10 ஜனவரி 2019

மாணவ ஓவியர் தருண்ராஜா.கோ.மோ.க. கோபி கலை அறிவியல் கல்லூரி

 மரியாதைக்குரியவர்களே,
         வணக்கம்.


   கோபி கலை அறிவியல் கல்லூரியில் இயற்பியல்,இளங்கலை இரண்டாம் ஆண்டு பயின்று வருகிற மாணவர் கோ.மோ.க.தருண்ராஜா அவர்களின் பன்முகத்திறன்களைப் பற்றிய தொகுப்பு உங்களுக்காக....
    மாணவர் தருண்ராஜா அவர்கள் கோபி வைரவிழா மெட்ரிக் பள்ளியிலும் வைரவிழா மேனிலைப் பள்ளியிலும் பயின்று தற்போது கோபி கலை அறிவியல் கல்லூரியில் இயற்பியல் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிற ஓவியராவார்.
   இந்த மாணவர் பள்ளியில் பயிலும்போதே ஓவியம் வரைவதில் ஆர்வமுள்ளவராவார்.இன்றுவரை நூற்றுக்கணக்கான ஓவியங்களை வரைந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட பரிசுகளையும் வென்றுள்ளார்.இவரது நோக்கம் இளம் ரவி வர்மா விருது வாங்கவேண்டும் என்பதே ஆகும்.இவரது படைப்புகளில் சில தங்களது பார்வைக்காக..
























தினமணி சிறுவர்மணி இதழ் நடத்திய ஓவியப் போட்டியில் முதல் பரிசு,கோவைமெயில் இதழ் நடத்திய போட்டியில் முதல்பரிசு,கோபி வட்ட அளவில் பல பரிசுகளும்,மாவட்ட அளவில் ஏழு முதல் பரிசுகளும்,மாநில அளவில் மூன்று முறை இளம் ஓவியர் விருதகளும்,முதல் பரிசுகளும்,ஐம்பதுக்கும் மேற்பட்ட விருதுகளும்,பரிசுகளும் வென்றுள்ள இவரை வாழ்த்துவோம் வாங்க..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதல் அச்சுப்பதிப்பில் கவனம் செலுத்திய சைவத்திருமடங்கள்.....

  திருக்குறள் 1812 இல் முதல் முறையாக அச்சில் ஏறிய மதம் சாராத நூல்.. அதன் பதிப்பு வரலாறு திருக்குறள் முதன்முதலில் அச்சு வடிவம் பெறும்போது அதி...