22 செப்டம்பர் 2014

கணவனுக்கு மனைவி தரும் பரிசு!

மரியாதைக்குரியவர்களே,
                   வணக்கம். இதோ ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் அலுவலர் ஒருவருக்கு  நோய்வாய்ப்பட்டமைக்காக அவரது மனைவி தரும் மருத்துவ ஆலோசனை? இல்லைங்க அது ஒரு  அன்பு பரிசு!!!!!!!!!!
 
           ஒரு பெரிய நிர்வாகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் நோய்வாய்ப்பட்டார்.
பெரிய பெரிய மருத்துவர்களிடம் காண்பித்தும் பயனில்லை.
குணமாகவில்லை. என்னசெய்வது? என்று யோசித்துக் கொண்டிருந்தவரிடம் அவர் மனைவி, "நீங்கள் ஏன் ஒரு வெட்னரி டாக்டரிடம் அதாவது கால்நடை மருத்துவரிடம் போகக் கூடாது?" என்றார்.
அதிர்ச்சி அடைந்த கணவன், "உனக்கு என்ன மூளை கெட்டுப் போச்சா?" என்றார்.
மனைவி சொன்னாள்:
எனக்கொன்றும் கெடவில்லை. உங்களுக்குத் தான் எல்லாம் கெட்டுப்போச்சு!!!.
காலங்காத்தால கோழி மாதிரி எந்திரிச்சு, அப்புறம் காக்கா மாதிரி குளிச்சிட்டு, குரங்கு மாதிரி லபக் லபக்னு தின்னுட்டு, பந்தயக் குதிரை மாதிரி வேக வேகமாக ஆபிசுக்கு ஓடி, அங்க மாடு மாதிரி உழைக்கிறீங்க.
அப்புறம் உங்களுக்குக் கீழே உள்ளவங்க கிட்ட கரடி மாதிரி கத்துறீங்க. சாயந்திரம் வீட்டுக்கு வந்ததும் எங்கிட்ட நாய் மாதிரி  குறைக்கிறீங்க.
அப்புறம் முதலை மாதிரி ராத்திரி சாப்பாட்டை சரக் சரக்னு முழுங்கிட்டு, எருமை மாடு மாதிரி தூங்கறீங்க.
அதனால தான் சொல்றேன், இப்படி இருக்கிற உங்களை கால்நடை டாக்டர் தான் குணப்படுத்த முடியும்."
என்ன சொல்வதென்று கணவன் முழிக்க, "என்ன கோட்டான் மாதிரி முழிக்கிறீங்க?" என்று முத்தாய்ப்புடன் முடித்தாள் மனைவி.
(படித்ததில் ரசித்தது)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முனைவர்.இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phil.,Ph.D., அவர்களது வாழ்க்கைக்குறிப்பு... (Dr.R.K.Manikkam, professor,Writer)

                                                                                                        முனைவர். இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phi...