23 மே 2017

நெற்பானையும் எலியும்

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களது குழந்தைப்பாடல்கள் மிகவும் எளிமையானவை,இனிமையானவை.கொளப்பலூர் புனித மரியன்னை நடுநிலைப்பள்ளியில் நான் தொடக்கக்கல்வி பயின்றபோது கி.பி.1971ல் இரண்டாம் வகுப்பு தமிழ்ப் புத்தகத்தில்  படித்து இன்புற்ற பாடல்! 

பாட்டியின் வீட்டுப் பழம்பானை - அந்தப்
பானை ஒருபுறம் ஓட்டையடா!
ஓட்டை வழியொரு சுண்டெலியும் - அதன்
உள்ளே புகுந்து நெல் தின்றதடா!




உள்ளே புகுந்து நெல் தின்று தின்று - வயிறு
 ஊதிப் புடைத்துப் பருத்ததடா!
மெல்ல வெளியில் வருவதற்கும் - ஓட்டை
 மெத்தச் சிறிதாகிப் போச்சுதடா!

பானையைக் காலை திறந்தவுடன்-அந்தப்
 பாட்டியின் பக்கமாய் வந்த ஒரு
பூனை எலியினைக் கண்டதடா!-ஓடிப்
போய் அதைக் கவ்வியே சென்றதடா!

 கள்ளவழியில் செல்பவரை - எமன்
காலடி பற்றித் தொடர்வானடா!
உள்ளபடியே நடப்பவர்க்குத் - தெய்வம்
உற்ற துணையாக நிற்குமடா!














கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முனைவர்.இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phil.,Ph.D., அவர்களது வாழ்க்கைக்குறிப்பு... (Dr.R.K.Manikkam, professor,Writer)

                                                                                                        முனைவர். இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phi...