் ஆவார்.1812ல்.
(12)திருக்குறள் முதல் அச்சிடப்பட்ட ஆண்டு கி.பி.1812ஆம் ஆண்டு.பதிப்பகம்  பெயர் தெரியவில்லை.
(13)திருக்குறள் பிறமொழியில் பெயர்த்த முதல்மொழி இலத்தீன்.
(14)கி.பி.1730 ல் திருக்குறள் முதன்முதலாக பிறமொழியில் மொழிபெயர்த்தவர் வீர மாமுனிவர் என்றழைக்கப்படுகின்ற கான்ஸ்டன் ஜோசப் பெஸ்கி என்னும் இத்தாலிய பாதிரியார் ஆவார்.
(15) கி.பி. 1730ஆம் ஆண்டு பிறமொழியில் முதன்முதலாக இலத்தீன் மொழியில் வீரமாமுனிவரால் மொழி பெயர்க்கப்பட்டது.
(16) கி.பி.1812ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் திருக்குறளின் முதல் மொழிபெயர்ப்புக்கு அடித்தளமாகும்.எல்லீஸ் துரை அவர்கள் மொழிபெயர்த்தது அறத்துப்பாலின் முதல் 13அதிகாரங்கள் மட்டுமே.
(17)ஆங்கிலத்தில் முதன்முதலாக திருக்குறள் 1330 குறட்பாக்களையும் பெயர்த்தவர் ஜி.யூ.போப் என்னும் ஆங்கிலேயர் ஆவார்.1886ல்.
(18)ஆங்கிலத்தில் திருக்குறள் முதன்முதலாக மொழிபெயர்த்த ஆண்டு கி.பி.1886ஆம் ஆண்டு.
                          (konguthendral.blogspot.com)
(19)ஆங்கிலத்தில் திருக்குறள் கருத்துக்களை முதன்முதலில் வெளியிட்டவர் கிண்டெர்ஸ் லே என்பவர் ஆவார்.கி.பி.1794ல்.
(20)ஆங்கிலத்தில் திருக்குறள் கருத்துக்களை முதன்முதலில் வெளியிட்ட     ஆண்டு கி.பி.1794ஆம் ஆண்டு.
(21)திருவள்ளுவருக்கு முதன்முதலாக உருவம் கொடுத்து தங்கக்காசு வெளியிட்டவர் இங்கிலாந்தைச் சேர்ந்த பிரான்சிஸ் ஒயிட் எல்லீஸ் (Francis Whyte Ellis) ஆவார்.1812ல்,
(22)திருக்குறளின் ஒவ்வொரு குறளும் இரண்டடிகளில் ஏழு சீர்களைக் கொண்ட நூல் ஆகும்.
(23) அறம்,பொருள்,இன்பம் ஆக மனித வாழ்வுக்குத் தேவையான மூன்று பாக்களை உள்ளடக்கியது திருக்குறள்.
(24) திருக்குறளின் முதல் பாலான அறத்துப்பால் 4இயல்களையும்,38அதிகாரங்களையும்,380குறட்பாக்களையும் கொண்டுள்ளது.
(25)திருக்குறளின் இரண்டாவது பாலான பொருட்பால் 7இயல்களையும்,70 அதிகாரங்களையும்,700குறட்பாக்களையும் கொண்ள்ள்ளது.
(26)திருக்குறளின் மூன்றாவது பாலான இன்பத்துப்பால் 2 இயல்களையும் 25 அதிகாரங்களையும்,250குறட்பாக்களையும் கொண்டுள்ளது.
(27)திருக்குறள் மொத்த இயல்கள் மு.வரதராசனார் முறைப்படி  4+7+2 =   13இயல்கள்  ஆகும்.  (konguthendral.blogspot.com)
பரிமேலழகர் முறைப்படி 4+3+2 = 9 இயல்கள் ஆகும்.

(28)திருக்குறள் மொத்தமாக  133 அதிகாரங்களைக் கொண்டுள்ளது.
(29)திருக்குறள் மொத்தம் 1330குறட்பாக்களைக் கொண்டுள்ளது.
(30)திருக்குறள் முதல் குறளில்  'அ'கரத்தில் தொடங்கி 1330வது குறளில்  'ன்'இல் முடிகிறது.
(31)திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள் 42,194ஆகும்.
(32)திருக்குறளில் உள்ள மொத்த சொற்கள் 12,000 ஆகும்.
(33)தமிழ் எழுத்துக்கள் மொத்தம் 247 இவற்றில் 37எழுத்துக்கள் மட்டும் இடம்பெறவில்லை.
(34)திருக்குறளில் பயன்படுத்தாத ஒரே உயிரெழுத்து, 'ஔ' எழுத்து ஆகும்.
(35)திருக்குறளில் பயன்படுத்தாத ஒரே எண்  9 ஆகும்.
(36)திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட எழுத்து 'னி' ஆகும்.அதாவது 'னி' 1705முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.
  (parameswaran Driver - TNSTC Thalavadi Br)
(37)திருக்குறளில் ஒரேமுறை பயன்படுத்தப்பட்டுள்ள எழுத்துக்கள் 'ளீ , ங' இரண்டு எழுத்துக்கள் ஆகும்.
(38)திருக்குறளில் ஏழு என்ற சொல் எட்டு குறட்பாக்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
(39)திருக்குறளில் எழுபது கோடி என்ற சொல் ஒரேயொரு குறளில் மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
(40)திருக்குறளில்  ஒரேயொரு அதிகாரம் மட்டும் பயன்படுத்தப்பட்ட இயல் 'ஊழியல்' ஆகும். ஊழ் 37வது அதிகாரம்.
(41)திருக்குறளில் இடம் பெற்றுள்ள ஒரேபழம் 'நெருஞ்சில்' ஆகும்.
(42)திருக்குறளில் இடம்பெற்றுள்ள ஒரே விதை குன்றிமணி ஆகும்.
(43)திருக்குறளில் இடம்பெற்றுள்ள இரண்டு மலர்கள் அனிச்சம் , குவளை ஆகும்.
(44)திருக்குறளில் இடம் பெற்றுள்ள இரண்டு மரங்கள் பனை,மூங்கில் ஆகும்.
(45) திருக்குறளில் இரண்டுமுறை பயன்படுத்தப்பட்டுள்ள ஒரே அதிகாரம், 'குறிப்பறிதல்' ஆகும்.
(46)திருக்குறளில் பற்று என்ற  சொல் ஒரே குறளில் ஆறுமுறை பயன்படுத்தப்பட்டுள்ளது.350வது குறளில் ஆறுமுறை பயன்படுத்தப்பட்டுள்ளது.  (konguthendral.blogspot.com)
(47)திருக்குறளில்தமிழ்,கடவுள் என்ற சொற்கள் பயன்படுத்தப்படவில்லை.
(48)திருக்குறளை நரிக்குறவர் பேசும் 'வாக்ரிபோலி' மொழியில் ( Indo - Aryan language called Vaagri Booli )  எழுதியவர் கிட்டு சிரோன்மணி என்பவர் ஆவார்.
(49)திருக்குறள் எந்த சமயத்தையும் சார்ந்திராமல் எழுதப்பட்டுள்ளது ஆதலால் தமிழ் வேதம் (Bible Of Tamils) என்று அழைக்கப்படுகிறது.
(50)திருக்குறளை அரபு மொழியில் மொழிபெயர்த்தவர் முனைவர்.அ.ஜாஹிர் ஹூசைன் பாகவி ஆவார்.
(51)திருக்குறள் இதுவரை 107மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
(52)திருக்குறளுக்கு இன்றுவரை 230க்கும் மேற்பட்டவர்கள் உரை எழுதியுள்ளனர்.
(53)திருக்குறள் உரை எழுதிய ஆசிரியர்களில் 10வது ஆசிரியர் பரிமேலழகர் ஆவார்.
(54)திருக்குறளுக்கு உரை எழுதுவது இமயமலைக்கு பொன்னாடை போர்த்துவது போன்றது என கூறியவர்.கலைஞர் மு.கருணாநிதி ஆவார்.
       (parameswaran Driver -9585600733, TNSTC Thalavadi Br)
(55) கலை என்னும் இதழை நடத்தி வந்த பாலு,சீனு என்னும் சகோதரர்கள் 1950ஆம் ஆண்டு வெளியிட்ட இதழில் எந்த மத அடையாளமும் இல்லாத திருவள்ளுவரின் படம் பிரசுரித்திருந்தனர்.
(56)அதன்பிறகு கவிஞர்.பாரதிதாசன்,திரு.மா.இராம.ராமசெல்வன் இருவரும் ஓவியர் வேணுகோபால ஷர்மாவுடன் சேர்ந்து வெள்ளை உடை அணிந்த திருவள்ளுவர் ஓவியம் வரைய முயற்சி எடுத்தனர்.
(57)  திருவள்ளுவர் ஓவியத்தை ஓவியர் K.R,வேணுகோபால ஷர்மா அவர்கள் ஓவியம் வரையத் தொடங்கி ஒவ்வொரு நொடியும் படைப்புச் சிந்தனையிலேயே மூழ்கி திருக்குறள் உரைகளுக்கேற்ப முப்பது ஆண்டுகளாக அதிக கவனமெடுத்து 1959ல் முடித்தார்.மாயவரம் திரு.பதி அவர்கள் உதவியாளராக துணைபுரிந்தார்.
(58)திருவள்ளுவர் ஓவியத்தை  1964ஆம் ஆண்டு  திரு.பக்தவத்சலம் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது அன்றைய துணை ஜனாதிபதி திரு.ஜாகீர் உசேன் அவர்கள்  சென்னை சட்டசபையில் திறந்துவைத்தார்.
(59) மேற்படியான திருவள்ளுவர் ஓவியம் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டு நாட்டுடமையாக்கப்பட்ட ஆண்டு 1964 ஆகும்.
(60) மத்திய அரசு15பைசா அஞ்சல் தலையாக 1960ஆம் ஆண்டு திருவள்ளுவர் ஓவியத்தை வெளியிட்டது.
(61)மத்திய அரசு 1995 ல் திருவள்ளுவர் உருவம் பொறித்த 5ரூபாய் நாணயம் வெளியிட்டது.
(62)'திருவள்ளுவர் திருஉருவப்பட வரலாறு (அன்றும்-இன்றும்)' என்ற நூலை எழுதியவர் திரு.மா.இராம.ராமசெல்வன் ஆவார்.முத்தமிழ் வித்தகம்,வேலூர் மாவட்டம்-632602 .   (konguthendral.blogspot.com)
(63)திருவள்ளுவருக்கு பதினாறாம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட கோயில் சென்னை அருகிலுள்ள மைலாப்பூரில் அமைக்கப்பட்டுள்ளது.
(64)திருவள்ளுவர் 2வது கோயில் விருதுநகர் மாவட்டம் பி.புதுப்பட்டியில் அமைக்கப்பட்டுள்ளது.
(65)கேரளாவில் வள்ளுவம் என்ற பெயரில் திருவள்ளுவருக்கான தனி மதம் உருவாக்கப்பட்டு வழிபடுகின்றனர்.42 கோவில்கள் இருப்பதாக தகவலறிகிறோம்.
  (இன்னும் கூடுதலாக கிடைக்கும் தகவல்களை இதனுடன் சேர்க்கப்படும்.)
    =====================================================
திருக்குறள் மாமலை - மாத இதழ் வாசித்துவிட்டீர்களா?
 இப்போதே தொடர்பு கொள்ளுங்க....

                 இன்னும் தொடரும்.....(தேதி; 5-4-2020)
  என அன்புடன்,
செ.பரமேஸ்வரன்,
இலக்கியக் கூடல்,
விதைகள் வாசகர் வட்டம்,
சத்தியமங்கலம்,
ஈரோடு மாவட்டம்.
 தொடர்பு எண் 9585600733.
 (konguthendral.blogspot.com)

02 ஏப்ரல் 2020

Thirukkural Perumai Arivom Part - 08

                       திருக்குறள் பெருமைகள் அறிவோம்...பகுதி 08
                           -----------------------------------------------------------------
  மரியாதைக்குரியவர்களே,
                                   வணக்கம். கொங்குத் தென்றல் வலைப் பக்கத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.
       உலக மொழிகளிலேநீதிபோதனை வழங்கும் நூல்களிலேயே முதன்மையானது தமிழிலுள்ள திருக்குறள் என்று முதன் முதலாக உலகறியச் சொன்னவர் இத்தாலி நாட்டைச் சேர்ந்த வீரமாமுனிவர் ஆவார். திருக்குறளை பிறமொழிப் பெயர்ப்பாக1730ஆம் ஆண்டு  முதன்முதலாக இலத்தீன் மொழியில்  மொழிபெயர்த்தவெளிநாட்டு அறிஞரும் இவர்தாங்க.

                      வீரமாமுனிவருக்குப் பிறகு பல்வேறு அறிஞர்கள் பல்வேறு மொழிகளில் மொழி பெயர்த்திருக்கின்றனர். ஆங்கிலத்தில்  G.U.. போப்  அவர்கள்தான் முதன்முதலாக மொழி பெயர்த்தார்.அதன்பிறகு   96 பேர் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கின்றனர். இந்திய மொழிகளில் 13 மொழிகளிலும், ஐரோப்பிய மொழிகளில் 14 மொழிகளிலும், கிழக்காசிய மொழிகளில் 10 மொழிகளிலும், திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது.

           உலகத்தில் தோன்றிய நீதிநூல்களில் தமிழில் தோன்றிய திருக்குறள் ஒன்று தான் இருக்கின்ற உலகத்தில் வாழுகின்ற மக்களுக்கு வழிகாட்டக்கூடிய நூலாக இருக்கிறது. ஆகவே,உலக இலக்கியநூல்களில் சிறந்தது திருக்குறள் என்று கூறினார் ஆல்பர்ட் சுவைட்சர்.

                 வள்ளுவர் செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள்
உள்ளூவரோ மனுவாதி ஒருகுலத்துக் கொருநீதி?
என்று மனோன்மணியம் சுந்தரம்பிள்ளையும் சுட்டிக் காட்டியிருக்கிறார்.
        
                 எல்லா நாட்டைச் சேர்ந்தவர்களும் திருக்குறளை அவசியம் படிக்க வேண்டும் என்று கூறினார் பிரெஞ்சு நாட்டு மொழியியல் அறிஞர் ஏரியல்.

                     எல்லா மதத்தைச் சார்ந்தவர்களும் திருக்குறளை ஏன் படிக்க வேண்டும்?  பைபிள் ஒரு கிறித்துவரைத்தான் உருவாக்குகிறது. குர் ஆன் ஓர் இஸ்லாமியரைத்தான் உருவாக்குகிறது. கீதை ஓர் இந்துவைத்தான் உருவாக்குகிறது. இவைகளெல்லாவற்றிலும் மேலாக திருக்குறள் ஒன்று தான் ஒரு மனிதனை உருவாக்குகிறது.
ஆக, மனிதனை மனிதனாக உருவாக்கக்கூடிய நூல் திருக்குறள் மட்டுமே!.என்று போற்றியவர் பிரெஞ்ச் அறிஞர் ஏரியல் அவர்கள்...
     
                    எந்த இனத்தையும் சாராமல், எந்த மொழியையும் சாராமல் மனித இனம் அனைத்திற்கும் பொதுவான நீதியை உரைப்பதால் தான் திருக்குறள் உலகப் பொதுமறை என்று போற்றப்படுகிறது.

                விக்டோரியா மகாராணியார்  நாள்தோறும் ஒவ்வொரு குறளைப் படித்து, அதன் பொருளை உணர்ந்து கொண்டார் என்று குறிப்பு இருக்கிறது

        அமெரிக்க வெள்ளை மாளிகையில் திருக்குறள் முதலிடத்தைப் பெற்றிருக்கிறது.
                            ரஷ்யாவின் இரும்பு மனிதர் என்று கூறப்படும் ஸ்டாலின், பாதாளச் சுரங்க அறையில் திருக்குறளைப் பாதுகாத்து வைத்திருந்தார் என்று அறிகிறோம்.
 
                         திருக்குறளின் தனிச் சிறப்பு..
                                -------------------------
  (1) வள்ளுவர் பொருள் விரியும் சுருங்கிய சொல்லை வைத்துப் பாடியுள்ளார்.
 (2) உள்ளுதல், உள்ளி உரைத்தல், உரைத்தவற்றைத் தெள்ளி எடுத்தல் என்கிற  முறையில் திருவள்ளுவர் தம் பாடல்களை உருவாக்கியுள்ளார்.
 (3) திருக்குறள் அக இருள் நீக்கும் விளக்கு.
 (4)அமுதம் சுவைத்தவர் தேவர் மட்டுமே.ஆனால் திருக்குறளை மக்களும்      சுவைக்கின்றனர். எனவே திருக்குறள் அமிழ்தத்தினும் சிறந்தது.
 (5)திருவள்ளுவர் தேவரினும் சிறந்தவர்.
(6)நாவுக்கு நல்வாழ்வு திருக்குறள்.
 (7)உள்ளுநர் உள்ளும் பொருளெல்லாம் திருக்குறளில் உண்டு.
(8) எல்லாப் பொருளும் இதன்பால் உள. இதில் இல்லாத எப்பொருளும் இல்லையால்.
 (9)இம்மை, மறுமை, எழுமை அனைத்தும் மும்மையில் (முப்பாலில்) சொன்னார்.
 (10)கலை நிரம்பல், இனிதாதல், நீர்மைத்து ஆதல் ஆகியவற்றால் திங்களும், திருக்குறளும் சமம் என்றாலும் திருக்குறளின் நயம் திங்களுக்கு இல்லை.
 (11)வெள்ளி, வியாழம், ஞாயிறு, திங்கள் ஆகியவை புறவிருள் போக்கும். திருக்குறள் அகவிருள் போக்கும்.
(12)  ஞாயிறு கமலம் மலர்த்தும். திருக்குறள் உள்ளக் கமலம் மலர்த்தும். ஞாயிறு புறத்திருள் போக்கும். திருக்குறள் அகத்திருள் போக்கும். இரண்டும் ஒப்பு எனினும் திருக்குறள் உயர்ந்தது.  (konguthendral.blogspot.com)
(13) திருக்குறள் மழைக்கு நம்மால் கைம்மாறு செய்யமுடியாது.
  (14)ஆறு சமயத்தவரும் ஏற்கும்படி வாழ உதவும் பொருளை வகுத்துத் தந்தவர் வள்ளிவர்.
(15) செய்யாமொழி எனப்படும் வேதத்துக்கு உரியவர் அந்தணர் மட்டுமே. பொய்யாமொழி எனப்படும் திருக்குறளைச் சொல்வதற்கு உரியவர் எல்லா மக்களும்.
(16) சீத்தலைச் சாத்தனார் என்னும் புலவரின் பெயரைச் சீழ்  ஒழுகும் தலையை உடைய சாத்தனார் என்று கொண்டு, புண்ணால் உண்டாகிய தலைவலி திருவள்ளுவரின் திருக்குறளைக் கேட்டதும் தீர்ந்துவிட்டது.
 (17) திருக்குறள் 'வாயுறை வாழ்த்து' . இன்பம் எய்தவும், தின்பம் போக்கவும் உதவும் மருந்து இது.
(18) இருவினை தீர்க்கும் மாமருந்து.  (konguthendral.blogspot.com)
(19)  பனித்துளி பனைமரத்தைக் காட்டுவது போல்த் திருக்குறளில் பொருள் செறிந்துள்ளது.
 (20) நன்னீர்ப் பொய்கையில் நீராடுவோர் பருகும் நீருக்காக வேறு குளத்துக்குச் செல்லார். அதுபோல வள்ளுவரின் முப்பால் படிப்பவர் வேறு நூல் தேடி அலைய வேண்டுவதில்லை.
(21)  மக்களின் கலையையும், வேதப் பொருளையும் இணைத்துப் பாடியுள்ளார்.
(22) திருக்குறளின் முதல் பாடலிலேயே மூன்று பால்களில் சொல்லப்பட்ட செய்திகளும், நாற்பொருள் செய்திகளும் அடக்கம்.
 (23)கடலில் மணல் தோண்டத் தோண்ட நீர் ஊறும். குழந்தை சுவைக்கச் சுவைக்கத் தாய்க்குப் பால் ஊறும். திருக்குறள் ஆய ஆய அறிவு ஊறும்.
(24)திரு வள்ளுவர் புலவர். அவர் காலைப்பொழுது. மற்றவர்களும் புலவர். அவர்கள் மாலைப் பொழுது.
(25)செய்க, செய்யற்க என்று வள்ளுவர் கூறுவனவே மேலானவை.
(26) திருவள்ளுவர் 1(ஒருவர்). குறள் 2 (இரண்டடி). சொன்னது 3 (முப்பால்). அளித்தது 4 (அறம்,பொருள்,இன்பம்,வீடுபேறு ஆகிய நான்குபொருள்). அடக்கம்  5 (ஐம்புலன்) வேதம். 6 (ஆறுசமயங்கள்).
(27)திருக்குறளால் மக்கள் மனத்தில் பொய் போயிற்று. மெய் நிலவிற்று.
(28)அறம், பொருள், இன்பம், வீடு பற்றி இதுவரையில் கேளாதனவற்றை யெல்லாம் திருக்குறளில் அறியலாம்.
                               (konguthendral.blogspot.com)
                  என்றெல்லாம் திருக்குறளின் மேன்மையை  வேதம் என்றும், கடவுளின் மேலானர் என்றும்,மாமருந்து என்றும்,இயற்கையோடு ஒப்பிட்டும்,பொதுநூல் என்றும்,
சங்ககாலம் தொட்டு இந்தக்காலம் வரை அனைத்து அறிஞர் பெருமக்களாலும் புகழப்பட்டு அறிகிறோம்.
--------------------------------------------------------------
திருக்குறள் மாமலை-மாத இதழ் வாசித்துவிட்டீர்களா?
 உடனே சந்தாதாரர் ஆகுங்க!...

                                                   இன்னும் தொடரும்....

  என அன்புடன்,
செ.பரமேஸ்வரன்,
இலக்கியக் கூடல்,
விதைகள் வாசகர் வட்டம்,
சத்தியமங்கலம்,
ஈரோடு மாவட்டம்.
 தொடர்பு எண் 9585600733.
 (konguthendral.blogspot.com)


திருக்குறள் மலையில் கல்வெட்டுக்களாக- பகுதி07

                                 திருக்குறள் பெருமை அறிவோம் பகுதி 07
  மரியாதைக்குரியவர்களே,
                                   வணக்கம். கொங்குத் தென்றல் வலைப் பக்கத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.இந்தப் பகுதியில்
திருக்குறள் கல்வெட்டுக்களாக்கும் குறள்மலைச் சங்கம்-சென்னை
               பற்றிய தகவல்களை அறிவோம்.

 (1) www.thirukkuralmalai.org
(2) http://thirukkuralkalvettukkal.blogspot.com
(3 )kuralmalai-sangam /facebook.com குறள் மலைச்சங்கம்.
(4) kuralmalaisangam /youtube.com
(5) 'கல்வெட்டில் திருக்குறள்' தொகுதி 1,2 நூல் வெளியீடு,
(6) திருக்குறள் மாமலை - மாத இதழ் வெளியீடு..


                              சுமார் 700சிற்பிகள் மாமல்லபுரம் பெருஞ்சிற்பி திரு.அரவிந்தன் அவர்களது தலைமையில் குறள்மலையாம் மலையப்பாளையம் மலைக்கு வருகைபுரிந்து 1330குறட்பாக்களையும் தெளிவுரை விளக்கங்களுடன் கல்வெட்டுக்களாகப் பதிக்க ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

 ஆமாங்க....
                                      திருக்குறள் பித்தன் திரு. பா.ரவிக்குமார் அவர்களது தலைமையிலான குறள்மலைச்சங்கம்  மேனாள் குடியரசுத் தலைவர் திரு ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களுடன் கலந்தாலோசித்து 2014ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரைஐ.நா.சபையையும் உறுப்பினராக இணைத்துக்கொண்டு  உலகளவில் ஐநூறுகளுக்கும் அதிகமான கலந்தாய்வுக்கூட்டங்களை  நடத்தி திருக்குறள் கல்வெட்டுக்கள் பணியமைக்கத் தீவிரமாகப் பணியாற்றி வருகிறார்கள்.

                     அனுபவமிக்க சிற்பிகள் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர்கள் ஆகியோருடன் திருச்சி உச்சிப் பிள்ளையார் கோவில்,பழனிமலை,பச்சைமலை,பவளமலை,சிவன்மலை,ஓதிமலை,உதயகிரிமலை என தமிழகத்திலுள்ள பெரும்பாலான மலைகளை ஆய்வுசெய்துள்ளனர்.

  இறுதியாக பாறையின் உறுதியான தன்மை,  நூறுஅடி மட்டுமே கொண்ட வாட்டமான உயரம், இருபதுக்கும் சற்று அதிகமான (20.5 ஏக்கர்)  ஏக்கர் பரப்பு, ஒரே பாறையினால் ஆன வட்டமான வடிவமைப்பு போன்ற காரணங்களால் ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அடுத்து உள்ள நம்பியூர் வட்டம், மலையப்பாளையம் உதயகிரி மலையைத் தேர்வு செய்து உள்ளனர்.

          அதன் பின்னர் குறள் மலைச்சங்கமானது, 'திருக்குறள் தன்னிகரில்லாப் பெருநூல்' என்ற துண்டறிக்கையோடு இந்தியா உட்பட உலகநாடுகளுக்குப் பயணம் செய்து தமிழறிஞர்களையும், உலகமொழி இலக்கியச் சிந்தனையாளர்களையும் சந்தித்தும்,தொடர்புகொண்டும்  திருக்குறள் கல்வெட்டுக்கள் அமைப்பதற்கான பணியை இடைவிடா முயற்சியுடன் செய்து வருகின்றனர்.
                    கோயம்புத்தூரில் வெளியாகும் நட்பு மாத இதழின் பின் பக்கத்தில் வெளியிட்டுஇதழாசிரியர் திரு.கண்ணப்பன் வெளியிட திருக்குறள் கல்வெட்டுக்களாக்கும் பணி பரவலாக பரவியது.
  அப்போதைய முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அம்மா அவர்களுக்குத் தகவல் செல்லவே,அம்மா அவர்களும் உடனடியாக திருக்குறள் கல்வெட்டுக்கள் அமைக்க உத்தரவிட்டார்.
      
                14 - 04 2014 அன்று  ஈரோடு மாவட்ட ஆட்சியர் திரு. வெ.க.சண்முகம் ஐ.ஏ.எஸ்.அவர்கள் தலைமையில் கோபி கோட்ட வருவாய் அலுவலர்,  கோபி வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், கிராம நிருவாக அலுவலர், கல்வெட்டு ஆய்வாளர்கள், உள்ளூர் மக்கள் ஆகியோர் அடங்கிய குழுவானது குறள் மலைச் சங்கத்துடன் இணைந்து   மலையப்பாளையம் மலையை ஆய்வு செய்து அறிக்கை ஒன்றினை அரசாங்கத்திற்கு சமர்ப்பித்தது.

                     25 -04- 2014 அன்று திருக்குறள் கல்வெட்டுக்கள் அமைக்கும் பணியை ஆய்வு செய்ய உத்தரவு இட்ட தமிழக அரசுக்கு, தலைவர் விக்கிரமன் அவர்கள் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் -சார்பாக நன்றிகளும்,பாராட்டுக்களும் தெரிவித்து கடிதம்  அனுப்பி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

              11 - 05 -2014 அன்று குறள்மலைச் சங்கமானது நம்பியூர் அரிமா சங்கத்துடன் இணைந்து மலையப்பாளையம் மலையிலுள்ள மண்டபத்தில் தற்போதைய கல்வி அமைச்சர் மாண்புமிகு K.A.செங்கோட்டையன் அவர்களை சிறப்புவிருந்தினராக அழைத்து முன்னாள் அமைச்சர்.திரு. V.K..சின்னச்சாமி அவர்களது தலைமையில்அமைச்சர்கள் கலந்துகொண்ட முதல் கலந்தாய்வு கூட்டம் ஒன்றினை நடத்தி கருத்துப் பதிவு செய்தது.
     குறள் மலைச்சங்கமானது சோர்வடையாமல் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும்,உலகத்தமிழ் சங்கங்களிலும் திருக்குறள் கல்வெட்டுக்கள் கலந்தாய்வுக் கருத்தரங்கங்கள் நடத்தி தமிழ்ச் சான்றோர் மேன்மக்களின் கருத்துக்களை பதிவு செய்து வருவது போற்றத்த தக்கது ஆகும்.

        தமிழ் வளர்ச்சித் துறையின் இணை இயக்குநர் திருமதி.சந்திரா அவர்கள், ஊரக வளர்ச்சித் துறையின் தலைமை செயற்பொறியாளர் திரு.S.சேகர் அவர்கள்,இந்து அறநிலையத் துறையின் இணை ஆணையாளர் அவர்கள்,செயல் அலுவலர் திருமதி.மாலா அவர்கள், தமிழறிஞரும்,எழுத்தாளருமான சத்தியமங்கலத்தைச் சேர்ந்த முத்து ரத்தினம் அவர்கள், குறள் மலைச்சங்கம், மாமல்லபுரம் சிற்பி திரு.அரவிந்தன் அவர்கள், ஊராட்சி ஒன்றியத் தலைவர் அவர்கள், அந்த பகுதி  கவுன்சிலர் அவர்கள், உள்ளூர்ப்  பொதுமக்கள் ஆகியோர் அடங்கிய குழுவானது மீண்டும்,மீண்டும் ஆய்வு செய்து மலையப்பாளையம் உதயகிரி மலையானது 1330குறட்பாக்களும் உரிய தெளிவுரையுடன் கல்வெட்டுக்களாக பொறிக்க ஏற்புடைய தகுதியான மலை என ஆய்வறிக்கையினை அரசுக்கு அனுப்பி வைத்தது.
            27 - 10 - 2015 ஆம் தேதியன்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் திரு.பிரபாகரன் அவர்கள்  சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுடன் மலையப்பாளையம் உதயகிரி மலையை இறுதிக்கட்ட ஆய்வு செய்து  குறட்பாக்கள் அமைக்க உறுதியானமலை என தேர்ந்தெடுத்து இறுதிக்கட்ட ஆய்வறிக்கையினை அரசுக்கு அனுப்பி வைத்தார்.

         குறள் மலைச்சங்கம், 'கல்வெட்டில் திருக்குறள்'  என்ற ஆய்வறிக்கை நூல்கள் இரண்டு தொகுதிகளை வெளியிட்டு கன்னிமாரா பொது நூலகம் உட்பட உலகத்திலுள்ள  பெரும்பாலான நூலகங்களுக்கும், தமிழறிஞர்களுக்கும், அனைத்துலக இலக்கிய ஆர்வலர்களுக்கும்,கல்விநிலையங்களுக்கும்,அனுப்பி திருக்குறள் கல்வெட்டுக்கள் பற்றிய பெருமைகள் அறிவித்துள்ளது.

                  19 - 05 -2019 அன்று உயர்நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதியரசர் கிருபாகரன் அவர்கள் கரங்களால், சென்னையிலிருந்து  'திருக்குறள் மாமலை' என்ற மாத இதழை குறள் மலைச் சங்கம் சார்பாக வெளியிட்டு தமிழுக்குப் பெருமை சேர்த்தார்.

          உயர்நீதிமன்றத்தின்   மாண்புமிகு  நீதியரசர் பெருமக்கள் உட்பட,உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு.வி.ஜி.சந்தோசம் அவர்கள்,உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் திரு.விசயராகவன் அவர்கள்,தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின்  தொல்லியல்துறைத் தலைவர் கல்வெட்டு ஆய்வாளர் புலவர் செ.ராசு அவர்கள்,தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் அவர்கள், கோவை மெடிக்கல் மருத்துவமனையின் நிறுவனர் திரு.நல்ல.ஜி.பழனிச்சாமி அவர்கள்,கோவை இந்துஸ்தான் கல்லூரியின் செயலர் அவர்கள்,மேட்டுப்பாளையம்,பர்லியாறு சச்சிதானந்தா ஜோதிநிகேதன் பன்னாட்டுப் பள்ளி,ஈரோடு வேளாளர் கல்லுரி,கே.கே.சி.கல்லூரிகள்,மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் அவர்கள்,பேரூர் ஆதினம் அவர்கள்,கௌமார மடாலயம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள்,இலண்டன் தமிழ்ச் சங்கம்,இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு,ஜெர்மனி  ஹம்பர்க் பல்கலைக் கழகம்,மொரீசியஸ் தமிழ்ச் சங்கம், என உலகத்தின் அனைத்து தமிழார்வலர்களும்,திருக்குறளின் பெருமையறிந்த அனைத்துஉலக இலக்கிய ஆர்வலர்களும் திருக்குறட்பாக்களை கல்வெட்டுக்களாக்க வேண்டும் என்று  ஆதரவளித்து ஆவலுடன் காத்திருப்பது  மகிழ்ச்சியடைய வைக்கிறது.

           பிரபலமான தமிழ் ஊடகங்களான தினத்தந்தி, தினமணி, தினகரன், தமிழ்க்குரல், கல்கி வார இதழ், நட்பு மாத இதழ், இந்தியன் எக்ஸ்பிரஸ் (பிரபல ஆங்கில இதழ்) ஆகிய ஊடகங்கள் அவ்வப்போது திருக்குறள் கல்வெட்டுக்கள் பற்றிய செய்திகளை வெளியிட்டு  முக்காலத்தும் உலகமாந்தர்களின் வாழ்வியல் வழிகாட்டுதல் நூலான  திருக்குறள் சிறப்புக்களை எழுதி திருக்குறளை கல்வெட்டுக்களாக பதிக்கவேண்டும் என பதிவிட்டு வருகின்றன.
          திருக்குறள் கல்வெட்டுக்கள் அமைத்து தமிழ்ப் புனித நூலான திருக்குறளின் சிறப்புக்கள்  நிலைத்து நீடிக்கச் செய்திட வேண்டும்! என்ற தீராத வேட்கையோடு பல ஆண்டுகளாக தமிழுக்குத் தொண்டாற்றி வருகின்ற சென்னை  குறள் மலைச்சங்கத்திற்கு நன்றிகளும்,பாராட்டுக்களும் தெரிவிப்பதோடு நாமும் கரம் கோர்த்து ஆதரவளிப்போம் வாங்க...

  என அன்புடன்,
செ.பரமேஸ்வரன்,
இலக்கியக் கூடல்,
விதைகள் வாசகர் வட்டம்,
சத்தியமங்கலம்,
ஈரோடு மாவட்டம்.
 தொடர்பு எண் 9585600733.
தேதி;3-4-2020
                    (konguthendral.blogspot.com)                                இன்னும் தொடரும்.....


Thirukkural Perumai Arivom Part - 06

                             திருக்குறள் பெருமை அறிவோம். பகுதி 06.

      மரியாதைக்குரியவர்களே,
                                   வணக்கம். கொங்குத் தென்றல் வலைப் பக்கத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

                 திருக்குறள் பரப்பிய மேலை நாட்டினர்...
                                      தமது மதத்தைப் பரப்புவதற்காக இங்கு வருகைபுரிந்த மேலைநாட்டினர் தமிழை நேசித்து பிழையற நன்றாகக் கற்றுத் தேர்ந்து மதத்தை பரப்பினாலும் தமிழை நன்றாக வளர்த்தனர்.தமிழ் இலக்கியங்களை பிறமொழிகளில் மொழிபெயர்ப்பு செய்தனர்.அந்த வரிசையில்...
திருக்குறள் சிறப்புநிலை அடைந்தது.

                           கி.பி.1730 ல் வீர மாமுனிவர் என்னும் கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி திருக்குறளை முதன்முதலாக இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்தார்.
                      கி.பி.1794 ல் கிண்டெர்ஸ்லே ஆங்கிலத்தில் திருக்குறள் கருத்துக்களை வெளியிட்டார்.
                    கி.பி.1812 ல் எல்லீசன் என்றழைக்கப்பட்ட பிரான்சிஸ் வைட் எல்லீஸ் என்பவர் திருக்குறளின் அறத்துப்பாலிலுள்ள 13 அதிகாரங்களுக்கு உரை எழுதி வெளியிட்டதோடு,தங்கக்காசில் திருவள்ளுவர் உருவம் பொறித்து வெளியிட்டார்.
                   கி.பி.1886 ல் ஜீ.யூ.போப் என்றழைக்கப்பட்ட ஜார்ஜ் யுக்ளூ போப்தாங்க ஆங்கிலத்தில் முதன்முறையாக திருக்குறளின் 1330 குறட்பாக்களையும் மொழிபெயர்த்து வெளியிட்டார்.இவ்வாறாக இன்னும் பல மேலைநாட்டினர்
               திருக்குறளை வாசித்து அதில் குறிப்பிட்டுள்ள வாழ்வியல் கருத்துக்களை உணர்ந்து அதாவது நீதிநூல்கள் காலத்தாலும் இடத்தாலும் வேறுபடும்.அல்லது பயன் இல்லாமலும் போய்விடும்.ஆனால்,
                   திருக்குறள் ஆனது உலக மக்கள் அனைவருக்கும் எக்காலத்தும் பயனுள்ள வாழ்வியல் கருத்துக்களை கூறி தனிச்சிறப்பு பெற்றுள்ளது. என உலக மொழிகளில் மொழிபெயர்த்து வருகின்றனர்.
                    இன்றுவரை 107 மொழிபெயர்ப்புகள் நடைபெற்று உலக மொழிகளிலேயே அதிகமொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட நூல்களின்வரிசையில் பைபிள்,திருக்குர் ஆன் அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் தமிழ் இலக்கியநூலான திருக்குறள் உள்ளது.

                       என்னறிவுக்கு கிடைத்த தகவல்களை இங்கு பதிவிட்டுள்ளேன்.கூடுதலான தகவல் அறிந்த தமிழறிஞர்கள் தகவலளித்து உதவ வேண்டுகிறேன்.
                                       இன்னும் தொடரும்...

என
C.பரமேஸ்வரன்,
இலக்கியக் கூடல்,
விதைகள் வாசகர் வட்டம்,
சத்தியமங்கலம்
9585600733