06 மார்ச் 2012

பிளாஸ்டிக்’ – சில உண்மைகள்

அன்பு நண்பர்களே,

    வணக்கம்.கொங்கு தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை வணங்கி வரவேற்கிறோம்.இந்த பதிவில் பிளாஸ்டிக் பற்றி சில விவரங்களைக் காண்போம்.



                     வாகனங்கள், கம்யூட்டர்கள், செல்போன்கள் என அனைத்தும் பிளாஸ்டிக்மயமாகி விட்ட இன்றைய சூழ்நிலையில், சமீப காலமாக பிளாஸ்டிக்குக்கு எதிரான போராட்டங்கள் வலுக்கத் தொடங்கியுள்ளன. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றனர். இருந்தாலும் வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் என அனைத்து இடங்களிலும் பிளாஸ்டிக் பொருட்களை அறவே நீக்குவது சாத்தியமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிப்பதற்கு எந்தவிதமான திட்டங்களைம் தீட்டாமல், வெறும் கோஷங்கள், ஆர்பாட்டங்கள், முகாம்கள் மட்டும் நடத்துவதில் பயன் ஒன்றும் இல்லை என்றே தோன்றுகிறது.
பிளாஸ்டிக்குக்கு இணையான மாற்று பொருட்கள் தகுந்த அளவில் கண்டுபிடிக்கப்படாததால், வரும் ஆண்டுகளில் பிளாஸ்டிக்கின் பயன்பாடு பன்மடங்கு அதிகரிக்கும் என சென்னையில் நடந்த பன்னாட்டு பிளாஸ்டிக் கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது. வளர்ந்த நாடுகளில் ஒருவர் ஆண்டொன்றுக்கு சராசரியாக 25 கிலோ பிளாஸ்டிக்கை பயன்படுத்துகிறார் எனவும், அதே சமயத்தில் இந்தியாவில் உள்ள ஒருவர் சராசரியாக ஆண்டு ஒன்றுக்கு 5.2 கிலோ மட்டுமே பயன்படுத்துவதாகவும் இந்திய பிளாஸ்டிக் தொழில் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
`எளிதில் மட்காமல் பலநுறு ஆண்டுகள் நிலைத்திருக்கக் கூடியது பிளாஸ்டிக்’ என்ற தவறான எண்ணம் மக்களிடையே பரவி விட்டது. இதை நன்மையாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, தீமையாக கருதக்கூடாது. பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுபுறச் சூழ்நிலைக்கு தீங்கு செய்வதில்லை என்பதை நன்கு கூர்ந்து கவனித்தால் தெரியும். பழுதடைந்த பிளாஸ்டிக் பொருட்களை ஆங்காங்கே வீசி எறிம்போது தான் பிரச்சினைகள் தோன்றுகின்றன. கலர் கலரான பிளாஸ்டிக் பொருட்களை தவறுதலாக விலங்குகள் உட்கொள்வதாலும், கழிவுநீர்க் கால்வாய் களில் அடைப்பை ஏற்படுத்துவதாலும் பிரச்சினைகள் ஆரம்பிக்கின்றன. எனவே, உடைந்த பிளாஸ்டிக் பொருட்களை வீசி எறியாமல் , சேர்த்து வைத்து மறுசுழற்சி செய்வதன் முலம் சுற்றுச்சூழலை பாதுகாக்கலாம். சிங்கப்பூரில் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து, மறுசுழற்சி முறையில் பொருட்களை தயாரிக்கின்றனர். இவ்வாறு தயாரிக்கபட்ட பொருட்கள் மலிவான விலையில் கிடைக்கின்றன என்பதும் நிதர்சனமான உண்மை.
பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகளில் ஸ்டார்ச் மற்றும் பாலி லாக்டிக் ஆசிட் போன்ற இயற்கையான பொருட்களைக் கொண்டு பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கபட்டு பயன்படுத்தபடுகின்றன. அங்கு வரிச்சலுகைகள் கொடுத்து இதுபோன்று இயற்கையான முறையில் பிளாஸ்டிக் பொருட்களை தயாரிப்பதற்கு ஊக்கமளிக்கின்றனர். முயற்சி செய்தால் இந்தியாவிலும் இதுபோன்ற இயற்கை பிளாஸ்டிக்கைத் தயாரிக்க முடியும். அதே நேரத்தில் இது சிறிதளவே செயற்கை பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக அமையும் என்பதும் கவனிக்க வேண்டிய விஷயமாகும். எனவே, பிளாஸ்டிக்கை எதிர்த்து குரல் கொடுப்பது ஒருபுறம் இருந்தாலும், அதற்கான மாற்றுபொருட்களை கண்டுபிடிபதிலும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், அரசும் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். 
 PARAMES DRIVER -  TAMIL NADU SCIENCE FORUM - THALAVADY - ERODE DISTRICT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மரமா? மக்களவை உறுப்பினரா??

 அனைவருக்கும் வணக்கம்.      நீலகிரி த்தொகுதி 19-04-2024 வெள்ளிக்கிழமை இன்று 18வது மக்களவைத்தேர்தலில் வாக்களித்துவிட்டு மூன்றுமரக்கன்றுகளையும...