09 ஜூலை 2025

6வது வெள்ளக்கோவில் புத்தகத்திருவிழா-2025 \ VELLAKOVIL BOOK FAIR-2010 TIRUPPUR Dt.

 அனைவருக்கும் வணக்கம். 

                வெள்ளக்கோவில் மகாத்மாகாந்தி நற்பணிமன்றம் அறக்கட்டளையினர், 

ஆற்றல்மிகு 6ஆம் ஆண்டு வெள்ளக்கோவில் புத்தகத்திருவிழாவினை, 

வாசிப்போம்,சமூகத்தை நேசிப்போம்

                          என்னும் அறிவுசார்ந்த மக்கள்சிந்தனையில், 

                  திருப்பூர் மாவட்டம்,சீரங்கராய கவுண்டன்வலசு ரோட்டில் அமைந்துள்ள,R.P.S.மஹால் கல்யாணமண்டபத்தில் 

          2025 ஜூலை மாதம் 10ஆம்தேதி வியாழக்கிழமை இன்று தொடங்கி 14ஆம்தேதி திங்கட்கிழமைவரை

       மக்கள்சிந்தனையுள்ள சான்றோர்களின் 

               அறிவுசார் சொற்பொழிவுகள், கருத்தரங்கம், குழந்தைகள் கலைநிகழ்ச்சிகள், விருது வழங்கும் விழா, நூல்வெளியீடு என  ஐந்துநாட்களும் அறிவுத்திருவிழாவாக நடத்துகின்றனர். .

            வெள்ளக்கோவில் மகாத்மாகாந்தி நற்பணி மன்ற அறக்கட்டளையின் தலைவர் உயர்திரு.இரா.ராஜ்குமார் அவர்களுடைய தலைமை மற்றும்,

             வெள்ளக்கோவில் நகராட்சித்தலைவர், திருமதி.கனியரசி முத்துக்குமார் அவர்கள் முன்னிலைமுன்னிலையில்,

             திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.நாரணவரே மனிஷ் ஷங்கர் ராவ் IAS அவர்கள் தொடங்கி வைக்கிறார்.

          புத்தக முதல் விற்பனையை காங்கேயம் சார்புநிலை நீதிமன்றம் நீதிபதி மாண்புமிகு நீதிபதி S.சந்தான கிருஷ்ணசாமிB.A.B.L., அவர்கள் தொடங்கி வைக்கிறார். 

       கோட்டாட்சியர்,வட்டாட்சியர்,ஆணையாளர், அரிமா சங்கம், மற்றும் பள்ளிகள்,கல்லூரிகளின் நிர்வாகிகளும்,ஆசிரியர்,பேராசிரியர் பெருமக்களும்,சமூக சிந்தனையாளர்களும் வாழ்த்துரை வழங்குகின்றனர்.

 பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் இருபால் மாணவர்கள் இருபால் பேராசிரியர்கள்,ஆசிரியர் பெருமக்கள் மற்றும் மகாத்மாகாந்தி நற்பணிமன்ற உறுப்பினர்களனைவரும் பங்கேற்கும்

 ' வெள்ளக்கோவில் வாசிக்கிறது' 

தலைப்பில் வாசிப்பைப் பரவலாக்கும் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெறுகிறது.

தினந்தோறும் மாலை 6.30மணிக்கு நடைபெறும் அறிவுசார் நிகழ்வில்,

      சிறப்பு விருந்தினர்களாக,தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர்,  மாண்புமிகு மு.பெ.சாமிநாதன் அவர்கள், 

மேனாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு.எழுத்தாளர்,முனைவர்.S.S.வைகைச்செல்வன் அவர்கள்,

சாகித்ய அகாடமி விருதாளர் எழுத்தாளர் மரியாதைக்குரிய தேவிபாரதி அவர்கள், 

காந்தியச்செம்மல் மரியாதைக்குரிய தமிழருவி மணியன் அவர்கள்,

புகழ்பெற்ற சொற்பொழிவாளர் திருமதி.சுமதிஸ்ரீ அவர்கள், 

தீக்கதிர் ஆசிரியர்,உயர்திரு. மதுக்கூர் ராமலிங்கம் அவர்கள், 

முதன்மைச்சேவகர்,மரியாதைக்குரிய K.அண்ணாமலை (Ex IPS) அவர்கள்,

ஜெயா தொலைக்காட்சி புகழ் பட்டிமன்றப்பேச்சாளர் முனைவர்.கோ.பா.இரவிக்குமார்  அவர்கள் 

 ஐந்துநாட்களும்  கலந்துகொண்டு அறிவுத்திருவிழாவிற்கு பெருமைசேர்க்கின்றனர்.

தொடர்ந்து....

           கலைமாமணி,பேராசிரியர் கு.ஞானசம்பந்தம் தலைமையிலான குழுவினர்,

 'குடும்பத்தின் முன்னேற்றத்திற்குப் பெருந்துணை புரிவது கணவனின் வருமானமா? மனைவியின் நிர்வாகமா?' 

                என்னும் தலைப்பில்,சிந்தனையைத்தூண்டும் மாபெரும் சிரிப்புப் பட்டிமன்றம்  நடத்துகின்றனர்.

சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியவர்களுக்கான விருதுகள்,

ஆன்மீகச்செம்மல் விருது,சிறந்த இயற்கைஆர்வலர் விருது,  பாரம்பரியக்காப்பாளர் விருது,மண்ணின் மைந்தர்கள் விருது, சிறந்த பள்ளிகள் விருது,செயற்கரிய செய்பவர் விருதும் வழங்குகின்றனர்.

       செயற்கரிய செய்பவர்கள் விருது சாகித்ய அகாடமி விருதாளர் எழுத்தாளர்,உயர்திரு.தேவிபாரதி அவர்களுக்கும்,

   2 010ஆம் ஆண்டு கற்கும் பாரதம்எழுத்தறிவு இயக்கத்தில் தொடங்கி,கடந்த 15 ஆண்டுகால சமூகசேவையினைப்பாராட்டி, 

உயர்திரு.செ.பரமேஸ்வரன்,

 (அரசுப்பேருந்து ஓட்டுநர்-Rtd) சமூக ஆர்வலர்,இலக்கிய ஆர்வலர்,ஈரோடுமாவட்டம், சத்தியமங்கலம்,விதைகள் வாசகர் வட்டம்,செயலாளர்,சத்தியமங்கலம் தமிழியக்கம் செயலாளர்,அரியப்பம்பேரூராட்சி தமிழியக்கம் செயலாளர்,இலவச சதுரங்கப்பயிற்சியாளர், அவர்களுக்கும் வழங்கப்படுகிறது.

 

 

 



  

    





 

 

செ. பரமேஸ்வரன் (C.Parameswaran) ஆகிய அடியேனின் சமூகப்பணிகளில் சில...

2010ஆம் ஆண்டு...


 

 

ஆசனூர்,அரேபாளையம் ஊ.ஒ.ந,நி,பள்ளியில் அரிமா சங்கம் பாராட்டு 
12-0802010 
 
 

13-08-2010 தாளவாடி ஊ.ஒ.ந.நி,பள்ளியில்தொடங்கி21-08-2010வரை

, கற்கும்பாரதம்,எழுத்தறிவு இயக்கம் ஒருங்கிணைத்து நடத்துதல். 




































தொடரும்.....



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

6வது வெள்ளக்கோவில் புத்தகத்திருவிழா-2025 \ VELLAKOVIL BOOK FAIR-2010 TIRUPPUR Dt.

  அனைவருக்கும் வணக்கம்.                  வெள்ளக்கோவில் மகாத்மாகாந்தி நற்பணிமன்றம் அறக்கட்டளையினர்,  ஆற்றல்மிகு 6ஆம் ஆண்டு வெள்ளக்கோவில் புத்...