23 மே 2017

இடந்தடுமாற்றம்

 மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.நாமக்கல் கவிஞரின் கவிதைகள் மிகவும் எளிமையாக கருத்து நயமிக்கதாக உள்ளன கண்டு பேருவகை அடைந்தேன்.விரும்பாத தொழிலை விதியால் செய்து வரும் நமது மக்களின் நிலை பற்றி ''இடந் தடுமாற்றம்'' என்ற தலைப்பில் நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை அவர்கள் எழுதிய கவிதை இதோ....
அறிவுக் கேற்ற அலுவல் கிடைப்பதோ
படிப்புக் குகந்த காரியம் பார்ப்பதோ
விரும்பிய படிக்கொரு வேலையில் சேர்வதோ
தகுதியைப் பற்றிய தன்மை யுள்ளதாய்
உத்தியோகம் அடைவதோ ஊதியம் பெறுவதோ
இந்திய நாட்டில் இப்போ தில்லை.
இலக்கிய ஞானம் இணையிலா ஒருவன்
கல்வியே வேண்டாக் காரியம் செய்வதும்
கணித சாத்திரம் கைதேர்ந்த ஒருவன்
எண்ணிக்கை வேண்டா வேலையில் இருப்பதும்,
ரஸாய னத்தில் ரஸனை மிகுந்தவன்
கச்சேரி மேசையில் கவிழ்ந்து கிடப்பதும்
சங்கீத வித்தையில் சமனிலாக் கலைஞன்
தபால் ஆபீஸ் தந்திய டிப்பதும்,
சித்திரக் கலையில் கைத்திறம் சிறந்து
பத்திரம், 'ரிஜிஸ்டர்' பதிவு செய்வதும்,
சத்தியம் தவறா உத்தம குணவான்
வக்கீல் தொழிலில் வருத்தப் படுவதும்,
கொல்லா விரதமே கொண்டுள ஒருவன்
பட்டாள வீரனாய்ப் பதிந்து கொள்வதும்,
விஞ்ஞா னங்களில் விருப்புள இளைஞன்
'டிக்கட் கலெக்டராய்'த் திண்டாட நேர்வதும்,
புத்தகம் படிப்பதில் பித்துள்ள புலவன்
'புக்கிங் கிளார்க்காய்'ப் புழுங்கு கின்றதும்,
உருட்டி மருட்டத் தெரியா ஒருவன்
போலீஸ் காரனாய்ப் பொழுதுபோக் குவதும்,
திட்டிப் பேசவும் தெரியா நல்லவன்
அமீனா வேலையில் அடிபட்டு வருவதும்,
கள்ளுச் சாராயம் கடிந்திடும் கருத்தன்
கலால் வேலையில் 'டிகிரி' கணிப்பதும்,
மாமிச உணவை மறுக்கும் மனத்தன்
ஆட்டுக் கறிவையும் மாட்டுக் கறியையும்,
சுத்தம் பார்த்தலில் முத்திரை குத்தலும்,
இப்படிப் பற்பலர் இடந்தடு மாறுவர்.

2 கருத்துகள்:

  1. ஆகா
    இன்றைய நிலைமையினை
    அன்றே நாமக்கல்லார் படம் பிடித்துக் காட்டியுள்ளாரே
    வியப்பாக இருக்கிறது ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
  2. மரியாதைக்குரிய ஐயா,
    வணக்கம்.தங்களது கருத்துரைக்கு மிக்க நன்றிங்க.
    நமது முன்னோர் சிந்தனைகளை நாம் நினைவுபடுத்தினாலே போதுமுங்க.அத்தனை அறிவுக்களஞ்சியத்தைப் பெறலாம். நகலெடுக்கக்கூட நாம் தயங்குகிறோம்!

    பதிலளிநீக்கு

சதுரங்கம் வாழ்க்கைக்கு தரும் பாடம்.

  ஒவ்வொரு அசைவும் முக்கியமானது. ஆட்டத்தில் மட்டுமல்ல வாழ்க்கையிலும். வாழ்வில் நாம் செய்யும் ஒவ்வொரு நிகழ்வையும் மிகவும் கவனமாக செயல்படுத்த வ...