"செயற்கரிய செய்வார் விருது" வழங்கி பாராட்டு வழங்க அழைத்துள்ளனர்.
அனைவருக்கும் வணக்கம்.
வெள்ளக்கோவில் மகாத்மாகாந்தி நற்பணிமன்றம் அறக்கட்டளையினர்,
ஆற்றல்மிகு 6ஆம் ஆண்டு வெள்ளக்கோவில் புத்தகத்திருவிழாவினை,
வாசிப்போம்,சமூகத்தை நேசிப்போம்
என்னும் அறிவுசார்ந்த மக்கள்சிந்தனையில்,
திருப்பூர் மாவட்டம்,சீரங்கராய கவுண்டன்வலசு ரோட்டில் அமைந்துள்ள,R.P.S.மஹால் கல்யாணமண்டபத்தில்
2025 ஜூலை மாதம் 10ஆம்தேதி வியாழக்கிழமை இன்று தொடங்கி 14ஆம்தேதி திங்கட்கிழமைவரை
மக்கள்சிந்தனையுள்ள சான்றோர்களின்
அறிவுசார் சொற்பொழிவுகள், கருத்தரங்கம், குழந்தைகள் கலைநிகழ்ச்சிகள், விருது வழங்கும் விழா, நூல்வெளியீடு என ஐந்துநாட்களும் அறிவுத்திருவிழாவாக நடத்துகின்றனர். .
10-07-2025 வியாழக்கிழமை இன்று தொடங்கிய புத்தகத்திருவிழாவிற்கு வெள்ளக்கோவில் மகாத்மாகாந்தி நற்பணி மன்ற அறக்கட்டளையின் தலைவர் உயர்திரு.இரா.ராஜ்குமார் அவர்களுடைய தலைமை வகித்தார்.
வெள்ளக்கோவில் நகராட்சித்தலைவர், திருமதி.கனியரசி முத்துக்குமார் அவர்கள் முன்னிலை வகித்தனர்.,
புத்தகத்திருவிழாவினை காங்கேயம் சார்புநிலை நீதிமன்றம் நீதிபதி மாண்புமிகு S.சந்தான கிருஷ்ணசாமிB.A.B.L., அவர்கள் தொடங்கி வைத்தார்.
வெள்ளக்கோவில் நகராட்சி ஆணையாளர்.உயர்திரு.C.மனோகரன் அவர்கள் புத்தக முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தார்.
கோட்டாட்சியர்,வட்டாட்சியர், அரிமா சங்கம், மற்றும் பள்ளிகள்,கல்லூரிகளின் நிர்வாகிகளும்,ஆசிரியர்,பேராசிரியர் பெருமக்களும்,சமூக சிந்தனையாளர்களும் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் இருபால் மாணவர்கள் இருபால் பேராசிரியர்கள்,ஆசிரியர் பெருமக்கள் மற்றும் மகாத்மாகாந்தி நற்பணிமன்ற உறுப்பினர்களனைவரும் பங்கேற்கும்
' வெள்ளக்கோவில் வாசிக்கிறது'
தலைப்பில் வாசிப்பைப் பரவலாக்கும் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெறுகிறது.
தினந்தோறும் மாலை 6.30மணிக்கு நடைபெறும் அறிவுசார் நிகழ்வில்,
சிறப்பு விருந்தினர்களாக,
தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர், மாண்புமிகு மு.பெ.சாமிநாதன் அவர்கள்,
மேனாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் எழுத்தாளர்,முனைவர்.S.S.வைகைச்செல்வன் அவர்கள்,
சாகித்ய அகாடமி விருதாளர் எழுத்தாளர் மரியாதைக்குரிய தேவிபாரதி அவர்கள்,
காந்தியச்செம்மல் மரியாதைக்குரிய தமிழருவி மணியன் அவர்கள்,
புகழ்பெற்ற சொற்பொழிவாளர் திருமதி.சுமதிஸ்ரீ அவர்கள்,
தீக்கதிர் ஆசிரியர்,உயர்திரு. மதுக்கூர் ராமலிங்கம் அவர்கள்,
முதன்மைச்சேவகர்,மரியாதைக்குரிய K.அண்ணாமலை (Ex IPS) அவர்கள்,
ஜெயா தொலைக்காட்சி புகழ் பட்டிமன்றப்பேச்சாளர் முனைவர்.கோ.பா.இரவிக்குமார் அவர்கள் மற்றும் அறிவுசார் சான்றோர் மேன்மக்கள்
ஐந்துநாட்களும் கலந்துகொண்டு அறிவுத்திருவிழாவிற்கு பெருமைசேர்க்கின்றனர்.
தொடர்ந்து....
கலைமாமணி,பேராசிரியர் கு.ஞானசம்பந்தம் தலைமையிலான குழுவினர்,
'குடும்பத்தின் முன்னேற்றத்திற்குப் பெருந்துணை புரிவது கணவனின் வருமானமா? மனைவியின் நிர்வாகமா?'
என்னும் தலைப்பில்,சிந்தனையைத்தூண்டும் மாபெரும் சிரிப்புப் பட்டிமன்றம் நடத்துகின்றனர்.வெள்ளக்கோவில் புத்தகத்திருவிழாவில்
சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியவர்களுக்கான விருதுகள் கீழ்க்குறிப்பிட்டவாறு வழங்கி பாராட்டுகின்றனர்.
ஆன்மீகச்செம்மல் விருது,
சிறந்த இயற்கைஆர்வலர் விருது,
பாரம்பரியக்காப்பாளர் விருது,
மண்ணின் மைந்தர்கள் விருது,
சிறந்த பள்ளிகள் விருது,
செயற்கரிய செய்பவர் விருதுஎன வழங்குகின்றனர்.
செயற்கரிய செய்பவர்கள் விருது சாகித்ய அகாடமி விருதாளர் எழுத்தாளர்,உயர்திரு.தேவிபாரதி அவர்களுக்கும்,
உயர்திரு.செ.பரமேஸ்வரன், (அரசுப்பேருந்து ஓட்டுநர்-Rtd) சமூக ஆர்வலர்,இலக்கிய ஆர்வலர்,
சத்தியமங்கலம்,விதைகள் வாசகர் வட்டம்,செயலாளர்,
சத்தியமங்கலம்முத்தமிழ்ச்சங்கம்செயலாளர்,
அரியப்பம்பேரூராட்சி தமிழியக்கம் செயலாளர்,
ஆகிய அடியேனுக்கும் வழங்கப்படுகிறது.
கடந்த 2 010ஆம் ஆண்டு 'கற்கும் பாரதம்'எழுத்தறிவு கலைப்பணி இயக்கத்தில் தொடங்கி,இன்றுவரை 15 ஆண்டுகால சமூகசேவை களை பட்டியலிட்டு கணக்கிட இயலாது.
காரணம்,
பணியிலிருக்கும்வரை தாளவாடி சென்று வாழ்வாதாரப்பணியான ஓட்டுநர்பணியை முடித்துக்கொண்டு ஓய்வெடுக்கவேண்டிய நேரத்தில் தாளவாடி வட்டாரத்திலுள்ள பள்ளிகளுக்குச் சென்று போதை தவிர்ப்பது, சாலைப்பாதுகாப்பு, நுகர்வோர் பாதுகாப்பு, இயற்கையைக்காப்பது பற்றிய விழிப்புணர்வு, கண்தானவிழிப்புணர்வுதருதல், இலவச கண்சிகிச்சைமுகாம் நடத்துதல், பொது மருத்துவமுகாம் நடத்துதல், தாளவாடி வனத்துறையில் இலவசமாக மரக்கன்றுகளை வாங்கி பொதுஇடங்களில் மரங்களை நடுதல், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் இணைத்துக்கொண்டு அறிவயல்சார்ந்த விழிப்புரைகளைத்தருதல்,இலவசமாக சதுரங்கப்பயிற்சியளித்தல்,வானொலி வாயிலாகவும்,தொலைக்காட்சி வாயிலாகவும் சமூக விழிப்புணர்வு வழங்குதல்,
நடமாடும் மாணவர் நூலகம் தொடங்கி மாணவர்களுக்கு சுழற்சிமுறையில் பொதுஅறிவுப்புத்தகங்களை வாசிக்கத்தூண்டுதல், புத்தகத்திருவிழாக்களை நடத்துதல், தமிழ்இலக்கியம் சார்ந்த பணிகளைச்செய்தல்,என பல்வேறு சூழல்களிலும்
எனக்கு ஆதரவாக களமிறங்கி சமூகப்பணியாற்றியவர்களான (1) தற்போது CPM (I)ஈரோடு மாவட்டக்குழு உறுப்பினராக இருந்துகொண்டு பவானிசாகர் மற்றும் புஞ்சைப்புளியம்பட்டி வட்டாரக்கமிட்டி &,தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தில் மாவட்டக்குழுவிலும் செயலாற்றிவருகின்ற சமூக ஆர்வலர் திரு.A.P..ராஜூ அவர்கள்,
(2)பாரதிபுத்தகாலயம்,ஈரோடுகிளைப்பொறுப்பாளர்
திரு.இளங்கோஅவர்கள்,
(3) சேலம் தோழா FM90.0 MHz இயக்குநர் திரு. R.V. முத்துசாமி அவர்கள்,
(4) பண்ணாரி அம்மன் சமுதாய வானொலிநிலைய மேலாளர்.திரு.சங்கர் அவர்கள்,
(5)தாளவாடி தாலுக்கா சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு,
(6)கொளப்பலூர் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு,
(7)சத்தியமங்கலம் அரிமா K லோகநாதன் Logu Driving School, விதைகள் வாசகர் வட்டத்தின் தலைவர்எழுத்தாளர்.யாழினி ஆறுமுகம் மற்றும் அனைத்து உறுப்பினர்கள்,
(8)கல்வி உரிமைகளுக்கான மேம்பாட்டுமையத்தின் இயக்குநர் திரு. R.கருப்புசாமி(READ) அவர்கள்,
(9) வேலூர் பல்கலைக்கழக வேந்தர் மதிப்பிற்குரிய கோ.விஸ்வநாதன் VITஅவர்கள் தலைமையிலான பன்னாட்டுத்தமிழியக்கத்தின் கிளையான அரியப்பம்பாளையம் பேரூராட்சி தமிழியக்கப்பொறுப்பாளர்கள் ,
(10) Rtnஆனைக்கொம்பு கல்யாண மண்டப உரிமையாளர் Rtnஆனைக்கொம்புஸ்ரீராம் அவர்கள் தலைமையிலான சத்தியமங்கலம் முத்தமிழ்ச்சங்கப் பொறுப்பாளர்கள் ,
(11)கரட்டூர் இளந்தளிர்நண்பர்கள் குழுவினர் உள்ளிட்ட பல தன்னார்வலர்களின் கூட்டுப்பணிக்கு வழங்கப்பட்ட விருது இன்று வெள்ளக்கோவில் புத்தகத்திருவிழாவில் எனக்கு வழங்கவுள்ள விருது,
"சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியவர்களுக்கான விருதாக" அறிவிக்கப்பட்ட ,
"செயற்கரிய செய்பவர் விருது"
செ. பரமேஸ்வரன் (C.Parameswaran) ஆகிய அடியேனின் சமூகப்பணிகளில் சில...
2010ஆம் ஆண்டு...
13-08-2010 தாளவாடி ஊ.ஒ.ந.நி,பள்ளியில்தொடங்கி21-08-2010வரை
, கற்கும்பாரதம்,எழுத்தறிவு இயக்கம் ஒருங்கிணைத்து நடத்துதல்.
இன்னும்,இன்னும் நிறைய சான்றுகள் இனி தொடராகப்பதிவிடப்படும் ....

































கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக