13 செப்டம்பர் 2015

“வலைப்பதிவர் திருவிழா-2015-புதுக்கோட்டை“ “தமிழ்நாடு அரசு – தமிழ் இணையக் கல்விக் கழகம்“ ...இணைந்து நடத்தும்... உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்!

மரியாதைக்குரியவர்களே,
                      வணக்கம். வருகிற 2015செப்டெம்பர்30ந் தேதிக்குள் உங்க படைப்புகளை அனுப்புங்க.பரிசும் பாராட்டும் காத்திருக்கிறதுங்க..நான் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கட்டுரை எழுதி அனுப்புகிறேன்...வெற்றி என்பதல்லங்க முக்கியம்..புதுகை விழாக்குழு  நண்பர்களுக்கு ஊக்கம் தருவதே முக்கியம். தன்னலம் கருதாமல் தமிழ்ச்சமூக வளர்ச்சி மற்றும் தமிழ் விழிப்புணர்வுக்காக ஒன்றிணைவோம் வாங்க...வருகிற 2015அக்டோபர் 11 ந்தேதி புதுக்கோட்டையில்...

வலைப்பதிவர் சந்திப்பு 2015: உலகளாவிய மின்தமிழ்இலக்கியப் போட்டிகள்! -  “வலைப்பதிவர் திருவிழா-2015 - புதுக்கோட்டை“ “தமிழ்நாடு அரசு – தமிழ் இணையக் கல்விக் கழகம்“ ...இணைந்து நடத்தும்... உலகளாவிய மின்தமிழ் மின் தமிழ் இலக்கியப்போட்டிகள் ....

உலகளாவிய மின்தமிழ்இலக்கியப் போட்டிகள்! -
                                மொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000!

 “வலைப்பதிவர் திருவிழா-2015-புதுக்கோட்டை“
“தமிழ்நாடு அரசு – தமிழ் இணையக் கல்விக் கழகம்“
...இணைந்து நடத்தும்...
உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்!
மொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000!
ஐந்துவகைப் போட்டிகள்! – வகைக்கு மூன்று பரிசுகள்!
முதல் பரிசு ரூ.5,000
இரண்டாம் பரிசு ரூ.3,000
மூன்றாம் பரிசு ரூ.2,000

ஒவ்வொரு பரிசுடனும்
“தமிழ்க்களஞ்சியம்“ இணையம் வழங்கும்
மதிப்புமிகு வெற்றிக் கேடயம்!
இவ்வாறாக   ஐந்து போட்டிகளுக்குமான
மொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000!
------------------------------------
வகை-(1)  
            கணினியில் தமிழ்வளர்ச்சி- கட்டுரைப் போட்டி- 
              கணினியில் தமிழ்வளர்ச்சி குறித்த ஆதாரத் தகவல்கள், ஆக்கபூர்வ யோசனைகள்  -ஏ4 பக்க அளவில் 4பக்கம்.  இலக்கிய நயமான தலைப்பும் தருதல் வேண்டும்

வகை-(2) 
                    சுற்றுச்சூழல் விழிப்புணர்வு - கட்டுரைப் போட்டி -
           சுற்றுச்சூழல் அறியாமை தரும் ஆபத்து, விழிப்புணர்வுக்கு ஆக்கபூர்வ யோசனைகள் - ஏ4 பக்க அளவில் 4பக்கம் பொருத்தமான தலைப்பும் தருதல் வேண்டும்

வகை-(3)     
            பெண்கள் முன்னேற்றம் - கட்டுரைப் போட்டி - 
       பெண்களை சமூகம் நடத்தும் விதம், பெண் முன்னேற்றம் குறித்த யோசனைகள், - ஏ4 பக்க அளவில் 4பக்கம், தலைப்பும் பொருத்தமாகத் தருதல் வேண்டும் 

வகை-(4)  
                     புதுக்கவிதைப் போட்டி-   கவிதைப்போட்டி
      முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை குறித்த புதுக்கவிதை - 25வரி அழகியல் மிளிரும் தலைப்போடு

வகை-(5)   
                   மரபுக்கவிதைப் போட்டி-   கவிதைப்போட்டி
      இளைய சமூகத்திற்கு நம்பிக்கையூட்டும் வீறார்ந்த எளிய-மரபுக் கவிதை 24வரி.அழகொளிரும் தலைப்போடு

போட்டி விதிகள்
(1)   படைப்பு தமது சொந்தப் படைப்பே எனும் உறுதிமொழி தரவேண்டும்.
(2)    இப்படைப்பு, “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது என்னும் உறுதிமொழியும் இணைக்கப்ட வேண்டும்.
(3)   “இதற்கு முன் வெளியான படைப்பல்ல, முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது“ என்னும் உறுதி மொழியுடன் தமது தளத்தில் வெளியிட்டு, அந்த இணைப்பை  மட்டுமே மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும்.
(4)   வலைத்தமிழ் வளர்ச்சியே போட்டியின் நோக்கம் என்பதால் வலைப்பக்கம் இல்லாதவர் இப்போட்டிகளில் கலந்து கொள்ள இயலாது. இதற்காகவே புதிதாக வலைப்பக்கம் தொடங்கியும் போட்டியில் கலந்து கொள்ளலாம். போட்டி முடியும் வரை அந்த வலைப் பக்கம் செயல்பாட்டில் இருத்தல் வேண்டும்.
(5)    படைப்பு வந்துசேர இறுதிநாள்30-9-2015 (இந்திய நேரம் இரவு11.59க்குள்)
(6)   11-10-2015 புதுக்கோட்டையில் நடக்கும் வலைப்பதிவர் திருவிழா- 2015இல் தமிழ்நாடு அரசின் தமிழ்இணையக் கல்விக் கழகத்தினர் (TAMIL VIRTUVAL ACADEMY-http://www.tamilvu.org/ ) வழங்கும் உரிய பரிசுத்தொகையுடன் பெருமைமிகு வெற்றிக் கேடயமும் சான்றோரால் வழங்கப்படும்.
(7)   உலகின் எந்த நாட்டிலிருந்தும் அவரவர் வலைப்பக்கம் வழியாக எத்தனை போட்டிகளில் வேண்டுமானாலும், (ஒவ்வொரு தலைப்பிலும் எத்தனை படைப்புகள் வேண்டுமானாலும்) அனுப்பிப் பங்கேற்கலாம். அனைத்துவகைத் தொடர்பிற்கும் மின்னஞ்சல் தொடர்பு மட்டுமே.  மின்னஞ்சல் bloggersmeet2015@gmail.com
(8)   தளத்தில் படைப்புகளை போட்டிவகைக் குறிப்புடன் வெளியிட்டுவிட்டு, போட்டிக்கு அந்த இணைப்பை அனுப்பும்போது,  பதிவரின் பெயர், வயது, புகைப்படம், மின்னஞ்சல், செல்பேசி எண், வெளிநாட்டில் வாழ்வோர்- இந்தியத் தொடர்பு முகவரியுடன் கூடிய அஞ்சல் முகவரி, வலைப்பதிவர் திருவிழாவில் வெளியிடப்படவுள்ள கையேட்டிற்கு உரிய விவரங்கள் தரப்பட்டுவிட்டதையும் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். இவ் விவரங்கள் இன்றி வரும் அனாமதேயப் படைப்புகளை ஏற்பதற்கில்லை. வலைப்பக்க முகவரி தவிர, மற்றுமுள்ள விவரங்களை வெளியிட வேணடாம் எனில் அதனைக் குறிப்பிட வேண்டும்.
(9)   வெற்றிபெறுவோர் நேரில் வர இயலாத நிலையில், உரிய முன் அனுமதியுடன் தம் பிரதிநிதி ஒருவரை அனுப்பி, தொகை மற்றும் வெற்றிக் கேடயத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இவற்றை அஞ்சலில் அனுப்புதல் இயலாது.
(10) மற்ற பொது நடைமுறைகளில் போட்டி நடுவர்களின் முடிவே இறுதியாகும்.
-----------------------------------------------------------------
அன்பான வேண்டுகோள் ஐந்து -
(1)   போட்டி விவரங்கள் அடங்கிய இந்தப் பதிவை, நம் தமிழ் வலைநண்பர்கள் தமது வலைப்பக்கத்தில் எடுத்து மறுபதிவு இட்டு, இந்த இணைப்பையும் தந்து போட்டியில் அதிகபட்சப் பதிவர்கள் பங்கேற்க உதவ வேண்டுகிறோம்.
(2)   விழாவில் வெளியிடவுள்ள “தமிழ்வலைப்பதிவர் கையேடு-2015விவரத்தை உங்கள் முகநூல் நண்பர்களிடம் தெரிவித்து, அவர்களை வலைப்பக்கம் தொடங்கி எழுதுமாறு ஒரு வேண்டுகோள் விடுக்கவும் வேண்டுகிறோம்.
(3)   அப்புறமென்ன? போட்டியில் கலந்துகொண்டு கலக்குங்கள்... அப்படியே (11-10-2015 ஞாயிறு) புதுக்கோட்டை வர ஏற்பாடுகளையும் செய்துவிடுங்கள்!
(4) எல்லாவற்றுக்கும் விழாக்குழுவின் இந்த வலைப்பக்கம் தினமும் வாருங்கள்-  -http://bloggersmeet2015.blogspot.com
(5)உங்கள் மின்-நண்பர்களுக்கு தொகுப்பு மின்னஞ்சல் வழியாகவும், முகநூல்,சுட்டுரை, கூகுள்+ வழியாகவும் நமது விழாப் பற்றிய இவ் வலைப்பக்கத்தை இணைப்புத் தந்து அனைவர்க்கும் அறிமுகப்படுத்தி வாருங்கள்..! இணையத் தமிழால் இணைவோம். 

      மிகச்சிறப்பான ஏற்பாடுகளை ஆர்வத்துடன் தமிழுக்காக இணையத் தமிழுக்காக அயராது மாதக்கணக்கில் செய்து வரும் நண்பர் திருமிகு.திண்டுக்கல் தனபாலன் ஐயா அவர்கள் மற்றும் விழாக்குழுவினரை வலைத்தமிழுலகம் சார்பாக வாழ்த்தி வணங்குகிறேன்..
 என
அன்புடன்,
 C.பரமேஸ்வரன்,
சத்தியமங்கலம்-638402
ஈரோடு மாவட்டம்.

4 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. மரியாதைக்குரிய திண்டுக்கல் தனபாலன் ஐயா அவர்களே,
      வணக்கம். தமிழ்ச் சமூகத்திற்கான தங்களது சேவைப்பணி வரலாற்றுச்சிறப்பு மிக்கது.ஆதலால் என்னைப்போன்றோர்களே தங்களுக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறோம்.என வாழ்த்தி வணங்கும்.
      அன்பன்,
      C.பரமேஸ்வரன்,
      சத்தியமங்கலம்,
      ஈரோடு மாவட்டம்.

      நீக்கு
  2. தனபாலன் சேவை நமக்கு எல்லாம் வழிகாட்டி ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மரியாதைக்குரிய தனிமரம் அவர்களே,
      வணக்கம்.
      நமக்கு வழிகாட்டலும் போற்றலும் டி.டி.ஐயாதாங்க..நன்றியுடன்,
      அன்பன்,
      C.பரமேஸ்வரன்

      நீக்கு

முனைவர்.இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phil.,Ph.D., அவர்களது வாழ்க்கைக்குறிப்பு... (Dr.R.K.Manikkam, professor,Writer)

                                                                                                        முனைவர். இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phi...