08 டிசம்பர் 2015

நீங்களும் உதவுங்க..



சென்னை,கடலூர் மக்களுக்கு உதவ .........
         முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு உங்க ஊரிலிருந்தே  பணம் அனுப்புங்க...
           

மரியாதைக்குரியவர்களே,
           வணக்கம். சென்னைமற்றும் கடலூர்  இதுவரை சந்தித்திராத மழையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.நமது உறவுகள் உறைவிடம்,உணவு,உடை உட்பட தங்கள் உடைமைகளை இழந்து  மிகவும் கொடுமையாக பாதிக்கப்பட்டு துன்பப்பட்டு வருகிறார்கள்.

          தமிழ்நாடு அரசு மற்றும் நமது தேசத்தின் மற்ற மாநில அரசுகள்,உலக நாடுகள்,தனியார் நிறுவனங்கள்,பல்வேறு சமூக நல அமைப்புகள்,தொண்டு நிறுவனங்கள்,தன்னார்வலர்கள்,என  அனைவரும் உதவி செய்வதை  தம் கடமையாக,பொறுப்பாக,மனித நேயப்பணியாக ஏற்று  மீட்பு பணிகளிலும்,நிவாரணப்பணிகளிலும்,சுகாதாரப்பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.ஊடகங்களும் தக்க உதவிகளைச் செய்து வருகின்றன.இவ்வாறு உடனடியாக உதவி செய்து வரும் அனைவரையும் தமிழக மக்கள் சார்பாக நமது நன்றிகளைத்தெரிவித்துக்கொள்வோம்.

     அதே நேரத்தில் தம்மால் இயன்ற நிதியை எப்படி சேர்ப்பது என தெரியாமல் தவிப்பவர்கள் இதோ கீழ்கண்ட முகவரிக்கு உங்க பக்கத்து வங்கியில் சென்று பணத்தை செலுத்தி நீங்களும் நிவாரணப்பணிகளில் பங்கேற்க அன்புடன் வேண்டுகிறோம். 

     விருப்பமுள்ள தாங்கள் அவ்வாறு நிதி உதவி செய்ய  chief minister's public relief fund என்ற பெயரில் காசோலை/ வரைவோலை மூலம் நிதித்துறை இணைச் செயலாளருக்கு அனுப்பி வைக்கலாம். அல்லது நிதித் துறை இணைச் செயலாளரை நேரில் சந்தித்தும் வழங்கலாம். இந்த நிவாரண நிதிக்கு 100 விழுக்காடு வருமான வரி விலக்கு அளிக்கப்படும்.



முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு பணம் அனுப்ப வேண்டிய முகவரி:
 The Joint Secretary & Treasurer, 
Chief Minister's Public Relief Fund, 
Finance (CMPRF) Department, 
Government of Tamil Nadu. 
Secretariat, 
Chennai 600 009 
Tamil Nadu, 
INDIA. 
 மின்னஞ்சல்: 
jscmprf@tn.gov.in 
வங்கி கணக்கில் இணையம் (ECS) மூலம் பணம் செலுத்துவோர் கீழ்காணும் விவரங்களை கொண்டு பணம் அனுப்பலாம்
 Bank : Indian Overseas Bank 
Branch : Secretariat Branch, 
Chennai 600 009 
S.B. A/c No. : 11720 10000 00070 
IFS Code : IOBA0001172 
CMPRF PAN : AAAGC0038F 
         இணையம் மூலமாக நிதி செலுத்துவோர், தங்களது பெயர், பண மதிப்பு, வங்கி மற்றும் அதன் கிளை விவரம், பணம் செலுத்திய நாள், பரிவர்த்தனை எண் போன்றவற்றுடன், தங்களது தொடர்பு முகவரி, இ-மெயில் முகவரி ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். அப்போது தான் பெற்ற பணத்துக்கான ரசீது அனுப்பி வைக்க வசதியாக இருக்கும்.  வருமான வரி கணக்கின்போது அந்த ரசீதை சமர்ப்பிக்கவும் உதவியாக இருக்கும்.
          அன்புடன், C. பரமேஸ்வரன். சத்தியமங்கலம்-ஈரோடு மாவட்டம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முனைவர்.இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phil.,Ph.D., அவர்களது வாழ்க்கைக்குறிப்பு... (Dr.R.K.Manikkam, professor,Writer)

                                                                                                        முனைவர். இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phi...