20 மே 2017

நூலகத்தைக் காணவில்லை!

அறிவுக் கிடங்கினைத் திறக்க அரசின் கண்களைத் திறப்போம் வாங்க!.

மரியாதைக்குரியவர்களே,
          வணக்கம்.ஈரோடு மாவட்டம்,நம்ம தாளவாடியில் செயல்பட்டு வந்த அரசு பொது நூலகம் தற்போது நகரின் கடைக்கோடியில்  சந்தின் மூலையில் மதுவில் மயங்கிய மனிதனைப்போல களையிழந்து முடங்கிக் கிடக்கிறது. தனிமையைப் போக்க,தன்னம்பிக்கை வளர,சமூகத்தைப் படிக்க,சராசரி மனிதனாக வாழ,கற்பனை பிறக்க,சிந்தனை பெருக,நினைவாற்றல் வளர,பொது அறிவு கிடைக்க நூலகமே சிறந்த தளம் என சான்றோர்கள் சொல்லக்கேட்கிறோம்.ஆனால் நம்ம தாளவாடியில் அறிவுத்திருக்கோயிலாம் பொது நூலகம் ,கிளை நூலகமாகவே அடிப்படை வசதிகள் ஏதுமில்லாமல்,வாசகர்கள் அமர்ந்து படிக்கக்கூட இடமில்லாமல்,இருக்கை வசதியில்லாமல் பயன்படுத்த முடியாத நிலையில் பார்வைக்காக மட்டுமே அமைந்துள்ளது கண்டு மிகவும் வேதனையளிக்கிறது.
  அண்ணல் அம்பேத்கர்  உட்பட ,பகத்சிங்,மகாத்மா காந்தியடிகள்,நேரு,அறிஞர் அண்ணா,அப்துல் கலாம்,புரட்சித்தலைவி ஜெயலலிதா,கலைஞர் கருணாநிதி போன்ற மாபெரும் தலைவர்களும்,சமகாலத்தலைவர்களும்,சாதனையாளர்களும், நூலகத்தைப் பயன்படுத்தி புத்தகங்களைப் படித்தே படைப்பாளி ஆகி இருக்கிறார்கள். சாதனைகள் பல செய்து தம் வாழ்க்கையில் வெற்றி பெற்றதோடு,சமூகத்தில் விழிப்புணர்வு பெறவும் சான்றோர்கள் பலர் உருவாகவும் ,சாதனையாளர்கள் பலர் தோன்றவும் வழிகாட்டியிருக்கிறார்கள்.

              நூலகத்தின் முக்கியத்துவம் அறிந்த சான்றோன் புதுக்கோட்டை மாவட்டத்தைச்சார்ந்த கிருஷ்ணமூர்த்தி-டோரதி தம்பதியினர் தனி நபர் நூலகத்தை அதாவது தம்பதியினர் இருவரின் உழைப்பின் ஊதியத்தை புத்தகங்களாக மாற்றி சமூகத்திற்கு பயன்பெற தனியோருவராக நூலகம் அமைத்து செயல்படுத்தி வருகிறார்கள்.தங்களது ஓய்வூதியப்பணம் முழுவதையும் செலவிட்டு பல லட்ச ரூபாய் செலவில் 'ஞானாலயா' என்ற பெயரில் அறிவுத்திருகோயில் ஒன்றையும் மூன்றடுக்கு மாடிகளாக கட்டி நூலகமாக செயல்படுத்தி,சங்க இலக்கியம் முதல் தற்கால இலக்கியம் வரை முதல் பதிப்பு நூல்களாக,சட்ட நூல்கள்,சித்த மருத்துவ நூல்கள்,பைபிள்,இசுலாமிய நூல்கள்,துணியினால் ஆன பகவத்கீதை போன்ற சமய நூல்கள் உட்பட முதல் பதிப்பு நூல்களாக லட்சக்கணக்கில் சேகரித்து மக்களின் பயன்பாட்டிற்கு மாதந்தோறும் பல்லாயிரம் ரூபாய் பராமரிப்பு செலவு செய்து   இன்றும் இலவசமாக நடத்தி வருகிறார்கள்.தொடர்பு கொள்ளவேண்டிய மின்னஞ்சல் முகவரி gnanalayapdk@gmail.com 

                               (புதுக்கோட்டையில் நடைபெற்ற கணினித்தமிழ்ச்சங்கம் நடத்திய உலக வலைப்பதிவர் மாநாட்டில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தபோது ஞானாலயா புத்தகாலயத்தை நேரில் பார்த்து வியப்பின் உச்சிக்கே சென்றுவிட்டேன்.புதுக்கோட்டை செல்லும் வாய்ப்புள்ளவர்கள் அவசியம் 'ஞானாலயா' என்ற தனி நபரின் இலவச நூலகத்தையும் பார்வையிட்டு வாங்க.)

இவ்வாறு வெளியுலகத்தில் சமூக நலனுக்கான நூலகச்சேவையை பார்க்கும்போது தாளவாடியில்  அரசு பொது நூலகத்தை தொலைத்துவிட்டோமோ?என்ற ஐயப்பாடு நிலவுகிறது.எனவே அறிவுமிகுந்த சான்றோர்களே,ஊடகங்களே,மாணவர்களே,சமூக அக்கறையுள்ளவர்களே,அனைவரும் வாங்க!. தாளவாடி நகரின் மையத்தில் நூலகம் அமைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் ''சமூக ஆர்வலர்களின் கூட்டமைப்பு''க்கு ஆதரவளிப்போம்.சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளை சந்தித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வற்புறுத்துவோம்......................
என அன்புடன் அழைக்கும்,
சமூக நலனில் அக்கறையுள்ள அன்பன்,
 C. பரமேஸ்வரன்,
தாளவாடி-ஈரோடு மாவட்டம்.
+919585600733,
 paramesdriver@gmail.com

2 கருத்துகள்:

  1. தங்களின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் ஐயா

    பதிலளிநீக்கு
  2. மரியாதைக்குரிய ஐயா,
    கரந்தை ஜெயக்குமார் அவர்களே வணக்கம். புதுக்கோட்டை உலக தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு திருவிழாவின்போது தாங்கள் எழுதி வெளியிட்டதுடன் அன்று எனக்கு பரிசாக வழங்கிய 'வித்தகர்கள்' புத்தகமும் நூலகத்தேவையின் உந்துதலுக்கு காரணம் என நன்றியுடன் தங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு

முனைவர்.இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phil.,Ph.D., அவர்களது வாழ்க்கைக்குறிப்பு... (Dr.R.K.Manikkam, professor,Writer)

                                                                                                        முனைவர். இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phi...