அன்பு நண்பர்களே,
வணக்கம். கொங்கு தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.
பச்சைமலையில் விநாயகர் திருத்தேர் வெள்ளோட்டம்

குன்றுக் கோயிலில் மேற்கு நோக்கிய நிலையில் முருகப்பெருமான் அழகிய தோற்றத்தில் வீற்றிருந்து அருள் புரிகிறார். கோவிலின் வடகிழக்கு மூலையில் ஆறுமுகங்களுடனும், தென் கிழக்கு மூலையில் வள்ளி தெய்வானையுடனும் தனிச் சன்னதிகளில் வீற்றிருந்து அருள்புரிகிறார்.
இங்கே முருகப்பெருமானுக்கு மரத்தாலான தேரும், தங்கத் தேரும் உள்ளன. பங்குனி உத்திரப் பெருவிழா ஆண்டுதோறும் கொடியேற்றத்துடன் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. பங்குனி உத்திரத்தின்போது தேரோட்டம் நடைபெறுகிறது.
தங்கத்தேர் பக்தர்களிடம் கட்டணம் பெற்று ஓட்டப்படுகிறது. சஷ்டி, கிருத்திகை, விசாகம், பௌர்ணமி, அமாவாசை ஆகிய நாட்களில் தங்கத் தேரோட்டம் நடைபெறுகிறது. பச்சை மலையில் அமைந்துள்ள விநாயகப் பெருமானுக்குத் திருத்தேர் ஒன்று இல்லை என்ற குறை நீண்ட நாட்களாக இருந்து வந்தது. தற்போது அருளுள்ளம் கொண்ட பெருமக்களின் நன்கொடையால் அருள்மிகு விநாயகப் பெருமானுக்குத் திருத்தேர் ஒன்று புதிதாகச் செய்யப்பட்டது.

தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மாண்புமிகு கே.ஏ. செங்கோட்டையன் தலைமையில் பொதுப்பணித்துறை அமைச்சர் மாண்புமிகு கே.வி. ராமலிங்கம் அவர்கள் கோவிலில் பாதுகாப்புப் பெட்டக அறையைத் திறந்து வைத்தார்.

பரமேஸ் டிரைவர் சத்தி தாளவாடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக