30 டிசம்பர் 2015

நுகர்வோர் நலவாழ்வு மற்றும் மக்கள் பாதுகாப்பு சங்கம்-கோபி செட்டிபாளையம்

                                            ஐம்பெரும் விழா-

                                
              சீதா கல்யாண மண்டபம் முதன்மை அரங்கம்
                            கோபிசெட்டிபாளையம். 
                            தேதி 2015டிசம்பர் 30ந் தேதி ,
  10வது ஆண்டு துவக்கவிழா,30 வது ஆண்டு தேசிய நுகர்வோர் தினவிழா,27வது ஆண்டு சாலை பாதுகாப்பு வாரவிழா,சிறந்த சமூக சேவகர்களுக்கு பாராட்டுவிழா,மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவி வழங்கும் விழா -

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். இன்று கோபி சீதா கல்யாண மண்டபத்தில் நுகர்வோர் நலவாழ்வு மற்றும் மக்கள் பாதுகாப்பு சங்கம் சார்பாக 30வது தேசிய  நுகர்வோர் தினம் மற்றும் 27 வது சாலை பாதுகாப்புவாரவிழா பேரணி உட்பட ஐம்பெரும்விழா நடைபெற்றது.

         கோபி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு  திரு.S. முருகன்B.A., அவர்கள்,துணை காவல் கண்காணிப்பாளர் -கோபிசெட்டிபாளையம், மாலை 3.00 மணியளவில் துவக்கி வைத்த 27வது சாலை பாதுகாப்பு வாரவிழா-விழிப்புணர்வுப் பேரணி  புறப்பட்டு,வட்டாட்சியர் அலுவலகம், கச்சேரி மேடு,பெரியார் திடல்,தினசரிச்சந்தை, பேருந்து நிலையம்,புதுப்பாளையம்,அரசு போக்குவரத்துக்கழக பணிமனை வழியாக சீதா கல்யாண மண்டபம் சென்றடைந்தது. 
 27வது சாலை பாதுகாப்பு வாரவிழா பேரணியில் மோட்டார் வாகன ஆய்வாளர் திருமிகு சித்ரா அம்மையார் அவர்களும்,மோட்டார் வாகன ஆய்வாளர் திருமிகு N.தனசேகரன் அவர்கள் உள்ளிட்ட சமூக ஆர்வலர்களும்,தன்னார்வ அமைப்பினர்களும்,காவல்துறை,போக்குவரத்து துறை,வருவாய்த்துறை மற்றும் சாரதா கலை அறிவியல் கல்லூரி மாணவிகள்,பேராசியர்கள்,ஆண்டவர் பாலிடெக்னிக் மாணவ,மாணவியர் இவர்களுடன் நுகர்வோர் நலவாழ்வு மற்றும் மக்கள் பாதுகாப்பு சங்கம் தலைவர் மற்றும் பொதுசெயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகளும்,உறுப்பினர்களும்...
 நுகர்வோர் நலவாழ்வு மற்றும் மக்கள் பாதுகாப்பு சங்கம்-உறுப்பினர்கள்
  சாலை பாதுகாப்பு பேரணியில் வாகன ஒலிபெருக்கி விழிப்புணர்வு பிரச்சாரம்.திரு.C பரமேஸ்வரன் அவர்கள்.சத்தியமங்கலம்.
 கோபி வட்டாரத்திலுள்ள  கல்லூரி  மற்றும் பள்ளி மாணவ,மாணவிகள்.
          சாலை பாதுகாப்பு பேரணியில் சமூக ஆர்வலர்களின் பங்கேற்பு
  நுகர்வோர் நல வாழ்வு மற்றும் மக்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள்..

  இதன் தொடர்ச்சி அடுத்த பக்கம் பார்க்கவும்............

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முனைவர்.இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phil.,Ph.D., அவர்களது வாழ்க்கைக்குறிப்பு... (Dr.R.K.Manikkam, professor,Writer)

                                                                                                        முனைவர். இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phi...