20 நவம்பர் 2019

திருக்குறள்

                          திருக்குறள் மன்றம்-சத்தியமங்கலம்,ஈரோடு மாவட்டம்.

திருக்குறளின் பெருமையை இன்று முழுக்க கூறினாலும் போதாது, இருப்பினும் அதன் சிறப்பின் சிறிய பாகம் இதோ உங்கள் பார்வைக்கு.
தமிழின் தலையார்ந்த நூல் திருக்குறள் அதை உலகப் பொதுமறை என்று அழைப்பதில் நாம் உவகை கொள்கிறோம். குறள் காலத்தால் அழியாதது என்றும் வியந்து பாராட்டுகிறோம். அதை வாழ்க்கை நெறி என்றும் கூறி மகிழ்கின்றோம்.
தமிழினத்தின் பழம்பெரும் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் பற்றி உலகம் வியக்கிறது என்றால் அதற்கு தமிழிலக்கியம் முக்கிய காரணங்களில் ஒன்றாகும் தமிழகத்தின் மைலாப்பூர் வாழ் நெசவாளர் குலத்தோன்றலான திருவள்ளுவர் மானுடத்தின் தலைசிறந்த புலமைப் பெரியோர்களில் ஒருவராகக் கணிப்பிடப'படுகிறார். ஒட்டுமொத்த மனிதச் சிந்தனையின் சிறந்த பிழிவு என்று திருக்குறள் போற்றப்படுகிறது இருப்பினும் திருக்குறளின் அழியாப்புகழ் தமிழினத்திற்கும் தமிழ்மொழிக்கும் மாத்திரம் சொந்தம் என்றால் மிகையல்ல.
இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பாக ஆக்கம் பெற்ற திருக்குறள் தமிழினம் அப்போது அடைந்திருந்த அதிஉச்ச நாகரீக வளர்ச்சிக்கு உதாரணமாகத் திகழ்கிறது அப்படியானதொரு சமுதாயத்தில் வாழ்ந்த ஒருவரால்தான் திருக்குறள் போன்ற இலக்கியத்தை படைக்க முடியும். பொது மானுடத்திற்கும்பொருத்தமான முறையில் தமிழர் வாழ்வின் அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய விதத்தில் குறட் பாக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
தனது காலத்திற்குரிய இலக்கிய மரபுகளை திருவள்ளுவர் மீறியுள்ளதை எம்மால் வியப்புடன் பார்க்க முடிகிறது எந்தவொரு இடத்திலாவது ஒரு இனத்தையோ சாதியையோ, மதத்தையோ மதப்பிரிவையோ, அரசையோ, ஆளும் வர்க்கத்தையோ அவர் குறிப்பிடாமல் அல்லது உயர்த்தியோ, தாழ்த்தியோ பேசாமல் விட்டுள்ளதை குறளின் மிகப்பெரிய சிறப்பம்சமாக கருதமுடியும். தமிழ் என்ற சொல்லைக்கூட குறள் நூலில் எங்காயினும் காணமுடியவில்லை. தலைமகன் இல்லாத நீதி நூல் என்றும் குறளை வகைப்படுத்தமுடியும்.
தமிழ்ப் பாரம்பரியத்தின்படி இலக்கியம் அதாவது ஒரு வாழ்க்கைத் தத்துவ நூல். அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்ற நான்கு பிரிவுகளை உள்ளடக்கி இருத்தல் வேண்டும். வள்ளுவர் வீடு பற்றிக்கூறாமல் விடுத்துள்ளார். அறம், பொருள், இன்பம் என்பன பற்றி கூறியவர், இந்த மூன்று கட்டங்களையும் தாண்டிச் செல்பவன் தானாகவே வீடு பேறு அடைவான்! என்று அவர் கூறாமல் விளங்கவைத்துள்ளார்.
தர்மத்தின் படி இல்லறம் நடத்தி, நீதி தவறாமல் பொருள் திரட்டி ,மனையாளோடு இன்பம் கண்டவன் முக்தி அடைவான் என்ற அர்த்தம் திருக்குறளில் தொக்கி நிற்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. திருக்குறளைத் துருவி ஆராயும் போது அதன் ஆசிரியர் மறுபிறப்பில் நம்பிக்கையுள்ளவர் என்ற உண்மை புலப்படும். மனித வாழ்வின் நான்கு படிநிலைகளான திருமணமாகாத காளைப்பருவம் இல்வாழ்வு ஒடுப்பம் துறவறம் என்பனவற்றில் திருவள்ளுவருக்கு ஏற்புடமை உண்டு என்பதை 41வது குறளில் இருந்து அறியலாம் கீதையின் அடிப்படைத்தத்துவமான கர்மயோகத்திற்கு நிகரான கருத்தை 371ஆம் குறளில் காணலாம்.
வெற்றி தோல்வி பாராமல் எடுத்த கருமத்தில் முழு ஈடுபாடும் முயற்சியும்காட்டும் பணிச் சிறப்பை இந்தக் குறள் வலியுறுத்துகிறது. 618ஆம் இலக்கக் குறளிலும் இதே கருத்து வலியுறுத்தப்படுகிறது. இல்லறம் நடத்துபவன் உலக விவகாரங்களில் முழுஈடுபாடு காட்ட வேண்டும் ஒதுக்கக் கூடாது என்று வள்ளுவர் கூறுகிறார்.
அதே சமயத்தில் ஒரு இல்லறத்தான் வீண் விரயம் செய்யாமல் ஆடம்பரமற்று வாழ வேண்டும் என்றும் அவர் எடுத்துரைக்கிறார். இல்வாழ்வு நல்லறமாக அமைய வேண்டும் என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார். இந்தக் கருத்துக்களை 48, 225ஆம் குறள்களில் காணலாம். பொருள் மனிதனுக்கு அடிமையாவதில்லை. மனிதன்தான் பொருளுக்கு அடிமையாகிறான் என்ற கருத்தையும் திருக்குறளில் இருந்து திரட்டிக்கொள்ளலாம்.
ஓவ்வொரு அத்தியாயத்திலும் பத்துக்குறள் பாக்களைக் கொண்ட 133 அத்தியாயங்கள் குறள் நூலில் காணப்படுகின்றன மொத்தம் 2,660 வரிகளைக் கொண்ட 1330குறள் பாக்கள் இருப்பது கண்கூடு. பெரும்பாலான குறள் பாக்களின் முதல் வரிகளில் ஏழு சொற்கள் இருப்பதால் அணுவைத் துளைத்து ஏழு கடலைப் புகுத்திய குறள் என்று அவ்வையார் அதைப் புகழ்ந்துள்ளார்.
திருக்குறளின் முதலாம் பாகம் இல்லறம் தொட்டு துறவறம் பற்றிய சிறப்பைக் கூறுகிறது. முதலாம் பாகத்தில் 38 அத்தியாயங்கள் இருக்கின்றன. அரச நெறி இராசதந்திரம் போர்த்தந்திரம் உள்ளடங்கலான உலக விவகாரங்கள் பற்றிக் குறளின் இரண்டாம் பாகம் கூறுகிறது. இதில் 70 அத்தியாயங்கள் உள்ளன குறளின் மூன்றாம் பாகத்தில் ஆண் பெண் இல்லற உறவுகள் பற்றிக் கூறும் 25 அத்தியாயங்கள் காணப்படுகின்றன. மேற்கூறிய இரண்டாம் பாகக் குறள் பாக்கள் அரசர்களுக்கும் படைத்துறையினருக்கும் மாத்திரம் உரியதன்று. உலகியல் வாழ்வில் ஈடுபடும் பொதுமக்கள் உள்ளடங்கலான அனைவருக்கும் பொருத்தமான கருத்துக்கள் அவற்றில் செறிந்துள்ளன ஆட்சி பீடத்தில் அமர்ந்திருப்போரும் வரலாற்று ஆசிரியர்களும் இரண்டாம் பாகக் குறட்பாக்களை இன்றும் துருவி ஆராய்ந்து வருகின்றனர்.
இத்தனை சிறப்புக்கள் வாய்ந்த குறள் நூலின் உண்மையான பெயரும் அதன் ஆசிரியர் திருவள்ளுவரின் உண்மையான பெயரும் இன்று வரை தெரியவரவில்லை. குறள் என்பது காரணப்பெயர் சிறியது, சுருக்கமானது, குறுகலானது என்பது குறள் என்ற சொல்லின் பொருள் .அதேபோல் வள்ளுவர் என்பதும் குலப்பெயர் என்று ஆய்வாளர்கள் கூறுவர். வள்ளுவரின் இயற்பெயர் என்னவென்பது அறியப்படாததாக இருக்கிறது குறளைவிட வேறு நூல் அல்லது நூல்களை வள்ளுவர் படைக்கவில்லை என்பது ஆய்வாளர் முடிவு.
தமிழிலக்கியப் பரப்பில் மிகக் கூடுதலான பிறமொழிகளுக்கு மொழி மாற்றம் செய்யப்பட்ட ஒரே ஒரு நூல் என்ற சிறப்பு திருக்குறளுக்கு உண்டு. அதை ஆங்கில மொழிக்கு மாற்றிய ஜீ யூ போப் என்ற தமிழில் பாண்டித்தியம் பெற்ற ஆங்கிலேயர் தனது குறள் மொழிபெயர்ப்பு நூலுக்குச் செய்த முகவுரையில் பின்வருமாறு கூறுகிறார். குறள் ஒரு தனித்துவமான நூல் அதை வடமொழியில் இருந்து தமிழுக்கு மாற்றப்பட்ட நூல் என்று கூறுவது மிகப் பெருந்தவறு குறள் தூயதமிழில் ஆக்கப்பட்டுள்ளது. அதில் வடமொழிக் கலப்பு சிறிதளவும் இல்லை தமிழறிஞர் போய் தனது மொழிப் பெயர்ப்பை ஆங்கில கவிதை நடையில் பாய்த்துள்ளார் பின்பு வந்த பல அறிஞர்கள் ஆங்கில மொழிக்குத் திருக்குறளை மாற்றியுள்ளனர்.
எமது காலத்தில் வாழும் கஸ்தூரி ஶ்ரீனிவாசன் தவிர்த்த பிறிதொருவராவது குறளை ஆங்கில கவிதை நடையில் மொழியாக்கம் செய்யவில்லை ஜீ.யூ.போப் அவர்கள் திருக்குறளின் மூன்றாம் பாகமான காமத்துப்பாலை மொழியாக்கம் செய்யாமல் விடுத்துள்ளார் கஸ்தூரி ஶ்ரீனிவாசன் மூன்று பாகங்களையும் மொழிபெயர்ப்புச் செய்துள்ளார். ராஜாஜி என்றழைக்கப்படும் ராஜகோபாலச்சாரியார் குறளின் முதலாம் இரண்டாம் பாகங்களில் இருந்து தெரிந்தெடுக்கப்பட்ட பல குறட்பாக்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து நூலாக்கியுள்ளார். இந்த ஆக்கம் வித்தியாசமானது தத்துவ விளக்கங்கள் பிற இலக்கிய ஒப்பீடுகள் போன்றவற்றையும் குறள் ஒவ்வொன்றின் மொழிப் பெயர்ப்போடு ராஜாஜி இணைத்துள்ளார்.
மிக நீளமானதொரு முகவரையைப் போப் ஜயர் என்று மரியாதைகாரணமாக அழைக்கப்படும் ஜீ. யூ. போப் தனது குறள் மொழிபெயர்ப்புக்கு எழுதியுள்ளார் தமிழை வளப்படுத்திய பிற நாட்டு அறிஞர்களுள் வீரமா முனிவர் என்று தமிழிலும் தைரியநாத சுவாமி என்று வடமொழியிலும் இஸ்மதிசந்யாசி என்று உருதுவிலும் அழைக்கப்படும் கிறிஸ்தவ அருட்தந்தை கான்ஸ்ட்ரன்டைன் ஜோசப் பெஸ்சி என்பார்தான் முதன்மையானவர் என்று போப் குறிப்பிட்டுள்ளார். பெஸ்சி அவர்கள் தமிழ் இலக்கண இலக்கிய நூல்களையும் தமிழ் அகராதிகளையும் எழுதியதோடு தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தையும் மேற்கொண்டார். திருக்குறளை இலத்தீன் மொழிக்கு மாற்றிய சிறப்பு பெஸ்கிக்கு உண்டு.
இத்தனை நூற்றாண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்டாலும் அதில் மாற்றங்களோ இடைச்செருகல்களோ அகற்றுதல்களோ செய்யப்படாமல் அன்று போல் இன்றும் இருக்கும் சிறப்புக் குறளுடையதாகும். திருக்குறளுக்குப் பரிலேழகர் செய்த உரைநூலில் குறளில் வரும் அச்சம் என்ற சொல்லிற்கு மக்கள் என்று பொருள் கூறியுள்ளார். தமிழ் ஆர்வலரான எலிஸ் என்ற ஆங்கிலேயர் அச்சம் என்ற சொல்லை அகற்றிவிட்டுக் குறளில் மக்கள் என்று திருத்தம் செய்யலாமே என்று கூறியதோடு அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டார். மூல நூல்களில் திருத்தம் செய்யக்கூடாது என்ற அடிப்படையில் எலிஸ் அவர்களின் முயற்சிக்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியதால் அவர் அதைக் கைவிட நேர்ந்தது.
தமிழ் எழுத்துக்கள் தொடர்பான ஆய்வாளர்கள் திருக்குறளில் இன்று உயிர் எழுத்தாக கருதப்படும் (ஒள) இல்லையென்பதையும் குறளாசிரியர் (அவ்) என்ற உயிர்மெய் எழுத்துக்களைப் பயன்படுத்தியுள்ளார் என்பதையும் குறிப்பிட்டுள்ளார். தமிழ் அரிச்சுவடியில் (ஒய) (ஐ) என்பன திருவள்ளுவருக்குப் பிந்திய காலத்தில் உயிர் எழுத்துக்களாக இணைக்கப்பட்டுள்ளன இரண்டையும் அகற்றவேண்டும் என்ற இயக்கம் வலுப்பெற்று வரும் நிலையில் திருக்குறளில் உள்ள ஆதாரம் அதற்கு உரமூட்டுவதாக அமைகிறது.
திருக்குறள் மொழிபெயர்ப்பை விட நாலடியார் 51 மாணிக்கவாசகரின் திருவாசகப் பாடல்களையும் ஜி. யூ. போப் ஆங்கிலத்திற்குக் கொண்டு சென்றுள்ளார். நாலடியார் நூல் நாலடி நானூறு என்றும் அழைக்கப்படுவதுண்டு. நாலடி வெண்பாக்கள் நானூறைக் கொண்ட நூல் என்பது பொருள். தமிழ் நீதி நூல்களைப் பொறுத்தளவில் குறளுக்கு அடுத்த இடத்தில் நாலடியார் இருக்கிறது.
இனிமையும் கருத்தாழமும் இருந்தாலும் குறளின் சொற்களால் சுரங்கக்கூறி நயமாய் உரைக்கும் சிறப்பை நாலடியாரில் காணமுடியவில்லை. குறளின் தனித்துவம் சொற் சிக்கனம் ஒவ்வொரு குறளிலும் வேறுபட்ட கருத்துக்களைத் தூயதமிழில் கூறும் திறமை என்பன வற்றில் பெருமளவில் தங்கியுள்ளது. திருக்குறளைத் தன்னகத்தே மொழியாக்க வடிவில் கொண்டிராத உலக மொழியொன்றும் இல்லை என்று துணிந்து கூறலாம்.மிகக் கூடுதலான மொழிபெயர்ப்புக்கள் ஆங்கில மொழியில் காணப்படுகின்றன தமிழர்களில் மிகச் சிறந்ததொரு ஆங்கில மொழி பெயர்ப்பைச் செய்த புகழ் வ.வே. சு ஜயர் எனப்படும்வரகனேரி வேங்கட சுப்பிரமணியம் என்பாருக்கு உண்டு தமிழ் சிறுகதை முன்னோடிகளில் ஒருவர் என்று வ.சு.வே ஐயர் சிறப்பிக்கப்படுகிறார்கள்.
தமிழ் மொழி ஆராய்ச்சி படைப்பிலக்கியம் கம்பராமாயண ஆய்வு மொழி பெயர்ப்புத்துறை பத்திரிக்கை துறை என்ற பல திசைகளில் அவர் ஆர்வம் காட்டினார் சங்க இலக்கியப் புலமையுடன் திருக்குறள் ஆராய்ச்சியிலும் சிறந்து விளங்கினார். தனது கட்டுரைகள் பலவற்றில் திருக்குறள் பாக்களை மேற்கோள்காட்டியும் விரிவாக விளக்கியும் உள்ளார்.
ஆங்கிலம் பிரெஞ்சு ஜேர்மன் இலத்தீன் தமிழ் மொழிகளில் 1820-1886காலப்பகுதிகளில் வெளிவந்த மொழிபெயர்ப்புக்களை ஆய்வு செய்த பின் தனது திருக்கறள் ஆங்கில மொழி பெயர்ப்பை 1914இல் வெளியிட்டார்.
இந்த நூலுக்கு மிக நீண்ட அரிய ஆய்வுரையை அவர் எழுதினார் திருக்குறள் ஆராய்ச்சிக்கு இந்த ஆய்வுரை அடித்தளமாக அமைகிறது. தமிழனத்தின் நாகரீக வளர்ச்சியின் உயர்வை கூறுவதோடு தமிழ் மொழியின் அன்றைய உன்னத நிலையையும் திருக்குறள் கூறி நிற்கிறது. வட மொழியின் தாக்கத்தால் உயர்ந்த தமிழ் மொழி என்ற பொய்யுரையை மறுக்கும் சான்றாதாரமாகத் திருக்குறள் விளங்குகிறது. சொல் வளமிக்க தனித்தியங்கும் திறன்மிக்க திராவிட மொழிக் குடும்பத்தின் தாயகத் தமிழ் விளங்குகிறது.
தமிழ் எல்லாவகையிலும் வட மொழிக்கு நிகரானது அல்லது உயர்வானது என்று போப் ஐயர் கூறியதை ஒவ்வொரு தமிழனும் தனது சிந்தையில் பதிவு செய்து வைத்திருக்கவேண்டும் இதற்குத் திருக்குறள் துணைநிற்கும்.
நன்றி - ஆய்வாளர் க. வீமன்

நூலக வாரவிழா-2019









சத்தியமங்கலம் கிளை நூலகத்தில் 52வது தேசிய நூலக வாரவிழா நடைபெற்றது.
தலைமை
திரு.யுவராஜ் அவர்கள்,முதல்நிலை நூலகர் கோபி 1நூலகம்.
வரவேற்புரை;
திருமதி.ஆ.சாந்தி அவர்கள்,நூலகர்,சத்தியமங்கலம் கிளை நூலகம்.
முன்னிலை;
திரு.வீ. சுந்தரராசு அவர்கள்,தமிழர் பண்பாட்டுக் கழகம்
 திரு.ந.யாழினி ஆறுமுகம் அவர்கள்,விதைகள் வாசகர் வட்டம்,
திரு.அரிமா.கு.லோகநாதன் அவர்கள்,
பெற்றோர் ஆசிரியர் சங்கம்,
  திரு.ரீடு கருப்புசாமி அவர்கள்,
கல்வி உரிமைக்கான மேம்பாட்டு மையம்.
திரு.சுடர் நடராஜன் அவர்கள்,
சுடர் தொண்டு நிறுவனம்.
திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி,நம்ம ஊர் நூலகம் தலைப்பிலான பேச்சுப்போட்டி,சதுரங்கப் போட்டிகளில் வென்ற மாணவ,மாணவியர்களுக்கு பரிசுகளும்,பங்கேற்ற அனைத்து மாணவ,மாணவியர்களுக்கும் பாராட்டுச் சான்றுகளும் வழங்கப்பட்டன.
எழுத்தாளர்,தமிழறிஞர்.முத்துரத்தினம் அவர்கள்,கவிஞர்,பழ.ஈஸ்வரமூர்த்தி அவர்கள்,கனவு ஆசிரியர்.து.செந்தில்குமார் அவர்கள்,மூத்த வாசகர்,திரு.ரங்கசாமி அவர்கள்,உட்பட கல்வி ஆர்வலர்களும்,வாசகர்களும் வாழ்த்துரை வழங்கினர்.
நன்றியுரை;திரு.ஜனார்த்தனன் அவர்கள்,நூலகர்,புஞ்சைப் புளியம்பட்டி கிளை நூலகம் அவர்கள்.
நிகழ்ச்சிஏற்பாடு மற்றும் தொகுப்பு;திரு.செ.பரமேஸ்வரன் அவர்கள்.

16 நவம்பர் 2019

நூலக வாரவிழா-சத்தியமங்கலம் கிளை நூலகம்.

                                                    நிகழ்ச்சி நிரல்


இடம்; கிளை நூலகம்,சத்தியமங்கலம்,ஈரோடு மாவட்டம்.
நாள்;17-11-2019ஞாயிறு
நேரம்;காலை 11மணி.

---------------------------------
தமிழ்த்தாய் வாழ்த்து
தலைமை;திரு.யுவராஜ் அவர்கள்,முதல்நிலை நூலகர்,
கோபி 1 நூலகம்.
வரவேற்புரை;திருமதி.ஆ.சாந்தி அவர்கள்,நூலகர்,
கிளை நூலகம்,சத்தியமங்கலம்.
முன்னிலை;
திரு.வீ.சுந்தரராசு அவர்கள்,
தமிழர் பண்பாட்டுக் கழகம்,
திரு.ந.யாழினி ஆறுமுகம் அவர்கள்,தலைவர்,
விதைகள் வாசகர் வட்டம்,
திரு.அரிமா.கு.லோகநாதன் அவர்கள்,தலைவர்,
பெற்றோர் ஆசிரியர் கழகம்,நகராட்சிப் பள்ளி,
திரு.சுடர்.நடராஜ் அவர்கள்,
நிறுவனர்,
சுடர் தொண்டு நிறுவனம்,
திரு.ரீடு கருப்புசாமி அவர்கள்,
இயக்குநர்,
கல்வி உரிமைக்கான மேம்பாட்டு மையம்,
திரு.லேனாசங்கர் அவர்கள்,
நிலைய மேலாளர்,(90.4MHZ)
பண்ணாரி அம்மன் சமுதாய வானொலி நிலையம்,
சிறப்பு அழைப்பாளர்கள்
1.திரு.வெங்கட்ராஜ் மாஸ்டர் அவர்கள்,
தாளவாடி சமூக சேவை மையம்,மற்றும்
 உதவி தொடக்க கல்வி அலுவலர் (பணி நிறைவு)தாளவாடி.
2.மாணவி.B.லக்‌ஷணா,ஏழாம் வகுப்பு,
மாமகரிஷி ஈஸ்ராய குருகுலம் மெட்ரிக் மேனிலைப் பள்ளி,
தபோவனம்,
தனித்திறன் போட்டிகளில் வெற்றிபெற்ற
 மாணவ,மாணவியருக்கு பரிசளிப்பு நிகழ்வு
வாழ்த்துரை;
(1)எழுத்தாளர்.தமிழறிஞர்.முத்துரத்தினம் அவர்கள்,
(2)கவிஞர்.பழ.ஈஸ்வரமூர்த்தி அவர்கள்,
(3)திரு.நாகராசன் அவர்கள்,ஆசிரியர்,அரசு மேனிலைப் பள்ளி,கடம்பூர்.
(4)திரு.து.செந்தில்குமார் அவர்கள்,பட்டதாரி ஆசிரியர்,அரசுப் பள்ளி,நஞ்சப்பகவுண்டன் புதூர்.
(5)ஏ.ஜே.அப்துல் ஜப்பார் அவர்கள்,
சிந்தனையாளர்,
(6)நூலக வாசகர்கள்
மற்றும்
மாணவ,மாணவியரும்,இருபால் ஆசிரியர்களும்.
நன்றியுரை;திரு.K.ஜனார்த்தனன்,நூலகர்,
கிளைநூலகம்,புஞ்சைப் புளியம்பட்டி
 தேசிய கீதம்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு; C.பரமேஸ்வரன்,
செயலாளர்,விதைகள் வாசகர் வட்டம்.
தொடர்புக்கு;9585600733

15 நவம்பர் 2019

நூலக வாரவிழா-2019 சத்தியமங்கலம் கிளை

                                      தொட்டனைத்தூறும் மணற்கேணி
                                         மாந்தர்க்குக் கற்றனைத்தூறும் அறிவு.- 393
       அவைசார்ந்த மேன்மக்களே,மாணவ,மாணவியரே,வாசகப்பெருமக்களே,
  17-11-2019 ஞாயிறு இன்று சத்தியமங்கலம் கிளை நூலகத்தில் கூடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
               நமது மொழிவளத்தைப் பெருக்கவும்,வாசிப்பை சரளமாக்கவும் ,வாசிப்பினால் உருவாகும் நற்சிந்தனைகளும்,பொது அறிவுப் பெருக்கமும் நம்மை சராசரியான நிலையிலிருந்து உயர்த்தி மேம்பட்டநிலைக்கு கொண்டு செல்லும்.
   அவ்வாறான வாசிப்பிற்கு ஏற்ற இடம் நம்ம சத்தியமங்கலம் நூலகம்தாங்க.அதாவது மனித சமூகத்தை பண்படுத்துவது நூலகம்தாங்க.
நம்ம சத்தியமங்கலம் கிளைநூலகத்தில்,கலை,இலக்கியம்,அறிவியல்,மருத்துவம்,கணிதம்,வரலாறு,வாழ்வியல்,பொருளியல்,அரசியல்,கணிதம்,பொறியியல்,தத்துவம்,தொழில்நுட்பம்,நிலநூல்,நீதிபோதனை,சுற்றுச்சூழல்,பொதுஅறிவு,கதை,கவிதை,நாடகம்,சட்டம்,வாணிபம்,வேளாண்மை,பயன்படுகலைகள் என ஏராளமான தலைப்புகளில் பல்துறை சார்ந்த பல்லாயிரக்கணக்கான நூல்கள் பழையதும்,புதியதுமாக வாசிப்புக்காக ,வகைவகையாக ,துறைவாரியாக அடுக்கிவைக்கப்பட்டுள்ளன.தவிர அன்றாடம் உலக நடப்புகளை அறிந்துகொள்ள செய்தித்தாட்கள்,நாளிதழ்,வார இதழ்,மாத இதழ்,பருவ இதழ்,வேலைவாய்ப்புச் செய்திகள் என வாங்கி வாசகர் பயன்பாட்டிற்காக வைக்கப்படுகின்றன.

                             மாணவர்களை அறிஞர்களாக்குவதில் பள்ளி,கல்லூரி போன்ற வகுப்பறைகளுக்கு இணையானது நூலகமாகும்.
பள்ளி என்பது பாடநூல்களைக்கொண்டு அறிவை விதைக்கும் இடம் என்றால் நூலகமானது அறிவை வளர்த்து செழுமையாக்குவதாகும்.ஒரு மாணவர் பாடப்புத்தகங்களோடு நூலகத்திலுள்ள பொது அறிவுநூல்களை வாசிக்குமளவு  பலதுறை சார்ந்த அறிவினைப் பெறுவர்.அவ்வாறான அறிவுசார்ந்த நூல்கள்  மாணவர்களின் வயதிற்கும்,மனநிலைக்கும் ஏற்றவாறு நம்ம நூலகத்தில் ஏராளமாக உள்ளன.
 இதையே புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் ,
        ''புனிதமுற்று மக்கள் புதுவாழ்வு வேண்டில்
               புத்தகசாலை வேண்டும் நாட்டில் யாண்டும்''
  என வலியுறுத்தினார்.

    எனவே  இந்திய நூலகச் சங்கமானது ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில்  நூலக வாரவிழாவினை  நடத்தி அறிஞர்களும்,சிந்தனையாளர்களும் வாழுமிடமான நூலகத்தினை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்துவதற்கான போதிய விழிப்புணர்வினை தருகின்றது.நாமும் தேசிய நூலக வாரவிழாவினை முன்னிட்டு நமது சத்தியமங்கலம் நூலகத்தின் அவசியத்தை சத்தியமங்கலம் சுற்றுவட்டார மக்களிடையே பரப்புவோம்.பள்ளி,கல்லூரி மாணவர்களிடையே பரப்புவோம்.நூலக வாரவிழாவினால் நூலகர்-வாசகர் உறவு மேம்படுகிறது.புதிய,புதிய வாசகர்களை நூலகம் வரவழைக்கும் முயற்சி எடுக்கப்படுகிறது.புதிய உறுப்பினர்கள்  சேர்க்கை கூடுகின்ற வாய்ப்பு ஏற்படுகிறது.
    ஆக நாம் அனைவரும்  நூலக வாரவிழாவில் பங்கேற்று நமது அறிவைப்பெருக்கி,எண்ணங்கள் நேர்பட்டு,உயர்சிந்தனைகள் உருவாகி,திறமையும் ஆற்றலும் பெருக்கி,தன்னம்பிக்கை வளர்க்கும்,நூலகத்தின் மகத்துவத்தை மக்களிடையே பரப்புவதோடு
நாளெல்லாம் நூலகத்தைப் பயன்படுத்துவோம்,
பொழுதெல்லாம் புத்தகசாலையைப் போற்றுவோம்.
 என உரையாற்ற வாய்ப்பளித்த அவையோருக்கு நன்றிபாராட்டி நிறைவு செய்கிறேன்.
என
செ.பரமேஸ்வரன்,
அரசுப் பேருந்து ஓட்டுனர்,
தாளவாடிகிளை.
ஈரோடு மண்டலம்.

14 நவம்பர் 2019

அனைவரும் விளையாடலாம் சதுரங்கம்.(CHESS)

 செஸ் என்னும் சதுரங்கம் விளையாட ஆர்வமா?
மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். மாணவர்களுக்காக இலவசமாகப் பயிற்சியளித்த அனுபவத்தினை சாமானியனும் வாசித்து விளையாடுவதற்காக  எளிய தமிழில் குறைந்த விலையில் ,'அனைவரும் விளையாடலாம் சதுரங்கம்'என்ற பெயரில் சிறிய புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளேன்.சதுரங்க விளையாடுவது கடினமே இல்லைங்க. புரிதல் மட்டுமே அவசியம்.வயது வித்தியாசமின்றி எண்பது வயது முதியவர் வரை எளிதில் கற்கலாம்.ஆதரவற்றோர் இல்லங்கள்,முதியோர் இல்லங்கள்,சமூக நல அமைப்புகள்,அரசுப்பள்ளிகள், என ஆர்வமுள்ள அனைவரும் இலவசமாகப் பயிற்சிபெற என்னைத் தொடர்புகொள்ளுங்க.9585600733









 அனைவரும் விளையாடலாம் சதுரங்கம் -
புத்தகம் தேவைப்படுவோர்
தொடர்புகொள்ள வேண்டிய எண் 9585600733





நூலக வாரவிழா-2019 போட்டிகள்



அன்புடையீர்,
 வணக்கம்.நூலக வாரவிழா-2019 முன்னிட்டு  17-11-2019 ஞாயிறு அன்று காலை 11 மணிக்கு நடைபெற உள்ள நூலக வாரவிழா-2019 முன்னிட்டு சத்தி கிளை நூலகத்தில் 13-10-2019 மற்றும் 10-11-2019 தினங்களில் மாணவ,மாணவிகளுக்கான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி,நம்ம ஊர் நூலகம் தலைப்பிலான 5நிமிட பேச்சுப்போட்டி,சதுரங்கப் போட்டிகள் நடைபெற்றன. தலைமை.எழுத்தாளர்,தமிழறிஞர் முத்துரத்தினம் அவர்கள் தலைமையில் திருமதி ஆ.சாந்தி நூலகர்,திருமதி ராஜலட்சுமி,நூலக உறுப்பினர்,பட்டதாரி ஆசிரியர் திரு.செந்தில்குமார்,ஊ.ஒ.ந.நி.பள்ளி,நஞ்சகவுண்டன் பாளையம்,பரமேஸ்வரன்,செயலாளர்,விதைகள் வாசகர் வட்டம் ஆகிய நடுவர்குழு மாணவர்களின் தனித்திறனை மதிப்பீடு செய்தனர்.







மாணவர்கள் சதுரங்க மன்றம்-சத்தியமங்கலம்.


STUDENTS CHESS CLUB - SATHYAMANAGALAM
மாணவர்கள் சதுரங்க மன்றம்-சத்தியமங்கலம்.
13-10-2019
கிளை நூலகம்-சத்தி.