25 மார்ச் 2020

மக்களின் விபரீதமான அலட்சியப் போக்கு

                                                 கொரோனா
  மனிதகுலத்துக்கே சவாலாகத் திகழும் கொரோனாவை ஒழித்துக்கட்ட அரசாங்கத்துடன் ஒத்துழைத்து நம்மையும் நமது குடும்பத்தையும் காப்போம்....

                                  கோவிட் 19 என்னும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் புகுந்து  மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. அரசாங்கத்தின் தலைமையில் நமது மருத்துவர்களும்,செவிலியர்களும்,சுகாதாரத்துறையினரும், காவல்துறையினரும்,இரவும் பகலும் பாராமல் படாதபாடு பட்டு வருவது கண்டு மிகவும் வேதனைப்பட வைக்கிறது.


                  இருந்தாலும் கொரோனாவின் கொடூரம் புரியாமல் படித்தவர்களே அலட்சியப்படுத்தி வருவதைக் கண்டு கவலைகொள்ளச் செய்கிறது.
வைரஸ் நோய் குணமாக்க இன்னும் மருந்து கண்டுபிடிக்கமுடியாத நிலையில் வைரஸின் 14வாழ்நாட்களின் தொடர்பை துண்டிக்க  மக்களை தனித்திருக்க வேண்டி(தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொள்ளும் வகையில்  சுய ஊரடங்கு உத்தரவு)144 இட்டும் யாரும் கேட்டபாடில்லை.
 உலக நாடுகளே ஸ்தம்பித்துப்போய் கலங்கிநிற்கிறது. இந்தநேரத்தில்  கொரோனா வைரஸின்  தாக்கத்தை  படித்தவர்களே உணர்ந்தபாடில்லை!

 உதாரணமாக  சென்னையில் போக்குவரத்துக் காவல்துறை அதிகாரி ஒருவர் கைகூப்பி வணங்கி கெஞ்சிக் கோரிக்கை வைக்கிறார்! அதை துச்சமாக மதித்து போக்குவரத்து செய்யும் இளைஞர்களும்,மற்றவர்களும்? இனி  இது லாயக்கு ஆகாது!





லத்தி எடுத்து கண்மூடித்தனமாக அடித்து நொறுக்கினால்தான் அடங்குவார்கள்..

                           இந்தோனேசியாவில் கொரோனோ நோயாளிகள் பலரைக் காப்பாற்றிய மருத்துவர் Hadio Ali அவர்கள் கொரோனாவாலேயே தாக்குதலுக்கு ஆளாகி நேற்று மரணமடைந்த செய்தி அறிந்து நம்மை கதறி அழ வைக்கிறது.இவரைப் போன்ற தெய்வங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை காணிக்கையாக்குவோம்...
 கொரோனா நோயால் தான் பாதித்துவிட்டதை அறிந்த மருத்துவர் வீட்டிற்கு வந்து தூரத்திலேயே நின்று தமது குழந்தைகளுக்கும் மனைவிக்கும் நிரந்தமாக பிரியும் விடையளித்துச் சென்ற காட்சி கீழே உள்ள படம்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மரமா? மக்களவை உறுப்பினரா??

 அனைவருக்கும் வணக்கம்.      நீலகிரி த்தொகுதி 19-04-2024 வெள்ளிக்கிழமை இன்று 18வது மக்களவைத்தேர்தலில் வாக்களித்துவிட்டு மூன்றுமரக்கன்றுகளையும...