19 பிப்ரவரி 2015

பஞ்சபட்சி சாஸ்திரம் என்றால் என்ன?

மரியாதைக்குரியவர்களே,
        வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.

பஞ்சபட்சி சாஸ்திரம் என்றால் என்ன?
14 நாட்களுக்கு ஒருமுறை அமாவாசை அல்லது பவுர்ணமி வருகிறது.இந்த இருநாட்களிலும் சூரியனும் சந்திரனும் முழுவலிமையடைகின்றன.இந்து ஜோதிடப்படி சூரியன் ஆத்மாக்காரகன் எனவும் சந்திரன் மனக்காரகன் எனவும் அழைக்கப்படுகிறது.
பூமியில் பிறக்கும் மனிதன் 14 நாட்களில் ஏதாவது ஒரு நாளில் பிறக்கிறான்.அது வளர்பிறை பிரதமை என வைத்துக்கொள்வோம்.அவனது பிறந்த நட்சத்திரம் அசுவினி என வைத்துக்கொள்வோம்.அவனது அசுவினி வளர்பிறையில் வருவதால் பஞ்சபட்சி சாஸ்திரப்படி அவனது பட்சி ஆந்தை வருகிறது.

ஆந்தையின் குணம் என்ன?
அது இரவில் மட்டுமே வெளிவரும்.ஆக, அந்த மனிதனுக்கு பட்டம்,பதவி எல்லாமே இரவில்தான் கிடைக்கும்.தனது பட்சி ஆந்தை என அவன் அறிந்தால்,அவன் ஒருவரிடம் உதவி கேட்டுச்செல்ல வேண்டிய நேரம் இரவு மட்டுமே! பகலில் அவன் உதவி கேட்டால் அந்த உதவி கிடைக்காது.
அவனுக்குஒரு மாதத்தில் (தமிழ்மாதத்தில்) வளர்பிறைகாலமான 14 நாட்களில் காரியங்கள் வெற்றியடையும்.அந்த 14 நாளில் ஒரு குறிப்பிட்ட நாள் மட்டும் அவனது பறவை(பட்சி)யான ஆந்தைக்கு மரணபட்சிநாளாக அமைகிறது.அந்த நாளில் அவன் செய்யும் எந்த சுபகாரியமும் படுதோல்வியடையும்.மீதி 13 நாட்களில் ஒவ்வொரு நாளிலும் சுமார் 1 1/2 மணி நேரம் அரசபட்சி நேரமாகிறது.அந்த நேரத்தில் அவன் ஒரு சர்வாதிகாரியை சந்தித்தாலும் காரிய வெற்றி உண்டாகிறது.
இந்த பஞ்சபட்சி நேரத்தைத்தான் இன்றைய அரசியல்வாதிகள் வேட்புமனுத்தாக்கல் செய்யப்பயன்படுத்துகிறார்கள்.அவர்களது அரசபட்சிநேரம் பல சமயங்களில் ராகுகாலத்திலோ, எமகண்டத்திலோ யதார்த்தமாக அமைந்துவிடுகிறது.இதைத் தான் அந்த அரசியல்வாதிகள் “நான் ராகு காலத்தில் மனுத்தாக்கல் செய்தேன்” என பகுத்தறிவு பகலவன்கள் போல பீற்றிக் கொள்கிறார்கள்
posted under பஞ்சபட்சி சாஸ்திரம் | No Comments »
உரோமரிஷி – பஞ்ச பட்சி சாஸ்திரம் – வரலாறு- பதிவு-3
February15

பஞ்ச பட்சி சாஸ்திரம் – வரலாறு :
பாடல்-1
“”””””சொன்னாரே சூரனை சம்மாரம்பண்ணி
சுப்ரமண்யக் கல்லோசிவன் உபதேசித்தார்
விண்ணான சூரனை சம்பாரம்செய்து
வெகுகாலம்சென்றபின்பு குருமுனிக்கு உபதேசித்தார்
வண்ணான கும்பமுனி பதிணென்பேர்க்கும்
கலந்துஉற வாகியல்லோ உபதேசித்தார்
நன்னாகநான் வெளியாயப் பட்சிவித்தை
நாட்டினேன் உலகத்தில் நன்றாய்த்தானே””””””
——உரோமரிஷி—பஞ்சட்சி சாஸ்திரம்–
“”””””சொன்னாரே சூரனை சம்மாரம்பண்ணி
சுப்ரமண்யக் கல்லோசிவன் உபதேசித்தார்”””””
கொடுமைகள் பல செய்து , தொல்லைகள் பல கொடுத்து , தீய செயல்கள் பல செய்து , அட்டுழியம் தொடர்ந்து செய்து கொண்டிருந்த சூரனை அழித்து அமைதியை உண்டாக்குவதற்காக பார்வதி தேவி தன் சக்தியெல்லாம் ஒன்றாக திரட்டி தன் அம்சமாக வேலை சுப்பிரமணியருக்குக் கொடுத்தார் .

அக்கிரமங்களை வீழ்த்தி , அமைதியை நிலைநாட்ட , சிவபெருமான் -மகிமையை வார்த்தைகளில் சொல்ல முடியாத மிக உயர்ந்த சாஸ்திரமாகிய பஞ்ச பட்சி சாஸ்திரத்தை சுப்பிரமணியருக்கு உபதேசித்து வெற்றி பெறுவதற்கான திறவுகோலை அவரிடம் ஒப்படைத்தார் .
இங்கே ஒன்றை நாம் தெரிந்து கொள்வோம் : -
பஞ்சபட்சி சாஸ்திரத்தில் உள்ள வெற்றிக்கான திறவுகோல் என்ன என்று இப்பொழுது பார்ப்போம் .
ஒருவருடைய வாழ்நாளில் நல்ல காலம் , கெட்ட காலம் என இரண்டு காலங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் நடைபெறும் .
நல்ல காலத்தில் ஒருவர் எத்தகைய தீமையான செயல்கள் செய்தாலும் அவரை எளிதாக யாராலும் வெற்றி கொள்ள முடியாது .அவரை அவ்வளவு எளிதாக யாராலும் தண்டிக்க முடியாது .
ஆனால் அந்த நல்ல நேரத்திற்குள் ஒரு குறிப்பிட்ட காலம் வரை கெட்ட காலம் நடைபெறும் .

கெட்ட காலம் நடைபெறும் அந்த சரியான காலத்தைக் கண்டுபிடித்து பயன்படுத்தினால் எவ்வளவு பலசாலியான எதிரியாக இருந்தாலும் , சக்திகள் பல பெற்ற எதிரியாக இருந்தாலும் , எதிரியை வீழ்த்தி வெற்றி பெற்று விடலாம் .
இந்த நேரங்களின் சூட்சும ரகிசயங்களை விரிவாக உரைப்பது தான் பஞ்ச பட்சி சாஸ்திரம் .
இத்தகைய சிறப்பு வாய்ந்த பஞ்ச பட்சி சாஸ்திரத்தைத் தான் சிவபெருமான் முருகனுக்கு உபதேசித்தார் .


”””விண்ணான சூரனை சம்பாரம்செய்து
வெகுகாலம்சென்றபின்பு குருமுனிக்கு உபதேசித்தார்””””””
சுப்பிரமணியர் பஞ்ச பட்சி சாஸ்திரத்தின் சூட்சும ரகசியங்களை அறிந்து, அதனை சரியான காலத்தில் பயன்படுத்தி சூரனை அழித்து வெற்றி கொண்டார் .
பஞ்சபட்சி சாஸ்திரத்தைப் பயன்படுத்தி வெற்றி கண்ட சுப்பிரமிணயர், சூரர்களை அழித்து , ஒழித்து வெகுகாலம் ஆன பின்பு உலகத்திலேயே உயர்ந்த சாஸ்திரங்களில் ஒன்றாகக் கருதப்படும் பஞ்ச பட்சி சாஸ்திரத்தை ,
முனிவர்களுக்கு எல்லாம் தலைவராகிய ,
முனிவர்களுக்கு எல்லாம் குருவாகிய ,
அகத்திய முனிவருக்கு சுப்பிரமணியர் உபதேசித்தார் .


“”””””வண்ணான கும்பமுனி பதிணென்பேர்க்கும்
கலந்துஉற வாகியல்லோ உபதேசித்தார்”””””
சித்தர்களின் தலைவராகிய அகத்திய முனிவர் ,
சித்தர்களின் குருவாகிய அகத்திய முனிவர் ,

18 சித்தர்கள் என்று சொல்லப்படக் கூடிய ,
1 நந்தி 11 காலங்கி
2 அகத்தியர் 12 அழுகண்ணர்
3 புண்ணாக்கீசர் 13 பாம்பாட்டி
4 புலத்தியர் 14 அகப்பேய்ச் சித்தர்
5 பூனைக்கண்ணர் 15 தேரையர்
6 இடைக்காடர் 16 குதம்பைச் சித்தர்
7 போகர் 17 சட்டநாதர்
8 புலிப்பாணி
9 கருவூரார்
10 கொங்கணர்

இவர்களில் சிலருக்குப் பதில் உரோமரிஷி , கும்பமுனி , மச்சமுனி , கோரக்கர் என்ற பலரையும் கூட்டித் தொகையைப் பதினெட்டாகப் பல பட்டியல்களையும் கொள்வர் .
18 சித்தர்கள் என்று அழைக்கப்பட்ட மேலே சொல்லப்பட்டவர்களுக்கு அகத்திய முனிவர் உபதேசம் பண்ணியதோடு நின்று விடவில்லை. அவர்களுடன் ஒன்றாக கலந்து இருந்து ,
பஞ்ச பட்சி சாஸ்திரத்தைப் பயன்படுத்தும் பொழுது ஏற்படக் கூடிய விளைவுகளையும் ,
கிடைக்கக் கூடிய பலன்களையும் ,
பெறக் கூடிய சக்திகளையும் ,
அவர்களுக்கு வெளிப்பட செயல்படுத்திக் காட்டி செயல் விளைவுத் தத்துவத்துடன் விளக்கி உபதேசித்தார் .


“””””””நன்னாகநான் வெளியாய்ப் பட்சிவித்தை
நாட்டினேன் உலகத்தில் நன்றாய்த்தானே””””””
இவ்வாறாக பல்வேறு நிலைகளைக் கடந்து வந்த பஞ்ச பட்சி சாஸ்திரத்தை ,
யாரும் அறியக்கூடாது என்று மறைத்து வைக்கப் பட்ட பஞ்ச பட்சி சாஸ்திரத்தை ,
இந்த உலகத்தில் உள்ள மக்கள் அனைவரும் வாழ்க்கையில் பயன்படுத்தி வெற்றி பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில்
பஞ்ச பட்சி சாஸ்திரத்தின் சூட்சும ரகசியங்கள் அனைத்தையும் பாடல்களாக்கி இந்த உலகத்திற்கு வெளிப்படையாக அளித்திருக்கிறேன் என்கிறார் உரோம ரிஷி .


பாடல்- 2
“””””””நன்றென்றுஉலகமதில் சொன்னேன் சூட்சம்
நழுகாதே சத்தியமாய் எண்ணிக்கொண்டு
குன்றென்ற கோபத்தால் கொடுமைநினையாதே
குலநாசம் பிறப்பதரிது குலைக்கும்ஜென்மம்
வண்டென்ற பட்சியல்லோ மதுவையுண்டு
வகையதுபோல் இதினுடைய சூட்சங்கண்டு
தொண்டென்ற தொண்டர்கள்போல் உலகமீதில்
தோணாமல் வெகுநினைவாய் வாழ்வார்பாரே””””””””
———உரோமரிஷி—பஞ்சபட்சி சாஸ்திரம்—

“”””””””நன்றென்றுஉலகமதில் சொன்னேன் சூட்சம்
நழுகாதே சத்தியமாய் எண்ணிக்கொண்டு””””””””
இந்த உலகத்தில் உள்ள மக்கள் அனைவரும் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் , சூட்சும ரகசியங்களை எல்லாம் உள்ளடக்கி , பாடல்களாக்கி, பஞ்சபட்சி சாஸ்திரத்தை சொன்னேன் .
நல்லோரை நசுக்க வேண்டும் என்றோ ,
பகைத்தோரை அழித்து இன்பம் காண வேண்டும் என்றோ ,
தீய செயல்களில் ஈடுபட்டு உல்லாசம் அனுபவிக்க வேண்டும் என்றோ ,
அறியாமையில் வாடும் நெஞ்சங்களை அழ வைக்க வேண்டும் என்றோ ,

நினைத்து பஞ்சபட்சி சாஸ்திரத்தை தவறான வழிகளுக்கு பயன்படுத்தாமல் ,
நேர்மையான எண்ணம் கொண்டு ,
சத்திய வழியில் நடந்து ,
பயன்படுத்தி வெற்றி காண வேண்டும் என்கிறார் உரோமரிஷி .


“”””””குன்றென்ற கோபத்தால் கொடுமைநினையாதே
குலநாசம் பிறப்பதரிது குலைக்கும்ஜென்மம்”””””””””
தனக்கு எதிராக தகாத செயல்கள் பல செய்து
தன்னை துன்பத்தில் ஆழ்த்தியவரின் ,
தன்னை மனம் கலங்க வைத்தவரின் ,
தன்னை விரக்தியின் உச்சத்திற்கே கொண்டு சென்றவரின் ,
செய்கையால் தன் நிலையில் மாற்றம் அடைந்து , தடுமாற்றத்திற்கு உட்பட்டு, கோபாவேசத்துடன்
உணர்ச்சி வயப்பட்டோ , சிந்தனை தடுமாறியோ , கோபநிலைக்கு தள்ளப்பட்டோ , மனம் தன் நிலையில் இல்லாமல் அவருக்கு எதிராக பஞ்சபட்சி சாஸ்திரத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது .

அப்படி தவறாக பஞ்ச பட்சி சாஸ்திரத்தைப் பயன்படுத்தினால் நமது குடும்பம் சிதறிப்போகும் .
கர்மவினை நம்மை ஜென்ம , ஜென்மமாக பின் தொடர்ந்து வந்து நமது குலத்தை நாசம் செய்யும் .
ஓவ்வொரு ஜென்மத்திலும் நமக்கு வாழ்க்கையை துன்பம் நிறைந்ததாக கொடுத்து நம்மை வருத்தப்பட வைக்கும் என்கிறார் உரோமரிஷி .


“”””””வண்டென்ற பட்சியல்லோ மதுவையுண்டு
வகையதுபோல் இதினுடைய சூட்சங்கண்டு””””
பஞ்சபட்சி சாஸ்திரத்தை பயின்று , அதன் சூட்சும ரகசியங்களை அறிந்து, அதன் பலன்களை உணர்ந்து, அதன் மகிமைகளை தெரிந்து ,அதன் சக்திகளை அடைந்த பின் ,
புகழ் பெற வேண்டும் என்ற ஆசையில் அதனை வெளி உலகுக்கு வெளிப்படுத்தாமல் அமைதியாக இயல்பான வாழ்க்கை வாழ வேண்டும் .

வண்டு என்னும் பறவையானது மலரிலுள்ள தேனை சுவைத்து விட்டு அந்த ஆனந்தத்தில் தள்ளாடிக் கொண்டு செல்வது போல்
பஞ்ச பட்சி சாஸ்திரத்தின் சக்தியை அடைந்த பின் அந்த ஆனந்த வெள்ளத்தில் மூழ்கிய நிலையிலேயே இருக்க வேண்டுமே ஒழிய ,
தன் சக்தியை அனைவரும் அறியும் படி படம் பிடித்துக் காட்டக் கூடாது என்கிறார் உரோமரிஷி .


”””””தொண்டென்ற தொண்டர்கள்போல் உலகமீதில்
தோணாமல் வெகுநினைவாய் வாழ்வார்பாரே””””””””
வருத்தப்பட்டு கண்ணீர் சிந்தி வருபவருக்கு கண்ணீரைத் துடைக்கும் கையாகவும் ,
துன்ப வடுக்களால் காயம் பட்டவருக்கு மருந்தாகவும் ,
திக்கு தெரியாதவருக்கு திசை காட்டும் வழிகாட்டியாகவும் ,
இருளில் தத்தளிபவருக்கு வெளிச்சத்தைக் காட்டும் ஒளியாகவும் ,
வாழ்க்கையைத் தவற விட்டவருக்கு புது வாழ்வை தரும் இன்பமாகவும் ,
இந்த உலகத்தில் இருந்து கொண்டு சமுதாயத்திற்கு தான் யார் என்பதையும், தன் சக்தி எத்தகையது என்பதையும் ,வெளிப்படுத்தாமல்
இந்த உலகத்தில் உள்ள மக்களுக்கு தொண்டுகள் பல செய்து மற்றவர்களின் இன்பத்தில் தான் இன்பத்தைக் கண்டு வாழ வேண்டும் என்கிறார் உரோமரிஷி.

பஞ்ச பட்சி சாஸ்திரத்தின் சிறப்புகளையும் வரலாற்றையும் பார்த்த நாம் அடுத்து பஞ்ச பட்சி சாஸ்திரத்தை யாருக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.
யாருக்கு சொல்லிக் கொடுக்கக் கூடாது என்பதை பற்றிப் பார்ப்போம் .
posted under பஞ்சபட்சி சாஸ்திரம் | No Comments »
உரோமரிஷி-பஞ்ச பட்சி சாஸ்திரம்-சிறப்புகள்-பதிவு-2
February15

பாடல் – 3 :
“””””பத்தான இந்தநுhற்கிணை யேயில்லை
பண்பான தனங்கோடி ஈந்தாலுந்தான்
முத்தான சாஸ்திரத்தை வெளிவிடாதே
முன்னோர்கள் மனதடக்கம் செய்துவைப்பார்
வித்தான பொருள்களெல்லாம் இதிலேதோன்றும்
வேதாந்த சுழிமுனையு மிதுவேயாகும்
கொத்தான அடிகொடுத்து குடிவரைக்கும்
கூறினேன் வாழ்வதற்காய்க் கூறினேனே””””””
————— உரோமரிஷி —– பஞ்சபட்சி சாஸ்திரம்–
“””””பத்தான இந்தநுhற்கிணை யேயில்லை
பண்பான தனங்கோடி ஈந்தாலுந்தான்
முத்தான சாஸ்திரத்தை வெளிவிடாதே””””””
உலகத்தில் பொது அறிவை ஊட்டும் எத்தனை விதமான புத்தகங்கள் வந்தாலும் ,
அறிவைத் திறந்து ஊக்கம் ஊட்டும் புத்தகங்கள் வந்தாலும் ,
ஆன்மீகத்தை விளக்கும் புத்தகங்கள் வந்தாலும் ,
ஞானத்திற்கான வழியைக் காட்டும் புத்தகங்கள் வந்தாலும் ,
முக்திக்கான வித்தை தன்னுள் கொண்ட புத்தகங்கள் வந்தாலும் ,
நான் யார் என்பதை வெளிக்கொணரும் புத்தகங்கள் வந்தாலும் ,
ஆதி , அந்தம் சூட்சுமங்களை தன்னுள் அடக்கிய பல்வேறு புத்தகங்கள் வந்தாலும் ,

இந்த உலகத்தில் எத்தகைய புத்தகங்கள் வந்திருந்தாலும் ,
இந்த உலகத்தில் எத்தகைய புத்தகங்கள் வந்துகொண்டிருந்தாலும் ,
இந்த உலகத்தில் எத்தகைய புத்தகங்கள் இனி வந்தாலும் ,
பஞ்ச பட்சி சாஸ்திரத்திற்கு இணையான இணை என்று சொல்ல முடியாத புத்தகம் என்ற ஒனறு கிடையாது .


இத்தகைய சிறப்பு வாய்ந்த ,
அதி சூட்சும ரகசியங்களை தன்னுள் கொண்ட பஞ்ச பட்சி சாஸ்திரத்தை ,
ஞானத் திறவுகோலை தன்னுள் கொண்ட பஞ்ச பட்சி சாஸ்திரத்தை ,
கோடிக் கண்க்கில் பணத்தை அள்ளிக் கொடுக்கிறேன் , எனக்கு பஞ்ச பட்சி சாஸ்திரத்தை கற்றுக் கொடு என்று யார் கேட்டாலும் சொல்லிக் கொடுக்கக் கூடாது .
பஞ்ச பட்சி சாஸ்திரத்தின் அணு அளவு ரகசியங்களை சொல்லக் கூடாது என்கிறார் உரோமரிஷி .


””””””””முன்னோர்கள் மனதடக்கம் செய்துவைப்பார்”””””
பஞ்ச பட்சி சாஸ்திரத்தை அறிந்து , பயன்படுத்தி , வாழ்க்கையில் வெற்றி கண்டு , அதன் பலனை அனுபவித்து, சுவைத்த ,நம்முடைய முன்னோர்கள்
தான் அனுபவித்து சுவைத்த பலன்களை இந்த உலகத்தில் உள்ளவர்கள் பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றி கண்டு இன்புற்று வாழ வேண்டும் என்ற நோக்கில்,
பஞ்ச பட்சி சாஸ்திரத்தின் அதி சூட்சும ரகசியங்களை எல்லாம் தாங்கள் இயற்றிய பாடல்களில் மறைமுகமாக எழுதி வைத்துள்ளனர் .


“”””””வித்தான பொருள்களெல்லாம் இதிலேதோன்றும்”””””
வித்து என்றால் மூலம் என்று பொருள் .
அதைப் போல மரத்திற்கு வித்து என்பது விதை .

உலகியல் நிலை என்று எடுத்துக் கொண்டாலும் ,
அருளியல் நிலை என்று எடுத்துக் கொண்டாலும் ,
இத்தகைய இரண்டு வேறுபட்ட நிலைகளுக்கும் மூல வித்தாக இருந்து அதாவது
வாழ்க்கையில் துன்பம் நீக்கி இன்புற்று வாழவும் ,
ஞானத்திற்கான திறவுகோலை பெற்று பிறப்பு , இறப்பு அற்று வாழவும் ,
தேவையான மூல ரகசியங்களை தன்னுள் கொண்ட வித்தாக இருக்கிறது.

அதாவது வாழ்க்கையை இன்பமாக வாழவும் ,ஞானத்தை அடையவும் தேவையான மூல ரகசியங்களை தன்னுள் கொண்டுள்ளது பஞ்ச பட்சி சாஸ்திரம் .

“”””””””வேதாந்த சுழிமுனையு மிதுவேயாகும்”””””””
வேதாந்தம்
வேதம் + அந்தம் = வேதாந்தம்
வேதம் என்றால் பஞ்சபூதங்கள் என்று பொருள் .
அந்தம் என்றால் முடிவான நிலை , மூலநிலை என்று பொருள் .
பஞ்ச பூதங்களுக்கு முடிவான நிலையாக , மூல நிலையாக உள்ளது எது என்று கண்டபோது வேதாந்தம் உண்டாயிற்று .

மனிதன் நிலம் , நீர் , நெருப்பு , காற்று , விண் என்ற ஐந்து பஞ்சபூத பிரிவுகளுக்குள் உலகம் , இயக்கமண்டலம் , உயிர்கள் அனைத்தும் அடங்கக் கண்டான் . இந்த ஐந்து பஞ்ச பூதங்களைப் பற்றிய தொகுப்பு தான் வேதம் .
மனிதன் வேதத்தில் விண்ணின் கூட்டான பஞ்ச பூதங்களை உணர்ந்து கொண்டான் .
விண் என்பது இயக்க நிலையின் முதல் கட்டம் என்பதை அறிந்து கொண்டான் .
அது இருப்பு நிலையிலிருந்து பிரிந்தது என்பதை உணர்ந்து கொண்டான் .

ஆகவே மனிதன் இருப்பு நிலையை ஆதி என்றும் , அனாதி என்றும், பிரம்மம் என்றும் , கடவுள் என்றும் , இறைவன் என்றும் ,பூரணம் என்றும் ,பல்வேறு பெயர்களை அதற்கு சூட்டி வேதத்திற்கு முடிவாக முதற்பொருளாக கண்ட அறிவின் விளக்கத்துக்கு வேதாந்தம் என்று பெயரிட்டான் .
உலகத் தோற்ற ரகசியங்களைத் தன்னுள் கொண்ட வேதாந்தத்தை நாம் உணர்ந்து கொள்வதற்கு பஞ்சபட்சி சாஸ்திரம் ஒரு நுழைவு வாயிலாக இருக்கிறது .

“””””””கொத்தான அடிகொடுத்து குடிவரைக்கும்
கூறினேன் வாழ்வதற்காய்க் கூறினேனே””””””
பஞ்சபட்சி சாஸ்திரத்தின் சக்திகள் , மகிமைகள் , நன்மைகள் ஆகியவற்றை வார்த்தைகளால் ரகசியமாகவும் , சூட்சுமமாகவும் கூறியிருக்கின்றேன் .
இந்த உலகத்தில் உள்ள மக்கள் அனைவரும் படித்து பயன்பெற்று சகலவிதமான இன்பங்களையும் , வெற்றிகளையும் பெற்று வாழ வேண்டும் என்பதற்காக கூறினேன் என்கிறார் உரோமரிஷி .


பாடல் – 4 :
“”””””பட்சிவித்தை ஒருபோதும் பழுதேயில்லை
பாராமல் போனதினாலே பழுதேயாகும்
கொச்சிவித்தை பலிப்பதுதான் ஏனோலே
குறிகுணங்கள் நேரமங்கே குறைவிதாலே
வச்சிவித்தை கருக்குருவும் கண்டபேர்க்கு
வணங்குமடா பட்சிவித்தை மயக்கமில்லை
நச்சிவித்தை யிதற்குநிகர் ஒன்றுமில்லை
நாட்டிலேயித் தொழிலைச் சொல்லொண்ணாதே””””””
———–உரோமரிஷி—-பஞ்சபட்சி சாஸ்திரம்–
“”””””பட்சிவித்தை ஒருபோதும் பழுதேயில்லை
பாராமல் போனதினாலே பழுதேயாகும்””””””””
பஞ்ச பட்சி சாஸ்திரத்தைப் பயன்படுத்தி எந்த காரியத்தைச் செய்தாலும் அந்த காரியம் தோல்வியில் முடியாது .

பஞ்ச பட்சி சாஸ்திரத்தைப் பயன் படுத்தி செய்த செயல் தோல்வியில் முடிந்தது ,
பஞ்ச பட்சி சாஸ்திரத்தைப் பயன் படுத்தி செய்த செயல் கவலையைத் தந்தது ,
பஞ்ச பட்சி சாஸ்திரத்தைப் பயன் படுத்தி செய்த செயல் இழப்புகளைத் தந்தது,
என்று யாராவது சொல்வார்களேயானால் அவர்,
பஞ்ச பட்சி சாஸ்திரத்திற்குரிய நேரங்களை சரியாக அறிந்து இருக்கவில்லை என்று பொருள்.

பஞ்ச பட்சி சாஸ்திரத்திற்குரிய நேரங்களை சரியாக அறிந்து , சரியான காலத்தில் , சரியான உபகரணங்களைக் கொண்டு , சரியான முறையில் பயன்படுத்த தெரியவில்லை என்ற காரணத்தினாலேயே பஞ்ச பட்சி சாஸ்திரம் தவறாகுமே ஒழியே ,
முறைப்படி ஒழுங்காக பஞ்ச பட்சி சாஸ்திரம் பயின்று பயன்படுத்தினால் தவறு ஏற்பட வாய்ப்பு இல்லை என்கிறார் உரோமரிஷி .


“””””””கொச்சிவித்தை பலிப்பதுதான் ஏனோலே
குறிகுணங்கள் நேரமங்கே குறைவிதாலே”””””””
காலங்கள் நம்மை துன்பச் சகதியில் தள்ளி விட்டாலும் ,
நேரங்கள் நம்மை அழித்து முன்னேற்றத்தை தடுத்தி நிறுத்தினாலும் ,
நம் மேல் பகை கொண்ட , வெறுப்பு கொண்ட , வஞ்சக நெஞ்சம் கொண்ட, மனிதர்களால் செய்யப்படும் மந்திரம் , யந்திரம் போன்றவை பலித்து நம்மை நம் வாழ்க்கையை துயரக் கடலில் தள்ளி விடக் காரணம்,
பஞ்ச பட்சி சாஸ்திரத்தை முறையாக அறிந்து பயன்படுத்தத் தெரியாததே காரணம் என்கிறார் உரோமரிஷி .


””””””வச்சிவித்தை கருக்குருவும் கண்டபேர்க்கு
வணங்குமடா பட்சிவித்தை மயக்கமில்லை”””””””

பஞ்ச பட்சி சாஸ்திரம் சரியான முறையில் இயங்க வேண்டுமென்றால் அதன் மையக் கருவான சில விஷயங்கள் தெரிந்து இருக்க வேண்டும் அதில் முக்கியமானவை :
1 மௌனவித்தை எனப்படும் பேசாமந்திரம் தெரிந்து இருக்க வேண்டும் .
2 சரம் பார்த்தல் முறையாக பயன் படுத்தத் தெரிந்து இருக்க வேண்டும் .
3 மூலிகையின் அவசியமும் , ரகசியமும் தெரிந்து இருக்க வேண்;டும் .
4 மந்திரம் , யந்திரம் , தந்திரம் உபயோகம் தெரிந்து இருக்க வேண்டும்

இவைகளைத் தவிர வேறு சில முக்கியமான விஷயங்களும் தெரிந்து இருக்க வேண்டும் .
பஞ்சபட்சி சாஸ்திரத்தின் ரகசியங்களை எல்லாம் ஐயம் இன்றி தெரிந்து கொண்டு முறையாக பயன்படுத்தி யார் ஒருவர் வெற்றிகொள்ளும் முறைகளை அறிந்து இருக்கிறாரோ ,
அவர் எந்த காலத்தில் எத்தகைய செயல்களைச் செய்தாலும் , அவருக்கு பஞ்சபட்சி சாஸ்திரம் வெற்றியையே தரும் தோல்வியைத் தராது என்கிறார் உரோமரிஷி .


””””” நச்சிவித்தை யிதற்குநிகர் ஒன்றுமில்லை
நாட்டிலேயித் தொழிலைச் சொல்லொண்ணாதே””””””
மனிதனின் தவறான செய்கைகளினால் நம் இன்பங்கள் குழி தோண்டி புதைக்கப்பட்டாலும் ,
காலம் நம் வாழ்க்கையை நசுக்கி எள்ளி நகையாடினாலும் ,
துன்பத்தின் துயர ரேகை நம் முகத்தில் படர்ந்தாலும் ,
தோல்வியே நம் வாழ்க்கையின் தாரக மந்திரமானாலும் ,
கிரகங்களின் பார்வை நம்மை எரித்தாலும் ,
பிரபஞ்ச விதிகள் நம்மை நசுக்கினாலும் ,
கர்மவினையின் பாதிப்புகள் நம்மை அலைக்கழித்தாலும் ,
கடவுளின் கருணைப் பார்வை நமக்கு இல்லாவிட்டாலும் ,

இவைகள் அனைத்தையும் களைந்து , இவற்றின் தாக்கத்தைத் தனித்து, இன்பத்தை நமக்கு அளித்து ,
வெற்றி என்னும் எட்டாக்கனியை நாம் சுவைப்பதற்கு கொடுக்கக் கூடிய ஒரு சாஸ்திரம் உலகத்தில் உண்டு என்றால் அந்த சாஸ்திரம் பஞ்ச பட்சி சாஸ்திரம் மட்டும் தான் என்கிறார் உரோமரிஷி.

இத்தகை சிறப்பு வாய்ந்த வாழ்க்கையை வளமாக்க தேவையான அதி அற்புதமான சூட்சும ரகசியங்களைத் தன்னுள் கொண்ட சிறப்பு மிக்க பஞ்சபட்சி சாஸ்திரத்தை யாருக்கும் சொல்லிக் கொடுக்காதே,
சொல்வது பாவம் என்கிறார் உரோமரிஷி .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மரமா? மக்களவை உறுப்பினரா??

 அனைவருக்கும் வணக்கம்.      நீலகிரி த்தொகுதி 19-04-2024 வெள்ளிக்கிழமை இன்று 18வது மக்களவைத்தேர்தலில் வாக்களித்துவிட்டு மூன்றுமரக்கன்றுகளையும...