30 நவம்பர் 2019

திருக்குறட்புலம் பழைய நினைவாக உணர்கிறார்.
•••••••••••••••••••••••••நலந்தருசெந்தமிழ்••••••••25-11-2019°°
°°°°°°°°°°°குறள்வாணன் கண்ணாடிக்கலைஞர்°°°°°°°°°°°
( 29-06-2019 அன்று இட்ட பாடல்.)
வளம்நிறை மொழியெது? வளம்மிகும் தமிழறி.
வழங்கிடும் தமிழிலே வளத்துடன் இலக்கணம்.
வளத்துடன் இலக்கணம் வகுத்திடும் இலக்கியம்.
வகுத்திடு இலக்கியம் வளத்தினை உரைத்திடும்.
வளத்தினை உணர்த்திடும் வடிவுறு எழுத்துகள்.
வடிவுறு எழுத்துகள் வலுவுடன் அமைந்தவை.
வலுவுடன் அமைந்ததால் வழக்கினில் நிறைவலு.
வழக்கினில் நிறைவலு வடைமொழி தமிழ்மொழி.
அனைத்துமே சிறந்தது. அகத்தினில் நிறைவது.
அகத்தினில் நிறைந்தபின் அளவிலா மகிழ்ச்சியை
அளித்துமே நிறைப்பது உளத்தினை. நிறைத்தபின்
அளவிலா விருப்பினை அளிப்பது பயின்றிட.
பயின்றிடப் பயின்றிடப் பயன்மிக அளிப்பது.
பயன்மிக அளித்தபின் பெரும்புகழ் சேர்ப்பது.
பெரும்புகழ் சேர்த்தபின், பிறரினும் நமைநலப்
பெருக்கினால் பெருந்திறன் பெறச்செயும் தனித்தமிழ்.
தனித்தமிழ் தருவது தகையுறு தனிநிலை.
தகையுறு தனிநிலை தருவது மகிழ்ச்சியே.
தனியொரு மகிழ்வினைத் தருதலான், தமிழினைத்
தவறறப் படித்திடின் திறன்மிகத் தழைத்திடும்.
திறனது தழைத்திடின் தகவுடன் மிளிரலாம்.
தகவுடன் மிளிர்ந்திடின் திருவதும் மிகுந்திடும்.
திருவது மிகுந்திடின் திருமுகம் மலர்ந்திடும்.
திருமுகம் மலர்ந்திடின் திரண்டிடும் செழிப்பது.
தளர்விலாச் செழிப்பது தருதலோ பெரும்புகழ்.
தருநிறைப் பெரும்புகழ் திறனதைப் பெருக்கிடும்.
திறனதைப் பெருக்கிடின் தலைநிமிர் நிலையதாம்.
தலைநிமிர் நிலையது தருவது நிறைபுகழ்.
நிறைபுகழ் பெறுதலே நமக்குறு பெருங்கடன்.
பெருங்கடன் நிறைவுறின் நமக்குறும் நலநிறை.
நலநிறை பெருகிடின் நலமுறல் திகழ்தரும்.
நலமுறல் திகழ்ந்திடின் நிலைபெறல் மகிழ்ச்சியே.
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
°°°°°°°°°°°°°வெல்க தமிழ். பரவுக குறள்நெறி.°°°°°°°°°°°°°°°
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மரமா? மக்களவை உறுப்பினரா??

 அனைவருக்கும் வணக்கம்.      நீலகிரி த்தொகுதி 19-04-2024 வெள்ளிக்கிழமை இன்று 18வது மக்களவைத்தேர்தலில் வாக்களித்துவிட்டு மூன்றுமரக்கன்றுகளையும...