ஓடும் நேரத்தோடு இயங்கவேண்டிய கட்டாயம் 🙏
பணிவான வணக்கம்.
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற ஆளப்பிறந்தவன் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற சான்றோர்களில் சில மேன்மக்கள் கீழ்கண்டவாறு கருத்து தெரிவித்தனர்....அதாவது,
(1) நூல் வெளியீட்டுவிழாவில் வாசிப்பைப்பரவலாக்கும் தன்னார்வலர்களுக்கான ''மக்கள் சேவகர் விருது'' வழங்கப்பட்ட இருவருமே சரியான தேர்வு...
(2)பிற்பகல் சரியாக 4.00 மணிக்கே பவர்பாய்ண்ட் பிரசன்டேசன் ஒளிபரப்பி நேரத்தை பிரித்து வீண் ஆக்காமல் சரியாக பயன்படுத்தப்பட்டது...
(3) வரவேற்புரையிலிருந்து கடைசியாக திரு.முரளிதரன் அவர்களின் இளமைக்காலத்தை உரையாக வழங்கியதுவரை சலிப்பே இல்லாமல் 8.30 மணிவரை நிகழ்வினை எதிர்பார்க்க வைத்து நேரத்தை கடத்தியது பாராட்டவேண்டியது.
(4) நூலாசிரியரின் ஆசிரியர் திரு.அகஸ்டியன் அவர்களுடைய உரை நம்மையும் மாணவப்பருவத்திற்கு கொண்டுசென்றது.
(5) நூலாசிரியர் ஏற்புரை அருமை 👌
(6) நன்றியுரைக்கு நேரம் கொடுத்திருக்கலாம்.
(7) மேடையேறி உரையாற்றுவதற்காக தயாராக தயாரிப்போடு வந்தவர்களுக்கு கொஞ்சம் நேரம் கொடுத்திருக்க வேண்டும்..
என்று கருத்து கூறியிருந்தனர்.
மேற்குறிப்பிட்ட கருத்தினை ஏற்று நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்வதுடன் அதற்கான விளக்கம் பின்வருமாறு...
(1) அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பிற்பகல்4.00 மணி முதல் இரவு 8.30 மணிவரை விழா நடத்த அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது.(2) நூலக விதிகளின்படி இரவு 8.00 மணியுடன் வேலைநேரம் முடிவதால் 8.00 மணிக்கு மேல் அனுமதி இல்லை என்றனர்.
(3) சரியாக 4.00 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழாவினை தொடங்குவதற்கேற்ப எல்லோருமே 3.50 மணிக்குள் அரங்கு வந்திருந்தால் நேரத்தை ஒழுங்குபடுத்தி சமூக சேவகர்களின் PPT ஒளிப்படநிகழ்வினை தலா பத்துநிமிடங்கள் மட்டுமே ஒளிபரப்பிவிட்டு மற்ற நேரத்தை விழாநிகழ்வுக்கு கொண்டுவந்திருக்கலாம். ஓரளவாவது குறையினை சமாளித்திருக்கலாம்.
(4) நிகழ்ச்சித் தொகுப்பாளரிடம் முன்கூட்டியே தகவல் கொடுத்து உதவ வேண்டும்.
(5) நிகழ்வு அரங்கில் உள்ளோர் விழா நடத்துவதற்கான மொத்தநேரத்தையும், ஒவ்வொரு உரைக்கும் கழிந்துவரும் நேரத்தையும் கணக்கிட்டு வரவேண்டும்.
வரவேற்புரை 5 - 8 நிமிடங்களில் முடிந்துவிடும்.
தலைமையுரைக்கு நேரம் அறிவிக்க இயலாது.இருந்தாலும் 5 முதல் 15 நிமிடங்களில் முடிப்பர்.
நூல் அறிமுகவுரை,
நூல் ஆய்வுரைக்கு நேரம் சுருக்கி அறிவிக்க இயலாது.
சிறப்புரைக்கும் நேரம் அறிவிக்க இயலாது.
மீதமுள்ள நேரத்தை நூல் வெளியிடுதல்,
முதல்பிரதி பெறுதல்,
சிறப்பு அழைப்பாளர்களுக்கு பயனாடை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கல்,
உரைக்கு முன்னதாக ஒவ்வொரு சிறப்புப் பேச்சாளர்களைப்பற்றி அறிமுகவுரை வழங்குதல்,
தேர்வு செய்யப்பட்ட சமூகசேவகர்களுக்கு அறிவித்தபடி விருது வழங்கல் ,
நூலாசியருக்கு பயனாடை அணிவித்து பாராட்டுப்பொருட்களும்,பரிசுகளும் வழங்கல்,
வாழ்த்துரை வழங்கல்,
ஏற்புரை வழங்கல்,
நன்றியுரைவழங்கல்,
நாட்டுப்பண் இசைத்தல் என அனைத்துக்கும் நேரத்தைப் பகிர்ந்தளிக்கவேண்டிய சிக்கலான நெருக்கடி...
நீங்களே பகுத்தாய்ந்து கணக்கிட்டு பிரித்துப் பாருங்க.வேகமாக துரிதப்படுத்தியும் இரவு 8.30 மணிக்கு மேலாகி தாமதமாகிவிட்டது.
ஆதலால் இந்த விளக்கத்தில் எந்த இடத்தை சிக்கனப்படுத்தி நேரத்தை மீதப்படுத்துவது.நேரம் நமக்காக காத்திருப்பதில்லை.ஓடும் நேரத்தோடு ஓடிக்கொண்டே பகிர்ந்துகொள்ளவேண்டிய கட்டாயம்.ஆதலால் ஏற்பட்ட குறைகளை பொறுத்தருள வேண்டுகிறேன்.
இப்படிக்கு,
நிகழ்ச்சி நெறியாளர்,
செ.பரமேஸ்வரன்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக