26 ஜூலை 2014

நியூட்டனின் மூன்று விதிகள்


மரியாதைக்குரியவர்களே,
           வணக்கம். 
       கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம். நியூட்டன்விதிகள் மூன்றும் எக்காலத்திற்கும் அழியாத அறிவியல் விதிகளாகும்.

முதல் விதி;    INTERTIA
                    விசைக்கும் பொருளின் நிலையான இயக்கத்திற்கும் உள்ள தொடர்பை விளக்குகிறது.அசையா நிலை விதி எனலாம்.
          ஒரு பொருளின் மீது வெளிப்புறவிசையொன்று செயல்படும் வரை எந்த ஒரு பொருளும் தனது ஓய்வு நிலையையோ அல்லது நேர்க்கோட்டில் அமைந்த சீரான இயக்க நிலையையோ மாற்றிக் கொள்ளாது
Every object continues in its state of rest, or of uniform motion in a straight line, unless compelled to change that state by external forces acted upon it 

உதாரணம்;- ஒரு மாடு நடந்து போய்கொண்டு இருந்தது. நாம் அதை நிறுத்தினால்..மாடும் நிற்கும்.இது முதலாவது விதிக்கு உதாரணம் ஆகும்.

இரண்டாவது விதி;-  F=MA
                   விசையின் அளவு மற்றும் விசையால் நகரும் திசை பற்றிய வரையறையை விளக்குகிறது.இதை நகர்ச்சி விதி எனலாம். 
            பொருளின் உந்தம் மாறுபடும் வீதம் அதன்மீது செயல்படும் விசைக்கு நேர்த்தகவில் இருக்கும்
       The Change of Momentum is directly proportional to the Force Applied (அல்லது)  
        The acceleration a of a body is parallel and directly proportional to the net force F acting on the body, is in the direction of the net force F = M A
            நாம் தன் பலம் முழுவதையும் சேர்த்து மாட்டிற்கு ஒரு உதை கொடுக்கிறோம் என வைத்துக்கொள்ளுங்கள்.அப்போது .மாடு மா (MA) என்று கத்தும் இது  இரண்டாம் விதிக்கு உதாரணம் ஆகும். 
மூன்றாவது விதி;-  EQUAL & OPPOSITE (F1=F2)
           விசையின் தன்மையை விளக்குகிறது. விசைக்கேற்ற பின்விளைவு உண்டு எனலாம்.

ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர் வினை உண்டு.
For Every action, there is an equal and opposite reaction

                   நாம் உதைத்ததால் மாடும் நம்மை உதைக்கிறது, இது மூன்றாவது விதிக்கு உதாரணம் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முனைவர்.இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phil.,Ph.D., அவர்களது வாழ்க்கைக்குறிப்பு... (Dr.R.K.Manikkam, professor,Writer)

                                                                                                        முனைவர். இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phi...